Jump to content

மகிந்தவுக்கு திடீர் சுகவீனம்! சிகிற்சைக்காக வெளிநாட்டுக்கு அவசரப் பயணம்!


Recommended Posts

 

rajapaksa_ill.pngசிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ திடீர் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சைக்காக அவசரமாக வெளிநாடு ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இது குறித்த தகவல்களை வழங்க அரசாங்கத் தரப்பினர் மறுத்து வருகின்றனர்.  

நேற்றையதினம் ஜனாதிபதி மாளிகையில் இருந்து உலங்கு வானூர்தி ஒன்றில் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து விசேட விமானம் ஒன்றின் மூலம் வெளிநாடு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  

அவருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாத நோய் ஏற்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும் அவர் அமெரிக்காவுக்கே அழத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. 

இந்த விடயத்தை அரசாங்கம் மிகவும் இரகசியமாக பேணுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.pathivu.com/news/33392/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

ராஜபக்சே அடித்து பிடித்து சகோதரரை சந்திக்க அமெரிக்கா பயணம்.

அங்கு நிறைய குடும்ப சொத்துக்கள் இருப்பதால் பரப்புரை அமைப்புகளை வாடகைக்கு அமர்த்தி வெளிநாட்டு கொள்கைகளை மாற்ற முனைகிறார்கள்.

ஐ. நா. வால் பொருளாதார தடை வந்தால் குடும்ப சொத்து போய்விடும் என்ற பயமும் உள்ளது.

According to The Sunday Times, the Monitoring MP for Foreign Affairs, Sajin Vaas Gunawardane has signed another deal with another American public relations firm, for 6 months at a monthly fee of US$ 5,000 (Rs. 650,000) .

And, again according to The Sunday Times, "President Rajapaksa has gone abroad, to the US. The purpose of the visit is said to be private, to meet with his brother ."

Contrary to their rhetoric, the Rajapaksas cannot do without the USA. Two of the three Ruling Siblings are American Lankans. If Washington imposes travel and asset bans on top Lankan leaders and officials at the conclusion of UNHRC investigation, it will be an enormous blow to the Ruling Family.

Thus the hurry to hire multiple PR firms.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=144861#entry1036264

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கடந்த மாதங்களில்..... ஆபிரிக்காவுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டதால்....

"இபோலா" வைரஸ் தாக்கியிருக்கலாம் என்று, உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ எண்ட மாத்தையா ஆள் அவுட்டா? மாரடப்பென்றியள், பக்கவாத்கெமென்றியள், இபோலா எண்டுறியள், மகே தெய்யனே!

Link to comment
Share on other sites

இவர் கடந்த மாதங்களில்..... ஆபிரிக்காவுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டதால்....

"இபோலா" வைரஸ் தாக்கியிருக்கலாம் என்று, உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன்.

 

தப்பு தமிழ் சிறியர் "மாமா" மேர்வின் சில்வாவின் மருமகனாக இருந்ததால் மஹிந்தருக்கு HIV தொற்றியிருக்கலாம் என்று நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  :D

Link to comment
Share on other sites

நாம் விரும்புவது என்பது வேறு. நடப்புகளை செய்தீயாக வெளியிடுவது என்பது வேறு.

 

தானாக விமானம் ஏறிப் பயணப்பட்ட மனிதனை ஏதோ தூக்கி ஏற்றிச் சென்றது போலவும் இலங்கையின் ஜனாதிபதிப் பதவியில் சடுதியான வெற்றிடம் ஒன்று எற்படப்  பொவது போலவும் சில ஊடகங்கள செய்தி வெளியிட்டு தங்களைத் தாங்களே முட்டாளாக்கிக் கொள்கின்றன...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மகிந்தவுக்கு திடீர் சுகவீனம்! சிகிற்சைக்காக வெளிநாட்டுக்கு அவசரப் பயணம்!

 

அரசியல் தந்திரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகன் நம்ம பொஸ் வலு கெட்டிக்காரன் - ஆள் எதோ பிளானிலதான் செய்யுது - புலம்பெயர்சுக்கு முகத்தில கரி நிச்சயம்.

