Jump to content

பிக் டேட்டா: முக்காலமும் அறியலாம்…


Recommended Posts

10_2091284h.jpg
 

சென்ற வாரம் தி இந்து தமிழ் வாசகர் ஒருவர், ``என் மனைவிக்குத் தெரியாத என்னைப் பற்றிய விஷயங்களைக்கூட 'கூகுள்' தெரிந்து வைத்திருக்கிறது’’ என்று கமெண்ட் போட மற்றொருவரோ `எனக்கே தெரியாத என்னைப் பற்றிய விஷயங்களைக்கூட 'கூகுள்' தெரிந்து வைத்திருக்கிறது’ என்று ஒரு காமெடி கமெண்ட்டை போஸ்ட் செய்திருந்தார். அது காமெடியல்ல. அப்பட்டமான உண்மை என்பதை நாம் உணராமலேயே அலைந்து கொண்டிருக்கின்றோம். அது என்ன அலைந்து கொண்டிருக்கின்றோம் என்று கிண்டல்? நாம நம்மளுடைய பிழைப்பையல்லவா பார்க்கின்றோம் என்று நீங்கள் சொல்லலாம். பிழைப்புக்காக நாம் சுற்றித்திரியும் போது நாம் விட்டுச்செல்லும் தடயங்களை வைத்து தொழிலுக்கும், தனி மனிதனுக்கும் உபயோகப்படுமளவிற்கு மாற்ற உதவுவதுதான் அனலிடிக்ஸ்.

கடந்த சில வருடங்களில் எற்பட்டுள்ள தொலைத்தொடர்பு சார்ந்த அறிவியல், தொழில்நுட்பம், இன்டெர்நெட் முன்னேற்றங்களினால், நாம் செய்யும் பெரும்பாலான காரியங்களினால் நமக்கே தெரியாமல் உருவாகும் பல டிஜிட்டல் தடயங்கள் (digital traces) ஆங்காங்கே ஆவிகள் போல உலாவிக்கொண்டிருக்கின்றன.

நீங்கள் ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோருக்குச் சென்று பொருட்கள் வாங்கும் போது, மாணவர்கள் கல்லூரி வகுப்புகளை கட் அடித்து விட்டு ஏதாவது ஒரு மாலில் (Mall) உள்ள சினிமா தியேட்டருக்குச் செல்லும்போது, நவீன ஒப்பனை நிலையத்தில் ஹேர் ஸ்டைல் செய்து கொள்ளும்போது, மொபைல் போனில் பேசும் போது, பிரவுசிங் செய்யும் போது, நண்பர்களுடன் ஜாலியாய் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் போது - இப்படி எங்கு போனாலும், என்ன செய்தாலும் அந்தந்த இடங்களில் உருவாகும் டிஜிட்டல் தடயங்களை எல்லாம் கூட்டி ஒன்று சேர்த்தால் அவைகள் உங்களைப் பற்றியும், உங்கள் எண்ணங்களைப் பற்றியும், உங்கள் விருப்பங்கள், வெறுப்புகள், நிறைவேறாத, மனதில் அடக்கி வைத்திருக்கும் ஆசைகள்(!) என்று உங்களைப் பற்றிய ஒரு அழகான உண்மைக் கதையையே சொல்லக்கூடும்.

பேஸ் புக்கிலோ, ட்விட்டரிலோ அல்லது வாட்ஸ் அப்பிலோ உங்கள் நண்பர்களுக்காக, இந்த உலகத்திற்காக நீங்கள் தெரியப்படுத்தும் விசயங்கள் அனைத்தும் சென்சார் செய்யப்பட்டவைதான். ஆனால், உங்கள் டிஜிட்டல் தடயங்களும், குப்பைகளும் மிக அப்பட்டமான உண்மையானவை.

எப்படி அனலெடிக்ஸ் ஒருவருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும் என்பதற்கு சனிக்கிழமை தி இந்து தமிழில் “நீங்கள் அதிகம் பதற்றமடைகிறீர்களா?- உங்கள் பேஸ்புக் போட்டோ பகிர்வுகளை சற்று கண்காணியுங்கள்” என்ற தலைப்பில் வந்த, லண்டனில் வெளியான ஒரு ஆய்வறிக்கை ஒரு நல்ல உதாரணம்.

அந்த ஆய்வறிக்கையில்: "ஒருவர் அதிகமான பதற்றத்துடன் காணப்படுவதற்கும், பேஸ்புக்கில் புகைப்படங்களை மிக அதிக அளவில் அப்லோட் செய்வதற்கும் நேரடியாக தொடர்பு இருக்கிறது. பிறரால் கண்டுகொள்ளப்பட வேண்டும், அதிகமான “லைக்ஸ்” வேண்டும் என்று எண்ணுபவர்களே இப்படி அதிக அளவில் போட்டோக்களை பேஸ்புக்கில் பதிவேற்றுகின்றனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில், அவர்கள் பிறரிடம் சகஜமாகப் பழகுபவராக இருப்பதில்லை என்றும் சமூக வலைதளங்களில் தங்கள் எண்ணங்களை எடுத்துரைப்பதில் தேர்ந்தவராகவும் இருப்பதில்லை என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒவ்வொருத்தரைப் பற்றியும் சேர்க்கப்படும் விஷயங்கள் கற்பனைக்கெட்டாத, எண்ணில் அடங்காத அளவு பூதாகரமானவை. இதில் பயம் கலத்த உண்மை, அதே சமயம் புல்லரிக்கும் விஷயம் என்னவென்று தெரியுமா? இது மனித இயல்பை, மனித உணர்வுகளை, மிக ஆழமாகவும், முழுமையாகவும் அப்பட்டமாகவும் HD தரத்தில் படம் பிடித்து காட்டும் சகலகலா வல்லமை படைத்தது அனலிடிக்ஸ். நம்மை பற்றிய, நாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாத பல உண்மைகளும் அடங்கியது என்பதுதான் அது. இந்தத் தடயங்களை எந்த ரப்பரையும் வைத்து அழிக்க முடியாது. நாம் கவனமாக இல்லா விட்டால் இனி வரும் காலங்களில் அந்தரங்கம் (பிரைவசி) என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கப்போகின்றது எனலாம்.

அந்தரங்கத்தன்மை போகின்றது என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் இந்த டிஜிட்டல் தடயங்கள் நமக்கு எப்படியெல்லாம் உதவி செய்யமுடியும் என்பதுதான் ஆச்சரியம்தரும் ஒரு விஷயம்.

கோடம்பாக்கத்திலிருந்து தினமும் இந்து அலுவலகத்திற்கு ஒருவர் செல்ல வேண்டும் என்றால் கோடம்பாக்கம் சாலையில் நீண்ட தூரம் பயணித்தாக வேண்டும். காலையில் வேலைக்கு கிளம்பும் போது மட்டும் நாம் அனைவரும் எப்படி தினமும் லேட்டாக கிளம்ப முடிகிறது என்பது புரியாத விஷயம். அப்படி ஏற்கனவே லேட்டாக வீட்டிலிருந்து கிளம்பும் போதே கோடம்பாக்கம் சாலையில் ஒரு பிரச்சினையினால் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு டிராபிக் ஜாம் ஆகி எல்லோரும் மாட்டிக்கொண்டு, பொறுமை இல்லாமல் ஹார்ன் அடித்து நின்று கொண்டு இருந்தால் அது நமக்கு தெரிய வாய்ப்பே இல்லை. தெரியாமல் நாமும் போய் மாட்டிக்கொண்டு முழிக்காமல், வீட்டில் கிளம்பும் போதே ‘பிரதர், அந்த ரோடில் போக வேண்டாம், ட்ராபிக் ஜாம் பயங்கரமாக இருக்கிறது. ஓரு மணி நேரத்திற்கு மேல் லேட்டாகி விடும். வேற வழியில் ஓடிப்போயிடு’ என்று எச்சரிக்கக்கூடியது அனலிடிக்ஸ். கூடவே போவதற்கு எது சரியான வழி என்றும் காட்டக் கூடியது.

அதே போல், நீங்கள் வழக்கமாக அலுவலகம் செல்லும் டவுன் பஸ், எங்கோ ஒரு இடத்தில் ரிப்பேராகி நின்று கொண்டிருப்பது தெரியாமல் நீங்கள் பஸ் ஸ்டாப்பில் கடிகாரத்தையும் ரோட்டையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருக்கும் போது, ‘உன் பஸ் வரும்! ஆனா, இப்போதைக்கு வராது! ஆட்டோவோ அல்லது கால் டேக்ஸியோ பிடித்து ஆபீஸ் போறதுதான் நல்லது’ என்று சொல்லக்கூடியது. எந்தெந்த சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும், எந்தெந்த இடங்களில் கழுத்தில் இருக்கும் செயின் அறுக்கப்படும் வாய்ப்புள்ளது என்று அறிவுறுத்தும்.

மற்றுமொறு மிக அற்புதமான ஒரு விஷயம், நமக்குத் தெரியாமல் நம்மில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து தகுந்த சமயத்தில் உஷார் படுத்தவும் கூடும். திடீரென்று அடிக்கடி வெளியில் வழக்கமாக செல்வதைத் தவிர்த்து, அலுவலக விஷயங்களைத் தவிர்த்து முக்கிய நண்பர்களுக்கு அடிக்கடி போன் செய்தால், உங்களுக்கு ஏதோ பிரச்சனை உள்ளது என்றறிந்து உடனே டாக்டரை சென்று பாருங்கள் என்று கூடச் சொல்லும் வாய்ப்புள்ளது. இரும்பிலே ஒரு இருதயத்தை டைரக்டர் ஷங்கர் முளைக்க வைத்ததைப் போல, செல்போனில் ஒரு சினேகிதனை அனலெடிக்ஸ் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பது உறுதி.

பிசினஸிற்கு இது எப்படி உதவும் என்கின்றது என்பதைக் கேட்டால் உங்களின் ஆச்சரியம் உச்சத்துக்கு செல்லும். தீபாவளி ரிலிஸ் படத்துக்கு தியேட்டருக்கு ஒருவாரம் கழித்துப்போனாலுமே துணிக்கடை விளம்பரம் திரையில் வருவதை இப்போது நாம் பார்க்கின்றோம். வரும் காலத்தில் பகல் காட்சிக்கு கல்லூரி மாணவர்கள் கூட்டமாக வந்தால் அவர்களுடைய செல்போன் பதிவுகளை அலசி பேஸ்புக்கில் அவர்களில் பெரும்பாலானோர் லைக் செய்திருக்கும் அயிட்டங்களின் விளம்பரம் மட்டுமே திரையிடப்பட்டு அந்த நிறுவனங்களிடம் மட்டுமே பணம் வசூலிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. திரையரங்கின் உள்ளே இருக்கும் கூட்டத்தின் பல்ஸைப் பார்த்து விளம்பரம் போடும் உத்தி வெற்றியளிக்கவே செய்யும் இல்லையா? வெட்டியாய் பல்லே இல்லாதவர்கள் கூட்டத்துக்கு பக்கோடா விளம்பரத்தை காண்பிப்பதில் பிரயோஜனம் எதுவுமில்லையே!

தொடர்புக்கு: cravi@seyyone.com

 

http://tamil.thehindu.com/business/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article6377050.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

Source : http://www.vinavu.com

 

ன் உயிரைப் பற்றிக்கூட கவலைப்படாமல் அமெரிக்க அரசின் ஒட்டுக் கேட்பு மற்றும் இணைய கண்காணிப்பு சதித்திட்டத்தை 29 வயது இளைஞர் எட்வர்டு ஜோசப் ஸ்னோடன் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஒட்டுக் கேட்பு திட்டத்தில் ஏதோ அமெரிக்க மக்கள் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள பல நாட்டு மக்களும் சிக்கியிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் கண்காணிப்பு வலையில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. கார்டியன் பத்திரிகை தகவல் படி ஒரு மாதத்தில் மட்டும் இந்திய மக்களுடைய 6.3 பில்லியன் இணைய தகவல்கள் அமெரிக்க அரசால் சேகரிக்கப்பட்டுள்ளன. தனது நாட்டு மக்களுடைய ஜனநாயக உரிமை இப்படி மலிவாக கொல்லப்படுகிறதே என்ற கவலை கூட இந்திய அரசுக்கு இல்லை. அமெரிக்காவின் இந்த உளவு வேலைகள் பொதுவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், விரிவான தகவல்கள் வந்ததும் விசாரிக்கிறோம் எனவும் இந்திய அரசின் வெளிவிவகாரத்துறை தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலேயே நாட்டின் இறையாண்மையை மலிவாக கொடுத்தவர்கள் மக்களது உரிமை பறிபோவதற்கா குரல் கொடுப்பார்கள்?

Increased-Surveillance.jpg

ஜனாதிபதி வெளிப்படைத்தன்மை அதிகமாகும் என்று சொன்னது, இதைத்தான் போலிருக்கிறது!

ஒருவருடைய செல்பேசி மற்றும் மின்னஞ்சல், கடவுச் சொல், கடன் அட்டை உள்ளிட்ட அனைத்து இணைய பயன்பாடுகளது தகவல்களை சேகரிப்பதால், அல்லது நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் சமூக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு குடிமகனது துல்லியமான டைரிக்குறிப்பை அரசு பதிவு செய்வதால் என்ன பிரச்சினை ஏற்படும்?

அமெரிக்க அரசோ இல்லை இந்திய அரசோ தீவிரவாதிகளது தாக்குதல்களை முறியடிக்க வேண்டுமானால் இத்தகைய கண்காணிப்பு தேவைதானே என்று பலர் இயல்பாகவே நியாயப்படுத்தலாம். ஸ்னோடனின் அம்பலப்படுத்தல் வந்த பிறகு அமெரிக்க மக்களிடையே எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் 26% மக்கள் அரசின் கண்காணிப்பை ஆதரித்தும், 59% மக்கள் எதிர்த்தும் தெரிவித்திருக்கின்றனர். மற்றொரு கருத்துக் கணிப்பில் 56% மக்கள் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் (என் எஸ் ஏவின்) கண்காணிப்பை அங்கீகரித்திருக்கின்றனர்.

இந்தியாவிலும் கூட இத்தகைய கண்காணிப்பு தேவையா என்று கேட்டால் மோடியை ஆதரிக்கும் ‘இந்து’ நடுத்தர வர்க்கம் தேவைதான் என்று சட்டென்று கூறிவிடும். இவர்களைப் பொறுத்தவரை முசுலீம்கள் அனைவரும் கண்காணிக்கப்படவேண்டியவர்கள், தங்களைப் போன்ற பாரத தேசத்தை நேசிக்க கூடியவர்களை கண்காணிப்பதால் எந்த இழப்பும் இல்லை என்று நியாயப்படுத்துவார்கள். இதையே நாட்டின் பாதுகாப்புக்கு இத்தகைய தனிநபர் அந்தரங்கங்களை விட்டுக்கொடுக்கும் தியாகம் தேவை என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கூறியிருக்கிறார்.

தனி நபரை விட தேசம் பெரிது, தனி நபரது அந்தரங்கம் பறிபோவதை விட தேசத்தின் பாதுகாப்பு காக்கப்பட வேண்டியது எனவும் இதைப் புரிந்து கொள்ளலாம். தங்களுக்கு ஜனநாயகம், மற்றவர்களுக்கு சர்வாதிகாரம் என இந்தியாவிற்கு ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகள்தான் தேவை என்றும் இவர்கள் வாதிடுவார்கள். இந்த வாதங்களைப் போல இத்தகைய கண்காணிப்பு ‘தீவிரவாதிகள், பயங்கரவாதிகளை’ மட்டும்தான் குறிவைக்கின்றதா?

தீவிரவாதிகளை பிடிப்பது என்ற பெயரில் இந்தக் கண்காணிப்பு தனது தோற்றத்தை நியாயப்படுத்திக் கொள்கிறது. பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் எந்த வகையான, ஏன் ஜனநாயக ரீதியான அரசு எதிர்ப்பு கூட இடம்பெறக்கூடாது என்பதே இந்த கண்காணிப்பின் இறுதி நோக்கம். 21-ம் நூற்றாண்டில் மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளின் அரசுகள் மென்மேலும் பாசிசமயமாகி வரும் காலத்தில்தான் அமெரிக்காவின் இந்த கண்காணிப்பு அடக்குமுறை அமலுக்கு வந்திருக்கிறது என்பதை சேர்த்துப் பார்க்க வேண்டும்.

மேற்கத்திய நாடுகளுக்கு பயங்கரவாதிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தலை விட பொருளாதார நெருக்கடி தோற்றுவிக்கும் முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டங்கள்தான் அபாயகரமாக தோன்றுகின்றன. குண்டு வைக்கும் ஒன்றிரண்டு பயங்கரவாதிகளை பிடித்து அழிப்பது சுலபம். ஆனால் நாடு முழுக்க திரண்டு வரும் மக்கள், முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக போர்க்குணமிக்க போராட்டங்களை தொடர்ந்து நடத்தும் போது அரசுகளுக்கு சமாளிப்பது பிரச்சினையாகிறது.

தனிநபர் சுதந்திரம், அந்தரங்க உரிமை என்று மட்டும் இந்தக் கண்காணிப்பை எதிர்க்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள். ஒரு குடிமகனது பாலியல் உரிமைகள் கூட கண்காணிப்படுகிறது என்று செக்ஸ் ஸ்பெசலிஸ்ட்டுகளான சில பின் நவீனத்துவ அறிஞர்கள் கவலைப்படலாம். அநேக ‘ஆண்கள்’ கூட இதை ஒத்துக் கொள்ளலாம். அதாவது ஒருவர் 2,3 பெண்களை காதலிப்பது, போர்னோ படங்களை பார்ப்பது, கள்ள உறவுக்கு முயற்சி செய்வது எல்லாம் அமெரிக்காரன் பார்க்கிறானே, நாளை பின்னே இதை நமது மனைவியிடமோ, குடும்பத்தினரிடமோ போட்டுக் கொடுத்து விட்டால் என்ன ஆவது என்று அவர்கள் கவலைப்படலாம். இவர்களைப் பொறுத்தவரை அந்தரங்க உரிமை பறிபோவது என்பது இதுதான்.

ஆனால் இத்தகைய ‘உரிமை’களை அமெரிக்காவோ, இந்திய அரசோ தடுக்கப் போவதில்லை என்பதோடு உற்சாகப்படுத்தவும் செய்யும். 70களில் வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்த போது பண்பாட்டு ரீதியாக வியட்நாம் இளைஞர்களை சீரழிப்பதற்கு நீலப்பட கேசட்டுகள், மஞ்சள் இலக்கியங்களை டன் கணக்கில் இறக்கியது. இதே வேலையை வடகிழக்கு மாநிலங்களில் இந்திய அரசும் செய்திருக்கிறது. போர்னோவின் மெக்காவான அமெரிக்கா ஒரு போதும் இத்தகைய பாலியல் ‘உரிமைகளை’ தடை செய்யாது என்பதோடு அது வளருவதற்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்யும்.

சினிமா, செக்ஸ், மொக்கை போன்ற விசயங்கள் இணையத்தில் அதிகம் செல்வாக்கு செலுத்துவது பொருளாதார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஆளும் வர்க்கங்களுக்கு ஆதாயம். பிறகு எதற்காக கண்காணிக்கிறார்கள்?

snoopy.jpg

மக்களின் மூச்சை நிறுத்தும் பாதுகாப்பு போர்வை

ஏற்கனவே சொன்னது போல முதலாளித்துவ அமைப்பின் கட்டமைப்பு நெருக்கடிகள் மேற்கு உள்ளிட்டு உலகம் முழுவதும் மக்களை சொல்லணாத் துயரத்தில் ஆழ்த்தும்போது இயல்பாக வரும் எதிர்ப்புணர்வை காயடிப்பதுதான் அவர்களது நோக்கம். இதற்கு பழைய பாணியிலான சிறை, கைது, தண்டனை போன்ற மரபார்ந்த முறைகளை விட இந்த கண்காணிப்பு சிறந்த முறையில் பலனளிக்கும்.

அரசை எதிர்ப்பவரை சிறையன்றி வேறு எந்த விதத்தில் ஒடுக்க முடியும் என்றொரு கேள்வி உங்களுக்குத் தோன்றலாம். அதற்குப் பதில் உங்களது சமூக பொருளாதார வாழ்க்கையை முடக்குவது என்பதே. அதற்கு தொழில் நுட்பப் புரட்சி வழங்கியிருக்கும் இந்த “பிக் டேட்டா” கண்காணிப்பு முறை எண்ணிறந்த முறையில் உதவி செய்யும்.

சமீபத்திய இலண்டன் கலவரம் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் குற்றம் சுமத்தப்பட்ட ஆயிரக்கணக்கான கருப்பின இளைஞர்கள் சில பல மாதங்கள் சிறை வாழ்க்கைக்குப் பிறகு வெளியே வந்தாலும் அவர்களுக்கு எங்கேயும், எப்போதும் வேலை கிடைக்காது. வாழ்நாள் முழுக்க வேலையற்ற உதிரிகளாக அல்லது ஊதியம் குறைந்த கடுமுழைப்பு வேலைகள் மட்டும்தான் அவர்கள் செய்ய முடியும். லண்டன் போலிசார் இவர்களைப் பற்றிய அடையாளங்கள் படங்களோடு அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் அனுப்பிய பிறகு முடிந்தது அவர்களது வாழ்க்கை.

சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஈழத்தமிழருக்காக மாணவர்களிடம் போராட்டம் பரவிய நேரத்தில் க்யூ பிரிவு போலிசார் அளித்த அறிக்கைய நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அதாவது போராட்டத்தில் முன்னணியாக இருக்கும் மாணவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து அதை போலீஸ் டேட்டா பேசில் பதிவு செய்து பின்னர் எந்தப் போராட்டம் வந்தாலும் அவர்களை பின் தொடர்வது, அவர்களைப் பற்றிய விவரங்களையும் நிறுவனங்களிடம் பகிர்ந்து கொள்வது என்று போலிசார் கூறியிருந்தனர். அதன் பொருள் அந்த மாணவர்கள் தமது அரசியல் உணர்வை துறக்க வேண்டும் அல்லது சொந்த வாழ்க்கை நலன்களை துறக்க வேண்டும்.

ஆகவே ஒருவருக்கு வேலை கிடைக்காமல் செய்து விட்டால் அதை விட என்ன பெரிய தண்டனை இருக்கப் போகிறது? அமெரிக்கா ‘சாதனை’ படைத்திருக்கும் இந்த இணைய, செல்பேசி கண்காணிப்பு அனைவரையும் 24 மணிநேரமும் பின் தொடரும் உளவாளி என்பதால் இது விரைவிலேயே மற்ற நாட்டு அரசுகளாலும் ஏற்கப்பட்டு அமல்படுத்தப்படும் சாத்தியங்கள் நிறையவே இருக்கிறது. அப்படி நடந்தால் எப்படி இருக்கும்?

கோடிக்கணக்கான மக்களது பில்லியன் கணக்கிலான தகவல்களை சேகரித்து பயன்படுத்துவது சாத்தியமா என்று தோன்றலாம். இதெல்லாம் ஆள் போட்டு செய்ய வேண்டிய வேலையில்லை. ஒரு திறமையான மென்பொருள் அரசுக்கும், போலீசுக்கும் தேவையான விவரங்களையும், நபர்களையும் சடுதியில் தந்து விடும்.

ஈழத்தமிழருக்கான மாணவர் போராட்டத்தை ஆதரித்தும், பங்கேற்றும், லைக் செய்தும், ஷேர் செய்தும் முகநூல், டிவிட்டரில் இயங்கியவர்கள் யார், புலிகள், பிரபாகரன், ஈழம், இலங்கை, தனி ஈழம் போன்ற குறிச்சொற்களை யார் அதிகம் பாவிக்கிறார்கள் என்பதை வைத்தும் ஒரு மாணவர் ஈழப் போராட்டத்தில் ஈடுபாட்டுடன் எந்த தரவரிசையில் இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். பிறகு நாளையே ராஜபக்சே போயஸ் தோட்டம் வந்து ஜெயாவுடன் தேநீர் விருந்தில் பங்கேற்கும் போது இந்த மாணவர்களை முன்னெச்செரிக்கையாக கைது செய்வதில் பிரச்சினை இல்லை.

police-intelligence.jpg

15 வயது முதல் செல்பேசி, இணையம் பயன்படுத்தும் மாணவர் ஒருவர் 25 வயதில் வேலைக்கு போகும் போது இந்த பிக் டேட்டாவின் உதவியுடன் அவர் இந்த 10 ஆண்டுகளில் என்ன செய்தார் என்று கண்டுபிடிக்க முடியும். அவரது அரசியல் ஆர்வம் போராடும் அளவுக்கு இல்லை என்று அந்த விவரங்கள் சொல்லும் பட்சத்தில் அவருக்கு எச்சரிக்கையுடன் வேலை கிடைக்கலாம். இதே போல ஹூண்டாய் தொழிற்சாலையில் வேலைக்கு போகும் ஒரு தொழிலாளி அவர் மாணவராக இருந்த காலத்தில் என்ன செய்தார் என்பதை வைத்து அவரது வர்க்க உணர்வு ஆபத்திற்குரியதா என்று ஹெச் ஆர் கங்காணிகள் முடிவு செய்வார்கள்.

