Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிக்கமுடியவில்லை என்பது அறிவுத்திறனின் பிரச்சினை அல்ல. ஒருவரின் இயல்பும் அல்ல. பழக்கம் இல்லாமலாகிவிடுவதுதான் அது. அதை வெல்ல ஒரே வழி தொடர்ச்சியாக வாசிப்பதுதான்.

நாம் வாசிக்கும்போது ஒருவேளை ஆரம்பத்தில் வெறுமே தகவல்களை மட்டுமே கவனிக்கக்கூடிய வாசிப்பை நிகழ்த்தலாம். வெறுமே கதைச்சுவாரசியத்தைமட்டும் வாசித்துச்செல்லலாம். ஆனால் நாம் தொடர்ந்து வாசித்துக்கோண்டே இருந்தோமென்றால் மெல்லமெல்ல நம் அகம் மேலதிக வாசிப்பை நிகழ்த்த ஆரம்பித்திருப்பதைக் காண்போம். நாம் அதை வலிந்து செய்யவேண்டியதில்லை. அதுவே நிகழ ஆரம்பிக்கும்.

- ஜெயமோகன்

 

 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான அன்பிற்கு

ஏமாற்றத் தெரியாது

ஏமாற மட்டுமே

தெரியும்...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கோவில் அதிசயங்கள்..!

அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர்.

ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!

அவைகளில் சில:

1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம். - நடராஜ கோயில்

2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.

3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.

6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை.குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

8. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

9 கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.

10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.

11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர்சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டைதாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன்வடிவம் கொண்டுள்ளார்.

14. தருமபுரி – பாப்பாரப்பட்டி {16கி.மீ} இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் பெண்வடிவில் உள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மத்திய வங்கியால் . புதிய வடிவமைப்பில் மாவட்ட ரீதியாக வெளியிடப்பட்ட .
10 ரூபா குற்றிகள்..சில

இலங்கையின் 25 மாவட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் புதிய 10 ரூபா நாணயக் குற்றிகள் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்தினதும் தனித்துவம் வாய்ந்த பண்புகளையும் முக்கியத்துவம் மிக்க அடையாளங்களையும் அங்கீகரித்து அவற்றினை விபரணப்படுத்தும் பொருட்டு இலங்கை மத்திய வங்கி 10 ரூபா நாணயக்குற்றிகளைக் கொண்ட புதிய தொடரொன்றினை வெளியிட்டுள்ளது.

 

இலங்கையின் 25 மாவட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் புதிய 10 ரூபா நாணயக் குற்றிகள் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்தினதும் தனித்துவம் வாய்ந்த பண்புகளையும் முக்கியத்துவம் மிக்க அடையாளங்களையும் அங்கீகரித்து அவற்றினை விபரணப்படுத்தும் பொருட்டு இலங்கை மத்திய வங்கி 10 ரூபா நாணயக்குற்றிகளைக் கொண்ட புதிய தொடரொன்றினை வெளியிட்டுள்ளது.

 

யாழ்.மாவட்டத்தில் நல்லூர் ஆலய முகப்பையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பாசிக்குடா கடற்கரை மற்றும், பாடும் மீன்களையும், கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்களஞ்சியத்தையும், மன்னார் மாவட்டத்தில் மடுமாதா தேவாலயத்தையும், திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர விகாரை, கோணேஸ்வரம் கோவில், பள்ளிவாசல் ஆகியவற்றையும், முல்லைத்தீவு மாவட்டத்தில், மீன்பிடியையும், வவுனியா மாவட்டத்தில் நெல் மற்றும் மரக்கறி உற்பத்தியையும் குறிக்கும் வகையில் நாணயக் குற்றிகள் அச்சிடப்பட்டுள்ளன.

 

10404497_763279890411396_76214083748608416797_763279880411397_899448773113952193

 

1378619_763279883744730_25241485873136021920549_763279887078063_8713309721438369

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் வாழ்வின் முதல்

நாள் என்று வாழுங்கள்,

இது தான் வாழ்வின்

கடசி நாள் என்று

அன்பு செலுத்துங்கள்...

 

கவிஞர் வைரமுத்துவின் வரிகளிலிருந்து..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தினம் Buffalo வில் ஆறடிக்கும் மேற்பட்ட பனிப் பொழிவு..

