Jump to content

என் வழி தனி வழி என்ற மோடியின் அதிரடி முடிவுகளால் திணறும் தமிழகம்?


Recommended Posts

modi%20jeya%201.jpg

மோடியின் அதிரடி முடிவுகளால் திணறும் தமிழகம்?

  • மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனைத்து வகையிலும் ஆதரவு கொடுக்கும் எண்ணத்தில்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்.பி.க்கள், டெல்லியில் நாடாளுமன்றத்திலும் ராஜ்ய சபையிலும் பேசி வருகிறார்கள். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் பிரதமர் மோடியுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படவில்லை. 

    மாறாக மத்திய அரசின் ரயில்வே வரவு- செலவுத்திட்டத்தை வரவேற்று அறிக்கை விடுத்தார். அடுத்து வந்த பொது வரவு- செலவுத்திட்டத்தையும் வரவேற்று அறிக்கை கொடுத்திருக்கிறார். முன்பிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீதும் அந்த ஆட்சியை வழிநடத்திய பிரதமர் மன்மோகன்சிங் மீதும் தொடுத்த ஏவுகணைகளை பா.ஜ.க. தலைமையில் வழி நடத்தப்படும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மீது அவர் தொடுக்கவில்லை. 

    கச்சதீவில் மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு இல்லை என்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்த போதுகூட, முந்தைய அரசின் அதிகாரிகள் இப்படி ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த வாக்குமூலத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வராமலேயே நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பார்கள். அதில் கவனம் செலுத்தி கச்சதீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமையை பெற்றுக்கொடுங்கள் என்றுதான் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். 

    தமிழகத்திற்கு போதிய மண்ணெண்ணெய் ஒதுக்காமல் விட்டதைச் சுட்டிக்காட்டி,பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஜெயலலிதா, சென்ற ஆட்சியில் இருந்த அதிகாரிகள் செய்ததையே இப்போதும் செய்கிறார்கள். அதில் தாங்கள் கவனம் செலுத்தி தமிழகத்திற்கு கூடுதல் மண்ணெண்ணெய் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து கிடைப்பதற்கு வழி செய்யுங்கள் என்றே கோரிக்கை விடுத்தார். 

    அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பேசும் போது கூட, அம்மா மொடல் நிர்வாகத்தை மத்தியில் கடைப்பிடியுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள். குறிப்பாக, தமிழகத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 2 கோடி ரூபாய் வளர்ச்சி நிதி ஒதுக்கியிருக்கிறார் அம்மா. அந்த அம்மா மொடலைக் கடைப்பிடித்து ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்ள தொகுதி வளர்ச்சி நிதியை 12 கோடி ரூபாயாக (தற்போது 5 கோடி ரூபாய்) உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் அ.தி.மு.க. எம்.பி., பி.ஆர்.சுந்தரம். 

    அம்மா வரவேற்றுள்ள இந்த பட்ஜெட்டை நாங்களும் வரவேற்கிறோம். தமிழகத்தில் அம்மா மத்திய உணவு திட்டத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். அதற்கு நூறு சதவீத மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார் அ.தி.மு.க.வை நாடாளுமன்றத்தில் வழி நடத்தும் டாக்டர் மு.தம்பித்துரை. 

    தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தும்,தமிழகத்திற்கு கொடுக்கப்படுமா என்று மத்திய மின்துறை அமைச்சர் பி.கோயலிடம் தம்பித்துரை வலியுறுத்த, அமைச்சரோ, தமிழகத்தில் மின்பற்றாக்குறையை சமாளிக்க மிகவும் நேர்த்தியான முறையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனைபாராட்டுகிறேன் என்று அ.தி.மு.க. அரசை பாராட்டியிருக்கிறார். 

    இதுபோன்று,அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கும், பா.ஜ.க.விற்கும் சினேகிதம் சிறப்பாக இருக்கிறது. மத்தியில் இருப்பது நம் அரசு, நமக்கு ஆதரவான அரசு, அம்மாவிற்கு நட்பான அரசு என்ற சிந்தனையில்தான் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் இருக்கிறார்கள். 

    இந்த அடிப்படையில் பார்த்தால், முதல்வர் ஜெயலலிதாவும் சரி, நாடாளுமன்றத்தில் இருக்கும் அவருடையை எம்.பி.க்கள் 37 பேரும் சரி, மோடி அரசுக்கு எதிராக ஒரு துரும்பையும் இதுவரை எடுத்துப் போடவில்லை. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசோ அ.தி.மு.க.விற்கும், அக்கட்சிக்கு தலைமை தாங்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் தலைவலி கொடுக்கும் விடயங்களை தாராளமாகச் செய்து கொண்டிருக்கிறது. 