தற்போதே ஐ.டி துறை மனிதவளத்துறை கங்காணிகள் ஒரு ஊழியர் புதிதாகவோ இல்லை வேறு நிறுவனத்திலிருந்து வரும் போது அவர்களுடைய புகைப்படம் மற்றும் பெயரை வைத்து முகநூலில் ஆய்வு செய்கிறார்கள். அலுவலகத்தில் இருந்து இவர்கள் இணையத்தில் என்ன பார்க்கிறார்கள் எனவும் மதிப்பீடு செய்கிறார்கள். பிக் டேட்டா என்பது இதனுடைய முழுமையான தகவல் வங்கி. அதை வைத்து ஒரு தனிநபருடைய ‘ஜாதக’த்தையே எழுத மட்டுமல்ல, தீர்மானிக்கவும் முடியும்.

இணையத்தில் மாவோயிஸ்டுகள் போராட்டத்தை ஒருவர் தொடர்ந்து கருத்தளவில் ஆதரித்தார் என்பதை வைத்து அவருக்கு கடன் கிடையாது என்று வங்கி மேலாளர்கள் முடிவு செய்யலாம். ஈழ அகதிகளுக்கு ஒருவர் நன்கொடை கொடுத்தார் என்பதை வைத்து அவரது வங்கிக் கணக்கு முடக்கி வைக்கப்படலாம். பையன் கம்யூனிஸ்டு என்பதால் அப்பா ஆர்.எஸ்.எஸ் ஆக இருந்தாலும் அவரது ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படலாம். மகஇக போராட்டத்தில் கைது செய்யப்பட்டார் என்ற ஒரு காரணத்திற்காகவே ஒருவருக்கு அரசு நலத்திட்டங்கள் மறுக்கப்படலாம்.

நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து, மாவோயிஸ்டுகள் போராட்டத்தை ஆதரித்தார் என்பதற்காக ஒருவரது பாஸ்போர்ட் முடக்கப்படலாம். பாலச்சந்திரன் படத்தை கூகிள் பிளசில் ஷேர் செய்தார் என்பதற்காக ஒரு ஐடி ஊழியரின் ஊதிய உயர்வு நிறுத்தப்படலாம். வினவில் உள்ள அமெரிக்க எதிர்ப்பு கட்டுரைகள் அனைத்தையும் படித்திருக்கிறார் என்பதற்காக ஒருவரை தனது நாட்டில் நுழைவதற்கு அமெரிக்கா தடை செய்யலாம்.

இப்படி எண்ணிறந்த முறையில் அடக்குமுறைகள் வரும். இவை எதிலும் கைது, சிறை இல்லை என்பதையும் குறிப்பிட்ட நபர்களது சமூக வாழ்க்கையை ஆதரவு இன்றி முடக்க முடியும் என்பதையும் நினைவில் கொள்க.

இது வேகமாக வேகமாக பரவும் பட்சத்தில் அரசியல் உணர்வும், ஈடுபாடும், பங்கேற்பதும் கூட மாபெரும் பயங்கரவாதச் செயல்கள் போல பாவிக்கப்படும். அப்படி ஒரு சூழ்நிலையை நினைத்துப் பாருங்கள்! மாணவர்கள், தொழிலாளிகள், பெண்கள் என அனைத்துப் பிரிவினரும் போராடாமல், அடிமைத்தனத்தோடு மட்டும் வாழவேண்டும் என்றால் அந்த உலகம் எவ்வளவு கொடூரமாக இருக்கும்?

ஏகாதிபத்தியங்கள் தொழில்நுட்ப புரட்சியின் உதவியினால் உருவாக்கியிருக்கும் இந்த பிக் டேட்டா கண்காணிப்பு இப்படி சிறையில்லாமலே ஒருவரை சிறையில் அடைப்பது போன்ற வாய்ப்புகளை வழங்குகிறது. நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றி விடாமல் குடிமக்களை முடக்கி விடுவதுதான் இத்தகைய கண்காணிப்புகளின் நோக்கமும் கூட.

ஆக ஒரு மனிதனின் தனிநபர் – அந்தரங்க உரிமைகளில் அரசியல் உரிமையே தலையாயதும், முதன்மையானதும் ஆகும். அந்த உரிமையை தடை செய்வதற்காக நமது சமூக பொருளாதார உரிமைகளில் கை வைப்பதற்கு இந்த கண்காணிப்பு பயன்படுகிறது. ஒரு மனிதனின் பொருளாதார வாழ்வை முடக்குவதாக மிரட்டினால் எத்தனை பெரியவரும் சடுதியில் சோர்ந்து சரணடைந்து விடுவார்கள். இதுவே ஒரு சமூகத்தின் யதார்த்தமாக மாறும் போது வரலாற்றின் பக்கங்களில் புதையுண்டிருக்கும் அடிமைகளது வாழ்க்கை மீண்டு வரும். மாட்ரிக்ஸ் திரைப்படத்தில் மெஷின்கள் உலகைக் கட்டுப்படுத்துவது போல இங்கு ஏகாதிபத்தியங்களும், முதலாளிகளும் கட்டுப்படுத்துவார்கள்.

ஆகவே இந்த கண்காணிப்பு சதித்திட்டத்தை நாம் எண்ணிறந்த முறையில் எதிர்க்க வேண்டும். இந்த விழிப்புணர்வு உலக அளவில் வளர்ந்து இணைய, செல்பேசி நிறுவனங்களுக்கும், அரசுகளுக்கும் நிர்ப்பந்தம் கொடுக்கும் அளவிலும், தொழில் நுட்ப முறையில் இந்தக் கண்காணிப்பு முறைகளை தகர்க்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளை பரவலாக்கும் முறைகளிலும் வளர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இனைப்பிற்க்கு Athavan CH,ஆதித்ய இளம்பிறையன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நன்றி இனைப்பிற்க்கு Athavan CH,ஆதித்ய இளம்பிறையன்.

விசுகண்ணை 

இதுதான் ஈயடிச்சான் கொப்பியா ...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகண்ணை 

இதுதான் ஈயடிச்சான் கொப்பியா ...?

 

தப்புத்தானப்பா...

 

என்ன  செய்வது  தமிழில் எழுதமுடியாதபோது..

இவ்வாறு செய்யவேண்டி வருகிறது.. :( 

 

ஒருத்தரை  பாராட்டணும் என்பது தானே முக்கியம்.. :icon_idea: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகண்ணை 

இதுதான் ஈயடிச்சான் கொப்பியா ...?

அண்ணேய் இது யாழ்கள உறவுகள் Atonk நீங்கள் பார்த்து குமுறவேண்டியது தங்களுக்கொண்டென கட்டுரையாளர்களோ,செய்தி சேகரிப்பாளர்களோ இல்லாமல் நாலு ஊடகவியளாளர்களின் படத்தை முன்னுக்கு போட்டு செத்த வீட்டு செய்திகளை போட்டு பிழைக்கும் ஊடகங்களிடம் குமுறுங்க நானும் உங்களுக்கு உதவுறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

அண்ணேய் இது யாழ்கள உறவுகள் Atonk நீங்கள் பார்த்து குமுறவேண்டியது தங்களுக்கொண்டென கட்டுரையாளர்களோ,செய்தி சேகரிப்பாளர்களோ இல்லாமல் நாலு ஊடகவியளாளர்களின் படத்தை முன்னுக்கு போட்டு செத்த வீட்டு செய்திகளை போட்டு பிழைக்கும் ஊடகங்களிடம் குமுறுங்க நானும் உங்களுக்கு உதவுறன்.

பெருமாள் அண்ணை 

எனக்கு எதனை பார்த்தும் குமுற வேண்டிய அவசியம் இல்லை . என்ன.... நீங்க விட்ட எழுத்துப்பிழை விசுகண்ணரின் கருத்திலும் அப்படியே இருக்குதே

என்று கேட்டேன். மத்தபடி இந்த குமுறுவதற்க்கும் உறுமுவதர்க்கும் யாழ் களத்தில் ஏகப்பட்ட தலைகள் கிடக்குது, அவங்களுக்கு முன் எங்கட குமுறல்கள் எடுபடாது

நாங்கள் எப்போதும் பார்வையாளர்களாக இருப்பதையே விரும்புகின்றோம்..... :lol:  

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பிக் டேட்டாவின் குணாதிசயங்கள் என்ன?

 

data_2081980h.jpg

 

பிக் டேட்டா என்றால் என்ன? டேட்டாவிலேயே பெரிய அப்பாடக்கரா? வண்டிவண்டியாய் டேட்டா இருந்தால் மட்டுமே அதனை பிக் டேட்டா என்று சொல்லிவிட முடியாது. பிக் டேட்டாவிற்கு நான்கு குணாதிசயங்கள் உண்டு. எளிதில் புரிவதற்கான உதாரணங்கள் சிலவற்றை தந்துள்ளேன். டேட்டா கோட்பாடுகள் இடிக்கின்றது என யாரும் வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வரக்கூடாது.

 

எது பிக்டேட்டா ?

சென்னையில் வாழும் மனிதர்களின் பெயர்களை மட்டும் டேட்டா பேஸில் ஏற்றிவிட்டால் அது பிக்-டேட்டாவாகிவிடாது. பரபரப்பான சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வாசலில் ஒரு ஸ்கேனர் வைத்து எத்தனை பேர் ரயில் நிலையத்தின் உள்ளேயும் வெளியேயும் சென்றார்கள் என்று கவுன்ட்டிங் செய்து பதிந்தால் அது பிக்-டேட்டாவாகாது.

அதிகாலையில் புறப்படத்தயாராக இருக்கும் ஒரு ரயிலில் எத்தனை பேர் செய்தித்தாள் விற்கும் பையனிடம் நாளிதழ்களை வாங்கினார்கள் என்று பதிந்து வைத்தால் அதுவும் பிக்டேட்டாவாகாது. அப்படி நாளிதழ்களை வாங்கினவர்கள் அனைவருமே அந்த நாளிதழ்களின் சந்தாதாரர்களாக இருப்பார்கள் என்று நாமாகவே எழுதிவைத்துக்கொண்டால் அதுவும் பிக்டேட்டாவாகாது.

 

பிக் டேட்டா என்ற தகுதியைப் பெற முக்கியமான நான்கு குணாதிசயங்கள் வேண்டும். அதிகமான பதிவுகள், அதிவேகமான பதிவுகள், பலவிதமான பதிவுகள், உண்மையான உபயோகத்தன்மையுள்ள பதிவுகள் என்ற நான்கும் பிக்டேட்டாவை விவரிக்கும் குணாதிசயங்கள். [ஆங்கிலத்தில் 4 V’s என்று சொல்லும் - Volume, Velocity, Variety and Veracity]. இந்த நான்கு குணங்களைக் கொண்ட பிக்டேட்டாவை பிசினஸ் உபயோகத்திற்கு கொண்டுவருவது மற்றுமொறு ’V’ என்ற Value எனும் ஐந்தாவது V.

 

மதிப்புதான் உயிர்

எல்லா குணங்களும் இருந்தும் அந்த டேட்டாவில் மதிப்பு இல்லாவிட்டால் என்ன உபயோகம் இருக்கப்போகின்றது? பிசினஸிற்கு வேல்யுதானே உயிர். இந்த நான்கு குணங்களைக்கொண்ட பிக்டேட்டாவை வைத்துக்கொண்டு எந்தவகையான பிசினஸ் மதிப்புகளை கூட்ட முடியும் என்பதுதான் அது.

 

இந்தக் குணாதிசயங்களை வைத்துக்கொண்டு மேலே சொன்ன உதாரணங்களை அலசுவோம். சென்னையில் வாழும் நபர்களின் பெயரை தொடர்ந்து முகவரி, கைபேசி எண், வீட்டிலிருக்கும் எரிவாயு கனெக்‌ஷன் கம்பெனியில் ஆரம்பித்து டிஷ் டீவி, போன், கம்ப்யூட்டர், சோபா செட் வாங்கிய கடை, ரெகுலராய் நகை வாங்கும் கடை, பிரியப்பட்டு செல்லும் சினிமா தியேட்டர், ரெஸ்ட்டாரெண்ட், துணிக்கடை, வாங்கும் பனியனின் பிராண்ட், வைத்திருக்கும் டூ வீலர், வாரா வாரம் போகும் கோவில், மருந்துவாங்கும் கடை என ஜாதகமே இருந்தால் அது பிக்டேட்டாவிற்கு முதல் தகுதியை பெற்றுவிட்ட ஒன்று.

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சென்றவர்களின் பயணத்திட்டம் எத்தனை நாட்கள், கையில் இருக்கும் லக்கேஜின் (பெட்டி/கைப்பை) பிராண்ட், எங்கே தங்கினார் / தங்கப்போகின்றார், டாக்ஸி பிடிப்பாரா? ஏற்கனவே கார் காத்திருக்கின்றதா? ரிட்டர்ன் ஜர்னி டிக்கெட் இருக்கின்றதா? அடிக்கடி சென்னை வருபவரா? மாமாங்கத்துக்கும் ஒரு முறையா? என பயணத்தை தாண்டிய பல டேட்டாக்கள் அந்த நபர் சென்ட்ரல் ரயில் நிலைய வாயிலை கடக்கும் நொடிப்பொழுதில் பதிவு செய்ய முடிந்தால் அதுவும் பிக்-டேட்டாவுக்கு தகுதிபெறும் மற்றொரு விஷயமாகும்.

புறப்படத்தயாராக இருக்கும் ரயில் வண்டியில் பேப்பர் வாங்கினவர்கள் எத்தனை பேர் என்ற விவரத்தைத் தாண்டி என்ன கோச், நாளிதழ், வாராந்திர இதழ்கள், புத்தகம், வாட்டர் பாட்டில், டிபன், கடலை மிட்டாய், வறுகடலை, டூத் பேஸ்ட், வாழைப்பழம் போன்றவை, தனிநபர் பயணமா, குடும்பத்துடன், அலுவலக பணியாளர்களுடன் பயணமா?, ரயிலில் வாங்கிய நாளிதழ்/வாராந்திர இதழ்களை அவர் தொடர்ந்து வாங்குகின்றாரா? அல்லது வேறு நாளிதழ்/புத்தகங்களை வாங்குகின்றாரா? போன்ற இன்னபிற டேட்டாக்களும் பதிவு செய்யப்பட்டால் அது பிக்-டேட்டாவின் குணாதிசயத்தை சற்றே உள்ளடக்கியது எனலாம்.

 

இந்த உதாரண டேட்டா கலெக்‌ஷனில் வரும் டேட்டாவினால் ஏதாவது ஒரு முக்கிய உபயோகமும் இருக்கவேண்டும். பிறந்த ஊர், முதலில் படம் பார்த்த டெண்டு கொட்டகையின் பெயர் எனத் தேவையில்லாத டேட்டாக்கள் பெருமளவில் இருந்தால் அது பிக்டேட்டாவாகாது.

 

வால்யூம் ரகசியம்

அட! இதெல்லாம்தான் டேட்டாவா? இதையெல்லாம் வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றலாம். இவை டேட்டாவின் உதாரணங்கள் மட்டுமே. டேட்டாக்கள் தொடர்ச்சியாகவும் வேகமாகவும் அலசப்படும் போதுதான் பெரியபெரிய உண்மைகள் புலப்படுகின்றன. உதாரணத்திற்கு, நீங்கள் கிரெடிட் கார்ட் வைத்திருக்கின்றீர்கள்.

 

அடிக்கடி வெளியூர் செல்லும் வேலை. உங்கள் கம்பெனி தங்கும் செலவு நாளுக்கு 1,200 ரூபாய் வரை தரும். எப்போதும் அதற்கு உட்பட்டே உங்கள் செலவு இருக்கும். கிரெடிட் கார்டிலேயே அதை எப்போதும் கொடுக்கும் பழக்கம் கொண்டவர் நீங்கள். ஒரு நாள் உங்கள் கிரெடிட் கார்டு தொலைந்துபோகின்றது. நீங்கள் அதை உணருமுன் ஒரு பைவ் ஸ்டார் ஓட்டல் ரெஸ்ட்டாரென்டில் அந்த கார்டு உபயோகிக்கப்படுகின்றது. கார்டு ஸ்வைப்பாகி உங்களுக்கு தகவல் வருவதற்கு முன்னாலேயே கிரெடிட் கார்டு கம்பெனியின் சர்வரில் ஓடும் அனலிடிக்ஸ் சாப்ட்வேர் அட! நம்ம ஆளு இதுவரை இந்த மாதிரி காஸ்ட்லி ஓட்டலுக்கு போனதேயில்லையே என்று ஸ்வைப் செய்த ஹோட்டலுக்கு ”கார்ட் கொண்டுவந்த ஆளை எதற்கும் சரிபார்க்கவும்” என்று ஒரு அலர்ட் கொடுத்தால் திருடன் பிடிபடுவான் இல்லையா?!

 

வெறுமனே செலவுகளை கணக்கு வைத்து வசூலைச் செய்யாமல் பல்வேறு அனலிடிக்ஸ்களை கிரெடிட்கார்டு நிறுவனங்கள் உபயோகிக்கின்றன. எப்போதும் இல்லாத அளவில் அடிக்கடி பாரில் உங்கள் கிரெடிட் கார்ட் உபயோகிக்கப்படுகின்றதா? ஏதோ சோகத்திலோ அல்லது ஊதாரித்தனத்திலோ திரியும் நம்ம ஆளு பணம் கட்டாமல் போவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கிரெடிட்கார்ட் நிறுவனம் அனலிடிக்ஸ் மூலம் புரிந்துகொள்கின்றது.

 

அடிக்கடி என் அக்கவுண்டில் ஏன் பில் அதிகமாக வருகின்றது, குறையர மாதிரியே தெரியலயே, உங்க கம்பெனியிலதாங்க இவ்வளவு காசாகுது என்று கஸ்டமர் சர்வீஸிற்கு போன் செய்து பேசும் போஸ்டு பெய்டு கஸ்டமர்களில், இத்தனை பேர் நம்பர் போர்ட்டபிலிட்டியில் நம்மை விட்டு வெளியே போய்விடும் வாய்ப்பு இருக்கின்றது என்று கண்டறிந்துகொண்டுவிடுகின்றன மொபைல் டெலிகாம் நிறுவனங்கள். ஒத்தையாள்தானே! போனால் போகட்டும் போடா என்று இருந்துவிட முடியாது என்று சொல்கின்றது அனலிடிக்ஸ்.

 

ஒருவர் செல்போன் கனெக்‌ஷனை மற்றோரு கம்பெனிக்கு மாற்றினால் அவருடைய போனில் கான்டாக்ட்ஸில் இருப்பவர்களில் அதிக பட்சம் ஏழுபேர் அவர் போன புதிய போன் கம்பெனிக்குப் போய்விடுகின்றார்கள் என்று எச்சரிக்கை மணியடிப்பது அனலிடிக்ஸ். ஆயிரத்தில் ஒருத்தர் போனால் போகட்டும் என்று இருந்தால் லட்சத்திற்கு எழுநூறு பேர் போய்விடுவார்கள் இல்லையா? வால்யூம்தான் டேட்டாவின் ரகசியம் என்பது புரிகின்றதா?

 

http://tamil.thehindu.com/business/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article6359151.ece?ref=relatedNews

 

Link to comment
Share on other sites

தகவலும் சிறந்த மூலதனமே!

 

info_2102354h.jpg

 

பிக்டேட்டா பற்றி இதுவரை நீங்கள் சொல்லியதையெல்லாம் வைத்துப் பார்த்தால் இது பெரிய மல்டி நேஷனல் கம்பெனிகளுக்கானது போலல்லவா இருக்கின்றது. எங்களைப் போன்ற சிறிய நிறுவனங்களுக்கெல்லாம் இது உதவாதோ என்று பல சிறு தொழில் அதிபர்கள் கேட்கின்றார்கள்.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இதை சிறு நிறுவனங்களும் உபயோகிக்கலாம் என்று சொன்னால் எங்களிடம் டேட்டா ஒன்றும் பெரியதாக இல்லையே! என்று சிலரும், டேட்டாவே இல்லையே!!! என்று பலரும் சொல்கின்றனர்.

பிக் டேட்டா என்றாலே அளவுக்கு அதிகமாக டேட்டா இருக்கவேண்டும் என்று இல்லை. கொஞ்சமாய் குழப்பமாய் இருந்தாலும், பல மூலைகளில் மற்றும் மூளைகளில் சிதறிக் கிடந்தாலும் அது பிக்டேட்டாவே. சிறு நிறுவனங்களில் பல சமயம் இந்த பிக்டேட்டா கம்ப்யூட்டரில் பாதியும் அந்தந்த டிபார்ட்மெண்டில் நீண்டநாளாகப் பணியில் இருக்கும் அலுவலர்கள் மூளையில் மீதியுமாய் சிதறிக்கிடக்கும்.

 

குட்டி அனலிட்டிக்ஸ்

 

அந்தக் கம்பெனிக்கெல்லாம் ஆர்டர் கொடுக்காதே – சரக்கு சரியான நேரத்தில் வராது. இந்த கடைக்கெல்லாம் சரக்குப் போடாதே – பணம் வரவே வராது என்று சொல்லும் நபர்கள், கடைசியா போன தீபாவளிக்கு சரக்கு சரியா அனுப்பிச்சான், அதுக்கப்புறம் ஒவ்வொரு ஆர்டரும் ஏழெட்டு நாள் தாமதம்தான். குறைஞ்ச பட்சம் நாலுநாள் அதிக பட்சம் பத்துநாள் வரை இழுத்துடுவான் சார்.

 

அவனுக்கெங்கே தொழிலைப்பார்க்க நேரம், என்னைக்கு நாம எந்த ஒட்டலில் பாருக்குப் போனாலும் அவனை ஒரு கூட்டத்தோடு பார்க்கலாம் என்று கூடுதல் தகவல் தரும் அக்கவுன்டென்டும் மனித உருவில் நடமாடும் குட்டி அனலிடிக்ஸ் நிபுணர்களே. இந்த தகவலை தொகுத்து சொல்ல டேட்டாவை மூளையில் வைத்திருக்கும் ஆள் ஸ்பாட்டில் தேவைப்படுகிறார். மூளையையும் கம்ப்யூட்டரையும் இணைக்க யுஎஸ்பி கேபிள் இன்றுவரை எதுவுமில்லை. எனவே, அந்த நபர் வேலையை விட்டுப்போய்விட்டாலும், நீண்ட விடுப்பில் சென்று விட்டாலும் தகவல் சொல்ல ஆளிருக்காது.

 

கம்ப்யூட்டரே எச்சரிக்கும்!

 

அதே சமயம் கடைக்கு விற்பனை செய்த தேதி, பணம் நமக்கு கலெக்‌ஷன் ஆன தேதி, சப்ளையருக்கு ஆர்டர் போட்ட தேதி, சரக்கு நமக்கு டெலிவரி ஆன தேதி ஆகியன நம்முடைய கம்ப்யூட்டரில் இருந்து ஒரு மினி அனலிடிக்ஸ் சாப்ட்வேரும் இருந்தால் என்னவாகும். சரக்கு வேண்டும் என்று கடைக்காரர் கேட்டு பில்போடும் போதே இந்த ஆள் - இத்தனை நாள்! என்று சைலண்டாய் போட்டுக்கொடுத்துவிடும்.

 

பில் போட விடாது. இல்லையா?. நம் நிறுவனத்தில் எத்தனை பில்லிங்/ஆர்டரிங் கிளார்க்குகள் மாறினாலும் தப்பான ஆளுக்கு சரக்கோ, ஆர்டரோ போகவே போகாது இல்லையா?. இந்த அனலிடிக்ஸ் சாப்ட்வேரை மேலும் மெறுகேற்றினால் ரெகுலராய் சரக்கு வாங்கி அட்வான்சாய் தொடர்ந்து பணம் அனுப்பும் நல்ல வியாபாரியின் கடைக்கு விலையில் அதிக டிஸ்கவுண்டிற்கு அந்த சாப்ட்வேரே ரெகமெண்டெஷன் கூட செய்யும் வாய்ப்புள்ளது.

