Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

தலைக்குமேல் யாரையும் 

தூக்கி வைத்துக் கொள்ளாதீர்கள் ...

தூக்கி எறிய நினைக்கும் போது. 

கிடைக்கும் வலியை எதைக்கொண்டும் சரி செய்ய இயலாது ...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11100868_945791115460987_474315834232973

 

இறுதிப்போரின்போது வன்னியில் கொல்லப்பட்டதாக நம்பப்படும் இடத்தில் அமெரிக்கா தமது இறுதி வணக்கத்தை செலுத்தியுள்ளது.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இன்று அன்னை பூபதியின் 27ம் ஆண்டு  நினைவு நாள்.... தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் என்றும் நினைவு கூறப்படுகிறது.
 
11066619_967658559920228_838857975398175
Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tea-293x150.jpg

 

கனடா-ஒன்ராறியோ மாகாணம் பூராகவும் திங்கள்கிழமை பொது உயர்தர பாடசாலைகள் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒன்ராறியோ இரண்டாம் நிலை பாடசாலை ஆசிரியர்களின் கூட்டமைப்பு, அரசாங்கம் மற்றும் ஒன்ராறியோ பொது பாடசாலை சபை ஆகிய வர்களிற்கிடையிலான பேச்சு வார்த்தைகளின் முடிவை பொறுத்து ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் ஏற்படுமானால் பாடசாலைகள் மூடப்படலாம்.

ஒன்ராறியோ உயர் பாடசாலை ஆசிரியர்களை பிரதிநிதிப்படுத்தும் தொழிற்சங்கம் தங்கள் பேரம் பேசும் நிலையை மறுபரிசீலனை செய்யுமாறு நிர்வாகத்தினரை வலியுறுத்துகின்றனர்.

 

canadamirror.

Link to comment
Share on other sites

அருமையான பாடல்.

எனக்கும் மிகவும் பிடிக்கும். நன்றி இணைப்பிற்கு்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் பார்க்க நேரம் தான் இல்லை. தொடருங்கள் யாயினி. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் 21, 2015 - பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 51 வது நினைவு தினம்

 

1619606_727563300610898_8950099347510119

 

பாரதிதாசன் கனவை கலைஞர் நிறைவேற்றினார் 

--------------------------------------------------------------------------------

புரட்சிக்கவி பாரதிதாசன் கடைசிக் காலத்தில் இரண்டு கனவுகள் வைத்திருந்தார்....1-} “பாண்டியன பரிசு” காப்பியத்தை திரைப்படமாக எடுப்பது ......2-} பாரதியின் வாழ்வை திரைப்படமாக எடுப்பது...... பாண்டியன்பரிசு காப்பியத்தை படமாக எடுக்க நினைத்தது கோடி கோடியாக சம்பாதித்து இ சி ஆர் சாலையில் அல்லது பெசன்ட் நகரில் வீடு வாங்க அல்ல..... அதில் வரும் லாபத்தை வைத்து சென்னையின் மையப்பகுதியில் பெரிய நூலகம் ஒன்றை அமைத்து பாரதி சொன்ன மாதிரி பிறநாட்டு அறிவுச் செல்வங்களை வல்லுநர்களை கொண்டு தமிழ் மொழியாக்கம் செய்ய வேண்டும்... திருக்குறள் போன்ற நற்றமிழ் இலக்கியங்களை பிற மொழியில் பெயர்க்க வேண்டும்.... நூலகம் சார்பாக பதிப்பகம் தொடங்க வேண்டும்... பல நலிந்த எழுத்தாளர் கவிஞர்களை பணியில் அமர்த்த வேண்டும்....இதற்காக சிவாஜி உட்பட பல இயக்குனர்களை சந்தித்து ஏற்பாடாகும் போது அது நிறைவேறாமலே உலகவாழ்வை முடித்துக் கொண்டார்.

