Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ரொறன்ரோ 187 ஆவது ஆண்டில் கால் பதிக்கிறது.🇨🇦

யாயினியின் இந்த பக்கம் 136ஆவது பக்கம் திருப்பி உள்ளது..🤭

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

இன்று ரொறன்ரோ 187 ஆவது ஆண்டில் கால் பதிக்கிறது.🇨🇦

யாயினியின் இந்த பக்கம் 136ஆவது பக்கம் திருப்பி உள்ளது..🤭

வாழ்த்துக்கள் யாயினி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

புரியாத புதிர்

 
 
 
thanks.jpg

இன்றைய உலகில் வாழும் மனிதர்களாகிய நாம் அரிகத்தோ, நேசி, நன்னி, ஸ்பாசொபோ, தங்ஸ் என ஒருவர்க்கு ஒருவர் உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் நன்றி கூறுகிறோம். உதட்டளவில் நன்றி சொல்கின்றவர்களும் கடமைக்காக நன்றி சொல்கின்றவர்களும் இருக்கிறார்கள். அப்படி போலியாக நன்றி சொல்பவரின் நடிப்பை குரலின் தன்மையும் கண்ணிலுள்ள கருமணியின் சுருக்கமும் காட்டிக்கொடுக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. அவர்கள் கூறும் நன்றியைக் கேட்பதால் கேட்பவர் மனம் மகிழ்ச்சி அடையாமல் வேதனைப்படும். இது சிலவேளைகளில் உறவை வளர்ப்பதற்குப் பதிலாக பிரித்துவிடும். இத்தகைய நன்றி கூறுதல் தேவைதானா?

நன்றியை ஆழ்மனதில் இருந்து உள்ளன்போடு கூறுகின்றவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு உள்ளன்போடு கூறப்படும் நன்றி மனிதஉறவை வலுப்படுத்தும். இது சமுதாய கட்டமைப்பிற்கும் உலக ஒருங்கிணைப்பிற்கும் உதவுகின்றது. அதில் எந்தவொரு கருத்து வேற்றுமைக்கும்  இடமில்லை. ஆனால் நாம் நம் நன்றியை மடல்களாகவும் பரிசுப்பொருட்களாகவும் கொடுப்பதுடன் எமது கடமை முடிந்ததென்று அவர்களைக் கண்டும் காணாதவர்களாக இருக்கின்றோம். இதுவே இன்றைய தமிழர்களாகிய எமது பண்பாடு. 

எமது சங்கத்தமிழ் முன்னோர்களோ ஒருவர் செய்த நன்மைக்கு அதாவது நன்றிக்கு கட்டாயம் உதவி செய்து தீரவேண்டும் என்ற பண்போடு வாழ்ந்தார்கள்.  திருவள்ளுவரும் செய்ந்நன்றியறிதல் என்ற அதிகாரத்தில் மட்டுமல்லாமல் நடுவுநிலைமை, பண்புடைமை, குற்றங்கடிதல், வினைத்தூய்மை  போன்ற அதிகாரங்களில் கூட நன்றியை (நன்மையை) சிறப்பித்துக் கூறியுள்ளார். 

நன்றி என்ற சொல்லை நம் பண்டைத்தமிழர் நன்மை என்ற கருத்தில் உபயோகித்துள்ளனர். ஔவையார் "நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் அந்நன்றி என்று தரும்கொல் எனவேண்டா" எனக் கூறிய இடத்தில் ஒருவர்க்கு நாம் ஒரு நன்மை செய்தால் அந்த நன்மை எப்போது எமக்குத் திரும்பக்கிடைக்கும் என்று யோசிக்கவேண்டாம் எனக்கூறுகிறார். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இதில் நாம் இன்று கூறும் வாய் வார்த்தையையா ஔவையார் நன்றி என்றார்? அப்படிக் கூறியிருப்பின் 'நன்றி ஒருவர்க்கு செய்தக்கால்' எனக்கூறியிருக்கமாட்டார். 'நன்றி ஒருவர்க்கு சொன்னாக்கால்' என்றே கூறியிருப்பார். 

