Jump to content

வறட்டுப் பிடிவாதம் எதற்கு? வாருங்கள் வைகோ!


Recommended Posts

அடடா சோழியன் குடுமி சும்மா ஆடாதே என்று நினைத்தேன். பின்வரும் பொன்மொழிகள் அண்ணன் சபேசன் தேர்தலுக்கு முன் சொன்னது....

"நான் அணிந்திருக்கும் "ஈழத் தமிழ் கண்ணாடியை"; கழற்றி வைத்துவிட்டோ, அல்லது நன்றாக துடைத்துவிட்டோ பார்க்கின்ற பொழுது, ஜெயலலிதா வெற்றி பெறுவதே நல்லது என்று சொல்வேன்."

"ஜெயலலிதா வெல்வதே தமிழ்நாட்டிற்கு நன்மை பயக்கும் என்பது என்னுடைய கருத்தாக இருக்கிறது."

"இந்த தேர்தலில் வழமையை விட பெண்கள் அதிகமாக வாக்களித்திருப்பதை பார்க்கின்ற பொழுது ஜெயலலிதா மீண்டும் ஒரு சாதனை படைப்பார் போன்றும் தெரிகிறது."

அடடா.... அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் ரேஞ்சுக்கு இருப்பார் என்று தெரிந்திருந்தால் வாயைக் கொடுத்து என் நேரத்தை வீணாக்கி இருக்க மாட்டேனே........

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவே தமிழ்நாட்டுக் முதலமைச்சராக வருவது தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது என்பதே என் கருத்தாக இருந்தது.

ஆனால் தற்பொழுது கலைஞரும் தமிழ்நாட்டு மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகிறார். அந்த வகையில் என்னுடைய இந்தக் கருத்து தற்பொழுது மாறியிருக்கிறது

தமிழை கட்டாய பாடம் ஆக்கியது, திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு, ரௌடிகளை உள்ளே தள்ளியது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற வேகம் போன்றவைகள் வரவேற்கத் தக்கவைகள்.

இப்பொழுது கேட்டால் கலைஞர் முதல்வராக வந்தது தமிழ்நாட்டிற்கு நல்லது என்பேன்.

ஆகவே தேர்தல் சமயத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் எப்பொழுதும் என்னுடைய கருத்துக்களாகவே தொடர்ந்து இருக்கும் என்ற சொல்ல முடியாது.

அதே வேளை ஈழத் தமிழர் நிலைப்பாட்டில் கலைஞரிடம் மாற்றம் காணாத வரை, கலைஞர் பற்றிய என்னுடைய மற்றைய கருத்துக்கள் மாறாது.

Link to comment
Share on other sites

அதே வேளை ஜெயலலிதாவின் உறுதியும் தைரியமும் என்னைக் கவர்ந்துள்ளன என்பதையும் நான் மறுக்கப் போவதில்லை.

மொட்டைத் தலை ஜெயேந்திரனை அவர் து}க்கி உள்ளே போட்டது என்னை பிரமிக்க வைத்தது.

லக்கிலுக்! மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்

இப்படி ஒன்றை கலைஞரால் செய்திருக்க முடியுமா?

Link to comment
Share on other sites

சபேசன் உங்களை நினைத்து அழுவதா? சிரிப்பதா? கலைஞர் எப்போதுமே ஈழத்தை எதிர்த்து கருத்துக்களை வெளியிட்டதில்லை. அவர் ஆட்சியில் இருப்பதால் வெளிப்படையாக சில செயற்பாடுகளை செய்யமுடியாமல் இருக்கலாம்.

ஆனால் கேவலமான அரசியல் நடத்தும் ஜெயலலிதா ஈழம் என்று ஒன்றில்லை என்று தேர்தலுக்கு முன் ஒரு அறிக்கையை வெளியிட்டு இலங்கை அரசாங்கத்தை குளிரவைத்தவர்.

இப்போதும் ஈழத்துக்கு ஆதரவான நிலைதோன்றுகின்றபோது தமிழ்நாட்டில் பயங்கரவாதம்வளர்ந்துவிட்டது என்று அறிக்கைமேல் அறிக்கையாக விடுகன்றார்.

