Jump to content

Recommended Posts

தூக்கில் தொங்கப் போகிறேன் என்று ஒருவன் போவோர் வருவோருக்கெல்லாம் கூறிக்கொண்டிருக்கிறான். அவனுடைய குரலை சிலர் கேட்கிறார்கள் பலர் கேட்கமலே போகிறார்கள். சட்டென அவன் தூக்கில் தொங்குகிறான், அவ்வளவுதான் கவனிக்காமலேபோன அனைவரும் அவனைக்காப்பாற்ற ஓடி வருகிறார்கள். இங்கு வாய் மொழி பெறத்தவறிய கவனத்தை அவனுடைய செயல் சட்டெனக் கவர்ந்துவிட்டதை உணர முடியும். உடல் மொழியே 80 வீதமான கவனத்தைத் தொடுவதாக உளவியலாளர் கூறுகிறார்கள்.

சாகப்போன ஒரு செயலுக்கு இவ்வளவு தாக்கம் இருக்குமானால் வாழ்க்கை முழுவதும் விநாடிக்கு விநாடி நாம் செய்யும் செயல்களுக்கு எவ்வளவு வலிமை இருக்கும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். தற்கொலை முயற்சி ஒரு குறுங்காலச் செயல், அந்த உயிர் தப்பினாலும், உயிர் போனாலும் அதன் மீதான கவனம் குறுங்காலத்தில் முடிந்துவிடும். ஆனால் வாழ்க்கை அப்படியல்ல அது நீடித்த நிலையான கவனத்தைக் கவரும் செயலாகும். மற்றவரை வழி நடாத்த ஆதாரமாக அமைவதும் அதுவேயாகும். இந்த உண்மை தனிமனிதனுக்கு மட்டுமல்ல அரசியல், சமுதாயமென்று அனைத்திற்குமே பொருந்தும். நமது வாய் மொழிக்கும் வாழ்விற்கும் பெரும் இடைவெளி இருந்தால் நம்மால் ஒரு நல்ல தலைமுறையை உருவாக்க முடியாது. நமது மக்களுக்கு ஒரு நல்ல அரசியலையும் தர முடியாது.

வாய் மூலம் கட்டளைகளை இட்டு பிள்ளைகளை வளர்க்க பலர் முயற்சியெடுப்பார்கள். நாம் எவ்வளவோ கத்திக்கத்தியும் இந்தப் பிள்ளை சொல் பேச்சு கேட்காமல் நடந்து கடைசி இப்படி நாசமாகி நிற்கிறதே என்று பல பெற்றோர் அழுவார்கள். இப்படியான அழு குரல்களை நாம் பெற்றோரின் தேசிய கீதமாக எங்குமே கேட்க முடியும். அதே பெற்றோரிடம் உங்கள் பிள்ளைகள் எப்படியாக வரவேண்டுமென கற்பனை பண்ணினீர்களோ அதற்கமைவாக நீங்கள் வாழ்ந்து காட்டினீர்களா என்று கேட்டுப்பாருங்கள். பெற்றோரிடம் முன்மாதிரியான வாழ்க்கை இல்லை என்ற பதில் உங்கள் கைக்கு இலகுவாகக் கிடைக்கும்.

 நமது பிள்ளைகள் நாம் வாயினால் சொல்வதைவிட செயலினால் வாழ்ந்து காட்டுவதைத்தான் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோரின் உடல் அசைவையும் அதன் மூலம் அவர்கள் வாழும் வாழ்வின் உண்மைத் தன்மையையும் அவர்கள் அவதானிக்கிறார்கள். அவர்களின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கம் செலுத்துவது பெற்றோர் வாழ்ந்து காட்டும் வாழ்வுதான்.

