Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் தொடங்கிட்டார்கள்........

Welcome to the 2016 Census

Complete your census questionnaire online today. It’s quick and easy.

Before beginning, please read the following:

Select the "Start questionnaire" button below.

Your browser will automatically be tested to see if it meets the necessary security requirements to begin the questionnaire. You will get a message if you need to update or modify your settings.
 

Start questionnaire

Message from the Chief Statistician

The Census of Population provides a portrait of our people and the places in which we live. Census information is important for your community and is vital for planning its public services. Be part of this new portrait of Canada and complete your census questionnaire.

If you are a farm operator, it is equally important that you complete your Census of Agriculture questionnaire. The Census of Agriculture provides a definitive statistical picture of Canada's farm sector.

To reduce the number of questions on the Census of Population questionnaire, Statistics Canada will obtain your income information from personal income tax and benefits records.

By law, your household must complete a Census of Population questionnaire. Under the Statistics Act, agricultural operators are required to complete the Census of Agriculture. Your answers are collected under the authority of the Statistics Act and will be kept strictly confidential.

The information that you provide may be used by Statistics Canada for other statistical and research purposes or may be combined with other survey or administrative data sources.

Thank you for your cooperation.

Wayne R. Smith
Chief Statistician of Canada

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://www.census.gc.ca/ccr16_r000-eng.html

Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters' Day) மே 4ஆம் நாளன்று ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகிறது. வழக்கமாக இந்நாளன்று ஐரோப்பிய நாடுகளில் தீயணைப்பும் படையினர் நாள் கொண்டாடப்பட்டு வந்தது. எனினும் 1999 ஆண்டு ஜனவரி 4 அன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பெரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் உயிரிழந்த ஐந்து தீயணைக்கும் படையினரை நினைவுகூருவதற்கு ஆதரவாக உலகெங்கும் மின்னஞ்சல் மூலமாக இடம்பெற்ற பரப்புரையினை அடுத்து மே 4ஆம் நாளை உலகெங்கும் நினைவுகூர முடிவுசெய்யப்பட்டது.

IFFD_ribbon.jpg

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்திகளை இணைக்கும் யாயினிக்கு பாராட்டுக்கள்.

தொடர்ந்தும் இணையுங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெதுவாக நகரும்
நத்தை
மழைக்காலத்திலிருந்து
வெயிற்காலம் வரை

 

image.jpg

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13178817_1130918523633603_57707360025845

கவியரசர் தாகூரின் பிறந்த தினம் இன்று. வங்கம் ஈன்றெடுத்த இணையற்ற புதல்வர் அவர் ;இளம் வயதில் எண்ணற்ற கலாசாரங்களின் சங்கமம் நிகழ்ந்த வீட்டில் பிறந்து வளர்ந்ததால் அவரின் சிந்தனை எண்ணற்ற தளங்களை தொட்டது ;இங்கிலாந்திற்கு சட்டம் படிக்க போய் அதன் மீது மனம் ஒட்டாமல் திரும்பினார் .

ஏகத்துக்கும் பயணம் செய்வதில் விருப்பம் கொண்ட இவர் ஒரு நாள் நதியின் மீது படகினில் போய்க்கொண்டிருந்தார் ;அப்பொழுது விளக்குகள் வீசிய காற்றில் அணைந்துபோயின .நதியின் சலனமற்ற தன்மையை பார்த்துக்கொண்டே ஸ்தம்பித்து நின்றார் ;அங்கே தான் தாகூர் மஹாகவி தாகூர் ஆனார் .வீட்டின் நிர்வாகத்தை கையில் எடுத்துக்கொண்ட தாகூர் கல்விமுறை குழந்தைகளின் மீது வன்முறையை கையாள்வதாக உணர்ந்தார் ;இயற்கையான சூழலில் பிள்ளைகள் கற்கவேண்டும் என விரும்பினார் .

