Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

காகம் கரைவது ஏன்? 'கா கா' என,

 

ஜயந்தன் பிழைத்துப்போன பின்பு, காக்கைகள் அனைத்தும் ஒன்றுகூடி இராமன் தங்கள் இனைத்தையே அழித்து விடாமல் காத்ததற்காக நன்றி தெரிவித்தன.பெருமானையும், பிராட்டியையும் வாழ்த்தின.
 

'கா கா' என, காகம் கரைவது ஏன்?

ராமன் ,வனவாசம் சென்றபோது, ஒரு நாள் சீதையின் மடியில் தலை வைத்து படுத்திருந்தான். உணவு தேடி லட்சுமணன் செ ன்றிருந்தான். அப்போது, அங்கு இந்திரனின் மகன் ஜயந்தன் வந்தான்.  சீதையின் அழகைக் கண்டு மயங்கிய ஜயந்தன், ராமன் தூங்கும் தைரியத்தில்,, காக்கை உருவம் கொண்டு, சீதையின் மார்பைக் கொத்தலானான்.

 

சீதையின் மார்பு புண்ணாகி, அதிலிருந்து வழிந்த ரத்தம் இராமன் மேல்பட்டது. ராமன் விழித்தான், சீதா  தேவியின் மார்பில் ரத்தம் சிந்துவதை பார்த்து நடந்ததை அறிந்தான். 
ஒரு தர்ப்பை புல்லை எடுத்து, அதில், பிரம்மாஸ்திர மந்திரத்தை பிரயோகித், காகத்தை   நோக்கி ஏவினான்,
அந்த தர்ப்பை, நெருப்பை கக்கியபடி, காகம் வடிவில் இருந்த ஜயந்தனைத் துரத்தியது.

உயிருக்குப்பயந்த ஜயந்தன், "காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்' என்று அலறிக் கொ ண்டேசிவன், பிரம்மா, இந்திரன் முதலியோரிடம் ஓடி முறையிட்டான். ஆனால் யாராலும் அவனுக்கு அபயம் தர இயலவில்லை.

மூவுலகும் ஓடிக் களைத்துப்போன காகம் , "இனி நம்மைக் காப்பார் யாரும் இலர். நாம் அழிவது உறுதி. இந்த அஸ்திரத்தை ஏவிய இராமனிடமே அடைக் கலம் புகுவோம்' என ஜயந்தன் முடிவு செய்தான்."அபயம், அபயம்' என்று ராமனிடமே ஓடினான். ராமன் திருவடிகளில் விழுந்தான்.

சீதையை அபகரித்த ராவணனுக்கே அடைக்கலம் தருவேன் என்ற அருட்கடல், இவனை கை விடுவானா? பிராட்டியும் அவனைக் காக்குமாறு ராமனிடம் பரிந்துரை செய்தாள்.

ஆயினும் இராமபாணம் வீ ணாகாதே! தவறு செய்தவர்களை ராமன் பொறுப்பான்; ஆனால் ஏவிய பாணம் மீளாதே! அன்னலின் கருணையால் அந்த பிரம்மாஸ்திரம் காகத்தின் ஒரு கண்ணை மட்டும் பறித்துக் கொண்டு இராமனிடம் திரும்பியது.  

உயிர் தப்பிய ஜயந்தன் காக வடிவம் நீங்கி, இராமனைப் பலவாறு துதி செய்துவிட்டுத் தேவலோகம் சென்றான்.அன்று முதல் தான், காகங்களுக்கெல்லா ம், இரு கண்ணுக்கு ஒரே கண்மணி ஆனது. காகங்களின், இரண்டு கண்களும், ஒரே திசையில் பார்க்கப் பயன்படாது. ஏதாவது ஒரு கண் தான் பார்க்கப் பயன்படும்.

ஜயந்தன் பிழைத்துப்போன பின்பு, காக்கைகள் அனைத்தும் ஒன்றுகூடி இராமன் தங்கள் இனைத்தையே அழித்து விடாமல் காத்ததற்காக நன்றி தெரிவித்தன.பெருமானையும், பிராட்டியையும் வாழ்த்தின.

பெண்பாலரை "யார்' என்று கேட்பதற்கு வடமொழியில் "கா' என்று கூறுவதுண்டு. ஆண் பாலரை "யார்' என்று கேட்பதற்கு, வடமொழியி ல் "க' என்று கூறுவர்.
தங்களுக்கு அருள்செய்த பிராட்டி யார்?, அருள்பாலித்த தெய்வம் யார் என,  காகங்கள் கேட்பதால் தான்,  கா க என, கத்துகின்றன. காகங்கள் கரையும்போது நீங்கள் நன்றாக கவனித்தால் அவை கா க, கா க என்றுதான் கரையும். காகங்களின் கரைத்தலுக்கு இப்படியும் ஓர் புராண கதை உள்ளது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அன்புத்தம்பி said:

 

காகம் கரைவது ஏன்? 'கா கா' என,

 

ஜயந்தன் பிழைத்துப்போன பின்பு, காக்கைகள் அனைத்தும் ஒன்றுகூடி இராமன் தங்கள் இனைத்தையே அழித்து விடாமல் காத்ததற்காக நன்றி தெரிவித்தன.பெருமானையும், பிராட்டியையும் வாழ்த்தின.
 
 

'கா கா' என, காகம் கரைவது ஏன்?

ராமன் ,வனவாசம் சென்றபோது, ஒரு நாள் சீதையின் மடியில் தலை வைத்து படுத்திருந்தான். உணவு தேடி லட்சுமணன் செ ன்றிருந்தான். அப்போது, அங்கு இந்திரனின் மகன் ஜயந்தன் வந்தான்.  சீதையின் அழகைக் கண்டு மயங்கிய ஜயந்தன், ராமன் தூங்கும் தைரியத்தில்,, காக்கை உருவம் கொண்டு, சீதையின் மார்பைக் கொத்தலானான்.

 

சீதையின் மார்பு புண்ணாகி, அதிலிருந்து வழிந்த ரத்தம் இராமன் மேல்பட்டது. ராமன் விழித்தான், சீதா  தேவியின் மார்பில் ரத்தம் சிந்துவதை பார்த்து நடந்ததை அறிந்தான். 
ஒரு தர்ப்பை புல்லை எடுத்து, அதில், பிரம்மாஸ்திர மந்திரத்தை பிரயோகித், காகத்தை   நோக்கி ஏவினான்,
அந்த தர்ப்பை, நெருப்பை கக்கியபடி, காகம் வடிவில் இருந்த ஜயந்தனைத் துரத்தியது.

