Jump to content

சீமானின் அய்யா பாரிவேந்தர் தேசியத் தலைவர் பற்றிச் சொல்லியது


Recommended Posts

ஜெயாவிடம் காசு வாங்கி கூலிக்கு மாரடித ஆள் இந்தியாவில் காசு கொடுத்தா எல்லாம் நடக்கும் அதுக்கு ஆதரவு தேவையில்லை பணம் போதும் இசை .

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயாவிடம் காசு வாங்கி கூலிக்கு மாரடித ஆள் இந்தியாவில் காசு கொடுத்தா எல்லாம் நடக்கும் அதுக்கு ஆதரவு தேவையில்லை பணம் போதும் இசை .

ஜெயா அள்ளிக் குடுக்கேக்க நீங்க தானே பக்கத்தில் நின்று பாத்திங்கள்‍.............அண்ணன் சீமான் ஆரம்பம் தொட்டு சொல்லிட்டு வந்தார்    ஜயா வைக்கோவை பாரதிய ஜனதா கட்சி கூட‌ சேர வேண்டாம் என்று , மோடி வந்தா எல்லாம் சரியா போயிடும் என்று ஒற்ற காலில் நின்ட ஆள் தான் வைகோ , இது கூடவா தெரியாமல் யாழில் இருந்து புலம்பிட்டு இருக்கிறீங்க‌......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Link to comment
Share on other sites

மீண்டும் மீண்டும் கூறிய பின்பும் உலக அறிவு அற்றவர்களாக...ஏன் இளையராஜாவை வைத்து நிகழ்வு செய்யும்போது எதிர்க்கவில்லை? மானாட மயிலாட செய்யும்போது எதிர்க்கவில்லை, சேரன் படம் செய்யும் போது எதிர்க்கவில்லை? இலங்கை மாநாட்டுக்கு சென்ற போது எதிர்க்கவில்லை? என அறிவு அற்றவர்களாக கேள்வி கேட்பவர்கள் கேள்வியை யோசித்து கேட்கட்டும் தெரியாவிட்டால் பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்கட்டும்.

இலங்கை மாநாட்டுக்கு பொருளாதார உதவிகள் வழங்கி, இலங்கை சென்று வந்த பின்புதான் லைக்காவின் அனைத்து சிங்கள - லைக்கா உறவு வெளியே தெரிந்தது...இலங்கை மாநாடு நடக்கும் போது அந்த மாநாட்டை புறக்கணிக்கக் கோரி உலக நாடுகள் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. வீதிப் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், இணையவழிப் போராட்டங்கள். கோரிக்கைகள் அனுப்புவது என பலதரப்பட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

ஏன் இந்த எதிர்ப்பு போராட்டங்கள் எல்லாம் இப்பொழுது ஈழத் தமிழர் எனக் கூறும் லைக்காவிற்கு தெரியாதா? புலம்பெயர் மக்கள் போராட்டம் அறியாமல் வளர்ந்தவர்களா லைக்கா? லைக்காவின் வேடம் கலைந்தது எல்லாம் இந்த ஆண்டு தொடக்கத்தில்த்தான் என அனைவரும் முழுமையாக அறிய முடிந்தது. இளையராஜா? மானாட மயிலாட, சேரன் படம் எல்லாம் சென்ற ஆண்டு நடந்து முடிந்தவைகள். லைக்காவுக்கு எதிரான ஆதாரங்களோ லைக்காவுக்கு எதிரான செய்திகளோ இல்லாத காலத்தில் ஏன் எதிர்க்கவில்லை என்றால் என்ன சொல்வது? எப்படி எதிர்த்திருக்க முடியும்?

மீண்டும் கூறுகின்றேன், இளையராஜா, மாநாட மயிலாட ஏனைய எல்லாம் லைக்காவுக்கு எதிரான ஆதாரங்கள் வெளியாவதற்கு முன்பு நடத்தப்பட்ட நிகழ்வுகள். இதைக் கூட அறிந்துகொள்ளாதவர்கள் எதை நடத்தி எதை சாதிக்கப்போகின்றார்களோ தெரியவில்லை.

ஒரு படம் தொடங்கிய பின்புதான் அப்படம் யார் தயாரிக்கின்றார்கள்? யார் நடிகர் என எல்லாம் தெரியும்? படம் தொடங்குவத்கு முன்பேவா எதிர்க்க முடியும்?.

கத்தி படத்தின் முதல் விளம்பரம் லைக்காவின் இலட்சினை இல்லாமல்த்தான் வந்தது, இரண்டாவது மூன்றாவது விளம்பரத்தில்தான் லைக்கா தயாரிக்கின்றது என்ற உண்மையே உலகிற்கு தெரியும், அதன் பின்புதான் மெல்ல மெல்ல எதிர்ப்பு வந்தது.

எதிர்ப்பு வந்தவுடனேயே கருணாமூர்த்தி ஊடகத்தை கூட்டி லைக்காவிற்றும் சிங்கள அரசுக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்து பரிய மலையையே சோற்றில் மறைத்தார். அப்போது தமிழகத்தில் சில மாணவர்களைத் தவிர எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை

அது நடந்து பல மாதங்கள் கடந்த பின்பு எதிர்ப்பு வளர்ந்த பின்புதான், தமிழக உணர்வாளர்களிடம் ஓடினார்கள் லைக்கா குழுவினர், இவர்கள் தமிழக உணர்வாளர்களிடம் ஓடி அடைக்கலம் தேடிய பின்புதான், அவர்களை காரணம் காட்டி எதிர்ப்பை மறைக்க தொடங்கிய பின்புதான், அனைவரது பார்வையும் உணர்வாளர்களை நோக்கி திரும்பியது. இதில் நொடுமாறன் அய்யா அவர்கள் தனக்கு கதை மட்டுமே சொல்லப்பட்டது, தயாரிப்பு தரப்பு பற்றி எதுவும் சொல்லவில்லை என்றார். வைகோ அவர்களை லைக்கா குழு சந்திக்கவே இல்லை. அதன் பின்புதான் சிலரை மட்டும் நோக்கி ஏன்? எப்படி எதிர்ப்பு வளர்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதன் பின்பு நடந்து வருவது அனைவரும் அறிந்ததே.

