Jump to content

பிறந்ததோ ஞானம்??


yaal

Recommended Posts

நேற்று

யாழ் களம் பிரகடனம்

யாழுக்கு வந்த சிலர் செய்த பிரகடனம்

1. அரட்டைகள் அற்ற யாழ்.

2. எல்லாரும் சீரியஸா எழுத வேணும். 20 பேர் அரட்டை அடிக்கிறதிலும் 2 பேர் உருப்படியா எழுதிறது மட்டும் போதும்.

3. தீவிர சிந்தனையும் விவாதங்களும் இடம்பெற்று சமூகத்தைத் தலை கீழாக்க வேணும். அது யாழின் புதுமை.

4.ஆங்கில ஆக்கங்களை மொழிபெயர்த்துப் போடுறது யாழுக்கு அவசியமில்லை. யாழில உள்ளவங்கள் எல்லாரும் டமிழர்கள்.

5. வசனனடையில் கவிதை என்று சும்மா பம்மாத்துக் காட்ட வேண்டாம். பேசாம கவிதையைத் தலைப்பை கதைக்குள்ள மூவ் பண்ணிடுவோம்.

6.வலிய வம்புக்குப் போய் கொழுவல் போட்டு துரோகிகளை இனங்காட்டுவோம். தனிமடல்களில் நாயே பேயே என்று எழுதி எங்கள் வல்லமையைக் காட்டுவம். ஆளாளுக்கு தனிமடல் போட்டு கெஞ்சிவம். அவருக்கு இவருக்கு சப்போட் பண்ணாதீங்க கெட்டுடுவீங்கள் என்றும் மிரட்டுவம். எம் எஸ் என்னையும் யூஸ் பண்ணி இவற்றைச் செய்வம்.

8. எல்லாம் செய்திட்டு நல்ல பிள்ளையா உபதேசமும் செய்வம். கண்டுக்காதேங்க துரோகிகளை விரட்டி அடிச்ச வீரர்கள் நாங்கள்.

9. விடுதலைப்புலிகள் ஏன் போராடினம் என்பதை நாங்கள் சொல்லி நீங்கள் விளங்கிக்க வேணும்.

10. தமிழ் தேசியம் என்றதை யார் உச்சரிச்சாலும் நாங்கள் தான் அவையை கைட் பண்ணுவம். நீங்கள் கேட்டு நடக்கனும். இல்ல தூசணம் தான் பதிலாகும். பன்னாடை என்று தலைப்பும் போடுவம் கீழ விவாதம் நடத்துறதா மற்றவைக்கு வழியும் காட்டுவம்.

11.அப்ப நாங்கள் எப்படி தமிழ் பேசுறம் என்று கவனியுங்கோ நாங்க பேசுறதுகள் மட்டும் நாகரிகமா எப்பவும் இருக்கும். தூசணம் கூட.அதைப் பார்த்து மற்றவை பழகிக்கொங்கோ.

தற்போது

ரிரிஎன் நிகழ்ச்சிகளில் என்னும் உயர்ச்சி வேண்டும். அதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இல்லை. அதில் தலையிடவும் விரும்பவில்லை. ஆனால் இங்கே சொல்லப்படுகின்றவை அனைத்தும் விமர்சனங்களாகவா இருக்கின்றன? ஹசன் அலிக்கு நடந்தது போல, நமக்குள்ளும் உளவாளிகள் ஊடுருவல் செய்வார்கள், என்பதில் அவதானமாகவும், அந்த நிலை நமக்கு வரக் கூடாது என்று சொன்னவுடன், இங்கே தம்மைத் துரோகியாகச் சொன்னது என்று ஆக்ரோசமான வார்த்தைகள்! ஆனால் மறுதலையாக, முதலில் இருந்தே, ரிரிஎன்காரர்கள் பன்னாடைகள், புறம்போக்குகள் என்று திட்டினால், அவர்கள் மெளனியாக வாய் மூடிக் கொண்டிருக்க வேண்டும் என்றால் என்ன நியாயம்?