 

 

1502244_688067571291359_3423779200192333

 

10647138_688067394624710_290312674183141

 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக குழந்தைகள் நாள் (Universal Children's Day) டிசம்பர் 14 1954  இலிருந்து, ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெவ் அமைப்புகள் ஆண்டு தோறும் நவம்பர் 20 அன்று கொண்டாடுகின்றன. உலகெங்கணும் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்நாள் ஐநா அவையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் குழந்தைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல பொதுநல திட்டங்களை உலகெங்கும் நடாத்துவதற்கும் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

10527710_537705703042158_758593707906918

 

 

பன்னாட்டு குழந்தைகள் நாள் (International Children's Day, ICD) பல நாடுகளில் ஜீன் 1 ம் நாள் கொண்டாடப்படுகிறது. உலக சிறுவர் தினமும் முதியோர் தினமும் இலங்கையில் ஒரே தினத்தில் கொண்டாடப்படுகின்றன.குழந்தைகள் நாள் (Children's Day) உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாளாகவும் சிறப்பு நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான காலை வணக்கங்கள்...அனைவருக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்!!!.இன்று முதல் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்.

 

 

 

 

 

1399554_920632717948754_6863652622155204

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

காலை வணக்கம்..!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலரின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட மாவீரர்கள் பற்றிய சிறப்பு தொகுப்பை கீழ் இணைக்கப்பட்டுள்ள பகுக்கு சென்று பார்வையிடலாம்.

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/148506-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2014-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை நான் இல்லை எனினும் என் நினைவுகள் இருந்தால் சரி ..அது போதும் ....

என வித்தாக்கிப்போன வீர மறவர்களின் கல்லறைகளை தட்டி எழுப்பும் பிஞ்சு.

 

10433212_355633507950869_737985704276102

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கும் அனைத்து இதயங்களையும் கண்ணீர் வர வைக்கும் காட்சி இது. :(

250341_806545839384109_90496912044472163

 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

33698_446165676550_218441_n.jpg?oh=fd8d2

535948_756146771127315_14161927899957918

யாழ்ப்பாணம்.மாவீரர் தின பதாகை..

 

10653504_744309085661843_204552343861845

10648986_744307775661974_731310074989038

 

 

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் அன்று.2003

 

1553472_744305908995494_5423001809514863

10680078_744305578995527_427459452265544

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் நுழைவாயில்......

 

10423824_744305412328877_282302126697988

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் அன்று ஒரு பொழுதில் இப்படித் தான் மாவீரர் தினம் அனுஷ்டிக்கபட்டது...

 

10694286_10203865046399122_3029873734866

 

Kalarai-12-600x450.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10157249_505714812904871_257588023993467

 

இந்தப் புகைப்படத்தில் இடது புறம்

இருப்பது யாரென்று எவரிடமாவது கேட்டால்,

மாவீரன் என்ற சொல்லுக்கு சரியான உதாரணம்,

வீரம் என்ற சொல்லுக்கு புது அர்த்தம படைத்தவன்

என்று சொல்வர்...

அதே வலது புறம்

இருப்பது யாரென்று கேட்டால் எவரிடமும்

பதில் இருக்காது...

காரணம் இவன் தமிழன்... உலகம் கொண்டாட மறந்த

மாவீரர்களுள் முதன்மையானவன் இவன்...

300 # spartans படம் கிரேக்க

புராணங்களை தழுவி எடுக்கப்பட்டது... அதில்

கூறப்பட்டிருக்கும் வீரம் மட்டும் அல்ல, உலகில்

படைக்கப்பட்ட வீர காவியங்கள் அனைத்தையும் நம்

சமகாலத்தில் நடத்திக் காட்டியவன் தான் இவன் ...

சமதளங்களின் சமரன் என்று அழைக்கப்பட்ட

ப்ரிகடியர் பால்ராஜ்...

# போர் உச்சத்திலிருந்த காலத்தில், இலங்கைத்

ராணுவத் தளபதி ராணுவ மந்திரியிடம்

பால்ராஜைப் பற்றி இப்படியாய்க் கூறுகிறார்...

"நீங்கள் கொடுத்த 45000

ராணுவத்தினரை வைத்து பிரபாகரன்

வந்து இருந்தால் கூட

எதிர்கொண்டு விடுவோம்... ஆனால்

அங்கே நிற்பது பால்ராஜ்... நம் ஒட்டுமொத்த

ராணுவத்தையே கொண்டு வந்து நிறுத்தினாலும்

அவனை வெல்ல முடியாது..."

