Jump to content

தமிழ்த்தேசியத்தை சிதைக்கும் கரி ஆனந்தசங்கரியை ஆதரித்து இரா. சம்பந்தன் அறிக்கை!


Recommended Posts

தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவை சிதைக்கும் நடவடிக்கையில் திட்டமிட்டு ஈடுபட்டு வரும்  கரி ஆனந்தசங்கரிக்கு இரா. சம்பந்தன்  பரிந்துரை மற்றும் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் தமிழருக்கு நடந்தது இனப்படுகொலை என்ற விடயத்தை அனந்தி சசிதரன் கொண்டு செல்ல முற்பட்ட போது இம் முயற்சியை கரி ஆனந்த சங்கரி அவர்கள் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் என்பதை அனந்தி சசிதரன் தெரிவித்திருந்தார்.

இப்படி பட்டவருக்கு இரா. சம்பந்தன்   கரி ஆனந்தசங்கரியை தேர்தலில் வெற்றி பெற வைக்குமாறு கனடாவாழ் தமிழ்மக்களுக்கு  செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு இரா. சம்பந்தன் விடுத்த செய்தி :

எதிர்வரும் நடாளுமன்றத் தேர்தலில் ஸ்காபரோ றூச் பார்க் தொகுதியில் கனடா லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளரைத் தெரிவு செய்யும் நியமனத் தேர்தலில் திரு ஹரி ஆனந்தசங்கரி போடியிடுகின்றார், இவர் ஒரு நீண்டகால மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வழக்கறிஞரும் என்பதுடன், இலங்கையில் உள்ள தமிழ்மக்களது நலன்களுக்காகத் தன்னலமற்ற பணி ஆற்றியிருக்கிறார் . குறிப்பாக ஹரி ஆனந்தசங்கரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஒரு பயனுடைய களம் என ஒரு சில செயற்பாட்டாளர்கள் மட்டுமே எண்ணியிருந்த காலம் முதல் எமது மக்களின் உரிமைகளுக்காக மனித உரிமைப் பேரவையின் நிகழ்வுகள் பலவற்றில் கலந்துகொண்டு ஈடுபாட்டுடன் வாதாடி வந்திருக்கிறார் என்பதை நாங்கள் நினைவு கூருகிறோம், அந்த முயற்சியில் ஈடுபட அவர் மேலும் பலரை ஊக்குவித்தும் வந்துள்ளார். இந்த முயற்சியின் காரணமாக இந்த ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி ஒரு பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஹரி இலங்கையில் சனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளோடு மிக நெருக்கமாகப் பணியாற்றி வந்துள்ளார். குறிப்பாக எமது போராட்டத்தின் மூலோபாயங்கள் பற்றிய கலந்துரையாடல்களில் அவர் பங்கு கொண்டு வந்திருக்கிறார். அவரது அனுபவம் மற்றும் அறிவுரை இரண்டினாலும் நாங்கள் பாரிய அளவில் பயன் அடைந்துள்ளோம். உலகளாவிய அளவில் எமது மக்கள் சார்பாகப் பொறுப்போடு வாதாடக் கூடியவர்கள் தேவைப்படும் இந்த நேரத்தில் ஹரி கனடிய நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவது மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும்.

ஹரி அவர்களைப் எந்தத் தயக்கமும் இன்றி நான் பரிந்துரை செய்கின்றேன். அவர் கனடிய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அனைத்துக் கனடியர்களுக்கும் அவர் பணிபுரிவார் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இந்தத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி வெற்றிபெற அவருக்கு ஆதரவு அளிக்குமாறு எமது மக்களை அன்போடு வேண்டிக் கொள்வதுடன் அவர் வெற்றி பெற எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெருவித்துக் கொள்ளுகின்றேன்.

இரா. சம்பந்தன்
தலைவர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
 

அன்பான கனடாவாழ் தமிழ் ஈழ உறவுகளே !

எமது அன்பான உறவுகளே! ரூஜ்-பார்க் தேர்தல் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் வேட்பாளர் தெரிவுக்கு போட்டியிடும் கரி ஆனந்தசங்கரியைப் பற்றிய உண்மையான கருத்துக்களை படித்துவிட்டு உங்கள் முடிவை எடுக்குமாறு அன்பாக வேண்டுகின்றோம்.

1) கனடாவில், இதுவரை காலமும் உங்களால் கட்டியெழுப்பப்பட்டு பாதுகாக்கப்பட்டுவரும் தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவை சிதைக்கும் நடவடிக்கையில் திட்டமிட்டு கரி ஆனந்தசங்கரி தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார்.

2) கரியினால் எமது இளையோர்க்கிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் முகமாக உருவாக்கப்பட்ட போட்டி நிகழ்வில் நிகழ்வின் அனுசரணையாளராக இலங்கை அரசின் கைக்கூலி கணேசன் சுகுமார் கலந்து கொண்டார். இவர் நீண்ட காலமாகவே தமிழர்களின் தேசிய அபிலாசைகளிற்கு எதிராக செயற்பட்டு வந்ததை நீங்கள் அறிவீர்கள். இவர் முள்ளிவாய்க்கால் அழிவு முடிந்தவுடன் ராஜபக்சேயுடன் படமெடுத்து இணையத்தளத்தில் போட்டவர். இனத் துரோகிகளான கணேசன் சுகுமார், குலா செல்லத்துரை மற்றும் சிறீலங்கா அரசின் கைக்கூலிகளுடன் சேர்ந்து இப்போது தமிழினத்துக்கு துரோகம் செய்ய கரி ஆனந்தசங்கரி இத் தேர்தலில் குதித்துள்ளார். இவர்கள் எப்படி பட்டவர்கள் என்று இவர்களின் இணையத்தளத்தில் சென்று பார்த்தால் தெரியும்.


3) தமிழ் தேசியத்தின் வழி நின்று வீடு வீடாக ஆதரவு தேடிய மாணவிகளை கரியும் அவரது ஆதரவு ஒட்டுக் கும்பலும் சேர்ந்து இனப்படுகொலைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து அந்த மாணவிகளை அடிக்க போனவரே இந்த கரி ஆனந்தசங்கரி. (வீடியோ ஆதாரம் உள்ளது). ஈழத்தில் இராணுவத்தாலும் இவரது அப்பா ஆனந்தசங்கரியின் ஆதரவு கும்பலாலும் மானபங்கப்படுத்தப்பட்ட ஈழத்து பெண்களுக்கு இவரா நீதி பெற்றுத் தரப்போகிறார். மாணவிகளை பிரச்சாரத்தின்போது படம் பிடித்த கரியின் அடியாட்கள் முகுந்தன், திவா பரம்சோதி மற்றும் குணா நாகலிங்கம் ஆகியோர் தாங்கள் எடுக்கும் இப்படங்களை சிறீலங்கா அரசிற்கு அனுப்பி வைப்போம் என கூறி பயமுறுத்தியது இவர்களுடைய இலங்கை அரசுடனான தொடர்பையும் துரோகத்தையும் வெளிப்படுத்தியிருக்கின்றது.

4) தாயகத்தில் தமிழ்த் தேசியத்தின் வழி நின்று, எமது இன விடுதலைக்காக தன்னுயிரை துச்சமென நினைத்து போராடுபவர் அனந்தி சசிதரன் அவர்கள். இவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் தமிழருக்கு நடந்தது இனப்படுகொலை என்ற விடயத்தை கொண்டு செல்ல முற்பட்ட போது இம் முயற்சியை கரி ஆனந்த சங்கரி அவர்கள் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் என்பதை அனந்தி அவர்கள் கனடியத் தமிழ் வானொலியில் (CTR) வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

5) கரி ஆனந்தசங்கரி, தான் ஒரு தமிழர், எனவே தனக்கு தமிழர்கள் ஆதரவு தர வேண்டும் என கூறுகின்றார். ஆனால் இவர்தான் பல தமிழர்களின் அரசியல் வாழ்வை குழி தோண்டி புதைத்தவர். கனடிய அரசியலில் போட்டியிடும் தமிழர்களுக்கு எதிராக வேற்று இன வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுத்தவர்.

