Jump to content

சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை!


Recommended Posts

இப்போ நடக்கும் இந்த கூத்து முழு வக்கிரமானது....அந்த நாட்டுக்கும் பொருந்தாத உடுப்புகளை அந்த பிள்ளைகளுக்கு போட்டு..ஒரு கோமாளித்தனமான...பார்ப்பவர்களை உணர்ச்சியூட்டி கோமாளியாக்குகிரார்கள்...கொஞ்சகாலம் ஒரு வலது குறைந்த பிள்ளையை வைத்து வேடிக்கை காட்டினார்கள்...... எல்லாம் Rupert Murdoch இன் விளையாட்டு......

 

எப்படி 1கக் தங்கம் இவர்களால் கொடுக்க முடியும்? எவ்வளவு மக்களின் தலைகளில் மிளகாய் அரைகிறார்கள்....

பாடுவது முழுக்க தரம்குறைந்த சினிமா பாட்டுகள்.....கேவலமான நிகழ்ச்சி இது.....

 

ஏன்தான் மற்ற சிறிய தமிழ் தொலைக்காட்சியூடகங்கள் சுத்தமான தமிழ் பாட்டுகளை சிறுவர்களை பாட சொல்லி குறைந்த பரிசில் களை வழங்கி தங்களது பார்வையாளர் வட்டத்தை உயர்த்த முயலவில்லை....இதை பார்க்கவும் ஊக்கப்படுத்தவும் ஒரு சிறு கூட்டம் இருக்கும்...சிறியளவில் ஆரம்பித்து பின் வளர்க்கலாம்...

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

ஜேர்மனி RTL  தொலைக்காட்சி வருடாவருடம் DSDS  என்னும் பாடல் போட்டியை நடத்துவது வழக்கம். பொதுவாக ரீன் ஏஜ் பிள்ளைகளே பங்கு பற்றுவர். ஒரு முறை போட்டியில் பங்குபற்றி இறுதி தேர்வுக்கு தெரிவு செய்யபட்ட போட்டியாளர்  17 வயதாக  இருந்ததால் தொலைக்காட்சி நிர்வாகம் தனது நிகழ்ச்சி நேரத்தையே மாற்றவேண்டி இருந்தது. 18  வயதிற்கு குறைந்தவர்களை வைத்து எந்த மேடை Live  நிகழ்வும் இரவு 10 மணிக்கு பின்னர் நடத்த கூடாது என்ற சட்டத்தின் அடிப்படையில் பல மில்லியன் ஈரோ பெறுமதியான ஸ்பொன்சர் நிறுவனங்கள் இருந்தும் நிகழ்ச்சி நேரம் மாற்றபட்டு இரவு 10 மணிக்கு முன்பே இறுதி போட்டி நிறைவுக்கு வந்தது. இது போல தமிழக அரசும் சில சட்டங்களை உருவாக்கி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கட்டுபாடுகளை விதிப்பதன் மூலம் இதனை தடுக்கலாம்.

Link to comment
Share on other sites

இந்த நேரத்தில் முன்பு ஏ.வி. ரமணன் வழங்கிய சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியை நினைத்துப் பார்க்கிறேன். இந்த வணிகக்கூத்துகள் ஒன்றும் இருக்கவில்லை. :huh:

Link to comment
Share on other sites

இந்த நேரத்தில் முன்பு ஏ.வி. ரமணன் வழங்கிய சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியை நினைத்துப் பார்க்கிறேன். இந்த வணிகக்கூத்துகள் ஒன்றும் இருக்கவில்லை. :huh:

 

உண்மை, ஒரு அருமையான நிகழ்ச்சி. அதிலும் எனக்கு ஒரு பாடலை தொடங்கி இன்னொரு பாடலுடன் இசையில் கோர்த்து முடிப்பது மிகவும் பிடிக்கும் பகுதி.

 

இளையராஜாவால் பழிவாங்கப்பட்டவர்களில் ஏ.வி.ரமணனும் அவர் மனைவி உமா ரமணனும் அடங்குவர் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்தில் முன்பு ஏ.வி. ரமணன் வழங்கிய சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியை நினைத்துப் பார்க்கிறேன். இந்த வணிகக்கூத்துகள் ஒன்றும் இருக்கவில்லை. :huh:

 

அந்த நிகழ்ச்சியின், ஒளிப்பதிவு ஒன்றாவது இருந்தால்..... இணைத்து விடுங்களேன் இசை.