ஆக எவரும் விஜய் படம் வரட்டும் எதிர்க்கலாம் எனக் காத்திருக்கவில்லை, அவருக்கும் புலம்பெயர் மக்களுக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா? காத்திருந்து எதிர்க்க? லைக்காவின் பெயர் வந்தவுடன்தான் எதிர்ப்பும் வந்தது. இனம், மெட்ராஸ் கபே, குப்பி, மல்லி, போன்ற படங்கள் எல்லாம் வந்த பின்பு எதிர்க்கப்பட்டவையா அல்லது படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே எதிர்க்கப்பட்ட படங்களா? எல்லா படங்களும் படப்பிடிப்பு முடிந்து விளம்பரங்கள் வந்த பின்புதான் எதிர்க்கப்பட்டது

அப்படியென்றால் ஏன் புலிப்பார்வை படத்தை மட்டும் படப்பிடிப்பு முடியும் வரை காத்திருந்துவிட்டு அதை வெட்டு இதை வெட்டு என கேட்க வேண்டும். படம் தயாரிக்கும் முன்பே இதைத் தடுத்திருந்தால் இன்று பாலச்சந்திரன் போன்ற உருவத்தைக் கொண்ட சிறுவன் துப்பாக்கியை கட்டிப்பிடித்த படங்கள் சிங்கள அரசுக்கு கிடைத்திருக்குமா?. இன்று அவன் அதை வைத்து தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கிவிட்டான்.. இதோ தமிழக மக்களே பாலச்சந்திரன் சிறுவர் போராளி என அறிவித்திருக்கின்றார்கள், என படம் போட்டு காட்டுவான். இனி நீங்கள் மாற்றப் போகும் காட்சிகள் அவனுக்கு இனித் தேவைப்படாது, ஏனெனில் அவனுக்கு தேவையானது அவனுக்கு கிடைத்துவிட்டது. 

கூகுல் உட்பட அனைத்து தேடல் இணையங்கள் பிற இணையங்களில் இருந்தும் பாலச்சந்திரன் போராளியாக சித்தரிக்கப்பட்ட படங்களை அகற்ற உங்களால் முடியுமா? அதை அய்யா?!!! பாரிவேந்தரும், பிரவின் காந்தியும் செய்து முடிப்பார்களா? பதில் சொல்லுங்கள்?

லைக்காவிற்கு எதிராக ஏன் புலம்பெயர் மக்கள் எதிர்க்கவில்லை…. எதிர்க்கவில்லை என்றால், புலம்பெயர் மக்களுக்கு எதை எப்படி எதிர்க்க வேண்டும் என தெரியும், வீதியில் இறங்கி போராடியிருந்தால்க்கூட இந்த அளவுக்கு ஆதரவு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே? மிக நுட்பமாக எங்கு அடித்தால் என்ன விளைவு வரும் என தெரிந்து அடித்தார்கள்... அடித்த அடியில் நினைத்துக் கூட பார்க்க முடியாததெல்லாம் நடந்துகொண்டிருக்கின்றது

லைக்காவின் சந்தையில் 100 வீதத்தில் 5 முதல் 15 சதவிகிதம் தமிழர்கள் மட்மே லைக்காவிற்கு நுகர்வோர்களாக இருக்கின்றார்கள். இதில் தமிழர்கள் என்று லைக்கா கணக்கு பார்க்காது, இலங்கையர்கள் என்றே பார்க்கும் ஏனெனில் அதில் சிங்கள நுகர்வோரும் அடங்குவார்கள். ஏனையவர்கள் புலம்பெயர்ந்து வாழும் பல நாட்டைச் சேர்ந்தவர்கள். 

அது மட்டுமல்லாமல் ஒரு தமிழர் நிறுவனத்திற்கு எதிராக தமிழர்களே வீதியில் போராடுவது தமிழ் இனத்திற்கு நேர்ந்த கொடுமைகளில் ஒன்று, உங்களையும் வீதியில் இறங்கி போராடுங்கள் என கேட்கவில்லை, தமிழகத்தில் வீதியில் இறங்கி போராடமலேயே இதை வீழ்த்தலாம். வீதியில் போராடுவது மட்டும்தான் போராட்டமா? அல்லது விஜய்க்கோ, முருகதாசுக்கோ எதிராக போராடுங்கள் எனக் கேட்கவில்லை, பொது எதிரியான சிங்கள அரசுடன் கூட்டு வைத்து தொழில் செய்து, சிங்கள அரசைப் பொருளாதாரா ரீதியில் வளர்த்துவிடும் லைக்கா நிறுவனத்துக்கு எதிராகத்தான் போராடக் கேட்கின்றோம்.

ஆனால் வளரும் போது மட்டும் தமிழர்களை நம்பி வளர்ந்த நிறுவனம் இன்று வளர்ந்தவுடன் தமிழினத்திற்கு எதிரானவனுடன் கூட்டு சேர்ந்து சிங்கள அரசை பலப்படுத்துகின்றது.

லைக்காவிற்கு எதிராக புலம்பெயர் மக்கள் போராடாமலா? போராட்டம் இவ்வளவு தூரம் பூதமாக வளர்ந்து கத்தி கழுத்திற்கு வந்து நிற்கின்றது?

லைக்கா இன்று புலம்பெயர் மண்ணில் மக்கள் நினைத்தாலும் முடக்க முடியாத நிறுவனமாக மாறிய பின்பே தன்னுடைய வேலையை காட்டியுள்ளது. இந்த நிலை நாளை தமிழகத்திலும் நடக்காமல் இருக்கவே முன்னெச்சரிக்கையாக பல தடைகளை ஏற்படுத்தி வருகின்றோம்.