அமைதியின் உறைவிடம் என பொருள் தரும் சாந்தி நிகேதனை உருவாக்கினார் ;அதில் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார் .ஆங்கிலேய அரசிடம் எந்த சூழலிலும் கையேந்த மாட்டேன் என சொல்லி இந்தியர்களின் நிதியுதவியிலேயே அப்பள்ளியை நடத்தினார் .அற்புதமான பல கவிதைகள் எழுதினார் ;அவரின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டதால் மேற்கின் கவனம் பதிந்து கீதாஞ்சலி நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது ;ஆசியாவின் முதல் நோபல் பரிசு இவருக்கே கிடைத்தது .

ஆங்கிலேய அரசின் ஜாலியான்வாலா பாக் படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தன்னுடைய சர் பட்டத்தை துறந்தார் .இவர் இயற்றிய பாடல்களுக்கு இசையும் அமைத்திருந்தார் இவர் ,அவை ரவீந்திர சங்கீதம் எனும் பெயரில் இன்றும் பாடப்படுகின்றன ;நல்ல ஓவியர்,நாவலாசிரியர்,சிறுகதை வல்லுநர்,நாடக ஆசிரியர் என எண்ணற்ற முகங்கள் இவருக்கு . காந்தியை மகாத்மா என அழைத்தது இவர் தான் .அவர் .இந்தியாவின் ஜன கண மண மற்றும் வங்காள தேசத்தின் அமர் சோனார் பங்களா எனும் இரண்டு தேசிய கீதங்களுக்கு ஆசிரியர் இவர் ஒருவரே . என் ஆடைகள், ஆபரணங்களை களைந்து விடு அன்னையே ‘;அவை மணல்வெளியில் ஆனந்தித்து விளையாட பெருந்தடையாக உள்ளன என பாட மட்டுமல்ல அப்படியே வாழவும் செய்தார் தாகூர் .ப்ரணாம் குருதேவ் !

அவரின் HEAVEN OF FREEDOM மற்றும் WALK ALONE எனும் கவிதைகள் உங்களுக்காக

உள்ளம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலைநிமிர்ந்து நிற்கிறதோ,
சிறைவாசங்களின்றி
அறிவு வளர்ச்சிக்கு
எங்கே பரிபூரண
விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய கட்டுப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டு
துண்டுகளாய்ப்
போய்விடவில்லையோ,
வாய்ச்சொற்கள் எங்கே
மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே
தளர்ச்சியின்றி
முழுமையை நோக்கி
தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடியாதாரத்தை தேடிச் செல்லும்
தெளிந்த
அறிவோட்டம் எங்கே
பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில்
வழி தவறிப்
போய்விட வில்லையோ,
நோக்கம் விரிகவும்,
ஆக்கப் பணி புரிகவும்
உள்ளத்தை எங்கே
வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
விடுதலைச் சொர்க்க பூமியில்
எந்தன் பிதாவே!
விழித்தெழட்டும்
என் தேசம் !

****************
யாரும் உன் குரலுக்கு செவிமடுக்கவில்லையா ?
நீண்ட சுவடுகளை பதித்து தனித்து நட
எல்லாரும் அகக்கதவுகளை மூடி மவுனித்திருந்தால்
உன் மனதை திறந்து,தனித்து பேசு !

தனித்து நட,தனித்து நட,தனித்து நட

சுடும்பாதை தடைகளால் அழுத்தும்
முகங்களை திருப்பிக்கொண்டு கைவிட்டு போவார்
முற்களை நசுக்கு !
உதிரக்காயங்கள் தோய்ந்து ரத்தம் சொட்டும் பாதையில்
கம்பீரமாக பயணிப்பாய்

தனித்து நட,தனித்து நட,தனித்து நட

யாரும் விளக்கை ஏந்த மறுக்கும்
இருள் கசியும் பொழுதை பெரும் புயல் தாக்கி
பிணிநெருப்பை இடிபோல தந்திடுமாயின்
உன் உள்ளத்தை உருக்கி நீயே ஒளியாகு

