Jump to content

நல்லூர் கந்தன் வருடாந்த உற்சவம் 01.08.2014 ஆரம்பம்.படங்கள்,காணொளிகளை இங்கே பார்க்கலாம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1.ம் திருவிழா......படங்கள் காணொளிகள் அவ்வப்போது எடுத்து வரப்படும்..

 

10482844_813702035337239_819035700383416

 

10562968_813702058670570_370791217222373

 

 

1560583_813702022003907_3325347954617349

 

10524585_544515672321426_903675636650197

 

1560741_544515685654758_2783602082113044

 

983753_544515738988086_33050202840976557

 

10391035_544515715654755_479254741978320

 

 

1622105_813701992003910_5632278620819526

 

10574250_689453997792196_593869560015239

 

 

10305957_689454017792194_322173651363298

 

10313567_689453904458872_243418767151861

 

 
*************************************************************************************************************************************************************************************************************
 
நல்லூர் திருவிழாவிற்கான வேலைகள் முடிவு;
அடியார்களே கலாச்சார ஆடையுடன் வாருங்கள்...

நல்லூர் கந்தனை தரிசிக்க வரும் அடியவர்கள்
கலாச்சார ஆடைகளை அணிந்து வருமாறு யாழ்.
மாநகர சபை முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்....

எதிர்வரும் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை நல்லூரானின்
வருடாந்த திருவிழா ஆரம்பமாக உள்ளது.
அதனை முன்னிட்டு இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நல்லூர்
கந்தனின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாக
உள்ளது. அதற்கான பூர்வாங்க வேலைகள்
அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

தமிழர்களுடைய கலாச்சாரம் அனைவராலும் விரும்பப்படுவது.
அதற்கு என தனிச்சிறப்பும் உண்டு.
எனவே விழாக்காலத்தில் வரும் எந்த
மதத்தத்தவர்களாக இருந்தாலும் கலாச்சார
ஆடைகளை அணிந்து வாருங்கள்.
குறிப்பாக பெண்கள் தங்களது ஆடைகளில்
மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
அத்துடன் களவினை இம்முறையும்
குறைத்துக் கொள்ள பொலிஸார்
கடமைக்கு அமர்த்தப்படுவார்கள் அதேநேரம்
ஆலயத்திற்கு வரும் அடியவர்களும் தங்கள்
உடமைகளை பாதுகாக்க வேண்டும்.

மேலும் போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. பகல் 12 மணியில் இருந்து 2 மணிவரையான காலப்பகுதியிலேயே ஆலய சூழலில் வாகனங்கள் செல்ல முடியும். மற்றையநேரங்களில் எக்காரணம் கொண்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
மாற்று பாதைகளையே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
10547413_811939438846832_675390363986837
 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 78
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சகோதரி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.. இவ்வளவு சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்படும் நல்லூர் கந்தனும் முள்ளிவாய்க்கால் பெருந்துயரினிலிருந்து மக்களை காக்க முன்வரவில்லை.. பாவம் ஈழமக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தனில்... இன்றும் எனக்குப் பிடித்தது,
ஒரு ரூபாய் அர்ச்சனை.
தனக்கு பணம் வேண்டும் என்றால்....  கொட்டிக் கொடுக்க எத்தனையோ வழிகள் இருந்தும்,

அர்ச்சனை சீட்டின் விலை பட்டியலை உயர்த்தவில்லை.
கோவிலுக்குள்... அரசன் போனாலும், ஆண்டி போனாலும் மேல் சட்டையை கழட்டி விட்டுத் தான் போக வேண்டும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

....  போனாலும் மேல் சட்டையை கழட்டி விட்டுத் தான் போக வேண்டும்.

 

 

ஏன் கழட்டணும்?

இங்கேயுள்ள பெரும்பாலான அறுபடை கோயில்களில் அப்படி இல்லையே?

ஒரே இறைவனுக்கு பல்வேறு வழிபாட்டு முறை தவறல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கழட்டணும்?

இங்கேயுள்ள பெரும்பாலான அறுபடை கோயில்களில் அப்படி இல்லையே?