---------இரண்டாவது கனவு பாரதி வாழ்வை படமாக்குவது கதை எட்டையபுர சமஸ்தானத்தில் ஆரம்பிக்கிறது.. .சமஸ்தானத்தை செக் நாட்டு தமிழறிஞர் கமில்ஸ்வலபில் என்பவர் பார்வை இடுவதாகவும், பாரதி பற்றி கேட்கும் போது அருகிலிருக்கும் பாரதிதாசன் “பாரதி பிறப்பினிலே ஒரு புதுமையான நிகழ்ச்சி அடங்கி இருக்கிறது” என்று கூற ......”அது என்ன/” என்று அறிஞர் கேட்க .பாரதி வீட்டிலிருந்து “பிளாஸ் பேக்” உத்தியில் படம் துவங்குகிறது

-------இதுவும் நிறைவேறவில்லை ..இது குறித்தெல்லாம் ,ஈரோடு தமிழன்பன்,அவர்களுக்கு பாரதிதாசன் எழுதிய கடிதம் மூலம் அறியமுடிகிறது அதுதான் பாரதிதாசன் எழுதிய கடைசிக் கடிதம்[ 15/4/1964}. மற்றும் கவிஞர் பொன்னடியான் அவர்களிடம் புரட்சிக் கவி பரிமாறிய உரையாடல் மூலமும் அறிய முடிகிறது.....{ஆதாரம் ..ய .மணிகண்டன் கட்டுரை . காக்கைச் சிறகினிலே .ஜனவரி 2012}.--------அவர் கனவு கலையவில்லை நூலகக் கனவை கலைஞர் நிறைவேற்றி விட்டார் . பாரதி வாழ்வை ஞான ராஜசேகர் படமாக்கிவிட்டார். . 

-

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

நல்வரவு. யாழில் பக்கங்கள் ஆரம்பிக்க முடியுமா? அதுபற்றி அறிய விருப்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்வரவு. யாழில் பக்கங்கள் ஆரம்பிக்க முடியுமா? அதுபற்றி அறிய விருப்பம்

 

உங்கள் வரவுக்கு நன்றி..நீங்கள் கேட்கும் கேள்வி சற்றுக் குளப்பமாக இருக்கு... யாழின் விதிமுறைகளுக்கு  ஏற்ப நடந்து கொண்டால் நம்ம பாட்டுக்கு பக்கங்களை புரட்டிச் செல்லலாம்...என் அறிவுக்கு எட்டியவரையில் இது தான் புரிந்து கொண்டது...
 
மேலதிக தகவல்களுக்கு யாராச்சும் மட்டுறுத்தினர்மார் இந்தக் கேள்வியைப் பார்த்தால் பதில் எழுதி விடுங்கோ பிளீஸ்..
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது நாள் உண்ணாவிரத போராட்டம்

 

11169835_816985475022476_628283332690234

காலையில் 6 மணிக்கு வெளிக்கிட்டு 8 மணி வரை நல்லூரைச் சுற்றி இருந்த நண்பர்களை ஒன்றாக்கினோம் . மீடியாக்களில் இருந்து தொலைபேசி அழைப்புக்கள் வந்து கொண்டிருந்தன ,' எத்தனை மணிக்கு தொடங்குவீங்க ?' ஆனால் 9 மணிக்கு தொடங்குவதாக இருந்தோம் ,பஸ்களை ஒழுங்கு படுத்துவதில் இருந்த தாமதத்தினாலும் எங்களுக்கு 4 பஸ்கள் தேவைப் பட்டதாலும் இழுபறியுடன் ,நானே நேரில் சென்று எனது நண்பர்களையும் ஒன்றிணைத்து அழைத்து வர வேண்டியிருந்தது , 9.30 மணிக்கு வந்து சேர்ந்தோம் ,ஏலவே ஆதியும் மற்றவர்களும் பேசியிருந்தார்கள் ,எங்களது கோரிக்கைகளை நான் வாசித்தேன் ,பின்னர் அந்த நொடியிலிருந்து நீருமற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பித்தோம் ,மருத்துவ பீட மாணவர்களும் உயர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து கொண்டனர் , 800- 1000 வரையானவர்கள் பங்கு பற்றியிருந்தனர் .

நீருமற்ற உண்ணாவிரதத்தை நல்லூர் முன்றலில் ஆரம்பித்து மொத்தமாக 8 பேர் இருந்தோம் ஒருவரை தவிர மற்றவர்கள் உயர்தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் .பின்னர் தான் ஒரு பெண் இணைந்து கொண்டார் . மொத்தமாக 9 பேர் ,8 பேரில் 2 பேர் சுன்னாகத்தை வசிப்பிடமாக கொண்ட மாணவர்கள் . மற்றயவர்கள் யாழ்ப்பாணம் மத்தி . பேரணி முடிந்து திரும்பியவர்களில் பெரும்பானமையானவர்கள் மதியம் 2 மணி வரை எங்களோடு நின்றார்கள் .ஊடகங்கள் செவ்விகளையும் தரவுகளையும் சேகரித்துக் கொண்டிருந்தன .

