Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
உலகத்திலேயே தமிழ் எழுத்துக்கள் மட்டுமல்ல எண்களையும் ரூபாய் தாள்களில் பயன் படுத்தப்படும் ஒரே நாடு மொரீசியஸ்
196177479_1057293584676642_2530401534602
 
 
189928980_1057293628009971_4127717297866
 
 
 
  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

12 ஆழ்வார்கள

 
Tamil-Daily-News-Paper_4177776575089.jpg
 
 
  1. பொய்கையாழ்வார்
  2. பூதத்தாழ்வார்
  3. பேயாழ்வார்
  4. திருமழிசையாழ்வார்
  5. நம்மாழ்வார்
  6. மதுரகவி ஆழ்வார்
  7. குலசேகர ஆழ்வார்
  8. பெரியாழ்வார்
  9. ஆண்டாள்
  10. தொண்டரடிப்பொடியாழ்வார்
  11. திருப்பாணாழ்வார்
  12. திருமங்கையாழ்வார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. மகாபாரதத்தின் படி துரியோதனன், பீமன் இவர்களுக்கு க
தாயுதம் பயிற்சி அளித்தவர்?
பலராமன்

2. ”அஞ்சுகம்” என்ற சொல் எதைக் குறிக்கும்?
கிளி

3. ”தாய்மொழி” என்பது?
தாய் குழந்தையிடம் பேசுவது

4. ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு 
முன்தோன்றி மூத்துப் பிறந்த மொழி”-எனும் தொடர் 
உணர்த்துவது?
தமிழின் பழமை

5. இரண்டாம் வேற்றுமை உருபு?


6. ”வனப்பு” எனும் சொல்லின் பொருள்?
அழகு

7. ”காலை மாலை”-இதில் பயின்று வருவது?
உம்மைத் தொகை

8. அடிதோறும் மாறிக் கிடக்கும் சொற்களை, பொருள் 
கொள்ளும் வகையில் அமைப்பது?
கொண்டுக் கூட்டுப் பொருள் கோள்

9. ”தளை” எத்தனை வகைப்படும்?
7

10. ”அஞ்சு”-இதில் உள்ள போலி?
முற்றுப் போலி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

தமிழ் ஆண்டுப்பெயர்கள்

நற்றோன்றல் 1 பிரபவ
உயர்தோன்றல் 2 விபவ
வெள்ளொளி 3 சுக்கில
பேருவகை 4 பிரமோதூத
மக்கட்செல்வம் 5 பிரசோற்பத்தி
அயல்முனி 6 ஆங்கிரச
திருமுகம் 7 ஸ்ரீமுக
தோற்றம் 8 பவ
இளமை 9 யுவ
மாழை 10 தாது

ஈச்சுரம் 11 ஈஸ்வர
கூலவளம் 12 வெகுதான்ய
முன்மை 13 பிரமோதி
நேர்நிரல் 14 விக்ரம
விளைபயன் 15 விஜூ
ஓவியக்கதிர் 16 சித்ரபானு
நற்கதிர் 17 சுபானு
தாங்கெழில் 18 தாரண
நிலவரையன் 19 பார்த்திப
விரிமாண்பு 20 விய

முற்றறிவு 21 சர்வசித்
முழுநிறைவு 22 சர்வதாரி
தீர்பகை 23 விரோதி
வளமாற்றம் 24 விக்ருதி
செய்நேர்த்தி 25 கர
நற்குழவி 26 நந்தன
உயர்வாகை 27 விசய
வாகை 28 சய
காதன்மை 29 மன்மத
வெம்முகம் 30 துன்முகி.wikipedia.org

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
192668460_4004160513005286_5152044455323
 
விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய நுட்பங்கள்
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் என இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கட்டை விரல்
➖➖➖➖➖
உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.
ஆள்காட்டி விரல்
➖➖➖➖➖➖
உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.
உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.
நடுவிரல்
➖➖➖➖➖
நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.
மோதிரவிரல்
➖➖➖➖
ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.
மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.
சிறுவிரல்
➖➖➖
சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.
மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.
உள்ளங்கை
➖➖➖➖
மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.
மேலும், இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Ontario அதன் பொருளாதாரத்தை மீண்டும் திறக்கும் திட்டத்தின் முதல் படிக்கு வெள்ளிக்கிழமை திரும்பியது.
மீண்டும் திறக்கும் திட்டத்தின் முதல் படிக்கு திரும்பிய Ontario! - தேசியம்
 
 
தெசியம்.கொம்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கடும் பனி இரவில் தன் வீட்டின் முன் ஏழை மனிதன் இருப்பதை அவதானித்தார் ஒரு செல்வந்தர்.