ஒரே இறைவனுக்கு பல்வேறு வழிபாட்டு முறை தவறல்லவா?

 

ஒவ்வொரு கோவிலுக்கும். ஒவ்வொரு தனித்துவம் உள்ளது.

கேரளாவில் உள்ள குருவாயூரப்பன் கோவிலுக்குப் போகும் போது, வேட்டி கட்ட வேணும்.

கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு செல்லும் போது.... அரைக் கால் சட்டை போடப் படாது.

என்று... கன சட்டங்கள் இருக்கும் போது....

நல்லூர் முருகன், தனது சண்டித்தனத்தை... இதில் தன்னும் காட்டுவதில்.... நான், பெருமை கொள்கின்றேன்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு கோவிலுக்கும். ஒவ்வொரு தனித்துவம் உள்ளது.

கேரளாவில் உள்ள குருவாயூரப்பன் கோவிலுக்குப் போகும் போது, வேட்டி கட்ட வேணும்.

கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு செல்லும் போது.... அரைக் கால் சட்டை போடப் படாது.

என்று... கன சட்டங்கள் இருக்கும் போது....

நல்லூர் முருகன், தனது சண்டித்தனத்தை... இதில் தன்னும் காட்டுவதில்.... நான், பெருமை கொள்கின்றேன்.  :)

 

தவறு...

 

நீங்கள் கூறிய கோயில்களெல்லாம் தனியார் வசம் உள்ளவை அதாவது அவாள் வசம் செல்வாக்கில், நிர்வாகத்திலுள்ளவை..(சிதம்பரம், சுசீந்திரம் கோயில்கள் அவாள் வசம் உள்ளவை.)

 

தமிழ்நாடு அரசு ஏற்று, நெறிமுறைபடுத்தப்படும் எந்த கோயில்களிலும் இந்த சட்டையில்லாமல் தான் துதிக்கவேண்டும் என்ற விதிமுறை இல்லை.

 

ஆண்களை பொது இடத்தில் சட்டையில்லாமல் பார்க்க அருவருப்பாக இல்லை? :o

மற்ற பெண்கள் கோயிலுக்கு வரவேண்டாமா? :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறு...

 

நீங்கள் கூறிய கோயில்களெல்லாம் தனியார் வசம் உள்ளவை அதாவது அவாள் வசம் செல்வாக்கில், நிர்வாகத்திலுள்ளவை..(சிதம்பரம், சுசீந்திரம் கோயில்கள் அவாள் வசம் உள்ளவை.)

 

தமிழ்நாடு அரசு ஏற்று, நெறிமுறைபடுத்தப்படும் எந்த கோயில்களிலும் இந்த சட்டையில்லாமல் தான் துதிக்கவேண்டும் என்ற விதிமுறை இல்லை.

 

ஆண்களை பொது இடத்தில் சட்டையில்லாமல் பார்க்க அருவருப்பாக இல்லை? :o

மற்ற பெண்கள் கோயிலுக்கு வரவேண்டாமா? :)

 

கோவிலுக்குப் போவதே.... ஒரு வேண்டுதலுடன் தான். :) 

மற்றவன் எப்படி வாறான், என்று பார்ப்பது தான்.... எமது வேலை என்றால்.....

கோவிலுக்குள் நுழையாமல் இருக்கலாம்.

இது... பெண்களுக்கும், ஆண்களுக்கும் பொருந்தும்.

 

 தமிழ்நாட்டு கோவில்களுடன் ஒப்பிடும் போது..... நல்லூர் கோவில், ஆயிரம் மடங்கு திறம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கழட்டணும்?

இங்கேயுள்ள பெரும்பாலான அறுபடை கோயில்களில் அப்படி இல்லையே?

ஒரே இறைவனுக்கு பல்வேறு வழிபாட்டு முறை தவறல்லவா?

ராசவன்னியன், 
 
நீங்கள் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சென்றதில்லையா அங்கு ஆண்கள் மேல் சட்டையை கழட்டி விட்டுத் தான் போக வேண்டும்.

