Jump to content

உடலுறவு..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

10491238_10152194799577944_1552610789782

 

காந்தக் கலர் அழகி

கர்வமின்றி

கருவண்டுக் காளை இவனை

கவர்ந்திழுத்து

கவ்விக் கொண்டாய்..

 

உன்னை அணுகி

உளறி அணைத்தேன்

உன்னதம் காண..

உன்னமுதம் சுரக்க

உண்டேன்.!

 

உடலெங்கும் பொடிகள் காவி

உதிர்த்து

உண்டாக்கினேன்

உன்னை.

 

காய்ந்து விழும்

கன்னிக்

காவியமே..

கருக்கொண்ட

காதலுக்கு அடையாளமாய் - நாளை

காய்த்துக்

கனி தரும் நீ

புதிதாய்

பூமியில் உதிப்பாய்..!

 

விவாகமும் இல்லை

விவாகரத்தும் இல்லை

விவகாரம் முடிக்கிறோம்

வில்லங்கமே இல்லாமல்..!

 

விதியது இயற்கை வழி

விதவையாய் நீயும் இல்லை

விதுசனாய் நானும் இல்லை

விரைந்தே போகிறோம்

கால வெளியைக் கடந்து..!

 

அடுத்த வசந்தத்துக்குள்

இன்னொரு சந்ததிக்காய்

ஆயுளும்

முடிக்கிறோம்.

பூமியை

புதிய உயிர்களால்

அழகும் செய்கிறோம்..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தலைப்பை பார்த்ததும் பயந்து போட்டேன் ...  :o  :D
 
அருமையான வரிகள் .....
 
பகிர்விக்கு நன்றி நெடுக்ஸ் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்கள் விருப்பில் தலையிட விருப்பம் இல்லை.. இருந்தாலும் தலைப்பை மாற்றினால் கவிதை இன்னும் நிறையப்  பேரை  சென்றடைய வாய்ப்பிருக்கிறது...நானும் தலைப்பைப் பார்த்துட்டு கன்றாவியை எல்லாம் ஏன் எழுதுகிறார்கள் என்று நினைத்தேன்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்கள் விருப்பில் தலையிட விருப்பம் இல்லை.. இருந்தாலும் தலைப்பை மாற்றினால் கவிதை இன்னும் நிறையப்  பேரை  சென்றடைய வாய்ப்பிருக்கிறது...நானும் தலைப்பைப் பார்த்துட்டு கன்றாவியை எல்லாம் ஏன் எழுதுகிறார்கள் என்று நினைத்தேன்.

 

 

உடலுறவு என்பதை நாங்கள் கண்றாவியா காட்டி சிந்தனையில் பதிஞ்சிட்டம். அது குறுகிய அளவில் சிந்தித்த அந்தச் சமூகத்தின் தாக்கமே அன்றி வேறில்லை.

 

உதுகளை.. மனிதனை.. சில மனிதன் முன்னாடி அலையும் விலங்குகளை.. வைச்சு மட்டும் பார்க்க தலைப்படுறம். இங்கு உடலால்.. பரிசித்துக் கொள்பவை..உரசிக் கொள்பவை.. மனிதர்கள் அல்ல. இரு வேறு உயிரினங்கள். இது அழகானதும்.. ரசிக்கக் கூடியதும்.. மாறுபட்டதுமான உடல் உறவு.

 

எங்கள் பார்வையை எண்ணத்தை மாற்ற.. மூளையில் பதியப்பட்ட விடயங்களில் மாற்றங்களை கொணரனும். இந்தப் படமும்.. தலைப்பும் அதைச் செய்யலாம் இல்லையா தங்கச்சி.

 

ஓர் வடிவில்.. அசிங்கம் என்பது இன்னோர் வடிவில்.. அழகு..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான வரிகள் , நயமான கவிதை...!

 

உடலுறவு விலங்குகளுக்குத்தான்  (மனிதர் உட்பட) பொருந்தும்.  மலர்கள் ... இதழுறவு பொருந்துமோ...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடலுறவு என்பதை நாங்கள் கண்றாவியா காட்டி சிந்தனையில் பதிஞ்சிட்டம். அது குறுகிய அளவில் சிந்தித்த அந்தச் சமூகத்தின் தாக்கமே அன்றி வேறில்லை.