உதாரணங்களாக:
அ. ராதிகா சிற்சபேசன் அவர்களின் தேர்தல் காலத்தில் அனைவரும் அவரின் வெற்றிக்காக உழைத்த நேரத்தில் அதே தொகுதியில் போட்டியிட்ட லிபெரல் கட்சி வேட்பாளர் ராணா சர்க்காரிற்காக கரி தலைமையில் CTC வேலை செய்ததை யாவரும் அறிவீர்கள். இந்த ராணா சர்க்கார்தான் இம்முறை லிபெரல் கட்சி வேட்பாளர் போட்டியில் டொன்வலி வடக்கில் படு தோல்வி அடைந்தார்.

ஆ. முரளி நாராயணதாஸ் என்பவர் லிபெரல் கட்சியின் வேட்பாளர் நியமனப் போட்டியில் ஏஜின்கோட் தொகுதியில் பங்கு பற்றியவர். இவருடைய குடும்பம் நீண்ட காலமாக சமூகப் பணியில் ஈடுபட்டவர்கள். அவரிற்கு எதிராக கடந்த இரு மாதத்திற்கு முன்பு சீன சமூகத்தைச் சார்ந்த ஆர்னொல்ட் சானுக்கு கரி ஆனந்தசங்கரி ஆதரவு கொடுத்திருக்கின்றார்.

இ. நீண்ட கால லிபெரல் அங்கத்தவரான தியோ அன்ரனி அவர்களின் வேட்பாளர் போட்டியில் அவரிற்கு எதிரான பிலிப்பைன்ஸ் சமூகத்தை சேர்ந்த வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்தார்.
இவர்கள் அனைவரையும் நீங்கள் அணுகி தமிழர்களுக்கு எதிராக நடந்த அநீதிகளை விபரமாக கேட்டு அறிந்து கொள்ளலாம்.

6) இவருக்கு முண்டு கொடுப்பவரும், நிரந்தரமான கொள்கை அற்றவருமான தங்கவேலு ஐயா என்பவரைப் பற்றி சொல்வதென்றால் 2009 முள்ளிவாய்க்கால் நேரம் தங்கவேலு ஐயா என்பவர் இங்கு ரிவிஐ இன் கொண்டாட்டம் நிகழ்வினை வைக்கலாம் என்று ரிவி இல் பேட்டி கொடுத்தவர். 2009 ல் எம்மினம் அழிக்கபட்டபோது தான் புலி என்று சொல்ல வெட்கப்படுவதாக சொல்லியவர், காற்று அடிக்கும் போது பறக்கும் சருகுக்கு ஒப்பானவர். மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் மகன் தமிழ் ஈழத்தில் தனது உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையிலும் ஈழத்துக்காக போராடி வருகிறார். கஜேந்திரன் பொன்னம்பலத்தை கரித்துக் கொட்டும் தங்கவேலு, துரோகி ஆனந்தசங்கரியின் மகனை நல்லவர், வல்லவர் என்று வக்காலத்து வாங்குகிறார். இதில் இருந்து தெரியவில்லையா கரி ஆனந்தசங்கரியும் அவரது ஆதரவாளர்களும் எப்படிப்பட்டவர்கள் என்பது?

7) அடுத்தவர் ஈ-குருவி இணையத்தளம் நடாத்தும் நவஜீவன். இவர் சிறீலங்கா அரசின் கைக்கூலி என்பது யாவரும் அறிந்ததே. இவரின் அப்பா ஆனந்தராஜா வல்வெட்டித்துறை நகரசபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தெரிவாகி இப்போது EPDP உடன் சேர்ந்து துரோகம் செய்வதுடன் ஆனந்தசங்கரியுடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளைப் பேணுபவர்.

ஈ-குருவி நவஜீவனின் தந்தை பற்றிய தகவலுக்கு: இங்கே அழுத்தவும்
http://www.pathivu.com/news/32473/57/d,article_full.aspx

ஆனந்தசங்கரியும், ஆனந்தராஜாவும் இணைந்து எவ்வாறு தமிழ் தேசியத்தை சிதைக்கின்றார்களோ அதைப் பின்பற்றி கனடாவில் கரி ஆனந்தசங்கரியும் நவஜீவனும் இணைந்து தீவிரமாக செயற்பட்டு வருகின்றார்கள்.

எத்தனையோ மவீரர்களாலும் மக்களின் தியாகங்களாலும் உங்களின் அளப்பரிய பங்களிப்புகளாலும் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியத்திற்கு இந்த சுயநலம் பிடித்த கரி ஆனந்தசங்கரியினாலும் இவர் போன்றவர்களினாலும் எந்த பாதகமும் வருவதை அனுமதிக்க முடியாது. இவை முளையிலேயே கிள்ளி எறியப்படுவதை உறுதிப்படுத்துவதே நாம் தேசியத்திற்கு ஆற்றும் கடமையாகும்.

அன்பான தமிழ் ஈழ உறவுகளே !

தமிழ் மக்களுடைய ஆதரவு தமிழ்த் தேசியத்தினதும் தமிழர்களின் அபிலாசைகளின் அடியொற்றியதே தவிர தமிழ்ப் பெயர் வைத்திருக்கின்றார் என்பதற்காக அரசியல் ஆதரவு கிடைத்துவிடாது என்பதை வலியுறுத்தி கூறிக்கொள்வதுடன், கிளிநொச்சியில் எமது மக்கள் ஆனந்தசங்கரிக்கு அளித்த பரிசினை நாமும் அவர் வழி தொடரும் புதல்வருக்கு வழங்குவோம் என்பதுடன், இவர்களின் துரோகத்தை மாவீரர் தியாகத்தை நெஞ்சில் சுமந்து எதிர் கொள்வோம் என உறுதி கொள்வோம்.

நன்றி

Boycott Gary Campaign Team ! http://www.pathivu.com/news/33317/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இதை இணைத்தவருக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருப்பதாகவே நினைக்கின்றேன். பதிவில் இச் செய்தி இணைக்கப்பட்டு, அரை மணி நேரத்துக்குள்ளாகவே யாழில் இச் செய்தி பகிரப்பட்டுள்ளது. அந்தளவு வேகமாகப் பதிவினைப் பார்க்கின்ற அளவு நம்மவர்களில் பலர் இல்லை என்பத என்னுமொரு உண்மை. அனந்தி அக்கா ஹரியைப் பற்றிச் சொன்னாரா? அல்லது சொல்ல வைக்கப்பட்டாரா என்பது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.

ஆ. முரளி நாராயணதாஸ் என்பவர் லிபெரல் கட்சியின் வேட்பாளர் நியமனப் போட்டியில் ஏஜின்கோட் தொகுதியில் பங்கு பற்றியவர். இவருடைய குடும்பம் நீண்ட காலமாக சமூகப் பணியில் ஈடுபட்டவர்கள். அவரிற்கு எதிராக கடந்த இரு மாதத்திற்கு முன்பு சீன சமூகத்தைச் சார்ந்த ஆர்னொல்ட் சானுக்கு கரி ஆனந்தசங்கரி ஆதரவு கொடுத்திருக்கின்றார்.

அட வெண்ணைகளா! இதைத் தானே நீங்களும் இப்போது செய்ய முயல்கின்றீர்கள். யாரோ ஒரு குஜராத்காரனுக்கு ஆதரவு கொடுத்துத் தமிழனை விழுத்தப் பார்க்கின்றீர்கள். முரளிக்கு ஆதரவாக நீங்கள் இப்படி ஒன்றும் வேலை செய்யவில்லையே! சரி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னடா இதைப்பற்றிய யாரும் எழுதவில்லை என்று யோசிச்சன்... இப்ப வந்திட்டு....!

