Jump to content

டேட்டா குவியல் அதிகரித்துக்கொண்டே போவது எதனால்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீண்ட நாட்களாக எல்லாத் துறைகளிலும் உபயோகப் படுத்தப்பட்டு வருகின்றது. அது என்ன இப்போது திடீரென்று பிக்-டேட்டா, பிக்-டேட்டா என்று எல்லோரும் பேசுகின்றார்கள். திடீரென இது எப்படி இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டது என்று நீங்கள் கேட்கலாம்.

ஆங்கில இலக்கணப்படி பார்த்தால் பிக்-டேட்டா என்ற சொல் இணைப்பே தவறு எனலாம். தமிழில் கடலை குறிப்பிட பெரிய தண்ணீர் என்று சொன்னால் எப்படி உங்களுக்கு சிரிப்பு சிரிப்பாக வருமோ அப்படிப்பட்ட சொற்றொடர்தான் இது எனலாம்.

கணினி கண்டுபிடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டாலும், நாம் டேட்டா பதிவுகளை அதிவேகத்தில் அதிகரித்துக்கொண்டு வருவது சமீபகாலத்தில் தான்.

மூர்ஸ் தத்துவம்

வளர்ந்த நாடுகளில் பல்லாண்டுகளாக கணினிகள் உபயோகத்தில் இருக்கின்றதே? அங்கே டேட்டாக்கள் பதிவு பல ஆண்டுகளாக இருக்கின்றதே என்ற கேள்வியை நீங்கள் கேட்கலாம். இங்குதான் நீங்கள் ஒரு முக்கியமான கம்ப்யூட்டிங் குறித்த விதியைப் புரிந்துகொள்ளவேண்டும். மூர்ஸ் தத்துவம் என்னும் ஒரு விதிதான் அது.

உங்கள் அனைவருக்கும் பரிட்ச யமான இன்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் தான் மூர்ஸ். கணினிகளின் கம்ப்யூட்டிங் வேகம் ஒன்றரை வருடங்களுக்கு ஒரு முறை இரட்டிப்பாகும் என்பதுதான் அவருடைய தத்துவத்தின் சாராம்சம்.

இரண்டு நான்காகி, நான்கு எட்டாகி, எட்டு பதினாறாகி, பதினாறு முப்பத்திரண்டாகி என்ற எக்ஸ்போனென்சியல் கணக்கில் இரட்டிப்பாகிக்கொண்டே போகும் கணினிகளின் வேகம் என்கின்றது இந்த விதி. இதனைச் சுலபமாகப் புரிந்துகொள்ள நீங்கள் ஏற்கெனவே சிறுவயதில் கேட்டிருக்க வாய்ப்பிருக்கும் கதை ஒன்றை நினைவூட்டுகின்றேன்.

சதுரங்க வேட்டை

சதுரங்க விளையாட்டை (செஸ்) கண்டுபிடித்தவர் குப்த பேரரசரிடம் அந்த விளையாட்டைக் காண்பித்து பாராட்டுப்பெற்றாராம்.

மன்னர் இந்த அற்புதமான விளையாட்டை கண்டுபிடித்ததற்காக உமக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்க, சதுரங்கத்தை கண்டுபிடித்தவரோ எனக்கு உணவு தானியம் கொஞ்சம் வேண்டும். அதிகமில்லை ஜென்டில்மேன். இந்த சதுரங்க போர்டில் இருக்கும் கட்டங்களின் எண்ணிக்கை அளவுக்கு மட்டுமே வேண்டும். ஒரு சின்ன பார்முலா இருக்கின்றது என்றாராம்.

இந்த சதுரங்கக் கட்டத்தில் முதல் கட்டத்தில் ஒரு தானியம். இரண்டாவது கட்டத்தில் இரண்டு மடங்கு அதாவது இரண்டு. மூன்றாவது கட்டத்தில் அதைவிட இரண்டு மடங்கு அதாவது நான்கு என்ற அளவில் மட்டுமே கொடுங்கள் மன்னா என்றாராம்.

மன்னரோ கேலிச் சிரிப்புடன் யாரங்கே! ஒரு அரைக்கால் படியில் தானியம் கொண்டுவா, இந்த ஆளுக்கு தானியம் கொடுத்தனுப்பலாம் என்று சொல்ல பணியாளர்களும் அதற்கு முயல 32-வது கட்டத்தில் கணக்குப்படி 40 லட்சம் தானியம் தேவைப்பட்டது.

அரண்மனைக்குள் இருக்கும் களஞ் சியத்திலேயே அந்த அளவுக்குத் தேவையான தானியம் இல்லையாம்!. அறுபத்தி நாலாவது கட்டத்திற்கு தேவையான தானியத்தை சேர்த்துக் குவித்தால் அந்த குவியலுக்கு அருகே இமயமலையே மிகச் சிறிய குன்றாய் தோன்றும் என்பதுதான் நிஜம். இதுதான் எக்ஸ்போனென்சியல் வளர்ச்சியின் பிரம்மாண்டம். என்ன இப்போதே கண்ணைக்கட்டுகின்றதா?