இன்னுமொரு முக்கியமான நிகழ்வும் ஊடகங்கள் பதிவு செய்யவில்லை ,மதியம் ஒரு மணி வரை அடையாள உண்ணாவிரதத்தில் சிங்கள முஸ்லிம் மாணவர்கள் எங்களோடு இருந்து பங்கு பற்றினர் .

அதை எந்த செய்தியிலும் நான் பார்க்கவில்லை ,எங்கள் வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளைக் கூட செய்தியாக போடும் சில ஊடகங்கள் இதைக் கவனிக்கத் தவறிவிட்டன .

மேலும் இன்னொரு பெண்ணும் இரண்டு நாள் பகலும் எங்களுடன் உண்ணாவிரதத்தில் இருந்தார் ,மொத்தம் இரண்டு பெண்கள் . மாலை வரை தொடர்ச்சியாக மாணவர்கள் நின்றிருந்தனர் .இடையில் முதலாவதாக அரசாங்க அதிபரின் செயலாளர் வந்தார் ,பின் அரசாங்க அதிபர் வந்தார் ,அதற்கு முன்னமே சிவாஜி லிங்கம் வந்திருந்தார் . இப்படியாக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன . அமைச்சர் ப.டெனீஸ்வரனும் குருகுலராஜாவும் வந்தனர் , பின் இரவு 8.30 மணியளவில் முதலமைச்சரும் வேறு சில அமைச்சர்களும் வந்திருந்தனர் . அதில் இடம்பெற்ற சில முக்கிய குறிப்புக்களை தருகிறேன் ,அந்த இடம் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியிருந்தது .

1 - ' என்ன தம்பி மார் காலமையில இருந்து தண்ணி கூட குடிக்காம இருக்கிறியள் ' என்று கேட்டார் ,நாங்கள் விஷயத்துக்கு வரச் சொன்னோம் ,' நான் செய்யக் கூடிய எல்லாத்தையும் செய்யிறன் ,நீங்கள் இந்த இத ( உண்ணாவிரதம் என்பது உடனடியாக அவரது வாய்க்குள் வரவில்லை ) விடுங்கோ 'என்றார் .

ஒருவர் பிரச்சினையை அணுகும் முறை என்பது அதை தீர்ப்பதில் செல்வாக்குச் செலுத்தும் . முதலமைச்சரின் அணுகுமுறை தான் முதலாவது விரிசல் விழுந்த பகுதி .

2- மருத்துவர்கள் இலங்கை நீர்வழங்கல் அதிகார சபையின் அறிக்கையை காட்டி பேசிய போது ,இது எனக்கு தெரியாது ,இந்த ரிபோர்ட் ஐ தாங்கோ என்று கேட்டார் ,அதற்கு இந்த ரிபோர்ட் ஒரு மாதத்திற்கு முன்னமே அமைச்சர் ஐங்கரநேசனுக்கு கையளிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப் பட்டது . இதனாலும் சற்று குழப்பமான நிலை ஏற்பட்டது . முதலமைச்சருக்கு ஏன் விடயங்கள் இன்னும் தெளிவாக்கப் படவில்லை என்பது கேள்வி .ஏன் அந்த விடயங்களை தெரிந்து கொள்வதில் அவர் ஆர்வம் காட்டவில்லைஎன்பதுவும் இன்னொரு கேள்வி .

3 - அந்த நேரத்தில் குறுக்கிட்ட நான் ( உண்ணாவிரதிகளில் முதலமைச்சருடன் பேசியது நான் மட்டுமே ,வேறு எந்த உண்ணாவிரதியும் அவருடன் பேசவில்லை ) ' விஷயத்துக்கு வருவோம் " இருக்கு இல்லை என்ற இரண்டு பதில்களை தவிர மூன்றாவதாக என்ன பதிலை சொல்லப் போகிறீர்கள் என்று கேட்டேன் , 12 திகதி வரை தண்ணீர் தருவம் .அந்த தினம் வரை பொறுங்கோ என்று சொன்னார் . பிறகு , இவ்வாறாக நாங்கள் 100 பெடியள் போய் பார்த்தனாங்கள் ,சனம் கிணற்று தண்ணியக் குடிக்குது , என்றேன் ( மாகாண சபையின் அறிக்கையைத் தொடர்ந்தே ,மக்கள் அந்த நீரை பயன்படுத்தி வருகின்றனர் ) அவர்கள் அவர்களுடைய கிணற்றுத் தண்ணீரைக் குடிக்க முடியுமென்றால் குடிக்கட்டும் ,நான் ஒண்டும் செய்யேலா " என்றார் . எனக்கு கோபம் வந்து விட்டது .மிக அலட்சியமான ,பொறுப்பற்ற பதில் . மக்கள் உங்களுடைய அறிக்கையை பார்த்து அந்த நீரை பயன்படுத்துகின்றனர் , அனால் அதை தடுக்க தன்னால் முடியாது என்பது என்ன மாதிரியான பதில் . பின் அவருடன் உரையாடுவதை நிறுத்தி விட்டேன் , இதற்கு மேல் எந்த அடிப்படையில் அவருடன் கதைப்பது ,

