Jump to content

சாதனை சிகரம் கமலை நினைத்து பெருமை கொள்வோம்!


Recommended Posts

- நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர். களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக தேசிய விருது பெற்றார்.- விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள் சிறந்த படத்திற்கான விருதுகள் தரப்பட்டது.

- இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.- இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர். திலீப் குமாரே 14 பிலிம்பேர் விருதுகள் தான் வாங்கியிருக்கிறார்.

- இதுவரை உலகிலேயே அதிக விருதுகள் (171 விருதுகள்) பெற்ற ஒரே நடிகர் டாக்டர் கமல்ஹாசன் மட்டுமே.

- டாக்டர் கமல்ஹாசன் இந்தியாவில் குடிமகன்களுக்கு வழங்கப்படும் விருதுகளிலேயே 4வது சிறந்த விருதான பத்மஸ்ரீ பெற்றிருக்கிறார்.

- சமீபத்தில் கமல்ஹாசனுக்கு அவர் செய்யும் கலைசேவைகளுக்காக சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் "டாக்டர்" பட்டம் கையளிக்கப் பட்டது.

- டாக்டர் கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இதுவரை 450 மில்லியன் சம்பாதித்திருக்கிறது.

- டாக்டர் கமல்ஹாசனின் கனவுப்படைப்பான மருதநாயகம் இங்கிலாந்து மகாரானி எலிஸபெத்-2 அவர்களால் துவக்கப்பட்டது.

- உலகிலேயே ரசிகர் மன்றங்களை மக்களுக்கு சேவை செய்யும் நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர் டாக்டர் கமல்ஹாசன்.

- டாக்டர் கமல்ஹாசன் மற்றும் அவரது நற்பணி இயக்கத்தினர் இதுவரை 10000 ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள். 10000 கிலோ அரிசியை மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

- 100 கோடி ரூபாய் தருகிறோம் என ஒரு அரசியல் கட்சி அழைத்தும் அதை துச்சமாக மதித்தவர் டாக்டர் கமல்ஹாசன்.

- இரண்டுமுறை ஆந்திர அரசின் மாநில விருதைப் பெற்றவர் டாக்டர் கமல்ஹாசன்.

- 8 முறை தமிழக அரசின் மாநில விருதைப் பெற்று மாபெரும் சாதனை புரிந்தவர் டாக்டர் கமல்ஹாசன்.

- டாக்டர் கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கலைமாமணி பட்டமும் வழங்கி கவுரவித்திருக்கிறது.

- டாக்டர் கமல்ஹாசனுக்கு மற்ற கலையுலக வித்தகர்களால் வழங்கப்பட்ட பட்டங்கள் "காதல் இளவரசன்" - ஜெமினி கணேசன், "புரட்சி மன்னன்" - கே. பாலச்சந்தர், "சூப்பர் ஆக்டர்" - பஞ்சு அருணாசலம், "கலைஞானி" - டாக்டர் கலைஞர், "உலக நாயகன்" - கே.எஸ். ரவிக்குமார்.

- The Fuel Instrument Engineers (FIE) Foundation, (Ichalkaranji, Maharashtra ) எனும் அமைப்பு நம் காலத்தில் வாழும் சிறந்த இந்தியர் எனும் விருதை டாக்டர் கமல்ஹாசனுக்கு வழங்கி இருக்கிறது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் 5 பேர் மட்டுமே (டாடா உட்பட)

- சென்னை ரோட்டரி சங்கமும் டாக்டர் கமல்ஹாசனுக்கு "சிறந்த மனிதர்" விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

- டாக்டர் ஏ.டி. கோவூர் தேசிய விருது சிறந்த மனிதாபிமானம் மற்றும் சமூகசேவைகளுக்காக டாக்டர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை வழங்கியவர்கள் Bharatheeya Yukthivadi Sangham (Rationalist Association of India ).

- மதுரையில் திரைப்படத் துவக்க விழா செய்த ஒரே நடிகர் டாக்டர் கமல்ஹாசன் மட்டுமே. விருமாண்டிப் படத்துக்கான துவக்க விழா மதுரையில் நடைபெற்றது.