ஒப்பிட்டுப் பார்க்க.... இலகுவாக இருக்கும். :)

Link to comment
Share on other sites

சூப்பர் சிங்கர் ,ஜோடி இரண்டும் இன்றுவரை தவறாது பார்த்து வருகின்றேன் .நேற்றும் Film fare விழா பார்த்தேன் .கமல் தொட்டு ரகுமான் வரை அங்கு இருந்தார்கள் .

இப்படியான நிகழ்சிகளில் பல விடயங்கள் எனக்கும் உடன்பாடில்லை ஆனால் வணிக மயமாக்கப்பட்ட உலகில் இவைகள்  எல்லாம் மிக சாதாரணம் .எமது கலாச்சாரத்தை நாம் கட்டிப்பிடித்துக்கொண்டுஇருக்கலாம் என்று கனவு காணவேண்டாம் கால மாற்றத்தில் அதுவும் மாறிக்கொண்டுதான் போகும் .

 

இதில் இருக்கும் அரசியல் என்று நான் சொன்னது -அங்கு நடக்கும் முறைகேடுகள் ,பிழையான தீர்ப்புகள்,மிக செயற்கையான எடுப்புகள் ,நடிப்புகள் தான் .

வக்கிரம் பற்றி -சிறுவர்களுக்கு அந்த வயதில் சொல்லி கொடுப்பதை ஒப்பிவிக்கத்தான் தெரியுமே ஒழிய அதில் இருக்கும் கருத்தோ அல்லது வக்கிரமா தெரியாது .வயது போனவர்களுக்கு தான் இவற்றை கேட்க வக்கிரம் ஆக இருக்கும் .போட்டியில் பங்கு பற்றும் பலருக்கு தமிழும் தெரியாது அதன் அர்த்தமும் தெரியாது .

 

"நேற்று ராத்திரி யம்மா " என்று பாடுவதற்கும் "பழமுதிர் சோலையிலே " என்று பாடுவதற்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியாது .உச்சரிப்பு ராகம் ,தாளம் தான் அவர்களுக்கு முக்கியம் .

 

எம் ஜி ஆரின் படங்கள் போல வக்கிரமான படங்கள் எதுவுமில்லை (நாளை நமதே ,நினைத்ததை முடிப்பவன் ,ரிக்சாகாரன் பார்த்தால் தெரியும் ) பட்ட பகலில் கனடாவில் ஒளிபரப்பாகும் நிகழ்சிகள் சொல்லாது எதுவும் இங்கு சொல்ல படவில்லை .

 

சிறுவர்கள் வஞ்சகம் இல்லாமல் மிக தெளிவாக இருக்கினார்கள் வயது போனவர்கள் தான் இப்பவும் ரொம்ப துள்ளிக்கொண்டு நிற்கின்றார்கள்  :(

Link to comment
Share on other sites

எந்த தமிழ் தொலைக்காட்சி சனலும் பார்ப்பதில்லை என்பதால் சுப்பர் சிங் என்றால் என்ன அது எப்படி நடை மாறுகிறது என்பது கூட எனக்கு தெரியாது. மேற்படி கட்டுரையை வாசித்து அதிலுள்ள காணொலி அடிப்படையிலேயே கருத்து தெரிவித்தேன். தொலைக்காட்சி ஊடகங்கள் தொடர்பில் ஐரோப்பாவில் உள்ள சட்டங்களை இயற்றுவதன் மூலம் அல்லது இருக்கும் சட்டங்களை இறுக்கமாக அமுல்ப்படுத்துவதன் மூலம் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம். இதற்கும். கலாச்சாரத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. சிறுவர் சிறுமியர் பாலியல் அசைவுகளை வெளிப் படுத்தும். அங்க அசைவுகளை மேற்கொள்ளுவதை மேற்கத்தைய சமுகமும் விரும்புவதில்லை. அதை ஊக்குவிப்பதும். இல்லை. 18 வயதிற்குட்பட்டோர் டிஸ்கோ கிளப் செல்வதற்கு அனுமதி இல்லை.