உயிருக்குப்பயந்த ஜயந்தன், "காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்' என்று அலறிக் கொ ண்டேசிவன், பிரம்மா, இந்திரன் முதலியோரிடம் ஓடி முறையிட்டான். ஆனால் யாராலும் அவனுக்கு அபயம் தர இயலவில்லை.

மூவுலகும் ஓடிக் களைத்துப்போன காகம் , "இனி நம்மைக் காப்பார் யாரும் இலர். நாம் அழிவது உறுதி. இந்த அஸ்திரத்தை ஏவிய இராமனிடமே அடைக் கலம் புகுவோம்' என ஜயந்தன் முடிவு செய்தான்."அபயம், அபயம்' என்று ராமனிடமே ஓடினான். ராமன் திருவடிகளில் விழுந்தான்.

சீதையை அபகரித்த ராவணனுக்கே அடைக்கலம் தருவேன் என்ற அருட்கடல், இவனை கை விடுவானா? பிராட்டியும் அவனைக் காக்குமாறு ராமனிடம் பரிந்துரை செய்தாள்.

ஆயினும் இராமபாணம் வீ ணாகாதே! தவறு செய்தவர்களை ராமன் பொறுப்பான்; ஆனால் ஏவிய பாணம் மீளாதே! அன்னலின் கருணையால் அந்த பிரம்மாஸ்திரம் காகத்தின் ஒரு கண்ணை மட்டும் பறித்துக் கொண்டு இராமனிடம் திரும்பியது.  

உயிர் தப்பிய ஜயந்தன் காக வடிவம் நீங்கி, இராமனைப் பலவாறு துதி செய்துவிட்டுத் தேவலோகம் சென்றான்.அன்று முதல் தான், காகங்களுக்கெல்லா ம், இரு கண்ணுக்கு ஒரே கண்மணி ஆனது. காகங்களின், இரண்டு கண்களும், ஒரே திசையில் பார்க்கப் பயன்படாது. ஏதாவது ஒரு கண் தான் பார்க்கப் பயன்படும்.

ஜயந்தன் பிழைத்துப்போன பின்பு, காக்கைகள் அனைத்தும் ஒன்றுகூடி இராமன் தங்கள் இனைத்தையே அழித்து விடாமல் காத்ததற்காக நன்றி தெரிவித்தன.பெருமானையும், பிராட்டியையும் வாழ்த்தின.

பெண்பாலரை "யார்' என்று கேட்பதற்கு வடமொழியில் "கா' என்று கூறுவதுண்டு. ஆண் பாலரை "யார்' என்று கேட்பதற்கு, வடமொழியி ல் "க' என்று கூறுவர்.
தங்களுக்கு அருள்செய்த பிராட்டி யார்?, அருள்பாலித்த தெய்வம் யார் என,  காகங்கள் கேட்பதால் தான்,  கா க என, கத்துகின்றன. காகங்கள் கரையும்போது நீங்கள் நன்றாக கவனித்தால் அவை கா க, கா க என்றுதான் கரையும். காகங்களின் கரைத்தலுக்கு இப்படியும் ஓர் புராண கதை உள்ளது. 

பகிர்வுக்கு மிக்க நன்றி தம்பி.💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
′′ கையா சமஸ்கிருதம் ", கேப்ரியல்லா பர்னல் இங்கிலாந்தில் ஒரு பாடகர் மற்றும் சமஸ்கிருத ஆசிரியர். 5. வயதில் சமஸ்கிருதம் கற்க ஆரம்பித்தாள். பிறகு 8. வயதில் தத்துவம் கற்க ஆரம்பித்தாள்.
′′ சமஸ்கிருதம் கற்பது எனக்கு வேத ஓதும் முறையை பற்றிய ஆழமான புரிதலை அளிக்கிறது, மற்றும் தத்துவ அமைப்பைக் கூட ′′ என்று அவள் சொல்கிறாள். இந்தியாவில் சமஸ்கிருத மற்றும் துருபத் இசையைக் கற்றுக்கொண்டாள். துருபத் என்பது பழங்கால பாடல்களின் கலை.
அவள் மேலும் சொல்கிறாள், ′′ யூகேவில் சமஸ்கிருதத்திற்கு பெரிய பசி இருக்கிறது. நிறைய பேர் அதை படிக்க விரும்புகிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளாய் இந்தியா காவலில் வைத்திருக்கும் பாரம்பரியங்களையும் கலாச்சாரங்களையும் பலர் தங்கள் வாழ்வில் புகுத்த விரும்புகின்றனர்.
எழுத்துக்களைப் பயிற்சி செய்கிறார்கள், ஸ்லோகாக்களை ஒலிக்கிறார்கள், தேவநகரி ஸ்கிரிப்ட் எழுதக் கற்றுக்கொள்கிறார்கள்.
ஆக, ஆம், பிரிட்டனில் இந்தியாவில் உள்ள கலாச்சாரங்கள் பெரிதும் பிரபலமாகிவிட்டன."
Gaiea Sanskrit ஒரு பிரிட்டிஷ் பாடகியும் சமஸ்கிருத ஆசிரியையும் ஆவார். கபிரியேலா பர்னல் என்ற முழுப்பெயர் கொண்ட இவர் தனது ஐந்தாவது வயதில் சமஸ்கிருத மொழியைக் கற்கத் தொடங்கினார். இந்தியாவுக்கு வந்து சமஸ்கிருதமும் சங்கீதமும் பயின்றார். துருபத் என்பது பாடல்களைப் பாடும் ஒரு பழமையான பாணி. அந்த முறையை இவர் கற்றுக்கொண்டார். பகவத் கீதை ஸ்லோகங்கள் முழுவதையும் பாடி வெளியிட்டிருக்கிறார்.
சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள இங்கிலாந்தில் பெருமளவு மக்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரதம் காப்பாற்றி வந்திருக்கும் வழக்கங்களையும் பண்பாட்டையும் தம்முடைய வாழ்க்கையில் இணைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். தேவநாகரி அரிச்சுவடி எழுதுகிறார்கள், ஸ்லோகங்களைச் சொல்கிறார்கள். ஆம், இங்கிலாந்தில் இந்தியக் கலாசாரம் பெருமளவு பிரபலமாகவுள்ளது." என்று அவர் சொல்கிறார்,
இவர் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்குமிடையே ஒரு "வாழும் பாலம்" ஆகத் திகழ்கின்றார்.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வெளிப்புறம் 2021 பொங்கல் இரவில் ......
❤
படம்: Kumanan Kana
May be an image of outdoors and temple
 