ஒரு வகையில் ரிரிஎன் நிர்வாகம் யாழ்களத்தில் வந்த கருத்துக்களை, கவனத்தில் கொள்கின்றபோது, எம் மனதில் உள்ள குறைகளையும் எமக்குத் தெரிகின்ற தீர்வுகளையும், ஒழுங்குபடுத்தி எழுதுகின்ற போது தான், நட்புறவுரீதியிலான செயற்பாடுகள் தொடரக் கூடும். அதை விடுத்து, கேலியும், குதர்க்க வசனங்களையும் எழுதினால், தரம் குறைந்த மூன்றாம் நிலை விமர்சர்களாகத் தானே நம்மை அடையாளப்படுத்தும்.

அதை விட, மூன்றாம் மனிதன் ரிரிஎன் தொடர்பாக விமர்சிப்பது போலத் தான் பல கருத்துக்கள் இருக்கின்றன. அது நம் தொலைக்காட்சி, எமக்காகத் தான் செயற்படுகின்றன என்று சிந்திப்பதற்கும், "சந்தர்ப்பம் கிடைக்கின்றது. போட்டுத் தாக்கி எழுதலாம்" என்று சிந்திப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

இதில் சில உறவுகள் பட்டியிட்டு, கேள்விகளைத் தொடுத்திருப்பதை இட்டு வரவேற்புக் கொடுக்கலாம். ஆனால் அதில் உள்ள வார்த்தைத் தரங்கள் தான் இடிக்கின்றன. சொல்லப் போனால் தரங்குறைந்த வார்த்தைப் பிரயோகங்களில் எழுதுகின்ற வார்த்தைகளால், ஒட்டுமொத்த விமர்சனமும் எடுபடாமல் போவதற்கு, சாத்தியம் உண்டு. முக்கியமாக நிகழ்ச்சி தொடர்பான தீர்வுகளையும் வைப்போமாக இருந்தால், அது அவர்களுக்கு நல்லதொரு ஆலோசனையாக இருக்கும்.

எனவே தரமான வார்த்தைகள் மூலம் விமர்சனம் செய்வோம். எம் உறவுகள் என்று விமர்சனத்தை வைப்போம். அதை விடுத்து, ஏதோ கருணாக் கும்பலையோ, டக்ளஸ் தேவானந்தாவையோ கேவலமான விமர்சிப்பது போல விமர்சிப்பது சரியானதா?

இங்கே சோழியன் அண்ணாவிற்கு நக்கலடிப்பது கூட ஆக்கபூர்வ விமர்சனமாக இருக்கின்றதோ என்று ஜயம் கொள்ள வைக்கின்றது.

நாளை

இவையெல்லாம் வெறும் வசனங்கள் ஆகாமல் செயலானால் யாழ் தன்பாட்டில் உருப்படும். அதைப் பார்த்து ரிரிஎன் என்ன உலகத் தமிழரே உருப்பட்டிருவினம்.

Link to comment
Share on other sites

இங்கே நான் எழுதியதை ஒரு நபர், பிரிதொரு தலைப்பில் தனக்குச் சாதகமாக ஆக்க முயல்கின்றார். புதினம், இணையத்தளத்தைப் பற்றிப் பேசியபோதோ, அல்லது நிதர்சனம் குறித்தோ விமர்சனம் வைக்கின்றபோதோ அதை எதிர்த்து தான் கருத்து எழுதியிருக்கின்றேன். எம் ஊடகங்களை, என்றைக்குமே மூன்றாம் நிலையில் வைத்துப் பேசக் கூடாது என்பதே என் எண்ணம்.

ஏனென்றால், இவர்கள் கருணாவையோ, டக்கஸ்சையோ தலையில் வைத்துக் கொண்டாடியதுமில்லை. தங்களின் தேவைக்காக இதுவரை அவர்களைப் புகழ்ந்ததுமில்லை. அதனால் அவர்களின் மீதான குற்றச்சாட்டை அன்பாகத் தெரிவிக்க வேண்டும் என்பதே அவா!

எனவே தான் மேலே தமிழினத் துரோகிகளையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் ஒரு விதமாகவும், தமிழீழத்துக்காக தம்மால செயற்பாட்டில் இருப்பவர்களையும் வேறு ஒரு விதமாகவே கணிக்க வேண்டும்.