Link to comment
Share on other sites

இளையராஜாவால் பழிவாங்கப்பட்டவர்களில் ஏ.வி.ரமணனும் அவர் மனைவி உமா ரமணனும் அடங்குவர் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

இப்படி நான் கேள்விப்படவில்லை. ஏ.வி. ரமணன் புகழ்பெற்ற பாடகராக இருந்ததில்லை. இளையராஜா ஜிகே வெங்கடேஷ் இடம் உதவியாளராக இருந்த சமயத்தில் எஸ் ஜானகி அவர்களுடன் அதிகமாக பணியாற்றியதால், பின்பு தனது இசையில் அதிக வாய்ப்புகளை வழங்கியதாக கேள்விப்பட்டுள்ளேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆக்கத்தில் கூறப்பட்டுள்ள அங்கலாய்ப்பு ஞாயமானதே.

 

தமிழ் நாட்டில் அல்ல முழு இந்தியாவிலும் கூட (ஏன் இலங்கையில் கூட) தாங்களாக சுயமாக இவ்வாறான நிகழ்வுகளை தயாரிப்பதில்லை.பெரும்பாலும் இவை எல்லாம் மேற்கத்தைய நாடுகளில் நடாத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்சிகளின் பிரதி விம்பங்களே.

 

அர்ஜுன் கூறியது போல் வணிக மயமாக்கப்பட்ட உலகில் இவைகள் எல்லாம் சாதாரணம் தான்.
கூடிய விரைவில் இவை எல்லாம் எங்கள் ஊரிலும் (தாயகத்திலும்) அரங்கேறும்.

 

எங்கள் பிள்ளைகள் பார்க்கும், கேட்கும் ஜஸ்டின் பீபர், சலீனா கோமாஸ், கோடி சிம்சன், விலோ ஸ்மித் (11 வயது), மைலி சைரஸ் ... இன்றைய புகழ் நட்சத்திரங்கள் இப்படி தான் வந்தவர்கள். 

எமக்கு விருப்பமோ, விருப்பம் இல்லையோ, பார்த்தால் என்ன தவிர்த்தால் என்ன ... இதுவும் கடந்து போகும்.

 

ஊரில அவனவன் கைத்தொலைபேசியில் பப்ளிக்கில் (p)பொனோக்ரப்ஹி காமலீலைகள் பார்த்துக்கொண்டு திரியிறான் ... அதுக்கு தான் என்ன தான் செய்யலாம்.

 

- குப்பையிலும் குண்டுமணி...சேற்றிலும் செந்தாமரை... இப்படி இந்த பிள்ளைகளில் இருந்து நாளைய நட்சத்திரம் உருவாகத்தான் செய்கிறார்கள். (பாடகர்... கார்த்திக்)

 

- நானும் முன்னரை போல பெரிதாக இந்த நிகழ்வுகளை பார்ப்பதில்லை (எல்லோரும் கூறிய அதே காரணங்கள் தான்)

- நமக்கு எப்படி இவை இப்போது திகட்டி பார்க்காமல் விடுகிறோமோ அதே போல் அங்கும் நடக்கும்)

 

பின்குறிப்பு: சரி இவை தான் எமக்கு பிடிக்க வில்லை ...உள்ளூர் கலைஞர்கள் தயாரித்து வழங்கும் "வணிக மயம் ஆக்கப்படாத"  நிகழ்சிகளும் பிடிக்குது இல்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை பொய் எப்பிடியிருந்தாலும் சரி.....குழந்தையள் எப்பிடி நாசமாய்ப்போனாலும் சரி.......ஊரோடை ஒத்துப்போகோணும் எண்டு சொல்ல வரீனம்.

Link to comment
Share on other sites

சூப்பர் சிங்கர் ,ஜோடி இரண்டும் இன்றுவரை தவறாது பார்த்து வருகின்றேன் .நேற்றும் Film fare விழா பார்த்தேன் .கமல் தொட்டு ரகுமான் வரை அங்கு இருந்தார்கள் .

