Jump to content

இலக்கை நோக்கி நடந்த வேளை ..!


Recommended Posts

எருக்களை வாசமும் ..
எருமையின் சத்தமும் ..
பாதை கடந்து போகையில் ..
கூடவரும் நாயுருவியும் ...
கால்களை கண்டவுடன் ..
வெட்கப்படும் தொட்டா சிணுங்கியும் ..
மெதுவாக குற்றி கூடவரும் ..
நெருஞ்சி முள்ளும் ..
ஆற்றுப்படுக்கையில் கோலம் போடும் ..
மணலின் ஜாலத்தை குழப்பி ..
நடக்கும் கால்களின்  அடியில் ..
சிதைந்து கிடக்கும் நத்தை ஓடும்  ..
எட்டி பிடித்து ஏறுவதுக்கு ..
கைகள் பற்றி பிடிக்கும் வீரை மரவேர் ..
சரசரக்கும் சருகு இலைகள் ..
அதுக்குள் வசிக்கும் சாரைப்பாம்பு ..
என் காலடி சத்தத்தில் எழுந்து ஓடும் ..
பெருச்சாளியும்  ..சிறு பூச்சியும் ...
நிசப்த்தம் கலைத்து விழிக்கும் ..
சிறுவான் குரங்கு கூட்டமும் ..
காட்டி கொடுக்காது அமைதி ..
காக்கும் ஆள்காட்டி பறவையும் ..
கூடவே வரும் என் நிழல் ..
என் முன் தெரியமுன் நான் ..
போய் சேரவேண்டும் இலக்கு நோக்கி ..
விடிந்து விட்டால் மறைப்பு தேவை ..
தெரிந்து விட்டால் அறிந்து விடுவார் ..
ஆகையால் சற்று ஓய்வு எடுப்போம் ..
சூரை பற்றைக்குள் நாம் ..
தோழனின் விழிப்பில் எம் ..
அசதி உறக்கம் விழி மூடும் .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை. சூரைப் பற்றை என்றால் என்ன ????

Link to comment
Share on other sites

முள்க்களால்ஆனது  கொடியா சுற்றி சுற்றி வளரும்  வன்னியில் நிறைய உண்டு அதில மாட்டினா உடலை கீறித்தான் விடும் .

 

நன்றி சுமோ அக்கா வரவுக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கூடவே வரும் என் நிழல் ..
என் முன் தெரியமுன் நான் ..
போய் சேரவேண்டும்

 

 

உவமானம் அருமை, அஞ்சரன்!

 

தொடருந்து எழுதுங்கள்.....!

 

Link to comment
Share on other sites

நன்றி புங்கை அண்ணா வரவுக்கு உங்கள் கருத்துக்கும் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீறுகொண்ட கிராமிய கவிதை இது......வாழ்த்துக்கள் அஞ்சரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை. சூரைப் பற்றை என்றால் என்ன ????

 

சூரைக்கொடியின் முட்கள் புலியின் நகத்தைப்போல் வளைந்திருக்கும். இதர செடிகொடிகளுக்கு பாதுகாப்பாக இருக்குமே தவிர....எவ்வித விசமுமில்லாத ஒரு கொடி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எருக்களை, எருமை, நாயுருவி,

தொட்டா சிணுங்கி, நெருஞ்சி முள்ளு, நத்தை ஓடு

வீர மரம், சருகு இலை, சாரைப்பாம்பு

பெருச்சாளி, சிறு பூச்சி, வான் குரங்கு

ஆள்காட்டி, மணல் கோலம், சூரை பற்றை

 

மிக .. மிக.. அருமை அஞ்சரன் ... கவிதைக்குள் கவிதை

என்ன அழகான இயற்கை சூழல் சார்ந்த சொற் பதங்கள்

 

... உங்கள் கவிதை வாசிக்கும் போது பல வருடங்களுக்கு முன்னர் இராணுவ முன் அரண்கள் பகுதியில்

நடு இரவு நேரங்களில், முழு நிலவு வெளிச்சத்தில், மணல் கும்பிகளில், காவல் அரண்களில் தோழர்களோடு காவல் கடமை புறிந்தது அப்படியே ஞாபகத்திற்கு வந்தது.

அவர்களை எல்லாம் ஒரு முறை கண்ணீருடன் நினைத்துக் கொள்கிறேன்.

கவிதைக்கு நன்றி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான...மனத்தெம்பு வீறு கொண்டெழும் கவிதை....வாழ்த்துக்கள்...தொடர்க உம் கவிப்பணி...

Link to comment
Share on other sites

தமிழ் மறவர்களின் ஈழ விடுதலைக்கான ஆயுதப் போரட்டப் பாதையில் இடம்பெற்ற, இயற்கையின் ஆபத்துக்களையும், அரவணைப்புகளையும் அஞ்சரனின் கவிதை வெளிப்படுத்தி உள்ளதுபோல் தெரிகிறது. வெளிப்படுத்தி நிற்கும் அழகும் அற்புதமானது. வாழ்த்துக்கள்!!   
 
Link to comment
Share on other sites

வீறுகொண்ட கிராமிய கவிதை இது......வாழ்த்துக்கள் அஞ்சரன்.

நன்றி குமாரசாமி அண்ணே வரவுக்கு ..உங்கள் கருத்துக்கும் .

எருக்களை, எருமை, நாயுருவி,

தொட்டா சிணுங்கி, நெருஞ்சி முள்ளு, நத்தை ஓடு

வீர மரம், சருகு இலை, சாரைப்பாம்பு

பெருச்சாளி, சிறு பூச்சி, வான் குரங்கு

ஆள்காட்டி, மணல் கோலம், சூரை பற்றை

 

மிக .. மிக.. அருமை அஞ்சரன் ... கவிதைக்குள் கவிதை

என்ன அழகான இயற்கை சூழல் சார்ந்த சொற் பதங்கள்

 

... உங்கள் கவிதை வாசிக்கும் போது பல வருடங்களுக்கு முன்னர் இராணுவ முன் அரண்கள் பகுதியில்

நடு இரவு நேரங்களில், முழு நிலவு வெளிச்சத்தில், மணல் கும்பிகளில், காவல் அரண்களில் தோழர்களோடு காவல் கடமை புறிந்தது அப்படியே ஞாபகத்திற்கு வந்தது.

அவர்களை எல்லாம் ஒரு முறை கண்ணீருடன் நினைத்துக் கொள்கிறேன்.

கவிதைக்கு நன்றி...

நன்றி சசி வரவுக்கு ...எல்லாம் கடந்த பாதைகள்தான்  :(

அருமையான...மனத்தெம்பு வீறு கொண்டெழும் கவிதை....வாழ்த்துக்கள்...தொடர்க உம் கவிப்பணி...

நன்றி அல்வயன் வரவுக்கு ....இது இப்படி ஒரு பெயர் அண்ணே  :D

 

தமிழ் மறவர்களின் ஈழ விடுதலைக்கான ஆயுதப் போரட்டப் பாதையில் இடம்பெற்ற, இயற்கையின் ஆபத்துக்களையும், அரவணைப்புகளையும் அஞ்சரனின் கவிதை வெளிப்படுத்தி உள்ளதுபோல் தெரிகிறது. வெளிப்படுத்தி நிற்கும் அழகும் அற்புதமானது. வாழ்த்துக்கள்!!   

 

நன்றி பாஞ்ச அண்ணே ..நிச்சயமா அதுவே .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.