இது மட்டும் எனக்குப் புரியாத புதிரில்லை. இதற்கு மேலேயும் இருக்கின்றது? இது எனது அறியாமையா? அன்றேல் இன்றைய தமிழர்களாகிய நாம் 'நன்றி' என்ற சொல்லின் உண்மைத் தன்மையை பிறமொழி மோகத்தில் தொலைத்துவிட்டோமா? எம்நாட்டில் ஒட்டவந்தவர் மேல் எமக்கு ஏற்பட்ட மோகத்தால் கடந்த சில நூற்றாண்டுகளில் நாம் தொலைத்தவை எண்ணிலடங்கா. 'இரண்டாயிரத்து நானூறூ ஆண்டுகளின் முன்னர் "தமிழ்கூறு நல்லுலகம்" என்று பனம்பாரனார் கூறினார். இவர் தொல்காப்பியத்துக்கு சிறப்புப் பாயிரம் எழுதியவர். அவர் காலத்திற்கு முன்பிருந்தே நம் தமிழினம் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ்ந்தது. தனக்கென ஒரு நாகரீகத்தை உருவாக்கி அதனை உலகுக்கு அளித்தது. அதனாற்றான் தொல்பொருள் ஆய்வுகளில் தமிழனின் தொன்மங்கள் உலகெங்கும் கிடைக்கின்றன' என மார்தட்டிச் சொல்லும் எம்மைப்பார்த்து எம் இளம் சந்ததியினர் சிரிக்காது இருக்க வேண்டும். 

அதற்கு நாம் செய்யத்தக்கது என்ன? நாமும் எமது முன்னோரும் எவற்றை எப்படித் தொலைத்தோம் என்ற தரவையாவது எமது சந்ததியினருக்கு வைத்துச் செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். அகஆதாரங்களையும் புறஆதாரங்களையும் கொண்டு இதனை நாம் காட்டலாம். பண்டைய நூல்கள் சொல்லும் ஆதாரங்கள் அகஆதாரங்களாகும். கல்வெட்டு தொல்பொருள் போன்றவற்றால் கிடைக்கும் ஆதாரங்கள் புறஆதாரங்களாகும். என்னுள் நன்றியைப் பற்றிய புதிரைப்போட்டவர் திருவள்ளுவரே. ஆதலால் அவர் திருக்குறளில் கூறியுள்ள அகஆதாரங்களைக் கொண்டு நன்றி என்ற சொல்லின் புரியாத புதிரைப் புரிந்துகொள்வோம்.

திருவள்ளுவர் ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்தில் 
"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்"
என்கிறார். ஒருவன் அடையக்கூடிய நன்மைகளுக்கு அவனின் நல்லொழுக்கமே வித்தாகுமாம். 
"கொடுவாக வையாது உலகம் நடுவாக 
நன்றிக்கண் தங்கினான் தாழ்வு"           - (குறள்:117)
என நன்றியை நடுவுநிலைமை அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். நடுவுநிலைமையோடு நன்மைகள் செய்து வாழ்ந்தவர் வறுமை அடைந்தாலும் உலகம் அதனை தாழ்வாக நினைக்காதாம். இனியவை கூறல் எனும் அதிகாரத்தில் பயன்தரும் சொற்களைப் பேசுவதால் மகிழ்வைத்தரும் நன்மைகள் உண்டாகும் என்பதை "நயன்ஈன்று நன்றி பயக்கும்" எனச்சொல்கிறார். 

தூது என்ற அதிகாரத்தில் கூட மாற்றான் மனம் மகிழுமாறு எடுத்துக்கூறி நன்மை உண்டாக்குவதாக தூது இருக்க வேண்டும் என்பதை 
"நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது" என்கிறார். 