 
 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அன்புத்தம்பி said:

spacer.png

பகிர்வுக்கு நன்றி 👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of animal and outdoors
 
 
 
2h  · 
26.05.2021 News Update
யானைத் தாக்குதல்: கிராமசேவகர்
அவரது மனைவியும் உயிரிழப்பு!
பூநகரி ஜெயபுரத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிர்வாகக் கிராம அலுவலகரும் அவரது துணைவியும் யானை தாக்கியதிலேயே உயிரிழந்துள்ளனர்
இந்தத் துயரச் சம்பவம் இன்று இடம்பெற்றது.
சம்பவத்தில் நயினாதீவைப் பிறப்பிடமாகவும் முழங்காவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பூநகரி பிரதேச செயலக நிர்வாகக் கிராம அலுவலகர் பாலசிங்கம் நகுலேஸ்வரன் (வயது-52) மற்றும் அவரது மனைவி சுனித்தா (வயது-50) ஆகிய இருவருமே உயிரிழந்தனர்.
கிராம அலுவலகர் சம்பவ இடத்திலும் அவரது மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
கிராம அலுவலகரின் மனைவியின் இறப்பு விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கலைவாணர்"என்.எஸ்.கிருஷ்ணன்,சி.எஸ்.பாண்டியன்,டி.ஏ.மதுரம் பங்குபெறும் இந்த நகைச்சுவைக் காட்சி சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இலங்கை வானொலியின்,கொழும்பு சர்வதேச வானொலியில் பதிவு செய்தது.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூங்கும் அழகி என்பது ஒரு அழகிய இளவரசி மற்றும் ஒரு இளவரசன் பற்றிய செவ்வியல் தேவதைக் கதை ஆகும். 1697 ஆம் ஆண்டில் சார்லஸ் பெரால்ட் வெளியிட்ட "மதர் கூஸ் கதைகள்" தொகுப்பில் இது முதலாவது கதையாகும்.
 

தூங்கும் அழகி - Sleeping Beauty  Prince_Florimund_finds_the_Sleeping_Beauty_-_Project_Gutenberg_etext_19993



இந்தோனேசியாவில் பஞ்சமாசின் நகரில் உள்ள Echa,என்ற பெண் 2017 இல் 13 நாட்கள் தொடர் தூக்கத்திலும் ,ஒவ்வொரு தடவையும் குறைவாக/கூடுதலாகவும் தூங்கத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.அவரை சோதனை செய்த Ansari Saleh hospital ,அவருக்கு hypersomnia என்ற நோய் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
 

தூங்கும் அழகி - Sleeping Beauty  Echa_2



(Tribunn-இந்தொனேசியா)

கொலொம்பியா,அக்காசியஸ் ஐ சேர்ந்த 17 வயதான Sharik Tovar, என்ற பெண் 48 நாட்கள் தொடர் தூக்கத்திலும் சென்ற ஆண்டு 2 மாதங்கள் தூக்கத்தில் இருந்த இவருக்கு 2 வயதில் இருந்தே Kleine-Levin syndrome என்ற நோய் இருப்பதாக சொல்லப்படுகிறது.இவர்களுக்கு தூக்கத்திலேயே திரவ உணவை கொடுப்பதாக தாயார் கூறுகிறார்.  (Caracol News)
 

தூங்கும் அழகி - Sleeping Beauty  Tidur%2B2%2Bbulan


 

தூங்கும் அழகி - Sleeping Beauty  0_PAY-CEN-SleepingDisease-04



இப்படியான தொடர் தூக்க நோய் உள்ளவர்கள் 40 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்த அழகன் கும்பகர்னன் ஆறு மாதம் தூக்கத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
 

தூங்கும் அழகி - Sleeping Beauty  Large_Kumbhakarna_wake_up_from_sleep-23046
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

May be an image of sculpture, temple, outdoors, monument and text that says 'யாழி... யாளி அறிந்து கொள்ளுங்கள் தம்பி தமிழ்.'
 
 
 
*யாழி(யாளி)*
***************************
நம்மில் எத்தனைப் பேருக்கு யாழி(யாளி) என்றால் என்னவென்று தெரியும்?.
யாழிகள் - தென்னிந்திய கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம்.
கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணம். சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கபெற்றுள்ளது.
சிங்கத்தின் தலை கொண்டதை "சிம்ம யாழி" என்றும்,
ஆட்டுத்தலை கொண்டதை "மகர யாழி" என்றும்,
யானை முகத்தை "யானை யாழி" என்றும் அழைக்கிறார்கள்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சச உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள்.
பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது.
அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது.....
சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள்.
அப்படியானால் இவை போருக்கு பயன் படுத்தப் பட்டிருக்குமா?..
இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால், இந்த யாழிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை "யாழி வரிசை" என்றே அழைக்கிறோம்.........
ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில் கூட இந்த யாழிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது..
உருட்டும் கண்களோடும், கோரப் பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது. மேலும் தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாழியின் சிலையும், அந்த யாழி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள்......
இப்படிப்பட்ட யாழி சிலை தென் இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன.....
உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை.
குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாழி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம்..........
அது தான் யாழி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் அவலநிலை.........
யாழிக்கு எத்தனை கோவில்களில், எத்தனை விதமான சிலைகள் உள்ளன? யாழியில் எத்தனை வகைகள் உள்ளன? பண்டைய காலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா? .......
யாழி உருவம் எங்கெல்லாம் பயன் படுத்தப் படுகிறது? நமது சிறிய கோவில்களிலும் யாழியின் உருவம் உள்ளதை நாம் அறிவோமா?.........
யாழியைப் பற்றி புராணங்கள் ...என்ன...? சொல்கின்றன? யாழி என்ற உயிரினம் கற்பனையா? இல்லை !.... அறிவியல் பூர்வமாக அது ஒரு உயிரினமா? .....
யாழி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகமா? வாழாத ஒரு உயிரினத்தை ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்க காரணம் என்ன? .......
குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழ் சமூகத்தில் இவற்றை குறித்து யார் ஆராய்ச்சி செய்யப் போகிறார்?........
எதற்குமே பதில் இல்லை !!
யாழிகள் ஒருவேளை கற்பனை விலங்காகவே இருந்தாலும் கூட...
சீனர்களின் புராதன விலங்கு டிராகன் போல...
எகிப்தியரின் புராதன பறவை ஃபீனிக்ஸ் போல...
தமிழரின் புராதன விலங்கு யா‌ழி........
அவை போற்றப் பட வேண்டும்.......
 