எல்லாரும் ஹாி ஆனந்தசங்காியை எதிா்த்து இந்தியரான அஸ்வானி பரத்வாஜ்யும் என்பவருக்கு வாக்களியுங்கோ.... என்று தானே இப்ப சொல்ல வாறீங்க...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3) தமிழ் தேசியத்தின் வழி நின்று வீடு வீடாக ஆதரவு தேடிய மாணவிகளை கரியும் அவரது ஆதரவு ஒட்டுக் கும்பலும் சேர்ந்து இனப்படுகொலைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து அந்த மாணவிகளை அடிக்க போனவரே இந்த கரி ஆனந்தசங்கரி. (வீடியோ ஆதாரம் உள்ளது). ஈழத்தில் இராணுவத்தாலும் இவரது அப்பா ஆனந்தசங்கரியின் ஆதரவு கும்பலாலும் மானபங்கப்படுத்தப்பட்ட ஈழத்து பெண்களுக்கு இவரா நீதி பெற்றுத் தரப்போகிறார். மாணவிகளை பிரச்சாரத்தின்போது படம் பிடித்த கரியின் அடியாட்கள் முகுந்தன், திவா பரம்சோதி மற்றும் குணா நாகலிங்கம் ஆகியோர் தாங்கள் எடுக்கும் இப்படங்களை சிறீலங்கா அரசிற்கு அனுப்பி வைப்போம் என கூறி பயமுறுத்தியது இவர்களுடைய இலங்கை அரசுடனான தொடர்பையும் துரோகத்தையும் வெளிப்படுத்தியிருக்கின்றது.

எவ்வளவு பெரிய பொய் இது. ஹரி அடிக்கப் போனார் என்றால் அந்த ஆதாரத்தை வெளியிடுங்கள். தன்னைப் பற்றி அவதூறாகப் பிரச்சாரம் செய்ய இளையவர்களை இவர்கள் தூண்டிவிட்டு எங்கோ பாதுங்கி நின்றார்கள். தன்னைப் பற்றி அவதூறகாகப் பேசுவதற்கு விளக்கம் கேட்கப் போனார் ஹரி. அவ்வளவு தான். வீட்டுக் கண்ணாடி உடைத்தலில் இருந்து, கார் எரிப்பு... அலுவலகங்களில் எப்படி களவெடுப்பது என்பது தொடர்பாக இவர்களின் பல வீரச் செயல்களை விளக்கத் தேவை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமாச் சொல்கின்றேன். இந்தக் கட்டுரை எழுதினவர் யார் என்று ஊகிக்க முடிகின்றது.மாவீர்களின் பெயரை வைத்து உங்களுக்குள்ள தனிப்பட்ட கொடுக்கல்வாங்கல்களைத் தீர்த்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கும் பிற அமைப்புக்களுக்கும் பிரச்சனை என்றால் அதைத் தனிப்பட்ட விதத்தில் தீர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு மாவீர்களின் பெயரை ஏன் பாவிக்கின்றீர்கள். ஹரிக்குப் பதிலாக ஒரு குஜராத் காரன் வெற்றி பெற்றால் மாவீரர்களின் கனவு பலன் அடைந்துவிடுமா? அல்லது நீங்கள் நினைத்ததைச் சாதித்துத் கிழித்து விடுவீர்களா?

ஹரி ஆனந்தசங்கரியைத் தோற்கடிப்பதன் மூலம் என்ன சாதித்து விட முடியும் எனக் கருதுகின்றீர்கள். தமிழ்களின் பலம் அதிகரிக்கப்படும்? அதுக்குத் தான் ஒரு குஜராத் காரனை முன்நிறுத்துகின்றீர்களா? எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். இதுவரைகாலமும் ஹரி எப்போது நேரடியாக எதிரியோடு பழகினார். அவர் காட்டுகின்ற அரசியல் தமிழர் சார்பு அரசியலாகத் தானே இருக்கின்றது. இன்று ராதிகாவைப் பற்றிக் கதைக்கும் நீங்கள், பல நாட்களாக அவருக்கு மேடையில் இடமே கொடுக்காமல் தானே இருக்கின்றீர்கள்.

ஹரி ஐநாவில் கதைத்த காலப்பகுதி என்பது, மார்ச் மாதம் பிற்பாடு, அவர் பல நிகழ்வுகளுக்கு வந்தார். அப்போதும் சரி, தனிப்பட்ட விதத்திலும் சரி... ஐநாவில் பேசியதைப் பற்றி வாய்திறக்காத நீங்கள், அவர் தேர்தலில் போட்டியிடுவதை முழுமையாக உறுதிப்படுத்தியபின்னர், இந்த ஊழையிடும் வேலையைச் செய்ய ஆரம்பித்திருப்பது என்பது தனிப்பட்ட அரசியல் வஞ்சச் செயலாகத் தானே இருக்க முடியும்? ஏன் ஹரியிடம் இதைப் பற்றி முதலே கேட்ககவில்லை.

இன்று நவநீதனின் தந்தையின் தப்பினையும், ஹரியின் தந்தை செய்கின்ற தப்பினையும் பற்றிக் கதைப்பது எப்படி எனப் புரியவில்லை. தந்தை தப்பாக இருந்தால் மகனும் அப்படி என்பதற்கு பார்க்கின்ற சாதிவெறியின் தொடச்சியா என்ன? தந்தை தப்பு செய்தார் என்பதற்காக மகனைக் குறை கூறுவது என்பது இன்று சிங்கள அரச பயங்கரவாதம், தம்பி பாலச்சந்தினைக் கொன்றதற்குச் சொல்கின்ற காரணங்களுக்கு ஒப்பானது. பிறகு என்ன மண்ணுக்கு போர்க்குற்றம் பற்றிக் கதைக்கின்றோம்.... முதலில் தந்தை- மகன் என்ற இரண்டு உயிர்களுக்கு இரண்டு மூளை என்பதைப் புரிந்து கொள்கின்ற அறிவினைக் கொள்க...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹரி அவர்கள் தொகுதி வேட்பாளராகத் தெரிவாகியுள்ளார்.... வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹரி அவர்கள் தொகுதி வேட்பாளராகத் தெரிவாகியுள்ளார்.... வாழ்த்துக்கள்..

 

 

தகவலுக்கு நன்றி...

 

 நாிகளின் ஊளையிடல்களுக்கு மத்தியில்.... நம்பிக்கை கொண்ட அனைத்து தொகுதி மக்களுக்கும் நன்றிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் அவர் பாராளுமன்ற உறுப்பினராக ஆகி அவருக்கு எதிராக நயவஞ்சக செயல்களில் ஈடுபடும்சிலரின் முகத்தில் கரி பூசுவார். ஆனாலும் இவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இதில் அவதானமாகவும், உறுதியோடும் முழு உழைப்பிழனையும் போட்டுச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வளர்த்துவிட்ட பெருமைக்குரியவர்கள் இவர்கள். ஏற்கனவே ஹரி தேர்தலுக்கான முன் ஏற்பாட்டினை சென்ற வருடமே ஆரம்பித்து விட்டாலும், இவர்களால் தான் உத்வெகம் பெற்றார். வருங்காலங்களில் விடுதலைப் போராட்டத்தைத் தங்களின் தேவைகளுக்காகப் பாவிக்க முயல்பவர்கள் இனம் காணப்படுவதாக!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி...

 

 நாிகளின் ஊளையிடல்களுக்கு மத்தியில்.... நம்பிக்கை கொண்ட அனைத்து தொகுதி மக்களுக்கும் நன்றிகள்...

