Jump to content

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 3


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குற்றியலுகரம் என்பதைப் பிரித்து எழுதினால் எப்படி வரும் ?

 

குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம் என்ற மாதிரி படித்த ஞாபகம்.
 

Link to comment
Share on other sites

  • Replies 128
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 ஏன் விடைகள் பிழை என்று விளங்கப்படுத்துங்கோ வாத்தியார்


குற்றியலுகரம் என்பதைப் பிரித்து எழுதினால் எப்படி வரும் ?

 

குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம் என்ற மாதிரி படித்த ஞாபகம்.
 

 

குறுமை என்றால் என்ன அர்த்தம் ??? குறுகியதா ???

 

Link to comment
Share on other sites

வாத்தியார்! நான் எல்லாம் சரியாக எழுதினால் உங்கட விட்டில ஒருபெட்டி மாம்பழம் கொடுத்து வினாப்பகுதி 2 கேள்விபதில் பேப்பரைப் படித்த கதை வெளிவந்திடும் அதுதான் பிழையாய் எழுதினனான்.  :D
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குற்றியலுகரம் என்பதைப் பிரித்து எழுதினால்

 

குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம் என்றும்

குற்று + இயல் + உகரம் என்றும்

அதைவிடக் குறு + இயல் + உகரம் என்று பிரிப்பது சிறப்பு என்றும் என் அம்மா கூறினார்.

Link to comment
Share on other sites

தண்மை + நீர் = தண்ணீர்

வெம்மை + நீர் = வெந்நீர்

அதே அடிப்படையில் குறுமைதான் சரிவரும் என நினைக்கிறேன். மையீற்றுப் பண்புப்பெயர் புணர்ச்சி விதியின்படி மை போய் ஏனைய விதிகளின் பின் குற்றியலுகரம் ஆகும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குற்றியலுகரம் என்பதைப் பிரித்து எழுதினால்

 

குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம் என்றும்

குற்று + இயல் + உகரம் என்றும்

அதைவிடக் குறு + இயல் + உகரம் என்று பிரிப்பது சிறப்பு என்றும் என் அம்மா கூறினார்.

 

இலக்கணத்தில் சொற்கள் பல வகையில்  புணர்ச்சி கொள்கின்றன.

இங்கே குற்றியலுகரம்  என்ற சொல்லைப் பிரிக்கும் போது

வரும் சொற்கள் ஏதாவது ஒரு பொருளை உணர்த்தி நிற்க வேண்டும். அந்த வகையில் குற்று அல்லது குறு என்பதன் பொருள் என்ன எனக் கூற முடியுமா? :D

ஆகவே அது பிழை.

குறுமை + இயல் +உகரம் என்பதே சரியாகும்.

குறுமை என்பது ஒரு பண்பும் பெயர்ச்சொல். குறுகி  நிற்கும்அல்லது குறைந்து நிற்கும் என்பது பொருள்   

பண்புப் பெயர்ச்சொற்கள் மையை இறுதியாகக் கொள்ளும்போது புணர்ச்சியின் போது  அந்த மை அழிந்து விடுகின்றது. அங்கு மை கெட்டவுடன்  ற் என்ற வரிசையில்  எழுத்து  இருந்தால் அது இரட்டிப்பாகும்.அதாவது குறுமை  யில் மை கெட்டு று இரட்டிப்பாகி ற்று என வந்து இயல் எனற சொல்லுடன் சேர்ந்து குற்றியலாகிப் பின்னர் உகரத்துடன் சேர்ந்து குற்றியலுகரம் ஆகின்றது.