 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, யாயினி said:

 

May be an image of sculpture, temple, outdoors, monument and text that says 'யாழி... யாளி அறிந்து கொள்ளுங்கள் தம்பி தமிழ்.'
 
 
 
*யாழி(யாளி)*
***************************
நம்மில் எத்தனைப் பேருக்கு யாழி(யாளி) என்றால் என்னவென்று தெரியும்?.
யாழிகள் - தென்னிந்திய கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம்.
கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணம். சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கபெற்றுள்ளது.
சிங்கத்தின் தலை கொண்டதை "சிம்ம யாழி" என்றும்,
ஆட்டுத்தலை கொண்டதை "மகர யாழி" என்றும்,
யானை முகத்தை "யானை யாழி" என்றும் அழைக்கிறார்கள்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சச உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள்.
பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது.
அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது.....
சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள்.
அப்படியானால் இவை போருக்கு பயன் படுத்தப் பட்டிருக்குமா?..
இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால், இந்த யாழிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை "யாழி வரிசை" என்றே அழைக்கிறோம்.........
ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில் கூட இந்த யாழிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது..
உருட்டும் கண்களோடும், கோரப் பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது. மேலும் தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாழியின் சிலையும், அந்த யாழி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள்......
இப்படிப்பட்ட யாழி சிலை தென் இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன.....
உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை.
குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாழி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம்..........
அது தான் யாழி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் அவலநிலை.........
யாழிக்கு எத்தனை கோவில்களில், எத்தனை விதமான சிலைகள் உள்ளன? யாழியில் எத்தனை வகைகள் உள்ளன? பண்டைய காலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா? .......
யாழி உருவம் எங்கெல்லாம் பயன் படுத்தப் படுகிறது? நமது சிறிய கோவில்களிலும் யாழியின் உருவம் உள்ளதை நாம் அறிவோமா?.........
யாழியைப் பற்றி புராணங்கள் ...என்ன...? சொல்கின்றன? யாழி என்ற உயிரினம் கற்பனையா? இல்லை !.... அறிவியல் பூர்வமாக அது ஒரு உயிரினமா? .....
யாழி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகமா? வாழாத ஒரு உயிரினத்தை ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்க காரணம் என்ன? .......
குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழ் சமூகத்தில் இவற்றை குறித்து யார் ஆராய்ச்சி செய்யப் போகிறார்?........
எதற்குமே பதில் இல்லை !!
யாழிகள் ஒருவேளை கற்பனை விலங்காகவே இருந்தாலும் கூட...
சீனர்களின் புராதன விலங்கு டிராகன் போல...
எகிப்தியரின் புராதன பறவை ஃபீனிக்ஸ் போல...
தமிழரின் புராதன விலங்கு யா‌ழி........
அவை போற்றப் பட வேண்டும்.......
நல்ல ஒரு பதிவு மிக்க நன்றி பகிர்ந்து கொண்டமைக்கு
 
 

 

 

 
 

உலகின் மிகப்பெரிய விலங்கு: யாளி

main-qimg-bec27fe003907db0274dac3c4269a5b1%2B-%2BCopy.png
   நாம் அனைவரும் டைனோசர் என்ற விலங்கை ஆங்கில படங்களில் கண்டு அதுவே உலகில் பெரிய விலங்கு என் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அதை விட மிக பெரிய  விலங்கு நமது குமரி கண்டத்தில் இருந்தது என்றால் உங்களால் நம்ப முடியுமா! ஆம் நமது பகுதியில் இருந்த உலகிலே   மிக பெரிய விலங்குதான் யாளி .இதை பண்டைய தமிழர்கள் தன் திறமைகளால் அதன் மனதை கட்டுபடுத்தி அதை போர்களில் பயன்படுத்தினர் .அத்தகைய விலங்கை பற்றி காண்போம்.
maxresdefault%2B-%2BCopy.jpg
    யாளி என்பது தமிழ் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். இதை வியாழம், என்றும் அழைக்கிறார். இவற்றைப் பொதுவாக தமிழ் கோயில்களின் தூண்களில்காணலாம். தென்னிந்தியச் சிற்பங்களில்  பரவலாக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம்போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம்.

35999069_235295270605292_4533341189268570112_n%2B-%2BCopy.jpg
பொதுவாக யாளியின் முக்கிய வகைகள்
·         சிம்ம யாளி

·         மகர யாளி

·         யானை யாளி

 
    சிங்கத்தின் தலை கொண்டதை "சிம்ம யாழி" என்றும்,
 
    ஆட்டுத்தலை கொண்டதை "மகர யாழி" என்றும்,
   யானை முகத்தை "யானை யாழி" என்றும் அழைக்கிறார்கள்.
 
 
   நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மிக பெரிய  உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள். பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது. அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள்.
 
இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால், இந்த யாழிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை "யாழி வரிசை" என்றே அழைக்கிறோம். 
Yali-mandam.jpg
        ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில் கூட இந்த யாழிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது. உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது. மேலும் தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாழியின் சிலையும், அந்த யாழி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட யாழி சிலை தென் இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன. உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை. குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாழி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம். அது தான் யாழி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் நிலை ஆகும் 
images%2B%25282%2529%2B-%2BCopy.jpg
      யாழிக்கு எத்தனை கோவில்களில், எத்தனை விதமான சிலைகள் உள்ளன. யாழியில் எத்தனை வகைகள் உள்ளன. பண்டைய காலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா? யாழி உருவம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது? நமது சிறிய கோவில்களிலும் யாழியின் உருவம் உள்ளதை நாம் அறிவோமா? யாழியைப் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன? யாழி என்ற உயிரினம் கற்பனையா? இல்லை அறிவியல் பூர்வமாக அது ஒரு உயிரினமா? யாழி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகமா? வாழாத ஒரு உயிரினத்தை ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்க காரணம் என்ன? குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழ் சமூகத்தில் இவற்றை குறித்து யார் ஆராய்ச்சி செய்யப்போகிறார்? பதவிக்கு அடித்துக்கொள்ளும் தமிழக அரசியலில் இவற்றின் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா அல்லது கடைசி வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இவை மண்ணோடு மண்ணாகிவிடுமா?
WlLU_vj0_400x400.jpg
என்னைப்பொருத்தவரை.... 
யாழிகள் ஒருவேளை கற்பனை விலங்காகவே இருந்தாலும் கூட...
சீனர்களின் புராதன விலங்கு டிராகன் போல...
எகிப்தியரின் புராதன பறவை ஃபீனிக்ஸ் போல...
தமிழரின் புராதன விலங்கு யா‌ழி
அவை போற்றப்பட வேண்டும்.
Yale_salient.gif