 

சும்மா மட்டும் ஊளையிடவில்லை. சமீபத்தில் எஸ்பி இம்பேர்ட்டஸ் உள்ள கடைத்தொகுதியின் முன் நின்று, தாங்கள் உறுப்பினருக்கான பணத்தொகையைத் தருவதாகவும், உறுப்பினராகி ஹரிக்கு எதிராக வாக்களிக்கும்படியும் கெஞ்சிக் கொண்டு நின்றார்கள். இப்படிப் பல இடங்களில் நின்று பிரச்சாரம் செய்திருக்கலாம்... யார் வீட்டுப் பணத்தை இப்படி வீணாக்குவது. அஸ்வானியும் தமிழரின் ஒற்றுமை உணர்வைக் கண்டு மனதில் எள்ளி நகையாடியிருப்பார். இப்படியான நயவஞ்சகச் செயல்களுக்காகவாது ஹரி பாராளுமன்றம் சென்றாக வேண்டும். அதற்குத் தமிழர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் சங்கரியாரையும் இப்படித்தான் ஒரு கூட்டம் தலையில் வைத்துக் கொண்டாடியது. கடைசியில்.. அவர் மொத்த இனத்தின் அழிவுக்கும் துணை போகும் ஒருவராக மாறினார். அதன் சாட்சியாக இன்றும் அவர் உள்ளார். இன்று அதிகம் மக்களால் வெறுக்கப்படும் மனிதராக அவர் இருந்தாலும்.. அவருக்கு என்று மாலை போட ஒரு வயோதிபக் கூட்டம் உள்ளது.

 

அப்படி ஒரு நிலையை மிஸ்டர் ஹரி உருவாக்கமாட்டார் என்ற உத்தரவாதம் இருந்தால்.. அன்றி.. இந்த நச்சுப் பாம்பு வம்சத்தை தமிழ் மக்கள் அவ்வளவு இலகுவில்.. தமிழர்கள் என்ற அடையாளம் இடலுக்காக நம்பி.. ஏமாந்திடக் கூடாது. அப்புறம்.. பாராளுமன்றத்துக்கு அனுப்பிட்டு .. 4.. 5 வருசம் அவஸ்தைப்படும் நிலைக்கு தமிழ் மக்கள் தாங்களே தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்ட கதையாக இது அமையக் கூடாது.

 

இவர்களைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பும் முன் இவர்களிடம் மக்கள் எழுத்துமூலமான உறுதிமொழிகளைப் பெற்ற பின் தான்.. இவர்களை நம்ப வேண்டும்.

 

சங்கரி என்றோ தேர்தலில் வென்றதை வைச்சு இப்பவும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு சொந்தம் கொண்டாடுவது போல.. நாளை இவரும்.. மொத்தக் கனடிய தமிழர்களுக்கும் சொந்தம் கொண்டாட வெளிக்கிட்டால்.. கனடிய மண்ணில்.. உள்ள தமிழ் மக்களின் கனவு மட்டுமல்ல.. தாயக மக்களின் துயர்களுக்கான விடையும்.. விடிவும் நிரந்தர அஸ்தமிப்பை நோக்கி கொண்டு செல்லப்படலாம்.

 

தமிழ் மக்கள்.. தமிழன் என்ற உணர்ச்சித் தூண்டல்களுக்கு துலங்க முதல்.. இவர்கள் தமிழ்  மக்களை சரியாக.. மக்களின் விருப்புக்கு ஏற்ப பிரதிநிதிப்படுத்தக் கூடிய.. மக்களின் கருத்துக்களை செவிசாய்க்கக் கூடிய தலைவர்களா என்பதை உறுதி செய்து கொண்ட பின் தான்.. இவர்களுக்கு வாக்களிப்பது பற்றி தீர்மானிக்க வேண்டும். அதுவே மக்கள் ஜனநாயகமும் ஆகும்..!!! :icon_idea:

Link to comment
Share on other sites

ஹரி எதிர்வரும் நடாளுமன்றத் தேர்தலில் ஸ்காபரோ றூச் பார்க் தொகுதியில் கனடா லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட அதிகப்படியான வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

சம்பந்தர் ஐயாவின் அறிக்கையை பார்த்தவுடன் கனடா மக்கள் அவையை சேர்ந்தவர்களுக்கு வயிற்றெரிச்சலில் TNA யை சார்ந்தவர்களிடம் புலம்பித் தீர்த்துவிட்டார்கள் .

அளிக்கப்பட்ட வாக்குகளில்( 1900)ஹரி கிட்டத்தட்ட 75வீத வாக்குகள் எடுத்துள்ளார் .இது வரை ஒன்ராறியோவில் நடைபெற்ற வேட்பாளர் தெரிவில் ஹரி தான் அதி கூடிய வீத வாக்குகளால் வென்றுள்ளார் .


ஹரியின் வெற்றியின் முலம் உலாகத்தமிழர் அமைப்பின் பினாமியான கனேடிய மக்கள் அவைக்கு ஒரு செய்தியை தமிழ் மக்கள் சொல்லியுள்ளார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றய பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன கிழித்தனர் என்று பட்டியிட முடியுமா நெடுக்ஸ். இவர் போவதைத் தடுப்பதாகச் சொல்பவர்கள் கொண்டு வர விரும்புவது ஒரு குஜராத்காரனை. அவனையா தேவை என்கின்றீர்கள். பட்டும்படாமலும் எழுதுவதை விட கனடா அரசியலைப் புரிந்து எழுதினால் எங்களுக்கும் இலகு நெடுக் ;

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றய பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன கிழித்தனர் என்று பட்டியிட முடியுமா நெடுக்ஸ். இவர் போவதைத் தடுப்பதாகச் சொல்பவர்கள் கொண்டு வர விரும்புவது ஒரு குஜராத்காரனை. அவனையா தேவை என்கின்றீர்கள். பட்டும்படாமலும் எழுதுவதை விட கனடா அரசியலைப் புரிந்து எழுதினால் எங்களுக்கும் இலகு நெடுக் ;

 

எங்களிடம் உள்ள ஒரே சந்தேகம்...

 

ஒருவேளை..குஜராத்காரன் வந்தால்.. அவன்.. எமது இனத்துக்கு எதிராக துரோகம் செய்ய பெரிதாக.. முயற்சிக்கப் போறதில்லை.

 

இவர் வந்தால்.. ஒருவேளை தந்தையை பழிவாங்கும் மக்களை பழிவாங்க நினைத்தால்... (ஏலவே இவரின் நடவடிக்கைகள் குறித்து சில சந்தேகத்துக்கு இடமான..செய்திகள் வந்துள்ள நிலையில்..) அதற்கு மக்கள் (கனடா வாழ் மற்றும் தாயகம் வாழ்) செலுத்த வேண்டிய விலை.. மிகப் பெரிய அளவில்.. இருக்கலாம். கூடிய மீள முடியாத துயர் மிகுந்ததாகவும் இருக்கலாம் இல்லையா. அந்த சூழல் எழாத வகைக்கு.. இப்படியானவர்களிடம் உத்தரவாதம் பெறாது.. எப்படி இவர்களுக்கு வாக்களிக்கக் கோர முடியும்...???!

 

மற்றும்படி இவர் கனடியர்களுக்காகத் தான்... உழைக்கப் போறார் என்றால்.. அது குஜராத்காரன் வந்தால் என்ன வெள்ளைக்காரன் வந்தால்.. என்ன..???!  தமிழன் என்ற அடையாளத்தோடு மக்கள் முன் வரும் போது.. இனத்தின் உண்மையான எண்ணங்களை இவர் பிரதிபலிப்பாரா இல்ல சங்கரி போல.. வெளில ஒன்று.. ரகசியமா இன்னொன்று செய்து கொண்டிருப்பார்களா..?????????! என்பதற்கும் பதில் தேடித்தானே ஆக வேண்டும். இவர்கள் அதனை தெளிவுபடுத்தினால்.. மக்களை ஏன் மற்றவர்கள் பிறிதொரு திசைக்கு வழிநடத்தப் போகிறார்கள்..?????! இப்படி எச்சரிக்கை கட்டுரைகள் வரையப் போகிறார்கள். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இனத்துக்கு எதிராகச் செய்த செயல்களை ஒவ்வொன்றாகப் பட்டியிடுங்கள். அதற்கான விளக்கத்தைத் தருகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. சம்பந்தனின் சார்பறிக்கை. (சம்பந்தனின் சில நடவடிக்கைகள்.. தமிழ் மக்களின் ஒட்டுமொத்த நலனையும் அடகு வைப்பது போன்றது. இந்திய நலன் சார்ந்து தமிழ் மக்களின் உரிமையை குறுநிலைப்படுத்துவது. ஏன் அப்படியாப்பட்ட சம்பந்தன்.. இவருக்கு ஆதரவு கேட்டு கடிதம் எழுதினார்..?!)

