Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் நீண்ட வார விடுமுறை நாள் வாழ்த்துக்கள்..

 

 

good-friday.gif

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11080886_10153258029009553_3846450157281

யாழ் கள உறவுகளுஉயிர்த்த ஞாயிறு நல் வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமலினி செல்வராஜன் காலமானார்....இலங்கைத் தமிழ் நாடக, திரைப்பட நடிகையும், வானொலி, தொலைக்காட்சி ஒலி,ஒளிபரப்பாளரும் ஆவார். இவர் கவிஞர் சில்லையூர் செல்வராசனின் துணைவியார். 

 

கமலினி இலக்கியவாதியும், எழுத்தாளருமான தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை, வயலின் கலைஞர் தனபாக்கியம் ஆகியோருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். கொள்ளுப்பிட்டி சென். அந்தனிஸ் பாடசாலையில் பாலர் வகுப்பில் இணைந்து, பின்னர் பம்பலப்பிட்டி சென். கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்றார். களனிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பெற்றார். தந்தை மு. கணபதிப்பிள்ளை இலங்கை வானொலியில் இலக்கியப் பங்களிப்பு வழங்கியபோது அவரது நண்பராக இருந்த கவிஞர் சில்லையூர் செல்வராசனைக் காதலித்துத் திருமணம் புரிந்து கொண்டார்.

 
சில்லையூர் செல்வராசன் எழுதிய 'தணியாத தாகம்' வானொலித் தொடர் நாடகத்தில், குடும்பத்தின் இளைய மகளாக 'கமலி' பாத்திரத்தில் இவர் நடித்தார். இலங்கை வானொலியில் 'கலைக்கோலம்' முதலான சஞ்சிகை நிகழ்ச்சிகள் பலவற்றை தயாரித்து வழங்கியிருக்கிறார்.
 
ரூபவாகினியில் ஒளிபரப்பான அருணா செல்லத்துரையின் நெறியாள்கையில், கே. எஸ். பாலச்சந்திரன் எழுதிய 'திருப்பங்கள்', எஸ். ராம்தாசின் 'எதிர்பாராதது', எஸ். எஸ். கணேசபிள்ளை எழுதிய 'சமூக சேவகி' போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். ரூபவாகினியிலும், ஐ.ரி. என் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி வந்தார்.
 
லங்கையில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற கோமாளிகள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆதர கதாவ என்ற சிங்களத் திரைப்படத்தில் தமிழ்ப் பெண்மணியாக கதாபாத்திரமேற்று நடித்திருந்தார் கமலினி செல்வராஜன்.
 
நாட்டுக்கூத்துக்கு வழங்கிய பங்களிப்புக்காக கலாசார அமைச்சின் விருது (1995)
கொழும்பு றோயல் கல்லூரி நாடகத் துறைக்காக ஆற்றிய பங்களிப்புக்காக கொழும்பு றோயல் கல்லூரியின் விருது (2008)
நோர்வே கலை மன்றம் நாட்டுக்கூத்து பாரம்பரியத்தை பேணி வளர்ப்பதில் காட்டிய ஆர்வத்திற்கான கெளரவ விருது (2010)
35 ஆண்டு கலைச் சேவையைப் பாராட்டி கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில் இளைஞர் நற்பணி மன்றம் விருது வழங்கி கெளரவித்தது.
 
1995 ஆம் ஆண்டில் கணவர் செல்வராசனின் இறப்பை அடுத்து இவர் கொழும்பில் தனது மகன் அதிசயனுடன் வசித்து வந்த கமலினி, கடுமையான சுகயீனமுற்றிருந்த நிலையில் 2015 ஏப்ரல் 7 அன்று கொழும்பில் காலமானார்
 
 
 
 

 

 

 

11138175_10153176003060349_325238316537510418968_1574142276197231_79202913900221  11036027_1574142302863895_45464546153651 10425495_1574142419530550_53296686261481 11102746_1574142582863867_6937119631621910676231_1574142496197209_3827673667807611011670_1574142409530551_2662226001007211041780_1574142382863887_7649450965190811091232_1574142349530557_5963554242530811150552_1574142439530548_5579078793600011150510_1574142386197220_6989058114729010525902_1574142489530543_6312056033687311136727_1574142486197210_31237388427557

 

 

11150208_1620124918225003_48416514232697

 

 

 

11130386_456283571190758_741083106892600

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சார்லி சாப்ளின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும்

ரகசியம்

..............................................................................................

