Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை என்பது அழகல்ல..,நிறம்...!

ஆங்கிலம் என்பது அறிவல்ல..,மொழி..!

Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்(Do not expect anything to anyone)

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான்.

எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.எதிர் பார்த்தால் ஏமாற்றத்தையும் சேர்த்தே எதிர் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உங்கள் பதிவுகளை ஆவலுடன் வாசிப்பவர்களில் நானும் ஒருவன்!

 

தொடருங்கள்... யாயினி!

 

 

உங்களுடன்,அவ்வப்போது இந்தப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்து செல்லும் அனைத்து உறவுகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் ஆழமாக நேசிக்காதே ....

துன்பப்படுவாய்...!!

எதையும் ஆழமாக யோசிக்காதே....

குழம்பி விடுவாய்..!!

எதையும் எங்கும் யாசிக்காதே...

அவமானப் படுவாய்..!!

 

100 க்கு 100% உண்மை யாயினி.

உங்களது, பல்சுவைப் பக்கம்,

வலு... சுவராசியமாக, இருக்கிறது.

இதனை... தேடி எடுப்பதற்கும், பொறுமை வேண்டும்.

அது  உங்களிடம்,  நிறையவே.... உள்ளது. பாராட்டுக்கள். :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய உறவுகளுக்கு ஞாயிறு காலை வணக்கங்களும் மற்றும் அனைவருக்கும் இனிய நாளாகவும் அமைய வாழ்த்துக்கள்!

 

208332_202023166498173_4497174_n.jpg?oh=

198679_239113449455811_6657083_n.jpg?oh=

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1868 இல் ஆபிரிக்க தேசங்களில் இருந்து அடிமைகளாகக் கூடிவரப்பட்ட பணியாளர்களினால் கட்டப்பட்ட லண்டன் King's Cross St. Pancras ரயில் ஸ்டேஷன் 2007 ம் ஆண்டு மீள் புனர் நிர்மாணத்துடன் சர்வதேச ரயில் பயணத்திற்காக திறக்கப்பட்டது... பணியில் ஈடுபட்ட பணியாளர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் சிற்பமே இது..சில விடையங்கள்,படங்கள் நட்புக்களிடமிருந்து பகிர்ந்து கொள்வது.

 

10686916_336359593211594_477828655790945

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி என்பது பகுத்தறிவை வளர்ப்பதற்காகத் தான்

மனித நேயத்தைத் தொலைப்பதற்காக அல்ல...

 

 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் விட்டால் திரும்ப பெற முடியாதவை..

உயிரும்,நேரமும்,சொற்களும்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தானாக உயரும் வயது

விடாமல் துரத்தும் காலம்

தடுக்க முடியாத நேரம்

கடக்கத் துடிக்கம் இளமை

காலைத் தடுக்கும் சமுகம்

தொட வேண்டிய இலக்கு

இத்தனை போராட்டம் தான்

வாழ்க்கை..!!!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கினிலே இனிமை வேண்டும்...!

 

கடும் அலை மோதலிலும் -- அசையாது

கரும் பாறை.

 

மண் உரசி நடக்கையிலும் -- நசுங்காது

மயில் தோகை.

 

சுடும் கோடை வெய்யிலிலும் -- கருகாது

நெடு ம‌ர‌ம்.

 

விழும் ப‌னி வேளையிலும் -- சுருங்காது

மலர் கூட்டம்.

 

சீறும் காற்றின் வேகத்திலும் -- க‌லையாது

குருவிக் கூடு.

 

சிந்தும் மழை நீரிலும் -- சிதையாது

சிலந்தி வலை.

 

ஆனால் ...

சொல் ஒரு சொல்லில்

சிதைந்திடும் ந‌ம் ம‌ன‌ம் !

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெருவில் கிடக்கும் காகிதமாய் யாரையும் நினைக்காதே நாளை அது பட்டமாக பறந்தால் நீ கூட சற்று நிமிர்ந்து பார்ப்பாய்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரத்தின் ஐந்து சபைகள்.