 

எங்கே டேட்டா கிடைக்கும்?

 

இதற்கெல்லாம் முதலில் டேட்டாவை கலெக்ட் செய்ய வேண்டும். டேட்டா இருந்தால் தானே அனலிடிக்ஸிற்கு அது வழிவகுக்கும். டேட்டா கலெக்‌ஷனில் ஒரு முக்கியமான சிக்கல் உள்ளது. எல்லா விதமான டேட்டாவையும் ஒரே இடத்தில் இருந்து ஒரு பிசினஸால் பெற முடியாது. எந்தக் கடைக்காரர் அட்வான்ஸாய் பணம் தருகின்றார் என்ற டேட்டா உங்களுடைய அக்கவுன்டிங் சாப்ட்வேரில் இருக்கும்.

 

அவர் கடையில் எந்த அளவுக்கு வேகமாய் உங்கள் சரக்கு விற்றுத் தீர்கின்றது என்ற டேட்டா அவருடைய பில்லிங் கம்ப்யூட்டரில் இருக்கும். சரக்கை வாங்கிச் சென்ற கஸ்டமர்களில் எத்தனை பேர் திரும்ப வந்து இரண்டு எக்குஎக்கிவிட்டு போனார்கள் என்பது அந்தக் கடையில் வேலை பார்க்கும் பணியாளர்களின் மூளையில் இருக்கும். நாம என்ன மல்டி நேஷனல் கம்பெனியா? கால்சென்டர் வைத்து 24/7 திட்டு வாங்கிக்கட்டிக்கொண்டு அதையும் பதிந்து வைத்துக்கொள்ள! பிழைப்பை ஒழுங்காய் ஓட்ட படாதபாடுபடும் பல்டி நேஷனல்தானே.

 

நம்ம கம்ப்யூட்டர், நம்முடைய பொருளை விற்பனை செய்யும் கடையின் கம்ப்யூட்டர், விற்பனை மற்றும் சர்விஸ் பிரதிநிதியிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் என பல்வேறு ரூபத்தில் டேட்டா நம்மைத்தேடி வரும். இந்த டேட்டாக்களை ஒருங்கிணைத்தல் என்பது டேட்டா அனலிடிக்ஸின் இரண்டாம் நிலை.

 

டூப்ளிகேஷன்

 

சரி. பல்வேறு ரூபத்தில் வந்த டேட்டாவை சரி செய்தாயிற்று. ஓட்டுடா அனலிடிக்ஸை. பார்த்துவிடுவோம் ஒரு கை என்று வரிந்து கட்ட முடியுமா என்ன. முடியாது சாமி. முடியாது. பல இடத்திலிருந்து வரும் டேட்டாக்களை சேர்க்கும் போது ஒரு புதுப்பிரச்சினை வரும். அதுதான் டூப்ளிக்கேஷன். டேட்டாவை சீர் செய்வதில் மிக முக்கிய வேலையே இங்கேதான் இருக்கின்றது எனலாம்.

 

இதை முதலில் சலித்து வெளியே எடுக்க வேண்டியிருக்கும். அதற்கப்புறமாய் காத்துக்கொண்டிருப்பது டுபாக்கூர் டேட்டாக்களை கழட்டிவிடுதல் நிலை. சரக்குக்குப் பணத்தை லேட்டாகத் தரும் கடைக்காரர் எக்கச்சக்கமாக கம்ப்ளெயிண்ட்டை பதிந்து வைத்துக்கொண்டு உங்க சரக்கு இருக்கிற லட்சணத்துக்கு அட்வான்ஸ் பேமென்டா தருவாங்க என டுபாக்கூர் வேலைகளை செய்துவைப்பார் இல்லையா?.

 

அதனால், இந்த டேட்டாவில் எதை நாம் தேடப்போகின்றோம் என்று முடிவு செய்த பின்னர் தேடும் விஷயம் கிடைக்கும் போது அது உண்மையானதுதான் என்பதை உறுதி செய்ய எந்தெந்த முன்னெச்சரிக்கை செக்கிங் நடவடிக்கைகளை நாம் செய்துகொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கவேண்டும். இந்த உதாரணத்தில் பணம் ஒழுங்காய் கொடுக்கும் கடையிலிருந்து வரும் கஸ்டமர் கம்ப்ளெயிண்ட்களின் எண்ணிக்கைக்கும் மற்றும் ஒழுங்காய் வராத கடையில் இருந்து வரும் கஸ்டமர் கம்ப்ளெயிண்ட்களின் எண்ணிக்கைக்கும் தொடர்பு எப்படி உள்ளது என்பதை முதலில் செக் செய்து பார்ப்பது. இந்த செக்கிங்குகளை முடிவு செய்வதுதான் டேட்டா அனலிடிக்ஸில் மிகமிக கவனமாகச் செய்யவேண்டிய விஷயம்.

ஏனென்றால், அறிந்தோ அறியாமலோ நம் கையில் இருக்கும் டேட்டாவின் நம்பகத்தன்மையை பணாலாக்கும் விஷமிகள் நிறையப்பேர் நம்மைச் சுற்றி இருக்கவே செய்கின்றார்கள்.

 

லேட்டஸ்ட் யோசனை

 

இதையெல்லாம் செய்வதற்கு முன்னால் செய்யவேண்டிய ஒன்று இருக்கின்றது. நிஜத்தில் நாம் கலெக்ட் செய்யப்போகும் டேட்டாவும், இதைத்தான் நாம் கலெக்ட் செய்யப்போகின்றோம் என மனதில் யூகித்து வைத்திருக்கும் டேட்டாவின் அளவும் கிட்டத்தட்ட நூறு மடங்கு வரை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. 1990களின் இறுதியில் வழக்கொழிந்துபோன கம்ப்யூட்டரை ஆபிசில் வைத்துக்கொண்டு அனலிடிக்ஸிற்கு முயன்றால் உங்களுடைய பேஸ்மெண்ட் வீக்தான்.

 

குவியும் டேட்டா

 

நம்முடைய கையில் இருப்பது எவ்வளவு? புதியதாய் எவ்வளவைத் திரட்டவேண்டியிருக்கும்? எத்தனை ஜீபி டேட்டாவை நாம் கலெக்ட் செய்துவிடும் வாய்ப்பு இருக்கின்றது என்றெல்லாம் ரூம் போட்டு யோசித்து ஒரு சிஸ்டம் இன்ப்ராஸ்ட்ரக்சர் தயார் செய்தபின் அனலிடிக்ஸ் களத்தில் இறங்குவோம். நாம சொன்னா யார் கேக்குறா? இவ்வளவு பவர்புல் சிஸ்டமெல்லாம் நம்ம கம்பெனிக்கு தேவையில்லை என்பார் சிஸ்டம்ஸ் மேனேஜர். எண்ணி மூன்றாவது மாதத்தில், முதலாளியாகிய நீங்கள் ஒரு புது டைப் ரிப்போர்ட்டைக் கேட்டு இப்பவே வேணும் என்று பறந்தால் சிஸ்டம் ரொம்ப ஸ்லோவா இருக்கு சார்.

 

புது ரிப்போர்ட்டுக்காக கொஞ்சம் கூடுதல் டேட்டாக்களை சேர்த்தோமா அதனாலேயோ என்னமோ! என்பார். என்னப்பா “அன்னைக்கு அப்படி சொன்னியே?” என்றால், “அது போன மாசம். இது இந்த மாசம். ஒரு மாசத்துல ஒவாரா டேட்டா சேர்ந்துடுச்சு” என்பார். பணம் சேர்க்கப்போனேன்! டேட்டா சேர்த்துவந்தேன்! என்று உங்களுக்கு பாடத்தோன்றினாலும் அந்த டேட்டாவிலிருந்து பணத்தை சேர்க்க உதவத்தானே அனலிடிக்ஸ் இருக்கின்றது என்பது முதலாளியாகிய உங்களுக்கு தெரியாததா என்ன?.

 

http://tamil.thehindu.com/business/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87/article6398854.ece?ref=relatedNews

 


டேட்டா குவியல் அதிகரித்துக்கொண்டே போவது எதனால்?
 
-நன்றி பெருமாள்-
 
 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

வரலாற்றை மறந்தால் தவறுகள் தொடரும்

pic_2058273h.jpg

 

“வரலாறு முக்கியம், அமைச்சரே!” என்ற வடிவேலுவின் வசனத்தை யாராலும் அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாது. பிக் டேட்டா அனலிட்டிக்ஸ் தொழில் நிறுவனங்களுக்குச் சொல்வதும் கிட்டத்தட்ட இதையேதான். வரலாற்றுக்குத் தொழில் துறையில் நிறைய முக்கியத்துவம் உள்ளதை உணர்த்துவதும் டேட்டா அனலிடிக்ஸ்தான். வரலாற்றை மறந்தால் மீண்டும் மீண்டும் பழைய தவறுகளை நிகழ்த்த நேரிடும் என்ற சொற்றொடரை அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

 

இந்த நிலை பிக் டேட்டா அனலிடிக்ஸ் வருவதற்கு முன்னால். இப்போது வரலாற்றை மறந்தால் கையில் இருக்கும் விற்பனை வாய்ப்புகளைக் கூட இழக்க நேரிடலாம் என்பதுதான் நிலைமை. அதாவது, வரலாற்றின் டேட்டா பதிவுகளை உபயோகிக்க மறந்தால் பழைய தவறுகளுடன் சேர்த்து புதிய தவறுகளையும் நிறுவனங்கள் செய்துவிடும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கின்றது.

 

பிக்டேட்டா அனலிடிக்ஸ் செய்ய முக்கியமாக தேவைப்படுவது ஏற்கெனவே பல ஆண்டுகளாக சேகரித்த தகவல்கள் - வரலாறு. இந்த வரலாறுதான் நிறுவனங்களுக்கு மிகுந்த சக்தியை தரக்கூடிய வல்லமை படைத்தவை. பொருளாதாரம் என்ற இயந்திரம் இயங்க டேட்டா

தான் எரிபொருள் (Knowledge is the engine of our economy and data is the fuel) என்பார்கள். மேலாண்மை நிபுணர்களும், விஞ்ஞானிகளும் வழக்கமாக ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள அல்லது ஆராய்ச்சி செய்து புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள என்னென்ன டேட்டா சேகரிக்க வேண்டும், சேகரித்த டேட்டாவை எப்படியெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும் என முடிவு செய்து டேட்டாவை சேகரிக்க ஆரம்பிப்பார்கள்.

இன்றைக்கு கணினி மயமாகிவிட்ட உலகில் ஒவ்வொரு நொடியும் உற்பத்தி ஆகி சேகரிக்கப்படும் தகவல்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. சில தொழில்களில் டேட்டா சேகரிப்பும் அனலிடிக்ஸும் மூச்சுக்காற்றுபோல் ஒரு அத்தியாவசியத் தேவையாகவே இருந்துவருகின்றது.

 

உதாரணத்திற்கு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள். நம்முடைய தரை வழிப் போக்குவரத்திற்கு நாம் உபயோகிக்கும் பைக், கார் போன்றவை திடீரென மக்கர் செய்கின்றன. காலையில் அலுவலகத்துக்கு செல்லும்போது நன்றாக இருந்த பைக் மாலையில் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வரும் வழியில் அடிக்கடி நின்று போகின்றது. கஷ்டப்பட்டு மெக்கானிக்கை தேடிப்பிடித்து பழுது நீக்கி என்னவொரு நாளடா இது என்று புலம்பி வீடு திரும்புகின்றோம். இதையே விமானப் பயணத்தில் நினைத்துப்பாருங்கள். பாதி

வழியில் நின்றாலோ, அல்லது நின்று போகும் அளவுக்கு ஏதேனும் சிக்கல்கள் உருவாகிக்கொண்டிருந்தாலோ எப்படிக் கண்டுபிடிப்பது? நிறுத்தி நிதானமாய் ஆராய முடியாது இல்லையா? அதனாலேயே விமானங்களின் வடிவமைப்பு அது பறக்கும்போதே பல்வேறு விதமான செயல்பாட்டு டேட்டாக்களை சேகரித்து விமானம் தயாரித்த நிறுவனத்திற்கு அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

மும்பையிலிருந்து புறப்பட்டு பாரிஸ் நகரம்வரை ஒரு முறை பறந்து செல்லும் 787 என்ற புதிய ரக போயிங் விமானம் சேகரிக்கும் டேட்டா மட்டும் ஏறக்குறைய 500 கிகா பைட்டுகள். அதாவது, 100 டிவிடிக்களில் பதிவு செய்யக்கூடிய அளவு டேட்டாவை அந்த பயணத்தில் மட்டுமே சேகரிக்கின்றது அந்த விமானம். புதிய ரக விமானங்கள் பலவும் அவற்றில் உள்ள பாகங்கள் செயல்படும் நிலை குறித்து இண்டர்நெட் மூலம் தகவல்களை சேகரித்து தொடர்ந்து தரையிலிருக்கும் கன்ட்ரோல் சென்டருக்கு பரிமாறிக்கொண்டேயிருக்கும். Continuous Iterative Exploration என்ற அனலிடிக்ஸ் நுட்பம் இந்தத் தகவல்களை எல்லாம் இடை விடாது தொடர்ந்து ஆராய்ந்து கொண்டேயிருக்கும்.

 

ஏதாவது ஒரு இயந்திரத்திலோ அல்லதுவேறு எதாவது பாகங்களிலோ கோளாறு ஏற்பட வாய்ப்பு இருந்தால், முன் கூட்டியே அறிந்து கொண்டு, தரை இறங்குவதற்கு முன்பாகவே விமான நிலையத்திற்கு கன்ட்ரோல் சென்டரில் இருந்து இந்த அனலிடிக்ஸ் சாப்ட்வேர் தகவல் தெரிவித்துவிடும் .

இதனால் விமானப் பொறியியல் வல்லுநர்களை தயார் நிலையில் வைத்து விமானம் இறங்கிய உடன் உடனடியாக சரி செய்யவும் முடியும். ஒவ்வொரு பாகங்களும் என்ன செய்து கொண்டிருக்கின்றன, திறம்பட வேலை செய்து கொண்டிருக்கின்றனவா, அண்மையில் கோளாறு ஏதும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை எல்லாம் அனலிடிக்ஸ் மூலம் தெரிந்து கொண்டே விமானத்தின் பாராமரிப்புப் பணிகள் நடந்துவருகின்றன.

 

மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மொத்த டேட்டாக்களை விட கடந்த இரண்டு முன்று ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட டேட்டாக்களின் அளவு மிகவும் அதிகம். தற்சமயம் ஒவ்வொரு நொடிப் பொழுதும் உலகம் முழுவதும் உற்பத்தி ஆகும் டேட்டாக்களின் எண்ணிக்கையை நினைத்துப் பார்க்கும்போதே மிகவும் மலைப்பாக இருக்கிறது. பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட மற்றும் தினமும் சேரும் அளவில்லா டேட்டாவை ப்ராசஸ் செய்ய வேண்டும் என்றால் அது பிக் டேட்டா அனலிடிக்ஸினால் மட்டுமே சாத்தியம்.

பணம் சம்பாதிக்க நிறுவனங்களுக்கு உதவும் மற்றுமொறு உத்திதான் இது என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது. டேட்டா என்பது பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே அனலைஸ் செய்யப்படுவது இல்லை. ஏனைய பிற உபயோகங்களும் அனலிடிக்ஸினால் உண்டு.

உதாரணத்திற்கு, கூகுளில் திடீரென அதிக அளவில் ஒரு ஊரிலிருந்து தேடப்படும் ஒரு சொல்லை வைத்து அந்த சொல்லின் சம்பந்தப்பட்ட விஷயம் ஏதோ ஒன்று அந்த ஊரில் நடக்கின்றது என்று அறியலாம். மாவட்ட வாரியாக, தேடப்படும் குறிப்பிட்ட சொற்களை வைத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் விஷக்காய்ச்சல் பல்கிப் பெருகுவதற்கான சாத்தியக்கூறுகளை முன் கூட்டியே அனலெடிக்ஸ் மூலம் கணிக்க முடியும். அதை வைத்து, ஒரு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் ஒரு பெரிய பேரழிவிலிருந்து மக்களை சுலபமாகக் காப்பாற்றி விடலாம்.

 

ருவாண்டா நாட்டில் நடந்த உண்மைக் கதையைப் பார்த்தால் இது புரியும். ஒரு ஊரில் கொடியதொரு தொற்று நோய் தோன்றியது. இந்த ஊருக்கு வேறெங்கெல்லாம் இருந்து மக்கள் வந்து போயுள்ளார்கள் என்று ஆராய்ந்து எந்த ஊருக்கு அதிகமானவர்கள் போயுள்ளார்களோ அந்த ஊரில் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு நிர்வாகம் நினைத்தது.

அந்த ஊரைச் சுற்றியுள்ள பதினெட்டுப்பட்டி மக்களின் குறிப்பிட்ட நாட்களுக்குறிய மொபைல் போன் டவர் குறித்த பதிவுகளை அந்தப் பகுதியில் உள்ள அனைத்து மொபைல் கம்பெனிகளிடமிருந்து வாங்கி, அந்த பதிவுகளில் இருந்து, அந்த கால கட்டத்தில் அவர்கள் பயணித்த தூரங்களை அனலெடிக்ஸ் மூலம் அலசி ஆராய்ந்தனர்.

 

இப்படி செய்த ஆராய்ச்சியில் பதினெட்டுப்பட்டியில் எந்த ஊரிலிருந்து அதிகம் பேர் தொற்றுநோய் ஆரம்பித்த ஊருக்கு வந்து போயுள்ளனர் என்று கண்டறிந்து அந்த ஊரில் அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களை பேரழிவிலிருந்து காப்பாற்றினார்கள் என்று அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்தானே!

 

ஒரு தொழில்நுட்பமோ அல்லது சேவையோ மனித சமுதாயத்திற்குப் பெரிய அளவில் பயன் தரவில்லை என்றால் அது நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்க வாய்ப்பில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. பிக் டேட்டா இதுவரை இல்லாத அளவிற்கு மனித சமுதாயத்துக்கு பல மிகப் பெரிய நன்மைகளை செய்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதை நம் நிறுவனங்களும் அரசாங்கமும் எந்த அளவிற்கு உணர்ந்து பயன் படுத்திக்கொள்ளப் போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

http://tamil.thehind...ref=relatedNews

 

 

Link to comment
Share on other sites

தேடவேண்டிய இடத்தில் தேடு

 

 

search_2044393h.jpg
 

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே! அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே! . . . என்ற பாட்டை நீங்கள் கேட்டிருப்பீர்கள். தனி மனிதனை மனதில் வைத்து பாடப்பட்ட பாடல் அது. வியாபார நிறுவனங்களும் சில ஆண்டுகளுக்கு முன் வரை பை(கை)யில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்துகொண்டிருந்தார்கள் என்றே சொல்லலாம்.

எந்த வாடிக்கையாளர் என்னென்ன பொருட்களை வாங்குவார், எந்தெந்த பிராண்டுகளை ஒரு சேர உபயோகிப்பார், நம்முடைய தயாரிப்பில் எந்த வசதிகள் கட்டாயம் தேவை, எது தேவையேயில்லை என்பதெல்லாம் குறித்து ஆய்வு செய்ய நிறுவனங்கள் தங்களுடைய கணினிகளில் புதைந்திருக்கும் டேட்டா குவியல்களை பிரித்து மேய்ந்தாலே பல உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்ற உண்மையை உறைக்க வைத்ததுதான் பிசினஸ் அனலிட்டிக்ஸ். அட அதையெல்லாம் விடுங்கள்.

இணையதள வியாபாரத்தில் யார் விலையை கேட்டுவிட்டு நைசாக நழுவிவிடுவார், யார் விலை கேட்டுவிட்டு உடனடியாக வாங்குவார் என்ற கணக்குகளையெல்லாம் கூட போட்டுவிடமுடியும், பிசினஸ் அனலிடிக்ஸை வைத்துக்கொண்டு. உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் மருந்துக்கடையில் உங்கள் தாத்தாவிற்கு மாதாமாதம் முதல் வாரத்தில் அந்த மாதம் முழுவதற்கும் தேவையான மருந்து வாங்குகின்றீர்கள்.

 

தாத்தாவோ நீங்கள் ஆபீஸிற்கு அவசரமாக கிளம்பிக்கொண்டிருக்கும் போது பேராண்டி இதுதான் கடைசி மாத்திரை என உங்களிடம் காண்பித்து உங்கள் ஞாபக மறதியை குத்திக்காட்டி மாத்திரையை வாயில் போடும் குணம் கொண்டவர். அட! என்னவொரு மறதி என்று நினைத்து உடனே அருகில் உள்ள வாடிக்கையான கடைக்கு ஓடினால் கைவசம் இல்லை சார். நாளைக்கு நிச்சயம் வந்துவிடும் என்கின்றார்.

 

ரத்த அழுத்தமோ, சர்க்கரையோ தாத்தாவுக்கு நாளைக்குள் ஏறிவிடுமே என்று பயப்பட்டுப்போய் நீங்கள் வேறுகடை தேடிப்போகின்றீர்கள். மருந்துக்கடைக்காரருக்கு ஒரு வாடிக்கையாளர் இழப்பு. புதிய கடையில் நீங்கள் முப்பது நாட்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை வாங்குகின்றீர்கள். இருபத்தி ஏழாவது நாள் உங்களுக்கு குறுஞ்செய்தி வருகின்றது. உங்களிடம் இன்னும் மூன்று நாட்களுக்கான மருந்துதான் இருக்கும் இந்த எண்ணுக்கு

`ஆம்’ என்று பதில் அனுப்பினால் உங்கள் வீட்டில் மருந்தை கொடுத்து காசு வாங்கிச்செல்வோம் என்கின்றது புதுக்கடை. `ஆம்' என்று பதில் அனுப்பாமல் பழைய பாசத்தில் நீங்கள் பழைய கடைக்குப் போனால் `மன்னிக்கவும் சார், நேற்றைக்கே சப்ளை வரணும்.

 

இன்றைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கின்றோம்' என்கின்றார் கடைக்காரர். `ஆம்' என்று புதுக்கடைக்கு குறுஞ்செய்தி அனுப்புகின்றீர்கள். மாலைக்குள் மருந்து மாத்திரை வீடு வந்து சேருகின்றது. அதெப்படி, இந்தக் கடையில் கேட்டாலும் இல்லை; அந்தக்கடையில் கேட்காமலேயே நினைவு படுத்துகின்றார்கள்? அந்தக்கடைக்கு மருந்து சப்ளை செய்யும் நிறுவனம் நீங்கள் சென்ற மாதம் இந்த மருந்து இந்த அளவு விற்றிருக்கின்றீர்கள் என நினைவூட்டி மருந்தை அனுப்பி வைக்கவா என்று கேட்க கடைக்காரர் உங்களுக்கு நினைவூட்டுகின்றார்.

 

``டெக்னாலஜி இம்ப்ரூவ்ட் சோ மச்” என்று சுலபத்தில் சொல்லாதீர்கள். போன மாதம் இன்னார் இந்த மருந்து வாங்கினார் என்ற டேட்டா அவர்களிடத்தில் இருக்கின்றது. மருந்தின் பெயரை வைத்தே இது தொடர்ந்து சாப்பிடவேண்டிய மருந்து என்று தெரியும். விற்பனை ரசீது போடும்போது தாத்தாவின் பெயரையும் உங்களுடைய மொபைல் எண்ணையும் பதிந்துகொண்டால் பின்னால் அந்த டேட்டாவை நிதானமாய் பிராய்ந்து பார்த்து குறுஞ்செய்தி அனுப்பலாம் இல்லையா?

நாம் கால் பதிக்கும் பூமிக்கு அடியில் நூற்றி ஐம்பது கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கும் வைரம் போல் இந்த டேட்டாக்களும் மதிப்பு மிக்கவை. எப்படி பூமிக்கு அடியில் அழுத்தம் மற்றும் அதீத வெப்பத்தால் வைரங்கள் உருவாகி ஒரு எரிமலை வெடிக்கும் போது மனிதனால் தோண்டி எடுக்கக்கூடிய ஆழத்திற்கு வந்து சேர்கின்றனவோ அதே போல்தான் வியாபார டேட்டாக்களும்.