Link to comment
Share on other sites

பெரும் தொகையான உறவுகள் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பாதிப்புகளுக்கு பொறுப்பானவர் இவ்வாறாக நோய்வாய்ப்படும் போது அது ஒருவகையில் பாதிக்க பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதாக தெரிகிறது. ஆனால் இந்த ஜனாதிபதி மட்டுமன்றி இவருக்கு முன்னர் இருந்த பலரும் ஆயுதம் தாங்கிய அமைப்புகளுக்கு தலைமை தாங்கிய பலரும் இவ்வாறான பாதிப்புகளுக்கு காரணமானவர்களாக இருப்பதை இவ்விடத்தில் நாம் மறக்க கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ஜூட், கையாலாகாத நிலையில் இப்படி நினைத்து சிலர் மனச்சாந்தி அடைவர். ஆனால் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாத பலருக்கும் இதை விட கொடிய நோய்கள் வந்துள்ளதும் உண்மையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ஜூட், கையாலாகாத நிலையில் இப்படி நினைத்து சிலர் மனச்சாந்தி அடைவர். ஆனால் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாத பலருக்கும் இதை விட கொடிய நோய்கள் வந்துள்ளதும் உண்மையே.

 

 

ஆனால்  கடவுள் நம்பிக்கையுள்ளோம்  இதை நம்பவர்....

நம்மால் முடியாத போது நிச்சயம்  தெய்வம்  தண்டிக்கும் என்று.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களால் கொல்ல முடியாத எதிரியை கொடிய நோயாவது கொண்டு போகட்டும் என்று நினைத்து சந்தோசப்படலாம்...ஆனால் ஒரு மகிந்தாவை கொண்டால் மட்டும் பிரச்சனை தீர்ந்திடுமா என்ன இன்னொருத்தன் வாறவன் இவனை விட கொடியவனாக இருக்க கூடும்

Link to comment
Share on other sites

எங்களால் கொல்ல முடியாத எதிரியை கொடிய நோயாவது கொண்டு போகட்டும் என்று நினைத்து சந்தோசப்படலாம்...ஆனால் ஒரு மகிந்தாவை கொண்டால் மட்டும் பிரச்சனை தீர்ந்திடுமா என்ன இன்னொருத்தன் வாறவன் இவனை விட கொடியவனாக இருக்க கூடும்

ரதி நீங்கள் கூறியது முற்றிலும் சரியே.

Link to comment
Share on other sites

ஆனால்  கடவுள் நம்பிக்கையுள்ளோம்  இதை நம்பவர்....

நம்மால் முடியாத போது நிச்சயம்  தெய்வம்  தண்டிக்கும் என்று.....

 

விசுகு அண்ணா!

 

ஒரு பேச்சுக்கு மகிந்த கொடிய நோய் வாய்ப்பட்டு இன்னும் சில தினங்களில் இறந்து வீடுகிறார் என்றே வைத்துக் கொள்வோம்.  கடவுள் நியாயம் செய்து விட்டார் என்று அர்த்தமாகுமா?

 

மகிந்தவினதும் அவர் பரிவாரங்களதும் அரக்கத்தனத்தினால் தம் வர்வையே தொலைதத்து நிற்கும் உறவுகளுக்கு குடும்பத் தலைவர்களை பறிகொடுத்து தவிக்கும் குடும்பங்களுக்கு அது எந்த வகையீல் நியாயம் சேர்ப்பிக்கும்.

 

கடவுள் (?) நியாயம் செய்ய விரும்பினால் தமீழ் மண்ணில் தாங்கொணாத் துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு விடிவை ஏற்படுத்திக் கொடுத்து அவரும் பாவ விமோசனம் தேடிக் கொள்ளலாம்.

 

அல்லாது மகிந்தரைக் கொன்று நியாயம் கற்பித்தால் அடுத்ததாகக் கதிரையேறும் கொத்தபாயவோ அல்லது பசிலோ இதே அட்டுழியங்களைத் தானே தொடர்ந்து செய்வர்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் இந்த விஜயம்.. ஏலவே திட்டமிடப்பட்ட ஒன்று. இது பற்றிய செய்திகள் காமன்வெல்த் போட்டிகள் நடந்த போதே வெளியாகிவிட்டன. மகிந்த கிளாஸ்கோ போகாவிட்டாலும்.. நியுயோர்க் போவார் என்று.

