Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

தலைக்குமேல் யாரையும் 

தூக்கி வைத்துக் கொள்ளாதீர்கள் ...

தூக்கி எறிய நினைக்கும் போது. 

கிடைக்கும் வலியை எதைக்கொண்டும் சரி செய்ய இயலாது ...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11100868_945791115460987_474315834232973

 

இறுதிப்போரின்போது வன்னியில் கொல்லப்பட்டதாக நம்பப்படும் இடத்தில் அமெரிக்கா தமது இறுதி வணக்கத்தை செலுத்தியுள்ளது.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இன்று அன்னை பூபதியின் 27ம் ஆண்டு  நினைவு நாள்.... தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் என்றும் நினைவு கூறப்படுகிறது.
 
11066619_967658559920228_838857975398175
Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tea-293x150.jpg

 

கனடா-ஒன்ராறியோ மாகாணம் பூராகவும் திங்கள்கிழமை பொது உயர்தர பாடசாலைகள் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒன்ராறியோ இரண்டாம் நிலை பாடசாலை ஆசிரியர்களின் கூட்டமைப்பு, அரசாங்கம் மற்றும் ஒன்ராறியோ பொது பாடசாலை சபை ஆகிய வர்களிற்கிடையிலான பேச்சு வார்த்தைகளின் முடிவை பொறுத்து ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் ஏற்படுமானால் பாடசாலைகள் மூடப்படலாம்.

ஒன்ராறியோ உயர் பாடசாலை ஆசிரியர்களை பிரதிநிதிப்படுத்தும் தொழிற்சங்கம் தங்கள் பேரம் பேசும் நிலையை மறுபரிசீலனை செய்யுமாறு நிர்வாகத்தினரை வலியுறுத்துகின்றனர்.

 

canadamirror.

Link to comment
Share on other sites

அருமையான பாடல்.

எனக்கும் மிகவும் பிடிக்கும். நன்றி இணைப்பிற்கு்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் பார்க்க நேரம் தான் இல்லை. தொடருங்கள் யாயினி. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் 21, 2015 - பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 51 வது நினைவு தினம்

 

1619606_727563300610898_8950099347510119

 

பாரதிதாசன் கனவை கலைஞர் நிறைவேற்றினார் 

--------------------------------------------------------------------------------

புரட்சிக்கவி பாரதிதாசன் கடைசிக் காலத்தில் இரண்டு கனவுகள் வைத்திருந்தார்....1-} “பாண்டியன பரிசு” காப்பியத்தை திரைப்படமாக எடுப்பது ......2-} பாரதியின் வாழ்வை திரைப்படமாக எடுப்பது...... பாண்டியன்பரிசு காப்பியத்தை படமாக எடுக்க நினைத்தது கோடி கோடியாக சம்பாதித்து இ சி ஆர் சாலையில் அல்லது பெசன்ட் நகரில் வீடு வாங்க அல்ல..... அதில் வரும் லாபத்தை வைத்து சென்னையின் மையப்பகுதியில் பெரிய நூலகம் ஒன்றை அமைத்து பாரதி சொன்ன மாதிரி பிறநாட்டு அறிவுச் செல்வங்களை வல்லுநர்களை கொண்டு தமிழ் மொழியாக்கம் செய்ய வேண்டும்... திருக்குறள் போன்ற நற்றமிழ் இலக்கியங்களை பிற மொழியில் பெயர்க்க வேண்டும்.... நூலகம் சார்பாக பதிப்பகம் தொடங்க வேண்டும்... பல நலிந்த எழுத்தாளர் கவிஞர்களை பணியில் அமர்த்த வேண்டும்....இதற்காக சிவாஜி உட்பட பல இயக்குனர்களை சந்தித்து ஏற்பாடாகும் போது அது நிறைவேறாமலே உலகவாழ்வை முடித்துக் கொண்டார்.

