Jump to content

''ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்'' - ஒளவையார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தலை எழுதியது!

இது நிமிர்த்தம் நோர்வே தூதரகத்துக்கு முன்னால் எனக்கு தெரிந்தவர்கள் யாரையாவது தீக்குளிக்க வைக்க கூட முயற்ச்சி செய்யலாம்.... மற்றது சமாதானம் அண்ணாவின் கொள்கையே எங்கள் கொள்கை...

" எங்களின் தாகம் சமாதானம்"

கொள்கைகள் பற்றுதியுடையவையாகவும். தெளிவுடையவையாவும் இருக்கும்போது அதை ஜனநாயகநாட்டில்வாழும் ஜனங்கள் பன்னாட்டு அரசியலின் அழுத்தங்கள் காரணமாக அதை பின்பற்ற வேண்டிய தேவை இருக்கிறது. அதனால்தான் தோழர் சமாதானத்தின் கருத்துக்களுக்கு எதிர் கருத்துக்கள் எழுதிய தலை வன்னி1 போன்றோர் சமாதானபணியை முன்னெடுக்க துணிந்துள்ளார்கள்.

இருப்பினும் தோழர் தலை அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். நாம் உலக நாடுகள் வலியுறுத்தும் சமாதனத்தை வேண்டிநிற்பவர்கள்யாதலால். தீக்குளிப்பது போன்ற பயங்கரவாத செயல்களுக்கு துணைபோக முடியாது. அவ்வாறு தீக்குளிப்பது ஏகபிரதிநித்துவத்துக்கு வழிவகுக்கலாம். அவ்வாறு ஏகபிரதிநித்துவம் கிடைக்கும்போது நாம் ஜனநாயக கோட்பாடுடன் முரண்பட வேண்டியுள்ளது. எனனில் ஏகபிரதிநித்துவமும் ஜனநாயக கோட்பாடும் ஒன்றோடு ஒன்று முரண்படுவவை.

(தீக்குளிக்க கொண்டுபோக தீக்குளிப்பவன் வேதனை தாங்க முடியாமல் ஒரு வேளை திடீரெனெ என்னை கட்டிபிடித்தால்..????

ரிஸ்க்கே இல்லாமல் பிழைப்பு நடத்த எவ்வளவோ வழியிருக்க இது தீக்குளிக்கிறது பர்ம் வெடிக்கிறது என்று என்னை மாட்ட பார்க்கிறிங்களோ??)

Link to comment
Share on other sites

  • Replies 211
  • Created
  • Last Reply

இந்த விடயங்கள் உண்மையில் விடுதலை புலிகளால் வெகுஜன தளத்தில் செய்யப் பட வேண்டிய அல்லது விவாதிக்கப் பட வேண்டியவை. மாறாக இங்கு கதைக்கப் படுவதால் புலிகளுக்கு அறிவுரை கூறுவது போலவே பார்க்கப் படுகிறது. இதனால் சந்தேகங்களும் குதர்க்கங்களும் தான் வளர்கின்றனவே தவிர ஆரோக்கியமாக ஒன்றும் நடப்பதாக இல்லை.

யாழ் களத்தில் உணர்வுபூர்வமான நட்புடனான உங்கள் ஆலோசனையை முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

..........(தீக்குளிக்க கொண்டுபோக தீக்குளிப்பவன் வேதனை தாங்க முடியாமல் ஒரு வேளை திடீரெனெ என்னை கட்டிபிடித்தால்..????

ரிஸ்க்கே இல்லாமல் பிழைப்பு நடத்த எவ்வளவோ வழியிருக்க இது தீக்குளிக்கிறது பர்ம் வெடிக்கிறது என்று என்னை மாட்ட பார்க்கிறிங்களோ??)

"நேரம் காலம் தெரியாமல் பகிடி விடக்கூடாது" என்று சொல்லிக் கேள்விப்பட்டிருகிறேன், ஆனால் அனுபவமாக அதை தந்த உமக்கு எனது நன்றிகள்.