 

ஒரு ப்ளேட் இட்லி, ஒரு செட் பூரி, காபி என்ற காம்பினேஷனும், ஒரு ப்ளேட் இட்லி, ஒரு ரோஸ்ட், மசாலா பால் என்ற காம்பினேஷனும் எத்தனை பேருக்கு விற்கப்பட்டது, மசாலா பாலுக்கும் ரோஸ்ட்டுக்கும் ஏதாவது பந்தம் இருக்கின்றதா என்று பார்த்து சர்வர்களிடம் தம்பி ரோஸ்ட் சாப்பிட்டவரிடம் மசாலா பால் சுலபத்தில் விற்கலாம் என்று ஹோட்டல்காரர் சொல்லிவைத்தால் அதிக லாபம் தரும் மசாலா பால் இரவு எட்டுமணிக்குள் கடையில் தீர்ந்துபோய்விடுமா இல்லையா? டேட்டாக்களின் இடையே இருக்கும் மதிப்புமிக்க வைரத்தை மனிதனின் கண்ணுக்கு தெரியப்படுத்தும் எரிமலை வெடிப்புதான் பிசினஸ் அனலிடிக்ஸ். இதுபோன்ற விலை மதிப்புள்ள முத்துக்களை எடுக்கவேண்டுமென்றால் (டேட்டா) கடலுக்குள் நிறுவனங்கள் குதித்துத்தான் ஆகவேண்டும்.

 

உலகில் உள்ள நிறுவனங்கள் தொழில் ரீதியாக காலம் காலமாக பல டெராபைட் (1 டெராபைட் என்பது 1 லட்சம் கோடி பைட்டுகள்) விற்பனை மற்றும் சேவை தகவல்களை பெற்று சேமிக்கின்றன. அந்தத் தகவல்கள் எல்லாம் எங்கோ ஒரு கணினிக்குள் புதைந்து போகின்றன. ஆழத்தில் டிஜிட்டலாக புதைந்து கிடக்கும் குப்பைகள் மதிப்பு மிக்க வைரங்களாக மாறி, நிறுவனங்களுக்கு மிகச் சிறந்த எதிர்காலத்தை கொடுக்க காத்துக்கொண்டு இருக்கின்றன. அதைத் தோண்டி எடுத்து மதிப்புக்கூட்டும் ஒரு வித்தைதான் பிசினெஸ் அனலிடிக்ஸ் எனப்படும் ஒரு புதிய யுக்தி.

நாளைக்கு நடப்பதைத் தெரிந்துகொள்ள நேற்றைக்கு நடந்தவற்றில் இருக்கும் ஒருமைப்பாடுகளை இன்றைக்கு தேடும் உத்தி இது. நீங்கள் செல்போன் கனெக்ஷன் வைத்திருக்கும் நிறுவனத்தின் கஸ்டமர் கேர் லைனுக்கு அடிக்கடி போன் செய்து புதிய ஆஃபர்கள் பற்றி கேட்டுக்கொண்டேயிருக்கின்றீர்கள்.

 

ஒரு ஆஃபரும் சரியாக இல்லை என்று நினைத்து கடுப்பாகி நீங்கள் போர்ட்டபிலிட்டி கேட்டு மெசேஜ் அனுப்ப நினைக்கும்போது உங்கள் கஸ்டமர் கேர் கால்களை பிசினஸ் அனலிடிக்ஸில் கண்டறிந்து உங்கள் எண்ணத்தை புரிந்து கொண்டு, உங்கள் பில்லை ஆராய்ந்து பிரச்சினை என்ன என்பதையும் அறிந்துகொண்டு, 'சார், உங்களுக்கு ஒரு புதிய ஆஃபர் ஒன்று கொடுக்க விரும்புகிறோம்' என்று உங்கள் பிரச்சினையைத் தீர்க்கும் ஒரு புதிய திட்டத்தை கொடுத்தால் உங்களுக்கு எவ்வளவு ஆச்சரியமாகவும், சந்தோசமாகவும் இருக்கும்? போர்ட்டபிலிட்டிக்கு அதற்குப் பின்னால் முயற்சிப்பீர்களா?

நீங்கள் பிளிப்காட்டில் அன்று அறிமுகப்படுத்தப்பட்ட புது மொபைலின் விலை என்னவென்று பார்த்துவிட்டு ‘ஹிந்து தமிழ்’ இதழை இணையத்தில் படிக்கும்போது நீங்கள் பார்த்த போனை உங்கள் கண் முன்னேயே தொடர்ந்து கொண்டுவந்து நிறுத்துவதும் பிசினஸ் அனலிடிக்ஸின் ஒரு பகுதிதான். பார்த்ததை உங்கள் கண்கள் மறந்தாலும் கணினிகள் மறப்பதில்லை. உங்கள் கண் முன்னே கொண்டுவந்து நினைவூட்டி ஆசை காட்டிக்கொண்டேயிருக்கும்.

 

http://tamil.thehind...ref=relatedNews

 

Link to comment
Share on other sites

இது எப்படி உதவும்?

 

data_2113376f.jpg

 

ஒரு வழியாக டேட்டாவை தேற்றியாகிவிட்டது. அதென்ன தேற்றியாகிவிட்டது. டேட்டா கலெக்‌ஷன் என்பதை ஒரு கட்-ஆப் தேதி வைத்து முடித்துவிட முடியுமா என்ன என்று ஒரு கேள்வி உங்கள் மனதில் தோன்றலாம். பிசினஸ் அனலிடிக்ஸைப் பொருத்தவரை டேட்டா என்ற வார்த்தை ஒரு தமிழ் வார்த்தையாக இருந்தால் இலக்கண ரீதியாக அது வினைத்தொகைக்கு சிறந்த உதாரணமாக அமைந்திருக்கும்.

ஊறுகாய் என்ற தமிழ்ச்சொல்லின் இலக்கண விதி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஊறின காய், ஊறுகின்ற காய், ஊறும் காய் என மூன்று கால வினைகளையும் தொகுத்து ஒரு சேரக் குறிக்குமாறு வரும் ஒரு பெயர்ச்சொல்லுக்கு சுலபமான உதாரணமாக எடுத்துக்காட்டப்படும் சொல் ஊறுகாய்.

 

டேட்டா அனலிடிக்ஸிற்குத் தேவைப்படும் டேட்டாவும் இந்த மூன்று காலத்தையும் குறிப்பதே. கடந்தகால டேட்டா, இன்றைய/இப்போதைய டேட்டா, நாளைய டேட்டா என டேட்டா முக்காலத்திலும் கலெக்ட் செய்யப்படும் ஒன்று. இப்படி முக்காலத்திலும் கலெக்ட் செய்யப்படும் டேட்டாவை அனலிடிக்ஸ் சாப்ட்வேர்தனை கொண்டு பீராய்ந்தால் நம்மால் நாம் இருக்கும் வியாபாரத்தின் உலகத்தை முழுசாக உணரமுடியும் என்று சொல்லலாம்.

ஊறுகாய்க்கும் பிக்டேட்டாவிற்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், அளவு ரீதியாக நேற்றைய பிக்டேட்டா இன்றைய பிக்டேட்டாவை விட சிறியது. அதேபோல் நாளைய பிக்டேட்டாவை விட இன்றைய பிக்டேட்டா மிகமிகச் சிறியது என்பதுதான். 2005 களில் ஒரு டேட்டாபேசில் இரண்டுகோடி வரிசைகள் (rows) இருந்தால் அது பிக்டேட்டா எனப்பட்டது. இன்றைக்கு டெராபைட்டுகள் பல இருந்தால் மட்டுமே அது பிக்டேட்டா என கருதப்படுகின்றது. வரும் காலத்தில் இந்த அளவு எங்கேயெல்லாம் போகும் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

 

மலைக்கும் விஷயம்

பொதுவாக தொழிலில் இருப்பவர்கள் முதலாளியானாலும் சரி, பணியாளர்களானாலும் சரி, விற்பனை பிரிவில் இருப்பவர்களானாலும் சரி சிஸ்டம்ஸ் பிரிவில் இருப்பவர்களானாலும் சரி மலைத்துப்போகும் ஒரே விஷயம் இந்த டேட்டா குவியல்களைப் பார்த்துத்தான். கம்ப்யூட்டர் வருவதற்கு முன்னால் பேப்பர் குவியல்களைப் பார்த்து மலைத்துக்கொண்டிருந்த மனிதர்கள் நாம். இப்போது டேட்டாவை பார்த்து மலைக்கின்றோம். இந்த டேட்டா குவியல்களில் இடையே உட்கார்ந்து கொண்டு எங்கே ஆரம்பிப்பது. எப்படி ஆரம்பிப்பது என்பதுதான் அனலிடிக்ஸ் செய்ய நினைக்கும் அனைவரின் பிரச்சினையுமாகும்.

 

சிக்கல்கள்

நமது டேட்டாவை எப்படி நமக்கு உபயோகப்படும் தகவலாக மாற்றுவது?. அப்படி மாற்ற செய்யவேண்டிய ப்ராசஸ்கள் என்னென்ன என்று யோசித்தால் தலை சுற்றும். எங்கே ஆரம்பிப்பது என்பதற்கு ஏதாவது ரூல்கள் இருக்கின்றதா? பெஸ்ட் பிராக்டிசஸ் எதுவும் இருக்கின்றதா? யாரை வேலைக்கு எடுப்பது? டிரெயினிங் கிளாஸிற்கு நம்ம ஆளுங்க நாலு பேரை அனுப்பிவிடலாமா? என்றெல்லாம் யோசிக்கவைக்கும் டேட்டாவின் அளவும் அதனால் தோன்றும் மலைப்பும்.

அதிலும் வேலைக்கு ஆள் சேர்ப்பத்தில் நிறையவே சிக்கல்கள் வரும். தொழில் தெரிந்தவர், ஸ்டாடிஸ்டிக்ஸ் மற்றும் அனலிடிக்ஸ் தெரிந்தவர், சாப்ட்வேர் வல்லுநர் என ஒன்றுக்கும் மேற்பட்ட அந்தத்தத்துறையில் சிறந்த அறிவுடைய அதேசமயம் ஜாடிக்கேற்ற மூடியாக (கெமிஸ்ட்ரி!!) செயல்படக்கூடிய நபர்களாக பார்த்துப்பார்த்து தேர்ந்தெடுக்கவேண்டியிருக்கும்.

 

பிசினஸ் பண்ண முடியுமா?

இப்படி எல்லாவற்றையும் பார்த்து/நினைத்து மலைத்திருக்கும் போது கம்ப்யூட்டர் என்றால் காத தூரம் ஓடும் ஒரு சீனியர் நபர் வந்து டேட்டாவை வச்சுக்கிட்டு பிசினஸ் பண்ண முடியுமா?. அனலிடிக்ஸ் வந்து சரக்கை வித்துத்தருமா? வீதி வீதியாய் போய் வித்துப்பாருங்க தெரியும். சும்மா ஏசி ரூம்ல உட்கார்ந்துகிட்டு பிசினஸைப் பத்தி ஆராய்ச்சி செய்ய நினைக்காதீங்கன்னு சொல்லி வெறி ஏற்றிவிட்டுப் போவார். மேலோட்டமாகப் பார்த்தால் அவர் சொல்வது புலம்பல் மாதிரி தெரிந்தாலும் அவர் சொல்வதில் மிகச்சரியான நியாயங்களும் இருக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

ஏனென்றால், ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு குணாதியசம்தனைக் கொண்டது. உதாரணத்துக்கு, தமிழ் ஹிந்து போன்ற தினசரிப் பத்திரிகைதனை வாடிக்கையாளர்களுக்கு வீடுவீடாக டிஸ்ட்ரிப்யூஷன் செய்வதும், கொரியர் கம்பெனியில் டிஷ்ட்ரிப்யூஷன் செய்வதும் ஒரே ஊரில் அதே தெருக்களில் அலைந்து திரிந்து டெலிவரி செய்யும் வேலைதான். இருந்தாலும் காலை ஐந்து மணிமுதல் ஏழு மணிக்குள் ஊரே அடங்கியிருக்கும் போது வீடுவீடாய் டெலிவரி செய்வதற்கும், ரோட்டில் ஆள் நடக்கவே முடியாத நேரத்தில் மட்டுமே டெலிவரிக்கும் கலெக்‌ஷனுக்கும் போவதற்கும் இருக்கும் வித்தியாசம் மிகப்பெரியது அல்லவா?

 

காரணிகள் வெவ்வேறு?

மருத்துவமனை ஒன்றில் கூட்டம் அதிகமாக இருக்கின்றது. ரெஸ்டாரெண்ட் ஒன்றில் கூட்டம் அதிகமாக இருக்கின்றது. இரண்டு இடத்திலும் வந்த கஸ்டமர் தனக்குத் தேவையான சேவையைப் பெற எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பதற்கான காரணிகள் வெவ்வேறு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதானே?

சாதாரணமாக மருத்துவமனை பெரிய முயற்சிகள் ஏதுவும் செய்யாமலேயே தங்கள் வாடிக்கையாளர்கள் குறித்த எக்கச்சக்கமான தகவல்களை கலெக்ட் செய்து வைத்திருக்கும். ஒரு ரெஸ்ட்டாரெண்ட்டோ வாடிக்கையாளரின் மொபைல் போனின் எண்ணைக்கூட வைத்திருக்காது.

 

தேவை என்ன?

இதுபோல தொழில் குணாதிசியங்களும் அது தரும் டேட்டாக்களும் வெவ்வேறாக இருப்பதால் அனலிடிக்ஸ் பணியாளர்களுக்கு முதன் முதலில் தேவைப்படுவது அந்த பிசினஸ் குறித்த முழு ஞானம் என்று சொல்லலாம். தொழில் ஞானம் என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காயாய் இருந்தால் பிரயோஜனம் இல்லை. நல்லதொரு நுண்திறனும் கற்பனை சக்தியும் தேவைப்படும்.

ஒருவேளை இப்படி இருக்குமோ? அப்படியிருக்குமோ என்று மண்டைக்குள் நண்டு பிராண்டுகின்ற நபர்களே இந்தத் தொழிலில் முக்கிய அங்கம் வகிக்கும் ஒரு நபராவார். இவரை டொமைன் எக்ஸ்பர்ட் என்பார்கள் ஆங்கிலத்தில். டொமைன் எக்ஸ்பர்ட் அந்தத் தொழிலில் என்னென்ன செயல்பாடுகள் நடைபெறுகின்றது மற்றும் எந்தெந்தத் தேவைகள் எல்லாம் உள்ளது என்பதையெல்லாம் தெரிந்தவர்.

 

தெரிந்துகொள்ள வேண்டியவை

ஏற்கனவே நாம் பார்த்த மருத்துவமனை மற்றும் ரெஸ்ட்டாரெண்ட் உதாரணத்தில் மருத்துவமனைக்கு வயிற்றில் கொள்ளை வலி என்று வந்தால் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் டிப்பார்ட்மெண்ட் மற்றும் எண்டோஸ்கோப்பி டிப்பார்ட்மெண்ட் க்யூவைப் (வெயிட்டிங் டயத்தை கணக்கிட) பார்க்கவேண்டும். லைட்டா வலி என்றால் டூட்டி டாக்டர் க்யூவைப் பார்க்கவேண்டும்.

ரெஸ்டாரெண்டிற்கு வயிற்றில் கொள்ளைப் பசியுடன் வந்தால் முதல் மாடியில் இருக்கும் பஃபே ஹால் வெயிட்டிங் டைமை கணக்கிட்டுச் சொல்ல வேண்டும். லைட்டாய் பசி என்றாள் சாட் அயிட்டம் கவுண்ட்டர் ப்ரியாக உள்ளதா என்பதையெல்லாம் சரியாய் புரிந்து கணக்கிட்டுச் சொல்ல அந்தந்த டொமைன் மற்றும் டிப்பார்ட்மெண்டுகளின் செயல்பாடுகள் மொத்தமும் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டுமல்லவா?

 

சரி டொமைன் தெரிந்த நபர் இருக்கின்றார். டேட்டா ஒவ்வொரு டிப்பார்ட்மெண்டிலும் இருந்து வருகின்றது. அந்தந்த டேட்டாக்கள் எந்தெந்த விஷயங்களை வெறும் பார்வையிலேயே சொல்கின்றது என்பதை அவர் நன்கு புரிந்தவராக இருக்கவேண்டும். இன்றைக்கு கார்டியாக் டிப்பார்ட்மெண்டில் ஊரில் பாப்புலரான சீனியர் டாக்டர் புதிதாய் வேலைக்கு சேர்ந்துள்ளார் என்ற டேட்டா வந்தால் கார்டியாக் டிப்பார்ட்மெண்டில் வெயிட்டிங் டைம் மற்ற டாக்டர்களுக்கு குறையும் வாய்ப்புள்ளது என்று தெரிந்து மாறுதல்களை உணர்ந்து செயல்படுபவராய் இருக்கவேண்டும்.

 

இந்த வாரம் செட்டிநாட்டு சமையல் ஸ்பெஷல் வாரம் என்றால் சாதாரணமாக அரைமணியில் காலியாகும் டேபிள்கள் முக்கால் மணியில் காலியாகும் வாய்ப்பே உள்ளது என்றும் அதிலும் அந்த வாரம் அதிக லீவு நாட்கள் உள்ள வாரம் என்றால் கூட்டம் அலைமோத வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்தவராகவும் இருக்கவேண்டும். அனலிடிக்ஸ் பணியில் டொமைன் தெரிந்த நபரின் தேவை எந்த அளவு முக்கியம் என்பது நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் நிகழ்வுகளைக்கொண்டு சொல்லப்பட்ட இந்த சின்னச் சின்ன உதாரணங்கள் மூலம் புரிந்துகொண்டிருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

புரிந்துகொள்வதற்காக மிகச்சிறிய உதாரணங்களைக் கொடுத்திருக்கிறேனே தவிர ரியல்டைம் வியாபாரத்தில் டொமைன் ஸ்பெஷலிஸ்டின் பங்கு மிகமிகப் பெரியது. அதை அடுத்தவாரம் பார்ப்போம்.

 

http://tamil.thehind...ref=relatedNews

 

Link to comment
Share on other sites

எங்கும் எதிலும் அனலிடிக்ஸ்

 

data_2124608h.jpg

 

பெரும்பாலோனர் மத்தியில் அனலிடிக்ஸ் குறித்து ஒரு பிரம்மாண்டமான எண்ணம் இருக்கின்றது. அனலிடிக்ஸ் ஒரு மேஜிக்கான விஷயம் - கிட்டத்தட்ட அலாவுதீனின் அற்புத விளக்கைப்போன்ற ஒரு விஷயம். அதை உபயோகித்தால் நினைத்த காரியம் அனைத்திலும் ஜெயமே! எனவே, எப்பாடுபட்டாவது அனலிடிக்ஸ்தனை நம்முடைய கம்பெனிக்குள் நடைமுறைக்கு கொண்டுவந்துவிடும் பட்சத்தில் பணம் கொட்டோகொட்டு என்று கொட்டிவிடும் என்று நினைக்கிறார்கள்.

இது ஒரு தவறான நினைப்பே! முதலில் ஒரு பிசினஸ் அனலிடிக்ஸை உபயோகித்து என்னென்ன விஷயங்களை அறிந்துகொள்ள முடியும் என்பதை நிறுவனங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிசினஸின் ரிஸ்க்குகள், பிசினஸில் இருக்கும் வாய்ப்புகள், பிசினஸ் எதிர்கொள்ள வாய்ப்பிருக்கும் ஏமாற்று வேலைகள் மற்றும் நம்முடைய பிசினஸ் தரும் பொருட்கள் மற்றும் சர்வீஸிற்கான டிமாண்ட் என்ற நான்கு விஷயங்களும் பல்வேறு விகிதாச்சாரங்களில் ஒருங்கிணைந்த எக்கச்சக்கமான காம்பினேஷன்களின் காரண காரியங்களை மட்டுமே அனலிடிக்ஸின் மூலம் ஒரு பிசினஸால் அறிந்துகொள்ள முடியும்.

 

தொழில் வியூகம் முக்கியம்

இந்த விஷயங்கள் அனைத்துமே ஒரு பிசினஸில் நடைமுறை (ஆபரேஷன்) சம்பந்தப்பட்டவைதான். தொழில் வியூகம் (ஸ்ட்ராட்டஜி) சம்பந்தப்பட்டவையல்ல. ஒரு செயலைச் செய்துவிட்டு ஏன் இதைச் செய்தோம் என்பதை நியாயப்படுத்தவும், ஒரு நடவடிக்கை எடுக்கப்படும் போது இதனால்தான் இந்த நடவடிக்கை எடுக்கின்றோம் என்பதை தெரிந்து செய்யவும், தொழில் செய்யும்போது இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் இதைச் செய்தால் சரியாகிவிடும் என்ற வழிகாட்டுதல்தனைப் பெறவுமே அனலிடிக்ஸ் பெருமளவுக்கு உதவுகின்றது.

 

ஒரு தொழிலில் பணத்தை கொண்டு வந்து கொட்டுவதில் பெரும்பங்கு வகிப்பது தொழில் வியூகம்தானே தவிர நடைமுறையல்ல என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும் அல்லவா? தொழிலில் பணம் சம்பாதித்து தருவதில் நடைமுறைக்கு சரியான பங்கு இருக்கின்றது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது என்றாலுமே வெற்றியை வகுத்துத்தருவது வியூகம் மட்டுமே. அதனை பாதுகாத்து மேன் மேலும் எடுத்துச்செல்ல உதவுவது நடைமுறையில் இருக்கும் புத்திசாலித்தனம் மட்டுமே என்று சொல்லலாம்.

 

சரியான நபர்கள் தேவை

‘லிங்கா’ ரிலீஸாகும் தேதியன்று நாம் இருவரும் சேர்ந்து பைனான்ஸ் செய்து நீங்கள் ஹீரோவாகவும் நான் வில்லனாகவும் நடித்து எடுத்த படத்தை ரிலீஸ் செய்வது வியூகத்தின் தவறேயன்றி வேறெதுவும் இல்லை. இல்லையா? அதனாலேயே தொழில் வியூகம் குறித்த நடவடிக்கைகளுக்கு அனலிடிக்ஸை உபயோகிக்க முயல்வது சரியாய் இருக்காது எனலாம்.

 

இப்படி முழுக்க முழுக்க ஆபரேஷன் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுப்பதற்கு அனலிடிக்ஸை உபயோகப்படுத்துகின்றோம் என்பதால் அனலிடிக்ஸை கையாள்வதற்கு அந்தந்தத் தொழிலின் குணாதிசியங்களை முழுமையாகப் புரிந்துகொண்ட நபர்கள் அவசியம் தேவைப்படுகின்றார்கள். ஒவ்வொரு தொழிலும் அதன் அளவுக்கு தகுந்தாற்போல் வெவ்வேறு குணாதிசியங்களைக் கொண்டது. ஒரே ஒரு இடத்தில் கடைவைத்து வியாபாரம் செய்து பழம்பெரும் பெயரைப் பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா வியாபாரமும் ஸ்வீட் வியாபாரமே.

 

தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, புதுதில்லி என பல ஊர்களிலும் கிளைகளைக் கொண்டிருக்கும் பிரசித்தி பெற்ற அடையாறு ஆனந்த பவன் நிறுவனத்தின் வியாபாரத்திலும் ஸ்வீட்தான் இருக்கின்றது. இரண்டு நிறுவனங்களுடைய வியாபாரமும் வெவ்வேறு ஆபரேஷன் (அன்றாட செயல்பாடுகள்) தேவைகளைக் கொண்டதாக இருக்கும் இல்லையா? இங்கேதான் டொமைன் ஸ்பெஷலிஸ்ட் முக்கியத்துவம் பெருகின்றார்.

 

திருமணத்துக் வரன் தேடித்தரும் மேட்ரிமோனி இணையதளங்கள் கூட இன்றைக்கு அனலிடிக்ஸ் சாப்ட்வேர்களை உபயோகித்து இந்த வரன் நீங்கள் நினைக்கும் விதத்தில் இருக்கலாம் என்ற தகவலை பதிவுசெய்தவர்களுக்குத் தருகின்றன. அனலிடிக்ஸ் செய்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து உன்னை மணமுடித்தேன் என்று இன்றைக்கே பலஜோடிகள் பேசிக்கொள்ளுமளவுக்கு அனலிடிக்ஸின் உபயோகம் இந்தத் துறையில் இருக்கின்றது எனலாம்.