அம்மையாரின் ஆட்சியில் கொலைகளே நடக்கவில்லையா? ஓர் அமைச்சரே தனதுவீட்டில் வைத்து கொள்ளையரால் கொலைசெய்யப்பட்டார் அது பயங்கரவாதமில்லையா? அவருடைய ஆட்சியில் காந்தி கனவு கண்டதுபோல் ஒரு பெண் இராத்திரியில் தன்னந்தனியாக திரிய முடிந்ததா?

அவருடைய ஆட்சியில்தான் பெண்கள் அதிகமாக காவல்நிலையத்தில் வைத்து கற்பழிக்கபட்டனர்.

நீங்கள் கூறியதுபோல் ஜெயேந்திரரை கைது செய்ததாக வைத்துக்கொள்வோம். ஆனால் கைதுசெய்வதில் காட்டிய வேகம் அம்மையாரின் ஆட்சியிலேயே வழக்கில் காட்டப்படவில்லை. பொய் வழக்கென்றபடியாலா?

அம்மையார் தன் அரசியல் எதிரிகளை அதிகமாக பழிவாங்கினார் என்பதற்கு நல்ல உதாரணம் உங்கள் வை.கோ

Link to comment
Share on other sites

வன்னியன்! அழுவதும் சிரிப்பதும் உங்கள் விருப்பம்

ததேகூட்டமைப்பினரைக் கேட்டால் கலைஞரால் அழுத கதையை கதை கதையாகச் சொல்வார்கள்.

தமிழ்நாட்டின் உள்ளுராட்சி தேர்தல் முடியும் வரை பொறுத்திருங்கள். அந்தக் கதையை நான் சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

என்ன கதைவிடலாம் என்று யோசனை செய்யப்பொகிறீர்களா?

அம்மையாரின் அரக்கத்தனமான ஆட்சியில் அகதிமுகாம்களில் ஈழத்தமிழர்கள்பட்ட துயர் போதும்சாமி :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

தயவுசெய்து எனது கருத்து லக்கியின் கருத்தை வெட்டிக்கதைக்க வரவில்லை

Link to comment
Share on other sites

ஈழத் தமிழ் அகதிகளுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மை. ஆனால் மற்றையபடி அவர்களின் துயரம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெரிய மாற்றம் எதுவும் வந்துவிடவில்லை.

அத்துடன் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற ஈழத் தமிழர் ஆதரவு நிலைக்கும் ஆட்சி மாற்றத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஆட்சி மாற்றத்திற்கு சில மாதங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் ஆதரவுக் குரல்கள் உரத்து ஒலிக்கத் தொடங்கி விட்டன. தேவை என்றால் தரவுகளை தரத் தயாராக இருக்கிறேன். தமிழீழத்தில் ஏற்பட்ட மாற்றங்களே தமிழ்நாட்டில் ஏற்பட்ட மன மாற்றங்களுக்கும் காரணம்.

Link to comment
Share on other sites

யோவ் லக்கி,வன்னியன்

என்ன சபேசனைக் கலாய்க்கின்றீர்கள். அவரது ஆலோசனைப் படிதான் இந்திய அரசியலே நடக்குது தெரியுமா?? அவரது இணையப் பக்கத்தை படித்துத்தான் கலைஞரே பல அரசியல் முடிவுகள் எடுத்துள்ளார். அது தெரியாமல் நீங்கள் எப்படி?? :roll: :roll:

தீபாவளி நெருங்குவதால் அவர் கொஞ்சம் முதலிலேயே வானவேடிக்கை காட்டுகின்றார். அதைப்போய் நீங்கள் பெரிசு படுத்திக்கோண்டு. :P :lol:

Link to comment
Share on other sites

அடடா.... அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் ரேஞ்சுக்கு இருப்பார் என்று தெரிந்திருந்தால் வாயைக் கொடுத்து என் நேரத்தை வீணாக்கி இருக்க மாட்டேனே........

