Jump to content

Recommended Posts

அமர்த்து இருக்கிறார் நடுவில்.. 
ஆலாவட்டங்கள் ..சாமரங்கள் ..
கன்னியர்கள் கூட்டமாக விசியபடி ..
நீதியை காக்கும் சபையாம் அது ..
அன்றில் இருந்து இன்றுவரை உலகில் ..
ஓலம் இட்டார் எல்லாம் ஒடுவரும் இடம் ..
ஒப்பனைகள் கலையாமல் பார்த்தபடி ..
தளங்கள் பல போட்டு தலையாட்டி பொம்மைகள் ...
இன்னும் ஒரே பாட்டுக்கு ஆடுகிறது ..
இசையும் மாற்றம் இல்லை அவர்கள் ..
இயல்பும் மாறவில்லை குணங்கள் எப்படியோ ..
கூடியிருத்து பேசுகிற நேரம் மட்டும் ..
அவர்களுக்கு உலகம் வெளிப்பா தெரியும் ..
அப்பொழுது கூட ஒருபகுதி ஒளிப்பாக ..
அங்குதான் கனியம் இருக்கும் வளம் இருக்கும் ..
தங்களுக்குள் கைகுலுக்கி பங்கு பிரிப்பர் ..
வெளியில் வந்து போட்டோக்கு போஸ் கொடுத்து ..
பொங்கி எழுந்து உரையாற்றி கண்ணில் ..
சினம் காட்டி மீறல் என்பர் குற்றம் என்பர் ..
துரித செயல் என்பர் நடவடிக்கை வேகம் என்பர் ..
பாவம் ஏழைகள் எல்லாவற்றுக்கும் ஏமாந்து ..
பெருசா வருது பெரியவர்கள் பேசுவர் ..
நம்பிக்கை இருக்கு என்போர் நாவை அடக்குவர் ..
சுண்ணாம்பும் இல்லா இடத்தில் ...
சுகந்திரம் எதுக்கு என்று சபை முடிவு எடுக்கும் ..
நடுவில் அமர்த்து இருக்கும் அவருக்கு ..
இப்பொழுது மேலே மின்விசிறியும் ..
பக்கத்தில் ஏசியும் வேலைசெய்யும் ..
காட்சிகள் மாறி இருக்கும் ஆனால் அவர்கள் ..
உலக பார்வை மாறாது அப்படியே இருக்கும் ..
டாவின்ஸி கோட்ப்பாடு எங்களுக்கு .
படிக்கலாம் செயல்தான் கடினம் ..
சிறுபான்மை இனத்துக்கு .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சுண்ணாம்பும் இல்லா இடத்தில் ...
சுகந்திரம் எதுக்கு என்று சபை முடிவு எடுக்கும் ..
நடுவில் அமர்த்து இருக்கும் அவருக்கு ..
இப்பொழுது மேலே மின்விசிறியும் ..
பக்கத்தில் ஏசியும் வேலைசெய்யும் ..
 
ஆட்டை
சிங்கம் தின்பது
இயற்கையின் நியதி  ஐயா
கோபம்  வேண்டாம்
தடி எடுத்ததால்
பயங்கரவாதிகள் நாம்....
அவர்களிடமோ
அணு குண்டு இருக்கிறது... :(
 
நன்றி  கோபத்துக்கும்  கவிக்கும்
எழுத்துப்பிழைகளை  கவனியுங்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்ணாம்பு இல்லாத இடத்திற்குச் சுதந்திரம் எதற்கு
என்பவருக்கு  வெற்றிலை பாக்குடன்  சுண்ணாம்பும் பரிமாறப்படும்
பாவம் ஏழை மக்கள் பரிதாபம் அவர்கள் நிலை

கவிதைக்கு நன்றி அஞ்சரன்

Link to comment
Share on other sites

 

சுண்ணாம்பும் இல்லா இடத்தில் ...
சுகந்திரம் எதுக்கு என்று சபை முடிவு எடுக்கும் ..
நடுவில் அமர்த்து இருக்கும் அவருக்கு ..
இப்பொழுது மேலே மின்விசிறியும் ..
பக்கத்தில் ஏசியும் வேலைசெய்யும் ..
 
ஆட்டை
சிங்கம் தின்பது
இயற்கையின் நியதி  ஐயா
கோபம்  வேண்டாம்
தடி எடுத்ததால்
பயங்கரவாதிகள் நாம்....
அவர்களிடமோ
அணு குண்டு இருக்கிறது... :(
 
நன்றி  கோபத்துக்கும்  கவிக்கும்
எழுத்துப்பிழைகளை  கவனியுங்கள்

 

நன்றி அண்ணே வரவுக்கு கருத்துக்கு ..

 

எழுத்து பிழை கவனிக்கிறேன் கண்டிப்பா .

சுண்ணாம்பு இல்லாத இடத்திற்குச் சுதந்திரம் எதற்கு

என்பவருக்கு  வெற்றிலை பாக்குடன்  சுண்ணாம்பும் பரிமாறப்படும்

பாவம் ஏழை மக்கள் பரிதாபம் அவர்கள் நிலை

கவிதைக்கு நன்றி அஞ்சரன்

நன்றி வாத்தியார் ஐயா வரவுக்கு ...கருத்துக்கு .

 

தாம்பூல தட்டில் பரிமாறல் நடக்கும் . :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நன்றாக இருக்கின்றது....நண்பா் சொன்னது போல தலைப்புக்கும் கவிதைக்கும் சம்பந்தமே இல்லாமல் உள்ளது...இருப்பினும்  யதாா்த்தத்தை கவிதையாக்க முயன்ற உங்களுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

நன்றி விஷ்வா ...நிதர்சன் வரவுக்கு .

 

பலமான உயிரே உலகில் வாழும் என்னும் அடிப்படையில் எழுதி இருந்தேன் விஷ்வா .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.