 

தமிழ் வேந்தன்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அன்புத்தம்பி said:

 

 

 
 

உலகின் மிகப்பெரிய விலங்கு: யாளி

main-qimg-bec27fe003907db0274dac3c4269a5b1%2B-%2BCopy.png
   நாம் அனைவரும் டைனோசர் என்ற விலங்கை ஆங்கில படங்களில் கண்டு அதுவே உலகில் பெரிய விலங்கு என் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அதை விட மிக பெரிய  விலங்கு நமது குமரி கண்டத்தில் இருந்தது என்றால் உங்களால் நம்ப முடியுமா! ஆம் நமது பகுதியில் இருந்த உலகிலே   மிக பெரிய விலங்குதான் யாளி .இதை பண்டைய தமிழர்கள் தன் திறமைகளால் அதன் மனதை கட்டுபடுத்தி அதை போர்களில் பயன்படுத்தினர் .அத்தகைய விலங்கை பற்றி காண்போம்.
maxresdefault%2B-%2BCopy.jpg
    யாளி என்பது தமிழ் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். இதை வியாழம், என்றும் அழைக்கிறார். இவற்றைப் பொதுவாக தமிழ் கோயில்களின் தூண்களில்காணலாம். தென்னிந்தியச் சிற்பங்களில்  பரவலாக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம்போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம்.

 

35999069_235295270605292_4533341189268570112_n%2B-%2BCopy.jpg
பொதுவாக யாளியின் முக்கிய வகைகள்
·         சிம்ம யாளி

 

·         மகர யாளி

 

·         யானை யாளி

 

 
    சிங்கத்தின் தலை கொண்டதை "சிம்ம யாழி" என்றும்,
 
    ஆட்டுத்தலை கொண்டதை "மகர யாழி" என்றும்,
   யானை முகத்தை "யானை யாழி" என்றும் அழைக்கிறார்கள்.
 
 
   நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மிக பெரிய  உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள். பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது. அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள்.
 
இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால், இந்த யாழிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை "யாழி வரிசை" என்றே அழைக்கிறோம். 
Yali-mandam.jpg
        ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில் கூட இந்த யாழிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது. உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது. மேலும் தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாழியின் சிலையும், அந்த யாழி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட யாழி சிலை தென் இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன. உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை. குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாழி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம். அது தான் யாழி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் நிலை ஆகும் 
images%2B%25282%2529%2B-%2BCopy.jpg
      யாழிக்கு எத்தனை கோவில்களில், எத்தனை விதமான சிலைகள் உள்ளன. யாழியில் எத்தனை வகைகள் உள்ளன. பண்டைய காலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா? யாழி உருவம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது? நமது சிறிய கோவில்களிலும் யாழியின் உருவம் உள்ளதை நாம் அறிவோமா? யாழியைப் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன? யாழி என்ற உயிரினம் கற்பனையா? இல்லை அறிவியல் பூர்வமாக அது ஒரு உயிரினமா? யாழி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகமா? வாழாத ஒரு உயிரினத்தை ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்க காரணம் என்ன? குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழ் சமூகத்தில் இவற்றை குறித்து யார் ஆராய்ச்சி செய்யப்போகிறார்? பதவிக்கு அடித்துக்கொள்ளும் தமிழக அரசியலில் இவற்றின் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா அல்லது கடைசி வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இவை மண்ணோடு மண்ணாகிவிடுமா?
WlLU_vj0_400x400.jpg
என்னைப்பொருத்தவரை.... 
யாழிகள் ஒருவேளை கற்பனை விலங்காகவே இருந்தாலும் கூட...
சீனர்களின் புராதன விலங்கு டிராகன் போல...
எகிப்தியரின் புராதன பறவை ஃபீனிக்ஸ் போல...
தமிழரின் புராதன விலங்கு யா‌ழி
அவை போற்றப்பட வேண்டும்.
Yale_salient.gif

 

தமிழ் வேந்தன்வேந்தன்.

மிகவும் நன்றி தம்பி.💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்ப்பாணத் தமிழ்!
 
187827055_4034938509927544_2304010145652
 
யாழ்ப்பாணத்துக்குச் சென்று வந்த எங்கள் தமிழ் அறிஞர் ஒருவர் என்னிடம் கூறினார் . அவர் பிரயாணம் செய்த ரயில் வண்டியில் எதிர் இருக்கை மில் அமர்ந்திருந்த ஒரு யாழ்ப் பாணத்துத் தாய் தன் மடியில் இருந்த சிறு குழந்தைக்கு ஜன்னல் ஊடாக நிலவைக் காட்டி என்ன வடிவான நிலவு அங்கே பார் என்று சொன்னா ளாம் . அவர் அதிர்ந்து போனா ராம் . அழகு என்பதற்கு சரியான தமிழ் வடிவு என்பதே . ஏனெ மன்றால் வடிவம் ஒன்றில் இருந்து தோன்றுவதால் அது வடிவு . அது பண்புப் பெயர் . அந்த உயர் தமிழைத் தாய் பயன்படுத்திய போது மடியில் இருந்த குழந்தை விளங்கிக் கொண்டு நிலவைப் பார்க்கின்றது . நான் வியப்போடு அதைப் பார்த்தேன் என்று என்னிடம் சொன்னார் . உடனே நான் அவருக்குச் சொன்னேன் . அவள் தமிழிச்சி . அவர்கள் தமிழர்கள் . அவர்களின் இலக்கண நூலாசுக் கற்பிற்கப்படுவது தொல்காப்பிய வழி வந்த இலக்கணம் . ஆதனால் அந்த மக்கள் உயர்வான தமிழைப் பேசுகின்றார் கள் என்று சொன்னேன் . இது ஒரு உரையாடலில் தமிழ் அறிஞர் மு.வரதராஜன் அவர்கள் சொன்னது .
நான் ஒரு முறை சமயப் பிரசங்கம் செய்வதற்காக யாழ்ப்பாணத்துக்குப் போயிருந்தேன் .
அந்த நேரம் பார்த்து என்னை அழைத்தவர் வீட்டு முதியவர் ஒருவர் இயற்கை எய்தி விட்டார் . அதனால் காலையிலே அவர் வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்துக் கொண்டு தங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தேன் . அப்போது ஒரு பணியாள் வந்து சுவாமி தோஞ்சாச்சா சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா என்று கேட்டார் . எனக்கு விளங்கவில்லை . திரும்பத் திரும்ப அவர் தோஞ்சாச்சா தோஞ்சாச்சா என்று கேட்டார் . எனக்கு ஒன்றுமே புரிய வில்லை . அந்தப் பணியாள் சென்று ஒரு படித்த பெண்மணியை அழைத்து வந்தார் . அந்த அம்மா என்னிடம் சுவாமி துக்க வீட்டுக்கு போய் வந்தீர்களே தோய்ந்து விட்டீர்களா என்று இவன் கேட்கின்றான் . நீங்கள் ஸ்நானம் பண்ணி விட்டீர் களா என்று கேட்டார் . எனக்கு வெட்கமாகப் போய் விட்டது . தோய்தல் என்பதே நீராடுவதற்கு சரியான தமிழ் வார்த்தை . தோய்தல் என்றால் ஒன்றிலே முழுமையாக அமிழ்த்து போதல் என்று பொருள் . அந்தத் தொல்காப்பியத் தமிழை ஒரு வேலைக்காரனே சாதாரணமாகப் பேசுகின்றான் யாழ்ப்பாணத்தில் , தூய தமிழ் வாழ்ந்து கொண்டிருப்பது தமிழ்நாட்டில் அல்ல . அது யாழ்ப்பாண மக்களாலேயே பேசப்படுகின்றது . அங்கு தான் அது வாழ்கின்றது .
 