 

உதாரணம்

 

சிற்றூர்     சிறுமை + ஊர்     

வெற்றிலை     வெறுமை + இலை

இவற்றின் இறுதி (மை) கேட்டுப் போக   நடுவில் உள்ள ஒற்று( என்பது ற் வரிசை) இரட்டித்துப் புணர்ந்துள்ளன

 

Link to comment
Share on other sites

வாத்தியார்! வாத்தியார்தான்!! ஆனாலும் வாத்தியார்..... இன்றைய உலகம் நீதியின்படி நடப்பதில்லை. தான் இயற்றிய சட்டப்படிதான் நடக்க முயல்கிறது. சட்டம் தெரியாதவர்களே நீதியின்படி நடக்கமுற்பட்டு மாண்டுபோகிறார்கள். அதன்வழி நீங்கள் தந்த பாடத்தில், குறுமை + இயல் +உகரம் என்பதே குற்றியலுகரம் ஆகும் என்ற விளக்கம் எந்த இடத்திலும் எழுதப்படவில்லை. நாங்கள் எங்கள் ஞானத்தின்வழி எழுதி நொந்துபோனோம். :(   
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறு என்பதும் குறுகி நிற்பதைத்தானே குறிக்கும்.


பாடு என்பதில் எப்படி அரை மாத்திரை என்று விளக்கம் கொடுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறு???? என்பதும் குறுகி நிற்பதைத்தானே குறிக்கும்.

பாடு என்பதில் எப்படி அரை மாத்திரை என்று விளக்கம் கொடுங்கள்

 

 பசு என்ற சொல்லையும் காசு என்ற சொல்லையும் உச்சரித்துப்பாருங்கள்

பசு என்ற சொல்லில்  உள்ள உகரத்தைவிட காசு என்ற சொல்லில் உள்ள உகரம் குறைந்து ஒலிக்கும்.

 

ஒரு சொல்லின் ஆரம்பத்தில் வரும் உகரத்தின் அளவு ஒரு மாத்திரை.

 

ஒரு சொல்லின் இறுதியில் உகரம் வரும் போது அந்தச் சொல் தனி ஒரு குற்றெழுத்தில் ஆரம்பித்து ஒரு உகரத்தையும் மட்டுமே கொண்டிருந்தாலும்   அதன் அளவு ஒரு  மாத்திரை ஆகும் . இவை  இரண்டு எழுத்துச் சொற்களாக இருக்கும்.(பசு,கொடு,பகு,அழு,அது,பெறு,படு)

சொல்லுக்கு இறுதியில் வரும் வல்லின மெய்களைச் சேர்ந்த (க்,ச்,ட்,த்,ப்,ற்) உகரங்கள் மட்டுமே தனக்குரிய மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வினாக்கள்  பகுதி 3

11)மெய்யெழுத்துக்கள் மூன்றுவகைப்படும்
அவை யாவை?

12)பாடல்களில்  சொற்களின் ஒலி குறைவதாகத்  தோன்றும்போது அவற்றை ஈடுசெய்யும் விதத்தில் புலவர்கள் வேறு இனவெழுத்து ஒன்றைச் சேர்த்து அந்த இடத்தில் ஒலியைமிகைப்படுத்துவார்கள். அதை இலக்கணத்தில் எவ்வாறு அழைப்பர்?
அது எத்தனை வகைப்படும்?
அவற்றின் பெயர்கள் யாவை ?

13) ஆய்த எழுத்து  எப்போதும் ஒரு சொல்லின் ......... வரும்.
கீறிட்ட இடத்தை நிரப்பவும்    

14)ஆய்த எழுத்தைக் கொண்ட ஒரு சொல்லின் முதல் எழுத்தாக ஒரு .................. அடுத்து .................. அதற்கடுத்ததாக ஒரு ................. இருக்கும்.

கீழே இருக்கும் சொற்களைச் சரியாகக்  கீறிட்ட  இடத்தில் நிரப்பவும்

வல்லின உயிர்மெய்யெழுத்துமே
குறில் எழுத்தும்
ஆய்தமும்


15)ஒரு சொல்லின் இறுதியில் குற்றியலுகரம் இருக்கும்போது அந்தச் சொல்லுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டி வரும் அடுத்த சொல்லின் ஆரம்பத்தில் யகரம் இருந்தால் இரண்டு சொற்களும் சேரும்போது ............ தோன்றுகின்றது

 

