Jump to content

புலிகளிடம் ஆயுத பலம் இல்லாததை உறுதிப்படுத்திய பாலகுமார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஊடகங்களில் வந்த செய்தி. நகைச்சுவையாக இருந்ததினால் நகைச்சுவைப்பகுதியில் இணைத்துள்ளேன்

புலிகளிடம் ஆயுத பலம் இல்லாததை உறுதிப்படுத்திய பாலகுமார்

அண்மைக் காலங்களில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக விடுதலைப்புலிகள் இயக்கத்தினரால் சர்வதேச ரீதியில் மேற்கொண்டு வரும் பெரும் முயற்சிகளைப் பற்றி வெளியாகியிருக்கும் தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது புலிகள் இயக்கத்தினரிடையே மிகமோசமான ஆயுதத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு புலிகள் அமைப்புக்கு பெரும் ஆயுதத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம் கிழக்குப் பிரதேசங்களில் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய கடல்கோள் அனர்த்தமேயாகும்.

கடல்கோள் அனர்த்தத்தின்போது நிலத்துக்குக் கீழ் பாரிய அறைகளிலும் பதுங்கு குழிகளிலும் புலிகள் அமைப்பினரால் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஏராளமான யுத்த ஆயுதங்கள், வெடி மருந்துப் பொருட்கள் அனைத்தும் நாசமாகிவிட்டன. இவ்வாறு கடல்கோள் அனர்த்தத்தில் புலிகள் அமைப்பில் ஆயுதங்கள் அழிந்து போனதுபற்றி விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான ஆலோசகர்களில் ஒருவராகக் கருதப்படும் பாலகுமார் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடல்கோளால் ஏற்பட்ட அழிவுகளின் பின்னர் 2005 ஜனவரி மாதம் தெரிவித்தார். அப்போது அவர் அறிவித்ததற்கேற்ப புலிகள் இயக்கத் தலைவர் யாழ்ப்பாணத்தைப் பிடிப்பதற்காக தீவிரமான திட்டமொன்றை தீட்டியிருந்தார் எனவும் ஆயினும் அந்தத் திட்டத்தை கடல்கோள் நாசமாக்கிவிட்டதென்றும் பாலகுமார் கூறியிருந்தார்.

இவ்வாறு பாலகுமார் அறிவித்ததிலிருந்து தெரிய வருவது யாதெனில், கடல்கோள் அனர்த்தத்தில் புலிகளின் ஆயுத பலம் அழிந்துவிட்ட நிலையில் விடுதலைப்புலிகள் அமைப்பு முற்றிலும் பலவீனமாக உள்ளது என்பதே. -திவயின: 19.09.06-

Link to comment
Share on other sites

ஆமா....அவங்க சொன்ன சரியாய் தான் இருக்கும்...

அது அவங்களின்ர தொழில்..அப்ப தானே அது விலைப் படும்...

இதுவும் தெரியாமால் நீங்கள்...

ச்..சா..சே....

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.