குற்றம் கடிதல் எனும் அதிகாரத்தில் எக்காலத்திலும் தன்னை உயர்வாக மதிக்கக்கூடாது, நன்மை தராத செயல்களைச் செய்யவும் கூடாது என்பதை
"வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை"                           -(குறள்: 439)  
எனக்கூறியவர், வினைத்தூய்மை அதிகாரத்திலும்
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை"                              -(குறள்: 652)
என புகழும் நன்மையும் தராத செயல்களை என்றும் செய்யாது விட்டுவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
 
எமக்குத் தேவைப்பட்ட  நேரத்தில் ஒருவர் செய்த நன்மை சிறிதாக இருந்தாலும் தினையளவு நன்மையாக இருந்தாலும் அந்த நன்மையை மறப்பது நன்றல்ல. ஒருவர் செய்த நன்மையை மறந்தவர்க்கு உய்வே கிடையாது. என்றெல்லாம் 'செய்நன்றிஅறிதல்'  அதிகாரத்தில் கூறுகிறார். நன்மையைக் கொடுக்காத செல்வத்தைப்பற்றி 'நன்றியில்செல்வம்' எனும் அதிகாரத்தில் சொல்கிறார். மேலே நன்றி எனச் சொன்ன இடங்களில் எல்லாம் நன்மை என்ற கருத்திலேயே திருவள்ளுவர் கூறுகிறார்.
 
அவர் பண்புடமை என்னும் அதிகாரத்தில் பிறரது இயல்பை அறிந்து நடக்கும் தன்மையைப்பற்றிக் குறிப்பிடுகிறார். அதில் யாருடைய பண்பை உலகம் பெரிதாகப் பாராட்டும் என்பதை
"நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு"                     - (குறள்: 994)
என்று கூறுமிடத்தில் நன்றியை தர்மமாகக்  காட்டுகிறார். அதாவது எல்லோரும் பயனடையக் கூடியவாறு நீதியுடன் தர்மத்தை செய்பவர் பண்பையே உலகம் பாராட்டுமாம். 
 
திருவள்ளூவர் நன்றியை நல்லது, நன்மை, தர்மம் போன்ற கருத்துக்களிலேயே கையாண்டுள்ளார். ஆனால் நாமோ ஒருவர் செய்த உதவிக்கு நன்றி கூறுகிறோம். அல்லது நமது நன்றியைத் தெரிவிப்பதற்காக பொருட்களைக் கொடுக்கிறோம். இந்நிலை ஏன் வந்தது என்பது எனக்குப் புரியவில்லை? உதவிசெய்தவர்க்கு நன்றி சொல்வதே இன்றைய தமிழர்களாகிய எமது பண்பாடு. ஆனால் திருவள்ளுவரோ எமக்கு முற்றிலும் முரணாக நிற்கிறார். 
 
தந்தையும் மகனும் ஒருவர்க்கொருவர் என்ன செய்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு நாடகக்காட்சியாகக் புதல்வரைப் பெறுதல் எனும் அதிகாரத்தில் காட்டுகிறார். நீங்களும் பாருங்கள். முதற்காட்சியில் ஒரு தந்தை தான் பெற்ற மகனை படிக்கவைத்து கற்றவர் அவையில் முன்வரிசையில் இருக்கக்கூடிய தகுதியை உண்டாக்க நன்றி(நன்மை) செய்கின்றான்.
"தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்"                        - (குறள்: 67)
 
அடுத்த காட்சியில் தந்தை செய்த நன்றியைப் பெற்றுக்கொண்ட மகனின் பெருமையை, புகழை மற்றவர்கள் பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்தவர்கள் இப்படிபட்ட பெருமைகளையுடைய மகனைப் பெற இவனுடைய தந்தை என்ன தவம் செய்தானோ! எனப் புகழ்கிறார்கள். மற்றோர் சொல்லும் அச்சொல்லைக் கேட்டு தந்தை மனம்மகிழும்படி மகன் உதவி செய்கின்றான்.
"மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்"     - (குறள்: 70)
தந்தை செய்த நன்றிக்கு மற்றவர்கள் புகழும்படி வாழ்வதே மகன் தந்தைக்குச் செய்யும் உதவியாகும்.
 
