Jump to content

ஈழத்து நகைச்சுவைக்கலைஞர் ஐசக் இன்பராஜா ஜேர்மனி நாட்டில் காலமானார்.


Recommended Posts

110346.jpg

 வாழ்வின் பெரும் பகுதியைக் கலைவாழ்வில் அர்ப்பணித்த அரும்பெரும் கலைஞர் “லூஸ் மாஸ்ரர்” ஐசக் இன்பராஜா ஜேர்மனி நாட்டில் ஜூலை 29ம் திகதி காலமானார்.

மேடை நாடகம், வில்லுப்பாட்டு என்பவற்றில் நகைச்சுவையால் மக்கள் மனங்களை வென்ற ஓர் உன்னதமான கலைஞராக ஐசக் இன்பராஜா விளங்கினார்.

ஈழத்தின் திரைப்பட இயக்குனர் நிரமலா புகழ் அருமைநாயகம் அவர்களின் இயக்கத்தில் பல நாடகங்களில் கலைஞர் ஐசக் இன்பராஜா நடித்துள்ளார்.

“லூஸ் மாஸ்ரர்” என்கின்ற நகைச்சுவையின் மூலம் ஈழத்தின் பல பகுதிகளிலும் புகழ் பெற்று விளங்கினார்.

ஆடி, பாடி நடிப்பதில் வல்லவரான “லூஸ் மாஸ்ரர்” ஐசக் இன்பராஜா அவர்களுக்கு ‘மாப்பிள்ளை தேவை’ என்ற நாடகம் மிகப்பெரும் புகழை ஈட்டிக்கொடுத்திருந்தது.

செய்ய வேண்டும்…செய்யவேண்டும்….உடனடியாச் செய்ய வேண்டும்…..இப்பவே செய்ய வேண்டும்……….அவசரமாச் செய்ய வேண்டும்………..என கலைஞர் ஐசக் இன்பராஜா அவர்கள் மேடையில் பாடி நடித்தமை நினைவுக்கு வருகின்றது. 

இந்த நாடகத்தில் நிர்மலா திரைப்பட இயக்குனர் அருமைநாயகம் அவர்களும் நடித்திருந்தார்.

நகைச்சுவை நடிப்பு என்பது இலகுவானது அல்ல. இந்தத் துறையில் மேதைகளாக விளங்கியவர்கள் இது பற்றி விளக்கியிருக்கிறார்கள்.
கலைஞர் ஐசக் இன்பராஜா அவர்களுக்கு இயற்கையாகவே நகைச்சுவைப்பாத்திரம் அமைந்து விட்டது.

அவர் வேடமிட்டு மேடைக்கு வந்துவிட்டால் ரசிகர்களின் சிரிப்பொலி அடங்குவதற்கு மிக நீண்ட நேரம் எடுக்கும்.

ஈழத்து நகைச்சுவையாளர்கள் என்று பார்க்கின்ற போது, தம்பி கொழும்பில் புகழ் குமார்.தனபால், முகத்தார் – எஸ்.ஜேசுரட்ணம், புளுகர் பொன்னையா எஸ்.எஸ்.கணேசபிள்ளை, நகைச்சுவை இரட்டையர் டிங்கிரி – சிவகுரு, சக்கடத்தார் – ராஜ், கோமாளிகள் – மரிக்கார் – ராம்தாஸ், உப்பாலி – செல்வசேகரன், அப்புக்குட்டி – ராஜகோபால், புளுகர் பொன்னம்பலம் - ரவி, அண்ண ரைட் – கே.எஸ்.பாலச்சந்திரன் என கலைஞர்கள் பெயர்கள் நினைவுக்கு வருகின்றன.

இவர்களில் குமார்.தனபால், முகத்தார் – எஸ்.ஜேசுரட்ணம், நகைச்சுவை இரட்டையர் டிங்கிரி – சிவகுரு, புளுகர் பொன்னையா எஸ்.எஸ்.கணேசபிள்ளை, சக்கடத்தார் – ராஜ், உப்பாலி – செல்வசேகரன், புளுகர் பொன்னம்பலம் - ரவி, அண்ண ரைட் – கே.எஸ்.பாலச்சந்திரன் ஆகியோர் காலமாகிவிட்டார்கள்.

இவர்கள் ஒவ்வொருவருடைய நடிப்பும் – நகைச்சுவையும் வித்தியாசமானவை.

இவர்களிலிருந்து ஐசக் இன்பராஜா அவர்கள் மிகவும் வித்தியாசப்பட்டிருந்தார்.