 

மகிந்த 2009 மே க்குப் பின் பல தடவைகள்.. அமெரிக்கா சென்று வந்துள்ளார்.

 

பதிவின் கண்டுபிடிப்பே.. மகிந்தவுக்கு நோய் என்பது. அவருக்கு நோய் வந்தால் என்ன விட்டால் என்ன.. அவரின் அமெரிக்க விஜயத்துக்கு எதிராக அமெரிக்கா வாழ் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது முக்கியமான ஒன்றாகும்..!! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களால் கொல்ல முடியாத எதிரியை கொடிய நோயாவது கொண்டு போகட்டும் என்று நினைத்து சந்தோசப்படலாம்...ஆனால் ஒரு மகிந்தாவை கொண்டால் மட்டும் பிரச்சனை தீர்ந்திடுமா என்ன இன்னொருத்தன் வாறவன் இவனை விட கொடியவனாக இருக்க கூடும்

 

தங்கச்சி! இது முற்றிலும் உண்மை.  :)
 
இனிமேல் காலத்திலை   ஈழத்தமிழனுக்கு விசர்நாய் கடிச்சாலும் அவன் பயங்கரவாதிதான். :(
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா!

 

1- ஒரு பேச்சுக்கு மகிந்த கொடிய நோய் வாய்ப்பட்டு இன்னும் சில தினங்களில் இறந்து வீடுகிறார் என்றே வைத்துக் கொள்வோம்.  கடவுள் நியாயம் செய்து விட்டார் என்று அர்த்தமாகுமா?

 

2- மகிந்தவினதும் அவர் பரிவாரங்களதும் அரக்கத்தனத்தினால் தம் வர்வையே தொலைதத்து நிற்கும் உறவுகளுக்கு குடும்பத் தலைவர்களை பறிகொடுத்து தவிக்கும் குடும்பங்களுக்கு அது எந்த வகையீல் நியாயம் சேர்ப்பிக்கும்.

 

3- கடவுள் (?) நியாயம் செய்ய விரும்பினால் தமீழ் மண்ணில் தாங்கொணாத் துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு விடிவை ஏற்படுத்திக் கொடுத்து அவரும் பாவ விமோசனம் தேடிக் கொள்ளலாம்.

 

4-அல்லாது மகிந்தரைக் கொன்று நியாயம் கற்பித்தால் அடுத்ததாகக் கதிரையேறும் கொத்தபாயவோ அல்லது பசிலோ இதே அட்டுழியங்களைத் தானே தொடர்ந்து செய்வர்....

 

1- எனது கண் முன்னால் ஒரு கொடுமை  நடந்ததை நான் பார்த்தேன். 

என்னால் தண்டிக்கமுடியாத போது

கடவுளே  என அழத்தான் முடியும்...

 

2-

3-

4-

 

 நான் சாதாரண ஒரு  தமிழ்ப்பொதுமகன்

அந்தளவுக்கு அறிவில்லை

ஆராய்ச்சியமில்லை

தொலைந்து  போ என்று திட்டுவதற்கு முன் இவ்வளவையும்  தீர்மானிக்கவேண்டுமெனில்

ஒருத்தரும் அழமுடியாது...

 

 

இவர் போனால் நல்லது நடக்கும் என  எப்பொழுதும் கருதவில்லை

எழுதவில்லை

ஏன் நல்லதும் நடக்கலாம்

அதையும் குறிப்பிடவில்லை..

 

புலிகள் மகிந்தவைக்கொண்டுவந்தது போல

கோத்தபாய  வருவதால் (இராணுவம்) தமிழருக்கு நன்மைகள்(நீண்டுதூரப்பார்வையில்) அதிகம் வரக்கூடும்

அதையும் எழுதவில்லை..

 

நான் ஒரு பெருமூச்சுவிட்டேன் ராசா

அவ்வளவு தான்..