இதனால் நான் அறிந்து கொண்டது முதலில் செய்யப்படுவது நன்றி, அதற்கு நாம் செய்யும் கைமாறே உதவியாகும். அதனாலேயே 'அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்' என்றும் 'நன்றிக்கடன் தீர்த்தேன்' எனவும் சொல்லும் வழக்கமும் ஏற்பட்டிருக்கிறது. நன்றி என்பது செய்யப்படுவதே அல்லாமல் சொல்லப்படுதல்ல. உதவியும் செய்வதே அல்லாமல் சொல்வதல்ல. நம் முன்னோர்  நம்மைவிட பண்பாட்டில் நன்கு பண்பட்டிருந்தனர். சொல்வதைவிட செய்வதே பெரிதென எண்ணினர்.
 
அதனாலேயே ஒருவர் எதுவித நன்றியும் (நன்மையும்) செய்யாதிருக்க மற்றவர் செய்யும் உதவியை திருவள்ளுவர்
"செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது"                     - (குறள்: 101)
எனக்கூறியதோடு 
"உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து"        - (குறள்: 105)
என்பதில் ஒருவர் செய்த உதவியை அளவிடமுடியாதாம். அது உதவியைப் பெற்றுக்கொள்பவரின் மனதின் தன்மைக்கு ஏற்ற அளவில் இருக்குமாம் என்கிறார்.
 
கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். ஒருவர் செய்த நன்மைக்கு (நன்றிக்கு) நன்றிக்கடனாக உதவிசெய்தல் சிறந்ததா?  அல்லது நன்றி கூறுதல் சிறந்ததா? இதில் எதனை மிகவும் பண்பட்ட மனிதர்கள் செய்வார்கள்? நம் முன்னோர் எம்மைவிட எவ்வளவு பண்பட்டவராய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும். இவ்வாறு மிகஉன்னத நிலையிலிருந்த எமது பண்டைத்தமிழர் பண்பாட்டைத் தொலைத்துவிட்டு மற்றவர்கள் போல் வாய்வார்த்தையில் நன்றி சொல்கிறோம் இல்லையே என அங்கலாய்த்துக் கொண்டும், மேடைகளிலே ஒரு பெரிய பட்டியலை வைத்துக்கொண்டு அரைமணி நேரத்திற்கு மேலாக நன்றி கூறிக்கொண்டே இருக்கிறோம். இது ஏன்? இதுவும் எனக்குப் புரியாத புதிரே! 
 
நன்றி என்பது ஒருமையில் சொல்லப்படும் சொல். அதற்கு பன்மை கிடையாது. நன்றி என்பதுடன் 'கள்' விகுதி சேர்த்து ஏன் பன்மையில் சொல்கிறோம்? என்பதும் எனக்குப் புரியாத புதிரே! நன்றி சொல்லவேண்டும் என்றால் பல்லாண்டு! பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு! பலகோடி நூறாயிரத்தாண்டு! என வாழ்த்துவது போல்  பலநன்றி, பல்லாயிர நன்றி, பலகோடி நன்றி என்றோ நன்றிபலகோடி என்றோ சொல்லி மகிழலாம். Thank என்பதை நன்றி என்றும்  Thanks என்பதற்கு நன்றிகள் என்றும் யாரோ ஒருவர் சொல்லத் தொடங்க நாமும் தொடர்கதையாகத் தொடர்கிறோம்.
 
