Jump to content

சாட்சியம் காலத்தின் கட்டாயம்


Recommended Posts

சாட்சியம்
காலத்தின் கட்டாயம்


படுகொலைகள்
பாலியல் வல்லுறவுகள்
சித்திரவதைகள் என
எம்மினம் சின்னாபின்னப்படுத்தப்பட்டு
எமது தேசமும் எரிக்கப்பட்டபோது
உலகம் கண்மூடி நிற்க
உண்மைகள் புதைக்கப்பட்டன.

இப்போ
சீமெந்துச் சுவரில்
முளைவிட்ட சிறு விருட்சம்போல்
உண்மை மெல்ல மெல்ல வெளியேறுகிறது.

தன்கடமையை மறந்த
ஐ. நா மன்று கதிகலங்கி நிற்க
மனிதவுரிமை மனச்சாட்சியாய் வாய்திறக்கிறது.
சாட்சியம் கோரி வாய்திறக்கும் மனிதவுரிமை
ஆதரவில்லாமல் அனாதையாய்விடக் கூடாது.

பார்த்ததை பகிர்ந்ததை பட்ட துன்பத்தை
துணிவுடன் எடுத்துக் கூறி தமிழர்
துயர் துடைக்க சாட்சியம் வழங்கு

சாட்சியமில்லாவிடத்து
உண்மையும் அனாதையாகிவிடும்.
மனச்சாட்சியும் மௌனமாகிவிடும்.

தயங்காதே!
தமிழீழ விடுதலைக்காய்
தன்னை ஆகுதியாக்கிய
மாவீரரை மனதிலே நினை.
அவர் கனவுகனை நனவாக்க
அழிக்கப்பட்ட எம்மக்களின்
ஆன்மா அமைதிபெற
சுhட்சியம் அளிப்பாய்
அளிக்கச் செய்வாய்
இது காலத்தின் கட்டாயம். .

செண்பகன்
25.08.14

 

Link to comment
Share on other sites

சாட்சியமில்லாவிடத்து
உண்மையும் அனாதையாகிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்ததை பகிர்ந்ததை பட்ட துன்பத்தை
துணிவுடன் எடுத்துக் கூறி தமிழர்
துயர் துடைக்க சாட்சியம் வழங்கு...

 

நன்றி  ஐயா  கவிதைக்கும் பரிந்துரைக்கும்..

Link to comment
Share on other sites

இந்த விசாரணையின் முடிவீல் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பீக்கை இல்லாவீட்டாலும் சகல வழிகளிலும் முயல்வதில் தவறில்லை அல்லவா?

 

எனவே எம்மிடம் உள்ள ஆதாரங்கள் உரியவர்களின் கைகளுக்குக் கிடைக்க அனைவரும் உதவுவோம்....

 

படைப்பிற்கு வாழ்த்துக்கள் சகோதரனே!

Link to comment
Share on other sites

யாழ் இணையத்தில் பல விடுதலை விரும்பிகள் இருக்கிறார்கள்.  ஏனோ சாட்சியம் அளிப்பதில் அக்கறை செலுத்தவில்லை.  என்றாலும் இப்பக்கம் வந்து கருத்துக் கூறிய   kkaran,    விசுகு,   Manivasahan       ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.