---------இரண்டாவது கனவு பாரதி வாழ்வை படமாக்குவது கதை எட்டையபுர சமஸ்தானத்தில் ஆரம்பிக்கிறது.. .சமஸ்தானத்தை செக் நாட்டு தமிழறிஞர் கமில்ஸ்வலபில் என்பவர் பார்வை இடுவதாகவும், பாரதி பற்றி கேட்கும் போது அருகிலிருக்கும் பாரதிதாசன் “பாரதி பிறப்பினிலே ஒரு புதுமையான நிகழ்ச்சி அடங்கி இருக்கிறது” என்று கூற ......”அது என்ன/” என்று அறிஞர் கேட்க .பாரதி வீட்டிலிருந்து “பிளாஸ் பேக்” உத்தியில் படம் துவங்குகிறது

-------இதுவும் நிறைவேறவில்லை ..இது குறித்தெல்லாம் ,ஈரோடு தமிழன்பன்,அவர்களுக்கு பாரதிதாசன் எழுதிய கடிதம் மூலம் அறியமுடிகிறது அதுதான் பாரதிதாசன் எழுதிய கடைசிக் கடிதம்[ 15/4/1964}. மற்றும் கவிஞர் பொன்னடியான் அவர்களிடம் புரட்சிக் கவி பரிமாறிய உரையாடல் மூலமும் அறிய முடிகிறது.....{ஆதாரம் ..ய .மணிகண்டன் கட்டுரை . காக்கைச் சிறகினிலே .ஜனவரி 2012}.--------அவர் கனவு கலையவில்லை நூலகக் கனவை கலைஞர் நிறைவேற்றி விட்டார் . பாரதி வாழ்வை ஞான ராஜசேகர் படமாக்கிவிட்டார். . 

-

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

நல்வரவு. யாழில் பக்கங்கள் ஆரம்பிக்க முடியுமா? அதுபற்றி அறிய விருப்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்வரவு. யாழில் பக்கங்கள் ஆரம்பிக்க முடியுமா? அதுபற்றி அறிய விருப்பம்

 

உங்கள் வரவுக்கு நன்றி..நீங்கள் கேட்கும் கேள்வி சற்றுக் குளப்பமாக இருக்கு... யாழின் விதிமுறைகளுக்கு  ஏற்ப நடந்து கொண்டால் நம்ம பாட்டுக்கு பக்கங்களை புரட்டிச் செல்லலாம்...என் அறிவுக்கு எட்டியவரையில் இது தான் புரிந்து கொண்டது...
 
மேலதிக தகவல்களுக்கு யாராச்சும் மட்டுறுத்தினர்மார் இந்தக் கேள்வியைப் பார்த்தால் பதில் எழுதி விடுங்கோ பிளீஸ்..
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது நாள் உண்ணாவிரத போராட்டம்

 

11169835_816985475022476_628283332690234

காலையில் 6 மணிக்கு வெளிக்கிட்டு 8 மணி வரை நல்லூரைச் சுற்றி இருந்த நண்பர்களை ஒன்றாக்கினோம் . மீடியாக்களில் இருந்து தொலைபேசி அழைப்புக்கள் வந்து கொண்டிருந்தன ,' எத்தனை மணிக்கு தொடங்குவீங்க ?' ஆனால் 9 மணிக்கு தொடங்குவதாக இருந்தோம் ,பஸ்களை ஒழுங்கு படுத்துவதில் இருந்த தாமதத்தினாலும் எங்களுக்கு 4 பஸ்கள் தேவைப் பட்டதாலும் இழுபறியுடன் ,நானே நேரில் சென்று எனது நண்பர்களையும் ஒன்றிணைத்து அழைத்து வர வேண்டியிருந்தது , 9.30 மணிக்கு வந்து சேர்ந்தோம் ,ஏலவே ஆதியும் மற்றவர்களும் பேசியிருந்தார்கள் ,எங்களது கோரிக்கைகளை நான் வாசித்தேன் ,பின்னர் அந்த நொடியிலிருந்து நீருமற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பித்தோம் ,மருத்துவ பீட மாணவர்களும் உயர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து கொண்டனர் , 800- 1000 வரையானவர்கள் பங்கு பற்றியிருந்தனர் .

நீருமற்ற உண்ணாவிரதத்தை நல்லூர் முன்றலில் ஆரம்பித்து மொத்தமாக 8 பேர் இருந்தோம் ஒருவரை தவிர மற்றவர்கள் உயர்தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் .பின்னர் தான் ஒரு பெண் இணைந்து கொண்டார் . மொத்தமாக 9 பேர் ,8 பேரில் 2 பேர் சுன்னாகத்தை வசிப்பிடமாக கொண்ட மாணவர்கள் . மற்றயவர்கள் யாழ்ப்பாணம் மத்தி . பேரணி முடிந்து திரும்பியவர்களில் பெரும்பானமையானவர்கள் மதியம் 2 மணி வரை எங்களோடு நின்றார்கள் .ஊடகங்கள் செவ்விகளையும் தரவுகளையும் சேகரித்துக் கொண்டிருந்தன .