நன்றி கருத்துக்கம் மீள் வருகைக்கும்

Link to comment
Share on other sites

எங்களால் கொல்ல முடியாத எதிரியை கொடிய நோயாவது கொண்டு போகட்டும் என்று நினைத்து சந்தோசப்படலாம்...ஆனால் ஒரு மகிந்தாவை கொண்டால் மட்டும் பிரச்சனை தீர்ந்திடுமா என்ன இன்னொருத்தன் வாறவன் இவனை விட கொடியவனாக இருக்க கூடும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர்களை அழிப்பது போராட்டத்தின் தடைக்கற்களை அகற்றுவது என்று நம்பியிருந்தவர்கள் அல்லவா நாம்!

ரஞ்சன் விஜேரத்தினா, காமினி திசநாயக்கா, பிரேமதாஸ, ராஜீவ் காந்தி என்று பலரையும் முடித்து, சந்திரிக்காவையும் முடிக்க முயற்சித்து, இறுதியில் மகிந்தவையும், கோத்தபாயவையும் சகல வல்லமையும் பொருந்தியவர்களாக மாற்றி எமக்கே படுகுழிகளைத் தோண்டி அதற்குள் புதைந்து, தேடினாலும் கிடைக்காத எலும்புகூட இல்லாதவர்களாக மாறிவிட்டோம்.

ஆனால் இன்னமும் தடைக்கற்களை அகற்றி சொர்க்கபூமிக்குப் பாதையைச் செப்பனிடலாம் என்ற கனவில் உள்ளோம். முன்னர் கரும்புலிகளை நம்பினோம். அவர்கள் இல்லாததால் இப்போது கடவுளை நம்புகின்றோம். அவ்வளவுதான் வித்தியாசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர்களை அழிப்பது போராட்டத்தின் தடைக்கற்களை அகற்றுவது என்று நம்பியிருந்தவர்கள் அல்லவா நாம்!

ரஞ்சன் விஜேரத்தினா, காமினி திசநாயக்கா, பிரேமதாஸ, ராஜீவ் காந்தி என்று பலரையும் முடித்து, சந்திரிக்காவையும் முடிக்க முயற்சித்து, இறுதியில் மகிந்தவையும், கோத்தபாயவையும் சகல வல்லமையும் பொருந்தியவர்களாக மாற்றி எமக்கே படுகுழிகளைத் தோண்டி அதற்குள் புதைந்து, தேடினாலும் கிடைக்காத எலும்புகூட இல்லாதவர்களாக மாறிவிட்டோம்.

ஆனால் இன்னமும் தடைக்கற்களை அகற்றி சொர்க்கபூமிக்குப் பாதையைச் செப்பனிடலாம் என்ற கனவில் உள்ளோம். முன்னர் கரும்புலிகளை நம்பினோம். அவர்கள் இல்லாததால் இப்போது கடவுளை நம்புகின்றோம். அவ்வளவுதான் வித்தியாசம்.

 

இத்தாள் தாங்கள் கூற வருவது.. லலித் அத்துலத் முதலி முதல் கோத்தா வரை.. செய்தது நியாயம் என்றோ. அவர்களை அழிச்சாலும் அழிக்காவிட்டாலும்.. பேரினவாதமும்.. பிராந்திய வல்லாதிக்கமும் தொடர்ந்தே இருக்கும். எமது இனம் அழிக்கப்பட்டுக் கொண்டே இருந்திருக்கும்.

 

கொல்லப்பட்டவர்கள் யாரும்.. தண்டனைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. கொல்லப்படவர்கள் அவரவர் செய்த மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்கு நீதிமன்றங்களால் தண்டிக்கப்படாத நிலையில்.. தண்டனைக்கு ஆளானார்கள்.

 

அந்த வகையில்.. கோத்தாவும் ஓர் நாள் தண்டனை பெற்றுத்தான் தீர வேண்டும். அதனை ஒருவேளை விழித்துக் கொள்ளும் உலக.. நீதி செய்ய முனையலாம்...!