முதியவருக்கு அருகில் வந்து கேட்டார்
“வெளியே குளிர் உங்களுக்கு சூடான உடைகள் இல்லயா? உங்களுக்கு குளிர் இல்லையா?

முதியவர் பதிலளித்தார்,

” எனக்கு சூடான உடைகள் இல்லை , ஆனால் நான் இப்போது அதற்கு பழக்கப்பட்டுள்ளேன் “

கோடீஸ்வரன் பதிலளிக்கிறார்

“நான் வரும் மட்டும் காத்திருங்கள் நான்
உங்களுக்கு ஆடை தருகிறேன்”

அந்த ஏழை மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான், அவன் காத்துக்கொண்டிருந்தான். அந்த
மனிதன் தன் வேலையால் ஏழை மனிதனை மறந்து விட்டான்.

காலையில் அவர் அந்த ஏழை மனிதனை நினைவு கொண்டார். அவர் உடனடியாக வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அந்த முதியவர் குளிரால் இறந்துவிட்டார்.

அந்த மனிதன் கையில் எழுதப்பட்டுள்ளது ” எனக்கு சூடான உடைகள் இல்லாத போது, நான்
குளிருக்கு போராட முடிந்தது. ஆனால் நீங்கள் எனக்கு உதவ வாக்குறுதி அளிக்கும் போது, நான் உங்கள் வாக்குறுதிக்கு அடிமையாகி, நான்
குளிர்க்கு எதிராக போராடும் திறனை
இழந்துவிட்டேன்.”