நாளை ஏர்டெல் போல் ரிலையன்ஸ் போல் பலமாக காலுன்றிய பின்பு லைக்காவின் துரோகங்கள் முழுமையாக அறிந்த பின்பு விரட்ட நினைத்தாலும் விரட்ட முடியாது.

மேலும் லைக்கா முதலாளி தமிழகம் வந்து தனக்கும் ராஜபக்சவுக்கும் தொடர்பு இல்லை என்றவுடன் தமிழக உணர்வாளர்கள் அடங்கிவிடுவார்களா? அல்லது அடங்க வேண்டுமா? லைக்கா முதலாளி தமிழகம் வருவாராம் அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றால் எப்படி? அவர் ஆம் என எனக்கும் ராஜபக்சவுக்கும் தொடர்பு உள்ளது என ஒத்துக்கொள்வாரா?. நாளை லைக்கா முதலாளி தமிழகம் வந்து ராஜபக்வுடன் பல பில்லியன் வர்த்தகம் செய்கின்றேன், கத்தி படத்திற்காக நான் பல பில்லியன் வியாபாரத்தை ராஜபக்சவுடன் நிறுத்திக்கொள்கின்றேன் என அறிவிப்பாரா?

நீங்கள் லிபாராவிற்கு ஆதரவு அதனால்த்தான் இவ்வளவு எதிர்க்கீன்றீர்கள் என்கிறார்கள், நேர்மையானவர் என்றால் லிபாராவையும் சேர்த்து எதிர்க்க வேண்டும் என்கின்றார்கள்?!!! ஆனால் ஏன் லிபாராவை எதிர்க்க வேண்டும் என்ன ஆதாரம் உண்டு எனக் கேட்டால... அவர்களும் தொண்டு நிறுவனம் வைத்து உதவுகின்றார்கள்தானே அது மட்டும் சிங்கள அரசின் ஆதரவு இல்லாமல் முடியுமா என கேட்கின்றார்கள்.

புலம்பெயர் தமிழர்கள் பலர், தனிப்பட்ட ரீதியாகவும், அமைப்புகள் ரீதியாகவும் பல தொண்டு நிறுவனங்களை நிறுவி அங்குள்ள மக்களுக்கு உதவுகின்றார்கள். அவர்கள் அனைவரையும் ராஜபக்சவுடன் தொடர்பு உள்ளது என கூற முடியுமா? லைக்காவே....லிபாராவோ அங்கு வைத்துள்ள தொண்டு நிறுவனங்களைப் பற்றியது அல்ல பிரச்சனை. யார் சிங்கள அரசை, அனைத்து நாடுகளிலும், அனைத்து நிகழ்வுகளிலும், தமிழர்கள் எதிர்த்த புறக்கணித்த விடயங்களுக்கு எதிராக ஆதரவு வழங்கி சிங்கள அரசுடன் கைகோர்த்து யார் வியாபாரம் செய்கின்றார்கள் என்பதுதான் பிரச்சனை.

லைக்காவை ஈடாக லிபாராவும் சிங்கள அரசுடன் வியாபாரம் செய்கின்றது, சிங்கள அரசின் சுதந்திரதினம் உட்பட அனைத்து நிகழ்வுகளுக்கு ஆதரவு வழங்குகின்றது, என ஆதாரங்களை நாங்கள் வெளியிட்டது போல், போதும் போதும் என சொல்லும் அளவுக்கு ஆதாரங்களை வெளியிடுங்கள் லிபாராவையும் எதிர்ப்போம்.

நாம் இதே லிபாராவை பிரித்தானியாவில் ( சென்ற மார்ச் மாதம் 2014) எதிர்த்து போராடி வெற்றியும் பெற்றவர்கள் என்பதை இலகுவில் மறந்து அல்லது மறைத்து விடுகின்றார்கள்.

இலங்கை சார்பாக லைக்கா ஊடாக பணம் பெற்ற பின்புதான் பிரித்தானியா பிரதமர் இலங்கை மாநாட்டுக்குச் சொன்றார் என்று பிரித்தானியா பாராளுமன்றத்திலேயே பெரும் பிரச்சனை வெடித்தது இதையெல்லாம் லைக்காவை ஆதரிக்கும் எவரும் அறிந்திருக்கவில்லையா?

அதைவிடுத்து இவ்வளவு ஆதாரங்கள் லைக்காவுக்கு எதிராக வந்தபின்பும் அதை வெளியிட எவரும் தயாராக இல்லை மாறாக போராடும் எங்கள் மீது அநீதியாக குற்றம் சுமத்துவது அசிங்கத்தின் உச்சமே. உலக விபரங்கள் அறிந்த வயதில் இருந்தே எமது போராட்டம் பற்றியும் எதை எதிர்க்க வேண்டும் எதை ஆதரிக்க வேண்டும் என நன்கு அறிந்தவர்கள் நாம். இதற்கு மட்டும்தான் நாம் போராடுகின்றோமா? நாம் எதற்கெல்லாம் போராடினோம், போராடிக்கொண்டிருக்கின்றோம் என உலகம் அறியும்.

 
Link to comment
Share on other sites

ஜெயாவிடம் காசு வாங்கி கூலிக்கு மாரடித ஆள் இந்தியாவில் காசு கொடுத்தா எல்லாம் நடக்கும் அதுக்கு ஆதரவு தேவையில்லை பணம் போதும் இசை .