 

11112581_571832449626440_786720931345889

ஒரு முறை ஒரு இளைஞன் மன இறுக்கத்தால் தவித்து வந்தான். காரணம் புரியாத சோகம் அவனை ஆட்டுவித்து வந்தது. எனவே அந்த ஊரில்

உள்ள பிரபல மனநல மருத்துவரிடம் சென்றான்.“ஐயா காரணம் என்ன என்று தெரியவில்லை. மனம் ஒரு இனம் புரியாத சோகத்தில் இருக்கிறது.

மன இறுக்கத்தால் சரியாக உறங்கக் கூட முடியாது தவிக்கிறேன். நீங்கள் தான் தகுந்த ட்ரீட்மென்ட் தரவேண்டும்!” என்றான்.அவனை பரிசோதித்த மருத்துவர்….“உங்கள் உடலில் எந்த கோளாறும் இல்லை. மனம் தான் சோகத்தின் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. வாய் விட்டு சிரித்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன இறுக்கம் அகன்றுவிடும்.நம் நகரத்தின் மையத்தில் உள்ள மைதானத்தில் புகழ் பெற்ற நிறுவனம் ஒன்றின் சர்க்கஸ் நடந்துவருகிறது. அதற்கு செல்லுங்கள்.அந்த சர்கஸ்ஸில் கோமாளி ஒருவனின் வேடிக்கைகள் இடம்பெறுகின்றன.

 

அவன் செயல்கள் பார்க்க ரொம்ப வேடிக்கையாக இருக்கும்.அதை பாருங்கள். வாய்விட்டு சிரிப்பீர்கள். உங்கள்மனம் லேசாகிவிடும். உங்கள் மன இறுக்கம் போயே போய்விடும்” என்றார் மருத்துவர்.அதற்கு பதிலளித்த அந்த இளைஞன் :“சார்… அது முடியாத ஒன்று. காரணம் அந்த கோமாளி வேறு யாருமல்ல நான் தான்!” என்றானாம்.சார்லி சாப்ளின் வாழ்வில் நடைபெற்ற உண்மையான நிகழ்ச்சி இது.நம்மை சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் வாழ்க்கை நிஜத்தில் துன்பமயமானது. 1945 ல்அவர் ஒரு தீவிரவாதி என்று அவர் மீதுகுற்றச்சாட்டுக்களை (அடப்பாவிகளா) கூறி வழக்குகளை பதிவு செய்தது அமெரிக்க அரசு.பல ஆண்டு போராட்டங்களுக்கிடையே தன் தரப்பு நியாயங்களை விளக்க வழி தெரியாமல்

இறுதியில் சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் புகுந்தார் சார்லி சாப்ளின்.காலச்சக்கரம் சுழன்றது. 1972 ல் அதே அமெரிக்கா“உலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்”விருதை பெற அவரை தன் நாட்டுக்கு அழைத்தது.பரிசினை ஏற்றுக்கொண்டால்லும்அமெரிக்காவில் தங்க விருப்பம் இன்றி மீண்டும்சுவிட்சர்லாந்துக்கே திரும்பினார் சாப்ளின்.விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சூழ்ந்து நின்று, ‘‘வாழ்நாள் முழுவதும் போர்க்களமாக

இருந்தாலும் எப்படி ஜெயித்தீர்கள்? அது என்ன ரகசியம்?’’ எனக் கேட்டார்கள்.சாப்ளின் சிரித்தார்…‘‘இந்த நிலை மாறிவிடும் என்பதை நான்

எப்போதும் மறந்ததில்லை.

 

அது இன்பமாகஇருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி…மாறிவிடும்! இதோ இந்தக் கணம் கூட!’’ என்றார்.

