Jump to content

சொல்லாடற்களம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனோதத்துவம் .

Link to comment
Share on other sites

  • Replies 467
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மனோதத்துவம்... !

Link to comment
Share on other sites

மிகவும் சரியான சொல் மனோதத்துவம்
 
மனோதத்துவம் என்னும் சரியான சொல்லைக் கண்டுபிடித்த நிலாமதி, சுவி மற்றும் கறுப்பி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாத்தியாரின் மனிதத்துவம் என்பது பிழை அல்ல, ஆனால் இச்சொல்லின் அர்த்தம் ஒரு துறை எனக் குறிப்பிட்டிருக்கின்றேன். எனவே மிகவும் பொருத்தமான சொல் மனோதத்துவம் என்பதாகும். 
 
கலந்து கொண்ட சுமோவிற்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன் 
Link to comment
Share on other sites

களம் 16.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் ……………… 
 
இச்சொல்லின் நேரடி அர்த்தம் என்றால் உறுதியற்ற நிலைப்பாட்டை உணர்த்தும் சொல்
 
தரவுகள்.
 
1. இச்சொல் பன்னிரண்டு எழுத்துக்கள் கொண்ட சொல்.
 
2. முதலாம் நான்காம் எழுத்துக்கள் சேர்ந்தால் வருவது சினைப்பெயர்.
 
3. மூன்றாம் நான்காம் எழுத்துக்கள் சேர்ந்தாலும் வருவது சினைப்பெயர்.
 
4. ஆறாம் பதினோராம் பன்னிரண்டாம் எழுத்துக்கள் சேர்ந்தால் சில மிருகங்களின் ஓர் உறுப்பு.
 
5. ஒன்பதாம் ஏழாம் எழுத்துக்கள் சேர்ந்தால் நவதானியங்களில் ஒன்று வரும்.
 
6. மூன்றாம் இரண்டாம் எழுத்துக்கள் சேர்ந்தால் மரத்தின் ஒத்தசொல் வரும்.
 
7. மூன்றாம் எட்டாம் எழுத்துக்கள் சேர்ந்தால் நீர்த்துளி என அர்த்தம் வரும்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொற்றொடர் என்ன?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு சொல்லா இரண்டு சொற்களின் சேர்க்கையா ...?

Link to comment
Share on other sites

இது ஒரு சொல்லா இரண்டு சொற்களின் சேர்க்கையா ...?

 

 

மூன்று சொற்களின் சேர்க்கை கொண்ட சொற்றொடர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.இருதலைக்கொள்ளிஎறும்பு :D
2.இலை
3.தலை
4.கொம்பு
5.எள்
6.தரு
7.தளி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருதலைக்  கொள்ளி எறும்பு

Link to comment
Share on other sites

மிகவும் சரியான சொல் இருதலைக் கொள்ளி எறும்பு
 
இருதலைக் கொள்ளி எறும்பு என்னும் சரியான சொல்லைத் தந்த வாத்தியார் மற்றும் நிலாமதி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

களம் 16.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் …………………  
 
இச்சொல்லின் நேரடி அர்த்தம் பலவீனப்படுத்தவதற்குப் பிரயோகிக்கப்படும் யுக்தி முறைகளில் ஒன்று.
 
தரவுகள்:
 
1. இச்சொல் ஏழு எழுத்துக்கள் கொண்ட சொல்.
 
2. முதலாம் நான்காம் ஆறாம் ஏழாம் எழுத்துக்கள் சேர்ந்தால் பாம்பு என்னும் அர்த்தம் வரும்.
 
3. ஐந்தாம் இரண்டாம் மூன்றாம் எழுத்துக்கள் சேர்ந்தால் ஓர் உறவு முறை வரும்.
 
4. ஆறாம் நான்காம் ஏழாம் எழுத்துக்கள் சேர்ந்தால் தலை என்று அர்த்தம் வரும்.
 
5. ஐந்தாம் மூன்றாம் எழுத்துக்கள் சேர்ந்தால் ஒரு மருந்தின் பெயர் வரும்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தந்த தரவுகள் எல்லாம் சரியானவைதானா புயல் ஒரேழுத்து அதிகம் போல் இருக்கே ????

Link to comment
Share on other sites

நீங்கள் தந்த தரவுகள் எல்லாம் சரியானவைதானா புயல் ஒரேழுத்து அதிகம் போல் இருக்கே ????

 

தரவுகள் சரியானவை தான்
 
மேலதிகமாக ஒரு தரவு தருகின்றேன் அதனுடன் சேர்த்து முயற்சித்துப் பாருங்கள்
 
தரவு:
 
ஆறாம் இரண்டாம் எழுத்துக்களுடன் நீங்கள் ஏதாவது ஒரு எழுத்தைச் சேர்த்தால் கிளி எனப் பொருள்படும்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

 

களம் 16.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் …………………  
 
இச்சொல்லின் நேரடி அர்த்தம் பலவீனப்படுத்தவதற்குப் பிரயோகிக்கப்படும் யுக்தி முறைகளில் ஒன்று.
 