வெறும் 1200 புலிகளை வைத்துக்

கொண்டு உள்ளும் வெளியுமாய் 45000 சிங்கள

ராணுவ வீரர்களை எதிர்கொண்டான்... அதுவும்

ஒரு நாள், இரண்டு நாள் அல்ல 34 நாட்கள்... ஆம்

புலிகள் ஆனையிறவை மீட்பதற்காய் களமாடிக்

கொண்டிருக்கையில், பால்ராஜ் தலைமையில்

1200 புலிகள் காடுகளும், மரங்களும் அற்ற

சமவெளியில், கடல் வழியாய் களமிறக்கப் பட்டனர்...

எந்த வித உதவியும் இல்லை. உணவு, குடிநீர்,

மருத்துவம் என எதற்கும், எங்கும் செல்ல

முடியாது... அவர்களை தரைப்படை, கடற்படை,

வான்படை என 45000 ராணுவத்தினர்

சுற்றிவளைத்து தாக்கியும் 'வதிரையன்

பாக்ஸ்' என்ற தாக்குதல்

உத்தியை கையாண்டு அத்துனை ராணுவத்தினரையும

் தலைதெறிக்க ஓடவைத்தவன்...

# இவன் கையாண்ட 'வதிரையன் பாக்ஸ்' மற்றும்

அவன் இருந்த ராணுவச் சூழல்கள் இன்றும்

உலகெங்கிலும் உள்ள ராணுவக் கல்லூரிகளில்

முக்கியப் பாடமாய் உள்ளது...

# புலிகளின் பிரதிநிதி, அமெரிக்க ராணுவக்

கல்லூரிக்குச் ஒரு முறை சென்றிருக்கையில்,

அங்கு பயின்ற மாணவர்கள் வியந்துப்

பாரட்டியது பால்ராஜையும், அவன் கையாண்ட

வதிரையன் பாக்ஸ் யுக்தியையும் தான்...

# யுத்த நிறுத்த காலத்தில் ஒரு முறை,

பால்ராஜ் கொழும்பு விமான நிலையம்

சென்றிருக்கையில் அவனை சூழ்ந்த ராணுவத்

தளபதிகள் ராணுவ உடையுடன்

வந்து அவனுக்கு மரியாதை செலுத்தி,

அவனிடம் கூறியது,

"நாங்கள் நூற்றுக் கணக்கான தளபதிகள்

போரை வழிநடத்திக் கொண்டிருக்கையில்,

எங்களுக்கு எதிராய் ஒரே ஒருவன்

களமிறக்கப்பட்டு நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம்.

அவனை எங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும்

காணவேண்டும் என்று விரும்பினோம்... எங்கள்

அனைவரின் கனவு நாயகன் நீங்கள்..."

இப்படியாய் இவன் விட்டுச் சென்ற சரித்திர

முக்கியத்துவம் வாய்ந்த அடையாளங்கள்

ஏராளம்...

எதிரிகளின் சிம்மசொப்பனமாய் திகழ்ந்த இந்த

மாவீரன், மாரடைப்பால் 2008 ஆம்

ஆண்டு இதே நாளில் இயற்கையால்

நம்மிடமிருந்து பறிக்கபட்டான்...

தமிழீழ மக்கள் மட்டுமல்ல, தலைவர்

பிரபாகரனே ஆசைப்பட்டது, இவன் களத்தில்

விளையாடியதை திரையில் காணவேண்டும்

என்று.....

இங்கு, காசுக்காய் அரை நிர்வாணமாய் வந்த

நடிகைகளின் வாழ்கையை எல்லாம் திரையில்

காண்பிக்க ஆட்கள் இருகிறார்கள்...

ஆனால் இனம் காத்த குல

தெய்வங்களை பற்றி பேசக்கூட ஒருவரும்

இல்லை...

நாமாவது, இந்த நாளில் உலகம் கொண்டாட மறந்த

இந்த மாவீரனை மறவாது நினைப்போம்... நம்

பிள்ளைகளுக்கும் இவன் போன்ற மாவீரர்களின்

வாழ்கையை எடுத்துக் கூறுவோம்...

'தமிழர்களின் தாகம் தமிழ்தேசத் தாயகம்'

நான் வாசித்த நேசித்த உண்மை.

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.