வேகம்தான் வளர்ச்சி

கணினியின் வேகம் அதிகமாக அதிகமாக டேட்டா குவியலும் அதிக மாகிக்கொண்டே போகின்றது. முதல் கணினியான பாபேஜ் கண்டுபிடித்த முதல் இன்ஜினை (அப்படித்தான் அந்த சமயத்தில் அந்தக் கணினியை அழைத்தார்கள்) சுவிட்ச்-ஆன் செய்தால் அந்த ஊரிலேயே மின்சார சப்ளை குறைந்து விளக்குகள் கொஞ்சம் மங்கலாகி திரும்பவும் சகஜ நிலைக்குத் திரும்பும் என்பார்கள் என்பது உங்களுக்கு சொல்லவிரும்பும் ஒரு கணினி குறித்த சுவையான தகவல்.

இன்றைக்கு நீங்கள் கையில் வைத்து உபயோகிக்கும் ஆப்பிள் ஐ-பேட் 1985ம் ஆண்டு முதல் முதலில் வடிவமைக்கப்பட்ட கிரே-2 என்ற சூப்பர் கம்ப்யூட்டரை விட வேகமாகச் செயல்படுகின்றது என்று சொன்னால் நம்புவீர்களா? அந்த சூப்பர் கம்ப்யூட்டர் ஒரேயிடத்தில் நிலையாய் இருக்கும்.

ஆப்பிள் ஐ-பேடோ உங்களுடன் போகுமிடத்திற்கெல்லாம் வரும், பாடும், ரிக்கார்ட் செய்யும், படித்துகாட்டும் என பல்வேறு உபயோகமான விஷயங்களை செய்யும் இல்லையா!. அதிவேகத்தில் அதிகரிக்கும் இந்த மொபைல் கம்ப்யூட்டிங் பவர்தான் டேட்டா சேகரிப்புக்கான அடித்தளத்தை அமைக்கின்றது எனலாம்.

மொபைல் கம்ப்யூட்டிங்தான், உங்களுக்கு என்ன பிடிக்கும். கடைசியாய் எந்தப் பொருளைப் பார்த்தீர்கள், எங்கெல்லாம் சென்றீர்கள் என்ற பதிவுகள் உடனுக்குடன் பல்வேறு கணினிகளில் செய்யப்பட்டுக்கொண்டேயிருப்பதற்கு காரணமாயிருக்கின்றது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

வரப்பெற்ற வரம்

இந்த அசுர வேக கணினி வேலை செய்யும் வேக வளர்ச்சிதான் டேட்டா பதிவுகளை அளவுக்கு அதிகமாக வளர்க்கின்றது. டேட்டாவை நீங்கள் தருவதற்கு தயாராக இருந்தாலும் நிறுவனங்கள் அதைப் பதிந்துவைத்துக்கொள்ள வசதிகள் வேண்டுமில்லையா? டேட்டா பதிவுகளை செய்துவைக்க துணிச்சல் தருவதும் வேகமாக வளர்ந்துகொண்டே வரும் இந்த கம்ப்யூட்டிங் பவர்தான்.

எதற்கும் எல்லாவற்றையும் பதிவு செய்துவை. தேடுவதற்கான பவர்தான் நம்மிடம் இருக்கின்றதே என்ற எண்ணமும் டேட்டா பதிவுகளை செய்ய நிர்வாகங்களை ஊக்குவிக்கின்றது எனலாம். இப்படி பதிய முயல்வதனாலேயே போகுமிடங்களில் எல்லாம் நாம் நம்முடைய பதிவுகளை அறிந்தும் அறியாமலும் செய்துகொண்டே போகின்றோம்.

வெறுமனே டேட்டாவை சேர்த்து குவித்து வைப்பது மட்டுமே நிறுவனங்களின் வேலை இல்லை. டேட்டாவை வைத்து நடந்ததை கோர்த்துப் பார்த்து நடக்கப்போவதை அறிய முயல்வதுதான் அனலிடிக்ஸ் தரும் வரம். ஆண்டவனை மட்டும் நாங்கள் நம்புகின்றோம்.

மற்றவர்கள் டேட்டாவோடு வரவும் என்று சொன்னார் டீமிங் என்ற ஒரு பேராசிரியர். டேட்டா எப்போதுமே பேசும் தன்மை கொண்டது. டேட்டா நிறையவே கதை சொல்லும். அதிலிருந்து நிறுவனங்கள் கற்றுக்கொள்ள வேண் டியது அதிகமாக உள்ளது.

இதில் ஏன் எல்லா நிறுவனங்களும் ஆவலாய் இருக்கின்றன என்று கேட்பீர்கள். எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள எப்போதுமே நாம் மிகவும் ஆவலாக இருக்கின்றோம்.