 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பஞ்ச சபைகள் உள்ளன.அவை முறையே

சிற்றம்பலம்,பொன்னம்பலம்,பேரம்பலம்,நிருத்தசபை,ராஜசபை என்று அளைக்கப்படுகிறது.

 

சிற்றம்பலம்:நடராஜர் ஆடுகின்ற இடமான சித்சபையை சிற்றம்பலம் என்பர்.இங்கு நடராஜர் ஆடும் நடனத்தை, அவரது தேவி சிவகாமி எப்போதும் கண்டு மகிழ்கிறாள். இதற்கு "தப்ர சபா" என்றும் பெயர் உண்டு. இச்சபைக்கு இரண்யவர்மன் என்னும் மன்னன் பொன் வேய்தான்.

 

இதில் உள்ள படிகளை "பஞ்சாட்சரப்படிகள்" (நமசிவாய படிகள்)என்பர்.

 

பொன்னம்பலம்: சிற்றம்பலத்திற்கு முன் உள்ளது பொன்னம்பலம் என்னும் கனகசபை. இங்கு தான் நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும்.இவ்விடத்தில் ஸ்படிகலிங்கத்திற்கு ஆறுகால பூஜையும்,ரத்தினசபாபதிக்கு அபிஷேகமும் நடக்கிறது.

 

பேரம்பலம்:பேரம்பலத்திற்கு தேவசபை என்று பெயருண்டு. வினாயகர், முருகன், நடராஜர், சிவகாமி,சண்டிகேஸ்வரர் என்னும் பஞ்சமூர்த்திகளும் எழுந்தருள்வர்.இச்சபைக்கு பொன் வேய்ந்தவன் மூன்றாம் குலோத்துங்கன்.

 

நிருத்தசபை:நிருத்தசபை நடராஜருக்குரிய கொடிமரத்தின் தெற்கே உள்ளது.இங்கு அவர் ஊர்த்துவதாண்டவ கோலத்தில் காட்சியளிக்கிறார்.

 

ராஜசபை: இங்குள்ள ஆயிரங்கால் மண்டபமே ராசசபை,ஆனி,மார்கழியில் நடக்கும் விழாவில் தேரில் பவனி வரும் நடராஜர்,ராசசபைக்கு எழுந்தருள்வது வளக்கம்.ஆருத்ராதரிசனம் இங்கு தான் நடக்கும்.சிவகாமியம்மன் முன்னால்,நடராஜர் முன்னும் பின்னும் நடனமாடி தரிசனம் தருவார். இதற்கு "அனுக்கிரக தரிசனம்" என்று அளைப்பர்.

 

404424_330551510312004_481254488_n.jpg?o

 

 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிஸில் வாழும் தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை மற்றும் இணைய வெளி உறவுகளும் ஒன்றிணைந்து  முகடு' என்னும் சஞ்சிகையை வெளியீட்டு வைத்துள்ளனர்.. முகடு இன்று தனது  முதலாவது ஓலையை எடுத்து வைத்திருக்கிறது.

 

 

10603950_921956157833353_831779779119302

 

முகடு பல்லாண்டு நிலைத்து நிற்க நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமையான திங்கள் காலை  வணக்கங்கள்..என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்

உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு.!

 

393867_314892505211238_1788503363_n.jpg?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நன்றி தெரிவித்தல் நாள் அனைத்து உறவுகளுக்கும் நன்றி தெரிவித்தல் நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..

 

10671286_843359015697915_728983409749659

 

Saying grace before carving a turkey at Thanksgiving dinner, Pennsylvania, U.S., 1942

 

Thanksgiving_grace_1942.jpg

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்பர்களின் வார்த்தைகள் உங்கள்

மனதில் பதிவாவதற்கு இடமளிக்காதீர்கள்;

குறை கூறுவதற்காகவே சிலர்

பிறவி எடுத்திருக்கிறார்கள்;

அதைப்பற்றிக் கவலைப்படாமல்

முன்னேறிக் கொண்டே இருங்கள்...!