இதிலிருந்து ஜெயா சுய சிந்தனை அற்றவர் என்று தெரிகிறது. :huh: மக்கள் ஆதரவு இல்லாத சீமானுக்கு ஏன் பணம் கொடுத்தார்? ஒருவேளை வருமான வரித்துறைக்கு கணக்குக் காட்டுறதுக்கா இருக்குமோ.. :unsure: இருக்கும்.. இருக்கும்.. :D

Link to comment
Share on other sites

 

மீண்டும் மீண்டும் கூறிய பின்பும் உலக அறிவு அற்றவர்களாக...ஏன் இளையராஜாவை வைத்து நிகழ்வு செய்யும்போது எதிர்க்கவில்லை? மானாட மயிலாட செய்யும்போது எதிர்க்கவில்லை, சேரன் படம் செய்யும் போது எதிர்க்கவில்லை? இலங்கை மாநாட்டுக்கு சென்ற போது எதிர்க்கவில்லை? என அறிவு அற்றவர்களாக கேள்வி கேட்பவர்கள் கேள்வியை யோசித்து கேட்கட்டும் தெரியாவிட்டால் பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்கட்டும்.

இலங்கை மாநாட்டுக்கு பொருளாதார உதவிகள் வழங்கி, இலங்கை சென்று வந்த பின்புதான் லைக்காவின் அனைத்து சிங்கள - லைக்கா உறவு வெளியே தெரிந்தது...இலங்கை மாநாடு நடக்கும் போது அந்த மாநாட்டை புறக்கணிக்கக் கோரி உலக நாடுகள் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. வீதிப் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், இணையவழிப் போராட்டங்கள். கோரிக்கைகள் அனுப்புவது என பலதரப்பட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

ஏன் இந்த எதிர்ப்பு போராட்டங்கள் எல்லாம் இப்பொழுது ஈழத் தமிழர் எனக் கூறும் லைக்காவிற்கு தெரியாதா? புலம்பெயர் மக்கள் போராட்டம் அறியாமல் வளர்ந்தவர்களா லைக்கா? லைக்காவின் வேடம் கலைந்தது எல்லாம் இந்த ஆண்டு தொடக்கத்தில்த்தான் என அனைவரும் முழுமையாக அறிய முடிந்தது. இளையராஜா? மானாட மயிலாட, சேரன் படம் எல்லாம் சென்ற ஆண்டு நடந்து முடிந்தவைகள். லைக்காவுக்கு எதிரான ஆதாரங்களோ லைக்காவுக்கு எதிரான செய்திகளோ இல்லாத காலத்தில் ஏன் எதிர்க்கவில்லை என்றால் என்ன சொல்வது? எப்படி எதிர்த்திருக்க முடியும்?

மீண்டும் கூறுகின்றேன், இளையராஜா, மாநாட மயிலாட ஏனைய எல்லாம் லைக்காவுக்கு எதிரான ஆதாரங்கள் வெளியாவதற்கு முன்பு நடத்தப்பட்ட நிகழ்வுகள். இதைக் கூட அறிந்துகொள்ளாதவர்கள் எதை நடத்தி எதை சாதிக்கப்போகின்றார்களோ தெரியவில்லை.

ஒரு படம் தொடங்கிய பின்புதான் அப்படம் யார் தயாரிக்கின்றார்கள்? யார் நடிகர் என எல்லாம் தெரியும்? படம் தொடங்குவத்கு முன்பேவா எதிர்க்க முடியும்?.

கத்தி படத்தின் முதல் விளம்பரம் லைக்காவின் இலட்சினை இல்லாமல்த்தான் வந்தது, இரண்டாவது மூன்றாவது விளம்பரத்தில்தான் லைக்கா தயாரிக்கின்றது என்ற உண்மையே உலகிற்கு தெரியும், அதன் பின்புதான் மெல்ல மெல்ல எதிர்ப்பு வந்தது.

எதிர்ப்பு வந்தவுடனேயே கருணாமூர்த்தி ஊடகத்தை கூட்டி லைக்காவிற்றும் சிங்கள அரசுக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்து பரிய மலையையே சோற்றில் மறைத்தார். அப்போது தமிழகத்தில் சில மாணவர்களைத் தவிர எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை

அது நடந்து பல மாதங்கள் கடந்த பின்பு எதிர்ப்பு வளர்ந்த பின்புதான், தமிழக உணர்வாளர்களிடம் ஓடினார்கள் லைக்கா குழுவினர், இவர்கள் தமிழக உணர்வாளர்களிடம் ஓடி அடைக்கலம் தேடிய பின்புதான், அவர்களை காரணம் காட்டி எதிர்ப்பை மறைக்க தொடங்கிய பின்புதான், அனைவரது பார்வையும் உணர்வாளர்களை நோக்கி திரும்பியது. இதில் நொடுமாறன் அய்யா அவர்கள் தனக்கு கதை மட்டுமே சொல்லப்பட்டது, தயாரிப்பு தரப்பு பற்றி எதுவும் சொல்லவில்லை என்றார். வைகோ அவர்களை லைக்கா குழு சந்திக்கவே இல்லை. அதன் பின்புதான் சிலரை மட்டும் நோக்கி ஏன்? எப்படி எதிர்ப்பு வளர்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதன் பின்பு நடந்து வருவது அனைவரும் அறிந்ததே.

ஆக எவரும் விஜய் படம் வரட்டும் எதிர்க்கலாம் எனக் காத்திருக்கவில்லை, அவருக்கும் புலம்பெயர் மக்களுக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா? காத்திருந்து எதிர்க்க? லைக்காவின் பெயர் வந்தவுடன்தான் எதிர்ப்பும் வந்தது. இனம், மெட்ராஸ் கபே, குப்பி, மல்லி, போன்ற படங்கள் எல்லாம் வந்த பின்பு எதிர்க்கப்பட்டவையா அல்லது படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே எதிர்க்கப்பட்ட படங்களா? எல்லா படங்களும் படப்பிடிப்பு முடிந்து விளம்பரங்கள் வந்த பின்புதான் எதிர்க்கப்பட்டது

அப்படியென்றால் ஏன் புலிப்பார்வை படத்தை மட்டும் படப்பிடிப்பு முடியும் வரை காத்திருந்துவிட்டு அதை வெட்டு இதை வெட்டு என கேட்க வேண்டும். படம் தயாரிக்கும் முன்பே இதைத் தடுத்திருந்தால் இன்று பாலச்சந்திரன் போன்ற உருவத்தைக் கொண்ட சிறுவன் துப்பாக்கியை கட்டிப்பிடித்த படங்கள் சிங்கள அரசுக்கு கிடைத்திருக்குமா?. இன்று அவன் அதை வைத்து தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கிவிட்டான்.. இதோ தமிழக மக்களே பாலச்சந்திரன் சிறுவர் போராளி என அறிவித்திருக்கின்றார்கள், என படம் போட்டு காட்டுவான். இனி நீங்கள் மாற்றப் போகும் காட்சிகள் அவனுக்கு இனித் தேவைப்படாது, ஏனெனில் அவனுக்கு தேவையானது அவனுக்கு கிடைத்துவிட்டது. 