 

2. சிறீலங்கா அரசு.. 1948 இல் இருந்து தமிழின அழிப்பை.. சுத்திகரிப்பை செய்வது உலகம் அறிந்த விடயம். இருந்தாலும்.. அதனை உலகம் இன்னும் ஏற்றுக்கொள்ள தயங்குவதற்குக் காரணம்.. இந்தியா. அப்படியான ஒரு சூழலில்.. முள்ளிவாய்க்கால் பெரும் இன அழிப்பு இந்திய உதவியோடு மீண்டும்..நடந்துள்ள நிலையில்... இலங்கையில் இன அழிப்பு இல்லை என்பதாக இவர் எடுத்திருக்கும் நிலைப்பாடு..????!

 

3. இவருடைய நிகழ்வுகளுக்கு சிறீலங்கா சிங்கள அரச விசுவாசிகள்.. அழைக்கப்படுவதும்.. அவர்களின் செல்வாக்கை மக்களிடம் உயர்த்திக்காட்டுவதும்.. ஏன்..??!

 

4. அனந்தி சசிகரன் ஒரு இனப்படுகொலையின் சாட்சி. அவரின் முன்னெடுப்புக்களுக்கு ஏன் இவர் முட்டுக்கட்டையாக இருக்கனும்..????!

 

5. உண்மையாகவே தமிழன் என்ற உணர்வோடு தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயற்படுபவராக இருந்தால்.. மாற்றுக்கருத்துக்களை முன் வைக்கும் மக்களுக்கு அந்தக் கருத்துக்கள் தொடர்பில் ஏன் ஒரு தெளிவான விளக்கத்தையும்.. உத்தரவாதத்தையும் முன்வைக்காமல்.. அவற்றை ஊளையிடல்.. போட்டி அரசியல்.. என்று இனங்காட்டி.. மக்களை பிளவுபடுத்த முனைகிறார்...??????!

 

(இந்த வினாக்கள்.. யாழ் இணையத்தளத்தில்.. இவர் பற்றி வந்த செய்திகளின் அடிப்படையில் நாங்கள் அறிந்து கொண்டதன் அடிப்படையில் எழுப்பப்படுகிறது..??!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நாங்கள் இந்தப் பாட்டை போடும் நிலையை உருவாக்காமல் விட்டாலே போதும்.

 

Link to comment
Share on other sites

கனடாவில் வாழும் ஒருவன் என்ற வகையில் கரி அவர்களை தேர்ந்தெடுப்பதற்கு சங்கரி அவர்களை மையமாக வைத்து முடிவெடுக்க மாட்டேன். கனடாவில் கரியின் செயற்பாடு என்ன என்பதே அவரை தேர்ந்தெடுபதற்கான பிரதான முடிவை தீர்மானிக்கும். அந்தவகையில் இவரை தேர்ந்தெடுப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. பிறரின் ஊகங்கள் சந்தேகங்கள் விருப்பு வெறுப்புகளுக்காக ஒருவரை தேர்ந்தெடுக்கும் உரிமையை கைவிடவோ மாற்றவோ முடியாது. இதுவரை காலமும் அவரின் செயற்பாடுகளை பார்த்து அவரை தேர்ந்தெடுப்பது. தேர்ந்தெடுத்தபின்னர் அவரின் செயற்பாடுகள் திருப்தியளிக்கவில்லையாயின் அடுத்தமுறை வேறு ஒருவரை தேர்ந்தெடுப்பது. அவ்வளவுதான்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனுடைய நிலைமை இப்போது என்ன? சம்பந்தால் தமிழீழம் என்ற அரசியல் போராட்டத்தை நடத்த முடியுமா என்றால், அது நிச்சயம் கிடையாது. அதற்கான வலு இல்லை. இச் சமயத்தில் அவர்களால் கொண்டு செல்லக்கூடிய அரசியல் என்பது, மக்களின் படுகொலைகளை எடுத்துச் செல்வதும், மக்களுடைய இருப்பினைத் தக்க வைக்கின்ற செயலைச் செய்வது மட்டுமே. மற்றும்படி தமிழீழம் என்பது தொடர்பாக எவ்விதமான வெளிப்பாட்டையும் தமிழ்க்கூட்டமைப்பினால் கொண்டு செல்லமுடியாது. புலிகளின் ஆயுதப் போரின் மௌனிப்பின் பின்னர், தமிழ்க்கூட்டமைப்பின் நகையறு நிலைமை இவ்வாறு தான் அமைந்துள்ளது. வேணுமென்றால் புலத்தில் இருந்து முகத்தை மறைத்துக் கொண்டு, புடங்கலாம், கிடுங்கலாம் என்று எதுவேண்டுமானாலும் செர்லலிக் கொள்ளலாம். அங்குள்ள நிலைமை வேறு. மகிந்த சீனாவோடு கொண்டு;ளள நெருக்கத்திற்காக இந்தியாவை நாடவில்லையா? ஏனென்றால் இலங்கை உள்ள இடத்தில் இருந்து தான் ஆக வேண்டும். திரு சம்பந்தன் அவர்கள் சென்றவருடமோ, இந்த வருடம் கனடாவுக்கும வந்தார். பல தமிழ் மக்களைச் சந்தித்தார். அவரை எதிரி மனப்பான்மையோடு நோக்க வேண்டிய தேவை அங்கே இருக்கவில்லை.

ஆனால் புலத்தில் தங்களைத் தாய் அமைப்பாக நினைத்துக்கும் கொள்ளும் சிலருக்கு அவர் ஆடவிலல்லை என்பதால் அவர் எதிரியாகிப் போய்விட்டார். இன்றைய 5 வருடத்தில் ஒரு சின்ன உரிமை கூட யாராலும் பெற்றுக் கொடுக்கமுடியவில்லை எனும்போது சம்பந்தனைத் திட்டி என்ன பயன்?? அதனால் சம்பந்தனிடம் ஆதரவு பெற்றதில் எந்தத் தவறுமில்லை. தவிர, சம்பந்தன் பெற முயலும் உரிமை தவறு என்றால் நீங்கள் எப்படிப் பெறலாம் என்ற பரிந்துரையைச் செய்யுங்கள்....

------------------

ஈழத்தில் நடந்தது இனஅழிப்பு- போர்க்குற்றம் என்ற முரண்பாடுகள் பல இப்போதும் உள்ளன. இனஅழிப்பு எனும்போது, ஒரு இனம் சிறிலங்கா என்ற நாட்டில் வாழவே முடியாத நிலைமையாக இருக்க வேண்டும் என்ற வரையறையைச் சிலர் கொள்கின்றனர். ஹரியும் அப்படித் தான் நினைக்கின்றார் என நம்புகின்றேன். அப்படியான சூழலில் புலத்தில் இருந்து ஊருக்குப் போகின்றோம். களியாட்டம் செய்கின்றோம். தவிர, கொழும்பில் நல்ல மாதிரியாக வாழ்கின்றோம். வடக்கில் போர் பகுதி நடந்த இடத்தைத் தவிர, மற்றவர்கள் சந்தோசமாக இருப்பதாக உலகிற்குச் செய்தி பதியப்படுகின்றது. புலிகளும், அவர்களோடு இருந்தவர்களுமே போரில் கொல்லப்பட்டதாக உலகம் நம்ப வைக்கப்ட்டுள்ளது. இந்த சமயத்தில் இனஅழிப்பு என்ற பதத்தை நாங்கள் கொண்டு செல்வது என்பது நீண்டதாரப் பாதை. அதை உலகம் ஏற்குமா என்பது கூட உறுதியல்ல. அதனால் அதைக் ஹரி உற்பட்ட சிலர் போர்க்குற்றமாகக் கொண்டு செல்ல முயன்றனர் என நம்புகின்றேன்.