( திருமுருக கிருபானந்தவாரியார் )
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையின் தென்பகுதியை ஆக்கிரமித்துவரும் சீனா அதன் நிறுவனங்கள் மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான அறிவித்தல் பலகைகளில் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியான தமிழை நீக்கி சீன மொழியை புகுத்தி வருகின்றது.
இந்த நிலையில் சீனாவின் பிரசன்னத்தால் சினமடைந்த இந்தியா யாழில் உள்ள தனது துணைத் தூதரகத்தின் பெயர்பலகையில் இருந்து இலங்கையின் மற்றுமொரு உத்தியோகபூர்வ மொழியான சிங்களத்தை நீக்கி தனது மொழியான இந்தியை புகுத்தியுள்ளது.
இது தற்செயலாள மேற்கொள்ளப்பட்டதா அல்லது சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து வடக்கு கிழக்கு மாகாணங்களை காப்பாற்ற இந்தியா முயன்று வருகின்றதா என கொழும்பு வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன
May be an image of text that says 'Home செய்திகள் செய்திகள் பெயர் பலகையில் சிங்களத்தை நீக்கியது இந்தியா By ஆர்த்தி May 30, 2021 का प्रधान कोंसलावास LATE GENERAL OF INDIA துணைத் தாதரகம்'
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிரான்ஸில் அன்னையர் தினம்.

Fête des Mères..பிழையாக இருந்தால் திட்ட கூடாது.

😄.🌷🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, யாயினி said:

இன்று பிரான்ஸில் அன்னையர் தினம்.

Fête des Mères..பிழையாக இருந்தால் திட்ட கூடாது.

😄.🌷🙏

நீங்கள் யாழ் இணையத்தின்  மூலம் பிரெஞ்சு மொழி கற்கும் சிறந்த மாணவி.....நீங்கள் எப்படி பிழையாக எழுத முடியும்......உங்களை நினைத்து மிகவும் பெருமைப் படுகின்றேன்......!  💐  👏

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%

காதலின் சின்னம் என்ன என்று கேட்டேன் கல்லறை என்றாள்…..
கல்லறை போக பாதை கேட்டேன் என்னை காதலி என்றாள்……..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா என்ற அவதாரம்

appa+maan.jpg
 
    சந்த காலத்து வாசல் முனையில் என்னை விட்டு விட்டு கோடைகாலத்திலேயே தங்கி விட்ட என் தந்தையே! கண்கள் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்பவனை போல நீ இல்லாத நாளில் உன் அருமையை நினைத்து ஏங்குகிறேன். அம்மாவின் வயிற்றிலிருந்து வெளிவந்து விழுந்த என்னை தோள்மீது சுமந்தாயே! உன் சுருள்முடியை பற்றி கொண்டு என் பிஞ்சு கரத்தால் உன் முகத்தில் அறைந்த போதும் என் ஒவ்வொரு விரல்களுக்கும் முத்தம் கொடுத்தாயே! உன் பரந்த மார்பின் மீது ஏறி நின்று சங்கு சக்கர சாமி என்று குதித்து நான் ஆடிய போதும் என் குதிகால்களுக்கும் உதடுகளால் ஒத்தடம் கொடுத்தாயே! அத்தனையையும் நான் மறந்து போனது ஏன்?

வயல்காட்டு வரப்பின் மீது உன் விரல்பிடித்து நடப்பேன் இளகிய மண்ணிற்குள் என் இளம்பாதம் பதிந்து சேற்றை வாரி பூசியபோதும் உன் தோள்மீது என்னை உட்காரவைத்து என் கால் சேற்றை உன் கன்னத்தில் பூசிகொள்வாய் பறக்கும் தும்பியை பிடித்து வால்நுனியில் நூல்கட்டி பறக்க விட வேண்டுமென்று நான் ஆசைப்பட்டதற்கு நெருஞ்சி முட்கள் காலில் தைத்த போதும் ஒற்றை கையால் முள்ளை பிடுங்கி எரிந்து விட்டு தும்பி பிடிக்க தாவி நடப்பாய் கிடைத்த தும்பியையும் விட்டு விட்டு அடுத்த தும்பி வேண்டுமென்று அடம்பிடித்து நான் அழுதாலும் அதட்டலாக எதுவும் பேசாமல் என் ஆசையை தீர்க்க எத்தனிப்பாய்.