கூகுல் உட்பட அனைத்து தேடல் இணையங்கள் பிற இணையங்களில் இருந்தும் பாலச்சந்திரன் போராளியாக சித்தரிக்கப்பட்ட படங்களை அகற்ற உங்களால் முடியுமா? அதை அய்யா?!!! பாரிவேந்தரும், பிரவின் காந்தியும் செய்து முடிப்பார்களா? பதில் சொல்லுங்கள்?

லைக்காவிற்கு எதிராக ஏன் புலம்பெயர் மக்கள் எதிர்க்கவில்லை…. எதிர்க்கவில்லை என்றால், புலம்பெயர் மக்களுக்கு எதை எப்படி எதிர்க்க வேண்டும் என தெரியும், வீதியில் இறங்கி போராடியிருந்தால்க்கூட இந்த அளவுக்கு ஆதரவு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே? மிக நுட்பமாக எங்கு அடித்தால் என்ன விளைவு வரும் என தெரிந்து அடித்தார்கள்... அடித்த அடியில் நினைத்துக் கூட பார்க்க முடியாததெல்லாம் நடந்துகொண்டிருக்கின்றது

லைக்காவின் சந்தையில் 100 வீதத்தில் 5 முதல் 15 சதவிகிதம் தமிழர்கள் மட்மே லைக்காவிற்கு நுகர்வோர்களாக இருக்கின்றார்கள். இதில் தமிழர்கள் என்று லைக்கா கணக்கு பார்க்காது, இலங்கையர்கள் என்றே பார்க்கும் ஏனெனில் அதில் சிங்கள நுகர்வோரும் அடங்குவார்கள். ஏனையவர்கள் புலம்பெயர்ந்து வாழும் பல நாட்டைச் சேர்ந்தவர்கள். 

அது மட்டுமல்லாமல் ஒரு தமிழர் நிறுவனத்திற்கு எதிராக தமிழர்களே வீதியில் போராடுவது தமிழ் இனத்திற்கு நேர்ந்த கொடுமைகளில் ஒன்று, உங்களையும் வீதியில் இறங்கி போராடுங்கள் என கேட்கவில்லை, தமிழகத்தில் வீதியில் இறங்கி போராடமலேயே இதை வீழ்த்தலாம். வீதியில் போராடுவது மட்டும்தான் போராட்டமா? அல்லது விஜய்க்கோ, முருகதாசுக்கோ எதிராக போராடுங்கள் எனக் கேட்கவில்லை, பொது எதிரியான சிங்கள அரசுடன் கூட்டு வைத்து தொழில் செய்து, சிங்கள அரசைப் பொருளாதாரா ரீதியில் வளர்த்துவிடும் லைக்கா நிறுவனத்துக்கு எதிராகத்தான் போராடக் கேட்கின்றோம்.

ஆனால் வளரும் போது மட்டும் தமிழர்களை நம்பி வளர்ந்த நிறுவனம் இன்று வளர்ந்தவுடன் தமிழினத்திற்கு எதிரானவனுடன் கூட்டு சேர்ந்து சிங்கள அரசை பலப்படுத்துகின்றது.

லைக்காவிற்கு எதிராக புலம்பெயர் மக்கள் போராடாமலா? போராட்டம் இவ்வளவு தூரம் பூதமாக வளர்ந்து கத்தி கழுத்திற்கு வந்து நிற்கின்றது?

லைக்கா இன்று புலம்பெயர் மண்ணில் மக்கள் நினைத்தாலும் முடக்க முடியாத நிறுவனமாக மாறிய பின்பே தன்னுடைய வேலையை காட்டியுள்ளது. இந்த நிலை நாளை தமிழகத்திலும் நடக்காமல் இருக்கவே முன்னெச்சரிக்கையாக பல தடைகளை ஏற்படுத்தி வருகின்றோம்.

நாளை ஏர்டெல் போல் ரிலையன்ஸ் போல் பலமாக காலுன்றிய பின்பு லைக்காவின் துரோகங்கள் முழுமையாக அறிந்த பின்பு விரட்ட நினைத்தாலும் விரட்ட முடியாது.

மேலும் லைக்கா முதலாளி தமிழகம் வந்து தனக்கும் ராஜபக்சவுக்கும் தொடர்பு இல்லை என்றவுடன் தமிழக உணர்வாளர்கள் அடங்கிவிடுவார்களா? அல்லது அடங்க வேண்டுமா? லைக்கா முதலாளி தமிழகம் வருவாராம் அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றால் எப்படி? அவர் ஆம் என எனக்கும் ராஜபக்சவுக்கும் தொடர்பு உள்ளது என ஒத்துக்கொள்வாரா?. நாளை லைக்கா முதலாளி தமிழகம் வந்து ராஜபக்வுடன் பல பில்லியன் வர்த்தகம் செய்கின்றேன், கத்தி படத்திற்காக நான் பல பில்லியன் வியாபாரத்தை ராஜபக்சவுடன் நிறுத்திக்கொள்கின்றேன் என அறிவிப்பாரா?