இவற்றறையெல்லாம் விடப்புரியாத பெரிய புதிர் ஒன்று இருக்கிறது. தமிழ் என்பதை ஏன் ஆங்கிலத்தில் 'Tamil' என எழுதுகிறோம்? சொல்கிறோம்? 'Thamil' என்று எழுதலாமே? யாரோ விட்ட பிழையை நாம் ஆண்டாண்டு காலமாகத் தொடர்வது ஏனோ??
இனிதே,
தமிழரசி
  • Like 5
Link to comment
Share on other sites

2 hours ago, யாயினி said:

இவற்றறையெல்லாம் விடப்புரியாத பெரிய புதிர் ஒன்று இருக்கிறது. தமிழ் என்பதை ஏன் ஆங்கிலத்தில் 'Tamil' என எழுதுகிறோம்? சொல்கிறோம்? 'Thamil' என்று எழுதலாமே? யாரோ விட்ட பிழையை நாம் ஆண்டாண்டு காலமாகத் தொடர்வது ஏனோ??

உண்மைதான்... நானும் இதை எண்ணுவதுண்டு. பகிர்வுக்கு நன்றி 

7 hours ago, யாயினி said:

இன்று ரொறன்ரோ 187 ஆவது ஆண்டில் கால் பதிக்கிறது.🇨🇦

யாயினியின் இந்த பக்கம் 136ஆவது பக்கம் திருப்பி உள்ளது..🤭

வாழ்த்துக்கள் யாயினி 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து உலக பெண்கள் தினமான நாளை மார்ச் 8 திகதி தொடக்கம், Tim Hortons வருடம் தோறும் நடத்தும் role up the win போட்டியும் ஆரம்பமாகிறது.😀🤭

அனைத்துலக பெண்களுக்கும் மகளீர் தின நல் வாழ்த்துக்கள்.💐🌻

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவிட19 தொற்றால் மரணமடைந்த  கனேடியர்களை நினைவு கூறும் தேசிய தினமாக மார்ச்11 திகதியை பிரதமர் யஸ்ரின் ரூடோ அறிவித்துள்ளார்.

தேசியம் இணையத்திலிருந்து..

Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tamil .....thamil .......= தப்பு.....முன்பு tamizh  = தமிழ் என்றுதான் வழக்கத்தில் இருந்தது.....!

பின்பு tamil  என்றே எல்லோரும் பின்பற்றுகின்றனர்.....!

Why is it Tamil Nadu and not Tamizh Nadu ? #Kosh - YouTube

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Daylight saving time 2021: When do the clocks go forward in Ontario?

Sean Davidson

Sean DavidsonMulti-Platform Writer, CTV News Toronto

@SeanDavidson_ Contact

Published Thursday, March 11, 2021 3:45PM EST
Daylight savings 2021 time change

Daylight saving 2021 begins on Sunday in Ontario, pushing the time forward one hour. (Pexels)

SHARE:

 
 
LRedditTORONTO -- Daylight saving time for 2021 will begin this weekend, pushing clocks forward an hour in Ontario and most of Canada early Sunday morning.

Here's everything you need to know about the clocks going forward and the beginning daylight saving time in the province.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் வயது வந்த பெற்றோரை வைத்திருப்போர் அவர்களுக்கு உரிய கொரோனா தடுப்பூசியை (pharmacy/) தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.இது கனேடியர்களுக்கு.

ஊசி போடுவதும் போடாமல் விடுவதும் அவரவர் விருப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி யாயினி.
வெகுவிரைவாக நாட்கள் ஓடிவிட்டன.

நீங்கள் போட்டதை நம்பாமல் எனது வீட்டு கலண்டரையும் பார்த்து உறுதி செய்தேன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி யாயினி.
வெகுவிரைவாக நாட்கள் ஓடிவிட்டன.

நீங்கள் போட்டதை நம்பாமல் எனது வீட்டு கலண்டரையும் பார்த்து உறுதி செய்தேன்.

