Jump to content

நிம்மதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை... அழகு. அதற்கேற்றால் போல், எழுத்து வடிவம் இன்னும் அழகு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புடவையின் தரத்தைப் பார்த்துத் தானே,

புன்னகை கூடத் தன்னை வெளிப்படுத்துகின்றது!

 

தாலிக்கொடியின் தடிப்புத் தானே,

தராதரத்தை அளவிடுகின்ற அலகாகின்றது!

 

நாளைய வாழ்வின் அத்திவாரமே,

போலிகளில் தானே புதைந்து கிடக்கிறது?

 

உங்கள் 'கருப்பொருளும். கவிதையும் அழகு, மாறன்!

 

தொடர்ந்து எழுதுங்கள்!

 

 

Link to comment
Share on other sites

வாழ்த்தியமைக்கு நன்றி,  என் அருமை தோழர்களே !...


உங்கள் வாழ்த்துகளில் என் மனம் காற்றில் மிதக்கிறது ...

Link to comment
Share on other sites

மனச்சாட்சியை ? கேள்வி கேட்கிறது கவிதை. 

 

தொடருங்கள்... கேள்விகள் தான் ஒருவனின் இருத்தலை உணர்த்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வித்தியாசமான கவிதையும் வடிவமும்....தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்காவான தத்துவம் பத்து வரிகளில்...!

 

தொடருங்கள் மாறன்...!

Link to comment
Share on other sites

கவிதை ரசிப்பதற்கு நண்பர்கள் இருப்பதால் தொடர்வதற்கு நான் தயார்

 

என் கவிதையை ரசித்து பாராட்டியதற்கு மிக்கநன்றி என் தோழர்களே !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடத்திற்கு தகுந்தால் போல் மாறுபவவர்கள் மட்டுமே நின்மதி என்ற ஒன்றை பெறுகிறார்கள்....எவ்வளவுக்கு நேர்மையாக இருக்க வெளிக்கிடுறோமோ அந்தளவுக்கு காயப்படுவோம்.இது நான் உட்பட பலரும் அனுபவித்து இருப்பீர்கள்..

Link to comment
Share on other sites

நீங்கள் திண்ணையில் இணைக்கிற கவிதைகள் உங்களுடையதாக இருப்பின் அவற்றிற்கு என்று பிரத்யோகமாக ஒரு திரி திறந்து அதில் எல்லாவற்றையும் பதிவேற்றினால் அவை காலத்திற்கும் அழியாமல் நிலைத்து நிற்கும் அதற்கு உறுப்பினர்களும் கருத்தும் விருப்பும் தெரிவிப்பார்கள்...

Link to comment
Share on other sites

:)  யாயினி !

 

மிக்க நன்றி ராஜன் நண்பா...  உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன்,

 

சிந்தனை வரிகள் அனைத்தும் பொருந்திவரும் பொழுது கண்டிப்பாக கவிதையாக பதிவு செய்வேன்

கவிதை, கவிதையாக இருக்க வேண்டுமல்லவா ..?!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சிந்தனா சக்தி அதி அற்புதமானது. அதன் ஒவ்வொரு வருகையும் மாறுபட்ட வடிவம் கொண்டது. உங்கள் சிந்தனையின் வெளிப்பாடாக தோன்றும் எழுத்துக்களை கால ஒட்டத்தில் கரைய விடுவதில் எந்த அர்த்தமுமில்லை. விகடகவி அண்ணாவின் தினசரி தூரல்களில் உள்ள பதிவுகளை அவரால் இன்றைக்கும் மீட்டி பார்க்க முடிகிறதென்றால் அவர் எல்லாவற்றையும் தொகுத்து வைத்துள்ளதனாலே. அதுதான் சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.