வெள்ளிகிழமை சந்தைக்கு நீ போய்விட்டு நடுசாமத்தில் வந்தாலும் தூங்கும் என்னை எழுப்பி உட்கார வைத்து இனிப்பு மிட்டாயை வாயில் திணிப்பாய் ஊரெல்லாம் சுற்றி ஓடி ஓய்ந்து போய் வீட்டுக்கு வந்து உண்ணாமல் குடிக்காமல் உறங்கி நான் போனால் அம்மா உருட்டி தரும் சாத உருண்டையை மடியில் என்னை சாத்தி கொண்டு கைநிறைய நீ எனக்கு ஊட்டி விடுவாய். உறக்கத்தில் நான் உன் வேஷ்டியில் சிறு நீர் கழித்தால் கூட ஆடை மாற்றாமல் என்னை சுத்தம் செய்வாய் சித்திரை மாதத்து கொடும் வெயில் புழுக்கத்தில் தூக்கம் வராமல் நான் நெளிந்து நெளிந்து படுத்தால் விடியும் வரைக்கும் விழித்திருந்து விசிறியால் காற்று வீசுவாய் ரோமங்கள் அடர்ந்த உன் மார்பில் என்னை சாய்த்து கொண்டு தட்டி கொடுப்பாய்.

மணலில் விரல்பிடித்து அச்சரம் எழுத துவங்கினால் என் விரல் கன்றி போய்விடுமென்று தவிட்டின் மீது எனக்கு எழுத சொல்லி கொடுத்தாய் பள்ளிக்கூடம் சென்று கற்க முடியாத பாடங்களை கிணற்று மேட்டில் என்னை உட்க்கார வைத்து தினசரி போதிப்பாய் ராபர்ட் கிளைவையும், கஜினி முகமதுவையும் மட்டுமே சொல்லி தந்த பாடபுத்தகங்களை தாண்டி விக்கிரமாதித்தனையும் வீர சிவாஜியையும் நீயே எனக்கு அறிமுகம் செய்தாய் வகுத்தல் கூட்டல் கணக்குகளை தாண்டி வாழ்க்கை கணக்கை வழிபிரளாமல் வகுத்துக்கொள்ள வழியும் சொன்னாய்.

கோவிலின் உள்ளே கொலுவிருக்கும் விக்கிரகங்கள் வழிபடுவதற்கு மட்டுமல்ல வடித்த சிற்பியின் கலைத்திறமையை ரசிப்பதற்கும் என்று யாருமே திறக்காத மூன்றாவது கண்ணை எனக்கு நீ திறந்து விட்டாய் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் என்று ஆன்றோர்கள் பாதையையும் கலித்தொகை தொடங்கி அகநானூறு வரையிலும் இலக்கிய சாரளத்தையும் எனக்கு காட்டினாய் எழுத்து கூட்டி வாசிக்க தெரியாத என்னை கவிதைகள் படைக்க ஆர்வமூட்டினாய் நான் எழுதி கொடுத்த வார்த்தை கிறுக்கல்களை முதல்முதலாக படித்து பேஷ் பேஷ் என தட்டி கொடுத்தாய். திக்கி திணறி பேசவே தயங்கும் என்னை மேடையில் ஏற்றி பேசவைத்து கைகளை தட்டினாய்

மருத்துவன் காட்டிய பத்திய உணவை தினமும் தின்று நாக்கு செத்து போன போது உச்சி வெயிலில் தோள்களில் என்னை சுமந்து கொண்டு அறுசுவை உணவை நான் அருந்தி பார்க்க பர்லாங்கு தூரம் நடந்து செல்வாய். எனது கற்பனை சிறகுகள் விரிந்து பறக்க பலவண்ண ஓவியங்களையும் உருவ பொம்மைகளையும் பரிசாக கொடுப்ப்பாய். ஒரு சிற்பி எப்படி சிலையை செதுக்குவானோ அப்படி என்னை செதுக்கி பார்த்த என் ஞான தந்தையே! எல்லாவற்றையும் உன்னிடமிருந்து பெற்ற நான் உனக்கு தந்தது என்ன? உச்சி கால வேளையிலும் நிலா உலா வரும் பொழுதிலும் எண்ணி பார்க்கிறேன் எண்ணி கொண்டே இருக்கிறேன். உனக்கு தந்தது என்னவென்று இன்னும் என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை.

மரங்கள் வந்து பாராட்டும் என்றா மேகம் மழையை தருகிறது? வண்டுகள் வந்து சாமரம் வீசும் என்றா மலர்கள் தேனை தருகிறது?. மீன்கள் கூடி கால்பிடித்து விடும் என்றா நதி நீரை தருகிறது? சூரியனும் சந்திரனும் வெளிச்சம் தருவது பூமியின் பாராட்டு வார்தைகளுக்காகவா? நீ பாலை வனத்தில் மழையை தந்த மேகம்!. மதுவை பிரதிபலன் பார்க்காமல் வாரி வழங்கும் மலர்! தாகம் தனிப்பதற்கென்றே அவதாரம் எடுத்த நதி! உயிரை வாழவைக்கும் ஆதவ மதி!.

ஏனோ தெரியவில்லை காலகாலமாக அம்மாவை மட்டுமே புகழ்கின்ற நாக்குகள் தகப்பனின் தியாகத்தை கண்டுகொள்வதில்லை தனது பிள்ளைகளின் உடல் நோகாமல் பாதுகாக்கும் பஞ்சு மெத்தைகளாக அப்பாமார்கள் அனைவரும் கட்டிலில் மீது அசையாமல் கிடக்கிறார்கள். சுடும் மணலில் தனது கால்களை புதைத்து உடலில் நிழலை பிள்ளைகளுக்கு கொடுத்து கால வெயிலில் பொசுங்கி கிடக்கிறார்கள். அம்மா கொடுத்த ரத்தம் வளர்ந்து செழிப்பதற்கு அப்பா கொடுக்கும் தழை உரம் ஏனோ அங்கிகாரம் இல்லாமல் மூலையில் கிடைக்கிறது.

அறிஞர்களின் அறிவும் தியாகிகளின் தியாகமும் அவர்கள் காலத்திற்கு பிறகு தான் கவனத்திற்கு வருமாம் அதே போலவே என் தந்தையே! நீ இல்லாத போது நீ கொடுத்த நிழலின் அருமை தெரிகிறது.நீ ஓடிய உழைப்பின் பெருமை புரிகிறது. நீ வாழ்ந்த காலத்தில் ஒரு சிறிய துண்டு துணியை கூட கொடுக்காத என்னை வாழ்த்தி நின்றாயே அந்த அர்ப்பணமே நீயே இறைவன் என்று எனக்கு அடையாளம் காட்டுகிறது. என்ன செய்வது கடவுளை நாங்கள் சிலைகளாகவே பார்க்கிறோம்.
 
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாலியின் சரித்திரம்

 

கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது. மாறாகத் தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின் சின்னமாக ஆண் தன் கழுத்தில் கோர்த்துக் கட்டிக் கொண்டால் அதைப் புலிப்பல் தாலி என்று குறிப்பிட்டுள்ளனர்.