அதையே மேலே,

"தரமான வார்த்தைகள் மூலம் விமர்சனம் செய்வோம். எம் உறவுகள் என்று விமர்சனத்தை வைப்போம். அதை விடுத்து, ஏதோ கருணாக் கும்பலையோ, டக்ளஸ் தேவானந்தாவையோ கேவலமான விமர்சிப்பது போல விமர்சிப்பது சரியானதா?"

சொன்னேன்.

ஆனால் தன் சுய தேவைக்காக கேவலமான விமர்சனங்களை வைத்த நபர் இரண்டையும் ஒரே தட்டில் நினைத்துக் கொண்டு விமர்சனம் எழுதுவது அவரின் அறியாமையைக் காட்டுகின்றது. அதிலும் தன்னை நியாயப்படுத்தும் மறைமுக எண்ணம் தொனிக்கின்றது

அண்ணாத்த தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

தேசிய ஊடகங்கள் என்று நீங்கள் சொல்லுற ஊடகங்களாகட்டும் யாழ் களமாகட்டும் ஊடகங்களையோ எதிரிகளையோ துரோகிகளையோ கீழ்த்தரமான உச்சரிக்க அனுமதித்ததன் விளைவைத்தான் இப்ப அனுபவிச்சிட்டு இருக்கிறீங்கள்.

உங்களாலதான் பாருங்கோ இப்படி ஒரு கலாசாரம் இங்கு ஊன்றி வளர்க்கப்பட்டது. துரோகிகளைக் கூட கவரனும் என்றால் அடிப்படை கருத்து நாகரிகத்தை பின்பற்ற வேணும் பாருங்கோ. உங்களுக்கு அதைச் செய்யத் தோன்றல்ல. எதிரி கூட தனது எதிரியை மதிக்கிறான். கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சித்து தன்னைத் தரந்தாழ்திறது கிடையாது.

ஆனால் நீங்கள் மற்றவர்களைத் தரம்தாழ்ந்தி உங்களை உயர்விக்க நினைச்சதுக்கு இப்ப பலனை அனுபவிச்சிட்டு இருக்கிறீங்கள். இதைச் சொன்னவையையும் துரோகிகளாக்கி தனிமடல் வரை விரட்டி கொட்டியவை உங்களை உத்தரமராக்காது பாருங்கோ.

சரி விடுங்கோ சம்பந்தப்பட்டவை உங்களை மன்னிக்கட்டும். ஆனால் எனியாவது எதிரியை துரோகிகளை விமர்சனங்களை நாகரிகமாக உலகம் நோக்கத்தக்க அம்சங்களைக் கொண்டிருக்கத்தக்கதாக உலகம் நாகரிகமாக பார்க்கத் தக்க வகையில முன் வைச்சுப் பழகுங்கோ.

அப்பதான் உங்களைப் பற்றி நீங்களே விமர்சிக்கும் போதும் நியாயமானதுகள் நாகரிகமாக வெளி வர உதவும்.

அண்ணாத்த நீங்கள் விரட்டி விரட்டி கேலி பண்ணின ஆக்களையும் நக்கலடிச்ச ஆக்களையும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க!!!!!!!

நீங்கள் கற்றுக் கொடுத்ததற்கு பலன் அனுபவிக்கிறீங்கள்.

இந்தக் களத்தில் வாற விமர்சனங்களை எதிர்த்து மின்னஞ்சல் அனுப்பிற அளவுக்கு உங்கள் தரம் தாழ்த்தப்பட்டிருக்கு. அதில் உங்கள் பங்களிப்பும் உங்கள் பட்டியிலுள்ள சிலரின் பங்களிப்பும் முக்கியமானது.

இந்த ஞானோதயத்தோடு திருத்திக் கொள்ளுங்கள். இல்லாட்டி யாழின் தரம் தாழ்வதை யாரும் தடுக்க முடியாதிருக்கும். அப்புறம் ரிரிஎன் என்ன எதனையும் பற்றி விமர்சிக்க உங்களுக்கு உள்ள தகுதியே கேள்விக் குறியாகிடும்.

இப்ப கூடப் பாருங்க கருத்துக்கு கருத்து எழுதாமல் கற்பனைக்கு உங்களின் தவறுகளை நியாயப்படுத்துறீங்களே அதுபோல ரிரிஎன்னைத் திட்டுறவைக்கும் ஒரு நியாயம், தூசணத்தில வைக்க, நியாயம் கற்பிக்க வழி செய்து கொடுக்கிறீங்க.