 

மேட்ரிமோனி தொழிலில் சமூக, உளவியல் மற்றும் கலாச்சார விஷயங்கள் முழுவதுமாகத் தெரிந்த டொமைன் ஸ்பெஷலிஸ்ட்களின் திறமை தேவைப்படும் இல்லையா? அட! டைவர்ஸ் கேசெல்லாம் வருதப்பா? என சினிமாவில் அரசியல்வாதியாய் மிடுக்கு காண்பிக்கும் கவுண்டமணி கலாய்ப்பது போல் அனலிடிக்ஸ் சாப்ட்வேர்கள் ஒரு தம்பதியருக்குள் டிவோர்ஸ் நடக்குமா (டிவோர்ஸ்360.காம் – இப் இட் இஸ் ஓவர் வாட் இஸ் நெக்ஸ்ட் –பைலைன் சூப்பராய் இருக்குதே!) என்றெல்லாம் கணக்குப்போட்டு சொல்கின்றதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

 

டொமைன் ஸ்பெஷலிஸ்ட்

தொழில் குணாதிசியங்கள் மற்றும் தொழிலின் அளவு போன்ற பல்வேறு வித்தியாசங்கள் இருந்த போதிலும் ஒவ்வொரு டொமைனிலும் அதன் தேவைக்கேற்ப வல்லுநர்கள் இருக்கவே செய்வார்கள். அவர்கள்தான் இதுபோன்ற நிறுவனங்களின் அனலிடிக்ஸ் தேவைக்கு முக்கிய நபர்கள் ஆவார்கள். மேலும், இந்த டொமைன் ஸ்பெஷலிஸ்ட்களே அனலிடிக்ஸின் மூலம் கிடைக்கும் அபூர்வமான அறிவை எப்படி அந்தத் தொழிலில் அமல்படுத்தமுடியும் என்பதைச் சொல்பவர்களாகவும் திகழ்வார்கள்.

ஆழ்ந்த அறிவு வருவது அனுபவத்தில் இருந்துதான் என்று சும்மாவா சொன்னார்கள் முன்னோர்கள். அடுத்தபடியாக அனலிடிக்ஸ் டிப்பார்ட்மெண்டிற்கு தேவைப்படுவது நல்லதொரு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் நிபுணர். டொமைன் ஸ்பெஷலிஸ்ட் மற்றும் ஸ்டாடிஸ்டிக்ஸ் நிபுணர் என்ற இரண்டுபேரும் சேர்ந்து கிட்டத்தட்ட கம்ப்யூட்டருக்கு (அனலிடிக்ஸ் சாப்ட்வேர் வழியாக) அந்தத்தொழிலில் கிடைக்கும் டேட்டாக்களைக் கொண்டு எப்படி தொழில் குறித்த அறிவையும், அது குறித்த முடிவெடுக்கும் திறமையை வளர்க்க உதவும் விஷயங்களையும் கண்டுபிடிப்பது என்று சொல்லித்தர ஆரம்பிக்கின்றார்கள் என்று சொல்லலாம். ஒரே மாதிரியான டேட்டாக்களும் எடுக்கவேண்டிய முடிவுகளும்/கேள்விகளும் தொடர்ந்து வருவதில்லை.

 

வேலை வாய்ப்புகள்

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு சீசனிலும் வெவ்வேறு வகையான டேட்டாக்கள். வெவ்வேறு வகையான சூழ்நிலைகள் மற்றும் விடைதேடப்படும் வெவ்வேறு விதமான கேள்விகள் என மாற்றம் என்பது தொடர்ந்து வருவதுதானே பிசினஸில் இருக்கும் சவால். சொல்வதற்கு சுலபமாய் இருந்தாலும் நிஜத்தில் மிகவும் கடினமான காரியம் என்றே இதைச் சொல்லவேண்டும்.

ஸ்டாட்டிஸ்டிக்ஸ் வல்லுநரும் அனலிடிக்ஸ் சாப்ட்வேர் ப்ரோகிராம் செய்யும் நபரும் ஒரே ஆளாக இருப்பார்கள். டொமைன் ஸ்பெஷலிஸ்ட், ஸ்டாட்டிஸ்ட்டீஷியன், அனலிடிக்ஸ் சாப்ட்வேர் ப்ரொகிராமர் என இந்த ப்ராசஸில் இருக்கும் மூன்று பேருக்கு நடுவே இருக்கும் கெமிஸ்ட்ரியின் அளவு சூப்பராய் இருந்தால் கண்டுபிடிப்புகளும் அதனால் வரும் பலன்களும் சூப்பராய் இருக்கும் எனலாம்.

 

ஒரு திரைக்கதை சினிமாவாக ஜெயிக்குமா, அடுத்த வருடம் எத்தனை யூனிட் மின்சாரத்தை மக்கள் உபயோகிப்பார்கள், நாம் ஒதுக்கியிருக்கும் விளம்பரத்துக்கான பட்ஜெட் தொகையில் பிட்நோட்டீஸ், நியூஸ் பேப்பர், வாரப்பத்திரிகை, போஸ்டர், இண்டர்நெட் என எந்த அளவுக்கு பிரித்து செலவு செய்வது, ஒரு ஆளின் குவாலிபிகேஷன் மற்றும் அன்று வரை அவர் வேலைபார்த்த கம்பெனிகளை வைத்து அவருடைய திறமையை கணிப்பது, கட்சிகளின் தேர்தல் வெற்றியை கணிப்பது, நீங்கள் எழுதும் மெயிலை வைத்து நீங்கள் என்ன மனநிலையில் இருக்கின்றீர்கள் என்று அளவிடுவது, படிப்புக்கு மாணவன் மூட்டை கட்டிவிடுவானா என்று கணிப்பது, ஆயுள் இன்சூரன்ஸ் கம்பெனிகள் இத்தனை பேரில் எத்தனை பேர் இறந்துபோவார்கள் என்று கணிப்பதையெல்லாம் தாண்டி இன்னார் எப்ப பூலோகத்தை விட்டு கிளம்புவார் என்று அலசுவது, ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனிகள் இந்த ஆள் இந்த ஆப்பரேஷனைத் தாங்குவாரா என்பதைத் தெரிந்துகொள்வது, ஒரு நபர் இன்கம்டாக்ஸ் கட்டாமல் ஏமாற்றுகின்றாரா என்பதை டேட்டா மற்றும் அவர் அப்லோட் செய்த புதிய பார்ச்சூனருடன் நின்று எடுத்துக்கொண்ட செல்ஃபீ போட்டோவையும்/யூரோப்பில் நான் என்று தம்பட்டம் அடித்த போட்டோவையும் சேர்த்துப் பார்த்து அனலைஸ் செய்வது.. என இன்றைக்கு அனலிடிக்ஸ் பல இடங்களில் புகுந்து கலக்குகின்றது.

இப்படி அனலிடிக்ஸ் மூக்கை நுழைக்காத துறையே இல்லை என்பதால் ஒவ்வொரு துறையிலும் நல்லதொரு அனுபவம் நிறைந்த நபருக்கு சூப்பரான வேலை வாய்ப்பு அனலிடிக்ஸ் டிப்பார்ட்மெண்ட்டில் காத்துக்கொண்டிருக்கின்றது.

cravi@seyyone.com

 

http://tamil.thehindu.com/business/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/article6443293.ece?ref=relatedNews

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வாய்ப்புகள் ஏராளம்

 

bigdata_2145528f.jpg

 

பிக்டேட்டாவைப் பொறுத்தவரை தொழில்துறையில் பிக்டேட்டாவுக்கு முன், பிக்டேட்டாவிற்குப் பின் என்று காலத்தை பிரித்துப்பார்க்கும் அளவுக்கு வாய்ப்புகள் இருக்கின்றது எனலாம். தொழில் நிறுவனங்கள் தகவல்களை சேகரித்து அதை கூட்டமைப்பு செய்து கூட்டிக்கழித்து ஆராய்ந்து பார்க்கும் வழக்கம் 1950களில் ஆரம்பித்துவிட்டது எனலாம். நாட்கணக்கில் நேரம் செலவழித்து தகவல்களைத் திரட்டி (ஸ்மால் டேட்டாவை சேகரித்து) அதை மாதக்கணக்கில் நேரத்தை செலவு செய்து கூட்டமைப்பு செய்து பின் வாரக்கணக்கில் நேரம் செலவழித்து என்ன நடக்கின்றது என்பதை புரிந்துகொள்ள முயன்றது அந்தக்காலம்.

 

இதில் தகவல் என்பதில் நிறுவனத்தின் உள்ளே ஜெனரேட் ஆகும் தகவல்களே பெரும் பங்கு வகித்தது. வாடிக்கையாளர் டேட்டாக்கள் சர்வேக்களின் மூலம் (பேப்பர் மற்றும் பேனாவுடன் நேரடி சந்திப்பு வாயிலாக – சர்வே மன்ங்கி மூலமாக அல்ல!) திரட்டப்பட்டு வந்ததால் அதன் பங்கு குறைவாகவே இருந்தது. இதனை பிக்டேட்டா வெர்ஷன் 1.0 என்கின்றனர் வல்லுநர்கள்.

இந்த வகை டேட்டா திரட்டலையும் ஆய்வையும் பிசினஸ் இன்டெலிஜன்ஸ் என்றார்கள். பிசினஸ் இன்டெலிஜன்ஸை வைத்துக்கொண்டு நான் என்ன செய்கின்றேன், எதற்கு செய்கின்றேன், எப்படி செய்கின்றேன் என்று எனக்கு நன்றாகத்தெரியும் என்று நிறுவனங்கள் மார்தட்டிக்கொள்ள முடியும். அவ்வளவேதான்!

 

 

வெர்ஷன் 2.0

 

இணையதளங்களும் சோஷியல் நெட்வொர்க்குகளும் பெரிய அளவில் தலையெடுத்து வளர ஆரம்பித்த 2000க்கும் பின்னால் ஓடிக்கொண்டிருப்பது பிக்டேட்டா வெர்ஷன் 2.0 என்கின்றனர். முதலில் மக்கள் மத்தியில் இணையம் பிரசித்தி பெற ஆரம்பித்தது. அதன் பின்னர் சோஷியல் நெட்வொர்க்குகள் தலையெடுத்து மக்களை அடிமையாக்கிப்போட்டது. இணையம் பிரசித்தி பெற ஆரம்பித்த போது, இந்த சர்வேக்கு கொஞ்சம் பதில் சொல்ல முடியுமா என பாப் விண்டோக்கள் வந்துகொண்டிருந்தது. உங்களுக்கு இஷ்டம் இருந்தால் பதில் சொல்வீர்கள். இல்லாவிட்டால் பட்டென கிளிக் செய்து பாப் விண்டோவை குளோஸ் செய்துவிடுவீர்கள்.

 

பேப்பர் பேனாவை எடுத்துக் கொண்டு தெருத்தெருவாய் போவதை விட இது கொஞ்சம் பெட்டரான விஷயமாய் இருந்தது. ஆனால் நீங்கள் பிரியப்பட்டு இஷ்டப்பட்டால் மட்டுமே நிறுவனங்களுக்கு டேட்டா கிடைக்கும்.நிறுவனங்களின் டேட்டா பசிக்கு இது சரியான தீனி போடாவிட்டாலும் பேப்பர் பேனா காலத்தைக் காட்டிலும் கொஞ்சம் பெட்டர் தீனி கிடைத்துவந்தது. போட்டிகள் அதிகமாகி வியாபாரத்தின் வீச்சு அதிகரிக்க அதிகரிக்க நிறுவனங்களின் டேட்டா பசிக்கு அளவில்லாமல் போனது.

 

நீங்கள் என்ன இஷ்டப்பட்டு கொடுப்பது. நாங்களே நீங்க போற பாதையை வைத்து ஜட்ஜ்மெண்ட் பண்ணிக்கிறோம் என்ற வசதியைத் தரும் வகையில் கூகுள் போன்ற நிறுவனங்களும் ஏனைய சோஷியல் நெட்வொர்க் நிறுவனங்களும் உங்களைத் தொடர ஆயத்தமாயின. இல்லையில்லை! டேட்டாதானே வேணும். என் பின்னாடியே வா என நீங்களே வா போகலாம் என்று வாஞ்சையாய் சொல்லும் அளவிற்கு உங்களை வசப்படுத்தி மடக்கிப்போட்டன.

இதற்கான டெக்னாலஜி படுவேகமாய் வளர்ந்ததும் இந்த காலகட்டத்தில்தான். இந்த வகை டேட்டா சேகரிப்பை வைத்துக்கொண்டுதான் உங்களுக்கு இவரைத் தெரிந்திருக்கலாம், இந்த வேலை உங்களுக்கு பிடித்திருக்கலாம், இந்தக் கூட்டத்தில் நீங்கள் சேரப் பிரியப்படலாம், நீங்க படிச்ச ஸ்கூலில் கூடப் படிச்ச ஆள் இப்ப பிரின்சிபால் என பல்வேறு தகவல் பிட்டுகளை உங்கள் முன்னே போடுகின்றது பல சோஷியல் மற்றும் நெட்வொர்க் நிறுவனங்களும்.

 

 

தொழில்நுட்ப மாற்றம்

 

இந்தக் கால கட்டத்தில்தான் அனலிடிக்ஸை உபயோகித்து தற்போது நடப்பவற்றைப் பார்த்து ஏற்கெனவே நடந்தவற்றை வைத்து உடனுக்குடன் பரிந்துரைகள் செய்யப்பட ஆரம்பித்ததும். புரியலேல்ல! என்ன சொல்ல வரேன்னு தெரியலேல்ல! இப்ப புரியும் பாருங்க. உங்கள் ஸ்மார்ட் போனிலோ கம்ப்யூட்டரிலோ அமேசான் டாட் காமுக்கு போங்க.

அனலிடிக்ஸின்னு புத்தகம் சர்ச் பண்ணுங்க. பெரிய லிஸ்ட் வரும். அதில் ஒரு புத்தகத்தை கிளிக் பண்ணுங்க. அப்புறமா அந்த பேஜோட கடைசிக்குப் போய்ப்பாருங்க. நீங்க பார்த்த இந்தப் புத்தகத்தை வாங்கியவர்கள் கீழே தரப்பட்டுள்ள புத்தகங்களையும் இதனுடன் சேர்த்து வாங்கினார்கள் என்று காட்டும். இதில் நடப்பது என்பது நீங்க வாங்கலாமா என தற்சமயம் பார்த்துக்கொண்டிருக்கும் புத்தகம். நடந்தது ஏற்கனவே இந்தப் புத்தகத்தை வாங்கியவர்கள் அதனுடன் சேர்த்து வாங்கிய ஏனைய புத்தகங்கள் – என்றைக்கோ வாங்கி அமேசானின் டேட்டாபேசில் பதிந்து வைத்திருக்கும் பதிவு அது. உங்கள் ப்ரவுசரில் நீங்கள் தற்போது பார்க்கும் (வாங்கலாமா என யோசித்துக்கொண்டிருக்கும்!) புத்தகம் லைவ்வாக உங்கள் கண்ணில் தெரிகின்றது. நீங்கள் வாங்கினால் மட்டுமே அது டேட்டா பதிவாக மாறும்.

அதுவரை அமேசானின் கேட்லாக் டேட்டாபேசில் மட்டுமே அது இருக்கும். நீங்கள் அந்த புத்தகத்தைப் பார்க்க முயன்றவுடனேயே அலர்ட்டா இருடா ஒருத்தன் சிக்கப்போறான் என்று மணியடித்து ஏற்கனவே விற்ற மத்த புத்தகங்களை டேட்டா பேசிலிருந்து எடுத்துக்கொண்டு வந்து காட்டுவது அனலிடிக்ஸ் வித்தை. இப்போது புரிகின்றதா நடப்பதும் நடந்ததும். இந்த டெக்னாலஜி மாற்றங்களைத்தான் அனலிடிக்ஸ் 2.0 என்கின்றனர் வல்லுநர்கள்.

 

 

பலவகையில் உதவும்

 

இணையத்தில் இணைந்திருந்தால் மட்டுமே அனலிடிக்ஸ் சாத்தியமோ என்ற சந்தேகம் உங்களுக்கு அனலிடிக்ஸ் 2.0 குறித்த தகவல் தெரிந்தவுடன் வந்திருக்கும். அதுதான் இல்லை. அனலிடிக்ஸ் 3.0 என்பதை நோக்கி நாம் போய்க்கொண்டிருக்கின்றோம் என்கின்றனர் வல்லுநர்கள். அது என்ன வெர்ஷன் 3.0 என்கின்றீர்களா? இணையத்தில் இருக்கும் வியாபாரங்கள் மட்டுமல்ல அனைத்து வியாபாரங்களுமே வெர்ஷன் 2.0 வில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் செய்ய ஆரம்பிக்கும் என்பதுதான் அது.

 

அது என்ன இணையத்தில் இல்லாத நிறுவனங்கள். அப்படி ஒன்று உண்டா என நீங்கள் கேட்கலாம். வியாதியஸ்தர்களுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவமனை, மளிகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் சூப்பர் மார்க்கெட், பார்சல்களைக் கொண்டு செல்லும் கொரியர் நிறுவனம், இவையெல்லாம் இண்டர்நெட்டில் இயங்குவதில்லையே. மருத்துவமனைக்கு வரும் பல நோயாளிகள் சொல்லும் சிம்டம்ஸ்களை வைத்து டேட்டா பேசில் இருக்கும் பழைய கேஸ்களின் சிம்டம்ஸுடன் உடனுக்குடன் ஒப்பிட்டு டாக்டருக்கு இந்தெந்த நோயாக இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்று க்ளு கொடுக்கலாம், டாக்டரின் வேலை இதுதான் என்றாலும் அனலிடிக்ஸின் வேகம் மகத்தானதாக இருக்குமே!

இதுவும் போக மருத்துவம் வழங்கப்படும் விதம், தரம், போன்றவற்றைக்கூட அனலிடிக்ஸை வைத்து கண்டறியலாம். நோயாளிகள் காத்திருந்த நேரம், ஒரே விதமான நோய் அறிகுறிகள் இருக்கும் நோயாளிகள் குணமாக எடுத்துக்கொண்ட நேரம் போன்றவற்றை கம்ப்பேர் செய்து மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கப்படும் தரத்தை தொடர்ந்து கணிக்கலாம்.

சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் டேஸ்ட் எப்படி மாறுகின்றது என்பதையும், புது ப்ராடெக்ட்களை விரும்பி வாங்குபவர்களின் கன்சம்ப்ஷன் பேட்டர்ன் எப்படி இருக்கின்றது என்பதையும் கூட கணிக்கலாம்.

 

 

வர்த்தக வாய்ப்பு

 

மேலும் அனலிடிக்ஸ் 3.0 வேகமாக வளரும் காலத்தில் தொழில்களின் நடைமுறையில் பெரும்பாலான ரொட்டீன் முடிவுகளை எடுக்கத் தேவைப்படும் அனலிடிக்ஸ் (ஸ்டாட்டிஸ்டிகல்) மாடல்களை சாப்ட்வேர் பேக்கேஜாக எழுதி விற்கவும் வாய்ப்புகள் இருக்கின்றது என்கின்றனர். உதாரணத்திற்கு, பெட்ரோல் பங்க்கை எடுத்துக்கொள்வோம். நாட்டில் பல ஆயிரம் பங்க்குகள் இருந்தாலும் பிசினஸ் மாடல் என்னவோ அனைத்திற்கும் ஒன்று தானே. பெட்ரோல் பங்க் வியாபரத்தில் அனலிடிக்ஸை உபயோகிக்க நினைக்கும் அனைவரும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான அனலிடிக்ஸ் தேவைதானே இருக்கும்.

இந்த மாதிரி நிறுவனங்களுக்கு ரெடிமேடாய் அனலிடிக்ஸ் மாடல்களை எழுதி பேக்கேஜாக விற்க முடியுமல்லவா? இந்த மாதிரியான வியாபார வாய்ப்புகளும் இருக்கின்றது என்கின்றனர் வல்லுநர்கள். இப்போது சொல்லுங்கள் இந்தத் துறையில் நீங்கள் வேலை பார்க்க விரும்புவதற்கான வாய்ப்பு அதிகமாகி இருக்கின்றது என்று உங்கள் மூளையில் இருக்கும் அனலிடிக்ஸ் சாப்ட்வேர் மணியடிக்கின்றதா இல்லையா என்று?

 

http://tamil.thehindu.com/business/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/article6482695.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

தொழில்களுக்கு உதவும் தகவல்

 

toon_2156275f.jpg

 

என்னத்த பிக்-டேட்டா? என்னத்த அனலிடிக்ஸ்! எல்லாம் ஒரு ஹைப். பாக்கெட்டுல எவ்வளவு பணம் இருக்குது, வர்ற மாசம் கட்டவேண்டிய இஎம்ஐ எவ்வளவு, கிரெடிட் கார்டு பில்லும், மொபைல் பில்லும் என்னைக்கு ட்யூன்னு தெரியாமலேயே பாதிப்பேர் பிசியாக சுத்திக்கிட்டிருக்கோம். அட, சம்பளம் எவ்வளவு கிரெடிட் ஆகுமுன்னு கூட கணக்கு வச்சுக்காத ஆளெல்லாம் என் சர்க்கிளில இருக்குதுங்க. இதுல என்னத்த டேட்டாவை கலெக்ட் பண்ணி என்னத்த அனலைஸ் பண்ணி என்று நம்முடைய கூட்டாளிகள் பலரும் சொல்லக் கேட்கின்றேன்.

 

இது தனிநபரின் டேட்டா. நீங்க தனியாக அதை சரிவர வைத்திருந்தால் உங்களுக்கு லாபம் எதுவும் புதியதாக இல்லாவிட்டாலும் நஷ்டம் இருக்காது. தனி நபர் டேட்டாவை தெளிவான ஒரு மனிதர் மனக்கணக்காகவே வைத்துக் கொள்ள முடியும். இதே ஒரு ஆபிஸில் வேலை பார்ப்ப வர்களின் ஒட்டு மொத்த டேட்டா, ஒரு ஷாப்பிங் மாலுக்கு வந்து போகின்றவர்களின் ஒட்டுமொத்த டேட்டா என்று சேரும்போது அது உபயோகமான டேட்டாவாக மாறிவிடுகின்றது.

சரி உபயோகப்படட்டும். இந்த டேட்டா இல்லாமல் இத்தனை நாள் தொழில் நடக்கவில்லையா? இல்லை நாங்கள்தான் லாபம் பார்க்கவில்லையா? இதெல் லாம் கம்ப்யூட்டர் மற்றும் சாப்ட்வேர் கம்பெனிகள் செய்யும் விற்பனை வித்தைகள் என்று சொல்பவர்களையும் பார்க்கவே செய்கின்றோம். அனலிடிக்ஸ் இல்லாமல் எதிர் காலத்தில் எதுவுமே நடக்காதா? பிழைக்கவே முடியாதா?

 

பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே எழுதி வைக்கப்பட்ட சொத்தா இல்லை சிறிய நிறுவனங்கள் எல்லாம் அதைப் பயன்படுத்த முடியுமா என்று ஆச்சரியத்துடன் கேட்பவர்களையும் பார்க்கின்றோம். சிறு நிறுவனமோ பெரிய நிறுவனமோ எதற்காக அனலிடிக்ஸ் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கொஞ்சம் ஆராய்வோம்.

 

கேக் விற்பனை அமோகம்

ஒரு பேக்கரி ஒன்றில் டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் திடீரென்று இரண்டு வகை கேக்குகளின் வியாபாரம் பிய்த்துக் கொண்டு போனது. வருகின்றவர் போகின்றவர் எல்லாம் அந்த கேக் இருக்குதா என்றுகேட்க கடைப்பையன்கள் ஆச்சரியப்பட்டனர். கடந்த மாதம் புதுசாய் வேலைக்கு சேர்ந்த மாஸ்டர் ஒருவர் ரொம்பவும் ஆசைப்பட்டாரே என்று முதலாளி அரை மனதுடன் பெர்மிஷன் கொடுக்க கடந்த ஒரு வாரமாய் கொஞ்சமாய் தயாரித்து விற்பனைக்கு வைத்த கேக் அது.

தினமும் பெரிய அளவில் வியாபாரம் இல்லை அந்த வகை கேக்கில். அடுத்த வாரத்தில் இருந்து அந்த வகை கேக் போடுவதை நிறுத்திவிடலாம் என்று முதலாளி நினைத்திருக்கும் போதுதான் எக்ஸ்கியூஸ் மீ. அந்த கேக் இருக்கா என்று பலரும் கேட்க ஆரம்பித்தனர்.