கண்கெட்ட கபோதியான திருதராஷ்டிரனும், கண்களை சீலையால் கட்டிக் கொண்டு குருடி போல வாழ்ந்த அவன் மனைவி காந்தாரியும், சகோதரனான பாண்டுவின் பிள்ளைகளை புறந்தள்ளி நடந்தார்கள். அவர்களுடைய வாழ்வு முழுவதுமே வஞ்சகமும், பக்கச்சார்பும், ஓரங்கட்டுதலுமாக நடந்தது. அந்த வாழ்வை துரியோதனனும் அவனுடைய தம்பிகளும் பார்த்தபடியே வாழ்ந்தனர். நயவஞ்சகமே அவர்கள் வாழ்வாக மாறுவதற்கு அவர்களோடு வாழ்ந்த தாயும், தந்தையும் உடலால் வாழ்ந்து காட்சிய காட்சிகளே காரணம். துரோணாச்சாரியார், பீஷ்மாச்சாரியார் போன்ற எத்தனையோ ஞானிகள் பாடம் சொல்லிக் கொடுத்தும் அந்தப் படிப்பால் அவர்கள் பாடம் பெறவில்லை. பெண் மேல் கொண்ட தீராத ஆசையால் பாண்டு தலைசிதறிச் செத்தான். அவன் பிள்ளைகள் ஐவரும் ஒருத்தியை தமக்கு மனைவியாக்கி, ஆண்டுக்கு ஒருவராக அவளை அனுபவித்தனர். அத்தோடு நில்லாமல் போகுமிடமெல்லாம் பெண்களை மணமுடித்து தாம் பாண்டுவின் பிள்ளைகளே என்பதை புரியவும் வைத்தனர். தவறான பாதையில் போனால் மண்டை சிதறும் என்ற ஒரு நிகழ்வு பாண்டவருக்கு புத்தியைத்தரவில்லை. தந்தையான பாண்டு வாழ்ந்த சபல வாழ்வுதான் பாண்டவர்கள் மனங்களை பெண் சஞ்சலத்தில் வீழ்த்தியது.

கடைசியில் பாண்டவர்கள் திரௌபதி என்ற பெண்ணுக்காகவும், கௌரவர்கள் மண்ணுக்காகவும் மோதி மடிந்தார்கள். 18ம் நாள் போருக்குப் பிறகு பிணக்குவியலில் நின்று இவர்களுடைய வாழ்வை மதிப்பீடு செய்தபோது, மண்ணுக்கு ஆசைப்பட்ட அப்பனுக்கும், பெண்ணுக்கு ஆசைப்பட்ட இன்னொரு அப்பனுக்கும் பிள்ளைகளாகப் பிறந்தவர்களால் இதைவிட வேறென்ன செய்ய முடியும் என்ற உண்மை தெரிய வந்தது. அதனால்தான் 19ம் நாள் போரில் அசுவத்தாமன் இவர்களின் குழந்தைகள், வம்சத்தவர் அனைவரையும் கொன்றதோடு, கருவில் இருக்கும் குழந்தைகளையும் கொல்கிறான். வாழ்ந்து காட்டும் பழக்கம் வம்ச பரம்பரையாக நீண்டு செல்லும் என்பதால் அசுவத்தாமன் வம்சக்குலக் கொழுந்துகளையே கருவறுத்தான்.

நாம் சுயநலம் கொண்டு சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளுக்குத் துணை போனால் நம் பிள்ளைகள் அதை அவதானிப்பார்கள். கடைசியில் கபோதியான திருதராட்டிரன் காட்டிய வஞ்சக வழியையே நம் பிள்ளைகளுக்கு நாமும் காட்ட நேரிடும். ஐம்புலன்களை அடக்க முடியாத பாண்டு போல வாழ்ந்தால் ஒழுக்கம் குன்றிய பிள்ளைகளையே உருவாக்க முடியும். இவை கதைகள் மூலம் நாம் அறியும் உண்மைகளாகும். ஆகவேதான் வாயால் புலம்பாது வாழ்ந்து காட்டுவதை சட்டரீதியாக ஒழுங்குபடுத்த வேண்டுமென மேலைத்தேய சமுதாயம் விரும்புகிறது.

மேலும் வாழ்ந்து காட்டுவது ஒரு நாளில் நடக்கும் காரியமல்ல, அது பல ஆண்டுகால நீடித்த செயற்பாடாகும். உங்கள் பிள்ளைகள் எப்படி வரப்போகிறார்கள் என்பதை அறிய ஜோதிடரிடம் போகாதீர்கள். கடந்த பத்தாண்டுகளில் உங்கள் உடம்பு வாழ்ந்து காட்டிய வாழ்வை ஒரு கடதாசியில் எழுதிப்பாருங்கள். உங்கள் பிள்ளைகளை நீங்கள் எப்படி உருவாக்கியிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள அதைவிட பெரிய ஜோதிட அறிக்கை இருக்க முடியாது.

-       செ.துரை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.