நீங்கள் லிபாராவிற்கு ஆதரவு அதனால்த்தான் இவ்வளவு எதிர்க்கீன்றீர்கள் என்கிறார்கள், நேர்மையானவர் என்றால் லிபாராவையும் சேர்த்து எதிர்க்க வேண்டும் என்கின்றார்கள்?!!! ஆனால் ஏன் லிபாராவை எதிர்க்க வேண்டும் என்ன ஆதாரம் உண்டு எனக் கேட்டால... அவர்களும் தொண்டு நிறுவனம் வைத்து உதவுகின்றார்கள்தானே அது மட்டும் சிங்கள அரசின் ஆதரவு இல்லாமல் முடியுமா என கேட்கின்றார்கள்.

புலம்பெயர் தமிழர்கள் பலர், தனிப்பட்ட ரீதியாகவும், அமைப்புகள் ரீதியாகவும் பல தொண்டு நிறுவனங்களை நிறுவி அங்குள்ள மக்களுக்கு உதவுகின்றார்கள். அவர்கள் அனைவரையும் ராஜபக்சவுடன் தொடர்பு உள்ளது என கூற முடியுமா? லைக்காவே....லிபாராவோ அங்கு வைத்துள்ள தொண்டு நிறுவனங்களைப் பற்றியது அல்ல பிரச்சனை. யார் சிங்கள அரசை, அனைத்து நாடுகளிலும், அனைத்து நிகழ்வுகளிலும், தமிழர்கள் எதிர்த்த புறக்கணித்த விடயங்களுக்கு எதிராக ஆதரவு வழங்கி சிங்கள அரசுடன் கைகோர்த்து யார் வியாபாரம் செய்கின்றார்கள் என்பதுதான் பிரச்சனை.

லைக்காவை ஈடாக லிபாராவும் சிங்கள அரசுடன் வியாபாரம் செய்கின்றது, சிங்கள அரசின் சுதந்திரதினம் உட்பட அனைத்து நிகழ்வுகளுக்கு ஆதரவு வழங்குகின்றது, என ஆதாரங்களை நாங்கள் வெளியிட்டது போல், போதும் போதும் என சொல்லும் அளவுக்கு ஆதாரங்களை வெளியிடுங்கள் லிபாராவையும் எதிர்ப்போம்.

நாம் இதே லிபாராவை பிரித்தானியாவில் ( சென்ற மார்ச் மாதம் 2014) எதிர்த்து போராடி வெற்றியும் பெற்றவர்கள் என்பதை இலகுவில் மறந்து அல்லது மறைத்து விடுகின்றார்கள்.

இலங்கை சார்பாக லைக்கா ஊடாக பணம் பெற்ற பின்புதான் பிரித்தானியா பிரதமர் இலங்கை மாநாட்டுக்குச் சொன்றார் என்று பிரித்தானியா பாராளுமன்றத்திலேயே பெரும் பிரச்சனை வெடித்தது இதையெல்லாம் லைக்காவை ஆதரிக்கும் எவரும் அறிந்திருக்கவில்லையா?

அதைவிடுத்து இவ்வளவு ஆதாரங்கள் லைக்காவுக்கு எதிராக வந்தபின்பும் அதை வெளியிட எவரும் தயாராக இல்லை மாறாக போராடும் எங்கள் மீது அநீதியாக குற்றம் சுமத்துவது அசிங்கத்தின் உச்சமே. உலக விபரங்கள் அறிந்த வயதில் இருந்தே எமது போராட்டம் பற்றியும் எதை எதிர்க்க வேண்டும் எதை ஆதரிக்க வேண்டும் என நன்கு அறிந்தவர்கள் நாம். இதற்கு மட்டும்தான் நாம் போராடுகின்றோமா? நாம் எதற்கெல்லாம் போராடினோம், போராடிக்கொண்டிருக்கின்றோம் என உலகம் அறியும்.

 

 

நன்றி ஐயா உங்கள் அரசியல் பார்வைக்கு .....................
 
உண்மையில் எதிர்ப்போம் அனைவரையும் எதிர்ப்போம் ,இன்னும் கொஞ்சநாட்களில் படம் பார்க்கும் ,அனைத்து மக்களையும் எதிர்ப்போம் ...இந்தப்படத்தில் நடிக்கும் அனைவரையும் எதிர்ப்போம் ..........இந்தப்படத்தை தயாரித்த தமிழக மக்களை எதிர்ப்போம் ........அதற்கு மேல் சீமானை எதிர்த்து ஓட ஓட விரட்டுவோம் ..............எமக்கு யாரும்  தேவை இல்லை ......ஒரு கணணி இருந்தால் போதும் .............எம் இலக்கை அடைய ,,,,,,,,,, :(
 
இந்த இடத்தில் மீண்டும் என் தேசியத்தலைவரின் சிந்தனைகளையும் ,அவருடன் இருந்த தெளிவான ,தூரப்பார்வை நோக்கிய அறிஞ்சர்களை தேடுகிறேன் ...............ஏனனில் அந்த இடைவெளியை நிரப்ப இங்கே இன்னும் யாரையும் நான் காணாதபடியினால்.
Link to comment
Share on other sites

இங்கே சீமான் சொல்லும் விடயங்கள் தவறாக இருக்கும் போது அவற்றைச் சுட்டிக் காட்டுவது, அவரை எதிர்ப்பதாகாது. புலமும், தமிழ் நாடும் சேர்ந்து ஒரே நோக்கில் இயங்க வேண்டும் என்னும் நோக்கத்தில் இருந்தே இந்த விமரிசனங்கள் முன் வைக்கப்படுகின்றன.

 

சீமான் ஆட்ச்சியைப் பிடித்த பின் என்ன செய்யப் போகிறார் என்பதை தெளிவு படுத்த வேண்டும். ஏனெனில் செயலலிதா அம்மையாரால் செய்ய முடியாத எதை இவர்  எப்படிச் செய்ய்யப் போகிறார் என்று தெளிவு படுத்த வேண்டும். மேலும் ராகபசவுடன் கூட்டணி வைக்கும் எவரையும் தமிழத் தேசிய விடுதலையை முன் நிறுத்தும் எவரும் எதிர்க்க வேண்டும். இவற்றில் இருந்து தான் ஒருவரின் உண்மையான நோக்கத்தை நாங்கள் புரிந்து கொள்ள முடியும்.