உங்களைத் திருத்திக் கோங்க உலகம் தானே திருந்திக்க முயலும்.

இதில நீங்கள் மட்டுமில்ல உங்கள் பட்டியில இன்னும் இருக்கிற சிலரும் உணர்ந்துக்க நிறைய இருக்குது. யாழின் நன்மைக்குத்தான் பாருங்கோ.

Link to comment
Share on other sites

கறுப்பி மேடம் உங்களுக்கு என்ன சொல்ல, நீங்கள் ஒருவரி வள்ளுவிச்சியாகி தலைப்பெல்லாம் கிறுக்கிட்டே இருங்க மேடம். :(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி மேடம் உங்களுக்கு என்ன சொல்ல, நீங்கள் ஒருவரி வள்ளுவிச்சியாகி தலைப்பெல்லாம் கிறுக்கிட்டே இருங்க மேடம். :(:(

அது என்ன சார் வள்ளுவிச்சியாகி

Link to comment
Share on other sites

அது ஒன்றுமில்ல கறுப்பி மேடம் கிறுக்கிறதில வள்ளுவரை விஞ்சிட்டிங்களா அதுதான் வள்ளுவிச்சியா ஆக்கிட்டம். என்ன வள்ளுவர் வரலாறாகி இருக்கிறார் நீங்களும் இருக்க வாழ்த்துவோமாக. :(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ வாழ்திப்போட்டிங்க உடம்மெல்லாம் புல்லிரிச்சுப் போச்சுங்க.

Link to comment
Share on other sites

கறுப்பி மேடம் உங்களுக்கு என்ன சொல்ல, நீங்கள் ஒருவரி வள்ளுவிச்சியாகி தலைப்பெல்லாம் கிறுக்கிட்டே இருங்க மேடம். :(:(

அடே பொங்க்கோப்பா உமது வருகை எபப்டி பட்டது என்று நீர் நிக்கும் பகுதி சொல்லுது இதுக்கு மேல உமது புனித பிறப்பை நான் சொல்லவா வேண்டும் :P :?: :P :P :P :P

Link to comment
Share on other sites

கறுப்பி மேடம் நீங்கள் அதியமா இருக்கீங்களே. மனிசனுக்கு உரோமந்தான் இருக்கும் உடம்பில ஆனா உங்களுக்கு புல்லும் முளைச்சு இப்ப அரிச்சும் போட்டுதே.

விடியாக் கால தொடங்கி நிக்கிறியள் மேடம் போய் தூங்குங்க.

வாழ்த்தென்று மயங்கலும் ஆகா அகுதே

தூற்றென்று முறுங்கவும் முறுகலும் கூடா சுயமதியோடே.

Link to comment
Share on other sites

அடே பொங்க்கோப்பா உமது வருகை எபப்டி பட்டது என்று நீர் நிக்கும் பகுதி சொல்லுது இதுக்கு மேல உமது புனித பிறப்பை நான் சொல்லவா வேண்டும் :P :?: :P :P :P :P

அண்ணாச்சி கோடு போட்டா தம்பி தாண்டானாம். அண்ணாச்சி ஓவராப் போட்டா தம்பி ஓவர் ஓவர் ஓவரா தாண்டுவானாம்.

அதுசரிங்க அண்ணாச்சி நீங்க மனசில ஒன்று வைச்சு புறந்தில இன்னொன்று பேசுறீங்க அடிக்கடி சுயரூபம் சுயம்புலிங்கமாகுது.

Link to comment
Share on other sites

அண்ணாச்சி கோடு போட்டா தம்பி தாண்டானாம். அண்ணாச்சி ஓவராப் போட்டா தம்பி ஓவர் ஓவர் ஓவரா தாண்டுவானாம்.

அதுசரிங்க அண்ணாச்சி நீங்க மனசில ஒன்று வைச்சு புறந்தில இன்னொன்று பேசுறீங்க அடிக்கடி சுயரூபம் சுயம்புலிங்கமாகுது.

அட எங்க கொப்பரானே நரி ஊருகுள்ளே வாறதே தப்பு இதுக்குள்ளே ஊளையிட்டு கொண்டு வரலாமா?