 

முள்ளும் ஒரு நாள் மலராகும்

விமர்சனம் கூட விருதாகும்!!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தெரிவித்தல் நாள் இப்படித் தான் ஆரம்பித்தது..

 

அடுத்து திருவிழாக் காலம் தொடங்கி விட்டது. இந்த திருவிழா அமெரிக்காவிலும், கனடாவிலும் முக்கியமாக கொண்டாடப் படுகிறது. எல்லோருக்கும் நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும். ஆரம்பத்தில் இது கிருத்துவ மதத்தின்பேரில் கொண்டாடினாலும் இப்பொழுது மதங்களுக்கு அப்பாற்பட்டு இந்த திருவிழா நடக்கிறது. இந்த நன்றி தெரிவித்தல் நாள் கிட்டத்தட்ட "பொங்கல்" மற்றும் "உழவர்" திருநாளைப் போலவே அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாலாவது வியாழக் கிழமையிலும், கனடாவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட் கிழமையிலும் நடைபெறும்.

தோற்றம்

சுமார் 400 வருடங்களுக்கு முன்னால் இந்த திருவிழா ஆரம்பித்ததாக வரலாறு கூறுகிறது. 1620 இல் ஒரு கப்பல் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை இங்கிலாந்திலிருந்து அட்லான்டிக் கடல் மார்க்கமாக ஒரு புனிதப்பயணம் மேற்கொண்டது. அவர்கள் அமெரிக்காவில் மசாசூட் என்ற மாகாணத்தில் வந்து இறங்கினார்கள். அவர்கள் வந்து இறங்கிய நேரம் கடுமையான குளிர் மற்றும் பனியினால் அவதிப்பட்டார்கள். அந்த நேரம் அவர்களால் எதையும் பயிரிட்டு உண்ண முடியாமல் பசியால் வாடினார்கள். கடுமையான நோய்களும் அவர்களைத் தாக்கியது. அதில் சிலர் இறந்தும் போனார்கள். அந்த நேரம் அங்குள்ள சிவப்பிந்தியர்கள்(Red Indians) அவர்களுக்கு உணவு கொடுத்து, அந்த பரிச்சயம் இல்லாத மண்ணில் எப்படி பயிர்களை விளைவிப்பது என்பதையும், மீன் பிடிக்கவும் கற்றுக் கொடுத்தார்கள். 1621 ம் வருடம் அந்த மண்ணில் சோளக்கருது, பீன்ஸ், பார்லி மற்றும் பூசணிக்காய் போன்றவற்றை விளைவித்து அறுவடை செய்தார்கள்.

தக்க சமயத்தில் தங்களைக் காப்பாற்றியதற்காகவும், உணவுகொடுத்து ஆதரித்தமைக்காகவும் நன்றி செலுத்தும் விதமாக அமெரிக்கர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தார்கள். அந்த விருந்தில் வான்கோழி முக்கிய உணவாகப் பரிமாறப்பட்டது. விருந்து முடிந்ததும் சில விளையாட்டுக்களையும் அமெரிக்கர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். இதைத் தான் இன்றுவரை நன்றி தெரிவித்தல் நாளாக அமெரிக்கர்கள் கொண்டாடுகிறார்கள்.