இன்னுமொரு முக்கியமான நிகழ்வும் ஊடகங்கள் பதிவு செய்யவில்லை ,மதியம் ஒரு மணி வரை அடையாள உண்ணாவிரதத்தில் சிங்கள முஸ்லிம் மாணவர்கள் எங்களோடு இருந்து பங்கு பற்றினர் .

அதை எந்த செய்தியிலும் நான் பார்க்கவில்லை ,எங்கள் வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளைக் கூட செய்தியாக போடும் சில ஊடகங்கள் இதைக் கவனிக்கத் தவறிவிட்டன .

மேலும் இன்னொரு பெண்ணும் இரண்டு நாள் பகலும் எங்களுடன் உண்ணாவிரதத்தில் இருந்தார் ,மொத்தம் இரண்டு பெண்கள் . மாலை வரை தொடர்ச்சியாக மாணவர்கள் நின்றிருந்தனர் .இடையில் முதலாவதாக அரசாங்க அதிபரின் செயலாளர் வந்தார் ,பின் அரசாங்க அதிபர் வந்தார் ,அதற்கு முன்னமே சிவாஜி லிங்கம் வந்திருந்தார் . இப்படியாக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன . அமைச்சர் ப.டெனீஸ்வரனும் குருகுலராஜாவும் வந்தனர் , பின் இரவு 8.30 மணியளவில் முதலமைச்சரும் வேறு சில அமைச்சர்களும் வந்திருந்தனர் . அதில் இடம்பெற்ற சில முக்கிய குறிப்புக்களை தருகிறேன் ,அந்த இடம் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியிருந்தது .

1 - ' என்ன தம்பி மார் காலமையில இருந்து தண்ணி கூட குடிக்காம இருக்கிறியள் ' என்று கேட்டார் ,நாங்கள் விஷயத்துக்கு வரச் சொன்னோம் ,' நான் செய்யக் கூடிய எல்லாத்தையும் செய்யிறன் ,நீங்கள் இந்த இத ( உண்ணாவிரதம் என்பது உடனடியாக அவரது வாய்க்குள் வரவில்லை ) விடுங்கோ 'என்றார் .

ஒருவர் பிரச்சினையை அணுகும் முறை என்பது அதை தீர்ப்பதில் செல்வாக்குச் செலுத்தும் . முதலமைச்சரின் அணுகுமுறை தான் முதலாவது விரிசல் விழுந்த பகுதி .

2- மருத்துவர்கள் இலங்கை நீர்வழங்கல் அதிகார சபையின் அறிக்கையை காட்டி பேசிய போது ,இது எனக்கு தெரியாது ,இந்த ரிபோர்ட் ஐ தாங்கோ என்று கேட்டார் ,அதற்கு இந்த ரிபோர்ட் ஒரு மாதத்திற்கு முன்னமே அமைச்சர் ஐங்கரநேசனுக்கு கையளிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப் பட்டது . இதனாலும் சற்று குழப்பமான நிலை ஏற்பட்டது . முதலமைச்சருக்கு ஏன் விடயங்கள் இன்னும் தெளிவாக்கப் படவில்லை என்பது கேள்வி .ஏன் அந்த விடயங்களை தெரிந்து கொள்வதில் அவர் ஆர்வம் காட்டவில்லைஎன்பதுவும் இன்னொரு கேள்வி .

3 - அந்த நேரத்தில் குறுக்கிட்ட நான் ( உண்ணாவிரதிகளில் முதலமைச்சருடன் பேசியது நான் மட்டுமே ,வேறு எந்த உண்ணாவிரதியும் அவருடன் பேசவில்லை ) ' விஷயத்துக்கு வருவோம் " இருக்கு இல்லை என்ற இரண்டு பதில்களை தவிர மூன்றாவதாக என்ன பதிலை சொல்லப் போகிறீர்கள் என்று கேட்டேன் , 12 திகதி வரை தண்ணீர் தருவம் .அந்த தினம் வரை பொறுங்கோ என்று சொன்னார் . பிறகு , இவ்வாறாக நாங்கள் 100 பெடியள் போய் பார்த்தனாங்கள் ,சனம் கிணற்று தண்ணியக் குடிக்குது , என்றேன் ( மாகாண சபையின் அறிக்கையைத் தொடர்ந்தே ,மக்கள் அந்த நீரை பயன்படுத்தி வருகின்றனர் ) அவர்கள் அவர்களுடைய கிணற்றுத் தண்ணீரைக் குடிக்க முடியுமென்றால் குடிக்கட்டும் ,நான் ஒண்டும் செய்யேலா " என்றார் . எனக்கு கோபம் வந்து விட்டது .மிக அலட்சியமான ,பொறுப்பற்ற பதில் . மக்கள் உங்களுடைய அறிக்கையை பார்த்து அந்த நீரை பயன்படுத்துகின்றனர் , அனால் அதை தடுக்க தன்னால் முடியாது என்பது என்ன மாதிரியான பதில் . பின் அவருடன் உரையாடுவதை நிறுத்தி விட்டேன் , இதற்கு மேல் எந்த அடிப்படையில் அவருடன் கதைப்பது ,

