Jump to content

கப்பல் + கனடிய தமிழ் காங்கிரஸ்...


Recommended Posts

கீழே உள்ள பதிவு facebook இல் "கடி நொடி" என்னும் குழுவால் பதியப்பட்டது.....

கீழே விவாதிப்பது சரியா பிழையா ????

 

10491204_1515373358674523_72483905603149

 

ஏலேலோ அஜ்லசா ஏலேலோ அஜ்லசா என்ற வார்த்தை தமிழ் இனத்திற்கு கேட்கும் பொழுது, அது கடல் தொழிலாளிகள் தன் கழைப்பையும் மீறி குடும்பத்தின் சூழ் நிலையை கருத்தில் கொண்டு கட்டுமரத்தை தள்ளும் போது பாடும் பாடல்.

கனடியத் தமிழர் காங்கிரஸ்சின் (CTC) உல்லாசக் கப்பல் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி TORONTOவில் இருந்து வெளிக்கிடப் போகின்றது, எல்லோரும் முற்பதிவுகள் செய்யுங்கள் என்று கனடியத் தமிழர் காங்கிரஸ் கூவிக் கூவி பற்றுச் சீட்டுக்களை விற்பனை செய்கின்றார்கள்.

கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) கப்பலில் உல்லாசப் பயணம் செய்து பணம் சேகரிப்பதை கடிநொடியாகிய நாம் எந்தக் காலத்திலும் வரவேற்க மாட்டோம்.

தனிப்பட்டவர்களோ அல்லது சாதாரண அமைப்பை சேர்ந்தவர்கள் இப்படியான நிகழ்வுகளை வைத்தால், கடிநொடியாகிய எமக்கு கேள்வி கேட்கும் அதிகாரமில்லை.

ஆனால் கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) அமைப்பினர், கனடாவில் தாங்கள் தான், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று உலகத்தமிழர்கள் மத்தியிலும் மற்றும் மேற்குலக நாடுகள் மத்தியிலும் முழக்கமிட்டு சொல்கின்றார்கள்.

இவர்களின்(CTC) முக்கிய செயற்பாடுகள்.

1) தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தை கனடாவில் வளர்ப்பதும்.

2) தமிழர்களிற்கான அரசியல் வேலைகளை, கனடா அரசினூடாகவும் மற்றும் மனித உரிமை கழகங்களூடாகவும் செயற்படுத்தல்.

3) ஈழத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள் புலத்திற்கு வரும் பொழுது அவர்களிற்கு உதவிகள் செய்வதும் மற்றும் ஈழத்தில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளிற்கு பக்க பலமாக இருப்பதும்.
இப்படியான செயற்பாடுகளை செய்வதால் தான் கனடாவில் இருக்கும் தமிழ் மக்கள் இந்த அமைப்பில்(CTC) அங்கத்தவர்களாவும் மற்றும் ஆதரவும் கொடுக்கின்றார்கள். அதன் அடிப்படையில் தான் கனடாவில் இருக்கும் அரசியல் கட்சிகள் இந்த அமைப்பிற்கு உதவிகள் செய்கின்றார்கள். ஏன் என்றால், அரசியல் கட்சிகளிற்கு மக்களின் ஓட்டுகள் தேவைப்படுகின்றது.

அப்படியானால், கனடாத் தமிழர்களிற்கு எல்லா தார்மீக உரிமைகளும் இருக்கின்றது, இந்த கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) பிழைகள் விடும் பட்சத்தில் கேள்விகள் கேட்பதற்கு.

இந்த அமைப்புக்கு(CTC) பணம் சேர்ப்பதற்கு பல வழிகள் இருக்கின்றது.

ஆனால் ஏன் இந்த உல்லாசக் கப்பல் பயணம் ?

தாராளமாக மது அருந்தி நடனங்கள் செய்து பணம் சேகரித்து தமிழ் இனத்தின் கலாச்சாரத்தையும் தமிழர்களின் எதிர்காலத்தையும் நீங்களா(CTC) காப்பாற்றப் போகின்றீர்கள் ?

கடல் பயணங்கள் எப்படி இருக்கும் என்று உங்களிற்கு(CTC) ஏதேனும் அனுபவம் இருக்கின்றதா ?

கனடாவிற்கு போன இரு கப்பலிலும் பயணம் செய்தவர்கள் தங்களின் உயிர்கள், தரையை தாண்டும் வரை இருக்குமோ என்று ஏங்கியவர்கள்.

அவுஸ்ரேலியாவிற்கு போகின்றவர்கள் சிங்களவனிடம் இருந்து தங்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காக பெருங்கடலில் பயணங்கள் செய்கின்றார்கள். பசியோடும் பட்டினியோடும் தண்ணீருமில்லாது பச்சிளங் குழந்தைகளோடு பயணங்கள் செய்து கரை சேர்ந்தவர்களும் சேராதவர்களும் பலர்.

இப்படியான எம் உறவுகளிற்கு, கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) உதவிகள் செய்கின்றோம் என்று சொல்லி அவர்களிற்கு முழுமையான உதவிகள் செய்யவில்லை என்று கனடாவிற்கு கப்பல் மூலம் சென்றவர்கள் எமக்கு பல மின்னஞ்சல்கள் அனுப்பி இருக்கின்றார்கள்.

ஆனால் கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) இப்படியான உல்லாசக் கப்பல் நிகழ்வை நடத்துவதை எந்த மானமுள்ள தமிழனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

பாதிக்கப்பட்ட ஈழத் தமிழரின் அரசியல் நலனுக்காகவென்று சொல்லி விளம்பரம் செய்து பணம் சேர்க்க, இப்படியான உல்லாசக் கப்பல் நிகழ்வை நடத்துவதற்கு கடிநொடியாகிய நாம் மக்களோடு சேர்ந்து எதிர்ப்போம்.

நீங்கள் இப்படியான நிகழ்வுகளை செய்வதனால் தான், சிங்களவன் உங்களின் அமைப்பை(CTC) கேலிக் கூத்தாக பார்க்கின்றான். தயவு செய்து இப்படியான நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

கடந்த 5 வருடத்தில், ஈழத்தில் பாதிக்கப் பட்ட எம் உறவுகளிற்கு எந்த வகையில் உதவிகள் செய்தீர்கள் என்று பட்டியலிட முடியுமா(CTC) ?

யாரும் உங்களிடம் கேள்வி கேட்டாள் பதில் இருக்காது, ஆனால் பொதுவாக தப்பிப்பதற்காக சொல்வது, நாம் (CTC) அதை தெரியப் படுத்தினால் சிங்களவன் கண்டு பிடித்துவிடுவான் என்று சொல்லி மக்களை முட்டாள்கள் ஆக்காதீர்கள்.

சிங்களவனை, நீங்கள்(CTC) ஏமாற்றாலாம் ஆனால் எம்மை ஏமாற்ற முயற்சிக்காதீர். கடிநொடியாகிய நாம் புலத்தில் வாழும் எம் உறவுகளிற்கு எல்லா உண்மைகளையும் உடனுக்குடன், தவறு செய்பவர்களை இனம் கண்டு தெரியப் படுத்துவோம்.

கடிநொடி எங்கும் செல்லும் எதிலும் நுழையும் ஆனால் உண்மைகளை மட்டும் வெளிக்கொண்டு வரும்.

நன்றி,
கடிநொடி (Facebook ID : KadyNody)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.