4 - பின்னர் வழங்கல் தொடர்பில் உள்ள குறைகளை நின்றவர்கள் சொன்னார்கள் ,நாங்கள் தண்ணி தருவம் என்றார் முதலமைச்சர் . எழுத்து வடிவில் தந்த 3 சிபாரிசுகளையும் நாங்கள் மறுத்து விட்டோம் . இந்த பிரச்சினை தொடர்பாக முழுமையான அறிதல் இல்லாத ஒரு முதலமைச்சரின் வாய் மொழியை எப்படி நம்புவது . இடையிடேயே சிவாஜிலிங்கம் அவர்கள் ,தண்ணியக் குடிக்க வேண்டாம் எண்டு தான் ஐயா சொல்லுறார் என்று மொழிபெயர்த்துக் கொண்டு ,நின்றார் ,அவரைப் பேச விடுங்கள் ,நீங்கள் பேசவேண்டாம் என்று சிவாஜிலிங்கத்தை தடுத்தார்கள் . மற்றைய விடயங்கள் சாதரணமான அரசியல் சமாளிப்புகள்

5 - கொஞ்ச நேரம் தள்ளி நின்று உரையாடிய முதலமைச்சர் சில வைத்தியர்களை பேச அழைத்து வந்தார் ,அவர்களை முழுமையாக மறுத்து விட்டோம் .முதலமைச்சரின் வார்த்தைகளை மட்டுமே நாங்கள் கேட்க விரும்புகிறோம் என்றோம் .

7 - அதன் பின்னர் , இந்த பிரச்சினை பற்றி அடியும் நுனியும் தெரியாத முதலமைச்சரை பார்த்து " உங்களுடைய கதையை நம்பேல்ல .எழுத்து வடிவத்தில தாங்கோ " என்று நான் சொன்னேன் ,உடனடியாக அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர் .

மேலும் இரண்டு தடவைகள் டெனீஸ்வரனும் சிவாஜிலிங்கமும் திருத்தப்பட்ட கடிதங்களுடன் வந்து எங்களுடன் நிலத்தில் இருந்து உரையாடல்களை நிகழ்த்தினார்கள் .அதன் போது பல்வேறு விளக்கங்களை நாம் வழங்கினோம் .ஆனால் அவர்களால் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை .இருந்தாலும் ,அக்கறையுடன் நடந்து கொண்டார்கள் .

பின்னர் ,இரவு நல்லூர் முன்றலிலேயே தொடர்ந்தது ,30 வரையான வைத்தியர்கள் மற்றும் இளையவர்கள் எங்களுடன் நின்றிருந்தனர் . காலையில் 10 மணிக்கு வருவதாக சொல்லி முதலமைச்சர் சென்றிருந்தார் , என்ன நம்பிக்கையில் ? அல்லது இதை பற்றி என்ன நினைகிறீர்கள் ஒரு இரவு ஒரு பகல் 43 பாகையில் வெப்பம் கொதிக்கும் நாளில் நீரின்றி 24 மணி நேரங்கள் கடந்தால் கிட்னியில் பிரச்சினை வரும் ,அதையும் வைத்தியர்கள் எங்களுக்கு அறிவித்திருந்தார்கள் . நான் ,ஆதி , நெல்சன் , லனுஜன் ஆகியோர் செலைன் ஏற்ற மறுத்து எமது போராட்டத்தை தொடர்ந்திருந்தோம் , அந்த அம்மாவுக்கு காலையில் பேரணி ,அதன் போதும் அவர் கத்தியபடி சென்றதில் சோர்ந்திருந்தார் , மற்றவர்கள் அனைவருக்கும் செலைன் 2 தடவைகள் ஏற்றப் பட்டிருந்தது , நள்ளிரவில் அந்த அம்மாவும் ,இன்னொரு நண்பரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்டனர் ....