நான் சொல்வதை நீங்களும் நம்பறதில்லையா ரூபாட்..🤭👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

நான் சொல்வதை நீங்களும் நம்பறதில்லையா ரூபாட்..🤭👋

யாயினி நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.
அவ்வளவு சீக்கிரம் வந்துட்டுதே?
இது உண்மை?
என்று நம்பமுடியாமல் இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

யாயினி நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.
அவ்வளவு சீக்கிரம் வந்துட்டுதே?
இது உண்மை?
என்று நம்பமுடியாமல் இருந்தது.

நோ.. நான் தவறாகவே நினைக்க வில்லை.. வாயை முடிட்டு மேலே சிரிக்கிறேன் பாருங்கள்.. சும்மா பகிடியாக எல்லாம் சொன்னால்...👋😀

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி யாயினி......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் நாளை இலைத் துளிர் காலம் ஆரம்பமாகிறது.🌱🌿🍃☘️🍀🌻🌹🌷🍁🍂

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, யாயினி said:

கனடாவில் நாளை இலைத் துளிர் காலம் ஆரம்பமாகிறது.🌱🌿🍃☘️🍀🌻🌹🌷🍁🍂

யாயினி, ஜேர்மனியிலும்... நாளைக்குத்தான்  வசந்த காலம், ஆரம்பிக்கின்றது.  
ஆனால்.... இப்ப சாதுவாக, பனி கொட்டி... உடனே கரைகின்றது.
வாற  புதன் கிழமையிலிருந்து, +10  பாகைக்கு மேல் வரும் என்று.. 
காலநிலை அறிக்கை சொல்கின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இங்கு ஆலங்கட்டி மழை(சிறிய சிறிய ஐஸ் உருண்டைகள்) பெய்தது. யாராவது அதில் சறுக்கி விழுவார்கள் என்று யன்னலால் பார்த்து கொண்டிருந்தேன், துரதிஷ்டவசமாக யாரும் விழவில்லை......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

நேற்று இங்கு ஆலங்கட்டி மழை(சிறிய சிறிய ஐஸ் உருண்டைகள்) பெய்தது. யாராவது அதில் சறுக்கி விழுவார்கள் என்று யன்னலால் பார்த்து கொண்டிருந்தேன், துரதிஷ்டவசமாக யாரும் விழவில்லை......!  🤔

🤭

Link to comment
Share on other sites

On 20/3/2021 at 09:15, suvy said:

நேற்று இங்கு ஆலங்கட்டி மழை(சிறிய சிறிய ஐஸ் உருண்டைகள்) பெய்தது. யாராவது அதில் சறுக்கி விழுவார்கள் என்று யன்னலால் பார்த்து கொண்டிருந்தேன், துரதிஷ்டவசமாக யாரும் விழவில்லை......!  🤔

என்னவொரு வில்லத்தனம்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஜெகதா துரை said:

என்னவொரு வில்லத்தனம்.!

ஆ..ஆ.🤭😁 எனக்கு சுவியண்ணா எழுதியிருப்பதை படிக்கும் போது வேலையிலிருந்து ஓய்வு பெற்ற  பின் அனேகரது நிலை சன்னலால் வெளியே பார்த்துக் கொண்டு இருபடபதாகவே அமைந்திருக்கும்..அதுவும இந்தக் கொரோணா வந்த பின் எங்க போறது .....என்ன செய்வது.......இவை தான் என் கண் முன் வந்து போனது...🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜெகதா துரை said:

என்னவொரு வில்லத்தனம்.!