- டாக்டர் கமல்ஹாசனுடன் இன்டெல் நிறுவனம் இணைந்து இந்தியாவில் டிஜிட்டல் எண்டெர்டெயிண்ட்மெண்டை அறிமுகப்படுத்த பணியாற்றி வருகிறது. அந்த நிறுவனம் இந்தியாவில் டாக்டர் கமல்ஹாசன் ஒருவருடன் மட்டுமே இதுபோல ஒரு பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- ஒரே ஆண்டில் 5 சில்வர்ஜூப்ளி திரைப்படங்களை அளித்தவர் டாக்டர் கமல்ஹாசன் மட்டுமே. எந்த ஒரு நடிகராலும் இந்த சாதனையைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. அந்தப் படங்கள் : 1982 - ஜன. 26 - வாழ்வே மாயம் (200 நாள்), பிப். 19 - மூன்றாம் பிறை (329 நாள்), மே 15 - சனம் தேரி கஸம் (175 நாள்), ஆக. 14 - சகலகலா வல்லவன் (175 நாள்), அக். 29 - ஹே தோ கமல் ஹோகயா (175 நாள்)

- டாக்டர் கமல்ஹாசன் நடித்த மரோசரித்திரா பெங்களூரின் கவிதா தியேட்டரில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதே படம் சென்னை சபையர் திரையரங்கில் 600 நாள் ஓடியது.

- மரோசரித்திரா இந்தியில் "ஏக் துஜே கலியே" என்ற பெயரில் எடுக்கப்பட்டு அங்கும் 350 நாள் ஓடியது.

- அகில இந்திய ரசிகர் மன்ற மாநாட்டினை இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு நடிகர் நடத்தியது என்றால் அந்தப் பெருமை டாக்டர் கமல்ஹாசனையே சாரும். இவர் 1985ல் கோவையில் இந்த மாநாட்டினை நடத்தினார்.

- இவரது நூறாவது படமான ராஜபார்வையில் நடிக்கும்போது இவரது வயது 27.

- டைம்ஸ் பத்திரிகை இவர் நடித்த நாயகன் திரைப்படத்தை உலகின் சிறந்த 100 படங்களுக்குள் வகைப்படுத்தியிருக்கிறது.

- உடல்தானம் செய்த ஒரே நடிகர் டாக்டர் கமல்ஹாசன் தான். சென்னை மருத்துவக்கல்லூரியில் ஆகஸ்டு 15, 2002 அன்று இதைச் செய்தார்.

- இந்தியத் திரைப்படங்களிலேயே முதன்முறையாக அனிமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது டாக்டர் கமல்ஹாசனின் 100வது படமான ராஜபார்வையில் தான்.

- தமிழில் மார்பிங் தொழில்நுட்பம் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது டாக்டர் கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜனில் தான்.

- ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் மேன் வரவழைத்து மேக்கப் போடப்பட்ட முதல் இந்தியப்படம் "இந்தியன்"

- கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முதன்முதலாக ஒரு இந்தியத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது என்றால் அது டாக்டர் கமல்ஹாசன் நடித்த மங்கம்மா சபதம் திரைப்படத்தில் தான்.

- ஹாலிவுட் படமொன்றில் மேக்கப் அசிஸ்டண்டாகப் பணிபுரிந்து அந்தப் படத்தின் டைட்டிலிலும் டாக்டர் கமல்ஹாசனின் பெயர் வந்திருக்கிறது.

- சென்னையில் முதன்முதலாக ஆயிரம் காட்சிகள் தொடர்ந்து அரங்குநிறைந்து ஓடிய படம் சகலகலா வல்லவன்.

- கொடைக்கானலில் இருக்கும் ஒரு குகையை கண்டுபிடித்து அதில் குணா படத்தின் படப்பிடிப்பை நடத்தியதால் அந்த குகைக்கே "குணா குகை" என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

- டாக்டர் கமல்ஹாசனுக்கு இதுவரை 34 முறை படப்பிடிப்புகளில் எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கிறது. டூப் போட்டு கும்மி அடிக்கும் மற்ற நடிகர்களில் வித்தியாசமானவர் நம் தலைவர்.