பகிர்வுக்கு நன்றி யாயினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ராசவன்னியன், 
 
நீங்கள் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சென்றதில்லையா அங்கு ஆண்கள் மேல் சட்டையை கழட்டி விட்டுத் தான் போக வேண்டும்.

தமிழரசு, தென் தமிழ் நாட்டின் சில பகுதிகள் கேரள நம்பூதிரிகளின் ஆளுமையில் தொன்று தொட்டு இருந்து வந்தன. அவற்றின் நடைமுறைகள்தான் இன்றும் பின்பற்றப்படுகின்றன. திருச்செந்தூர், சுசீந்திரம், கன்னியாகுமரி, பத்மனாதபுரம் என எந்த கோயில்கள் சென்றாலும் கேரள நடைமுறைதான். இவற்றில் சில கோயில்களின் வழக்கங்களுக்கு இன்னமும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால்தான் நான் பெரும்பாலான கோயில்கள் என குறிப்பிட்டேன். பழங்கால கோயில் வழிபாட்டு முறைகள், கொடுமையானதும் மற்றும் அருவருப்பானதும் ஆகும். தற்பொழுதுதான் இந்த வழிபாட்டு முறைகள் மாற்றம் பெற்று வருகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவிலுக்குப் போவதே.... ஒரு வேண்டுதலுடன் தான். :) 

மற்றவன் எப்படி வாறான், என்று பார்ப்பது தான்.... எமது வேலை என்றால்.....

கோவிலுக்குள் நுழையாமல் இருக்கலாம்.

இது... பெண்களுக்கும், ஆண்களுக்கும் பொருந்தும்.

 

 தமிழ்நாட்டு கோவில்களுடன் ஒப்பிடும் போது..... நல்லூர் கோவில், ஆயிரம் மடங்கு திறம். :D

 

சிரித்துக்கொண்டேன்... :lol:

வாழ்க வளமுடன்...!

(நல்லவேளை, உள்ளாடையுடன் மட்டும் பக்தர்கள் வந்தால் போதும், ஏன் அவற்றை கவனிக்கிறீர்கள்..? என நீங்கள் கேட்பீர்கள் போலுள்ளது :o )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் ஆண்கள்  போல் இல்லாமல் தொப்பை வயிற்றை சொன்னேன்.  ஆண்கள் பார்க்க நன்றாக சிலிம்மாக  இருக்க வேண்டும்  தொப்பை வயிற்றை பார்க்கும் போது அருவருப்பாகதான் இருக்கும்  நல்லூர் கோவிலில் முருகனை  கும்பிட போனால் பிள்ளையாரல்லவா கும்பிட்டு வரவேண்டியதா கிடக்கு :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கல்லூரி மாணவன்
தன் சொந்த செலவிற்கு
தன் வீட்டிலேயே திருட
எது செய்தும் பலனளிக்காமல் போக
ஒரு தந்திரம் செய்தார் அவன் தந்தை.

பணத்தை அவன் புத்தகத்தில் வைத்துவிட
அது மிகவும் பத்திரமாக இருந்தது
அதை அவன் தொடுவதே இல்லை
அதன் பக்கம் திரும்புவதே இல்லை
இது புறம்

அது போலும் இறைவனும்
மனிதன் எந்தப் பக்கம் கவனம் திரும்புவதில்லையோ...
எங்கு தன் மனதை செலுத்துவதில்லையோ...
அங்கு சென்று ஒளிந்து கொண்டான்..
இறைவன் 
மனிதனின் அகத்திலே உள்ளத்திலே ஒளிந்து கொண்டான்..!

மனிதன் இன்னமும் புறத்திலேயும்,
கோவில்களிலும் சடங்குகளிலும் தேடிக்கொண்டிருக்கின்றான்!
அதனால் அவனும், மனிதன் கையில் சிக்குவதில்லை!!