வில்லிசை கலைஞர் சின்னமணி அவர்களின் கலைவாணர் வில்லிசைக் குழுவிலே நீண்ட காலமாக விகடக்கலைஞராக வலம் வந்தார்.

மிக யதார்த்தமான நகைச்சுவைத்துணுக்குகளை வில்லிசையிலே கதையோடு கூறிவிடுவார்.

புலம்பெயர்ந்து ஜேர்மனி நாட்டில் வாழ்ந்து வந்த இவர் ஜேர்மனி உட்பட பல்வேறு நாடுகளில் தனது நகைச்சுவை விருந்தை வழங்கி வந்துள்ளார்.

பிரான்ஸில் ஆர்.ரி.எம் பிறதர்ஸ் தயாரித்த முகத்தார் வீடு என்னும் திரைப்படத்தில் ஐசக் இன்பராஜா நடித்துள்ளார்.

ஜேர்மனி நாட்டிலிருந்து தாயகம் திரும்பி சொந்த ஊரிலேயே வாழ்வதற்கு அவர் முடிவுசெய்து அதனை முறைப்படி ஜேர்மனி அரசுக்கு அறிவித்துவிட்டதாக அவரது நண்பர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

ஆகஸ்ட் முதலாம் திகதி அவருடைய பயணம் தாயகத்துக்கு அமையவிருந்தது.

அவரது ஒரே மகனின் திருமணத்தை நடாத்தி வைப்பதற்காகவும் அவர் தாயகம் திரும்ப இருந்தார் என்றும் கூறப்பட்டது.

கலைஞர் ஐசக் இன்பராஜா அவர்களின் இழப்பு ஈழத்துக் கலையுலகிற்குப் பேரிழப்பே ஆகும். அன்னாரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

- எஸ்.கே.ராஜென்

 

http://www.eezhathirai.com/isak-inparajah/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் ஐசக் இன்பராஜா அவர்களின் இழப்பு ஈழத்துக் கலையுலகிற்குப் பேரிழப்பே ஆகும். அன்னாரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.இவர் நாவாலியை பிறப்பிடமாக கொண்டவரா?

Link to comment
Share on other sites

கலைஞர் ஐசக் இன்பராஜா அவர்களின் இழப்பு ஈழத்துக் கலையுலகிற்குப் பேரிழப்பே ஆகும். அன்னாரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

கலைஞர், நகைச்சுவை நடிகர் இன்பராசா அவர்களுடைய மரணம் அவருடைய சுயசரிதையோ அல்லது ஆவணப் படமோ பதிவு செய்யப்படவில்லை என்கிற பினணியில் அதிக கவலையைத் தருகிறது.  1970பதுகளில் என்று ஞாபகம் மாவித்தியாலயத்தில் நடந்த ஒரு விழாவில் கவியரங்கத்தில் கலந்துகொள்ள  நெடுந்ஹீவு சென்றிருந்தேன். விழாவில் யாழ்பாணத்துக் கலைஞர்களின் நாடகம் ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. திடீரென சபையோருக்குப் பின்னே இருந்து கூச்சல் எழுந்தது. சபையின் பின்னே இருந்து சால்வையை தலைக்கு மேலே சுளற்றியபடி ஒருவர் ஓடினார். நாமெல்லம் வியந்துநிக்க அவர் மேடையில் செய்ய வேணும் செய்ய வேணும் கலியாணம் செய்யவேனும் என்று ஆடத்தொடங்கினார். அதன்பின்னர் நாடம் முடியும் வரைக்கும் சபை அவரது கட்டுப்பாட்டில் மிகுந்த மகிழ்ச்சியோடிருந்தது.

 

அவர் மாபெரும் கலைஞர். அவரது நினைவுக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கிறேன். அவரது குடும்பத்தினர் என்னுடைய அஞ்சலியை ஏற்றுக்கொள்ளவேணும்.

 

தனது பதிவின்மூலம் நம் வீட்டுக் கலைஞர் நினைவை மகிமைப்படுத்திய வானொலிக் கலைஞர்  எஸ்.கே.ராஜன் அவர்களுக்கும் பதிவை யாழில் பகிர்ந்த சோழியனுக்கும் எனது நன்றிகள்.

.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரது குடும்பத்தினருக்கு,  ஆழ்ந்த அனுதாபங்கள்.
 

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையை ஆண்டவரை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

அன்னாரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.இவர் நாவாலியை பிறப்பிடமாக கொண்டவரா?

 

ஆம். நவாலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சோழியன்... சிறு வயதில் இவரின் நாடகங்களை பார்த்த ஞாபகம்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் !

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாரின் ஆத்மா சந்தியடைவதாக , ஆழ்ந்த இரங்கல்கள் ..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.