Link to comment
Share on other sites

சமாதானம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் எங்க?

யாழ்க்களமே ஒரு வெகுஜனத் தளம் தான் இங்கே வந்து நீங்க கருத்து எழுதினா விளக்கம் சொல்லத் தான் வேணும். ஏலாது போகும் தருணங்களில் இப்படி மாறி மாறி முதுகு சொறின்ச்சு விட்டு கொள்ளுங்கோ, விவாதம் என்றால் சொன்ன கருதுக்கள் பற்றி எழும் கேள்விகளுக்கும் விளக்கம் அழிக்க வேன்டும்.இல்லை வெறும் பிரச்சாரம் தான் உங்கள் நோக்கம் என்றால் அதுக்கு என்று வேற தளங்கள் இருக்கு அங்கு போய் எழுதுங்கோ.ஒருத்தரும் கேள்வி கேக்க மாட்டினம். நீங்கள் பிரச்சினை இல்லாம உங்கட வேலையைச் செய்யலாம்.

Link to comment
Share on other sites

சமாதானம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் எங்க?

யாழ்க்களமே ஒரு வெகுஜனத் தளம் தான் இங்கே வந்து நீங்க கருத்து எழுதினா விளக்கம் சொல்லத் தான் வேணும். ஏலாது போகும் தருணங்களில் இப்படி மாறி மாறி முதுகு சொறின்ச்சு விட்டு கொள்ளுங்கோ, விவாதம் என்றால் சொன்ன கருதுக்கள் பற்றி எழும் கேள்விகளுக்கும் விளக்கம் அழிக்க வேன்டும்.இல்லை வெறும் பிரச்சாரம் தான் உங்கள் நோக்கம் என்றால் அதுக்கு என்று வேற தளங்கள் இருக்கு அங்கு போய் எழுதுங்கோ.ஒருத்தரும் கேள்வி கேக்க மாட்டினம். நீங்கள் பிரச்சினை இல்லாம உங்கட வேலையைச் செய்யலாம்.

உமது கேள்விகளுக்கு விரிவான பதில் எழுதுகிறேன். மன்னிக்கவும் வேலை நிமித்தம் உடன் தரமுடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர் நான் நினைக்கின்றேன் நீரும் சமாதானதிற்கு உடந்தையா இருக்கிறீர். தேவையில்லாமல் சமாதானத்தின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறீர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஊரோடு பகைச்சு அமிலப்பரீட்சை எடுக்கிறதை பாத்தா கிராம சபை கிடைச்சாலே பெரியகாரியம். விழிப்பு குழுமட்டத்திலான் ஏதாவது நேற்றோ படைகள் திணிக்க போகுது. :idea: :wink: :P

http://www.eelampage.com/?cn=29231

எங்களுக்கு பஞ்சாயத்து ஆட்சிமுறைதான் கிடைக்கும் போலுள்ளது. இப்போதே ஆல மரங்களை கிராமத்திற்கு ஒன்றாக நாட்ட ஆரம்பித்தால் அவை வளர, பஞ்சாயத்து ஆட்சி வந்துசேரும்.

Link to comment
Share on other sites

http://www.eelampage.com/?cn=29231

எங்களுக்கு பஞ்சாயத்து ஆட்சிமுறைதான் கிடைக்கும் போலுள்ளது. இப்போதே ஆல மரங்களை கிராமத்திற்கு ஒன்றாக நாட்ட ஆரம்பித்தால் அவை வளர, பஞ்சாயத்து ஆட்சி வந்துசேரும்.

அப்போ டக்கிளஸ் தான் பஞ்சாயத்து தலைவரா?