கீழே உள்ள விடைகளில் ஒன்று மட்டும் சரியானது .கீறிட்ட இடத்தை நிரப்பவும்
ஐகாரக்குறுக்கம்
குற்றியலிகரம்
முற்றியலுகரம்
குற்றியலுகரம்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11. வல்லினம், மெல்லினம், இடையினம் (இது எனக்குப் பிடித்த இனம்)

12. அளபெடை

உயிரளபெடை, ஒற்றளபெடை

13. இடையில்

14. குறில், ஃ, வல்லின உயிர்மெய்

15. குற்றியலிகரம்

Link to comment
Share on other sites

வினாக்கள்  பகுதி 3
 
11)மெய்யெழுத்துக்கள் மூன்றுவகைப்படும் அவை யாவை?
       அவை வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும்.
 
12)பாடல்களில்  சொற்களின் ஒலி குறைவதாகத்  தோன்றும்போது அவற்றை ஈடுசெய்யும் விதத்தில் புலவர்கள் வேறு இனவெழுத்து ஒன்றைச் சேர்த்து அந்த இடத்தில்    
     ஒலியைமிகைப்படுத்துவார்கள். அதை இலக்கணத்தில் எவ்வாறு அழைப்பர்? அது எத்தனை வகைப்படும்? அவற்றின் பெயர்கள் யாவை ?
     அவை இரண்டு வகைப்படும்.   அவற்றின் பெயர்கள் உயிரளபெடை. ஒற்றளபெடை ஆகும்.
 
13) ஆய்த எழுத்து  எப்போதும் ஒரு சொல்லின் இடையிலே வரும்.
கீறிட்ட இடத்தை நிரப்பவும்.
   
14)ஆய்த எழுத்தைக் கொண்ட ஒரு சொல்லின் முதல் எழுத்தாக ஒரு குறில் எழுத்தும் அடுத்து ஆய்தமும் 
அதற்கடுத்ததாக ஒரு வல்லின உயிர்மெய்யெழுத்துமே இருக்கும்.
கீழே இருக்கும் சொற்களைச் சரியாகக்  கீறிட்ட  இடத்தில் நிரப்பவும்
வல்லின உயிர்மெய்யெழுத்துமே
குறில் எழுத்தும்
ஆய்தமும்
 
15)ஒரு சொல்லின் இறுதியில் குற்றியலுகரம் இருக்கும்போது அந்தச் சொல்லுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டி வரும் அடுத்த சொல்லின் ஆரம்பத்தில் யகரம் இருந்தால் இரண்டு சொற்களும் சேரும்போது குற்றியலிகரம் தோன்றுகின்றது
 கீழே உள்ள விடைகளில் ஒன்று மட்டும் சரியானது .கீறிட்ட இடத்தை நிரப்பவும்
ஐகாரக்குறுக்கம்
குற்றியலிகரம்
முற்றியலுகரம்
குற்றியலுகரம்
 
 
 
 
வாத்தியார், நான் வினாக்கள்  பகுதி 2ல், 6வது கேள்விக்கான விடையில் இயல் +உகரம் என்ற  இரண்டு சொற்களைச் சரியாக எழுதியுள்ளேன் ஆகவே அது 100% மும் அது பிழையாகாது. பிழைக்கு எத்தனைவீதம் கழிக்க வேண்டுமோ கழித்துவிட்டு முக்கால் சரி, அரைச் சரி, கால் சரி என்று போடலாம்தானே.  :(
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...

வாத்தியார், நான் வினாக்கள்  பகுதி 2ல், 6வது கேள்விக்கான விடையில் இயல் +உகரம் என்ற  இரண்டு சொற்களைச் சரியாக எழுதியுள்ளேன் ஆகவே அது 100% மும் அது பிழையாகாது. பிழைக்கு எத்தனைவீதம் கழிக்க வேண்டுமோ கழித்துவிட்டு முக்கால் சரி, அரைச் சரி, கால் சரி என்று போடலாம்தானே.  :(

 

 

எங்கேயோ கேட்ட குரல்...!  :lol:

 

binl0j.jpg

 

Link to comment
Share on other sites

என் ஆதங்கம் வாத்தியாரை அசைக்காது விட்டாலும், ராசவன்னியரின் இதயத்தையே ஊடுருவிச் சென்றுவிட்டது.Think_of_You.gif நன்றி ஐயா! fruehling7.gif

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 
 
 
 
வாத்தியார், நான் வினாக்கள்  பகுதி 2ல், 6வது கேள்விக்கான விடையில் இயல் +உகரம் என்ற  இரண்டு சொற்களைச் சரியாக எழுதியுள்ளேன் ஆகவே அது 100% மும் அது பிழையாகாது. பிழைக்கு எத்தனைவீதம் கழிக்க வேண்டுமோ கழித்துவிட்டு முக்கால் சரி, அரைச் சரி, கால் சரி என்று போடலாம்தானே.  :(

 

 

சகல விடைகளுக்கும் வாலி மற்றும் பாஞ்ச் ஆகியோரின்  பதில்கள் சரியாக இருக்கின்றன.

வாழ்த்துக்கள் வாலி மற்றும் பாஞ்ச்.

இப்படி நான்கு முறை காற்புள்ளி எடுத்தால் மொத்தமாக இரண்டு புள்ளிகள் கிடைத்துவிடும். அதனால் அரைப்புள்ளி காற்புள்ளி கிடையாது :D :D :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வினாக்கள்  பகுதி 4

 

 

16)ஐ என்ற எழுத்துத் தனியாக உச்சரிக்கப்படும்போது
குறுகாமல் தனது  ................  மாத்திரை ஒலி அளவிற்கு ஒலிக்கும்

17)ஐ என்ற எழுத்து ஒரு சொல்லின் ஆரம்பத்திலோ நடுவிலோ அல்லது இறுதியிலோ வரும் போது குறுகி .................. மாத்திரை அளவில் ஒலிக்கப்படுகின்றது

18)கேண்மியா என்ற சொல்லைப்பிரித்து எழுதுக.

19)மகரக்குறுக்கத்தில்  ‘ம்’ என்ற எழுத்து தனது இயல்பான................... மாத்திரை அளவிலிருந்து குறைந்து

  ............ மாத்திரையாக ஒலிக்கும்.

20)முதல் சொல்லின் நிறைவில் ‘ம்’ இருந்து, அடுத்த சொல்லின் தொடக்கத்தில் ............ எழுத்து இருக்கும்போதும்  மகரம் குறுகும்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதன் முதலாக தேர்வு எழுத முயற்சித்துள்ளேன், பதில்கள் பின்வருமாறு: :)

 

 

வினாக்கள்  பகுதி 4:

 

16)ஐ என்ற எழுத்துத் தனியாக உச்சரிக்கப்படும்போது குறுகாமல் தனது  இரண்டு  மாத்திரை ஒலி அளவிற்கு ஒலிக்கும்

17)ஐ என்ற எழுத்து ஒரு சொல்லின் ஆரம்பத்திலோ நடுவிலோ அல்லது இறுதியிலோ வரும் போது குறுகி ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கப்படுகின்றது

18)கேண்மியா என்ற சொல்லைப்பிரித்து எழுதுக. கேள் + மியா

19)மகரக்குறுக்கத்தில்  ‘ம்’ என்ற எழுத்து தனது இயல்பான அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும்.

20)முதல் சொல்லின் நிறைவில் ‘ம்’ இருந்து, அடுத்த சொல்லின் தொடக்கத்தில் எழுத்து இருக்கும்போதும்  மகரம் குறுகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் ஆதங்கம் வாத்தியாரை அசைக்காது விட்டாலும், ராசவன்னியரின் இதயத்தையே ஊடுருவிச் சென்றுவிட்டது.Think_of_You.gif நன்றி ஐயா! fruehling7.gif

 

பாஞ்ச் அவர்களே, புதுசு புதுசா முகக்குறிகளெல்லாம் போட்டு கலக்குகிறீர்களே,  smiley-love003.gifஏதேனும் 'விசேச'மா?   :lol::icon_idea:

 

Link to comment
Share on other sites

பாஞ்ச் அவர்களே, புதுசு புதுசா முகக்குறிகளெல்லாம் போட்டு கலக்குகிறீர்களே,  smiley-love003.gifஏதேனும் 'விசேச'மா?   :lol::icon_idea:

 

எ ல்லாமும் தங்களிடம் பயின்ற கலைதான் சித்திர வித்தகரே. நான் ஒரு ஏகலைவன் என முன்பே கூறியுள்ளேன். அத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு வருகைதந்த தங்கள் வரவுக்கும் நன்றி. பிட்டடிக்க ஆளில்லாமல் தவித்திருந்தேன். smilie_denk_17.gif smilie_thanks_019.gif

Link to comment
Share on other sites

வினாக்கள்  பகுதி 4
  
16)ஐ என்ற எழுத்துத் தனியாக உச்சரிக்கப்படும்போது குறுகாமல் தனது  இரண்டு  மாத்திரை ஒலி அளவிற்கு ஒலிக்கும்
 
17)ஐ என்ற எழுத்து ஒரு சொல்லின் ஆரம்பத்திலோ நடுவிலோ அல்லது இறுதியிலோ வரும் போது குறுகி ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கப்படுகின்றது
 
18)கேண்மியா என்ற சொல்லைப்பிரித்து எழுதுக.
கேண்மியா என்ற சொல்லைப்பிரித்து எழுதினால் கேள் + மியா என வரும். 
 
19)மகரக்குறுக்கத்தில்  ‘ம்’ என்ற எழுத்து தனது இயல்பான அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து   கால் மாத்திரையாக ஒலிக்கும்.
 
20)முதல் சொல்லின் நிறைவில் ‘ம்’ இருந்து, அடுத்த சொல்லின் தொடக்கத்தில் எழுத்து இருக்கும்போதும்  மகரம் குறுகும்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் படிப்பிக்கிற பஞ்சியில கேள்வியே போட்டுக்கொண்டிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் அவர்களே, புதுசு புதுசா முகக்குறிகளெல்லாம் போட்டு கலக்குகிறீர்களே,  smiley-love003.gifஏதேனும் 'விசேச'மா?   :lol::icon_idea:

 

பாஞ்சின் கண்களுக்கு மட்டும் தெரிவதுபோல் யாராவது வகுப்புக்கு வந்துள்ளார்களோ?????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன் சார் அனைத்துக்கேள்விகளுக்கும் சரியான பதில்களை வழங்கியுள்ளார்.
பாஞ்ச் அவர்களைப் பின்பற்றிச் சரியான விடைகளைத் தந்திருக்கின்றார்.
இருவருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

ராசவன்னியன் சார் அனைத்துக்கேள்விகளுக்கும் சரியான பதில்களை வழங்கியுள்ளார்.

பாஞ்ச் அவர்களைப் பின்பற்றிச் சரியான விடைகளைத் தந்திருக்கின்றார்.

இருவருக்கும் வாழ்த்துக்கள்

 

 

எ ல்லாமும் தங்களிடம் பயின்ற கலைதான் சித்திர வித்தகரே. நான் ஒரு ஏகலைவன் என முன்பே கூறியுள்ளேன். அத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு வருகைதந்த தங்கள் வரவுக்கும் நன்றி. பிட்டடிக்க ஆளில்லாமல் தவித்திருந்தேன். smilie_denk_17.gif smilie_thanks_019.gif

 

 

தவளையும் தன்வாயால் கெடும்.  :(  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் சொல்றது ஒருநாள் வகுப்புக்கு வந்துவிட்டு விலாசம் காட்டக்கூடாது என்று எல்லாரும் யெட் வேகத்தில எங்கோயோ போட்டினம் நாம மட்டும் கட்டைவண்டியிலும் கால் நடையிலும்.... இவர்களை எட்டிப்பிடிக்கமுடியாது போலிருக்கே.... :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.