 

மேலும் மேலே எழுதியது, முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது பிரித்தானியாவில் பல நாட்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த்த பரமேஸ்வரன் நான் அல்ல. ஆகவே முன் வைக்கும் கருத்துக்களுக்கு பதில் சொல்லாமால் இணையப் போராளி போன்ற பட்டங்களை முன் வைக்காமால் , கருத்தை கருத்தாகப் பாருங்கள்.

 

சீமான் விடும் பிழைகளை திருத்தி, தனது போராட்டப் பாதையை, தாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை தெளிவாக விளக்குவார் ஆகின் அவருக்கு ஆதரவு தர தமிழத் தேசியத்தை நேசிக்கும் எவரும் பின் நிற்கப் போவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ ஐயா பாஜகவுடன் கூட்டணி..

சு. சாமி (பாஜக) மகிந்தருடன் கூட்டணி.. ஆகவே,

வைகோ ஐயா மகிந்தருடன் கூட்டணி.. :o

- சீமான் எதிர்ப்பாளர்களின் தேற்றம்.

:D

 

அடப்பாவி :lol:

நானும் வைக்கோவின் தம்பி

அப்போ

நான்......??? :D

Link to comment
Share on other sites

இதிலிருந்து ஜெயா சுய சிந்தனை அற்றவர் என்று தெரிகிறது. :huh: மக்கள் ஆதரவு இல்லாத சீமானுக்கு ஏன் பணம் கொடுத்தார்? ஒருவேளை வருமான வரித்துறைக்கு கணக்குக் காட்டுறதுக்கா இருக்குமோ.. :unsure: இருக்கும்.. இருக்கும்.. :D

அண்ணே ஓட்டுக்கு பணம் கொடுக்க நாலு அல்லக்கை வேணும் இதுகூட தெரியாமல் என்ன அரசியல் பேசி நீங்க எப்ப அரசியல்வாதி ஆகி ஆ .. :icon_idea:

Link to comment
Share on other sites

அண்ணே இங்கு கருத்தை சொல்பவர் அதே கருத்தில் நின்றும் நிக்கிறார் ஆனால் அவர்கள் அப்படி இல்லை சந்தர்ப்பம் பார்த்து மாறி மாறி அரசியலுக்கு பேசுவது நல்லது அல்லா எதிரியை விட துரோகி ஆபத்தானவன் .

இது எல்லாம் விளங்கும் அளவிற்கு சட்டியில் இல்லை   :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே ஓட்டுக்கு பணம் கொடுக்க நாலு அல்லக்கை வேணும் இதுகூட தெரியாமல் என்ன அரசியல் பேசி நீங்க எப்ப அரசியல்வாதி ஆகி ஆ .. :icon_idea:

R6GiF.jpg

Link to comment
Share on other sites

அண்ணே ஓட்டுக்கு பணம் கொடுக்க நாலு அல்லக்கை வேணும் இதுகூட தெரியாமல் என்ன அரசியல் பேசி நீங்க எப்ப அரசியல்வாதி ஆகி ஆ .. :icon_idea:

உண்மை.. ஜெயா கட்சியில் ஆட்கள் இல்லைதானே.. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை.. ஜெயா கட்சியில் ஆட்கள் இல்லைதானே.. :wub:

 

 

நமது கண்ணுக்கு குத்தும் அளவுக்கு வளர்ச்சி  இல்லையே.. :wub:

Link to comment
Share on other sites

ஆமாம் ஆமாம் சீமானின் மைக் பிடிப்பால் தான் தமிழகத்தில் எல்லோரும் எழுச்சி கண்டிருக்கினம் இதை நான் வழி மொழிகிறேன்

 

 

66498a3ff116afd585f97bc96c3ff684

Link to comment
Share on other sites

இந்த  கொழுப்பெடுத்த குணத்தாலைதான் தமிழனை உலகம் எல்லாம் சேர்ந்து அடிச்சது... !!    சிங்களவனிட்டை இருந்து இதுகள் எதையும் கற்றுக்கொள்ள போவதும் இல்லை... 

 

நட்பு எண்டு யாரையும் வைச்சிருக்க தெரியாது....!!   அப்பிடி  தானாக வாறவனிலையும் வந்து உதவுகிறவனிலையும்  நொட்டை ...   

 

இலங்கை பொருளாதாரத்தை கையிலை எடுக்க வேணும் எண்டு எல்லாருக்கும்  ஆசை ...    ஆனால் அதை செய்ய கூடியவனை அடிச்சு துரத்தி எதிரி கூடாரத்துக்கை  நிரந்தரமாக  சேர்க்கிற அடி முட்டாள் தனம்... 

 

இப்படி ஒரு இனம் அழிஞ்சு போனால் என்ன வாழ்ந்தால் தான் என்ன....??   இப்படியே போனால் யாரும் சீண்டக்கூடாத இனமாக இந்த கேடு கெட்ட தமிழ் இனம் மட்டும் தான் இருக்கும்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் தயாண்ணா எங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் எது செய்தாலும் அவர்களை அரவணைத்துப் போக வேண்டும். இதே வேண்டப்படாதவர்கள் என்டால் துரோகிப் பட்டம் கொடுத்து மண்டையில் போடுவோம் இல்லையா?

Link to comment
Share on other sites

ஓம் தயாண்ணா எங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் எது செய்தாலும் அவர்களை அரவணைத்துப் போக வேண்டும். இதே வேண்டப்படாதவர்கள் என்டால் துரோகிப் பட்டம் கொடுத்து மண்டையில் போடுவோம் இல்லையா?