மகேஸ்வரி பக்கத்தில இருப்பா கருணா தான் அந்த பையன் வெத்திலை டப்பாவும் அதை தூப்புற டாப்பாவும் தண்ணீச் செம்பும் எடுத்து கொடுக்குற பையானா :P :P

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

1) அடுத்த கட்ட அரசியல் எண்டால் என்ன,புலிகள் என்ன செய்ய வேண்டும்?இப்போது அதனை அவர்கள் செய்ய வில்லையா? நான் முன்னர் கேட்ட கேள்விகளிவை தான் அதற்கு நீர் தந்த பதிலும் இங்க தான் இருக்கு.எதோ இடைக்காலத் தீர்வு புதிய திருப்பம் என்று எதோ அலம்பினீர்.எல்லாம் புலிகள் செய்தது தான் இதில என்ன புதிசாக்கிடக்கு எண்டு கேட்டதற்கு இதுவரை பதில் இல்லை.

2) நீர் சொன்னது அமெரிக்காவின் சொற்படி நடவுங்க எண்டு,அமெரிக்கா புலிகள் அரசியல் சமரசங்களைச் செய்ய வேண்டும் என்று தான் இணைத் தலமை நாடுகளின் கடைசிக் கூட்டத்திலும் கேட்கப் பட்டது.அப்படியானல் நீர் என்னதைச் சொல்ல வாறீர், புலிகள் இலக்குகளை மாற்றுவதா போராட்ட வழி முறையை மாற்றுவதா? அப்ப அமெரிக்க சொலுறதைக் கேட்க வேண்டாமா? அது என்ன புதிய வழி முறை ? புலிகள் ஆயுதப் போரட்டத்தை இடை நிறுத்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளனர்.இதை விட நீர் சொல்லும் புதிய வழி முறை என்ன? இந்தக் கேள்விக்கும் நீர் பதில் அழிக்க வில்லை.

3)ஓ நிகழக்கூடும் என்று எதன் அடிப்படையில் எழுதுனுஈர் ,உமது கனவா? நிகழ்தகவு குறைந்த உமது கனவுகள் எதற்கு எமக்கு?

4)பனுமுகத் தன்மையின் கீழ் யார் யார் தமிழர் பிரதி நிதிகள் என்று கேட்ட போது ,தேர்தலில் நின்று தோற்றவர்கள் எல்லோரும் என்று தானே எழுதுனீர், பிறகென்ன நான் திரிகிறன்.உமது வியாக்கினாம் நாளுக்கு நாள் வித்யாசகமாகப் போய்க் கொண்டிருகிறது.இங்கே நீர் எழுதுயவற்றை மற்றவர்களும் படித்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்.

நீர் எழுதும் சொற்களின் பின்னால் இருக்கும் கேள்விகளுக்கு நீர் தான் விளக்கம் எழுத வேண்டும்,ஆகவே மேற்கூறியவற்றிற்கு விளக்கம் எழுதும். நீர் தெளிவா என்ன சொல்லுறீர் என்பதை விளக்கினா நாங்கள் அதற்கு அர்த்தங்களைக் கூற வேண்டிய அவசியம் இல்லை.

1.) ஒஸ்லோ- 2002 கூட்டறிக்கைக்கு அமைய உள்ளக சுயநிர்ணய அதிகாரங்களைக் கொண்ட ஒரு (இடைக்கால) அரசியல் தீர்வு பற்றி புலிகள் தீவிரமாக பரிசீலனை செய்வது இன்றைய சர்வதேச சூழ்நிலையை லாவகமாக கையால வாய்ப்புள்ளதாக இருக்கும்.

2.) சிங்கள அரசினால் கூடிய பட்சம் தரக்கூடிய அரசியல் தீர்வு என்ன என்பதை சிங்கள அரசு உலகுக்கு முன் வைக்கவேண்டிய ஒரு அரசியல் நெருக்கடியை தமிழர் தரப்பால் முழுமையாக இன்னும் கொடுக்கப்படவில்லை. அதாவது 'இறுதி அரசியல் தீர்வு பற்றி பேசுவோம்' என்பதை சொல்லி சிங்கள தரப்பு உலகுக்குச் பூச்சாட்டி காட்டுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய அவசியம் மட்டும் அல்ல அவசரமும் கூட உள்ளது என்பது எம்மில் பலரால் முழுமையாக உள்வாக்கப்பட்டதாக தெரியவில்லை.