    ஆரம்பத்தில், ஆட்சிப் பொறுப்பேற்கும் நிகழ்ச்சிக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வரவழைத்து கௌரவப்படுத்தியது. பின்னர், மீனவர்கள் பிரச்சினை எழுந்த போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் உடனுக்குடன் விடுதலை செய்யப்பட்டாலும், அவர்களின் படகுகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. அது மட்டுமின்றி, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கப் போவதை தமிழக அரசு தடுக்க வேண்டும். உள்நாட்டுப் பிரச்சினையாக இருக்கும் மீனவர் பிரச்சினைக்காக இரு நாடுகளின் உறவுகளை தியாகம் செய்ய முடியாது என்று மத்திய அரசினால் தமிழக அரசுக்கு திட்டவட்டமாக தெரியப்படுத்தியது. 

    அடுத்து கச்சதீவு பிரச்சினை. அதில் தமிழக மீனவர்களுக்கு உரிமையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிவித்தது மத்திய அரசு. இப்போது அந்த தீவை திருப்பி வாங்கும் பிரச்சினைக்கே இடமில்லை என்று உச்சநீதிமன்றத்திலேயே முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் தொடுத்த வழக்கில் சொல்லி விட்டது. 

    அடுத்து, ராஜீவ் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யும் விடயத்திலும், இதில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு தன் நிலைப்பாட்டை இந்திய உச்சநீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியிருக்கிறது. ஏன் சமீபத்தில் மத்திய- மாநில அரசுகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி அர்சனா ராமசுந்தரம் வழக்கிலேயே மாநில அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் மத்திய அரசின் சட்டமா அதிபர் முகுல் ரஸ்தோகி முன்னெடுத்துள்ளார். 

    இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல் ஹிந்தி மொழி விவகாரம் வேறு தலை தூக்கியது. மத்திய அரசின் அலுவலகங்கள் முழுக்க முழுக்க ஹிந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கெனவே இருந்த காங்கிரஸ் அரசின் வலியுறுத்தலை,அப்படியே பா.ஜ.க. அரசு கடைப்பிடித்தது. அதனால் தமிழகத்தில் எதிர்ப்புக்குரல் கிளம்பியது. அனைத்துக் கட்சிகளும் கண்டன அறிக்கைகள் வெளியிட்டன. பிறகு, அந்த உத்தரவு ஹிந்தி பேசாத மாநிலங்களுக்கு இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. 

    ஆனாலும் ஹிந்தி மொழி வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதில் மத்திய அரசுக்கு குறிப்பாக மோடி தலைமையிலான அரசுக்கு ஆர்வம் அதிகமாக இருப்பதாகவே தெரிய வருகிறது. ஏனென்றால் அவருக்கு ஹிந்தி பேசும் மாநிலங்களான பீஹார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் மற்றைய வட மாநிலங்களிலும்தான் அதிக எம்.பி.க்கள் கிடைத்திருக்கிறார்கள். 

    அதை இன்னும் வலுப்படுத்திக்கொள்ள தங்கள் அரசு ஹிந்தி மொழி வளர்ச்சிக்காக பாடுபடும் அரசு என்பதை பறைசாற்றிக்கொள்ளும் நிர்ப்பந்தத்தில் நரேந்திரமோடி அரசு இருப்பதாகவே தெரிகிறது. 

    எல்லாவற்றிற்கும் உச்சகட்டமாக, எதிர்வரும் ஓகஸ்ட் 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை,தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது அறிவிப்பாக மத்திய மனித வள மேம்பாட்டுச் செயலாளரிடமிருந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் மூலம் வந்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ, கேந்திரிய வித்யாலயா சங்கேதன் மற்றும் என்.சி.ஈ.ஆர்.டி. போன்றவை இந்த சமஸ்கிருத வாரத்தைக் கொண்டாடும் என்று அறிவித்துள்ள அதே நேரத்தில் தமிழக அரசும் மாநில, மாவட்ட மற்றும் அனைத்து மட்டத்திலும் இந்த வாரத்தைக் கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    தமிழகத்தில் சமஸ்கிருத வாரம் என்பது, ஹிந்தியில் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் செயல்படும் என்பதன் அடுத்த கட்டம் என்றே தமிழ் அமைப்புகள் கொந்தளிக்கின்றன. அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டன அறிவிப்பு வெளியிட்டு விட்டார்கள். அதை விட முக்கியமாக முதலமைச்சர் ஜெயலலிதாவும் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். 