பன்னீர்ச்செல்வம் பெரிய குளத்தில் ரீக்கடை வைத்திருந்தார் எண்று அண்மையில் எங்கோ படித்த ஞாபகம் உண்மையா..?? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன வம்பு உங்கட ஆள் சுவிஸ் ஜெயிலில் இருந்தே வாணவேடிக்கை காட்டத் தொடங்கியுள்ளார் போல இருக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் லக்கி,வன்னியன்

என்ன சபேசனைக் கலாய்க்கின்றீர்கள். அவரது ஆலோசனைப் படிதான் இந்திய அரசியலே நடக்குது தெரியுமா?? அவரது இணையப் பக்கத்தை படித்துத்தான் கலைஞரே பல அரசியல் முடிவுகள் எடுத்துள்ளார். அது தெரியாமல் நீங்கள் எப்படி?? :roll: :roll:

தீபாவளி நெருங்குவதால் அவர் கொஞ்சம் முதலிலேயே வானவேடிக்கை காட்டுகின்றார். அதைப்போய் நீங்கள் பெரிசு படுத்திக்கோண்டு.

:P :lol:

வெறும் எச்சில் இலை உம்மை ஆட்டுவிக்கிற அந்த குரங்காட்டத்துக்கு மேலாகவா இருக்குது குசும்பு அண்ணாச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியன்

நானும் சபேசனின் கருத்தை ஒத்ததான கருத்தையே கொண்டிருகிறேன்.

தமிழ்நாட்டுதவி எமக்கு வேண்டும். அது எந்த கட்சியாக இருகவேண்டும் என்பது அல்ல அவசியம்.

வை.கோ வின் அரசியல்பண்புக்கு தி மு க தவிர்ந்த ஏனய வழிகள் முரணாகவே இருப்பதை அறிந்து. தி மு க வின் சுயநல அரசியல் அவர் அரசியல் எதிர்காலத்தை வேடையாட முனைந்தமையை மறந்துவிட்டோமா?

லக்கியின் கருத்துக்கள் ஈழத்தமிழர் அக்கறையை மிஞ்சி கட்சி விசுவாசம் மேன்மைப்பட்டு நின்றதை விளங்கமுடியவில்லையா?

தி மு க செய்த புண்ணியம் அ தி மு க என்ற அரசு, இதனோடு ஒப்பீடு செய்துதான் அவர்களது உதவி பெரியவனாகிறது.

தன் சக்தியின் எல்லைக்குள் நின்றே எமினத்தின் கண்ணீரைத்துடைக்க கலைஞ்ஞருக்கு முடியும். அரசியற் சுயநலன்கள் அதைத் தடுக்கிறது.

Link to comment
Share on other sites

தேவன் எங்களைப்பொறுத்தவரை யார் அதிகம் செய்கின்றார்கள் என்பதே.அப்படிப் பார்க்கும்போது தராசில் அ.தி.மு.கவின் பக்கம் உயர்ந்துதான் தெரிகிறது. ஜெயலலிதா தலைமைப்பொறுப்பில் இருக்கும்வரை எங்களுக்கு அவர்கள் பக்கம் இருந்து எந்தவித உதவியும் கிடைக்க வாய்ப்பில்லை.

கிடைப்பதை பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவன் எங்களைப்பொறுத்தவரை யார் அதிகம் செய்கின்றார்கள் என்பதே.அப்படிப் பார்க்கும்போது தராசில் அ.தி.மு.கவின் பக்கம் உயர்ந்துதான் தெரிகிறது. ஜெயலலிதா தலைமைப்பொறுப்பில் இருக்கும்வரை எங்களுக்கு அவர்கள் பக்கம் இருந்து எந்தவித உதவியும் கிடைக்க வாய்ப்பில்லை.

கிடைப்பதை பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.

உண்மை மறுக்கவில்லை ஆனால் தி மு க விசுவாசிகள் தம் விசுவாசத்தை எங்கேயாவது வைத்து விற்க்கட்டும் ஆனால் தமிழ் உணர்வின் வாசலுக்கு வந்து வை கோ வை இளக்காரம் செய்யாமல் இருந்தால் சரி அவரின் அரசியல் புறச்சூழ்நிலைகள் புரிந்தவர்கள் நாம் பச்சை இருக்குமட்டும் தான் உறவு ஈரம் காட்டும் தாசித்தனம் கொண்டதல்ல ஈழம்.

(விசுவாசிகள் என்று உங்களைக் கூறவில்லை வன்னியன்)

Link to comment
Share on other sites

எம்மவர்கள் கலைஞர் குறித்து சரியாக அறிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்பது மிகவும் கவலை அளிக்கின்ற விடயம்.

