Jump to content

எழுத வேணும் போல தோன்றிச்சு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குடும்பம் எப்படி இருக்க வேணும் என்பதற்க்கு கவிஞைர்களில் இருந்து அறிஞர்கள் வரை எத்தைனையோ உவமாணங்கள் சொல்லி உள்ளார்கள்.அவற்றை எல்லாம் தூக்கிவீசும் அளவுக்கு ஒற்றுமையின் இலக்கனம் அந்த குடும்பம்.

ஆனனால் என்ன ஒரு சின்ன குறை' பெருமை பேசுவதும் இடையிடேயே புளுகுவதும்.இதை பலர் குறையாக பார்க்காவிட்டாலும் அவர்களை இது சம்பந்தமாக நோிலும் மறைவிலும் கின்டல் பண்ணுவார்கள்.

அண்மையில் அவர்கள் தாயகம் சென்றிந்தார்கள்.அவர்கள் அங்கு இருந்து திரும்பிய பின் எப்படி எல்லாம் வெட்டி விழுத்துவார்கள் என்று
இங்குள்ளவர்கள் கற்பனை பண்ணி கதைத்து சிரித்தார்கள்.
அவர்களும் வந்தார்கள் ஆனால் வழமையாக மாலை நேரங்களில் கூடும் இடத்துக்கு மழை காரனமாக வர முடியவில்லை.இதற்க்குள் அந்தக் குடும்பத்தலைவனின் தாயார் இறந்து விட்டா.(வயோதிபர்).வழமையான துக்கம் விசாரிக்கும் பொருட்டு அந்த வீட்டுக்கு தொலை பேசி எடுத்த போது மனைவி தான் கதைத்தார்.என்ன நடந்தது சுகமில்லாமல் இருந்தவவோ என்று சம்பிரதாய கேள்வியை கேட்டு வைத்தேன்.அதற்கு அவா இல்லை நல்லாய்தான் இருந்தவ நாங்கள் அங்கு நிக்கும் போது புதுசாய் வாங்கிய வானுக்கு பொங்கிய பொங்கல் எல்லாம் சப்பிட்டவ.திடீர்என்றுதான் இப்படி நடந்து போச்சு என்று சொன்னா.

 

(அந்த நன்பனின் துயரத்தில் பங்கு கொள்கிறேன்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது சுவைப்பிரியன். சில நேரங்களில் சிலவற்றைச் சகித்துத்தான் போகவேண்டி இருக்கிறது மற்றவர்களுடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட இதுக்கு ஒருத்தரும் எழுத மாட்டார்கள் சுவைப்பிரியன் ஏனென்டால் எல்லோருமே ஒரு விதத்தில் புகழ் விரும்பிகள் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின்  பகிர்வுக்கு நன்றி சுவைப்பிரியன்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எங்கடை ஒருசில சனத்தின்ரை கதையை காதுகுடுத்து கேக்க வெளிக்கிட்டால் வருசம் முழுக்க டாக்குத்தரும் ஆஸ்பத்திரியுமாய்த்தான் அலைய வேண்டி வரும்.. :D
 
ஒரு சமூக சாரளத்திற்கு நன்றி சுவைப்பிரியன். :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் சுவைப்பிரியன்......புகழேந்திகள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது சுவைப்பிரியன். சில நேரங்களில் சிலவற்றைச் சகித்துத்தான் போகவேண்டி இருக்கிறது மற்றவர்களுடன்.

 

நன்றி சுமே வருகைக்கும் கருத்துக்கும்

உங்கட இதுக்கு ஒருத்தரும் எழுத மாட்டார்கள் சுவைப்பிரியன் ஏனென்டால் எல்லோருமே ஒரு விதத்தில் புகழ் விரும்பிகள் தான்

 

உண்மைதான் அதுக்கு இப்படியா :rolleyes:

உங்களின்  பகிர்வுக்கு நன்றி சுவைப்பிரியன்...!

 

நன்றி சுவி வருகைக்கும் கருத்துக்கும்

 

எங்கடை ஒருசில சனத்தின்ரை கதையை காதுகுடுத்து கேக்க வெளிக்கிட்டால் வருசம் முழுக்க டாக்குத்தரும் ஆஸ்பத்திரியுமாய்த்தான் அலைய வேண்டி வரும்.. :D
 
ஒரு சமூக சாரளத்திற்கு நன்றி சுவைப்பிரியன். :)

 

 

இது காசு குடுத்து கேட்டது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒருவரது 'மனம்' சம்பந்தப்பட்ட விடயம் என நினைக்கிறேன், சுவைப்பிரியன்!

 

அங்கீகாரம் இல்லையென நினைப்பவர்கள், ஒரு விதமான 'சமூக அங்கீகாரத்தை' நிலைநாட்ட முயற்சின்றார்கள்!

 

அது 'மரண விசாரிப்பு' என்பதை பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் சுவைப்பிரியன்......புகழேந்திகள்....

 

நன்றி புத்தன் வருகைக்கும் கருத்துக்கும்.மற்றும் ஊக்குவிப்பு தந்த நவீனன் ஆரதிக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சமூக சாளரத்தில் பதிய வேண்டியததை இங்கே பதிந்து இருக்கிறீங்கள் போல் இருக்கிறது...எங்கட மக்களுக்கு இருக்கிற நோய்களில் பிரதானமானது தங்களின் புகழ்பாடுவதும் ஒன்று அதை வேறு மற்றவர்கள் காசு குடுத்து  கேக்க வேண்டிய நிலை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சமூக சாளரத்தில் பதிய வேண்டியததை இங்கே பதிந்து இருக்கிறீங்கள் போல் இருக்கிறது...எங்கட மக்களுக்கு இருக்கிற நோய்களில் பிரதானமானது தங்களின் புகழ்பாடுவதும் ஒன்று அதை வேறு மற்றவர்கள் காசு குடுத்து  கேக்க வேண்டிய நிலை..

 

உண்மைதான் யாயினி எனக்கும் இந்த குழப்பம் இருந்தது.ஏதோ குத்து மதிப்பில் இந்த பகுதியில் இணைத்து விட்டடேன்.நன்றி உங்கள் கருத்துக்கும் சுட்டி காட்டியமைக்கும்.நன்றி பகலவன் ஊக்குவிப்புக்கு.

 

இது ஒருவரது 'மனம்' சம்பந்தப்பட்ட விடயம் என நினைக்கிறேன், சுவைப்பிரியன்!

 

அங்கீகாரம் இல்லையென நினைப்பவர்கள், ஒரு விதமான 'சமூக அங்கீகாரத்தை' நிலைநாட்ட முயற்சின்றார்கள்!

 

அது 'மரண விசாரிப்பு' என்பதை பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை! :rolleyes:

 

நூறு வீதம் உண்மை புங்கை .நன்றி உங்கள் வருகைக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.