4 - பின்னர் வழங்கல் தொடர்பில் உள்ள குறைகளை நின்றவர்கள் சொன்னார்கள் ,நாங்கள் தண்ணி தருவம் என்றார் முதலமைச்சர் . எழுத்து வடிவில் தந்த 3 சிபாரிசுகளையும் நாங்கள் மறுத்து விட்டோம் . இந்த பிரச்சினை தொடர்பாக முழுமையான அறிதல் இல்லாத ஒரு முதலமைச்சரின் வாய் மொழியை எப்படி நம்புவது . இடையிடேயே சிவாஜிலிங்கம் அவர்கள் ,தண்ணியக் குடிக்க வேண்டாம் எண்டு தான் ஐயா சொல்லுறார் என்று மொழிபெயர்த்துக் கொண்டு ,நின்றார் ,அவரைப் பேச விடுங்கள் ,நீங்கள் பேசவேண்டாம் என்று சிவாஜிலிங்கத்தை தடுத்தார்கள் . மற்றைய விடயங்கள் சாதரணமான அரசியல் சமாளிப்புகள்

5 - கொஞ்ச நேரம் தள்ளி நின்று உரையாடிய முதலமைச்சர் சில வைத்தியர்களை பேச அழைத்து வந்தார் ,அவர்களை முழுமையாக மறுத்து விட்டோம் .முதலமைச்சரின் வார்த்தைகளை மட்டுமே நாங்கள் கேட்க விரும்புகிறோம் என்றோம் .

7 - அதன் பின்னர் , இந்த பிரச்சினை பற்றி அடியும் நுனியும் தெரியாத முதலமைச்சரை பார்த்து " உங்களுடைய கதையை நம்பேல்ல .எழுத்து வடிவத்தில தாங்கோ " என்று நான் சொன்னேன் ,உடனடியாக அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர் .

மேலும் இரண்டு தடவைகள் டெனீஸ்வரனும் சிவாஜிலிங்கமும் திருத்தப்பட்ட கடிதங்களுடன் வந்து எங்களுடன் நிலத்தில் இருந்து உரையாடல்களை நிகழ்த்தினார்கள் .அதன் போது பல்வேறு விளக்கங்களை நாம் வழங்கினோம் .ஆனால் அவர்களால் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை .இருந்தாலும் ,அக்கறையுடன் நடந்து கொண்டார்கள் .

பின்னர் ,இரவு நல்லூர் முன்றலிலேயே தொடர்ந்தது ,30 வரையான வைத்தியர்கள் மற்றும் இளையவர்கள் எங்களுடன் நின்றிருந்தனர் . காலையில் 10 மணிக்கு வருவதாக சொல்லி முதலமைச்சர் சென்றிருந்தார் , என்ன நம்பிக்கையில் ? அல்லது இதை பற்றி என்ன நினைகிறீர்கள் ஒரு இரவு ஒரு பகல் 43 பாகையில் வெப்பம் கொதிக்கும் நாளில் நீரின்றி 24 மணி நேரங்கள் கடந்தால் கிட்னியில் பிரச்சினை வரும் ,அதையும் வைத்தியர்கள் எங்களுக்கு அறிவித்திருந்தார்கள் . நான் ,ஆதி , நெல்சன் , லனுஜன் ஆகியோர் செலைன் ஏற்ற மறுத்து எமது போராட்டத்தை தொடர்ந்திருந்தோம் , அந்த அம்மாவுக்கு காலையில் பேரணி ,அதன் போதும் அவர் கத்தியபடி சென்றதில் சோர்ந்திருந்தார் , மற்றவர்கள் அனைவருக்கும் செலைன் 2 தடவைகள் ஏற்றப் பட்டிருந்தது , நள்ளிரவில் அந்த அம்மாவும் ,இன்னொரு நண்பரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்டனர் ....

