Jump to content

சொல்லாடற்களம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அங்கிடுதத்தி .   அவ  என்னை விடக் கூடுதலாக அம்மாவிடம் இந்தமாதிரிப் ஏச்சு வாங்கியிருக்கிறா...! :)

Link to comment
Share on other sites

  • Replies 467
  • Created
  • Last Reply
மிகவும் சரியான சொல் அங்கிடுதத்தி
 
அங்கிடுதத்தி என்னும் சொல்லைக் கண்டுபிடித்த தமிழினி மற்றும் சுவி அண்ணா ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

களம் 97.
 
அனைத்துத் தரவுகளும் மூன்று எழுத்துக்களில் அமைந்துள்ளன
 
இரு எழுத்துக்கள் விடை பெற்றுச் செல்ல ஒரு எழுத்து தொடர்ந்து வரும்.
 
தரவுகள் 10.
 
1. அன்னை என்பவள் இவள் தான்                                                                                                                        --------------------------------------
 
2. பிரபலங்களை ஊடகவியலாளர்கள் அணுகுவது இதற்காகத் தான்                                                        ---------------------------------------
 
3. வேட்கை, ஆசை போன்றவற்றை இப்படியும் சொல்லலாம்                                                                     ----------------------------------------
 
4. அகிளானைப் (புற்றெலி) பிடிக்கப் பயன்படுத்தும் பொறி                                                                             ----------------------------------------
 
5. இவன் கழுகுகளின் வேந்தனாம்                                                                                                                        -----------------------------------------
 
6. உறுதிமொழியை இவ்வாறும் கூறலாம்                                                                                                          ------------------------------------------
 
7. பிரியத்தை இவ்வாறு சொன்னால் என்ன?                                                                                                       ------------------------------------------
 
8. இது தான் குன்றிமணி                                                                                                                                            -------------------------------------------
 
9. விசுவாமித்திரனின் சகோதரி                                                                                                                                --------------------------------------------
 
10. ஒருவரை அன்புடன் வரவேற்கும் முறைகளில் இதுவும் ஒன்று                                                               --------------------------------------------
 
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
களம் 97.
 
அனைத்துத் தரவுகளும் மூன்று எழுத்துக்களில் அமைந்துள்ளன
 
இரு எழுத்துக்கள் விடை பெற்றுச் செல்ல ஒரு எழுத்து தொடர்ந்து வரும்.
 
தரவுகள் 10.
 
1. அன்னை என்பவள் இவள் தான்
 
செனனி
 
2. பிரபலங்களை ஊடகவியலாளர்கள் அணுகுவது இதற்காகத் தான்
 
செவ்வி
 
3. வேட்கை, ஆசை போன்றவற்றை இப்படியும் சொல்லலாம்
 
விடாய்
 
4. அகிளானைப் (புற்றெலி) பிடிக்கப் பயன்படுத்தும் பொறி
 
இடார்
 
5. இவன் கழுகுகளின் வேந்தனாம்
 
சடாயு
 
6. உறுதிமொழியை இவ்வாறும் கூறலாம்
 
வாயுறை
 
7. பிரியத்தை இவ்வாறு சொன்னால் என்ன?
 
வாஞ்சை
 
8. இது தான் குன்றிமணி
 
நஞ்சி
 
9. விசுவாமித்திரனின் சகோதரி
 
கௌசிகை
 
10. ஒருவரை அன்புடன் வரவேற்கும் முறைகளில் இதுவும் ஒன்று
 
கைலாகு
 
Link to comment
Share on other sites

களம் 98.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் -------------------------------------------- 
 
இச்சொல்லின் நேரடி அர்த்தம் நம்ப வைத்து ஏமாற்றுவதை எம் முன்னோர்கள் இவ்வாறுதான் கூறினார்கள்.
 
தரவுகள்:
 
1. இச்சொல் ஒன்பது எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. முதலாம் எழுத்துடன் ஐந்தாம் எழுத்துச் சேர்ந்தால் பெரும்பாலான பெண்கள் விரும்புவது ஒன்று வரும்.
 
3. முதலாம் மூன்றாம் எழுத்துக்கள் இணைந்தால் ஆன்மீகத்துடன் தொடர்புள்ள பெயர் ஒன்று வரும்.
 
4. மூன்றாம் ஏழாம் எழுத்துக்கள் ஒரே எழுத்துக்களாகும்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கைப்பிசகு :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கைப்பிளவு

Link to comment
Share on other sites

மிகவும் சரியான சொல் நம்பிக்கைப்பிசகு
 
நம்பிக்கைப்பிசகு என்னும் சொல்லைத் தந்த வாலிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த தமிழினி மற்றும் நிலாமதி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

களம் 99.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் ---------------------------- 
 
இச்சொல்லின் நேரடி அர்த்தம் மனதில் எழுந்த நிகழ்ச்சியை அல்லது உணர்ச்சியை மேடையில் வெளிப்படுத்திக் காட்டுதலை இப்பெயர் கொண்டு அழைக்கலாம்.
 
தரவுகள்:
 
1. இச்சொல் எட்டு எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. முதல் இரண்டு எழுத்துக்களுடன் இறுதி எழுத்துச் சேர்ந்தால் விளிம்பு என அர்த்தமாகும்.
 