 

இது நல்லூர் கந்தனுக்கும், நெல்லூர் சித்தனுக்கும், கண்டி கதிர்காமனுக்கும் etc.. பொருந்தும்.. :icon_idea:

 

-படித்து ரசித்தது (தமிழ்சிறிக்காக.. :))

 

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ சொன்ன பிழையான செய்தியை நம்பியிருக்கார் ராஜ வன்னியனண்ணை கதிர்காமம் கண்டியில் இல்லை .என்ன தெனாலி திரைப்படம் பார்த்ததோ

 

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ சொன்ன பிழையான செய்தியை நம்பியிருக்கார் ராஜ வன்னியனண்ணை கதிர்காமம் கண்டியில் இல்லை. .என்ன தெனாலி திரைப்படம் பார்த்ததோ :lol: :lol: :lol:

 

ஜீ....

 

கதிர்காமம் உவா பிரதேசத்தில், யால தேசிய வனப்பகுதியில், திஸமஹரம ஊருக்கு அருகில் இருக்கிறது.. தமிழகத்தில் நாங்கள் வேண்டுவது "கண்டி கதிர்காமா...கந்தா..." என்று ஒரு flow வில் சொல்வது..

 

இதற்கு ஏன் தெனாலியை இழுக்கிறீர்கள்..?

 

பழமொழியை சொன்னா ரசிக்கணும், ஆராயப்படாது, கண்டியளோ? :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

இது நல்லூர் கந்தனுக்கும், நெல்லூர் சித்தனுக்கும், கண்டி கதிர்காமனுக்கும் etc.. பொருந்தும்.. :icon_idea:

------

 

 

யாரோ சொன்ன பிழையான செய்தியை நம்பியிருக்கார் ராஜ வன்னியனண்ணை கதிர்காமம் கண்டியில் இல்லை .என்ன தெனாலி திரைப்படம் பார்த்ததோ

 

:lol: :lol: :lol:

 

நானும்... இதனை வாசித்தேன், முனிவர்.

ஆனால்.... கண்டி கதிர்காமன் என்றதை கவனிக்கமால் விட்டு விட்டேன்.

வன்னியன் வந்து  மாற்ற முதல், ஒரு பாதுகாப்புக்காக.... "கொப்பி" எடுத்து வைக்கப் பட்டுள்ளது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும்... இதனை வாசித்தேன், முனிவர்.

ஆனால்.... கண்டி கதிர்காமன் என்றதை கவனிக்கமால் விட்டு விட்டேன்.

வன்னியன் வந்து  மாற்ற முதல், ஒரு பாதுகாப்புக்காக.... "கொப்பி" எடுத்து வைக்கப் பட்டுள்ளது. :D

 

நான் ஏனப்பு மாற்றப் போகிறேன்? :)

Never!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
புலம்பெயர் நாடுகளிலை இருக்கிற எங்கடை கோயில்வளியை நடக்கிற கூத்தை விட நல்லூர் ஆயிரம் மடங்கு திறம்..... :D
 
 
நல்லூர்கந்தனுக்கு அரோகரா...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொலிக்கு நன்றி  கு . சா...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு, தென் தமிழ் நாட்டின் சில பகுதிகள் கேரள நம்பூதிரிகளின் ஆளுமையில் தொன்று தொட்டு இருந்து வந்தன. அவற்றின் நடைமுறைகள்தான் இன்றும் பின்பற்றப்படுகின்றன. திருச்செந்தூர், சுசீந்திரம், கன்னியாகுமரி, பத்மனாதபுரம் என எந்த கோயில்கள் சென்றாலும் கேரள நடைமுறைதான். இவற்றில் சில கோயில்களின் வழக்கங்களுக்கு இன்னமும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால்தான் நான் பெரும்பாலான கோயில்கள் என குறிப்பிட்டேன். பழங்கால கோயில் வழிபாட்டு முறைகள், கொடுமையானதும் மற்றும் அருவருப்பானதும் ஆகும். தற்பொழுதுதான் இந்த வழிபாட்டு முறைகள் மாற்றம் பெற்று வருகின்றன.