கல்லக்குடியில் தண்டவாளத்தில் படுத்த துடிப்புள்ள கலைஞர் தற்பொழுது இல்லை. முக்கியமாக தமிழ் தேசியவாதி கலைஞர் இல்லவே இல்லை.

ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

கலைஞர் இந்திய தேசியவாதத்திற்குள் உள்வாங்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகி விட்டன.

இந்திய வெளியுறவுக் கொள்கை எதுவோ, அதன்படியே கலைஞர் நடந்து கொள்வார். இந்திய வெளியுறவுத்துறைக்கோ, அல்லது புலனாய்வுத்துறைக்கோ எதிராக கலைஞர் ஒரு போதும் நடக்க மாட்டார்.

90;ஆம் ஆண்டில் பத்மநாபா, ராஜீவ்காந்தி அழிப்புக்கு முன்பு தமிழ்நாட்டிலே பழ.நெடுமாறன், சுபவீ போன்றவர்கள் ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்திய இராணுவம் ஈழத்தில் நடத்திய படுகொலைகள் பற்றிய கண்காட்சி அது. அப்பொழுது ஆட்சியில் இருந்த கருணாநிதி அக் கண்காட்சியை தடை செய்தார். பழ.நெடுமாறன், சுபவீ ஆகியோரைக் கைது செய்யப்பட்டனர். புகைப்படங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இக் கண்காட்சி இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு விரோதமானது என்று கலைஞர் அதற்கு விளக்கமும் சொன்னார்.

அதே போன்று தற்பொழுது தமிழ்நாட்டில் சில ஒட்டுக்குழுக்கள் செயற்படுவது கலைஞருக்கு தெரியாக விடயம் அல்ல. ஈழத்திலிருந்து அகதிகளாக ஓடி வருபவர்களில் விடுதலைப்புலிகள் இருக்கின்றார்களா என்று கடுமையாக கண்காணிக்கப்படுகிறது. முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினராக இருந்தால் கூட மற்றவர்களிடம் இருந்து பிரித்து சிறப்பு முகாம்கள் எனப்படும் சிறைக்கூடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். இப்படி கடுமையாக நடக்கின்ற கலைஞர் அரசு இந்த ஒட்டுக்குழுக்கள் விடயத்தில் பாராமுகமாகவே இருக்கிறது. அதற்கு காரணம் அவ் ஒட்டுக்குழுக்கள் விவகாரம் இந்திய புலனாய்வுத்துறை சம்பந்தப்பட்டது.

இப்படி பல உதாரணங்களை சொல்ல முடியும்.

இந்திய தேசியத்திற்குள் உள்வாங்கப்பட்டவரும், தனது சொந்தங்களை மத்தியிலே அமைச்சராகக் கொண்டிருப்பவரும், காங்கிரஸ் கட்சியில் ஆதரவில் சிறுபான்மை அரசை நடத்திக் கொண்டிருப்பவரும் ஆகிய கலைஞரிடம் அதிகமாக எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

அவரால் தமிழ்நாட்டில் வாழும் அகதிகளுக்கு சில ருபாய்கள் அதிகமாகக் கிடைக்கும். அதுவும் தமிழ்நாட்டு அரசின் நிதியில் இருந்து வழங்க மாட்டார். மத்திய அரசு ஈழத் தமிழ் அகதிகளுக்காக ஒதுக்குகின்ற பணத்தில்தான் கொடுப்பார்.

இதை விட கலைஞரால் தமிழினம் விடிவு பெறும் என்றெல்லாம் கனவு காணாதீர்கள்

Link to comment
Share on other sites

உண்மை மறுக்கவில்லை ஆனால் தி மு க விசுவாசிகள் தம் விசுவாசத்தை எங்கேயாவது வைத்து விற்க்கட்டும் ஆனால் தமிழ் உணர்வின் வாசலுக்கு வந்து வை கோ வை இளக்காரம் செய்யாமல் இருந்தால் சரி அவரின் அரசியல் புறச்சூழ்நிலைகள் புரிந்தவர்கள் நாம் பச்சை இருக்குமட்டும் தான் உறவு ஈரம் காட்டும் தாசித்தனம் கொண்டதல்ல ஈழம்.