 

On 20/3/2021 at 20:12, யாயினி said:

🤭

சமூக அக்கறையை வில்லத்தனம் என்று கொச்சப்படுத்தக் கூடாது பிள்ளைகாள்.......யாராவது விழுந்திருந்தால் சிரிப்பை அடக்கிக் கொண்டென்றாலும் ஓடிப்போய் தூக்கி விடுவன்தானே ......உங்களுக்கு முன்னால நான் சறுக்கி விழுந்தால் நீங்கள் சிரிக்க மாட்டீர்களா மனசாட்ச்சியுடன் சொல்லுங்கள். ஜஸ்ட் லைக் தட் அப்படி இது சும்மா ஒரு இதுதான்.......!  😂

3 hours ago, யாயினி said:

ஆ..ஆ.🤭😁 எனக்கு சுவியண்ணா எழுதியிருப்பதை படிக்கும் போது வேலையிலிருந்து ஓய்வு பெற்ற  பின் அனேகரது நிலை சன்னலால் வெளியே பார்த்துக் கொண்டு இருபடபதாகவே அமைந்திருக்கும்..அதுவும இந்தக் கொரோணா வந்த பின் எங்க போறது .....என்ன செய்வது.......இவை தான் என் கண் முன் வந்து போனது...🤔

இருக்கும் இருக்கும் .......நான் படுகிற பாடு எனக்கெல்லோ தெரியும்.... வருகிற 1 ம் திகதி இப்ப இருக்கிற வீடு திருப்பி திருத்திக் குடுக்க வேணும்......(பேரப்பிள்ளைகளின் விளையாட்டுகள் எல்லாம் வீடு முழுக்க சித்திரங்களாய் கிடக்கு.....பெயிண்ரிங், பேப்பர் ஓட்டுதல், கழுவல் ,துடையல் என்று ஒரே வேலை..... நானும் மடமும் மட்டும்தான். பிள்ளைகளும் வரேலாது.....இவ்வளவுக்குள்ளும் யாழுக்குள்ளும் வந்து போறதே பெரிய விடயம்.......!   😁

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

 

சமூக அக்கறையை வில்லத்தனம் என்று கொச்சப்படுத்தக் கூடாது பிள்ளைகாள்.......யாராவது விழுந்திருந்தால் சிரிப்பை அடக்கிக் கொண்டென்றாலும் ஓடிப்போய் தூக்கி விடுவன்தானே ......உங்களுக்கு முன்னால நான் சறுக்கி விழுந்தால் நீங்கள் சிரிக்க மாட்டீர்களா மனசாட்ச்சியுடன் சொல்லுங்கள். ஜஸ்ட் லைக் தட் அப்படி இது சும்மா ஒரு இதுதான்.......!  😂

இருக்கும் இருக்கும் .......நான் படுகிற பாடு எனக்கெல்லோ தெரியும்.... வருகிற 1 ம் திகதி இப்ப இருக்கிற வீடு திருப்பி திருத்திக் குடுக்க வேணும்......(பேரப்பிள்ளைகளின் விளையாட்டுகள் எல்லாம் வீடு முழுக்க சித்திரங்களாய் கிடக்கு.....பெயிண்ரிங், பேப்பர் ஓட்டுதல், கழுவல் ,துடையல் என்று ஒரே வேலை..... நானும் மடமும் மட்டும்தான். பிள்ளைகளும் வரேலாது.....இவ்வளவுக்குள்ளும் யாழுக்குள்ளும் வந்து போறதே பெரிய விடயம்.......!   😁

நாமும் யஸ்ட் லைக் தற் அந்த பாணியில் தான் எழுதுறோம்..அப்புறம் மடம் என்றால் யாரு உங்கள் துணைவியாரா‌‌..சரி நேரம் கிடைக்கும் போது எல்லாம் யாழுக்கு வாங்கோ‌‌.‌‌.👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் குறிப்பாக ரொறன்ரோ பகுதியில் வாழும் இலங்கை ஓய்வூதியர்களுக்கான உங்கள் இருப்பை  உறுதி செய்வதற்கானக (life certificate) பூர்த்தி செய்து அனுப்புவதற்கான இறுதி திகதி மார்ச் 25/2021ஆகும்.அதாவது நாளைய தினம்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.