3.) 'உமது கனவுகள் எதற்கு எமக்கு? ' எனும் உம்முடைய குதர்க்கத்துக்கு உமது பாணியில் பதில் எழுதவிரும்பவில்லை. அது எனது தனிப்பட்ட அவதானம். அதைவிட வேறு விளக்கங்கள் தருவது தற்போது தேவை அற்றது.

4.) தமிழ் மக்களின் பிரதிகள் யார் என்ற உமது கேள்வி, இன்றைய தமிழர் அரசியல் சார்ந்த நடைமுறை வெளிப்படையாக கொண்டிருக்கும் அம்சங்களை எமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் கணக்கில் எடுத்துக்கொண்டால் மட்டுமே விடை காணக்கூடியதொன்று. நாம் புலிகளின் தலைமையில் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கும் எமது நியாயம் எப்படி எமக்கு சரி என்று படுகிறதோ அதேபோல் அதனை ஏற்றுக்கொள்ளாதவருக்கும் அவரது நியாயம் அவருக்கு சரி எனப்படுவதை அங்கீகரிப்பதுதான் சமூக பன்மைத்துவம்(Socio-diversity). இது பற்றி பலருக்கு விளக்கமில்லாததால் பன்மைத்துவம் தமிழர் அரசியல் அகராதியில் தீண்டத்தகாத சொல்லொன்றின் பொருள்பட கையாளப்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோற்றம் தமிழர் அரசியல் அரங்கில் பன்மைத்துவ கோட்பாடு பற்றி உலக நாடுகளின் கேள்விகளுக்கு முன் விடை தயாரித்து வைத்திருந்த புலிகளின் அரசியல் சாணக்கியம். அது இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டிய தேவையை, காலம் எமக்கு கட்டளையிடக் காத்திராது நாம் கருமம் ஆற்ற முன்வரவெண்டும். தமிழர் தேசிய கூட்டமைப்பு மற்றைய எல்லா தமிழ் அமைப்புகளுடன் ஒரு அரசியல் வேலைத்திட்டத்துக்கு முன்நகர்வதன் மூலம் எமது தேசிய விடுதலைக்கு சுருக்குக் கயிறு எறியத்திரியும் பிராந்திய வல்லரசான இந்திய- தமிழ் தேசிய முறுகல் நிலைக்கு ஒரு முடிவு கட்டலாம். இது உலக வல்லரசான அமெரிக்காவின் இலங்கைசார் அரசியல் இராணுவ அணுகு முறையில் சில மாற்றங்களை தூண்டலாம்.

தமிழர் தரப்பில் உள்ள வித்தியாசங்களை மற்றவர்கள் அங்கீகரித்து ஒரு ஐக்கிய முன்னணி (Unity in Diversity) அமைப்பதே தேசிய தலைமை உடனடியாக செய்ய வேண்டியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் துரோகக் கும்பல்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று சொல்வதே வேலையாகப் போய்விட்டது. என்ன நியாயத்தை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள்என்றோ,

Link to comment
Share on other sites

SAMATHAANAM

எழுதியது:

1.) ஒஸ்லோ- 2002 கூட்டறிக்கைக்கு அமைய உள்ளக சுயநிர்ணய அதிகாரங்களைக் கொண்ட ஒரு (இடைக்கால) அரசியல் தீர்வு பற்றி புலிகள் தீவிரமாக பரிசீலனை செய்வது இன்றைய சர்வதேச சூழ்நிலையை லாவகமாக கையால வாய்ப்புள்ளதாக இருக்கும்.