3. இரண்டாம் எழுத்துடன் இறுதி இரரண்டு எழுத்துக்களும் சேர்ந்தால் வகை எனப் பொருள்படும்
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

களம் 99.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் ---------------------------- 
 
இச்சொல்லின் நேரடி அர்த்தம் மனதில் எழுந்த நிகழ்ச்சியை அல்லது உணர்ச்சியை மேடையில் வெளிப்படுத்திக் காட்டுதலை இப்பெயர் கொண்டு அழைக்கலாம்.
 
தரவுகள்:
 
1. இச்சொல் எட்டு எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.

ஓரங்கநாடகம்

 
2. முதல் இரண்டு எழுத்துக்களுடன் இறுதி எழுத்துச் சேர்ந்தால் விளிம்பு என அர்த்தமாகும்.
ஓரம்

 

3. இரண்டாம் எழுத்துடன் இறுதி இரரண்டு எழுத்துக்களும் சேர்ந்தால் வகை எனப் பொருள்படும்
ரகம்

 

Link to comment
Share on other sites

மிகவும் சரியான சொல் ஓரங்கநாடகம்
 
ஓரங்கநாடகம் என்னும் சரியான சொல்லைத் தந்த வாத்தியாருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

களம் 100.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் ------------------------------------ 
 
சகல மதத்தினராலும் கைக்கொள்ளப்படும் ஒரு ஆன்மீகச் செயற்பாடு எனக் கூறலாம்
 
தரவுகள்:
 
1. இச்சொல் ஏழு எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. முதல் எழுத்து ஓர் உயிரினத்தைக் குறிக்கின்றது.
 
3. நான்காம் எழுத்துடன் இறுதி இரு எழுத்துக்களும் இணைந்தால் வருவது ஓர் கடல் வாழ் உயிரினம்.
 
4. இரண்டாம் எழுத்துடன் இறுதி மூன்று எழுத்துக்களும் சேர்ந்தால் வருவது பெருக்கலால் ஏற்படும் மாற்றம் எனச் சொல்லலாம்
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

களம் 100.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் ------------------------------------ 
 
சகல மதத்தினராலும் கைக்கொள்ளப்படும் ஒரு ஆன்மீகச் செயற்பாடு எனக் கூறலாம்
 
தரவுகள்:
 
1. இச்சொல் ஏழு எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
ஈமச்சடங்கு
 
2. முதல் எழுத்து ஓர் உயிரினத்தைக் குறிக்கின்றது.
 
3. நான்காம் எழுத்துடன் இறுதி இரு எழுத்துக்களும் இணைந்தால் வருவது ஓர் கடல் வாழ் உயிரினம்.
சங்கு
 
4. இரண்டாம் எழுத்துடன் இறுதி மூன்று எழுத்துக்களும் சேர்ந்தால் வருவது பெருக்கலால் ஏற்படும் மாற்றம் எனச் சொல்லலாம்
மடங்கு
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?

 

 

Link to comment
Share on other sites

மிகவும் சரியான சொல் ஈமச்சடங்கு
 
ஈமச்சடங்கு என்னும் சொல்லைக் கண்டுபிடித்த வாத்தியாருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

களம் 101.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் ---------------------------------- 
 
பாண்டவர்களுள் ஒருவரின் வெற்றிச் சங்கின் பெயரை நேரடியாகக் குறிக்கின்றது.
 
தரவுகள்: 
 
1. இச்சொல் ஐந்து எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. முதல் எழுத்துடன் இறுதி இரு எழுத்துக்களும் இணைந்தால் ஓர் நட்சத்திரம் வரும்.
 
3. இறுதி ஐந்து எழுத்துக்களும் பர்மாவின் பண்டைய தமிழ்ப் பெயரைக் குறிக்கும்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

களம் 101.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் ---------------------------------- 
 
பாண்டவர்களுள் ஒருவரின் வெற்றிச் சங்கின் பெயரை நேரடியாகக் குறிக்கின்றது.
 
தரவுகள்: 
 
1. இச்சொல் ஐந்து எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. முதல் எழுத்துடன் இறுதி இரு எழுத்துக்களும் இணைந்தால் ஓர் நட்சத்திரம் வரும்.
 
3. இறுதி ஐந்து எழுத்துக்களும் பர்மாவின் பண்டைய தமிழ்ப் பெயரைக் குறிக்கும்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?

 

 

தரவில் பிழை இருக்கலாம்

சகாதேவனின் சங்கின் பெயர் மணி புஷ்பகம் ஏழு எழுத்துக்கள்

மகம் என்பது நட்சத்திரம்

புஷ்பகம் பர்மாவின் பழைய பெயர்

மணிபுஷ்பகம்

 

Link to comment
Share on other sites

தரவில் பிழை இருக்கலாம்

சகாதேவனின் சங்கின் பெயர் மணி புஷ்பகம் ஏழு எழுத்துக்கள்

மகம் என்பது நட்சத்திரம்

புஷ்பகம் பர்மாவின் பழைய பெயர்

மணிபுஷ்பகம்

 

 

 

மிகவும் சரியான சொல் மணிபுட்பகம்
 
மணிபுட்பகம் என்னும் சரியான சொல்லைக் கண்டுபிடித்த வாத்தியாருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
தவறு எனது பக்கம் தான், தவறிற்காக மனம் வருந்துகின்றேன்.
 
இருப்பினும் சரியான சொல்லைக் கண்டுபிடித்த வாத்தியாருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.