தொடரும்

கிரிஷாந்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11149408_10152892378292992_8430790357189

 

 

கனடா- ரொறொன்ரோவின் புதிய பொலிஸ் மா அதிபராக மார்க் சான்டர்ஸ் நியமனம் பெறுகின்றார். இந்த தலைமை பதவியை பெறும் முதல் கறுப்பு இனத்தவர் சான்டர்ஸ் ஆவார். தற்போதைய தலைமை அதிகாரி பில் பிளயர் வெளியேறியதும் சான்டர்ஸ் ரொறொன்ரோ பொலிஸ் தலைமை கடிவாளத்தை தனது கையில் பெறுவார். இந்த பதவி நியமனத்திற்கான அறிவிப்பு திங்கள்கிழமை காலை 10-மணியளவில் செய்தியாளர் மகாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த பதிவிக்கு தற்போதைய பிரதி தலைமை அதிகாரி பீட்டர் ஸ்லோலியை சான்டர்ஸ் வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

32-வருடங்களாக பொலிஸ் சேவையில் இருந்தவர் சான்டர்ஸ். 2012-ல் பிரதி தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 175-மில்லியன் டொலர்கள் வரவு செலவுத்திட்டம், 1,200 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 164 பொதுமக்கள் உறுப்பினர்கள் கொண்ட சிறப்பு செயற்பாடுகள் கட்டளையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய பொலிஸ் தலைமை அதிகாரியான பிளயர் இந்த வார இறுதியில் இளைப்பாறுகின்றார்.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Good Morning ......

 

905982_707688906053034_38376240073386932

The Great Wall Of China 

 

15572_707688936053031_167742423004992398

The Great Wall Of China 

 

11150144_707688756053049_569295324991212

The Great Wall Of China

 

11174320_707688779386380_851889953382296

The Great Wall Of China

 

10849092_707688846053040_872120776604113

1523033_707688802719711_4717169027868720

1836868_707688962719695_3442992066688494

11174237_707688782719713_160408868116696

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட்சய திருதியை!!

மகாபாரதத்தில் திரௌபதி சூரிய பகவானை வேண்டிப் பெற்ற அட்சய பாத்திரத்தால் அள்ள அள்ளக் குறையாத அன்னத்தைத் தானம் செய்து புண்ணியம் பெற்றார் என்று கூறப்படுகிறது.

ஒருமுறை கிருஷ்ண பரமாத்மா திரௌபதியைக் காண பசியோடு வந்தார். அந்நேரம் அட்சய பாத்திரம், கழுவிக் கவிழ்க்கப்பட்டிருந்தது., அதில் ஒட்டியிருந்த ஒரு கீரையை மட்டும் கண்டு விஷ்ணுவைப் பிரார்த்திக்க, மீண்டும் அன்னம் பெருகி, அதை கிருஷ்ணருக்குப் பரிமாறிப் பசியாற்றியதோடு அதிதி தேவோபவ எனும் உயர்ந்த அறமான விருந்தோம்பலும்நிறைவேற்றப் பெற்ற புனித நாளே அட்சய திருதியை என்பது புராண கதை.

அப்படிப்பட்ட அட்சய திருதியில் இறைவனை மனதார எதை வேண்டினாலும் அது பன்மடங்கு பெருகும். ஆகவே அவரவர் தகுதிக்கும் பொருளாதார சூழலுக்கும் ஏற்ப அது உணவு தானியமாகவோ,உடையாகவோ,பொன்னாகவோ,பொருளாகவோ, நிலமாகவோ அமையலாம்.

அட்சயதிருதியில் தங்கதான் வாங்கவேண்டும் என்பதல்ல அர்த்தம் . மேலும் அட்சயதிருதியில் தங்கம் வாங்கினால் பெருகுமா பெருகாதா என்ற விவாதத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இது போன்ற நிர்ப் பந்தங்களால் பொருளாதாரக் குறைவு உள்ள பெண்கள், தங்கள் வீட்டின் மன மகிழ்வை இழக்கக்கூடாது.

ஒட்டுமொத்தமாக பார்க்கப்போனால் அட்சய திருதியால் ஆதாயம் என்பது நகை வணிகர்களுக்கே. - விகடன் -

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.