இப்படியான நிகழ்சிகளில் பல விடயங்கள் எனக்கும் உடன்பாடில்லை ஆனால் வணிக மயமாக்கப்பட்ட உலகில் இவைகள்  எல்லாம் மிக சாதாரணம் .எமது கலாச்சாரத்தை நாம் கட்டிப்பிடித்துக்கொண்டுஇருக்கலாம் என்று கனவு காணவேண்டாம் கால மாற்றத்தில் அதுவும் மாறிக்கொண்டுதான் போகும் .

 

இதில் இருக்கும் அரசியல் என்று நான் சொன்னது -அங்கு நடக்கும் முறைகேடுகள் ,பிழையான தீர்ப்புகள்,மிக செயற்கையான எடுப்புகள் ,நடிப்புகள் தான் .

வக்கிரம் பற்றி -சிறுவர்களுக்கு அந்த வயதில் சொல்லி கொடுப்பதை ஒப்பிவிக்கத்தான் தெரியுமே ஒழிய அதில் இருக்கும் கருத்தோ அல்லது வக்கிரமா தெரியாது .வயது போனவர்களுக்கு தான் இவற்றை கேட்க வக்கிரம் ஆக இருக்கும் .போட்டியில் பங்கு பற்றும் பலருக்கு தமிழும் தெரியாது அதன் அர்த்தமும் தெரியாது .

 

"நேற்று ராத்திரி யம்மா " என்று பாடுவதற்கும் "பழமுதிர் சோலையிலே " என்று பாடுவதற்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியாது .உச்சரிப்பு ராகம் ,தாளம் தான் அவர்களுக்கு முக்கியம் .

 

எம் ஜி ஆரின் படங்கள் போல வக்கிரமான படங்கள் எதுவுமில்லை (நாளை நமதே ,நினைத்ததை முடிப்பவன் ,ரிக்சாகாரன் பார்த்தால் தெரியும் ) பட்ட பகலில் கனடாவில் ஒளிபரப்பாகும் நிகழ்சிகள் சொல்லாது எதுவும் இங்கு சொல்ல படவில்லை .

 

சிறுவர்கள் வஞ்சகம் இல்லாமல் மிக தெளிவாக இருக்கினார்கள் வயது போனவர்கள் தான் இப்பவும் ரொம்ப துள்ளிக்கொண்டு நிற்கின்றார்கள்  :(

 

நீங்கள் சொன்னது சரி..பாதிபேருக்கு மேல் தமிழே தெரியாது...பிறகு எப்படி தமிழ் பாட்டு நிகழ்ச்சி உணர்வு பூர்வமாக இருக்கும்.....இது கண்கட்டு வித்தை தானே.... ஏமாற்றுகிறார்கள் தானே???? அதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுப்பான்????? அதை நாம் புறக்கணிக்க வேண்டும் தானே....மக்களை முட்டாளாக்குகிறார்கள் என்றால் எதிர் குரல் கோட்டுக்க தானே வேண்டும்??

 

குழந்தைகளை குழந்தைகள் வகிரமமாக சீரழிப்பதில்லை...வயது வந்த அரக்கர்கள் தான் செய்வது....இந்த நிகழ்ச்சியும் சிறிய குழந்தைகளை வைத்து அப்படி பட்ட அரக்கர்களுக்கு/அவர்களின் எண்ணங்களுக்கு தீனியாக்குகிறார்கள் ...

 

கொஞ்ச காலத்துக்கு முன் அமெரிக்காவிலும் சிறு பெண் பிள்ளைகளுக்கு பெரியவர்கள் மாதிரி உடுப்பு உடுத்தி நிகழ்சிகள் (சரியான பெயரை மறந்து விட்டேன்) செய்து பின் அது மக்களின் எதிர்ப்பால் காணாமல் போனது போல்...இதுவும் காணாமல் போகவேண்டும் என்பதே எனது விருப்பம்...

நான் சொல்லுவது..நான் அவதானித்த வகையில்

-பிள்ளை களுக்கு ஒவ்வாத உடுப்புகள் போட விஜய் டிவி பணிக்கிறது..

-பார்வையாளர்களை வீணாக உணர்சியூட்டுகிரார்கள்...

-அதில் பங்கேற்கிறவர்கள் உண்மையான உணர்சிகளை காட்டுவதில்லை..அவர்களின் செயல் பாடுகள் முழுக்க நடிப்பாக தெரிகிறது...