உண்மையா?
 ஈழத்தில் எல்லா கோவில்களிலும் இந்த சட்டையை கழட்டும் பழக்கம் உள்ளது. அதை கடவுளுக்கு கொடுக்கும் ஒரு மரியாதையாக செய்து வந்திருக்கலாம். விதை நிலங்களில் செருப்புடன் செல்வதையே முன்பு விரும்புவதில்லை. நான் செருப்புடன் சென்று பழசுகளிடம் பலமுறை பேச்சு வாங்கி இருக்கிறேன். அதை அவர்கள் மண்ணுக்கு கொடுக்கும் ஒரு மரியாதையாக கருதி வந்தார்கள். இனி வரும் காலங்களில் இவை இல்லாமல் போய்விடுவதோடு..............      விவசாயத்துறை காலணிகள் கட்டாயம் அணிய வேண்டும் என்று ஒரு சட்டத்தை கூட பாதுகாப்பு கருதி நடைமுறை படுத்தலாம்.
அவர்களுடைய காலத்திற்கு ஏற்ப அவர்கள் அவர்களது நடைமுறைகளை வைத்திருந்தார்கள். எமது காலத்திற்கு உகந்தவையை நாம்தான் உருவாக்க வேண்டும்.
 
கேரள மக்களுக்கும் எமக்கும் நிறைய தொடர்பு இருக்கிறதே ....? இது எப்படி வந்திருக்கும்?
சேர மன்னனின் ஆட்சி ஈழத்திலும் பரந்து இருந்திருக்குமா?
தமிழகம்தான் எமக்கு மிகவும் அருகில் இருக்கிறது.
 
எனது தாயாரின் சொந்த இடம் நெடுந்தீவு .... இது ராமஸ்வரத்திட்கும் யாழ்பானத்திகும் இடையில் இருக்கும் ஒரு சிறிய தீவு. இவர்களுடைய தமிழுக்கும் மதுரை தமிழுக்கும்  நிறைய தொடர்பு இருக்கிறது  மதுரை தமிழர்கள்  பேசும் பல சொல்லாடல்களை எனது தாயரின் உறவினர்கள் பேசுவார்கள்.
 
அதேபோல் எனது தந்தையின் பாட்டி ....... என்ன மோனை பறையிறாய்? என்று மலையாளத்திலையே  பேசுவார். எமது ஊர் பாட்டிமார் நிறைய மலையாள சொற்கள் பாவிக்கிறார்கள். 
 
இப்போ மலையாளிகள்தான் எம்மை கொன்று குவிக்கிறார்கள். ஒன்றுமே புரியவில்லை.
ஆழமான ஆய்வை யாரும் சரியாக செய்யவில்லை என்பது மட்டும் தெரிகிறது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உண்மையா?
 ஈழத்தில் எல்லா கோவில்களிலும் இந்த சட்டையை கழட்டும் பழக்கம் உள்ளது. அதை கடவுளுக்கு கொடுக்கும் ஒரு மரியாதையாக செய்து வந்திருக்கலாம்.
 
......
 
இப்போ மலையாளிகள்தான் எம்மை கொன்று குவிக்கிறார்கள். ஒன்றுமே புரியவில்லை.
ஆழமான ஆய்வை யாரும் சரியாக செய்யவில்லை என்பது மட்டும் தெரிகிறது.

 

மல்லுகளிடமுள்ள ஒற்றுமை நம்மிடம் இல்லை. இதை நான் தினந்தோறும் இங்கே பார்த்து வருகிறேன். எந்த ஒரு புதிய இடத்திலும் அறிமுகமாகாதவர்கள் சந்தித்துக்கொண்டால், "மலையாளியோ...?" என கேட்டுவிட்டே மற்றவைகளை பேசுவர். ஒரே மல்லு இனமென்றால் காரியம் உடனே கைகூடிவிடும்..அவர்களின் நெட்நொர்கின் வலிமை அப்படி! :)