 

முதலாளி ராசியான ஆளா இருக்கிறாரே புது மாஸ்டர் என்று திகைத்திருந்தார். பேக்கரி முதலாளியின் மகன் பேக்கரியின் இணையதளத்தை ஹோஸ்ட் செய்யும் கம்பெனி மெயிலில் அனுப்பிய புள்ளி விவரங்களை எதேச்சையாக பார்த்தபோது, வழக்கமாக பார்ப்பதை விட 10 மடங்கு பேர்கள் அதில் உள்ள புதிய அறிமுகம் பக்கத்தில் இருக்கும் மிக்சட் புரூட் ஸ்பெசல் ப்ரூட் கேக் பக்கத்தையும், காபி சீஸ் கேக் பக்கத்தையும் அன்றைக்குப் பார்த்திருந்தார்கள்.

என்னடா இது கடையிலும் இதைத் தேடியே ஆள் வருகின்றது. வெப்சைட்டிலும் இந்தப் பக்கத்திற்கு அதிக விசிட்டர்கள். ரொம்ப பாப்புலரான கேக் வகையோ. நாமதான் இத்தனை நாள் போடாமல் இருந்துவிட்டோமோ என்று மகன் நினைத்திருந்தார்.

 

ஃபேஸ்புக் வாடிக்கையாளர்கள்

கடைக்கு வருபவர்களிடம் எங்கே இது பற்றி கேள்விப் பட்டீர்கள் என்று கேட்டால் நன்றாக இருக்காது. அட் லீஸ்ட் வெப்சைட்டில் அந்த கேக்குகளின் பேஜிற்கு வந்தவர்கள் எங்கி ருந்து வந்தார்கள் என்று தெரிந்து கொள்வோம் என நினைத்து ஆராய ஆரம்பித்தார். அந்த கேக்கின் பேஜிற்கு வந்தவர்கள் அனைவருமே பேஸ்புக்கிலிருந்து நேரடியாக தாவியிருந்தது தெரிய வந்தது.

 

பேஸ்புக் பக்கத்தை சிரத்தையுடன் ஆராய்ந்து பார்த்ததில், அவர்களுடைய ஒரு வாடிக்கையாளர் அவருடைய பேஸ்புக் பக்கத்தில் அவர் வீட்டு பிறந்த நாள் விழாவிற்கு அந்த இரண்டு கேக்குகளையும் வாங்கியதையும் (அன்றைக்கு போட்டதே இரண்டே கேக்குகள்தான் என்பதுதான் நிஜம்), அவை இரண்டும் மிகப் பிரமாதம் என்று சிலாகித்து மிகவும் பாராட்டி எழுதி பேக்கரியின் நியூஅரைவல் பேஜ் லிங்க்கையும் சேர்த்திருந்தார்.

 

இரண்டுமே பிரமாதம் மிஸ் பண்ணிடாதீங்க, காபி சீஸ் கேக் கொஞ்சம் காஸ்ட்லி என்றும் போட்டிருந்தார். அதை பார்த்த அவருடைய பேஸ் புக் நண்பர்கள் கூட்டம்தான் ஆன்லைனிலும், நேரிலும் வியாபாரத்தை பெருக்கி யவர்கள். அவருடைய நண்பர்கள் வட்டத்தில் அவருடைய டேஸ்ட் பேர் போனது. அண்ணன் சொல்லீட்டா அரைக்கிலோவை அப்படியே சாப்பிடலாம் என்று அண்ணனின் வாக்குக்கு காத்தி ருக்கும் வகையில் அஃபீஷியல் டேஸ்ட்டர் என்ற ரகம் அவர். பேக்கரி ஓனரின் மகன் அந்த டேஸ்ட்டரின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு அதிர்ச்சியான விஷயத்தையும் பார்த்தார். அண்ணே அந்தக் கடையில எப்பப் போனாலும் இல்லேன்னே சொல்றாங்கண்ணே! எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பேக்கரியில் பேரைச் சொல்லி செய்யச் சொல்லியிருக்கேன்னு அப்டேட் போட்டிருந்தார்கள் சிலர்.

 

கைக்கு எட்டியது…

அடடா! கைக்கு எட்டுனது அவுட் ஆப் ஸ்டாக்கால வாய்க்கு எட்டாமப் போயிடுச்சே என்று நினைத்தார் பேக்கரி ஓனரின் மகன். எதேச்சையாய் வெப்சைட் டீட்டெயிலைப் பார்க்கப் போனதால் கிடைத்த தகவல் இது. இதையேதான் அனலிடிக்ஸ் அன்றாடம் அட்வான்ஸாகச் அதுவாகச் செய்கின்றது.

எக்கச்சக்கமாக விசிட்டுகள் வரும்போது அந்த பேஜில் இருக்கும் இந்த இரண்டுவகை கேக்குகளுக்கு ஆர்டர் வர வாய்ப்பு இருக்கின்றது என அலர்ட் செய்திருக்கும் இல்லையா? வியாபாரத்திற்கு வியாபாரமும் ஆச்சு! போட்டிகளையும் தவிர்க் கலாம் இல்லையா?

 

யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்

கடையில் நடந்த வியாபாரம், இணையதள தேடல்கள், சமூக ஊடக பதிப்புகள் இவைகள் அனைத்தும் அலசி ஆராய்வதுதான் பிக்டேட்டா அனலெடிக்ஸ். இதில் ஏதாவது ஒரு விஷயமாவது பெரிய நிறுவனம் மட்டுமே செய்ய முடியும் என்ற விஷயமா என்ன? சிறிய நிறுவனங்கள் வெப்சைட் வைக்க முடியாதா? இல்லை கம்ப்யூட்டர் உபயோகித்து பில்தான் போடுவதில்லையா? சிறியதோ, பெரியதோ யார் வேண்டுமானாலும் பிக்டேட் டாவை தங்கள் வியாபார முன்னேற்றத்திற்காக பயன் படுத்தலாம். சரி, இனி அடுத்த கட்டத்திற்கு செல்வோம்.

 

இப்படி அலசி ஆராய்ந்து உண்மையைக் கண்டு பிடிப் பதைத்தான் ‘இன்சைட்’ (Insight) என்று சொல்லுவார்கள். இந்த இன்சைட்டை வைத்து வியாபாரத்தை மேலும் பெருக்க என்ன செய்ய முடியும்? ஒன்று, வெப்சைட்டின் முதல் பக்கத்தில் மிக்சட் புரூட் ஸ்பெசல் கேக்கை பற்றி புதிய படங்களையோ, வாங்கியவர்களின் உயர்வான கருத்துக்களையோ பதித்து அதன் மேல் உள்ள கவர்ச்சியை மேலும் மேம்படுத்தலாம், வாடிக்கை யாளர்களுக்காக அதை எப்படி தயாரிப்பது என்ற குறிப்பை போடலாம்.

 

தள்ளுபடி தரலாம்

இரண்டு, காபி சீஸ் கேக் விலை அதிகம் என்று புறக்கணிப்பவர்களை கவர தொடர் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி கூப்பன் கொடுக்கலாம். அல்லது சில நாட்களுக்கு மட்டும் அனைவருக்கும் சிறப்பு தள்ளுபடி தரலாம். அவ்வளவுதான் சார். வாடிக்கையாளர் சார்ந்த சிறு நிறுவனங்களும் பிக்டேட்டா வினால் நிச்சயம் பயன் பெற முடியும்.

சரி, இதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? முக்கியமாக இரு வழி தகவல் பரிமாற்றம் செய்யக்கூடிய இணையதளமும், சமூக வலைதளத்தில் உங்களுக் கென்று ஓர் இடமும் அவசியம் தேவை. இரண்டாவது இத்த கைய தளங்களில் உருவாகும் தகவல்களை உடனுக்குடன் உள்வாங்கி, தொகுத்து, சரியான தகவல்களை பிரித் தெடுத்து, அலசி ஆராயும் திறமை.

 

இதில் முக்கியமானது என்னவென்றால், அதிலிருந்து வருபவற்றில் தேவையில்லாத தகவல்களை களைந்தெடுத்து, வியாபார முன்னேற்றத்திற்கான தகவல்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டியது மிகமிக முக்கியம். வாடிக்கையாளர் என்ன விரும்புகிறார், உங்கள் பொருட்களை பற்றி என்ன நினைக்கிறார், மற்றவர்களுடைய கருத்தை அவர்கள் எப்படி பார்க்கின்றார்கள் என்பது எல்லாமே மிக மிக முக்கியம் போட்டிகள் நிறைந்த இந்த உலகில். அதற்குத்தான் அனலி டிக்ஸ் உதவுகின்றது.

 

cravi@seyyone.com

 

http://tamil.thehindu.com/business/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article6505182.ece?ref=relatedNews

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தகவல்களால் யாருக்கு ஆதாயம்?

 

data_2178388f.jpg

 

பிக்-டேட்டாவைப் பற்றி படிக்கும் போது அனைவருக்கும் இரண்டு சந்தேகங்கள் வரக்கூடும். தனி மனித டேட்டாக்களை வியாபார நோக்கில் சேகரித்து அதைப் பீராய்ந்து பார்த்து வியாபார நோக்கில் அலசி உபயோகிப்பது என்பது எத்தனை நாள் சாத்தியம்.

 

உபயோகிப்பாளர்கள் இடையே ஒரு நாள் ஒரு ஹீரோ தோன்றி ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் பேர், இத்தனை டெராபைட் பெர்சனல் டேட்டாவை இலவசமாக தந்துக்கிட்டேயிருந்திருக்கோம். கடந்த பதினைந்து வருஷத்துல ஒவ்வொரு நாளும் 1,826 பெட்டா பைட்ஸ் டேட்டாவை சேகரிச்சுட்டு இருக்காங்க. இந்தக் கொடுமையை உங்ககிட்ட எடுத்துட்டு வந்து சொல்லணுமின்னு முயற்சி பண்ணி பண்ணி முடியல! ஒவ்வொரு நாளும் ஒரு சர்ச் இஞ்சின் மட்டும் கிட்டத்தட்ட இருபது பெட்டா பைட் டேட்டாவை ஒரு நாளைக்கு சேகரிக்குது.

 

இப்படியே போனா தனிமனித ப்ரைவசி அப்படீங்கிறது நாட்டுல எப்படி இருக்கும் என டயலாக் பேசி எல்லா உபயோகிப்பாளரையும் முழிக்க வைச்சுட்டா என்னவாகிறது. உபயோகிப்பாளர்கள் அனைவரோட கண்ணையும் அந்த ஹீரோ திறந்து விட்டுட்டா டேட்டா கிடைக்காமலே போயிடுமே. அப்ப பிக் டேட்டா அனலிடிக்ஸ் எல்லாம் அவ்வளவு தானா?! நின்னுப்பூடுமா? என்ற கேள்வியும் கூடவே வருகின்றது இல்லையா?

 

தகவல் தந்தால் சேவை

இரண்டாவதாக, எந்த வெப்சைட்டிற்கு போய் பதிவு செய்தாலும், ஈமெயில் கணக்கு துவங்கினாலும் எங்களுடைய பிரைவசி பாலிசி என்று நீண்ட நெடும் ஒப்பந்தம் போல் ஒரு டாக்குமெண்டை காண்பித்து அக்ரி அல்லது டிஸ் அக்ரி என ஒரு பட்டனை செலக்ட் செய்து நம்மை ஒத்துக்கொள்ள வைத்து அதன் பின்னரே சேவைகளை வழங்குகின்றார்கள். ரொம்ப நல்லவர்களாக டிஸ்அக்ரி என்ற ரேடியோ பட்டனில்தான் டிபால்ட் செலக்ஷன் இருப்பதைப் போல் செட் செய்திருப்பார்கள்.

அப்புறம் எப்படி இந்த இணையதளங்கள் நம்மைப் பற்றிய டேட்டாவை நம்மிடம் இருந்து சுட்டு மற்றவர்களிடம் பணியார வியாபாரம் செய்கின்றார்கள் என்பதுதான் அடுத்த சந்தேகம். பக்கம் பக்கமாய் முழநீளத்திற்கு ப்ரைவசி பாலிசிகள் இருப்பதெல்லாம் எல்லாம் சரிதான். ஆனால் நீங்கள் இதுவரை ஏதாவது ப்ரைவசி பாலிசியைப் படித்து அதன் பின்னர்தான் அக்ரி என கிளிக்கியிருக்கின்றீர்களா? இல்லையே!

 

தனி மனித சுதந்திரம் சாத்தியமா?

வளர்ந்த நாடுகளில் எல்லாம் தனியுரிமை என்பது சட்டமாக்க பட்டு அதை கட்டி காப்பதில் அரசுகள் எல்லாம் மிகவும் கவனமாகவும், முனைப்பாகவும் செயல்படுகின்றன. இது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள நாடுகளில் கூட இன்டெர்நெட் யுகத்திற்குத் தகுந்தாற்போல் இன்னும் முழுமையாக மாற்றியமைக்கப்படவில்லை.

 

ஏனென்றால், இன்டெர்நெட் என்ற மாயவலை என்னென்ன அவதாரங்களை எடுக்கும், அதை எப்படி எல்லாம் எதற்கெல்லாம் பயன்படுத்த முடியும் என முன்கூட்டியே யாராலும் பெரிய அளவில் யூகிக்க முடிவதில்லை. அதனாலேயே இன்டர்நெட்டில் ஆடி காற்றில் பறக்கும் அறுந்த பட்டம் போல தனியுரிமையும், தனி மனித ரகசியங்களும் எந்த அளவிற்கு காற்றில் பறக்க விடப்படும் என்பதையும் யாராலும் துல்லியமாக கணிக்க முடியாமல் போனது.

உண்மையிலேயே வலைதள பயன்பாட்டில் தனி மனித உரிமை பிரச்சனை தலைவிரித்தாடி, அதனால் மிகக் கடுமையான சட்டங்கள் இயற்றப்படும் பட்சத்தில், பிக்டேட்டா மற்றும் அனலிடிக்ஸ் உலகத்தின் மகத்தான பயன் பாடெல்லாம் மதிப்பிழந்து போக வாய்ப்பிருக்கிறது. ஆனால் அந்த நிலைமை வருமா என்றால்

…. வரும்….. ஆனா வராது……..!!!.

 

எங்கேயிருக்கிறது அந்தரங்கம்?

அந்தரங்கம் என்பது நமக்கு எங்கே இருக்கிறது? படுக்கை அறையிலா? குளியலறையிலா? தெரிந்தவர்கள் யாருமில்லாத ஊரிலா? தனியாக நாம் மட்டும் செல்லும் காரிலா? நெருங்கிய உறவினர்களுடன் பகிர்ந்து கொண்ட ரகசியம், உயிர் நண்பர்களுடன் மட்டுமே பகிர்ந்து கொண்ட ரகசியம், நமக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்று பல மாய அடுக்குகளாக பிரித்து, ரகம் வாரியாக மறைந்து வைக்கப்பட்ட ரகசியங்கள் எல்லாம் இன்று ‘மாமா, டவுசர் கழண்டுச்சே!,’ என்று கண்ணுக்குத் தெரியாத உலகத்தில் நம்மை நிர்வாணமாக்கி, கதற வைக்கும் அளவுக்கு வலைதள டெக்னாலஜி நம்மை நோக்கி ஊடுருவி வந்து கொண்டிருக்கின்றது.

 

எல்லாம் சாத்தியம்

ஆசை, ஆசையாக நீங்கள் பல நாட்களாக ஏங்கி வாங்கிய செல்போன், அல்லது லேப்டாப் ஆன் செய்து இன்டெர் நெட்டில் இணைத்த உடன், உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் உள்ள ஒருவருக்கு/ஒரு சர்வருக்கு தகவல் போய், நீங்கள் அறியாமலே அவர்/அது உங்கள் கேமராவை ஆன் செய்து, உங்களை கண்காணிக்க முடியும் அல்லது உங்கள் வரவேற்பறையில் நடக்கும் அனைத்தையும் ரெக்கார்டு செய்து, ஏன் நேரடியாக ஒளி & ஒலி பரப்பும் செய்ய முடியும்.

வரவேற்பறையில் லேப்டாப் இருந்தால் ஓகே. அதுவே படுக்கை அறையில் இருந்தால் சிக்கல் தானே! ரொம்ப பயமுறுத்தாதீங்க பாஸ் என்கிறீர்களா? ஸ்கூல் பையனுக்கு ஸ்கூல் கொடுத்த லேப்டாப்பில் ஹோம் ஒர்க்கை பையன் தான் செய்கின்றானா என கண்காணிக்க ஒரு அப்ளிக்கேஷனை லோட் செய்து கொடுக்க பையன் அதை வீட்டில் வைத்து ஹோம் வொர்க் செய்யும் போது லேப் டாப் கேமிரா இயங்குவதை பார்த்த அப்பா எப்படி என் வீட்டிற்குள் நடப்பதை நீ ரெக்கார்ட் செய்யலாம் எனப் பள்ளியின் மீது கேஸ் போட மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்கிய நிகழ்வெல்லாம் சமீபகால சரித்திரத்தில் இருக்கின்றது பாஸ்.

 

உங்க வீட்டு வால் பையன் விளையாடும் வீடியோ கேம்ஸ், எதிரில் உள்ள அனைவரின் முகங்களையும் விளையாடும் ரூமில் இருக்கும் பொருட்களையும் தானாக போட்டோ எடுத்து, அந்த வீடியோ கேமைத் தயாரித்த கம்பெனிக்கு அனுப்பிக் கொண்டேயிருக்கலாம். நீங்கள் வாங்கும் ஸ்மார்ட் டீவி தொடர்ந்து உங்களை என்ன அண்ணன் நைட் பத்தரை மணிக்கு மேலே தொடர்ந்து டீவி பார்க்கிறாரே என்று கூட கண்காணிக்கலாம்.

இப்படியாக, உங்களையும், உங்கள் அந்தரங்கங்களையும், உங்கள் அனுமதி இல்லாமல், திருடர்கள், விளம்பரதாரர்கள், போலிஸ், அரசியல்வாதிகள் என்றில்லாமல் யார் கையில் வேண்டுமானாலும் கொண்டுபோய் சேர்த்துவிடலாம்.

 

ஸ்தம்பிக்குமா?

ஒவ்வொரு நிமிடமும் நாம் எங்கே இருக்கிறோம், எங்கே போகிறோம், என்ன செய்கிறோம், யாருடன் இருக்கிறோம், யாருடன் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், என்ன பொருட்களை வாங்குகிறோம் என்று மூன்றாம் நபருக்கு தெரியும் போதே நம்முடைய சுதந்திரம் முழுமையாய் பறிபோகின்றது. அந்த டேட்டாவை வியாபார ரீதியாக பயன்படுத்தினால் சரி.

அதை நமக்கு எதிராக பயன்படுத்த ஆரம்பித்தால் என்னவாகும்? நம் கண்ணியமும், சமூக அந்தஸ்தும் பறிபோகும். சரி, பிக்டேட்டாவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள டேட்டாவை அலசி, அதிலிருந்து, ஒரு விஷயம் நடக்கும் போது, அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்பதை யூகிக்கும் உக்திதான் பிக்டேட்டா என்பது உங்களுக்குத் தெரியும் தானே. திடீரென டேட்டாவால் வரும் நன்மை தீமைகளை உபயோகிப்பாளர்கள் புரிந்துகொண்டு ’வி ஆர் ஆல் ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்ஸ்’ என டேட்டா சுருட்டலுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தால் என்னவாகும்.

டேட்டா இஸ் த நெக்ஸ்ட் ஆயில் – டேட்டாதான் அடுத்த எரிபொருள் என அமெரிக்காவில அப்பச்சி சொன்னாக என்கின்றீர்களே! டேட்டா என்ற எரிபொருளை உபயோகிப்பாளர்கள் தர மறுத்துவிட்டால் அதனால் டேட்டா இல்லாது போய்விட்டால் பிக்டேட்டா அனலிடிக்ஸ் வண்டி நின்று போய்விடாதா என்று கேட்பீர்கள்தானே? இதற்கான பதிலை அடுத்த வாரம் பார்ப்போம்.

 

http://tamil.thehindu.com/business/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/article6545655.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

இலவசத்துக்கு இரையாகும் தகவல்கள்!

 

data_2189069h.jpg

 

அனலிடிக்ஸ் என்ற புதிய வியாபார உத்தி தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படுத்தப்பட டேட்டா என்பது நிறுவனங்களுக்குத் தொடர்ந்து கிடைத்துக்கொண்டேயிருக்க வேண்டும். அதற்கான வாய்ப்பிருக்கின்றதா என்ற கேள்விக்கான பதிலைத்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பேயில்லை என்பதுதான் சரியான பதில் என்ற போதிலும் அப்படி உறுதியாகச் சொல்வதற்கு என்னென்ன ஆதாரங்கள் இருக்கின்றது என்பதை அலசுவோம். உதாரணங்கள் மூலம் இதை நீங்கள் சுலபமாக புரிந்துகொள்ள முடியும்.
 
லாயல்டி கார்டின் சூட்சமம்
 
ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தொடர்ந்து சாமான்கள் வாங்குகின்றீர்கள். டிப்பார்ட்மெண்ட்டல் ஸ்டோர் ஒரு லாயல்டி கார்டை தருகின்றது. சாமான் வாங்கும்போது இந்த கார்டை காண்
 
பித்தால் பில் தொகையில் இரண்டு சதவிகிதம் டிஸ்கவுண்ட் என்று சொல்கின்றனர். லாயல்டி கார்டைப் பெற ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்கின்றனர். உங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி, வயது, குழந்தைகள் என எல்லா விவரத்தையும் நைசாய் வாங்கி வைத்துக்கொள்கின்றனர். இதே போல் பல வருடங்களுக்கு அந்த டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரில் வாடிக்கையாளர்களின் டேட்டா சேகரிக்கப்படுகின்றது. லாயல்டி கார்டு என்பதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதே கடையில் சாமான்கள் வாங்குவார்கள். அதே சமயம் டிஸ்கவுண்ட்டைப் பெற கார்டை காண்பிக்கவும் செய்வார்கள். அல்லது கார்டின் எண்ணைச் சொல்வார்கள். இங்கேதான் இருக்கின்றது டேட்டா சேகரிப்பின் முக்கிய அங்கம். பில்லில் லாயல்டி கார்டின் எண்ணை சேர்த்துக்கொள்வதால் இன்னார் இந்த சாமான் வாங்கினார் என்ற சூப்பர் டேட்டா டிப்பார்ட்மெண்டல் ஸ்டோருக்குக் கிடைக்கின்றது.
 
டேட்டா அளிக்கும் தகவல்
 
எந்தெந்த வாடிக்கையாளர் என்னென்ன பொருட்களை எப்போது (தேதி மற்றும் நேரம் வாரியாக) வாங்கினார் என்ற டேட்டா கைக்கு அடக்கமாக ஸ்டோருக்குக் கிடைத்துவிடும். கையில் இருக்கும் டேட்டாவைப் பீராய்ந்தால் குழந்தைகளுக்கான டூத் பேஸ்ட் வாடிக்கையாளர் எப்போது வாங்கினார் என்ற விவரத்தைப் பார்க்கலாம். சாதாரணமாக குழந்தைகளுக்கு துலக்கக்கூடிய அளவிற்கு பற்கள் கிட்டத்தட்ட ஒரு வயதில் வரும். அந்த டூத் பேஸ்ட்டை ஒரு வாடிக்கையாளர் வாங்கிய கால கட்டத்தில் இருந்து ஒரு வருடத்திற்கு முன் பத்து மாத காலத்திற்கு என்னேன்ன பொருட்களை வாங்கினார் என்று பார்த்தால் கர்ப்பகாலத்தில் என்னென்ன பொருட்களை வாங்கினார் என ஸ்டோர் நிர்வாகம் தெரிந்துகொள்ளலாம். இதே போல் எல்லா வாடிக்கையாளர்களின் டேட்டாவையும் சேர்த்து வைத்து அலசினால் திகைப்படையச் செய்யும் பல உண்மைகள் கிடைக்கும்.
 
தள்ளுபடியெல்லாம் தகவலுக்காகத்தான்
 
ஏற்கெனவே சொன்னதைப் போல் கருவுற்றிருந்தபோது என்னென்ன பிராண்ட் சாமான்களை வாங்கினார்கள் என்பது ஒரு தகவல். வயது குறித்த தகவல் இருப்பதால் கருவுறும் வயதில் எத்தனை வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எந்த விதமான பொருட்களை கடையில் ஸ்டாக் வைக்க வேண்டும் என்பது அடுத்த தகவல்.
 