அதிலிருந்து அமெரிக்கா வந்த காலனிக்காரர்கள் ஒவ்வருவருடமும் அறுவடை முடிந்ததும் நன்றி தெரிவிக்கும் நாளை விருந்துடன் கொண்டாட ஆரம்பித்தார்கள். அமெரிக்கா தனிநாடாக அறிவிக்கப் பட்டதும், காங்கிரஸ் கூட்டத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து அதை நன்றி தெரிவித்தல் நாளாகவும், விடுமுறை நாளாகவும் அறிவித்தார்கள். ஜார்ஜ் வாஷிங்டன் நவம்பர் 26ம் தேதியை தேங்ஸ்கிவ்விங் டே என்று திட்டவட்டமாக அறிவித்தார். 1863ம் ஆண்டு ஆப்ரகாம் லிங்கன் நவம்பர் நாலாவது வியாழக் கிழமையை தேங்ஸ்கிவ்விங் டே என்று மாற்றினார். அதிலிருந்து நவம்பர் நாலாவது வியாழக் கிழமையை இன்றுவரை அமெரிக்கர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

வழக்கம்

நன்றி தெரிவித்தல் நாளை அதே கலாச்சாரத்துடன் பழமை மாறாமல் ஒவ்வருவருடமும் வழக்கமாக கொண்டாடி வருகிறார்கள்.பெற்றோரை விட்டு வெகு தூரத்தில் இருப்பவர்கள், உறவினரைப் பிரிந்தவர்கள் எல்லோரும் அந்த குடும்பத்தில் மூத்தவர் வீட்டில் அன்று கூடுவார்கள்.அன்று ஒருவருக்கொருவர் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வர். ஏழைகள் மற்றும் வீடு இல்லாதவர்களை தொண்டு நிறுவனங்கள் உணவு, உடை கொடுத்து பரிசுப் பொருட்களையும் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது வழக்கம்.

விருந்து

வியாழன் அன்று இரவு நன்றி தெரிவித்தல் நாள் விருந்து நடைபெறும். அன்று முக்கிய உணவாக வான்கோழி(Turkey), மக்காச்சோளம்(Corn), பூசணிக்காய் மற்றும் கிரேன்பெர்ரி(Cranberry) வகைப் பழங்கள் இருக்கும். வான்கோழியில் சில மசாலாக்களை வைத்து அடுப்பில் நீண்ட நேரம் அதை வறுத்து சுடச்சுட பரிமாறப்படும். கிரேன்பெர்ரியில் சில நோய்களைத் தீர்க்கும் மருந்து இருப்பதால் அதை பழமாகவோ, ஜூஸாகவோ பரிமாறப்படும்.

நன்றி தெரிவித்தல் நாளுக்கு அடுத்த நாள் வருவது பிளாக் ஃபிரைடே. இந்த நாளுக்காக வருடம் முழுவதும் காத்திருப்பவர்கள் உண்டு. இன்றிலிருந்து ஆரம்பித்து கிறிஸ்துமஸுக்கு முந்தின நாள் வரை பரிசு வாங்கும் படலம் தொடரும். இந்தப் பரிசு வாங்கும் காலத்தில்தான் அமெரிக்க சில்லறை வியாபார சங்கிலித் தொடர் கடைகளும் வணிக நிறுவனங்களும் அந்த வருடத்திய லாபத்தில் நாற்பது சதவிகிதத்தைச் சம்பாதிக்கின்றனவாம். அந்த லாபத்தில் பதினைந்து சதவிகிதத்தை இந்த வெள்ளிக் கிழமையும் அதை அடுத்து வரும் சனி, ஞாயிற்றுக்கிழமையும் சம்பாதிக்கின்றனவாம். கருப்பு வெள்ளிக்கிழமை என்றால் சோகமான வெள்ளிக்கிழமை என்று அர்த்தமல்ல. நஷ்டம் ஏற்பட்டால் வியாபாரிகள் சிவப்பு எழுத்தில் அதைக் குறிப்பிடுவார்களாம். அதனால் லாபத்தைக் குறிப்பிட கருப்பு எழுத்தில் எழுதுவார்களாம். அதீத லாபம் கொடுக்கும் இந்த நாளை கருப்பு வெள்ளி என்கிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத்தொடங்கி வைக்கிறான்... வாசகன் அதனை முடித்து வைக்கிறான்.- சாமுவேல் ஜான்சன்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.