 

உங்களால் முடிஞ்சது இப்படி.. பசப்பல். செயல்.. என்று.. ஒன்றும் கிடையாது. அதிலும் தடைகளை இனங்காட்டி.. எல்லாத்தையும் கூட்டாக வைச்சிருந்து.. ஒன்றாக சேரவிட்டு அழிவதிலும் ஒவ்வொன்றா..நீக்கி.. சொல்ல வேண்டிய செய்திகளைச் சொல்லி.. அழிவது ஒன்றும்.. பெரிய கொள்கைத் தோல்வி அல்ல..! எப்படியோ அழிச்சிருப்பீர்கள்.. இது எதிர்த்து நின்று.. வெளிநாடுகளுக்கு ஓட விட்டு அழிஞ்சதால்.. உங்களால் இப்படி பேச.. எழுத முடிகிறது அல்லவா. அதற்கு தடைநீக்கிகளுக்கு நன்றி சொல்லிக்குங்க. :icon_idea:

 

லலித்தை விட்டிருந்தா.. நீங்க எல்லாம் ஓடமுதலே போட்டுத் தள்ளி இருப்பான். இப்படி எழுத கிருபன் இருந்திருக்கார். :lol:

ஹாட்லியோடு சேர்த்து தரைமட்டமாக்கி இருப்பார். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாழ் தாங்கள் கூற வருவது.. லலித் அத்துலத் முதலி முதல் கோத்தா வரை.. செய்தது நியாயம் என்றோ. அவர்களை அழிச்சாலும் அழிக்காவிட்டாலும்.. பேரினவாதமும்.. பிராந்திய வல்லாதிக்கமும் தொடர்ந்தே இருக்கும். எமது இனம் அழிக்கப்பட்டுக் கொண்டே இருந்திருக்கும்.

 

கொல்லப்பட்டவர்கள் யாரும்.. தண்டனைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. கொல்லப்படவர்கள் அவரவர் செய்த மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்கு நீதிமன்றங்களால் தண்டிக்கப்படாத நிலையில்.. தண்டனைக்கு ஆளானார்கள்.

 

அந்த வகையில்.. கோத்தாவும் ஓர் நாள் தண்டனை பெற்றுத்தான் தீர வேண்டும். அதனை ஒருவேளை விழித்துக் கொள்ளும் உலக.. நீதி செய்ய முனையலாம்...!

 

உங்களால் முடிஞ்சது இப்படி.. பசப்பல். செயல்.. என்று.. ஒன்றும் கிடையாது. அதிலும் தடைகளை இனங்காட்டி.. எல்லாத்தையும் கூட்டாக வைச்சிருந்து.. ஒன்றாக சேரவிட்டு அழிவதிலும் ஒவ்வொன்றா..நீக்கி.. சொல்ல வேண்டிய செய்திகளைச் சொல்லி.. அழிவது ஒன்றும்.. பெரிய கொள்கைத் தோல்வி அல்ல..! எப்படியோ அழிச்சிருப்பீர்கள்.. இது எதிர்த்து நின்று.. வெளிநாடுகளுக்கு ஓட விட்டு அழிஞ்சதால்.. உங்களால் இப்படி பேச.. எழுத முடிகிறது அல்லவா. அதற்கு தடைநீக்கிகளுக்கு நன்றி சொல்லிக்குங்க. :icon_idea:

 

லலித்தை விட்டிருந்தா.. நீங்க எல்லாம் ஓடமுதலே போட்டுத் தள்ளி இருப்பான். இப்படி எழுத கிருபன் இருந்திருக்கார். :lol:

ஹாட்லியோடு சேர்த்து தரைமட்டமாக்கி இருப்பார். :)

 

 

அவர் சொல்லவாறது வேற..

 

ஒரு கள்ளனை ஒழித்தால் இன்னொருவன் வராமலா இருக்கிறான்?

ஒரு வன்புணர்வாளனை ஒழித்தால்

அதைவிட பலம் கொண்டவன் வருவான்?

 

எனவே சும்மா வேடிக்கை பாருங்கள்... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொல்லவாறது வேற..

 

ஒரு கள்ளனை ஒழித்தால் இன்னொருவன் வராமலா இருக்கிறான்?

ஒரு வன்புணர்வாளனை ஒழித்தால்

அதைவிட பலம் கொண்டவன் வருவான்?

 

எனவே சும்மா வேடிக்கை பாருங்கள்... :(

 

கிருபனிடம் கேட்டால்.. எல்லாம் பெரியார் வாயால் வீழ்த்தி விடுவார் என்று தான் சொல்லுவார். அவருக்கு சிந்தனை.. தன் வாசக எல்லைக்குள் தான்.