என்ன ரதி தயா அண்ணை என்று விழித்து நீங்கள் எழுதிய கருத்து இந்த உலகத்தில் வாழும் அனைத்து மனிதருக்கும் பொருந்தும்.

Link to comment
Share on other sites

ஓம் தயாண்ணா எங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் எது செய்தாலும் அவர்களை அரவணைத்துப் போக வேண்டும். இதே வேண்டப்படாதவர்கள் என்டால் துரோகிப் பட்டம் கொடுத்து மண்டையில் போடுவோம் இல்லையா?

 

துரோகிகள் எண்டு லைக்காவை நீங்கள் எல்லாம் சொல்லும் அளவுக்கு  என்ன தவறு செய்தது சீமான்  அதை கண்டிக்க என்பதை மட்டும் சொல்லுங்கள்  உங்கள் வியாக்கியானங்களுக்கு நான் பதில் தருகிறேன்... 

 

மற்றது வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்பது அவர்களின் நடத்தை சம்பந்த பட்டது... !!    இதில்  வேண்டாதவர்கள் என்ன தவறு செய்தார்கள் எனும் அடிப்படையிலையே  துரோகியா இல்லை  தியாகியா என்பது தீர்மானிக்க படும்... 

 

நான் யாரையும் தியாகி எண்று சொல்லவில்லை...   சீமான் உட்பட ...   !!  

 

வழமையான  உங்களின் கனவு கண்ட விடயத்துக்காக எல்லாம் நான் பதில் சொல்ல முடியாமைக்கு வருந்துகிறேன்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

துரோகிகள் எண்டு லைக்காவை நீங்கள் எல்லாம் சொல்லும் அளவுக்கு என்ன தவறு செய்தது சீமான் அதை கண்டிக்க என்பதை மட்டும் சொல்லுங்கள் உங்கள் வியாக்கியானங்களுக்கு நான் பதில் தருகிறேன்...

மற்றது வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்பது அவர்களின் நடத்தை சம்பந்த பட்டது... !! இதில் வேண்டாதவர்கள் என்ன தவறு செய்தார்கள் எனும் அடிப்படையிலையே துரோகியா இல்லை தியாகியா என்பது தீர்மானிக்க படும்...

நான் யாரையும் தியாகி எண்று சொல்லவில்லை... சீமான் உட்பட ... !!

வழமையான உங்களின் கனவு கண்ட விடயத்துக்காக எல்லாம் நான் பதில் சொல்ல முடியாமைக்கு வருந்துகிறேன்...

நான் எங்கே லைக்காவுக்கு துரோகிப் பட்டம் கட்டினேன்?...சீமானையும் துரோகி எனச் சொல்லவில்லை சந்தர்ப்பவாதி என்று தான் சொன்னேன்.உங்களிடம் எனக்குரிய பதில் இல்லை எனச் சொல்கிறீர்கள்.மிக்க நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  கொழுப்பெடுத்த குணத்தாலைதான் தமிழனை உலகம் எல்லாம் சேர்ந்து அடிச்சது... !!    சிங்களவனிட்டை இருந்து இதுகள் எதையும் கற்றுக்கொள்ள போவதும் இல்லை... 

 

நட்பு எண்டு யாரையும் வைச்சிருக்க தெரியாது....!!   அப்பிடி  தானாக வாறவனிலையும் வந்து உதவுகிறவனிலையும்  நொட்டை ...   

 

இலங்கை பொருளாதாரத்தை கையிலை எடுக்க வேணும் எண்டு எல்லாருக்கும்  ஆசை ...    ஆனால் அதை செய்ய கூடியவனை அடிச்சு துரத்தி எதிரி கூடாரத்துக்கை  நிரந்தரமாக  சேர்க்கிற அடி முட்டாள் தனம்... 

 

இப்படி ஒரு இனம் அழிஞ்சு போனால் என்ன வாழ்ந்தால் தான் என்ன....??   இப்படியே போனால் யாரும் சீண்டக்கூடாத இனமாக இந்த கேடு கெட்ட தமிழ் இனம் மட்டும் தான் இருக்கும்... 

 

தயா பச்சை முடிந்து விட்டது.

Link to comment
Share on other sites

மேலே நாம் தமிழர் சார்பாக பேசியவர் சொன்ன பொய்கள்<

லாயிக்கா கமரூனை யாழ்ப்பானாம் கூட்டிச் சென்றாது என்பது. இது முழுப் பொய், இங்கிலாந்தில் பல தமிழ் அமைப்புக்களூம் ஊடகங்களூம் ஏற்படுத்திய அழுத்தமே காரணாம். 

ராஜபக்சவுக்கும் லைக்காவுக்குமான வியாபரத் தொடர்பு ஆதரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றூ.

லைக்கா நிரூவனம் சிரீளங்கன் விமானச் சேவைக்கான இலண்டன் முகவராக இருக்கிறார்.

இலங்கை இராணூவப் பாதுகாப்பில் சிறீலங்கா இராணூவ விமானத்தில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது, சாதாரணாமாக அங்கு சென்ற எலோருக்குமே தெரியும்.

 

யாழ்க் களாத்தில் சீமானை  ஆதரிப்போர் இவ்வாறான பொய்களாஇ ஆதரிக்கிறீர்களா? இதில் ஒரு சதி இருப்பதை நீங்கள் உணரவில்லையா?


 இலங்கைப் பொருளாதரத்தைக் கையிலெடுப்பதை எந்தச் சிங்களா அரசும் ஆதரிக்கப் போவதில்லை.அது நடைபெறாப்போவதும் இல்லை. ராகபக்ச குடும்பமே அதனைக் கையில் வைத்திருக்கும்.

இதனைத் தானே டக்கிலாசும் பல ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறார். நாம் அரசுடன் கூட இருந்து அபிவிருத்தி செய்வோம் என்றூ. அவரால் முடிந்ததா? அவரை எதிர்க்கும் நீங்கள் லைக்கா சுபாஸ்கரன் சொல்வதை ஆதரிப்பது எதனால்?   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.