வாக்குறுதி அளிக்கும் முன் சற்று யோசியுங்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா என்று. அது இன்னொருவரின் மரணத்திற்கு கூட வழிவகுக்கலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நட்பு..
" நள்ளுதல்"
" கூடுதல் "
" பழகுதல்"
சொல்லும் போதே
எத்தனை இன்பம்
எத்தனை இனிமை
எத்தனை மணம்
நட்பு..
"அகம்" சார்ந்த
உணர்வு.
இரு உள்ளமதைக்
கட்டும்
ஆதனின்
பந்தம்
நட்பு..
அருமையானது
அற்புதமானது
அரணானது
ஆழமானது
நட்பு..
மனங்களுள்
மணம் வீசும்
மலர்.
நட்பு..
உனக்கென நான்
என
உடன் வரும்
துணை.
நட்பு..
வலிகள் கடக்க
வலிமை தரும்
வலிய சக்தி
நட்பு ..
துன்பம் தாங்கி,
துயர் விலக்கி,
வாழ்விலும்
தாழ்விலும்
பிரியாத
பாதுகாப்பு .
நட்பு..
அகவை, அறிவு,
ஆற்றல்,செல்வம்,
பதவி, பலம்,
எல்லாம் கடந்து
உறவாய் நிற்கும்
உயரிய நிலை
நட்பு..
ஆணோடு ஆணா,
பெண்ணோடு பெண்ணா,
இதையும் கடந்து
ஆணும், பெண்ணுமா
நேற்றும், இன்றும்,
ஏன் நாளையும்
கூட இது
விடையிலா
வினாவே
நட்பு..
ஔவையோடு அதியமான்
கொண்ட அன்பு
தமிழ் வாழ
நெல்லிக்கனி உவந்த
பாலினம் சாராத
காலத்தால் அழியாத
தூய நிலை.
நட்பு..
"ஈருடல் ஓருயிர்"
என்னும்
மனம் ஒன்றுபடுதல்
நட்பு..
நீ வேறு,
நான் வேறு என
பிரித்தறியப்படாது
"இருவரும் ஒன்றே"
என்னும்
உணர்வுகளின்
சங்கமத்தில் வாழும்
தனி உலகம்.
நட்பு..
அறிவும்,
அனுபவமும்
நிறைந்த
நல்லோர்பால்
நாளும் வளரும்
"வளர் பிறை" .
நட்பு..
அறிவற்ற ,
அனுபவமற்ற
கீழானவர் பால்
தோன்றின்
"தேய் பிறை" என
தேய்ந்து விடும்.
நட்பு ..
கூடிக் கலந்து,
சிரித்து
மகிழ்வதன்று.
வரம்பு கடந்தால்,
வரையறை மீறினால்,
நெறி கடந்து
தவறு இழைத்தால்,
முன் நின்று ,
இடித்துக் கூறி
நல்வழிப்படுத்துவது
நட்பு..
தீயவை விலக்கி
மனமதைச்
செம்மைபடுத்தி
நேர்வழி செலுத்தி
துன்பமதை உடனிருந்து,
தோள் கொடுத்துத்
தாங்கி,
பகிர்ந்து,
துயர் துடைத்து
"உனக்கென நான்"
என
உணர்த்துவது.
நட்பு..
தோழன்/ தோழி யின்
துயர் துடைப்பதில்
"வினாடி" யும்
விரயமாக்காது
விரைந்தோடித்
தாங்கும் காப்பு.
நட்பு..
கிட்டுவது
"பெறுதற்கரியதோர் பேறு"
நட்பு..
கிட்டியவர்கள்
"பெரும்பேறு பெற்றோர்"
நட்பு..
கடித்தாலும்,
ஒடித்தாலும்,
நசுக்கினாலும்,
பிழிந்தாலும்
கரும்பு போல்
இனிப்பானது
கண்டவுடன்
கண்மலர்தல்
நட்பன்று.
முகமலர்தல்
நட்பன்று.
நட்பு.
அன்பினால்
"அகம்" மலரும்
நிலை
இரு உயிரும்
ஒன்றை ஒன்று
உணரும் நிலை
ஒத்த மனம்
அதில்
ஊற்றெடுக்கும்
உன்னத
உணர்வுகள்
கோடி தேடிக்
குவிப்பதிலும்
உற்ற நண்பன்
ஒருவனைத்
தேடிக் கொள்வது
கோடி நலம்
நட்பிற்குத்
தொலைபேசி
உரையாடல்
கட்சேவை
குறுஞ்செய்தி
பரிமாற்றம்
நேரடி சந்திப்பு
மிதமிஞ்சிய
பழக்கம்,
நெருக்கம்
தேவையன்று
நட்பு..
தாயாக,
மகளாக,
தமக்கையாக,
தாரமாக,
தோழியாக
பல நிலைகளில்
பரிணமிக்கும்
உன்னத நிலை
நட்பு..
தந்தையாக,
மகனாக,
சகோதரனாக
கணவனாக,
தோழனாக
பல நிலைகளில்
துணை நிற்கும்
தூய நிலை
"இவர் எனக்கு இத்தன்மையவர்"..
" நான் அவருக்கு இன்னம்"..
புனைந்துரைக்கும்
நட்பில்
இரு உள்ளங்கள் அல்ல
இரு உருவகங்கள்
நட்பு கொள்ளுகின்றன.
நல் நட்பு
சிறப்பிழக்கும்
தருணம்
"இது"
உள்ளூரக் கனிந்து,
உயிருறவாய்
நெருங்கி உள்ளோர்க்கு
"முகமனுரை"
தேவையன்று
முகமனுரை
பெருகப் பெருக
அந்தரங்க நட்பு
அகத்தை விட்டு
அகன்று விடும்.
பாசம், நேசம்,
வீடு, உறவு
நூறு சொந்தம்
வந்த பின்னும்
மனம் தேடுகின்ற
அமைதி
நட்பு!
இந்தப்
பண்பான,
அன்பான,
பழகிய,
அழகிய,
இனிய ,
பழைமையான
நட்பைத்
தோழமையோடு
உரிமையோடு
உணர்ந்து,போற்றி
வாழ்தல்
என்றும் வாழ்வில்
இனிமையே!
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல
வினைக்கரிய யாவுள காப்பு - 781
நவில் தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு - 783
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான்
நட்பாம் கிழமை தரும் - 785
முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகம் நக நட்பது நட்பு - 786
இனையர் இவர்எமக்கு இன்னம் யான் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு - 790
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மங்கையராய் பிறப்பதற்கே
நல்ல மாதவம் செய்திட
வேண்டுமம்மா..
பெண்ணே...பெண்ணே..
மண்ணின் பெருமையே..
பெண்ணே நீ..
அன்பில் அன்னை..
அழகில் தேவதை..
அறிவில் அமைச்சு..
பெண்மையின் மென்மை..
மென்மையில் மலர்..
மனிதம் காக்கும் புனிதம்..
பெண்ணே நீ..
இதயம் களவாடும்
இன்பக்காதலி..
இல்லம் காக்கும்
இனிய மனைவி..
தோள் தாங்கும்
தோழி..
உயிர் சுமக்கும்
தாய்மை...
உயிருக்கு உருவம்
தரும் பெண்மை..
ஆணின் ஆண்மைக்கு
வெற்றி ..
பெண்ணே...பெண்ணே..
மண்ணின் பெருமையே..
திருக்குறள் போற்றும்
பெண்ணே..
இனியவளே..
அன்பிற்குரியவளே..
தெய்வ மகளே...
கரையற்ற கல்வி..
கருணை உள்ளம்..
நிறைவான அறிவு..
பெற்றவளே...
அன்பான கண்கள்.
கனிவான பார்வை..
இனிக்கும் சொற்கள்.
கொண்டவளே..
எல்லாம் நிரம்பிய
தாயே...
சக்தியே...
பெண்ணே...பெண்ணே..
மண்ணின் பெருமையே..
பாரதி கண்ட
புதுமைப் பெண்ணே..
பெண்ணியத்திற்கு
குரலோசை எழுப்பி
புதியதோர் சமுதாயம்
படைத்திட
புயலென புறப்படு....
பெரியாரின் கனவு
நிறைவேற
பெண் அடிமைத்தனம்
ஒழித்து
பெண் இனம் மேம்பட
தீபங்கள் ஏற்றி..
சாதிக்கப் புறப்படு..
தரித்திரங்கள் துடைத்துச்
சரித்திரங்கள் படைக்கப்
புறப்படு பெண்ணே..
சிறகுகள் விரித்து
எட்டுத் திசையெங்கும்
புறப்படு...
பெண்ணே...பெண்ணே..
மண்ணின் பெருமையே..
உனக்கு நிகரேது பெண்ணே..
வானம் தொட்டு விடும் தூரம்..
வானம் உன் வசமாகும்
புறப்படு..
பெண்ணே...பெண்ணே..
மண்ணின் பெருமையே..
பெண்ணிற் பெருந்தக்க யாவுள ..
பெண்ணே பெருமை உடைத்து ..
பெண்ணிற் பெருந்தக்க தில் ..
பெண்ணினால் பெண்மை உடைத்து .. ..
பெண் நிறைந்த நீர்மை பெரிது ..
(சுபா சுப்ரமணியம்)
Edited by அன்புத்தம்பி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8h  · 
 