தனித்து நட,தனித்து நட தனித்து நட....ந்

vikatan

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நியுயோர்க் புரூக்ளினின் உள்ள தாவரவியல் பூங்கா.Brooklyn Botanic Garden New York May 2015 panorama 2.jpg

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Rabindranath-Tagore2.jpg

தாகூரின் கீதாஞ்சலியின் தாக்கத்தில் கவிமணி சில பாடல்கள் இயற்றியுள்ளார். இவை நண்பர்களின் தூண்டுதலால் 1925-30 காலத்தில் எழுதப்பட்டன என்பர்.

இவற்றில் உள்ள முதல் இரண்டு பாடல்களையும், அவற்றின் ஆங்கில மூலங்களையும் இங்கே இடுகிறேன்.
 

km.png
 
என்றுமெனை அழிவிலாப் பொருளா யியற்றினை

         ஈதுனது திரு வுள்ளமே;

   ஈடற்ற கலமித கவிழ்த்திக் கவிழ்த்தியுயிர்

        ஏனோ திருத்தி வைப்பாய்?

குன்றினொடு குழியெலாம் இச்சிறிய வேயின்வரு

        குழல் கொண்டு சென்ற நீயுன்

  குமுதவாய் வைத்துநவ நவமான இசைகள் செவி

        குளிரவே ஊதி நிற்பாய்

பொன்றுத லிலாதநிலை தரவல்ல உன்கரப்

        புனிதமுடல் தீண்ட லாலே,

  பூரித்த உள்ளமகி ழெல்லையற மாய்ந்ததும்,

       போற்றமொழி யற்று நின்றேன்;

நன்றுதவு கொடைகோடி இக்குழவி கைகளில்

       நாளும்நீ அள்ளி யிடினும்,

  நான்குறைகள் சொல்லி அருள் வேண்டா திருந்திடேன்,

       ஞானஒளி வீசி மதியே!

 
தாகூரின் மூலம்: ( கீதாஞ்சலியில் முதல் பாடல்.  தாகூரே தன் வங்க மொழிப் பாடலிலிருந்து மொழிபெயர்த்தது.) 
gitanjalisongoff00tagouoft-p31.jpg
பண்ணொழுகு பாடலைப் பாடென் றெனக்குமருள்
       பாலிக்கும்வேளைஇந்தப்
  பாரெங்கும் அறியாத கர்வமது பொங்கிப்
       பரந்துளம் விம்ம நிற்பேன்;
அண்ணலுன் திருமுகம் நோக்கிநிற்பேன்விழிகள்
       அருவிநீர் பாய நிற்பேன்;
  ஆகாத குணமெலாம் அடியோடு நீங்கநல்
       அமுதகுணம் ஓங்க நிற்பேன்;
எண்ணரிய ஆழியைத்தாண்டுபுள்போல் அன்பும்
       இறகினை விரிக்கும்அதனால்
  ஏத்தியிசை பாடத் தொடங்குவேன்நீயும் அதில்
       இன்புறுவை என்ப துணர்வேன்;
நண்ணுதற் கானவழி வேறெதுங் கண்டிலேன்;
       நானுமென் களிம யக்கால்,
  நண்பனென் றேயழைக் கின்றனன்என்னையாள்
       நாதனே! ஞான பரனே! 
gitanjalisongoff00tagouoft-p32.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்,

 

 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுச் சொல் தினம் : 2016 இல் பயன்படுத்தப்பட்ட மிகவும் மோசமான கடவுச் சொற்கள் :

 

இந்த வார தொடக்கத்தில்  உலக ‘கடவுச்சொல் தினம்’ கொண்டாடப்படுகிறது. நாள் உலகம் முழுவதும் இணைய பயனர்கள் மத்தியில் நல்ல கடவுச்சொல்லை அதாவது யாரும் யூகிக்க முடியாத கடவுச் சொல்லை பயன்படுத்துவதை  ஊக்குவிக்க ஒரு தினமாக கொண்டாடி  வருகின்றனர்.