    அவர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இப்படி சமஸ்கிருத வாரம் கொண்டாடச் சொல்வது பொருத்தமற்றது. சமூக நீதி மன்றும் மொழிப்போராட்டங்கள் வலுவாக நடைபெற்ற மாநிலம் தமிழகம். ஆகவே இங்கே செம்மொழி வாரம் கொண்டாடுவதுதான் சிறப்பாக இருக்கும் என்று சுட்டிக்காட்டி, அனைத்து மாநிலங்களிலுமே அந்தந்த கலாசாரத்தை பிரதிபலிக்கும் மொழியின் வாரமாகக் கொண்டாட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். 

    தமிழ் மொழி வாரம் மட்டுமின்றி, கன்னட மொழி வாரம், தெலுங்கு மொழி வாரம், மலையாள மொழி வாரம் என, இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மொழியின் வாரத்தைக் கொண்டாட வேண்டும் என்பதுதான் இந்த கோரிக்கையின் பின்னணியில் இருக்கும் விடயம்.  அது மாதிரி அந்தந்த மாநில மொழி வாரம் கொண்டாடுவதுதான் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியிருக்கிறார். இது மாதிரி கருத்துக்கள்தான் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்காலத்தில் தனக்குப் போட்டியாக தேசிய அரசியலில் வருவாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 

    ஏனென்றால், ஏற்கனவே தேசிய அரசியலை மனதில் வைத்தே கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை கடைசி நேரத்தில் கூட்டணியிலிருந்து விலக்கி வைத்தார் ஜெயலலிதா. அது மட்டுமின்றி தேர்தல் பிரசாரத்தில், மோடியா, லேடியா என்றால் இந்த லேடியின் ஆட்சியில் உள்ள தமிழகத்தில்தான் சிறந்த நிர்வாகம் நடக்கிறது என்று பிரசாரம் செய்தார். நாடாளுமன்றக் கட்டிடத்தின் புகைப்படத்தினை கட் அவுட்களிலும், போஸ்டர்களிலும் போட்டே சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு கேட்டார்கள். 

    அடுத்த பிரதமர் அம்மா என்ற கோஷத்தை அ.தி.மு.க.வினர் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச்சென்றார்கள். இப்படியொரு எதிர்கால தேசிய அரசியல் திட்டத்தில் இருக்கும் ஒரு மாநில தலைவர் ஜெயலலிதா மட்டுமே. அதுவும் அவர் பா.ஜ.க.வில் உள்ளவர்களுக்கும், பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லாதவர் என்ற எண்ணம் நரேந்திரமோடியின் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. இவற்றை மனதில் வைத்தே அ.தி.மு.க.வுடன் நட்புணர்வுடன் இருக்கிறோம் என்பதை பறைசாற்றுவது போல் மோடியின் அணுகுமுறைகள் இருந்தாலும், அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் வௌ;வேறு கட்சிகள் என்ற ஒரு தெளிவான பாடத்தை எடுக்க விரும்புகிறார் மோடி. 

    அதன் பிரதிபலிப்புதான் எவ்வளவுதான் அ.தி.மு.க. மோடி பக்கமாக நெருங்கிச் சென்றாலும், என் வழி தனி வழி என்ற ரீதியில் காய் நகர்த்துகிறார் பிரதமர் நரேந்திரமோடி. தேசிய அரசியல் என்ற ஒரு உறைக்குள், பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் இரு கத்திகள் உள்ளே இருக்க முடியாது என்பதை நரேந்திரமோடி ஆட்சியின் நடவடிக்கைகள் அ.தி.மு.க.விற்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன என்பதுதான் இதன் ஹைலைட். இதை எவ்வளவு தூரம், எத்தனை நாளைக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பொறுத்துக் கொண்டிருக்கப் போகிறார் என்பதுதான் அனைத்து அரசியல் பார்வையாளர்களுக்கும் இப்போது இருக்கும் அகாடமிக் கேள்வி!

தமிழகத்திலிருந்து எம்.காசிநாதன் இன்போ தமிழ் குழுமம்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.