- தமிழ் திரையுலக சகாப்தங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூன்று பேருடனும் நடித்தவர் டாக்டர் கமல்ஹாசன்.

- உலகிலேயே முதன்முறையாக 10 மாறுபட்ட வேடங்களில் தசாவதாரத்தில் நடித்து வருகிறார்.

......... டாக்டர் கமல்ஹாசனின் சாதனைகள் தொடரும்.

(http://madippakkam.blogspot.com)

Link to comment
Share on other sites

உண்மையை சொன்னால் எனக்கு கமலை எப்போதும் பிடிச்சதில்லை.... அதுக்காக ரஜனி ரசிகனா எண்டாதேங்கோ... ரஜனியின் நகைச்சுவை கலந்து வந்த எல்லாப்படங்களும் பிடிக்கும்....! விஜயக்காந்தின் பாட்டுக்கு ஒரு தலைவன் படத்தில் இருந்து அவரின் நகைச்சுவை நடிப்பை ரசிசேன்...! அதேபோலத்தான் பாக்கியராஜ், பாண்டியராஜன், படங்களும் பிடிக்கும்(எல்லா படங்களும் இல்லை)... ஆனாக் கமலின் நகைச்சுவை ஏதோ ஒடாத்து போல ஒரு உணர்வு வரும்... தவிர்க்க முடியவில்லை...

எண்றால்லும் மற்றவர்களுக்கு பிடித்த கலைஞராய் இருக்கும் இருக்கும் கமலுக்கு வாழ்த்துக்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன்னுக்கு கவிபாடத்தான் கவிஞ்ஞர்கள் ஆயிரம்

யார்தான் கஞ்சிக்கு கவிபாடும் கவிஞ்ஞர்கள்

அவர்தாம் வேண்டும் எம்மண்ணின் துயர்துடைக்க

Link to comment
Share on other sites

பொன்னுக்கு கவிபாடத்தான் கவிஞ்ஞர்கள் ஆயிரம்

யார்தான் கஞ்சிக்கு கவிபாடும் கவிஞ்ஞர்கள்

அவர்தாம் வேண்டும் எம்மண்ணின் துயர்துடைக்க

ஆயிரத்தி ஒரு வார்த்தை சொன்னீங்கள் அண்ணா

:idea: :idea: :idea:

Link to comment
Share on other sites

சில பேர் தங்களை எப்பவும் மற்றவர்கள் புத்திசாலிகளாக நினைக்க வேண்டும் என்று காட்டும் பகட்டு இருக்கிறதே... யப்பா தாங்க முடியலை....

இவர்களை நினைத்தால் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை......

Link to comment
Share on other sites

புத்திசாலியாக கவி பாடியிருந்தால் கவி கேட்டதும் கலசத்தில் பொற்காசுகள் பரிசாக கிடைத்திருக்கும்.

ஆனால் கஞ்சிதான் கிடைக்குதென்றால் பாடிய கவி பிச்சை கேட்பதாக யாரோ இரக்கப்பட்டு ஊத்தியதாகவிருக்கும். :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில பேர் தங்களை எப்பவும் மற்றவர்கள் புத்திசாலிகளாக நினைக்க வேண்டும் என்று காட்டும் பகட்டு இருக்கிறதே... யப்பா தாங்க முடியலை....

இவர்களை நினைத்தால் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை......

என்ன லக்கி உங்களை நீங்களே மனசுக்க திட்டுற மாதிரி இருக்கு :lol::lol: :oops:

Link to comment
Share on other sites

சில பேர் தங்களை எப்பவும் மற்றவர்கள் புத்திசாலிகளாக நினைக்க வேண்டும் என்று காட்டும் பகட்டு இருக்கிறதே... யப்பா தாங்க முடியலை....

இவர்களை நினைத்தால் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை......

அதில என்ன தப்பு இருக்கு து முடிந்தா நீங்களும் காட்டுறது தானே

:idea: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்திசாலியாக கவி பாடியிருந்தால் கவி கேட்டதும் கலசத்தில் பொற்காசுகள் பரிசாக கிடைத்திருக்கும்.

ஆனால் கஞ்சிதான் கிடைக்குதென்றால் பாடிய கவி பிச்சை கேட்பதாக யாரோ இரக்கப்பட்டு ஊத்தியதாகவிருக்கும்.