பழங்கால சேர நாட்டு மக்களே(மல்லு) தன் சுயமிழந்து சோரம்போன இனம்தான். வடக்கேயிருந்து பிழைக்க வந்த நம்பூதிரிகள், சேர நாட்டு சிற்றரசுகளை, தாங்கள் கடவுளின் தேவ பாசையை கற்ற இறை ஏஜெண்டுகளென மூளை சலவை செய்து, அரசனை கைக்குள் போட்டு தங்கள் விஷத்தை ஆகம விதிகள் என உருவாக்கி,  மக்களை பயமுறுத்தி ஆட்டுவிக்க அவர்கள் தோற்றுவித்த நடைமுறைகள்தான் இப்போதிருக்கும் கடவுளின் வழிபாட்டு முறைகள்..தென் தமிழ்நாட்டின் சில கோயில்களும் முன்பு நம்பூதிரிகளின் வழிகாட்டலின் கீழ் இருந்தன..

தான் ஆளுமையுடன் வாழ வகுத்த உயர்சாதி, கீழ்சாதி என்ற பாகுபாட்டு அநீதியை, நம்பூதிரி cum பிராமணாள் கூட்டு அடக்குமுறையை தட்டிக்கேட்டவர்கள் தான் ஈ.வெ.ரா. பெரியாரின் திராவிட கட்சியை சேர்ந்தவர்கள்.. இந்த விடயத்தில் பெரியாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர்கள் இல்லையெனில், தமிழ் நாட்டில் இன்றும் கோயில்களில் அவாள்கள் அட்டகாசமே, அடக்குமுறை கொடுமையே மேலோங்கியிருக்கும்.

 

ஈழத்திலும் இந்த வழிபாட்டுமுறைகளின் தாக்கம் கலாச்சார பரிமாற்றம் மூலம் பரவி இருந்திருக்கும்..அங்கே இன்னொரு பெரியார் வந்து சுளுக்கெடுத்தால் தமிழகம் போல் வழிபாட்டு முறை எல்லாம் மேம்பட்டுவிடும்! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் எல்லா கோவில்களிலும் இந்த சட்டையை கழட்டும் பழக்கம் உள்ளது

அத்துடன் பாதணி

 

இதனால் சிலர் கோயிலுக்குள் வராமல் தவிர்ப்பதுமுண்டு :( 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் எல்லா கோவில்களிலும் இந்த சட்டையை கழட்டும் பழக்கம் உள்ளது

அத்துடன் பாதணி

 

இதனால் சிலர் கோயிலுக்குள் வராமல் தவிர்ப்பதுமுண்டு :( 

 

எனது ஊரிலும், அண்டைய ஊர்களிலும் மேற்சட்டையுடன் வருபவர்களை வெளியேற்றுவதற்கென்றே ஒரு குழு தனியாக இயங்கும். :D
 
Spoiler
திருவிழாவிலை பந்தா காட்டுறதுக்கெண்டே சேட்டுக்கு கஞ்சிபோட்டு முறுக்கி  அயன் பண்ணிக்கொண்டு வருவினம். :lol: 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

....

இப்போ மலையாளிகள்தான் எம்மை கொன்று குவிக்கிறார்கள். ஒன்றுமே புரியவில்லை.
ஆழமான ஆய்வை யாரும் சரியாக செய்யவில்லை என்பது மட்டும் தெரிகிறது.

 

பூகோள ரீதியாக ஒன்றையொன்று சார்த்திருக்க வேண்டிய சூழலில், போட்டி,பொறாமையில் ஒற்றுமையில்லாத வரலாற்று பாரம்பரியமிக்க நம் இனத்தை அவர்கள் வயிற்றெரிச்சலில்  போட்டுப் பார்ப்பது விந்தையல்ல.. (எல்லை தகராறு, நதி நீர் தகராறு, உணவு, மின்சாரம் பகிர்தலில் வேற்றுமை, நம் பழமையான மொழியின் பால் உள்ள பொறாமை என பல காரணிகள் இவற்றுள் அடங்கும்.)

 

மொத்தத்தில், காலச் சூழலால் தினமும் சோரம் போன மாதருக்கு, அருகே இருக்கும் பத்தினியைக் கண்டால் வரும் வழக்கமான வயிற்றெரிச்சல் பொறாமை தான்.. :lol:

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.