தொடரும்

கிரிஷாந்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11149408_10152892378292992_8430790357189

 

 

கனடா- ரொறொன்ரோவின் புதிய பொலிஸ் மா அதிபராக மார்க் சான்டர்ஸ் நியமனம் பெறுகின்றார். இந்த தலைமை பதவியை பெறும் முதல் கறுப்பு இனத்தவர் சான்டர்ஸ் ஆவார். தற்போதைய தலைமை அதிகாரி பில் பிளயர் வெளியேறியதும் சான்டர்ஸ் ரொறொன்ரோ பொலிஸ் தலைமை கடிவாளத்தை தனது கையில் பெறுவார். இந்த பதவி நியமனத்திற்கான அறிவிப்பு திங்கள்கிழமை காலை 10-மணியளவில் செய்தியாளர் மகாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த பதிவிக்கு தற்போதைய பிரதி தலைமை அதிகாரி பீட்டர் ஸ்லோலியை சான்டர்ஸ் வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

32-வருடங்களாக பொலிஸ் சேவையில் இருந்தவர் சான்டர்ஸ். 2012-ல் பிரதி தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 175-மில்லியன் டொலர்கள் வரவு செலவுத்திட்டம், 1,200 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 164 பொதுமக்கள் உறுப்பினர்கள் கொண்ட சிறப்பு செயற்பாடுகள் கட்டளையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய பொலிஸ் தலைமை அதிகாரியான பிளயர் இந்த வார இறுதியில் இளைப்பாறுகின்றார்.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Good Morning ......

 

905982_707688906053034_38376240073386932

The Great Wall Of China 

 

15572_707688936053031_167742423004992398

The Great Wall Of China 

 

11150144_707688756053049_569295324991212

The Great Wall Of China

 

11174320_707688779386380_851889953382296

The Great Wall Of China

 

10849092_707688846053040_872120776604113

1523033_707688802719711_4717169027868720

1836868_707688962719695_3442992066688494

11174237_707688782719713_160408868116696

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட்சய திருதியை!!

மகாபாரதத்தில் திரௌபதி சூரிய பகவானை வேண்டிப் பெற்ற அட்சய பாத்திரத்தால் அள்ள அள்ளக் குறையாத அன்னத்தைத் தானம் செய்து புண்ணியம் பெற்றார் என்று கூறப்படுகிறது.

ஒருமுறை கிருஷ்ண பரமாத்மா திரௌபதியைக் காண பசியோடு வந்தார். அந்நேரம் அட்சய பாத்திரம், கழுவிக் கவிழ்க்கப்பட்டிருந்தது., அதில் ஒட்டியிருந்த ஒரு கீரையை மட்டும் கண்டு விஷ்ணுவைப் பிரார்த்திக்க, மீண்டும் அன்னம் பெருகி, அதை கிருஷ்ணருக்குப் பரிமாறிப் பசியாற்றியதோடு அதிதி தேவோபவ எனும் உயர்ந்த அறமான விருந்தோம்பலும்நிறைவேற்றப் பெற்ற புனித நாளே அட்சய திருதியை என்பது புராண கதை.

அப்படிப்பட்ட அட்சய திருதியில் இறைவனை மனதார எதை வேண்டினாலும் அது பன்மடங்கு பெருகும். ஆகவே அவரவர் தகுதிக்கும் பொருளாதார சூழலுக்கும் ஏற்ப அது உணவு தானியமாகவோ,உடையாகவோ,பொன்னாகவோ,பொருளாகவோ, நிலமாகவோ அமையலாம்.

அட்சயதிருதியில் தங்கதான் வாங்கவேண்டும் என்பதல்ல அர்த்தம் . மேலும் அட்சயதிருதியில் தங்கம் வாங்கினால் பெருகுமா பெருகாதா என்ற விவாதத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இது போன்ற நிர்ப் பந்தங்களால் பொருளாதாரக் குறைவு உள்ள பெண்கள், தங்கள் வீட்டின் மன மகிழ்வை இழக்கக்கூடாது.

ஒட்டுமொத்தமாக பார்க்கப்போனால் அட்சய திருதியால் ஆதாயம் என்பது நகை வணிகர்களுக்கே. - விகடன் -

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.