இனப்படுகொலை என்பதற்கான காரணிகளை நாங்கள் கொண்டிராமல், சும்மா சொல்லிக் கொண்டிருந்தால், குறைந்தபட்சம் கொல்லப்பட்ட மக்களுக்கான நீதிகூடக் கிடைக்காது போய்விடும் என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கலாம். மற்றும்படி அவர் சிங்கள அரசுக்கு எதிராகவே ஐநாவில் நடந்து கொண்டார். அதற்காகவே போராடினார்.

சிங்கள அரச விசுவாசிகள் கலந்து கொண்டனர் என்பது, உலகத்தமிழர் போன்ற அமைப்புக்களின் வழமையான குற்றச்சாட்டுக்கள். தங்களுக்குப் பிடிக்காதவர்களுக்கு இப்படிப் பட்டம் சூட்டுவது அவர்களின் வழமை. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. தந்தை தப்பாக இருந்தால் மகனும் அப்படித் தான் இருப்பார் என்ற அரிய கண்டுபிடிப்பினை இவர்கள் கண்டுபிடிக்கவில்லையா? இத்தனைக்கும் போராட்டம் தொடங்குவதற்கு முன்னரே, ஹரி தந்தையிடம் இருந்து பிரிந்து தாயோடு வாழ்ந்து வந்தவர்.

அனந்தியக்காவுக்கு முட்டுக்கட்டையாக அவர் இருக்கவில்லை. அனந்தியோடு ஏற்பட்ட குழப்பம் என்பது இனப்படுகொலை- போர்க்குற்றம் என்பது தொடர்பான தெளிவின்மையே.

இங்கே ஊளையிடல் என்ற வார்த்தையைப் பாவித்தது நாங்களே. தவிர, இங்கே ஹரி என்ற பெயரில் எழுதிக்னறவருக்கும், ஹரி ஆனந்தசங்கரிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நான் அறிந்து அவர் தமிழில் தட்டச்சு செய்யச் தெரியாதவர். அத்தோடு அவருக்கு யாழில் மினக்கெடும் அளவு நேரமும் கிடையாது. ஹரி ஆனந்தசங்கரி இதுவரைக்கும் தூற்றும் அரசியல் செய்ததில்லை. உலகத்தமிழர் இதுவரை அவரைப் பெற்றிய அவதூறுக்குப் பதிலடி, கோபமான வார்த்தைகளால் மடல் எழுதுதல் என்ற எந்தத் தவறான செயலையும் அவர் செய்ததில்லை. சிலதடவைகள் தன்னிலை விளக்கம் மட்டுமே கொடுத்துள்ளார். அவ்வளவு தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஹரி என்ற பெயரில் எழுதும் உறுப்பினருக்கும், ஹரி ஆனந்தசங்கரிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இவர் அவரின் ஆதரவாளாக இருக்கலாம் என்பதே என் ஐயம். ஹரி ஆனந்தசங்கரி மீது இவரது நடவடிக்கைகள் தவறான பார்வையைக் கொண்டுவரக் காரணமாக அமைந்திருப்பதை இப்போதே உணர்கின்றேன். அவர் அது பற்றிய தெளிவைக் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். இல்லாவிடின் சம்பந்தப்பட்டவர்களுக்கு இது பற்றி அறியத் தரப்படும்.... ஹரி ஆனந்தசங்கரிக்குத் தமிழில் தட்டச்சு செய்ய வராது என்பதை நான் அறிவேன். சில தகவல்களைத் தட்டச்சு செய்ய என் நண்பர்களே உதவியுள்ளனர் என்பதால் இந்த விடயம் பற்றிய தெளிவு உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனுடைய நிலைமை இப்போது என்ன? சம்பந்தால் தமிழீழம் என்ற அரசியல் போராட்டத்தை நடத்த முடியுமா என்றால், அது நிச்சயம் கிடையாது. அதற்கான வலு இல்லை. இச் சமயத்தில் அவர்களால் கொண்டு செல்லக்கூடிய அரசியல் என்பது, மக்களின் படுகொலைகளை எடுத்துச் செல்வதும், மக்களுடைய இருப்பினைத் தக்க வைக்கின்ற செயலைச் செய்வது மட்டுமே. மற்றும்படி தமிழீழம் என்பது தொடர்பாக எவ்விதமான வெளிப்பாட்டையும் தமிழ்க்கூட்டமைப்பினால் கொண்டு செல்லமுடியாது. புலிகளின் ஆயுதப் போரின் மௌனிப்பின் பின்னர், தமிழ்க்கூட்டமைப்பின் நகையறு நிலைமை இவ்வாறு தான் அமைந்துள்ளது. வேணுமென்றால் புலத்தில் இருந்து முகத்தை மறைத்துக் கொண்டு, புடங்கலாம், கிடுங்கலாம் என்று எதுவேண்டுமானாலும் செர்லலிக் கொள்ளலாம். அங்குள்ள நிலைமை வேறு. மகிந்த சீனாவோடு கொண்டு;ளள நெருக்கத்திற்காக இந்தியாவை நாடவில்லையா? ஏனென்றால் இலங்கை உள்ள இடத்தில் இருந்து தான் ஆக வேண்டும். திரு சம்பந்தன் அவர்கள் சென்றவருடமோ, இந்த வருடம் கனடாவுக்கும வந்தார். பல தமிழ் மக்களைச் சந்தித்தார். அவரை எதிரி மனப்பான்மையோடு நோக்க வேண்டிய தேவை அங்கே இருக்கவில்லை.

ஆனால் புலத்தில் தங்களைத் தாய் அமைப்பாக நினைத்துக்கும் கொள்ளும் சிலருக்கு அவர் ஆடவிலல்லை என்பதால் அவர் எதிரியாகிப் போய்விட்டார். இன்றைய 5 வருடத்தில் ஒரு சின்ன உரிமை கூட யாராலும் பெற்றுக் கொடுக்கமுடியவில்லை எனும்போது சம்பந்தனைத் திட்டி என்ன பயன்?? அதனால் சம்பந்தனிடம் ஆதரவு பெற்றதில் எந்தத் தவறுமில்லை. தவிர, சம்பந்தன் பெற முயலும் உரிமை தவறு என்றால் நீங்கள் எப்படிப் பெறலாம் என்ற பரிந்துரையைச் செய்யுங்கள்....

------------------

ஈழத்தில் நடந்தது இனஅழிப்பு- போர்க்குற்றம் என்ற முரண்பாடுகள் பல இப்போதும் உள்ளன. இனஅழிப்பு எனும்போது, ஒரு இனம் சிறிலங்கா என்ற நாட்டில் வாழவே முடியாத நிலைமையாக இருக்க வேண்டும் என்ற வரையறையைச் சிலர் கொள்கின்றனர். ஹரியும் அப்படித் தான் நினைக்கின்றார் என நம்புகின்றேன். அப்படியான சூழலில் புலத்தில் இருந்து ஊருக்குப் போகின்றோம். களியாட்டம் செய்கின்றோம். தவிர, கொழும்பில் நல்ல மாதிரியாக வாழ்கின்றோம். வடக்கில் போர் பகுதி நடந்த இடத்தைத் தவிர, மற்றவர்கள் சந்தோசமாக இருப்பதாக உலகிற்குச் செய்தி பதியப்படுகின்றது. புலிகளும், அவர்களோடு இருந்தவர்களுமே போரில் கொல்லப்பட்டதாக உலகம் நம்ப வைக்கப்ட்டுள்ளது. இந்த சமயத்தில் இனஅழிப்பு என்ற பதத்தை நாங்கள் கொண்டு செல்வது என்பது நீண்டதாரப் பார்வை. அதை உலகம் ஏற்குமா என்பது கூட உறுதியல்ல. அதனால் அதைக் ஹரி உற்பட்ட சிலர் போர்க்குற்றமாகக் கொண்டு செல்ல முயன்றனர் என நம்புகின்றேன்.