:P :lol:

எச்சிலிலைத் தேசியவாதமே

என்ன அபாரமான சிந்தனை இதுதான் உம் அபாரமான புரிதலறிவுக்கு கட்டியம் கூறுகின்ற உரைக்கல்லோ?

Link to comment
Share on other sites

புத்திசாலியாக பாடி அது சலிக்காமல் போக சொல்லி பொற்காசு கொடுத்திருக்கலாம் ஆனால் கஞ்சி பாடி களைத்து விட்டான் என்றும் கொடுத்திருப்பார்கள்

:evil:

Link to comment
Share on other sites

பொற்காசுகள் கிடைத்திருந்தால் மேலும் மேலும் ஊக்குவிப்பதாகவே இருக்கும். அதனால் கவிக்கு இன்னும் பாடி நிறையப் பெற வேண்டும் என்ற ஆசையே மேலெழும்.

ஆனால் கஞ்சி கிடைத்திருந்தால் அது கவியை ஊக்கப்படுத்தாது. அதனால் கவி சலிப்படைந்து அந்த இடத்தைவிட்டு போகவே விரும்புவார்.

Link to comment
Share on other sites

அண்ணா ஒரு மனிதனை பாராட்டுவது பொற்காசு இல்லை சபையின் கைதட்டலும் இல்லாதவன் கூட கஞ்சிகொடுத்து வாழ்த்தினா அவன் தான் சிறந்த புலவன் என்பது எனது கருத்து

Link to comment
Share on other sites

இல்லாதவனுக்கு இருப்பவன் கொடுப்பது சிறப்பானது தான். ஆனால் இங்கு ஒரு கவிக்கு எது கிடைக்கின்றது என்பதை வைத்துத் தான் அவரது கவிதையின் சிறப்பு பார்க்கப் படுகின்றது. அதனைத்தான் நான் குறிப்பிட்டேன்.

மற்றும்படி உங்கள் சிந்தனையில் தப்பில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் முன்பு விரும்பிப் பார்த்த படங்கள் கமல்காசனின் படங்கள். ஆயினும் தற்போதைய படங்களில் முன்பு இருந்த கமலைக் காணமுடிவதில்லை. வாழ்த்துக்கள் கமலிற்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயதும் போய்ட்டு தொந்தியும் போட்டாயிற்று அதுதானே பிறேம் சார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்றும், இன்றும், என்றும் பிடித்த தமிழ் நடிகர் - கமல்ஹாசன்..

மேலும் தரமான படைப்புக்களைத் தந்து தமிழ்த் திரையுலகத்திற்கு சேவை செய்ய வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

சிவாஜிக்குப் பின் தமிழ்த் திரைப்பட இரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய ஒரு கலைஞர். ஏனோ நாயகன் திரைப்படத்தின் பின் இன்னும் ஒரு பெயர் சொல்லும் திரைப்படம் அமையவில்லை. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் சிவாஜி போல் கமலின் பெயரும் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.

கமலுக்கு என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

¸Áø º¢Èó¾ ¿Ê¸÷ ±ýÀ¾¢ø ºó§¾¸§Á¢ø¨Ä

¿¡Â¸ý, ÌÕ¾¢ôÒÉø,Á¸¡¿¾¢ §À¡ýÈ À¼í¸û «Åâý ¾¢È¨ÁìÌ ¿øÄ ±ÎòÐ측ðÎ. ¬É¡ø ÓØ¿£Ç ¿¨¸îͨŠÀ¼í¸¨Ç ¾Å¢÷ò¾¢Õì¸Ä¡õ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Á¸¡¿¾¢ படம் பார்த்து அழுது விட்டன். மனம் ஜிரணிக்க முடியாமல் இருந்த்து.

Link to comment
Share on other sites

Á¸¡¿¾¢ படம் பார்த்து அழுது விட்டன். மனம் ஜிரணிக்க முடியாமல் இருந்த்து.

சீ ஆ

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

சீ ஆ

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

சின்னா அழுறது என்னால் ஜிரணிக்க முடியாமல் இருக்கு

:cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.