-வறுமையானவர்களை வைத்து விளையாட்டு காட்டுகிறார்கள்...

 

Link to comment
Share on other sites

நுகர்வுக் கலாச்சாரம் அதிகரித்துச் செல்லும்போது சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவது இயல்பு. நிலைமை இவ்வாறு இருக்கும்போது சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு இயக்கங்களை நடத்துவதால் பலன் ஏதும் இல்லை என்று வாதிடுவதால் பலனில்லை.

கயிறு இழுக்கும் போட்டி போல இரு பக்கமும் இழுத்தால்தான் ஒரு சமநிலை கிடைக்க வழி உண்டாகும். :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் முன்பு இந்த நிகழ்ச்சியை விரும்பி பாத்தேன் யாழிலும் இணைத்தும் இருந்தேன் இப்போது பார்ப்பதை நிறுத்தி விட்டேன். 

Link to comment
Share on other sites

குப்பையிலும் குண்டுமணி...சேற்றிலும் செந்தாமரை... இப்படி இந்த பிள்ளைகளில் இருந்து நாளைய நட்சத்திரம் உருவாகத்தான் செய்கிறார்கள். (பாடகர்... கார்த்திக்)

 

 

 

 
கார்த்திக், இசை மேலே கூறிய ஏ.வி ரமணனின் சப்தஸ்வரங்கள் மூலம் உள்வாங்கப்பட்டவர்.
Link to comment
Share on other sites

கொஞ்சகாலம் ஒரு வலது குறைந்த பிள்ளையை வைத்து வேடிக்கை காட்டினார்கள்...... எல்லாம்

என்னபா எழுதறது எண்டால் எதுவும் எழுதிவியளோ??

வாய் பேச முடியாத பிள்ளயா பாடிச்சு?

பார்வை திறன் இல்லாத பிள்ள ரொம்ப திறமாதானே பாடிச்சு?

பிள்ளகளிண்ட பாடலை கேப்பீங்களா இல்லை உடம்பை உற்று பார்பீகளா?

என்னபா இங்க பலரும் கேவலமாய் எழுதிற கருத்துகளை விடவும் கேவலமாயா பாட்டு போட்டி போகுது??

குருக்கள் கும்பல் குசு விடலாம். சரிதான்பின்ன.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

குண்டன்: பிள்ளை பாடினதை நான் பிழை சொல்லவில்லை...அந்த பிள்ளையை Star TV பாவித்து தங்களுக்கும் தங்களது நிகழ்ச்சிக்கும் ஆட்களை சேர்கிறார்கள்...

 

Star TV அந்த பிள்ளையையும் அது வளரும் மடத்தையும் பற்றி உண்மையிலேயே கரிசனையானவர்கள் என்றால் அந்த மடத்தை நடத்துவதற்கான செலவை ஒரு பத்து வருடத்துக்கு (அல்லது ஒருவருடத்துக்கு தானும்) ஏற்கிறதா என்று அறிந்து சொல்லுங்கள் ..நான் எனது எண்ணத்தை திருத்துகிறேன்....

 

Link to comment
Share on other sites

  • 2 months later...

சூறையாடப்படும் குழந்தை பருவம்!

 

Tamil_News_large_1120517.jpg

 

'ரியாலிட்டி ஷோ'வில் பங்கேற்கும் குழந்தை களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கூறும்,
குழந்தைகள் நல மருத்துவர் யமுனா: கலை என்பது இயல்பாக வர வேண்டும்; அது தான் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும். ஆனால், இப்போது கட்டாயப்படுத்தி வர வைக்கின்றனர். பரிசுக்கு ஆசைப்படும் பெற்றோர் தான், பிள்ளைகளை ரியாலிட்டி ஷோவுக்கு தயார்படுத்துகின்றனர்.
 
'நாங்க உனக்கு பொம்மை, சைக்கிள் வாங்கிக் கொடுத்திருக்கிறோம். அதேபோல, நீ நல்ல பாடி, ஆடி பரிசு அறிவிச்சிருக்கிற அந்த வீட்டை வாங்கிக் கொடுக்கணும்' என்பது மாதிரி துாண்டி
விடுவதை, ஆரோக்கிய மான அணுகுமுறையாக எப்படி எடுக்க முடியும்?
 