இனப்படுகொலை என்பதற்கான காரணிகளை நாங்கள் கொண்டிராமல், சும்மா சொல்லிக் கொண்டிருந்தால், குறைந்தபட்சம் கொல்லப்பட்ட மக்களுக்கான நீதிகூடக் கிடைக்காது போய்விடும் என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கலாம். மற்றும்படி அவர் சிங்கள அரசுக்கு எதிராகவே ஐநாவில் நடந்து கொண்டார். அதற்காகவே போராடினார்.

சிங்கள அரச விசுவாசிகள் கலந்து கொண்டனர் என்பது, உலகத்தமிழர் போன்ற அமைப்புக்களின் வழமையான குற்றச்சாட்டுக்கள். தங்களுக்குப் பிடிக்காதவர்களுக்கு இப்படிப் பட்டம் சூட்டுவது அவர்களின் வழமை. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. தந்தை தப்பாக இருந்தால் மகனும் அப்படித் தான் இருப்பார் என்ற அரிய கண்டுபிடிப்பினை இவர்கள் கண்டுபிடிக்கவில்லையா? இத்தனைக்கும் போராட்டம் தொடங்குவதற்கு முன்னரே, ஹரி தந்தையிடம் இருந்து பிரிந்து தாயோடு வாழ்ந்து வந்தவர். க்காவைச் சிலர் தவறாகத் தங்களின் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்த முயல்கின்றார்கள்.

அனந்தியக்காவுக்கு முட்டுக்கட்டையாக அவர் இருக்கவில்லை. அனந்தியோடு ஏற்பட்ட குழப்பம் என்பது இனப்படுகொலை- போர்க்குற்றம் என்பது தொடர்பான தெளிவின்மையே.

இங்கே ஊளையிடல் என்ற வார்த்தையைப் பாவித்தது நாங்களே. தவிர, இங்கே ஹரி என்ற பெயரில் எழுதிக்னறவருக்கும், ஹரி ஆனந்தசங்கரிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நான் அறிந்து அவர் தமிழில் தட்டச்சு செய்யச் தெரியாதவர். அத்தோடு அவருக்கு யாழில் மினக்கெடும் அளவு நேரமும் கிடையாது. ஹரி ஆனந்தசங்கரி இதுவரைக்கும் தூற்றும் அரசியல் செய்ததில்லை. உலகத்தமிழர் இதுவரை அவரைப் பெற்றிய அவதூறுக்குப் பதிலடி, கோபமான வார்த்தைகளால் மடல் எழுதுதல் என்ற எந்தத் தவறான செயலையும் அவர் செய்ததில்லை. சிலதடவைகள் தன்னிலை விளக்கம் மட்டுமே கொடுத்துள்ளார். அவ்வளவு தான்.

 

அடிப்படையில் உங்களுக்கு தமிழீழம் தொடர்பான போராட்டத்தில் சரியான தெளிவில்லை.

 

அதனை முதலில் திருத்திக் கொள்ளுங்கள்.

 

தமிழீழம் என்பது.. புலிகளின் கோரிக்கையல்ல. இலங்கை வாழ் தமிழ் மக்களின் உரிமை.

 

அது இரண்டு தளங்களில் உள்ளது.

 

1. கோட்பாட்டு ரீதியான தளம்.

 

2. அதனை அடைவதற்கான பல்வேறு போராட்டத்தளம்.

 

கோட்பாட்டு ரீதியான தமிழீழம் என்பது தேசிய தலைவர் பிறக்கமுதலே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இன்றும் அது உள்ளது. சம்பந்தன் அதனைக் கூட கைக்கொள்ள முடியாத ஒரு துர்ப்பாக்கிய சிந்தனை ஓட்டத்தில் உள்ள ஒருவர்.

 

இரண்டாவது தளம்.. அரசியல் போராட்டத்தளம்.. ஆயுதப் போராட்டத்தளம்.. அறிவுமயப்படுத்தப்பட்ட தளம் என்று 3 தளங்களில் உள்ளது. அதில் ஆயுதப் போராட்டத்தளம் பின்னடைவை கட்டிருந்தாலும்.. மற்றைய இரண்டு தளங்களையும் நாட்டிலுள்ளும்.. வெளியிலும்.. கொண்டு செல்ல முடியும். அப்படி நடந்து கொண்டு தான் உள்ளது.

 

ஒரு  தேச விடுதலையை வெறும்.. ஆயுதப் போராட்டமூலம் சாத்தியமாக்க முடியாது. அது கோட்பாட்டியல் ரீதியில் வரலாற்று சான்றுகள் அடிப்படையில்.. நிலைநிறுத்தப்பட்டு பின் தான் அடைதல் தளங்களில் செயற்படுத்தப்பட்டு.. வெற்றி கொள்ளப்பட வேண்டும். இதுதான் ஒரு அடிமைப்பட்ட இனத்தில் தேச விடுதலைக்கான வரைவிலக்கணம்..!

 

அடிப்படையில்.. தமிழீழப் போராட்டம் தொடர்பான தங்கள் புரிதலில் தவறுள்ளது. அதனை அடிப்படையாக வைத்து நீங்கள் ஒரு வேட்பாளரை இனங்காட்டினால் அதிலும் தவறு இருக்கலாம்.

 

+++++++++++++++

 

இனப்படுகொலை பற்றி உங்கள் விளக்கம் வியப்பாகவும் இன்னொரு பக்கம் ஏமாற்றம் அளிப்பதாகவும் உள்ளது.

 

உலக வரலாற்றில் இனப்படுகொலை நடந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சமீபத்திய வரலாறு.. கொசவோ... மற்றும்.. தற்போது ஈராக்கில் கிறீஸ்தவ பழங்குடிகள் மீதான ஐ எஸ் வன்முறைகள். 20,000 மக்கள் தொகை கொண்ட ஈராக் பழங்குடி கிறீஸ்தவர்கள் மீதான தாக்குதலை.. இனப்படுகொலையாக கருத முடியும்.. என்று அம்மையார் நவனீதம் பிள்ளை அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அப்படியானால்.. சிறீலங்காவில்.. சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் தமிழ் மக்கள் மீது நடத்தப்படுவது யதார்த்த சூழலில்.. இனப்படுகொலையே ஆகும்.

 

ஆனால் அண்டையில் உள்ள இந்தியா அதனை ஏற்க விடாது. விட்டால் காஷ்மீரில் நடப்பது.. அசாமில் நடப்பது.. பஞ்சாப்பில் நடந்தது.. எல்லாம் இனப்படுகொலை என்றாகும்.

 

போர்க்குற்றம் என்பது.. ஒரு போரில் சர்வதேச போரியல் விதிகள் மீறப்பட்ட நிகழ்வுகள் சார்ந்தது. அதில்.. அந்தக் குற்றத்தை செய்தவர்கள் மட்டுமே தண்டனை பெற முடியும். ஒரு இனம் இன அழிப்புக்கு உட்பட்ட ஒன்றை அது காத்திரமாக சொல்லிட முடியும் என்று கருதவியலாது.

 

போர்க்குற்றம் என்பது இனப்படுகொலையின் ஓர் அம்சமாகக் காட்டப்பட முடியும் என்ற வகையில் தான்.. தமிழ் மக்கள் ஐநா போர்க்குற்ற குற்றச்சாட்டை முன்னிலைப்படுத்துகிறார்கள். ஆனால் மிஸ்டர் ஹரியின் இந்த நிலைப்பாட்டில் தெளிவில்லை..!

 

தமிழர்கள் தென்னிலங்கையில்.. மட்டுமல்ல.. மலையகத்திலும் வாழ்கிறார்கள். ஆனால் அங்கெல்லாம் தமிழர்கள் மீது வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு அவர்கள் அடித்து விரட்டப்பட்டிருக்கிறார்கள். இன்று ஈராக்கில் கிறீஸ்தவர்கள் மீது நடப்பது அன்று அங்கு நடந்தது. இது இனப்படுகொலை என்றால்.. அது..??!