யாழ்களத்துக்குள்ளேயே வர விடினம் இல்லை

ஆமா நான் மனசில ************ வைச்சு பேசுறன் :P :P :P

****** நீக்கம்-யாழ்பாடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி மேடம் நீங்கள் அதியமா இருக்கீங்களே. மனிசனுக்கு உரோமந்தான் இருக்கும் உடம்பில ஆனா உங்களுக்கு புல்லும் முளைச்சு இப்ப அரிச்சும் போட்டுதே.

விடியாக் கால தொடங்கி நிக்கிறியள் மேடம் போய் தூங்குங்க.

வாழ்த்தென்று மயங்கலும் ஆகா அகுதே

தூற்றென்று முறுங்கவும் முறுகலும் கூடா சுயமதியோடே.

என்னை நல்லாத்தான் கவனிக்கிறியள்

Link to comment
Share on other sites

என்னை நல்லாத்தான் கவனிக்கிறியள்

மேடம் உங்கட ஓரிருவரி வள்ளுவிச்சி வசனங்கள் இங்க பூரா பரப்பிக் கிடந்திச்சா அதுதான் எங்கையோ கண்டமாதிரி இருக்கே என்று பார்த்தம். ஓரிருவரிக்கும் பாண்ட் போட்டுத்தான் பாத்திச்சினம். எங்க பொதுசனம் திருந்திறாப் போல இல்லை. கைவிட்டிட்டினம். முதலுக்கே மோசமாகிடுமோ என்ற பயம் போல. :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாண்ட் போட்டுப்பார்தா என்ன பூதக்கண்ணாடி போட்டு பார்த்தா என்ன எல்லா இடத்துலயும் கறுப்பி பரவி இருப்பா கறுப்பி என்றதால்

Link to comment
Share on other sites

ஆமா யாழில இருக்கிற காத்துக் கறுப்புகள் காணாதென்று நீங்க வேற விடாது கறுப்பு போல விரட்டப் போறீங்களா?

கறுப்பி மேடம் வெள்ளைக்கு கறுப்புத்தான் மச். பாருங்க வெள்ளை பக்கிரவுண்டில கறுப்பு பெண்ட் எவ்வளவு தெளிவென்று.

பிளக் போட்டுக்கு இருக்கிற மரியாதை வைட் போட்டுக்கு இல்ல.

Link to comment
Share on other sites

அண்ணாச்சிக்கு எந்த ஊரு. கதையும் போக்கும் சரியா இல்லையே. அண்ணாச்சி உங்க ஊரு பாசையில எல்லாம் கதைக்கக் கூடாதண்ணாச்சி.

அப்புறங்க அண்ணாச்சி இங்க அக்காச்சி தங்கச்சிகள் கூட இருக்கினம். கொஞ்சம் நாகரிகமா கதைக்கலாமே அண்ணாச்சி.

எப்படி நரி மாதிரி ஊளையிட்டு கொண்டா? :P :P

Link to comment
Share on other sites

என்ன அண்ணாச்சிக்கு நரிக்குணம் மிகுந்திட்டுது போல. எப்ப அண்ணாச்சி மனிசன் குணம் பெறப் போறீங்கள்.

இது பனங்காடா இருக்கும் வரை உங்க கொண்டாட்டம் தான் அண்ணாச்சி.

Link to comment
Share on other sites

என்ன அண்ணாச்சிக்கு நரிக்குணம் மிகுந்திட்டுது போல. எப்ப அண்ணாச்சி மனிசன் குணம் பெறப் போறீங்கள்.

இது பனங்காடா இருக்கும் வரை உங்க கொண்டாட்டம் தான் அண்ணாச்சி.

இப்படி சொல்லி கொண்டு தான் என்னும் மற்ற பகுதிக்குள்ளே வர முடியாம தவம் கிடக்கின்றீர் :P :P

முதால் கழுவுங்கோ பிறகு பார்க்கலாம் நரியை கண்டா ந்ரி மாதிரி பேசினா தான் அதுகளுக்கு புரியும் இல்லாட்டி அதுக்கு ஏன் 5 வைச்சான் கடவுள்? :P :lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.