தனிப்பட்ட கஷ்டங்கள், ஏமாற்றங்கள், ஏற்றத்தாழ்வுகள், குடும்பப் பிரச்னை – இவைஎல்லாருக்கும் பொதுவான ஒன்று. மிகப்பெரும்v சாதனையாளர்கள் கூட இவற்றில் சிக்காமல் தப்பியதில்லை. அப்படி எவரையும் இதுவரை நான் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதுமில்லை. என்ன மேற்படி கஷ்டங்களை அவர்கள் அணுகும்விதத்தில் தான் அவர்கள் நம்மிடமிருந்து வேறுபடுகிறார்கள்.இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில். (குறள் 621)என்ற திருக்குறளை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு ஏழ்மையான குடும்ப பின்னணியில்பிறந்தாலும் சோகமயமான வாழ்க்கையை வாழ்க்கையுடன் வளர்ந்து வந்தாலும்‘நகைச்சுவை’ எனும் ஆயுதத்தை கொண்டு லட்சக்கணக்கானோரின் சோகங்களைவிரட்டியடித்தவர் சார்லி சாப்ளின்.குடும்ப பின்னனி சரியாக அமையாவிட்டாலும்கூட வானத்தை வசப்படுத்தலாம் என்பதைஉலகிற்கு உணர்த்தி வாழ்ந்து காட்டியவர்.அவரை போன்றே நமது குடும்ப பின்னணி எதுவாக இருந்தாலும் நாம் சந்திக்கும் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் – மனம் தளராமலும் விடாமுயற்சியோடும் கடுமையாக உழைத்தால் – எந்தசாதனையும் சாத்தியமேஎன்பதுதான் சார்லி சாப்ளின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் ரகசியம்.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தகத்தைக் காப்பதுதெப்படி? இன்று படித்ததில் பிடித்தது.

 

புத்தகத்தை அதிகமாகப் பிரிக்காதீர்கள்.

பிரித்தபடியே கவிழ்த்து வைக்காதீர்கள்.

மூலைகளை மடிக்காதீர்கள்.

தலையணையாக வைத்துக் கொள்ளாதீர்கள்...

தூக்கம் வரும்போது எடுத்து வைத்து விட மறவாதீர்கள்.

 

வைக்கும் போதும் கொடுக்கும் போதும் வீசி எறியாதீர்கள்.

ஆளின் மீதோ நிலத்திலலோ அடிக்காதீர்கள்.

குழந்தைகளிடம் கொடுக்காதீர்கள்.

குறிப்புக்களும் கோடுகளும் எழுதாதீர்கள்.

எண்ணெய்,தண்ணீர் பட்ட கைகளோடு தொடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பேசி முடிவுக்கு வரலாம் 
என்பவர்களிடம் பேசுவது எழிது..!!
 
ஆனால் இது தான் பேசனும் என்று
முடிவெடுத்து விட்டு பேசுபவர்களிடம்
பேசுவது கடினம்..!!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைமுரசு நாகூர் ஈ. எம் ஹனீபா

எழுத்தாளர் ஜெயக்காந்தன் இருவருக்கும் 

எனது ஆழ்ந்த இரங்கல்

 

 

 

இசைமுரசு நாகூர் ஈ. எம் ஹனீபா

 

11149516_938949622815839_837088507679306

 

இப்படி பல இனிமையான பாடல்களுக்கு சொந்தகாரன்...

 

 

 

 

 

 

 

எழுத்தாளர் ஜெயக்காந்தன்

10312997_938949672815834_432158130016446

 

 

 

 

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் படைப்புகள்

 

தன் வரலாறு[தொகு]
 
ஒர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் (அக்டோபர் 1974 )
ஒர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் (செப்டம்பர் 1980 )
ஓர் இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள் (டிசம்பர் 2009)
ஓர் இலக்கியவாதியின் ஆன்மீக அனுபவங்கள்
 
வாழ்க்கை வரலாறு[தொகு]
 