பெரும்பாலானோர் ஜாதகத்துடன் ஜோசியம் பார்க்கக் கிளம்புவது அதனால்தானே! வியாபாரத்தில் எதிர்காலம் பற்றித் தெரிந்துகொள்ள டேட்டா என்ற ஜாதகம் நிறையவே உதவுகின்றது. அதனாலேயே பிக்-டேட்டா அனலிடிக்ஸ் இப்போது தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படுகின்றது.

கேள்வியும் பதிலும்

புதிய பொருளை அறிமுகப் படுத்தினால் நம்முடைய வாடிக்கை யாளர்களில் எத்தனை பேர் வாங்கு வார்கள் என்பது சாதாரணமான கேள்வி. யார் வாங்குவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கின்றதோ அவர்களை மட்டுமே மார்க்கெட்டிங் டிப்பார்ட்மெண்டில் இருந்து தொடர்பு கொள்ளுங்கள் என்பதுதான் அனலிடிக்ஸ் தரும் வசதி.

இப்படி சலித்துவைத்துக்கொண்டு தொடர்பு கொள்வதன் மூலம் மார்க்கெட்டிங் செலவுகள் மிகவும் குறையும்தானே! இன்டர்நெட்டில் முழுகியிருக்கும் வாடிக்கையாளர்கள் எந்த விதமான விளம்பரத்தை கிளிக் செய்வார் என்பது சாதாரணமான கேள்வி. இன்னாருக்கு எந்த விளம்பரத்தை காண்பிக்கலாம் என்பது அனலிடிக்ஸ் சொல்லும் பதில்.

இருபத்தியோரு வயது நபருக்கு புதிய சுகர் டெஸ்ட்டிங் மிஷினின் மாடலை விளம்பரமாக அவர் பிரவுஸ் செய்யும் போது காண்பிப்பதை விட புத்தம்புது மொபைல் மாடலின் விளம்பரத்தைக் காண்பிப்பதுதானே உசிதம்.

டேட்டா அனலிடிக்ஸின் மூலம் வாடிக்கையாளர்களின் பிரியங்களைக் கண்டறிந்து, அவர்கள் செயல்பாட்டில் இருக்கும் ஒற்றுமையை கண்டுபிடித்து தேவைகளை சுலபத்தில் பூர்த்தி செய்யமுடியும்.

பிக்டேட்டா அனலிடிக்ஸ் மூலம் நிர்வாகங்கள் முடிவெடுக்க முயலும் போது கடையிலும், ஷோரூமிலும், விற்பனை பிரதிநிதிகளிடையேயும் எந்த விதமான மாறுதல்களையும் செய்யதேவையில்லை.

அப்படி எதைத்தான் அனலிடிக்ஸின் மூலம் தெரிந்துகொள்ள முடியும் என்பீர்கள். சரியான டேட்டாக்கள் பதியப்படும்போது இந்த ஆள் இந்த சமானை வாங்குவாரா, டொனேஷன் கொடுப்பாரா, ஒரு விஷயம் பற்றி என்ன நினைக்கின்றார், நியாயஸ்தரா, பொய் சொல்கின்றாரா, எத்தனை பேர் அன்றைய பயணத்தின் டிக்கெட்களை கேன்சல் செய்ய வாய்ப்புள்ளது, எத்தனை பேர் ஓட்டுப்போடுவார்கள், தேர்தலில் யார் ஜெயிப்பார் போன்ற பல்வேறு விஷயங்களையும் அனலிடிக்ஸின் மூலம் சற்று சோதித்து முன்னரேயே அறிந்துகொள்ளமுடியும்.

cravi@seyyone.com

 
Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி பெருமாள்.

 

விரைவில் நாமெல்லாரும் உருவம் அழிந்து வெறும் Data களாக bytes களாக மாறினாலும் ஆச்சரியமில்லை. அப்படி ஆகி disk இல் சேமிப்பாகி Cloud இல் இடப்பட்டு தேவையான இடத்தில் அவற்றை Download செய்து மீண்டும் எம்மை உயிர்பிக்கவும் தேவையற்ற நேரத்தில் மீண்டும் டிஸ்கில் சேமித்துக் கொள்ளவும் கூடிய ஒரு நிலை வரலாம்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கும் கருத்திற்க்கும் நன்றி நிழலி நீங்கள் சொன்னது நடக்குதே இல்லையோ ஒவ்வொரு மனிதனின் தகவல்களால் மனித எண்ணங்களை படிக்கவோ மாற்றவோ ஏன் அழிக்கவோ முடியுமென்கிறார்கள் எதிர்காலத்தில் 2001ல் வந்த Minority Report எனும் சினிமாவில் இதை கருவாக வைத்து  புகுந்து விளையாடியிருப்பார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.