இத்தனைபேர் கருவுற்றிருக்கும் போது பெரும்பாலோனோர் வாங்கும் பொருட்களை வாங்குகின்றார்கள். கூடிய விரைவில் புதுவரவு (குழந்தை) வரும். அந்தப் புதுவரவுக்கு தேவைப்படும் பொருட்களை இந்த கால கட்டத்தில் ஸ்டாக் செய்யவேண்டும் என்பது மற்றுமொரு தகவல். அது மட்டுமா புது வரவிற்கு தேவைப்படும் பொருட்களுக்கான டிஸ்கவுண்ட் கூப்பன்களை அந்த வாடிக்கையாளருக்கு கொடுத்து அந்த சூப்பர் மார்க்கெட்டிலேயே அந்த சாமான்களை வாங்கவைக்கலாம்.
 
வயது டேட்டாவும் சூப்பர் மார்க்கெட் வசம் இருப்பதால் அந்த சூப்பர் மார்க்கெட் இருக்கும் ஏரியாவில் கருவுறும் வயதில் வாடிக்கையாளர்கள் பெருமளவில் இல்லை என்றால் அந்தப் பருவத்திற்குத் தேவையான பொருட்களின் ஸ்டாக் அளவை குறைத்துக்கொள்ளலாம். ஒரு பெண் கருவுற்றிருப்பதை அவள் சொல்லாமலேயே கண்டறியும் திறன் கொண்டது அனலிடிக்ஸ் என்பதை கேட்டால் கொஞ்சம் கலக்கமாய் இருக்கின்றது இல்லையா?.
 
நன்கொடை கோரிக்கை
 
கொஞ்சம் இளகிய மனதுடையவர் நீங்கள். அடிக்கடி தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை கொடுக்கின்றீர்கள் என்றால் உங்கள் வங்கிக்கணக்கை அனல்டிக்ஸில் ஆராய்ந்து வங்கி செய்யும் நல்ல காரியத்திற்கு நிதியுதவி கூட உங்களிடம் கேட்க வாய்ப்புள்ளது. இதே ஆன்லைனில் டொனேஷன் கொடுத்தால் அனலிடிக்ஸின் புண்ணியத்தால் உங்கள் ஈமெயிலுக்கு எக்கச்சக்க கோரிக்கைகள் கூட வரும் வாய்ப்புள்ளது. அட, இவ்வளவு தூரமா அனலிடிக்ஸ் உண்மைகளை கண்டறியும். என் வீட்டில் கொஞ்சமாய் பத்துலட்சம் ரூபாய் கருப்புப்பணம் இருக்கின்றதே! இதுவும் அனலிடிக்ஸின் மூலம் வெளிவந்துவிடுமா என்று கவலைப்படுகின்றீர்களா?
 
இலவசத்துக்காக தரும் தகவல்கள்
 
நம்மைப் பற்றிய விவரங்களைப் பதிய இவர்கள் யார்? யாரைக்கேட்டு செய்கின்றார்கள்? கர்ப்பம் போன்ற நமக்கு மட்டுமே தெரிந்த ரகசிய விஷயங்களை பயன்படுத்திக்கொள்ளும் அதிகாரத்தை அவர்களுக்கு கொடுத்தது யார்? வேறு யார்? நாமே தான். இரண்டு சதவிகித டிஸ்கவுண்டிற்கு ஆசைப்பட்டு மொத்த டேட்டாவையும் கொடுத்தோம். டிஸ்கவுண்ட்டோ, இலவசமோ நீங்களும் நானும் முதல் ஆளாய் டேட்டாவை கொடுக்க தயாராகின்றோமே? டிஸ்கவுண்டோ, இலவசமோ என்றில்லை கடன் தர ஒரு வங்கி தயாரென்றால் நாற்பது பக்க அக்ரிமெண்டை படித்தே பார்க்காமல் பெருக்கல் குறியிட்ட எல்லா இடத்திலும் கையெழுத்திடுகின்றோமே! அதே போல் காசு கேட்டால் காத தூரம் ஓடு. இலவசம் என்றால் துரத்திக்கொண்டு ஓடு என்ற மனநிலை நம் அனைவரிடமுமே தென்படும் ஒரு விஷயம்தானே!
 
வலைதளங்களின் மாய வலை
 
இந்தவிதமான மனப்பான்மை தான் நம்மை வலைதளங்கள் விரிக்கும் வலையில் மற்றும் ஸ்மார்ட் போன் ஆப்ஸ்களில் சுலபமாக விழ வைத்துவிடுகின்றது. என்ன அக்சஸ் பெர்மிஷன்கள் கேட்கின்றது என்பதை சற்றும் படிக்காமலேயே ஸ்மார்ட்போன் இலவச ஆப்ஸ் கேட்கும் கேள்விகளுக்கு யெஸ் யெஸ் என தட்டுகின்றோம். இலவச ஆப்ஸ்கள் கேட்கும் பெர்மிஷன்கள் உங்கள் கான்டாக்ட் லிஸ்ட், மெசேஜ், கால் லிஸ்ட் என அனைத்தையும் அக்செஸ் செய்யும் பெர்மிஷன்களாகும்.
 
நீங்கள் ஓரு வங்கி அதிகாரி என்றால் உங்கள் தொழில் சம்பந்தப்பட்ட அனைவரின் நம்பரும் உங்கள் கான்டாக்ட் லிஸ்ட்டில் இருக்கும் – ஒரு சில உறவினர் மற்றும் நண்பர்கள் தவிர. வங்கியில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே ஒரு ஆபர் தர வேண்டுமென்றால் சுலபத்தில் உங்கள் கான்டாக்ட் லிஸ்ட்டில் இருப்பவர்களை தொடர்பு கொண்டால் வேலை சுலபமாய் முடியுமல்லவா? இந்தவிதமான மார்க்கெட்டிங்கில் சக்சஸ் ரேட் சூப்பராய் இருக்கும் இல்லையா? ஓ! இதனால்தான் ஆப்ஸ்கள் இலவசமாய் கிடைக்கின்றதா?
 
தப்பு தப்பு. இனிமேல் இலவசமே வேண்டாம் என்று எல்லோரும் திருந்தினால் என்னவாகும். ஆப்ஸ்களின் விலை ஐயாயிரம், பத்தாயிரம் என எகிறும். பணம் கட்டி நாம் டவுன்லோட் செய்துவிடுவோமா என்ன? ஆப்ஸ் இன்டர்நெட் என்பதையேல்லாம் விடுங்கள். நாம் படிக்கும் செய்தித்தாள் மற்றும் வாராந்திர புத்தகங்களில் விளம்பரம் எதுவும் அச்சிடப்படாமல், டீவியில் விளம்பரம் இல்லாமல் ப்ரோகிராம் வேண்டுமென்றால் என்னவாகும்.
 
நியூஸ் பேப்பரின் விலை இருபத்தி ஐந்து ரூபாயும் டீவி சப்ஸ்கிரிப்ஷன் மாதத்திற்கு பத்தாயிரமுமாய் மாறிப்போகும். ஜிமெயில், பேஸ்புக், வாட்ஸ் அப் எல்லாம் உச்சபட்ச விலைக்கு போய்விடும். பல்லாயிரம் கோடி கொடுத்து வாட்ஸ் அப் சேவையை வாங்கி இலவசமாய் நமக்கு கொடுக்க மார்க் ஜூகர்பெர்குக்கு பைத்தியமா என்ன? சின்ன மீனைப் போட்டு பெரிய மீன்கள் பலவற்றை அள்ளிக்கொண்டுபோய் அனலைஸ் செய்து சாப்பிடத்தான். பெர்மிஷன்களுக்கு எஸ் என கிளிக் செய்யும் போது தனிமனித ரகசியங்களும் அலசப்படுகின்றதற்கான வாய்ப்பை கொடுத்துவிடுகின்றோம். என்ன சார் சுண்டைக்காய் சரக்கு. நான் என்ன டாட்டாவா, பிர்லாவா, அம்பானியா? எங்க கான்டாக்ட் லிஸ்ட்டை வைத்துக்கொண்டு சாதிப்பதற்கு என நீங்கள் கேட்கலாம். தனி மனிதனாக நீங்கள் நினைப்பதைப் போல் உங்களுடைய டேட்டா பெரிய அளவில் மதிப்பில்லாததாக தெரிந்தாலும் கூட்டமாகச் சேர்த்து டேட்டா பெறப்படும் போது அதில் மதிப்புக்கூட்டல் இருக்கவே செய்கின்றது.
 
டேட்டா எதையும் தாரை வார்க்காமல் இணையத்தில் செளகரியமான பல சேவைகளை அனுபவிக்க எக்கச்சக்க செலவாகும். நமக்கெல்லாம் அது கட்டுப்படியாகாது. டேட்டாவை தாரை வார்த்தால் எல்லாமே இலவசம்தான். அதனாலேயே நாம் சுலபத்தில் டேட்டாவை தாரைவார்க்கத் துணிகின்றோம். அனலிடிக்ஸிற்கு டேட்டா பஞ்சம் வரவே வராது என்பது இப்போது புரிகின்றதா?
 
Link to comment
Share on other sites

ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு உதவும் அனலிடிக்ஸ்

 

big_data_2200728f.jpg

 

டேட்டா அனலிடிக்ஸ் குறித்து கேட்க, படிக்க, சிந்திக்க எல்லாம் நன்றாகவே இருக்கின்றது. இதில் சொல்லப்படும் பல விஷயங்கள் கற்பனைக்கு எட்டாதவையாக இருக்கின்றன. உபயோகங்களும் உபத்திரவங்களும் சரிசமமாக இருக்கும் போல் இருக்கின்றது. பாதிக்கும் பாதி கனவும் கற்பனைக் கதையும் போல் அல்லவா இருக்கின்றது. இதனால் நிஜத்தில் இன்றைக்கு பலனடையும் மனிதர்கள் மற்றும் நிறுவனங்கள் ஏதும் இருக்கின்றதா? என்ற கேள்வி உங்கள் அனைவரின் மனதிலும் தோன்றியிருக்கும். இது பற்றிய உதாரணங்களை இந்த வாரம் பார்ப்போம்.
 
விளம்பரங்களால் பயன் உண்டா?
 
நிறுவனங்கள் பெரும்பாலும் விளம்பரம் மற்றும் இன்டர்நெட்டில் பெரிய அளவில் பாப்புலராகவும் தங்களைப்பற்றியும் தங்களுடைய தயாரிப்புகள் பற்றியும் முழுமையான விவரங்கள் இணையதளங்களிலும், சோசிஷியல் வெப்சைட்களிலும் இருப்பதை விரும்புகின்றன. இதற்கான செலவினங்கள் மிகவும் அதிகமாக இருக்கும். அதிலும் உலகளாவிய வியாபாரத்தில் இருக்கும் நிறுவனங்கள் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. இந்த மாதிரியான செலவுகளைச் செய்கின்றோமே? இதனால் என்ன பலன் என பல நிறுவனங்களும் யோசிக்கவே செய்கின்றன.
 
கடுமையான போட்டியும் லாபக் குறைவுகளும் இருக்கும் கால கட்டத்தில் மிகப்பெரிய அளவில் கம்பெனி நிர்வாகங்கள் இது போன்ற செலவுகளைச் செய்வதற்கு முன்னால் சிந்திக்கின்றன. செய்கின்ற செலவுக்கும் அதனால் வரும் பலனுக்கும் சம்பந்தம் இருக்கின்றதா என யோசிக்கின்றன. இது போன்ற சிந்தனைகள் தோன்றும் போது அனலிடிக்ஸ்தனை ஒரு ப்ரொபஷனல் சரிவீஸாக வழங்குகின்ற சர்வீஸ் நிறுவனங்களுக்கு வேலை கிடைக்கின்றது.
 
அனலிடிக்ஸ் தரும் தகவல்
 
இவ்வளவு பணம் நாங்கள் எங்களுடைய இன்டர்நெட் தளங்கள், சோஷியல் மீடியா நெட்வொர்க்குகள் மற்றும் ப்ரொமோஷன்களுக்காக செலவு செய்கின்றோம். இதனால் என்ன பிரயோஜனம் என்பதை கொஞ்சம் ஆராய்ந்து சொல்லுங்கள் என இந்த நிறுவனங்கள் பணிக்கப்படுகின்றன. இந்த அனலிடிக்ஸ் சர்விஸ் நிறுவனங்கள் இணையதளத்திலும் சோஷியல் நெட்வொர்க்கிலும் வந்து கம்பெனியின் ப்ராடெக்ட் மற்றும் சர்விஸ் குறித்து அறிந்துகொள்பவர்களின் விவரங்களை சேகரிக்க ஆரம்பிக்கின்றன.
 
இந்த விவரங்களையும் கம்பெனியின் பில்லிங் விவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களிடம் சாமான் வாங்கிய இத்தனை பேர் உங்கள் வெப்சைட் மற்றும் சோஷியம் மீடியா விவரங்களை வைத்தே உங்களை வந்தடைந்தனர் என்று சொல் கின்றனர். இன்னமும் தெளிவாக இந்த வியாபாரத்தை செய்தவர்களில் இத்தனை பேர் உங்களுடைய இன்டர்நெட் ப்ரொமோஷன் மூலமாக மட்டுமே வந்தவர்கள் என்பதையும் புட்டுப்புட்டு வைத்துவிடுகின்றன. இதனால் நிறுவனங்கள் தாங்கள் இணையத்திற்காக செய்யும் செலவு நியாமானதுதானா? அந்த செலவிற்கான பலாபலன் வந்து சேர்கின்றதா என்பதை தெரிந்துகொள்கின்றன.
 
சரியாக கணிக்க…
 
இணையதளம் என்று மட்டுமில்லை. ஏனைய மீடியாக்களிலும் களத்திலும் செய்யப்படும் ப்ரொமோஷன்களில் ஏற்படும் குழப்பத்தை தீர்க்கவும் அனலிடிக்ஸ் பல நிறுவனங்களுக்கு உதவுகின்றது. காலையில் பேப்பரை திறந்தால் வாங்கீட்டீங்களா? என விளம்பர வருகின்றது. டீவியைப் போட்டால் இப்போது விற்பனையில் என்கின்றது. ஆபீஸ் போகும் போது எப்ஃஎம் ரேடியோ கேட்டால் சரக்கு உள்ள வரையே ஆஃபர் என்கின்றது. நேராக கடைக்குப் போய் பார்த்தால் ஓ அந்த விளம்பரத்தை பார்த்து வந்தீர்களா? அது புது ஸ்டாக். இன்னும் வரலை இல்லை அது வந்த உடன் தீர்ந்து போய் விட்டது என்று வெறுப்பேற்றி போட்ட விளம்பரத்தை நீர்த்துப்போக செய்துவிடுவார்கள் கடைக்காரர்கள்.
 
விளம்பரமும் அதனால் ஒரு ஏரியாவில் உருவாகும் டிமாண்டும் சரியாக கணிக்கப்பட வேண்டும். அப்படி கணிக்கப்பட்டால் மட்டுமே விளம்பரத்தினால் பலன் இருக்கும். இல்லாவிட்டால் தண்டச் செலவுதான். சரக்கு கடையில் இல்லாமல் விளம்பரத்தை நீட்டி முழக்கி என்னப் பயன். ஒரு வருஷம் அல்லது ஒரு சீசனில் இந்தத் தவறு நடந்தால் பராவாயில்லை. தொடர்ந்து ஓவ்வொரு சீசனிலும் இதே தவறு நடந்தால் என்னவாகும். கம்பெனியின் பெயர் கெட்டு குட்டிச்சுவராகும். இந்த இடத்திலும் அனலிடிக்ஸ் உதவுகின்றது.
 
கடந்த சிலவருடத்தில் நடத்தப்பட்ட விளம்பர கேம்ப்பெயின் எந்த அளவுக்கு டிமாண்டை அந்த நாட்களில் அதிகரித்தது என அனலிடிக்ஸின் மூலம் ஆராயலாம். அதற்கு ஏற்றாற்போல் கடைகளுக்கு ஸ்டாக்கை அனுப்பி விட்டு பின்னர் விளம்பரம் செய்யலாம். இந்தவகை உபயோகத்திலும் அனலிடிக்ஸ் இன்றைக்கு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது.
 
வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்
 
அடுத்த நாம் பார்க்கப்போவது மற்றுமொரு ஆன்லைன் உதார ணத்தை. ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் ஏகப்பட்ட விற்பனை யாளர்களை தங்களுடன் இணைத்துக் கொண்டு இயங்கி வருகின்றது. மறுபக்கம் எக்கச்சக்கமான வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கு கின்றனர். விற்பனையாளர்கள் சிலர் வாடிக்கையாளரை ஏமாற்றலாம். இரண்டு நாட்களில் தருகின்றேன் என்று சொல்லி இருபது நாள் ஆக்கலாம். செல்போன் என்று சொல்லி செங்கலை அனுப்பி விடலாம்.
 
இது ஒரு புறம் என்றால் வாடிக்கையாளர்களும் வீண் பிரச்சினை செய்யலாம். ஆயிரத்து ஐநூறு ருபாய்க்கு போன் ஆர்டர் போட்டு விட்டு அதில் கேமரா சரியில்லை. பேட்டரி பத்துநிமிடம்தான் நிற்கின்றது. ராங் நம்பருக்கு கால் போகின்றது என பொய்யான புகார் களை அளந்துவிடலாம்.
 
விற்பனயாளரானாலும் சரி, வாடிக்கையாளரானாலும் சரி யார் பொய் சொன்னாலும் அலப்பறை கொடுத்தாலும் கெடுவதென்னவோ ஆன்லைன் விற்பனை நிறுவனத் தினுடையதுதானே! நியாயமற்ற முறையில் வியாபாரம் செய்யும் விற்பனையாளரையும், சம்பந்தா சம்பந்தம் இல்லாத குறைகளைச் சொல்லும் வாடிக்கையாளரையும் கண்டுபிடித்து கழற்றிவிட்டால் வியாபாரம் ஸ்மூத்தாய் போகும் இல்லையா? இதில் அனலிடிக்ஸ் மிகவும் உதவுகின்றது.
 
தப்பான பொருள், வாரக்கணக்கில் தாமதம், ஏமாற்றுப்பேர்வழி என ஒரு விற்பனையாளரை குறித்து கம்ப்ளெயிண்ட் வருகின்றதா? வெறுமனே தண்டிக்காமல் ஒரு ஏரியாவில் இருந்து மட்டும் வருகின்றதா? ஒரு குடெளனில் இருந்து செல்லும் பொருட்களுக்கு மட்டும் வருகின்றதா? ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் தயாரிப்புகள் விற்கப்படும் போது வருகின்றதா? என்றெல்லாம் அனலிடிக்ஸ் பிரித்துமேய்ந்து தகவல்களைச் சொல்லிவிடும்.
 
பொதுவாக விற்பனையாளர் நல்லவரா? கெட்டவரா? அல்லது அவருடைய நிறுவனத்தில் இருக்கும் சில கருப்பு ஆடுகள் இந்தவிதமான பிரச்சினையை செய்கின்றதா? அதே ரகத்தில் தரத்தில் நம்முடன் இணைந்திருக்கும் வேறு விற்பனையாளர்கள் தரும் சேவையை விட இவர் தரும் சேவை குறைந்த ரகமா? அதிகமா? என்ற கேள்விக்கெல்லாம் அனலிடிக்ஸ் பதில் தந்துகொண்டிருக்கின்றது.
 
ஏனென்றால் ஒரு வகையான பொருட்கள் விற்பனை செய்யும் பல விற்பனையாளர்களின் தொழில் குணாதிசியமே அப்படி இருக்கப்போய் நிறைய விற்று அதனால் கம்ப்ளெயிண்ட்டும் அதிகம் வந்து ஹைலைட் ஆவதால் நம்முடன் இணைந்திருக்கும் நல்ல ஒரு நிறுவனத்துடன் தொடர்பை துண்டித்துக்கொள்ளக்கூடாது இல்லையா? தொழிலின் குணாதிசியமே அப்படி இருந்தால் இந்த நிறுவனம் போன பின் அடுத்த நிறுவனமும் அதே போன்ற கம்ப்ளெயிண்டிற்கு ஆளாகத்தானே செய்யும். எனவே நல்லது கெட்டதை தெரிந்துகொள்ள அனலிடிக்ஸ் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களுக்கு அனலிடிக்ஸ் பெரிய அளவில் தற்போது உதவுகின்றது.
 
வாடிக்கையாளரையும் அறியலாம்
 
புடிச்சு ஜெயில்ல போடணும் சார் இவங்களை என விற்பனையாளர்களை பார்த்து கம்ப்ளெயிண்ட் சொல்லும் வாடிக்கையாளர் எல்லோருமே நல்லவர்களா என்ன? கேஷ் ஆன் டெலிவரி போட்டு சுத்தலில் விடுவது, பொருளை வாங்காமலேயே இது ஒரு வேலைக்காகாத சரக்கு என பின்னூட்டம் போடுவது, குண்டூசியை வாங்கிவிட்டு இமயமலை அளவுக்கு கம்ப்ளெயிண்ட் எழுதுவது என வாடிக்கையாளர்களும் பலவகைதானே.
 
இதுபோன்ற சிறப்பு வாடிக்கையாளார்களை கண்டறிந்து எக்ஸ்கியூமீ – உங்களுக்கு சப்ளை செய்யும் அளவுக்கு எங்களிடம் ஸ்டாக் இல்லை என்று கஸ்டமருடைய பேக்ரவுண்டை ஆராய்ந்துவிட்டு இணையதளத்தை அதுவாகவே சொல்ல வைக்கும் அளவுக்கு அனலிடிக்ஸ் பின்புலத்தில் இருந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது. ரொம்ப சவுண்ட் விடும் பார்ட்டிகளை ப்ளாக் அவுட் செய்யும் டெக்னாலஜியும் நடப்பில் இருக்கின்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
 
Link to comment
Share on other sites

வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஐ.ஓ.டி.

 

data_2212993f.jpg

 

பிக் டேட்டா என்பது கிட்டத்தட்ட மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் சம்பந்தமான விஷயமாக மட்டுமே இருக்கும் போலிருக்கின்றதே! மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் துறையில் இல்லாதவர்கள் இதைப் பற்றி தெரிந்துகொள்ளவோ கவலைப் படவோ தேவையில்லையா? என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றியிருக்குகும் ஏனென்றால் பிக்டேட்டா என்று பேச ஆரம்பித்தாலும் படிக்க ஆரம்பித்தாலும் பெரும்பாலான உதாரணங்கள் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் துறையை சார்ந்ததாகவே எங்கு பார்த்தாலும் இருக்கின்றது.
 
நான் ஒரு வங்கியில் விற்பனைப் பிரிவில் வேலை செய்கின்றேன். நான் ஒரு வங்கியில் கலெக்‌ஷன் பிரிவில் வேலை செய்கின்றேன். நான் ஒரு பார்மா கம்பெனியில் இருக்கின்றேன். நான் ஒரு கொரியர் கம்பெனியில் வேலை பார்க்கின்றேன். அதையெல்லாம் விடுங்கள் நான் ஒரு கன்ஸ்யூமர் குட்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்கின்றேன். எங்களுக்கு இதனால் ஏதாவது உதவி கிடைக்குமா என்ற கேள்விக்கான பதிலை இப்போது பாரப்போம்.
 
அனைத்துத் துறைகளிலும்…
 
பிக்டேட்டாவின் உதவி என்பது கிட்டத்தட்ட ஒரு தொழிலின் எல்லா துறைகளிலும் உதவவே செய்யும் என்பது முதல் பதில். இரண்டாவது பதில் டேட்டா குவியல்களை சேகரிக்கும் எல்லா தொழில்களிலும் பிக்டேட்டாவின் தேவை ஒரு காலகட்டத்தில் அத்தியாவசியமாகும் என்பது. ஓ! எங்களுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. எங்கெல்லாம் மனிதன் கம்ப்யூட்டரை உபயோகப்படுத்தி தொழில் செய்கின்றானோ அங்கெல்லாம் டேட்டா சேர ஆரம்பிக்கின்றது. டேட்டா குவியல் சேர ஆரம்பித்தால் அங்கே பிக்
 
டேட்டா அனலிடிக்ஸிற்கு வாய்ப்பு வந்துவிடுகின்றது என்பதைத்தானே சொல்ல வருகின்றீர்கள் என்பீர்கள். நீங்கள் சொல்லும் கம்ப்யூட்டர் உபயோகம் என்பது ஒரு கடையிலோ, தொழிற்சாலையிலோ, வங்கியிலோ மனிதர்கள் கம்ப்யூட்டரில் டேட்டாவை பதிவு செய்கின்றார்கள். நாளடைவில் அந்த டேட்டா குவியல் இமயமலையின் அளவைவிட அதிகமாகிவிடுகின்றது. அந்த டேட்டா குவியலில் முத்துக்குளிக்க பிக்டேட்டா அனலிடிக்ஸ் உதவுகின்றது என்றுதான் நாம் நினைத்துக்கொள்கின்றோம். ஆனால் நிஜத்தில் இன்னமுமே டெக்னாலஜி அட்வான்ஸாகப் போய்க்கொண்டிருக்கின்றது.
 