SplashData என்கிற வருடாந்திர பட்டியலின்  அடிப்படையில்,  கடந்த  ஆண்டின்  போது கசிந்த 2 மில்லியன் கடவுச்சொற்களை இருந்து தொகுக்கப்பட்ட சில கடவுச் சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி,  இனி இணைய பயனர்கள் இதுபோன்ற . ‘மோசமான கடவுச்சொற்களை ‘ பயன்படுத்துவதனை  நிறுத்தி கொள்ள வேண்டும்.

download (6)

 
 இந்த பட்டியலில் பட்டியலில் மக்கள்  எளிதில் guesseable கடவுச்சொற்களை பயன்படுத்துவதனால்   ஹேக்கிங் மற்றும் மற்றும் அடையாள திருட்டு ஆபத்துகளில் இருந்து  தங்களை காத்து வைத்து கொள்ளலாம். ஆகையால் இனிமேல் .  பயனர்கள் ஷாப்பிங், வங்கி, சமூக ஊடகங்கள் மற்றும் இன்னும் போன்ற நமது பல்வேறு ஆன்லைன் கணக்குகள் போன்ற அணுகலை பாதுகாக்க இதுபோன்ற கடவுச் சொற்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

 123456

* password

*12345678

* qwerty

* 12345

* 123456789

* football

* 1234

1234567

* baseball

* welcome

1234567890

* abc123

* 111111

* 1qaz2wsx

* dragon

* master

* monkey

* letmein

* login

* princess

* qwertyuiop

* solo

* passw0rd

starwars

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

image.jpgimage.jpg

நினைவில் கொள்க - 2016ஆம் ஆண்டுக்கான கனடிய மக்கள் தொகை கணக்கெடுப்பை பூர்த்தி செய்யவேண்டிய இறுதித் திகதி இன்றாகும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பை பூர்த்தி செய்யவேண்டியது சட்டமாகும்.

Today is the deadline to complete your 2016 Canadian Census. 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராதிகா, பிரகால், நீதன், அமுதா, தியோ

கைவசம் இருப்பது ஒரு தொகுதி 
போட்டியிடுபவர்கள் ஐந்து தமிழர்கள்

‪#‎ஸ்காபுரோ‬-ரூஜ் ரிவர் இடைத் தேர்தல்

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

இன்று மே 12......... உலக செவிலியர் தினம்...!!...

துடிப்பாகப் போராடி எண்ணற்ற உயிர்களைக் காத்த, காக்கும் செவிலியர்கள் ஏராளம் ஏராளம்.........
செவிலியர்கள் இன்றி மருத்துவர்களும் இல்லை, மருத்துவமனைகளும் இல்லை......!!