 

கள்வனை பிடிக்க பொலீஸ் இருப்பது கூட... அவரைப் பொறுத்தவரை அநாவசியம். ஒரு கள்வனை வளர விட்டால்.. மற்றவர்கள் தானே திருந்திவிடுவார்கள்.. பிற கள்வர்களே வரமாட்டார்கள் என்பது அவரின் இலட்சியவாதக் கொள்கை. அதுக்கு உலகம் இடம்கொடுக்கனுமே. ஒருவேளை செவ்வாயில் இதனை அமுலாக்க உள்ளார் போலும். விட்டுத்தள்ளுங்க. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாழ் தாங்கள் கூற வருவது.. லலித் அத்துலத் முதலி முதல் கோத்தா வரை.. செய்தது நியாயம் என்றோ. அவர்களை அழிச்சாலும் அழிக்காவிட்டாலும்.. பேரினவாதமும்.. பிராந்திய வல்லாதிக்கமும் தொடர்ந்தே இருக்கும். எமது இனம் அழிக்கப்பட்டுக் கொண்டே இருந்திருக்கும்.

லலித்தை விட்டிருந்தா.. நீங்க எல்லாம் ஓடமுதலே போட்டுத் தள்ளி இருப்பான். இப்படி எழுத கிருபன் இருந்திருக்கார். :lol:

ஹாட்லியோடு சேர்த்து தரைமட்டமாக்கி இருப்பார். :)

நான் ஒருபோதும் சிங்களவர்கள் செய்தது நியாயம் என்று சொல்லவில்லை. சொல்லவும் போவதில்லை. எமது இனம் தொடர்ந்தும் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பது பிறர் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

எமது பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைத் தேடாமல் அரசியல் தலைவர்களை அழித்தால் தீர்வு கிடைத்துவிடும், நியாயம் கிடைத்துவிடும் என்று இப்போதும் நம்புவர்கள் எதையும் எமது அழிவில் இருந்து கற்றுக்கொள்ளவில்லை. இனியும் கற்கப்போவதில்லை. இவர்களால் முடிந்ததெல்லாம் யாகம் செய்வதும் சாபம் போடுவதும்தான்.

 

 

அவர் சொல்லவாறது வேற..

 

ஒரு கள்ளனை ஒழித்தால் இன்னொருவன் வராமலா இருக்கிறான்?

ஒரு வன்புணர்வாளனை ஒழித்தால்

அதைவிட பலம் கொண்டவன் வருவான்?

 

எனவே சும்மா வேடிக்கை பாருங்கள்... :(

என்னதான் எண்ணையைப் பூசிக்கொண்டு மணலில் உருண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும் விசுகு ஐயா :lol:

 

 

கிருபனிடம் கேட்டால்.. எல்லாம் பெரியார் வாயால் வீழ்த்தி விடுவார் என்று தான் சொல்லுவார். அவருக்கு சிந்தனை.. தன் வாசக எல்லைக்குள் தான்.

 

கள்வனை பிடிக்க பொலீஸ் இருப்பது கூட... அவரைப் பொறுத்தவரை அநாவசியம். ஒரு கள்வனை வளர விட்டால்.. மற்றவர்கள் தானே திருந்திவிடுவார்கள்.. பிற கள்வர்களே வரமாட்டார்கள் என்பது அவரின் இலட்சியவாதக் கொள்கை. அதுக்கு உலகம் இடம்கொடுக்கனுமே. ஒருவேளை செவ்வாயில் இதனை அமுலாக்க உள்ளார் போலும். விட்டுத்தள்ளுங்க. :lol:

இப்படியே கிச்சுக்கிச்சு மூட்டி உங்களை எல்லாம் சந்தோசமாக இருக்க உதவிபுரிகின்றேன் என்பதையிட்டுப் பெருமிதம் கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் - நீங்களும் ஆதித்யா சேனல் subscription ஐ கான்சல் செய்துவிடுங்கள். ஐயாவும் டாக்குத்தரும் போதும். கவுண்டர் செந்த்ஹில் தோத்தார் போ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.