 

நீங்கள் ஹரி என்பவரின் நிலைப்பாட்டை முன்னிறுத்த உங்களுக்கு வசதியாக எமது இனத்தின் அழிவைக் கூட தரம் தாழ்த்திக்காட்டும் நிலைக்கு வந்திருப்பது வருந்தத்தக்கது மட்டுமன்றி மக்களிடம் தவறான புரிதலையும் கொண்டு செல்லத் தூண்டுகிறது.

 

இவற்றின் அடிப்படையில் நோக்கும் போது.. நீங்கள் ஹரி என்பவருக்கு அளிக்கும் ஆதரவு என்பது.. மக்கள் மயப்படுத்தப்பட்ட உண்மைகள் சார்ந்தல்ல. உங்களின் தனிப்பட்ட விருப்புச் சார்ந்தது என்ற உண்மையே பிரதிபலிக்கிறது. அதில் தவறுகள் இருக்கலாம்..!! இல்லையா..????!

 

இந்தியாவை மோவாது.. தமிழர்களுக்கு விடிவில்லை. இந்திய நலன் சார்ந்து தான் தமிழர்களுக்கு விடிவு உரிமை என்ற சம்பந்தனின் நிலைப்பாட்டுக்குள் போனால்.. நிச்சயமாக தமிழ் மக்களுக்கு இப்பொழுதுள்ள மாகாண சபைகளும் இன்னும் கொஞ்சக் காலத்தில் இல்லாமல் போகும்..!

 

+++++++++++++++

 

அனந்தி சசிகரன்.. தனது இனப்படுகொலை சாட்சியத்தை உலகின் முன் சமர்ப்பிக்க துடிக்கும் கணவனை போரில் தொலைத்த ஒரு பெண்மணி. அவரின் செயற்பாடுகளுக்கு அவரின் எண்ணப்பாடுகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதை விடுத்து.. ஹரி தனது எண்ணங்களை அவருக்குள் திணிக்க முற்படுவது.. சரியான அரசியல் தலைமைத்துவத்துக்கான அம்சமாகத் தெரியவில்லை..! இது தவறான ஒரு அணுகுமுறை ஆகும். இதனை நீங்கள் அவருக்கு தெளிவுபடுத்துவதை விட்டு நியாயப்படுத்துவது சரியானதல்ல.

 

++++++++++++++

 

ஹரி சார்ந்து மக்களுக்கு கருத்துச் சொல்பவர்கள் அவர் சார்ந்த அரசியல்.. சமூக.. நிலைப்பாடுகளை சரியாக அறிந்து மக்களின் மாற்றுக் கருத்துக்களுக்கு தெளிவான விளக்கங்களையும் பதிலையும் உத்தரவாதங்களையும் அளிக்க வேண்டிய நேரத்தில்.. மாற்றுக் கருத்துக்களை.. சந்தேகங்களை முன்னிறுத்தும் மக்களை ஊளையிடும் நரிகள் கூட்டமாக இனங்காட்டுவது... எந்த வகையாக அரசியல் சித்தாத்தத்தை நோக்கி ஹரி தனது ஆதரவாளர்களை வழிநடத்திறார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. (அண்மையில்.. ஆனந்த சங்கரியும் தமிழ் மக்களை இந்த வகையில் கரித்துக் கொட்டி இருந்தார். அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்.). இது தமிழ் மக்களுக்கு ஒரு ஆரோக்கியமான அரசியலை செய்ய வழிவிடுமா..???! நிச்சயமாக இல்லை.

 

குழப்பமான சூழலில்.. இன்று வாழும் தமிழ் மக்களிடம் பல சந்தேகங்கள் எழுவது இயல்பு. அதற்கு ஏற்ப ஒரு அரசியல்வாதி தன்னை மக்களின் முன் தெளிவுபடுத்த வேண்டியவனாக மட்டுமன்றி.. மக்களிடம்.. தான் கொண்ட கொள்கைகள் குறித்த விளக்கங்களையும் உத்தரவாதங்களையும் அளித்து அவர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் வாக்களிக்கக் கோருவது தான் ஜனநாயகம்.

 

அதைவிடுத்து.. குஜராத்காரனை முன்னிறுத்திறாய்.. தமிழனை புறக்கணிக்கிறாய் என்று இனத்துவ அரசியல் பேசிக் கொண்டு.. மக்களின் சந்தேகங்களை குழிதோண்டிப் புதைத்துவிட்டு.. தாம் நினைத்த அரசியலை  மக்களிடம் திணிக்க நினைப்பது ஜனநாயமும் அல்ல.. ஒரு அரசியல் தலைமைக்குரிய அம்சமும் அல்ல..!!!

 

அந்த வகையில்.. ஹரி தொடர்பாக அவரின் தமிழ் மக்கள் தொடர்பான நிலைப்பாடுகள் தொடர்பில்.. மக்கள் இன்னும் தெளிவான விளக்கங்களை பெறவே விரும்புவார்கள். அதனை அவர் வழங்க மறுக்கும் பட்சத்தில்.. அல்லது புறக்கணிக்க விளையும் பட்சத்தில் மக்களின் வாக்குகள்.. இந்த இடரை விலக்கிக் கொள்ளும் வகையில்.. வேறு ஆட்களை போய் சேர்வதை தடுக்க முடியாமல் இருக்கும்..!!!! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவதற்கான விளக்கத்தைத் திருப்பிச் சொல்கின்றேன். விடுதலைப்புலிகள் போராடிய காலப்பகுதியில் எமக்கு என ஒரு பலம் இருந்தது. அவர்களின் ஆயுத பலம் எங்களின் அடையாளத்தை நிலை நிறுத்த உதவியது. ஆனால் அவர்களின் ஆயுத மௌனத்தின் பின்னர், தமிழர்களை எப்படி வேண்டுமனாலும் கொல்ல முடியும் என்ற ஒரு விடயத்தைச் சிங்கள அரசு எடுத்தது. இன்று வரை செயற்படுத்திக் கொண்டும் இருக்கின்றது. அதைத் தடுக்க யாராலும் முடியவில்லை. சமீபத்தில் புலிகள் எனக் குற்றம்சாட்டி தேவிகன் உற்பட்ட 3 பேரைச் சிங்கள அரசு சுட்டுக் கொன்றபோது எங்கே தமிழ் தேசியத்தைக் காக்கின்ற சக்தி உங்களிடம் இருக்கின்றது . யாரையும் உங்களால் காப்பாற்ற முடியவில்லை என்ற பழி விழாது இருப்பதற்காக அவர்களைச் சிங்கள உளவாளிகள் என்று கதையை முடித்து விட்டீர்கள். இது தான் இன்றைய நிலைமை. எவனை வேண்டுமானாலும், புலி எனக் குற்றம் சாட்டிக் கொன்றுவிடச் சிங்கள அரசால் முடியும். இந்த நிலைமையில் சம்பந்தர் போன்றவர்கள், செய்கின்ற அரசியல்தளம் என்பது அப்படித் தான் கொண்டு செல்ல முடியும். இதில் இருந்து தமிழீழத்தைக் கொண்டு செல்ல முடியும் என்றால் உங்களைப் போன்ற இளைஞர்கள் சம்பந்தரைத் துரத்தி விட்டுத் தாரளமாகத் தலைமை ஏற்கலாம். அன்று அமிர்தலிங்கம் போன்றவர்கள் இருந்தபோது தானே தேசியத்தலைவர் போராட்டத்தை ஆரம்பித்தார். அப்படியிருக்க நீங்கள் ஏன் சம்பந்தரை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்..... மற்றும்படி சொல்கின்ற அட்டவணைகள் எல்லாம் காலத்திற்குதவாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

I just wonder the Gary in this forum and Gary ananthasangari are same ? if not my apology to Gary...

Sorry guys for writing in English as I don't know how to write in tamil font. A quick introduction, I'm from Australia and long term reader of Yaarl.

I just noticed that Thuyavan has already clarified about the member Gary and Gari Aanandasangari. I didn't read when I post my first comment.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.