இத்தகைய ஈடில்லா சேவையில் ஈடுபட்டிருக்கும் செவிலியர்கள் அனைவருக்கும் என்

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-இன்று இருண்டநாள்-

இனங்களிலே சபிக்கப்பட்ட இனம்போல் திட்டமிட்டு திரும்பத்திரும்ப தமிழ்இனத்தையே சின்னாபின்னமாக்கி சூறையாடும் சிங்கள பேய்களின் ஈனச்செயல்கள்தான் அதிகம்....
அதிலும் கடல்மார்க்கத்தில் குமுதினியை குருதிசுமக்க வைத்து கடல் அன்னையையே சிவப்பாக்கி உலகையே உறையச்செய்த அந்த கரிநாள் இன்றுதான்....
15.05.1985...அன்றுதான் நெடுந்தீவு பூபாளத்தின் இனிமையை இறுதியாய்ச் சந்தித்தது.எப்போதும் போலவே எதிர்பார்புக்களாலும் தம்மை சுற்றியநினைவுகளாலும் மனங்களை நிறைத்த நம் உறவுகள் குமுதினியையும் நிறைத்தார்கள்.
காலைப்பொழுதின் இனிமை கடற்காற்றின் இதம் கடல்நீரின் உப்புச்சாரல் எல்லாமே ஒன்றாகி மனதின் உணர்வுகளை மென்மையாக்கி நினைவுகளை அகலவிரித்து இயற்கையின் அரவணைப்பின் சுஜத்தின் சோகங்கள் தற்காலிகமாகவேனும் மறந்திருந்த நம் உறவுகளின் அமைதி நீடிக்கவில்லை..!
நடுக்கடலில் வழிமறித்த சிங்களக்காடையர்களின் காட்டுமிராண்டித்தனத்தின் முன்னால்..! எம்மை ஒன்றும் செய்யாதீர்கள் என கதறினார்கள்...மன்றாடினார்கள்....புலம்பினார்கள்.. அவலக்குரல்எழுப்பினார்கள்..அத்தனையும் கொலைவெறிபிடித்த சிங்கள கடல்பேய்கூட்டத்தின் முன்னால் தோற்றுப்போனது. 
கொச்சைத்தமிழின் உச்சரிப்பில் உரக்க பெயரை எழுப்புமாறும் கடல்ப்பேய்களிடமிருந்து கட்டளையும் பிறந்தது. அப்பாவி உறவுகள் தயங்கத்தயங்கி கூனிக்குறுகி உச்சரிக்க அந்தக்கொடுரம் தாண்டவமாடியது. 
எம் உறவுகள் துடிக்கத்துடிக்க கொலைவெறிகொண்ட கடல்ப்பேய்கள் கூரிய ஆயுதங்களினால் ஈவிரக்கம் எதுவுமின்றி வெட்டியும் குத்தியும் குதறப்பட்டுசரிக்கப்பட்டனர்.சரிந்தவர்களில் சிலர் கடலுக்குஇரையாகினர். குமுதினியில் இருந்து எழுந்த மரண ஓலம் யாருக்கும் தெரியாது...!
உறவுகள் குதறப்பட்ட அந்த இறுதிக்கணம் என் உடன்பிறப்பு பச்சிளம்பாலகி எதைத்தான் எண்ணியிருப்பாளோ..? என்னதான் நிகழ்கிறது என்பது எதனையும் அறியாத இந்த பிஞ்சுமழலை இந்த உலகினை கண்திறந்து பார்த்து ஏழுமாதங்களே...!
இந்தமழலையால்கூட கொலைவெறிப்பேய்களிடமிருந்து எதையும் பெறமுடியாமல்ப்போனது.பேய்கள் அன்பையும்அறநெறியையும் போதித்த புத்த பெருமானின் வாரிசுகளாம்..! எதுவும் அறியாத மழலை மேனியும் முக்கூர்முனை கொண்ட ஆயுத்த்திற்கு பலியாகியது. ஒன்றரைமணி நேரம் குமுதினியை குதறிய நாய்கள் நடுக்கடலில் விட்டு மறைந்தார்கள்..தொலைந்தார்கள்...! 
உச்சத்தில் நின்றிருந்த சூரியனும் நயினையம்பதித்தாயும் நடுக்கடலில் நிகழ்ந்த கொடுரத்தினை மனதினுள் புதைத்துக்கொண்டு மௌனமாகினர். 
உறவுகளைப் பிரித்தெடுத்தாலும் அதன் உணர்வுகளை பிரிக்கவே முடியாது..! வாருங்கள் உறவுகளே இன்று இவர்களுக்காய் அஞ்சலிப்போம்....!

-என்றும் உறவுகளுடன்
யாழ் சபேசன்
நெடுந்தீவு-13

 
யாழ் சபேசன்'s photo.

image.jpg

Edited by யாயினி
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.