 

உதுகளை.. மனிதனை.. சில மனிதன் முன்னாடி அலையும் விலங்குகளை.. வைச்சு மட்டும் பார்க்க தலைப்படுறம். இங்கு உடலால்.. பரிசித்துக் கொள்பவை..உரசிக் கொள்பவை.. மனிதர்கள் அல்ல. இரு வேறு உயிரினங்கள். இது அழகானதும்.. ரசிக்கக் கூடியதும்.. மாறுபட்டதுமான உடல் உறவு.

 

எங்கள் பார்வையை எண்ணத்தை மாற்ற.. மூளையில் பதியப்பட்ட விடயங்களில் மாற்றங்களை கொணரனும். இந்தப் படமும்.. தலைப்பும் அதைச் செய்யலாம் இல்லையா தங்கச்சி.

 

ஓர் வடிவில்.. அசிங்கம் என்பது இன்னோர் வடிவில்.. அழகு..! :):icon_idea:

 

 

மேற் சொன்னவற்றை ஏற்றுக் கொள்கிறேன்.உடல் உறவு என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் ஒவ்வொரு விதமாக படுகிறது..சிலருக்கு எதிர் பார்ப்பை மீறி ஏமாற்றங்கள் அதிகரித்தால் பார்க்கும் எல்லாமே அசிங்கமாகவே பார்க்க தோன்றும்..ஏன் சிலருக்கு அந்த வார்த்தைகளை பார்த்தால் ,கேட்டால் கூட பிடிக்காது..காரணம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்  அனுபவங்களின் பிரதி பலிப்பு.சரி அதை விடுங்கள்..ஒவ்வொருவருக்கும்,ஒவ்வொரு விதமான மன இயல்புகள் இருப்பது வழமை தானே.

 

மற்றையது...பூவையும்,வண்டையும் வைத்து இனிய வார்த்தைகளால் வர்ணித்து விட்டு, தலைப்பாக நடை முறைக்கு சாத்தியப்படாத ஒன்றை இடும் போது..அங்கே சற்றுக் குளப்பம் எழுமா...எழாதா....அதைத் தான் நான் கேட்டேன்..மனிதனுக்கும்,விலங்குக்கும் ஒத்துப் போக கூடிய ஒன்றை பூவுக்குள்ளும்,வண்டுக்குள்ளும் ஒப்பிடுகிறீர்களே...கற்பனை என்றால் இப்படி எல்லாம் எழுமா...ஓர் அழகியலுக்குள் அசிங்கமான தலைப்பு..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றையது...பூவையும்,வண்டையும் வைத்து இனிய வார்த்தைகளால் வர்ணித்து விட்டு, தலைப்பாக நடை முறைக்கு சாத்தியப்படாத ஒன்றை இடும் போது..அங்கே சற்றுக் குளப்பம் எழுமா...எழாதா....அதைத் தான் நான் கேட்டேன்..மனிதனுக்கும்,விலங்குக்கும் ஒத்துப் போக கூடிய ஒன்றை பூவுக்குள்ளும்,வண்டுக்குள்ளும் ஒப்பிடுகிறீர்களே...கற்பனை என்றால் இப்படி எல்லாம் எழுமா...ஓர் அழகியலுக்குள் அசிங்கமான தலைப்பு..

 

வண்டின் உடலும் பூவின் உடலும்.. உறவாடுகின்றன.. என்பது தான் தலைப்பின் அர்த்தம். உடல் + உறவு = உடலுறவு

 

மாறாக இதனை.. புணர்ச்சி என்று அர்த்தப்படுத்தக் கூடாது. காரணம் வண்டு பூவைப் புணர்வதில்லை.

 

மகரந்தம் மட்டுமே புணர்ந்து முளைத்து முட்டையோடு கருக்கட்டுகிறது.

 

flowering-plant-fertilization.jpeg

 

அந்த வகையில்.. இது அசிங்கமல்ல.. இதுவும் அழகியலே..! :icon_idea::)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.