'புலிப்பல் கோத்த புலம்பி மணித்தாலி' (அக நானூறு)
'புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார்' (புற நானூறு)
'இரும்புலி எயிற்றுத் தாலி குடையிடை மனவுகோத்து' (திருத்தொண்டர் புராணம்)

தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் இப்போது பயன்படுத்தப்பட்டு வரும் தாலிகளில் சிறு தாலி, பெருந்தாலி, பஞ்சார(கூடு)த் தாலி, மண்டைத் தாலி, நாணல் தாலி (ஞாழல் தாலி) பார்ப்பாரத் தாலி, பொட்டுத் தாலி ஆகியவை பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படுபவை ஆகும்.

ஒரு சாதிக்குள்ளேயே அதன் உள்பிரிவுகள் சிறுதாலி, பெருந்தாலி வேறுபாட்டால் அடையாளப்படுத்தப்பட்டன. ஒரு காலத்தில் உணவு சேகரிப்பு நிலையில் வாழ்ந்த சில சாதியார் இன்றுவரை கழுத்தில் தாலிக்குப் பதிலாகக் 'காரைக்கயிறு' எனும் கருப்புக்கயிறு கட்டிக் கொள்கின்றனர். கழுத்தில் காரை எலும்பை ஒட்டிக் கட்டப்படுவதால் அது காரைக்கயிறு எனப் பெயர் பெற்றது. பார்ப்பாரத் தாலியில் ஒரு வகை, பெண்ணின் மார்புகள் போன்ற இரண்டு உருவத்திற்கு நடுவில் ஒரு உலோகப் பொட்டினை வைத்துக் கொள்வதாகும். இது மனித குல வரலாற்றில் ஏதோ ஒரு தொல் பழங்குடியினரின் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும்.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாகக் கொள்ளலாம். அதன் பின்னரே, கோயில்களிலும் பெண் தெய்வங்களுக்குத் தாலி அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண விழாக்களும் நடத்தப்பட்டன. நாளடைவில் தாலி மறுப்பு அல்லது நிராகரிப்பு என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. தம் குலப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமை கோரி குமரிப் பகுதி நாடார்கள் நடத்திய தோள்சீலைப் போராட்டத்தை ஒடுக்க அன்று நாயர்கள், நாடார் பெண்களின் தாலிகளை அறுத்தனர். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று வழங்கப்படுகிறது.

இந்தியச் சிந்தனையாளர்களில் தந்தை பெரியார் தான் முதன் முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும் எழுதவும் துவங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. ஆணுக்குப் பெண் தாலி கட்டும் அதிர்ச்சி மதிப்பீட்டு நிகழ்ச்சிகளும் சில இடங்களில் நடந்தன. பின்னர், 1968 இல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுய மரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லாத் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது.

கடைசியாக ஒரு செய்தி - சங்க இலக்கியங்களில் தாலி மட்டுமல்ல. பெண்ணுக்குரிய மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் ஆகியவையும் கூட பேசப்படவே இல்லை.தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.

மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்று கொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய சாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணை செய்கிறாள். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு சாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து அல்லது முடுக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவது சில ஆண்டுகளுக்கு முன் வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்துத் தாலிகட்டிய காலத்தின் எச்சப்பாடாகும்.

ஒரு நூற்றாண்டு முன் வரை சில சாதியாரிடத்தில் மணமகள் திருமண நிகழ்ச்சிக்கு வர முடியாத போது மணமகனை அடையாளப்படுத்த அவன் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றைக் கொண்டு வந்து மணமகளின் பக்கத்தில் வைத்து மணமகனின் சகோதரி தாலி கட்டுகிற வழக்கம் இருந்திருக்கிறது.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் வாழும் அம்பலக்காரர்களிடத்தில் மணமகனுக்குப் பதிலாக அவனுடைய வலதடியைக் (வளரியை) கொண்டு போய் அவனுடைய சகோதரி மணப்பெண்ணுக்குத் தாலி கட்டுகிற வழக்கம் இருந்துள்ளது.

மணமகன் இல்லாமலேயே மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும்.

தாலி என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை. ஆனால், தாலி தாலாட்டு ஆகிய சொற்களைக் கொண்டு தால் என்பது தொங்க விடப்படும் அணி (காதணி, மூக்கணி, விரலணி போல) என்று கொள்ளலாம்.

நமக்குக் கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம்) அக் காலத்தில் ஆண் பெண்ணுக்குத் தாலி கட்டும் வழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.

தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954 இல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் கவிஞர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளந்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. மட்டுமே.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது என்கிறார் கா. அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும், தமிழ் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு கிடையாது என உறுதியுடன் எடுத்துக் கூறினர்.

தொல் பழங்குடி மக்கள் பிள்ளைகளைத் தீயவை அணுகாமல் காப்பதற்குப் பிள்ளைகளின் இடுப்பில் அரைஞாண் கயிற்றில் சில பொருள்களைக் கட்டும் வழக்கம் இருந்தது. அவ் வழக்கம் மிக அண்மைக்காலம் வரை கூட நீடித்தது. இவ்வாறு ஐந்து பொருள்களை பிள்ளைகளின் அரை ஞான் கயிற்றில் கட்டுவதை சங்க இலக்கியங்கள் ஐம்படைத் தாலி என்று குறிப்பிடுகின்றன. மிக அண்மைக் காலம் வரையிலும் கூட கிராமப்புறங்களில் குழந்தைகளின் அரைஞாண் கயிற்றில் நாய், சாவி, தாயத்து ஆகிய உருவங்களைச் செய்து கட்டுவது வழக்கமாயிருந்தது.

நந்தனின் சேரிக் குழந்தைகள் அரைஞாண் கயிற்றில் இரும்பு மணி கட்டியிருந்ததாகக் குறிப்பு உள்ளது.

எனவே, தாலி என்னும் சொல் கழுத்துத்தாலியைத் தொடக்க காலத்தில் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6c70e5fda0ef61c37695839eb286877e.jpg

 

பலாக்கொட்டை சுட்டுச் சாப்பிட்ட சுவை....🕺

 

பலாக்கொட்டை சுட்டு சாப்பிடுவது .... அவித்து தேங்காய்பூசர்க்கரை சிறிது மிளகு சேர்த்ததுவையல் .....ஒவ்வொன்றும் தனிச்ச்சுவையே மாலைநேரம் தேநீருடன் சுவைத்தல் தனியின்பமே .

 

 

Edited by அன்புத்தம்பி
  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.