எந்த நேரமும் பிராக்டிஸ், பிராக்டிஸ் என்று அதே நினைப்பாக இருப்பதால், ரியாலிட்டி ஷோக்களுக்கு தயாராகிற பிள்ளைகள் சரியாக சாப்பிடுவது, துாங்குவது இல்லை; விளையாடுவதும் கிடையாது.
மேலும், பள்ளியில் இந்தப் பிள்ளைகளை புகழ் பெற்றவர்களாக பார்க்கின்றனர். நாம் ஒரு பிரபலம் என்று அந்தப் பிள்ளைகளுக்கு தெரிய வரும்போது, அதை பக்குவமாக கையாள முடியாமல் தம்மை பெரிய ஆளாக நினைத்து கொள்ளும் மனோபாவம் வந்துவிடும். அது, மற்ற பிள்ளைகளிடம் கூட இயல்பாக கலந்து பழக முடியாமல் செய்யலாம்.
 
அடிக்கடி லீவ் போட வேண்டி வருவதால், பரீட்சை நேரங்களில் சரியாக படிக்காமல், மதிப்பெண் வாங்க முடியாது. ஒரு கட்டத்தில், 'நாம் பாடினால் பணம், பரிசு புகழெல்லாம் கிடைக்குது. படிச்சா என்ன கிடைக்கும்?' என, தப்பாக யோசிக்க ஆரம்பிக்கலாம்.
 
வெற்றியின் மமதையை மனதில் துாக்கி வைக்கிறதும், தோல்வியடையறது பெருங்குற்றம் என்கிற மனோபாவத்தை வளர்க்குறதையும் தான், இந்த ரியாலிட்டி ஷோக்கள் செய்கின்றன. அதனால் பங்கேற்கும் பிள்ளைகள் மனதளவில் அதிகம் பாதிக்கப்படுவர்.
 
அதுமட்டுமின்றி, போட்டிகளில் தோல்வியடைந்த பிள்ளைகள், 'நான் ஜெயிச்சுடுவேன்னு நினைச்சேன். தோத்துட்டேனே... இப்போ எப்படி மத்த பசங்க முகத்துல முழிப்பேன். கலாய்ப்பாங்களே...'ன்னு புலம்பியபடி, பள்ளிக்கு போவதிலும் தயக்கம் காட்டுவர்.
 
அந்தந்தப் பருவத்தில் தான், குறிப்பிட்ட விஷயங்களை அனுபவிக்க முடியும். அதிலேயும் குழந்தைப் பருவத்தில் மட்டுமே தான் அனுபவிக்க முடியும்ன்னு எவ்வளவோ உள்ளது. அந்த உன்னதமான விஷயங்கள் எதையுமே அனுபவிக்க முடியாமல், இது மாதிரிப் பிள்ளைகள் வளர்கின்றனர். அதாவது, அவர்களுக்குத் தெரியாமல் அவங்களது குழந்தைப் பருவம் முற்றிலுமாக சூறையாடப்படுகிறது.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சூறையாடப்படும் குழந்தை பருவம்!

 

Tamil_News_large_1120517.jpg

 

 

 

 

இணைப்பிறகு நன்றி ஆதவன்.

 

மாணவர்களுக்கு கேளிக்கைகளும் கொண்டாட்டங்களும் அவ்வப்போது இருக்கலாமே தவிர.... ஒரு எல்லைக்கு முதல் அதுவே பாடமாக இருக்கக்கூடாது.

Link to comment
Share on other sites

பிள்ளைகள் பாடும்போது அதை ரசிக்காமல் நடுவர்களை எட்டி எட்டிப் பார்க்கும் பெற்றோரைப் பார்த்தால் வாழ்க்கை வெறுக்கும்.. :unsure:

Link to comment
Share on other sites

இப்படித்தான் எல்லாம் இருக்க வேண்டும் என்று விதிமுறை விதிக்க நாங்கள் யார் ?

இப்படியாவது சந்தோசமாக இருக்கின்றார்களே என்று சந்தோசமாக பார்த்துவிட்டு போக வேண்டியத்துதான் .