இன்டர்நெட் ஆப் திங்ஸ்
 
மனிதன் கம்ப்யூட்டர் டேட்டாபேஸில் தகவல்களை பதிந்தகாலம் போய் மிஷின்களே நேரடியாக டேட்டாவை பதிந்துவிடுகின்றன. அதிலும் இண்டர்நெட் வழியாக! அதாவது மெஷினும் மெஷினும் பேசிக்கொள்கின்ற காலகட்டத்திற்குள் நாம் வந்துவிட்டோம். 2020ல் கிட்டத்தட்ட முப்பது பில்லியன் உபகரணங்கள் இதுபோன்ற மெஷின்–டு-மெஷின் தகவல் பரிமாற்றத்தை செய்துகொண்டிருக்கும் என்று கணக்கீடு செய்துள்ளனர் ஆய்வாளர்கள்.
 
மனித இருதய செயல்பாட்டை தொடர்ந்து கணித்து இண்டர்நெட் வழியாக தகவல் சொல்லும் சின்னஞ்சிறு கருவிகள், பட்டியில் கட்டியிருக்கும் ஆடு மாடுகள் என்ன செய்கின்றது, எங்கே திரிகின்றது என்ற தகவல் பரிமாற்றத்தை தானாகவே செய்யும் பயோசிப் டிரான்ஸ்பாண்டர்கள், மோட்டார் சைக்கிள், கார்கள், லாரிகள் என அனைத்து ஆட்டோமொபைல்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் பல்வேறுவகை சென்சார்கள் இண்டர்நெட் வாயிலாக அனுப்பும் தகவல்கள் என்பது போன்ற பல்வேறு வகையான மெஷின்–டு-மெஷின் தகவல் பரிமாற்றங்கள் சாத்தியமே என்கின்றனர் ஆய்வாளர்கள்.
 
இந்த வகை மெஷின்-டு-மெஷின் தகவல் பரிமாற்றங்கள் இண்டர்நெட் மற்றும் கிளவுட் வாயிலாக நடக்கும். அதனாலேயே இந்தவகை மெஷின்கள் சார்ந்த நெட்வொர்க்கை இண்டர்நெட் ஆப் திங்ஸ் (ஐஓடீ) என்கின்றோம்.
 
ஐ ஓ டீ யின் உபயோகங்கள்
 
சுற்றுச்சூழல் மேலாண்மையில் ஆரம்பித்து சாலை மற்றும் ரயில்வே உள்கட்டமைப்பு துறை, மருத்துவத்துறை, தொழிற்சாலை, டிராபிக், வாகனங்கள், வீடு மற்றும் அலுவலகத்தில் செய்யப்படும் ஆட்டோமேஷன்கள் அனைத்துமே இண்டர்நெட் மற்றும் கிளவுட் வாயிலாக டேட்டாபதிவு செய்யும் வசதிகொண்டவையாக மாறிவிடும். இந்த வகை பதிவுகளில் பலவும் மனிதர்கள் செய்யக்கூடியவையாக இருந்த போதிலும் தொடர்ந்து மனிதர்கள் கண்காணிப்பு தேவைப்படாததாக இருக்கும் இடங்களாக இருக்கும்.
 
அதனாலேயே, இந்த இண்டர்நெட் ஆப் திங்க்ஸ் மிகுந்த அளவில் மனித சமுதாயத்திற்கு உபயோகமாக இருக்கும். உதாரணத்திற்கு ஒரு ஆறுவழிச் சாலையில் எங்கேயாவது ஒரு இடத்தில் டிராபிக் ஜாம் நடந்தால் அந்த டிராபிக்ஜாம் குறித்து அறியாமலேயே அவசரமாகச் செல்லும் பலரும் போய் சிக்கிக்கொள்வார்கள். ஐஓடீ டிவைஸ்கள் டிராபிக் ஜாமை தானாகவே கண்டறிந்து இண்டர்நெட்டில் பதிந்து இந்த ஊருக்கு போகின்றவர்களெல்லாம் இந்த சாலைகளில் செல்லுங்கள் என்று ஐந்து கிலோமீட்டருக்கு முன்னாலேயே எலெக்ட்ரானிக் போர்டில் காட்டிவிடும்.
 
ஹீம்!. இதற்கெதற்கு அனலிடிக்ஸ் என்பீர்கள். சென்சார் வேலை செய்தால் போதுமே என்ற வாதம் இங்கே செல்லாது போகும். மாற்றுப்பாதையில் அன்றைய டிராபிக் நிலைமை எப்படியிருக்கும் என்பதை ஏற்கனவே பல நாட்களாக பதிந்த டேட்டாக்களை அலசி இந்தப்பாதைதான் இன்றைக்கு இந்த சமயத்தில் ஃப்ரீயாக இருக்கும் என்று சொல்வதற்குத்தான் அனலிடிக்ஸ். வெறுமனே சென்சாரை வைத்தால் டிராபிக் ஜாம் இருக்கின்றது மாற்றுப்பாதையில் செல்லவும் என்று மட்டுமே சொல்லும். அனலிடிக்ஸோ இந்த ரூட்டை எடுங்கள் என ஆலோசனைதனைத் தரும்.
 
வீட்டிலும் உதவும்
 
வீட்டில் வயதானவர்கள் இருக்கின்றார்கள். நீங்களோ ஆபீசில் படு பிசி. மீட்டிங் மேல் மீட்டிங் நடக்கின்றது ஆபீசில். வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட்டார்களா? மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டார்களா? அட அதைவிடுங்கள். தூங்கியவர்கள் எழுந்தார்களா இல்லை அப்படியே மீளாத்தூக்கத்தில் இருந்துவிட்டார்களா? சரி எல்லாம் சரியாய் போகின்றது. வயதானால் திடீர் பிரச்சினைகள் வருகின்றதே. பெரியவர் பாத்ரூம் பக்கம் போனாரா இல்லையா? என்ற கவலையோடே நீங்கள் மீட்டிங்கில் இருக்கவேண்டியதில்லை.
 
சென்சார்கள் அவரை கண்காணித்து உங்களுக்குச் சொல்லும். இதிலென்ன அனலிடிக்ஸின் ரோல் என்றால் சின்னச் சின்ன வேலைகள்தான். பெரியவர் சாதரணமாக படுத்திருக்கும் நேரம். எத்தனை முறை பாத்ரூம் பக்கம் போவார் என்பதன் ட்ராக் ரிக்கார்டை சரிபார்த்தல் என தனியாளானாலும் அவருடைய டேட்டாவை அவர் சொல்லாமலேயே ட்ராக் செய்து ஆவரேஜ்களை கூட்டிக்கழித்து கணக்குப் பார்த்து அவருடைய பாடி டெம்ப்ரெச்சரையும் (சென்சார்) ஹார்ட் பீட்டையும் (வியரபிள் டிவைஸ்) கணக்குப்போட்டு அதன் பின்னரே உங்கள் மொபைல் போனுக்கு தகவல் அனுப்பும். வழக்கத்தை விட அதிக முறை போனாலோ அல்லது குறைந்த முறை பாத்ரூம் போனாலோ ஏதோ பிரச்சனை இருக்கின்றது என்று தானே அர்த்தம்.
 
அதை உங்களுக்கும், அவரின் டாக்டருக்கும் உடனே தெரிய படுத்தும். இதில் அனலிடிக்ஸின் ரோல் சின்னதாய் இருந்தாலும் தேவை பெரியது. இல்லையென்றால் பொழுதுபோகவில்லை கொஞ்சம் படுத்துக்கிடப்போம் என்று பெரியவர் படுத்திருக்க உங்களுக்கு மொபைலில் ஐயா ரொம்பநேரமா படுத்தே இருக்கின்றார். உடனடியாக வரவும் என தகவல் வந்தால் என்னவாகும் என்று பாருங்கள்.
 
ஐஓடீ எல்லாம் சாத்தியமா? எத்தனை பேர் இதை உபயோகிக்கப்போகின்றார்கள். இதெல்லாம் டெக்னாலஜிஸ்ட்களின் வளமான கற்பனை என்று கூட டெக்னாலஜி துறையில் இருப்பவர்களே அவ்வப்போது சொல்லி வருகின்றார்கள். இன்றைக்கே வீட்டிலிருக்கும் ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், டீவி, ஒவன் போன்ற பலவற்றில் சென்சார்கள் பல்வேறு விஷயங்களுக்காக உபயோகிக்கப்படுகின்றன. இந்த மெஷின்கள் இன்னும் கொஞ்ச நாளில் ஐபி (நெட்வொர்க்) தகுதி கொண்டவையாக தயாரிக்கப்படும். சென்சார்கள் ஐபி அட்ரஸோடு இணைக்கப்பட்டு தகவல்கள் பெறப்பட்டு அலசப்படும்.
 
ஐஓடி-தான் பிக்டேட்டாவை தொழில் மற்றும் வாழ்க்கையில் எல்லா இடங்களுக்கும் எடுத்துச்செல்லப்போகின்றது என்கின்றனர் வல்லுநர்கள். அதனால்தான் சுற்றுச்சுழல் விஷயத்தில் இருந்து மருத்துவத்துறை வரையிலும் அனலிடிக்ஸின் பயன்பாடு அதிகரிக்கப்போகின்றது என்ற கருத்தும் பலம் பெற்று வருகின்றது.
 
ஸ்மார்ட் போன்கள் அனைவரின் கையிலும் இருக்கின்ற காலம் இது. மனிதர்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்துவந்த டேட்டாக்களையும் தாண்டி தற்போது சென்சார்கள் அடங்கிய மெஷின்கள் டேட்டாக்களை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டன. ஐஓடீ-யின் வருகையால் மனிதர்கள் நேரம் செலவிட்டு ஒரு இடத்தில் இருந்து சேகரிக்க முடியாத டேட்டாக்களைக் (ஹைவே டிராபிக் ஜாம், வீட்டில் இருக்கும் பெரியவரின் செயல்பாடுகள், மூவ்மெண்ட் மற்றும் டெம்ப்ரேச்சர்) கூட சேகரிக்க முடிகின்றது. எல்லையில்லா டேட்டா சேகரிப்பு எல்லையில்லா அனலிடிக்ஸின் உபயோகத்திற்கு வழிவகை செய்யும் இல்லையா!
 
cravi@seyyone.com
 
Link to comment
Share on other sites

முக்காலமும் அறியலாம்…

 

data_2223119f.jpg

 

பிக்டேட்டா அனலிடிக்ஸ் குறித்து ஒரு விரிவான அலசல்தனை கடந்த சில வாரங்களாக நாம் செய்துகொண்டிருக்கின்றோம். இந்த வாரம் இறுதியாக சில விஷயங்களைப் பார்ப்போம். ஸ்டாட்டிஸ்டிக்கல் அனாலிசிஸ் என்பது தொன்றுதொட்டு தொழிலில் உபயோகிக்கப்பட்டு வருகின்ற தொரு விஷயமேயாகும். தொழில்கள் பல இதுபோன்ற அனாலிசிஸ் களினால் பெரிய அளவில் பலனடைந்த போதிலும் அந்த அனாலிசிஸ் குறித்த அறிவும் ஆற்றலும் அந்தத் தொழில் நிறுவனத்தை சார்ந்ததாகவும் கிட்டத்தட்ட பெரும் ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அறிவுசார் சொத்தாகவே பார்க்கப்பட்டது.
 
வரலாற்றில் ரகசியம்
 
உதாரணத்திற்கு, 1900ம் வருடத்தில் டபிள்யூ.எஸ். காசெட் என்பவர் கின்னஸ் என்ற நிறுவனத்தில் அக்ரோ கெமிக்கல் பிசினஸ் பிரிவில் ஒரு புள்ளியியல் நிபுணராக வேலைபார்த்தார். சிறந்த பார்லி வகைதனைக் கண்டறிய குறைந்த அளவிலான சாம்பிளை எடுத்து ஆராய்ச்சி செய்வதற்கான புள்ளியியல் ரீதியான சூத்திரத்தை அவர் கண்டுபித்தார். இதே போன்று ஏற்கெனவே அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த ஒரு புள்ளியியல் நிபுணர் ஒரு ஆய்வுக்கட்டுரையை ஒரு இதழில் வெளியிட எதேச்சையாக அதில் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள் தொழில் ரகசியமாகிப்போனதால் அந்த நிறுவனம் வேலைபார்ப்பவர்களை ஆய்வுக்கட்டுரை வெளியிடக்கூடாது என தடை செய்திருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
 
காசெட் தன்னுடைய ஆய்வுக்கட்டுரையால் எந்த விதமான தொழில் ரகசியங்களும் வெளியே போய்விடாது என்று வாதாடி நிரூபித்த பிறகும் கூட அந்த நிறுவனம் சமாதானமடையாமல் இந்த ஆய்வுக்கட்டுரையை உங்கள் பெயரில் வெளியிட்டால் போட்டி நிறுவனங்கள் இதை மிகவும் கவனமாக ஆராய்ந்து நம்முடைய தொழில் ரகசியம் எதையாவது கற்றுக்கொண்டுவிடும். அதனால், உங்கள் பெயரில் வெளியிடாமல் வேறு பெயரில் வெளியிடுங்கள் எனச் சொன்னது.
 
அதனால், காசெட் அவருடைய ஆய்வுக்கட்டுரையை ஸ்டூடண்ட் என்ற பெயரில் வெளியிட்டார். அப்படி அவர் வெளியிட்ட ஒரு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் டெக்னிக்தான் மிகவும் பாப்புலரான ஸ்டூடண்ட்ஸ் டீ-டெஸ்ட். ஸ்டூடண்ட் என்ற புனைப்பெயரில் வெளியிட்டதால் மட்டுமே டீ-டெஸ்ட்டிற்கு ‘ஸ்டூடண்ட்ஸ் டீ-டெஸ்ட்’ என்ற பெயர் வந்தது. இது எதனை உணர்த்துகின்றது என்றால் எந்த அளவிற்கு ஸ்டாட்டிஸ்டிக்கல் டெக்னிக்குகளுக்கு அந்தக்காலத்தி லேயே தொழிலில் முக்கியத்துவம் தரப்பட்டது என்பதைத்தான்.
 
அந்தக் கால கட்டத்தில் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் நிபுணர்கள் ஸ்டாட்டிஸ்டிக்கல் டெக்னிக்குகளை கண்டறிந்ததோடு மட்டுமல்லாமல் தொழிலில் இருக்கும் சூட்சுமங்களையும் ஆராய்ந்து சொல்பவர்களாக இரட்டைப் பங்களிப்பு (ரோல்) தனை கொண்டிருந்தனர். இன்று கணினிமயமான உலகில் இதுபோன்ற டேட்டா அனாலிசிஸில் கணக்குகளைப் போட கம்ப்யூட்டர் புரோகிராம்கள் ரெடிமேடாக கிடைக்கின்றன. புதிய ஸ்ட்டாஸ்டிக்கல் டெக்னிக்குகள் பெரியதாய் வராவிட்டாலும் டேட்டாக்களின் குவியல்தான் எண்ணிலடங்காமல் போய்க்கொண்டிருகின்றது.
 
இன்றைய தேவை என்ன?
 
நிறுவனங்களுக்கு இன்றைக்குத்தேவையானது யாரென்றால் தொழிலின் சூட்சுமங்களைப் புரிந்துகொண்டு கேள்விக்கணைகளைத் தொடுத்து முன்னேற்றத்திற்கான பதில்களைப் பெறும் திறன்தனைக் கொண்ட மனிதர்கள்தான். தகவல்களும் அதில் செய்யப்படும் ஆய்வுகளும் அந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை ஒரே மாதிரியானவற்றைப் போல் தோன்றினாலும் சேகரிக்கப்படும் டேட்டாக்களில் பல்வேறுவிதமான நூதனங்கள் வந்துவிட்டதால் அந்த நூதன டேட்டாக்களினால் கிடைக்கும் பலாபலன்களும் அளவு கடந்ததாகிவிட்டது.
 
அந்தக்காலத்தில் கிடைத்த டேட்டாக்களைக் கொண்டு தொழில் நடை முறையின் சில கேள்விகளுக்கு மட்டுமே பதில்களைக் கண்டறிய முடிந்தது. இன்றோ வகைவகையாய், தினுசுதினுசாய் டேட்டாக்கள் தொழில் நடைமுறையில் இருந்து அள்ளவும் ஆராயவும் படுகின்றன. என்ன நடக்கின்றது என்பதைத் தெரிந்துகொள்ளும் டிஸ்கிரிப்டிவ் அனாலிசிஸில் ஆரம்பித்தது இந்த நிகழ்வுகள்.
 
இன்று ஐம்பது வயது நடைபெறுபவர்களுக்கு அவர்களுடைய வேலையில் எம்ஐஎஸ் (மேனேஜ்மெண்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ்) என்பது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டபோது இருந்த த்ரில் நன்றாக நினைவில் இருக்கும். என்ன நடந்தது என்று தொகுத்துத் தந்த எம்ஐஎஸ்-தனை டிசைன் செய்பவரின் முகத்தில் இருந்த சாதனைப் பெருமைதனை மறந்திருக்க மாட்டீர்கள். அட! என்னத்தையோ புதுசா சொல்றாம்ப்பா! என்று அனைவருமே ஆச்சரியப்பட்ட காலம் அது. அந்த த்ரில்லில் எக்கச்சக்கமாக ரீம்ரீமாக பேப்பர்களில் எம்ஐஎஸ்களை எடுத்துவைத்துக்கொண்டு ரூம்போட்டு பேசி மனுசனை என்னமாக பாடாய்ப்படுத்தினார்கள் என்று கூட நீங்கள் சொல்லக்கூடும்.
 
நடந்ததை தெரிந்துகொண்டால் மட்டும் போதுமா? அதற்கு அடுத்தபடியாக தொழில்கள் ஏன் இது நடந்தது என்ற கேள்விக்கு விடை தேட ஆரம்பித்தன. நிறுவனங்கள். இதை டயக்னாஸ்டிக் அனாலிசிஸ் என்றார்கள். இது டிஸ்க்ரிப்டிவ் அனலிடிக்ஸிற்கு அடுத்தபடியாக கொண்டாடப்பட்டதொரு விஷயம். இதையும் தாண்டி தற்போது சூப்பர் ஸ்டாராக இருப்பது என்ன நடக்கும் என்பதைச் சொல்லும் ப்ரிடிக்டிவ் அனலிடிக்ஸிம், அது நடக்க நாம் என்ன செய்ய வேண்டும் அல்லது அது நடக்கும் வேளையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லும் பிரிஸ்கிரிப்ட்டிவ் அனலிடிக்ஸிம்.
 
தொழிலில் முக்காலம் அறிதல்!
 
சிம்பிளாய்ச் சொன்னால் தொழில் நடப்பிலும் நடந்தது, நடப்பது, நடக்கப்போவது என முக்காலங்கள் உண்டு. தொழில் பாட்டுக்கு நடந்தது. ஆரம்பத்தில் வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு என்றெல்லாம் இருந்த தொழில் முனைவோர்கள் சிந்திக்க ஆரம்பித்தனர். அதன் விளைவுதான் இந்த அனாலிசிஸ்கள் வந்த பின்னர் என்ன வந்தது என்று எம்ஐஎஸ் பார்த்து தெரிந்துகொண்டது ஒருகாலம். வந்ததைப் பற்றி நுண்ணறிவு பெற்று வந்ததில் நல்லதை மட்டுமே மீண்டும் மீண்டும் நடக்க வைக்கத் தேவையானவற்றை கண்டுபிடித்து வாழ்ந்தது ஒருகாலம்.
 
இந்த இரண்டுகாலத்திலும் நமக்கு என்ன கிடைக்கும் என்பதை நம்மால் முடிவு செய்ய இயலாமல் இருந்தது. நம் தொழில் திறமைக்கேற்ப வருவதை செம்மைப் படுத்தி தொழில் செய்தோம். இன்றைக்கோ நாம் நினைப்பதை நம் வசம் கொண்டுவருவதற்கான உத்திகளை கண்டறிய ஆரம்பித்துள்ளோம். பிக்டேட்டா அனலிடிக்ஸ் இந்த வகையில் உதவப்போகும் முதல் டெக்னிக் என்றே சொல்லலாம்.
 
இது வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பதில் சொல்லும் விதத்தில் பிக்டேட்டா அனலிடிக்ஸ் செம்மைப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் மிகமிக அதிகமாகவே இருக்கின்றது எனலாம். இதனாலேயே எதிர்காலத்தில் தொழில் முனைவோர்கள் முக்காலமும் உணர்ந்த ஞானிகளாகத் திகழும் வாய்ப்பு இருக்கின்றது எனலாம். டேட்டா குவியல்கள் போய் ` அகல உழுவதைவிட ஆழ உழு’ என்பதற்கு இணங்க மிகவும் அதிக உபயோகபடுகின்ற ப்ரீமியம் டேட்டா அனலிடிக்ஸிற்காக டேட்டாக்கள் சேகரிக்கப்படும் வாய்ப்புகளும் கூட எதிர்காலத்தில் வரலாம்.
 
முதல்வனாய் இருக்க முதலில் போ!
 
எந்த ஒரு தொழிலானாலும் சரி, மேனெஜ்மெண்ட் டெக்னிக் ஆனாலும் சரி பர்ஸ்ட் மூவர் அட்வான்ட்டேஜ் என்ற ஒன்று முதலில் செய்ய/உபயோகப்படுத்த ஆரம்பிப்பவர்களுக்கு இருக்கவே செய்கின்றது. ஏற்கனவே சொன்னதைப்போல் ஸ்டாட்டிஸ்டிக்ஸின் உபயோகத்தை பல நிறுவனங்கள் உபயோகப்படுத்தி லாபமும் அடைந்தன.
 
அதே போல் சிக்ஸ்-சிக்மா என்ற தர நிர்ணய டெக்னிக்தனின் உபயோகத்தைக் கண்டறிந்து (1996-1998களில்) அதை தொழிலின் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தியதன் மூலம் ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனியால் கணிசமான அளவு லாபத்தை உயர்த்திக்கொள்ள முடிந்தது என்று சொல்கின்றது வரலாறு. பிக்டேட்டா அனலிடிக்ஸிலும் இந்த நிலை தொடரலாம். அதனாலேயே பல நிறுவனங்களும் அனலிடிக்ஸின் பக்கம் தங்கள் பார்வையை திருப்பியுள்ளன. தொழிலுக்கு டேட்டா எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு ஸ்டாட்டிஸ்டிக்கல் டெக்னிக்குகளும் பிக்-டேட்டாவில் முக்கியம். இதுவே இன்றைக்கு இருக்கும் மிகப்பெரிய சேலஞ்ச் எனலாம்.
 
ஏனென்றால், தவறான ஸ்டாட்டிஸ்டிக்கல் டெக்னிக்குகள் தரமில்லாத டேட்டாக்களைக்கூட சூப்பர் டேட்டாவாக காட்டிவிடும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது. பிக்-டேட்டாவின் வேலை நடக்கப்போவதை கணிப்பது. அதனாலேயே மிகமிக துல்லியமாக அதன் கணிப்புகள் இருக்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. மதியம் 2.42ல் இருந்து 3.17 மணி வரை மழைபெய்யும் என்பது மழை குறித்த சூப்பரான துல்லியமான கணிப்பு. மாறாக, என்றைக்கு பெய்யும் என்று கேட்டால் “அடுத்த வாரத்தில் ஏதாவது ஒரு நாள்” என்று சொன்னால் அந்த கணிப்பை கையில் வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியும்?
 
நிறுவனங்களும், தொழில் முனைவோர்களும் இதை முழுமையாகப் புரிந்துகொண்டால் பயனளிக்கக்கூடியதொரு அனலிடிக்ஸ் டிப்பார்ட்மெண்ட்தனை தங்கள் நிறுவனத்தில் உருவாக்க முடியும்.
 
நிறைவு பெற்றது!
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.