(விசுவாசிகள் என்று உங்களைக் கூறவில்லை வன்னியன்)

ஆமாம். ஒரு புத்திசாலி சொல்லிட்டாரு. எல்லோரும் கை தட்டுங்கோ..... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

யோவ் லக்கி

உதுக்கேல்லாம் கை தட்டினால் தட்டுறவனுக்கு தட்டீற்றுது என்றல்லோ நினைப்பார்கள். :roll: :lol: :roll: :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் லக்கி

உதுக்கேல்லாம் கை தட்டினால் தட்டுறவனுக்கு தட்டீற்றுது என்றல்லோ நினைப்பார்கள். :roll: :lol: :roll: :o

குசும்பு அண்ணாச்சி

பொய்தானே சொல்லுறீங்க

உங்களுக்கு முத்தீட்டுது என்றுதானே எல்லாரும் கதைக்கிறாங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[quote=

ஆமாம். ஒரு புத்திசாலி சொல்லிட்டாரு. எல்லோரும் கை தட்டுங்கோ..... :

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தின் இரு அரசியல் துருவங்கள் நீங்கினால், சில வேளை ஒட்டுமொத்த தமிழருக்கு விடிவு காலத்திற்கு சாத்தியங்கள் ஏற்படலாமா? தமிழகத் தமிழர்கள் விழ்ப்புணர்ச்சி பெறுவதை தடுப்பதில் இன்னும் தமிழகத்தில் அரசியல்வாதிகள் மாத்திரமன்றி தமிழக தற்போதைய "சனிமா" வும் முன்னணியில் நிற்கின்றது!

இந்த இரு அரசியல் "தொல்லை"களும் பழிவாங்கும் படலங்களையே தமிழகத்தில் தொடருகின்றன! தமிழகத்தில் தமிழன் ஒன்றுபட்டால்,

அதிமுகவும் திமுகவும் இணவதே ஒட்டுமொத்த தமிழருக்கு நன்மையை தரும்!

தமிழகத்தில் இந்திய மத்திய அரசின் ஆதிக்கத்தை நிலப்படுத்த இந்த இரு கட்சிகளையும் மத்திய அரசு நன்றாகப் பயன் படுத்துகின்றது!

=============================

"தமிழனுக்கு என்று ஒரு புத்தி உண்டு...." என்று காலாகாலமக நாங்கள் சொல்லிக் கொண்டுத் தான் வருகிறோமே தவிர... அதிலிருந்து விடுதலைபெற்றதாகவோ அதிலிருந்து விடுதலையைச் செய்யும் முயற்ச்சியில் யாரும் வெற்றிக் கண்டதாகவோ தெரியவில்லை...

ஒன்றில் மாத்திரம் பெயர் பெற்றவர்களாய் இருக்கின்றோம் - சினிமாவில்

இந்தச் 'சினிமா' என்னும் சனியன் தமிழனைப் போட்டு வாட்டி வதட்டிக் கொண்டிருக்கிறது

இந்த சினிமா என்னும் சாக்கடைக்குள் விழுந்து புரண்டு தொடர்ந்துச் சீரழியும் இந்த அஷ்டமத்துச் சனியனிலிருந்து... யார் விடுதலையைக் கொண்டுவருவார்?

இதே சினிமா எனும் மாயையில் ஊன்றியவர்களும் அதன் குருமுடி குடிகளுமே தமிழனை ஆட்சி செய்வதற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். அலலது அந்த மயையிலே ஊன்றி போயுள்ள தமிழ் சமுதாயத்திற்குத் தான் அதை உணராவண்ணம் சனியன் பிடித்துள்ளதா?

(இரு) அரசியல் கட்சிகள் ஒரு கொள்கைக்காக ஒன்று சேர்வது இயல்பானது தான்...

அனால் தமிழனின் வரலாற்றில் அது சிறப்பாக நடந்ததாக எந்த வரலாறும் இல்லை என்று கண்ணீரோடு சொல்வது அவசியமாகிண்றது.

மாயத்தையே வாழ்வாகக் கொண்டு மாயைக்கே வழி நடத்துகிறவர்களிடத்தில் எப்படி ஐயா இதை எதிர்பார்க்கலாம்?

தமிழருடைய அரசியல் எப்பொழுது இந்த மாயஜால சிற்றறிவாளர்களிலிருந்து விடுதலை பெருகிறதோ அன்றுத் தான் தமிழனுக்கு உண்மையான விடுதலை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.