 

நியாயம் ,நீதி ,நல்லது, கெட்டது ,உண்மை, பொய் இப்படி எல்லாம் இருக்கா என்ன ?

நேற்று " ஜீவா" படம் பார்க்கும் போது யாழ் இந்துவில் தமது பந்தங்களை டீமில் தெரிவு செய்தவர்கள் வந்து போனார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் தற்போது, முதல் 7 போட்டியாளர்களில் ஒருவர். தனது கடும் முயற்சியாலும், திறமையாலும் படிப்படியாக முன்னேறிவருகிறார். நடுவர்களால் பல முறை பாராட்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார். மேலும் தமிழகத்தின் முன்னணி பாடகர்கள், இசையமைப்பாளர்கள் பலரும் பாராட்டியும், ஆசிவழங்கியும் வருகிறார்கள்.
கனடாவில் வாழும் ஈழத்தமிழ் சிறுமியாகிய ஜெஸிக்காவின் திறமை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எதிர்காலத்தில் சிறந்ததொரு பின்னணிப்பாடகியாக மாறும் சகல தகுதிகளும் ஜெஸிக்காவிடம் நிறைந்துள்ளது.
ஜெஸிக்காவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். :wub:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஓர் ஈழப்பெண் மகள் Jessica விஜய் டிவி இல். Jessica தந்தை Jude Rajasingam ஹாட்லி இல் எங்கள் வகுப்பு நண்பர் என்றறிந்ததில் மனம் மிகவும் மகிழ்கிறது"

"எம் ( Point Pedro ) மண்ணின் மைந்தனின் மகளின் திறமையில் குறை காணும் மனோ, சித்திரா போன்ற நடுவர்கள் மலையால தெலுங்கு தாய் மொழி குழந்தைகளின் தமிழ் வார்த்தைப் பிழைகளை கண்டு கொள்வதில்லை. இன்றைய சுற்றில் Barath Haripriya Pravasthi ஆகியோருக்கு மனோவின் shower, திறமையாக "பார்த்த ஞாபகம் இல்லையோ" , பாடிய Jasicca வுக்கு Shower இல்லை. இது Vijey TV யின் அரசியல் நாடகம். வாழ்த்துக்கள் Jasicca . வாழ்க உன் குரல் . வளரட்டும் உன் புகழ் பார் எங்கும்....."

Facebook comments

Link to comment
Share on other sites

  • 1 year later...

எல்லை மீறுகிறது குழந்தைகள் நிகழ்ச்சி- குவிந்த புகார்கள்

குழந்தைகள் நிகழ்ச்சி முதலில் ஏதோ கேம் ஷோ போல் தொடங்கியது. பிறகு ஆடல், பாடல் என வந்து பெரியவர்கள் கலந்துக்கொள்ளும் ரியாலிட்டி ஷோக்களாக மாறிவிட்டது.

இதில் வயதிற்கு மீறி இவர்கள் செய்யும் மற்றும் பேசுவது பலருக்கும் மன வருத்ததை தருகிறது, தொகுப்பாளார், உங்கள் அம்மாவிற்கு விஜய், அஜித் இவர்களில் யார் ஜோடியாக நடித்தால் நன்றாக இருக்கும் என கேட்டுள்ளனர்.

அதற்கு ஒரு குழந்தை அஜித் என்று பதில் சொல்ல அனைவரும் கைத்தட்டி ரசிக்கிறார்கள், இவை ரசிக்க வேண்டிய விஷயமில்லை.

அதேபோல் எலிமினேஷன் என்பதில் ஒருவரை நீக்குவதில் மனதளவில் ஒரு குழந்தை பாதிக்கப்படுகின்றது. டெல்லியில் இப்படி ஒரு நிகழ்ச்சியில் தான் ஒரு குழந்தை தன் குரலையே இழந்தது.

இதுபோல் TRP-க்காக குழந்தைகளை வைத்து அதிமேதாவிகள் போல் நிகழ்ச்சி நடத்துவதை உடனே நிறுத்தங்கள் என மக்களிடமிருந்து புகார்கள் குவிந்து வருகின்றதாம்.

http://www.cineulagam.com/tv/06/132785

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.