தரவுகள்:
 
1. இச்சொல் ஏழு எழுத்துக்கள் கொண்ட சொல்.
 
2. முதலாம் நான்காம் ஆறாம் ஏழாம் எழுத்துக்கள் சேர்ந்தால் பாம்பு என்னும் அர்த்தம் வரும். மிரதம்
 
3. ஐந்தாம் இரண்டாம் மூன்றாம் எழுத்துக்கள் சேர்ந்தால் ஓர் உறவு முறை வரும். பேத்தி
 
4. ஆறாம் நான்காம் ஏழாம் எழுத்துக்கள் சேர்ந்தால் தலை என்று அர்த்தம் வரும். தரம்
 
5. ஐந்தாம் மூன்றாம் எழுத்துக்கள் சேர்ந்தால் ஒரு மருந்தின் பெயர் வரும்.பேதி
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?

 

ஆறாம் இரண்டாம் எழுத்துக்களுடன் நீங்கள் ஏதாவது ஒரு எழுத்தைச் சேர்த்தால் கிளி எனப் பொருள்படும்

 

தத்தை

 

எனவே ஒழிந்துள்ள சொல்
 
                                                                        மித்திரபேதம்
Link to comment
Share on other sites

மேலதிகமாக இன்னுமோர் தரவு
 
இறுதி மூன்று எழுத்துக்களும் சேர்ந்தால் வேறுபாடு என அர்த்தம் வரும்.
 
Link to comment
Share on other sites

மிகவும் சரியான சொல் மித்திரபேதம்
 
மித்திரபேதம் என்னும் சரியான சொல்லைக் கண்டுபிடித்த முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த சுமோ மற்றும் கறுப்பி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

களம் 17.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் ………………….  
 
இச்சொல்லின் நேரடி அர்த்தம் சபையில் பலர் முன்னிலையில் சொல்லத்தகாத சொல்லை மறைத்துச் சொல்லல்.
 
தரவுகள்:
 
1. இச்சொல் ஒன்பது எழுத்துக்கள் கொண்ட சொல்.
 
2. முதலாம் ஒன்பதாம் எழுத்துக்கள் சேர்ந்தால் வீடு என அர்த்தம் வரும்.
 
3. இரண்டாம் எழுத்தும் ஆறாம் எழுத்தும் ஒரே எழுத்தாகும்.
 
4. மூன்றாம் எழுத்தும் ஏழாம் எழுத்தும் ஒரே எழுத்தாகும்.
 
5. நான்காம் ஆறாம் ஒன்பதாம் எழுத்துக்கள் சேர்ந்தால் நீர்நிலை ஒன்று வரும்.
 
6. முதலாம் நான்காம் ஒன்பதாம் எழுத்துக்கள் சேர்ந்தால் பகை என்னும் அர்த்தம் வரும்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?
 
Link to comment
Share on other sites

இடக்கரடக்கல் :huh::D

Link to comment
Share on other sites

மிகவும் சரியான சொல் இடக்கரடக்கல்
 
இடக்கரடக்கல் என்னும் சரியான சொல்லைக் கண்டுபிடித்த இசைக்கலைஞன் மற்றும் வாத்தியார் ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிரதம் என்றால் பாம்பு என்று எந்த அகராதியில் உள்ளது என்று கூற முடியுமா???? இன்றுதான் நான் இச்சொல்லையே கேள்விப்படுகிறேன்.

 

Link to comment
Share on other sites

மிரதம் என்றால் பாம்பு என்று எந்த அகராதியில் உள்ளது என்று கூற முடியுமா???? இன்றுதான் நான் இச்சொல்லையே கேள்விப்படுகிறேன்.

 

 

நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி மற்றும் வ. த இராமசுப்பிரமணியம் அவர்களின் திருமகள் தமிழகராதி ஆகியவற்றில் காணலாம்.
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

களம் 18.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் …………………   
 
இச்சொல்லின் அர்த்தத்தை நேரடியாகச் சொல்வதானால் கலவரங்களைத் தூண்டுவதற்குப் கையாளப்படும் ஓர் நடைமுறை எனச் சொல்லலாம்.
 
தரவுகள்:
 
1. இச்சொல் ஏழு எழுத்துக்கள் கொண்டதோர் சொல்லாகும்.
 
2. ஆறாம் முதலாம் ஏழாம் எழுத்துக்கள் சேர்ந்தால் தியானம் எனப் பொருள்படும்.
 
3. இரண்டாம் ஆறாம் ஏழாம் எழுத்துக்கள் சேர்ந்தால் எமது ஓர் உறுப்பாக அர்த்தம் வரும்.
 
4. ஐந்தாம் இரண்டாம் எழுத்துக்கள் சேர்ந்தால் அழகு என்னும் அர்த்தம் வரும்.
 
5. ஆறாம் மூன்றாம் நான்காம் எழுத்துக்கள் சேர்ந்தால் குற்றம் என்னும் அர்த்தம் வரும்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழிந்துள்ள சொல் என்ன?
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.