வாழ்விக்க வந்த காந்தி 1973 (ரொமெயின் ரொலேண்ட்டின் ஃப்ரெஞ்சு மொழியில் வந்த காந்தியின் தன்வரலாற்றின் தமிழாக்கம் )
ஒரு கதாசிரியனின் கதை (மே 1989 ( முன்ஷி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு)
நாவல்கள் மற்றும் குறுநாவல்கள்[தொகு]
வாழ்க்கை அழைக்கிறது (ஆகஸ்ட் 1957)
கைவிலங்கு (ஜனவரி 1961)
யாருக்காக அழுதான்? (பெப்ரவரி 1962)
பிரம்ம உபதேசம் (மே 1963)
பிரியாலயம் (ஆகஸ்ட் 1965)
கருணையினால் அல்ல (நவம்பர் 1965 )
பாரீசுக்குப் போ! (டிசம்பர் 1966)
கோகிலா என்ன செய்துவிட்டாள்? (நவம்பர் 1967)
சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜூன் 1970)
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (ஜனவரி 1971)
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஏப்ரல் 1973)
ஜெய ஜெய சங்கர... (செப்டம்பர் 1977)
கங்கை எங்கே போகிறாள் (டிசம்பர் 1978)
ஒரு குடும்பத்தில் நடக்கிறது... (ஜனவரி 1979)
பாவம், இவள் ஒரு பாப்பாத்தி ! (மார்ச் 1979)
எங்கெங்கு காணினும்... (மே 1979)
ஊருக்கு நூறு பேர் (ஜூன் 1979)
கரிக்கோடுகள் (ஜூலை 1979)
மூங்கில் காட்டினுள்ளே (செப்டம்பர் 1979)
ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் (டிசம்பர் 1979)
ஒவ்வொரு கூரைக்கும் கீழே... (ஜனவரி 1980)
பாட்டிமார்களும் பேத்திமார்களும் (ஏப்ரல் 1980)
அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் (ஆகஸ்ட் 1980)
இந்த நேரத்தில் இவள்... (1980)
காத்திருக்கா ஒருத்தி (செப்டம்பர் 1980)
காரு (ஏப்ரல் 1981)
ஆயுத பூசை (மார்ச் 1982)
சுந்தர காண்டம் (செப்டம்பர் 1982)
ஈஸ்வர அல்லா தேரே நாம் (ஜனவரி 1983)
ஓ, அமெரிக்கா! (பெப்ரவரி 1983)
இல்லாதவர்கள் (பெப்ரவரி 1983)
இதய ராணிகளும் ஸ்பெடு ராஜாக்களும் (ஜூலை 1983)
காற்று வெளியினிலே... (ஏப்ரல் 1984)
கழுத்தில் விழுந்த மாலை (செப்டம்பர் 1984)
அந்த அக்காவினைத்தேடி... (அக்டோபர் 1985)
இன்னும் ஒரு பெண்ணின் கதை (ஜூலை 1986)
ரிஷிமூலம் (செப்டம்பர் 1965)
சினிமாவுக்குப் போன சித்தாளு (செப்டம்பர் 1972)
உன்னைப் போல் ஒருவன்
ஹர ஹர சங்கர (2005)
கண்ணன் (2011)
சிறுகதைகள் தொகுப்பு[தொகு]
ஒரு பிடி சோறு (செப்டம்பர் 1958)
இனிப்பும் கரிப்பும் (ஆகஸ்ட் 1960)
தேவன் வருவாரா (1961)
மாலை மயக்கம் (ஜனவரி 1962)
யுகசந்தி (அக்டோபர் 1963)
உண்மை சுடும் (செப்டம்பர் 1964)
புதிய வார்ப்புகள் (ஏப்ரல் 1965)
சுயதரிசனம் (ஏப்ரல் 1967)
இறந்த காலங்கள் (பெப்ரவரி 1969)
குருபீடம் (அக்டோபர் 1971)
சக்கரம் நிற்பதில்லை (பெப்ரவரி 1975)
புகை நடுவினிலே... (டிசம்பர் 1990)
சுமைதாங்கி
 
 
குறிப்பிடத்தக்க
விருது(கள்) ஞானபீட விருது, சாகித்திய அகாதமி விருது, பத்ம பூஷண் விருது.
 
Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பது மிகவும் அற்பமானது. அது பிறப்பதற்கும், அழிவதற்கும் அற்பக் காரணங்களே போதும்.

ஜெயகாந்தன்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்பதும் உறங்குவதும் வாழ்க்கை என்றால் அதை இந்த மண்ணும் செய்யும், மரமும் செய்யும்; நாம் மனிதர்கள்...!!!

வெற்றியாளனாய் ஆக முயற்சிக்க வேண்டாம், ஆனால் நல்ல மதிப்பீடுகளை பெற்றவராக முயற்சிக்கவும் ........-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் (International Day of Human Space Flight) ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. விண்வெளிக்கு முதன் முதலில் பயணம் செய்த ரஸ்சியரான யூரி ககாரின் நினைவாக இந்நாளை சிறப்பு நாளாக உலகெங்கும் கொண்டாடுவதற்கு 2011 ஏப்ரல் 7 ஆம் நாள் கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஏகமனதாகத் தீர்மானித்தது

 

ரஸ்சியாவினால் இத்தீர்மானம் ஐநா பொதுச் சபையில் கொண்டுவரப்பட்டது. 1961 இல் விண்வெளிக்கு முதன் முதலில் சென்ற ரஸ்சியரான யூரி ககாரின் நினைவாக ரஸ்சியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் விண்வெளி வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.