மக்கள் பட்டினிச் சாவையும்,படுகொலைகளையும் எதிர் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் முதலில் மக்களின் அவலங்கள் தீர்க்கப் பட வேன்டும்,சிங்கள இராணுவத்தின் போர் நிறுத மீறல்கள் முடிவுக்குக்கொண்டு வந்து போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக அமுல் படுத்தப் பட வேன்டும்.இது தான் சர்வதேசத்தினதும் புலிகளினதும் நிலைப் பாடு.இங்கே இபோது சிறிலங்கா அரசு தான் சர்வதேசத்திடம் முரண் பட்டுக்கொண்டு நிக்கிறது.இந்த நேரத்தில் இடைக்காலத் தீர்வு பற்றிப் பேசுவதால் எந்தப்பயனும் எவருக்கும் ஏற்படப்போவதில்லை.புலிகள் ஏற்கனவே இடைக்கால தன்னாட்சி சபைக்கான வரைபை முன் மொழிந்துள்ளனர். நிலமைகள் இவ்வாறு இருக்கும் போது ,ஒஸ்லோ கூட்டறிக்கை பற்றி ஏன் புலிகள் அலட்டிக் கொள்ள வேண்டும்?

SAMATHAANAM

எழுதியது:

2.) சிங்கள அரசினால் கூடிய பட்சம் தரக்கூடிய அரசியல் தீர்வு என்ன என்பதை சிங்கள அரசு உலகுக்கு முன் வைக்கவேண்டிய ஒரு அரசியல் நெருக்கடியை தமிழர் தரப்பால் முழுமையாக இன்னும் கொடுக்கப்படவில்லை. அதாவது 'இறுதி அரசியல் தீர்வு பற்றி பேசுவோம்' என்பதை சொல்லி சிங்கள தரப்பு உலகுக்குச் பூச்சாட்டி காட்டுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய அவசியம் மட்டும் அல்ல அவசரமும் கூட உள்ளது என்பது எம்மில் பலரால் முழுமையாக உள்வாக்கப்பட்டதாக தெரியவில்லை.

எம்மில் பலரால் என்று யாரை விழிக்கிறீர்? பேச்சுவார்த்தைகளில் தமிழர் தரப்பாக இருக்கும் புலிகளையா? எங்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழர் தேசிய விடுதலைப்போராட்டாத்தின் முன்னணிச் சக்திகள் தான் தீர்மானிக்க முடியும்.பேச்சுவார்த்தை மேசையில் பேசப்படுவன, தனிப்பட்ட சந்திப்புக்களில் பேசப்படுவன,பேசப்படாதவை,,புலன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானத்தின் கருத்தின்படி பன்மைத்துவத்தைப் புலிகள் அரவணைக்க வேண்டுமென்றால், டக்ளஸ், கருணா, ஆனந்தசங்கரி, பரந்தன் ராஜன், சித்தார்த்தன் எல்லோரும் புலிகளுடன் ஒரு குடைக்குள் வரவேண்டும். புலிகள் அவர்களின் குடைக்குள்போவதைவிட அவர்கள் புலிகளின் குடைக்குள் வருவதுதான் தமிழினத்திற்கு நல்லது. இதற்காக அவர்கள் தங்கள் தேசியத்திற்கான துரோகங்களை விட்டுவிட்டு வருவார்கள் என்று ஏன் சமாதானம் பகற்கனவு காண்கின்றது என்று புரியவில்லை.

இலங்கைத் தீவில் பிரிவுபட்ட தேசிய இனங்கள் உள்ளன. பெரும்பான்மையினரான சிங்களவர் சிறுபான்மையினத்தவரை அடக்கியாளவேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேயில்லை என்பதைப் புரியாமல் சமாதானம் இருக்கின்றது போலுள்ளது. சிங்கள இனம் பிற இனங்களை என்றுமே அரவணைக்கப்போவதில்லை. எனவே தமிழ் இனமாகிய எங்கள் சந்ததிகள் இலங்கைத் தீவில் இருக்கவேண்டுமென்றால் தனிநாட்டைத் தவிர வேறு எந்தத் தீர்வும் உதவமாட்டா. இதைப் புரியாத சமாதானம் தேவையில்லாதது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.