Jump to content

' கமகமக்கும் எலிப் பொரியல்'


narathar

Recommended Posts

நானும் அந்த பக்கம்தான். வயலில் பிடிக்கும் அகழானை சுட்டு சிறுவர்கள் வரை சாப்பிட்டதை கண்டிருக்கிறேன். நன்றாக இருக்கிறது என்று சுவைத்துத்தான் சாப்பிடுவார்கள். நான் சிறுவனாக இருந்தபோது சாப்பிட என்னைக் கூட அழைத்து இருக்கிரார். எனது பல விவசாய நண்பர்கள் கள்ளுக் குடியாதவர்கள். ஆனால் நெல்லுவெட்டுக்கு பிறகு பிடிபடும் அகழானை சுட்டு சாப்பிடும் போது எங்களுடன் இருந்த பெண்பிள்ளைகளைக் கூட  ஒதுக்கிவைப்பதில்லை.  நான் காண வயலில் பொந்து வெட்டி பிடித்து அகழான் சுட்ட இடங்களில்  கள்ளுப் பிழா கொண்டுவரப்பட்டதை கண்ட ஞாபகம் இல்லை.  ஒரு வேளை சிலரால் அது கள்ளுக்கு சுவையானதாக கொள்ளப்படலாம். நான் அவர்கள் பிடித்த அகழானை வயலை விட்டு எடுத்துபோனால்  என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து வைத்திருக்கவில்லை.

 

பெருந்தன்மையுடன் எழுத்து பிழையை சுட்டிக்கட்டியதற்கு நன்றி.

 

 

அகழானைச் சுட்டும், மரநாயைப் பிடித்து வாட்டிக் கள்ளுடன் உண்டதையும் ஒரே ஒரு முறைதான் வாழ்க்கையில் கண்டுள்ளேன். உங்களுக்கு இவ்விடயத்தில் வேறுவிதமான அனுபவம் ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தியதால் அதனையும் அறிந்துகொள்ள முடிந்தது.

 

பாட்டெழுதிப் பிழைப்பவர்கள் உண்டு. பாட்டில் பிழைபிடித்தே பிழைப்பவர்களும் உண்டு. தயைசெய்து என்னைப் பிழைபிடிப்பவர்களோடு சேர்த்துவிடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply

1.      தன்ஊன் பெருக்கற்குத்  தான் பிறிதுஊன் உண்பான்

         எங்ஙனம் ஆளும் அருள்.

 

10.   கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி

        எல்லா உயிரும் தொழும்

 

 

:rolleyes:

 

திருக்குறள்:   அதிகாரம் 26    :     புலால் மறுத்தல்

 

 

Link to comment
Share on other sites

நீங்க யாரப்பா அது. சிவ பூசைக்குள் கரடி மாதிரி! :D

யார் அந்த வள்ளு?

ஏன் அந்த ஆளு இப்படி ஒரு லொள்ளு? :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.