The way home
ஒரு அழகான கிராமத்து படம். சில விசயங்களை நாம் வாழ்நாள்ல மிஸ் பண்ணிட கூடாதுனு நினைப்போம் இல்லை. அப்படியான தருணங்களில் ஒன்றாக இந்த திரைப்படத்தை பார்க்க செலவு செய்யும் நேரம் இருக்கும். நாம காணக்கூடிய அன்றாட வாழ்க்கை முறைகளில் தாத்தா, பாட்டி பேரனுக்கிடையிலான அனுபவங்கள் தொலைந்து போன வாழ்க்கை முறைகளில் பழக்கப்பட்டு கொண்டிருக்கிறோமில்லயா அப்படியான வாழ் முறையை காணக்கிடைக்காதா என்று ஏங்கிக் கிடப்பவருக்கான படம் இது.
காது மந்தமா கேட்காத, சரியா பேச்சுவராத கிரமாத்து பாட்டி அவரை கொஞ்சமும் பிடிக்காத நகரத்து பழக்கவழக்கங்களுக்குட்பட்ட பேரன். இவர்களுக்கு இடையிலான கதைதான் The way home. இந்த கதையில் திரையில் வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிக்கக்கூடிய மாதிரி சினிமா தனமே இல்லாத, இதோ நாம கண்முன் காணும் ஒன்றை போல அனுபவத்தை தரும் கிராமத்து பசளையோடிய காட்சிப்படுத்தல். மொழியே இல்லாமல் புரிந்து கொள்ளக்கூடிய திரைப்படம். கட்டாயம் பாருங்கனு சொல்லல பார்த்தா சந்தோஷமா இருப்பிங்கனு சொல்லுறன்.
May be an image of 2 people, people standing, outdoors and text

பி.கு
ஆங்கிலத்திலும் மொழி பெயர்ப்பு வந்துள்ளதாக அறியதக் கூடியதாக இருக்கிறது..

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தைப் பார்க்கவே புரியுது நல்ல படமாகத்தான் இருக்கும்.......பகிர்வுக்கு நன்றி சகோதரி.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
CANADA
 

Record $128M in Lotto Max prizes up for grabs Tuesday

 

யாராவது ஸ்கார்பிறோ விட்டு தள்ளி இருப்பவர்கள் எடுத்து பாருங்கள்..லொற்றோ மேக்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஜீவன் முக்தி!!
-------------------------
பலரையும் எதோ பிரம்மிப்பிலும், பயத்திலும், தேடலிலும் ஆழ்த்தும் ஒரு சொல்."ஜீவன் முக்தி".
ஜீவன் முக்தி என்றால் என்னவென்றே தெரியாமல் திரிபவர் பலர். ஜீவன் முக்தி என்றால், ஜீவித்துக் கொண்டிருக்கும்போதே அதாவது உயிருடன் இருக்கும்போதே முக்தி அடைவது என்பது தான் பொருள்.
என்னது உயிருடன் இருக்கும்போதே முக்தியா?
அது எப்படி?
முக்தி என்றால் செத்தபிறகு வைணவரானால் வைகுண்டதிற்கும், சைவர்கலானால் கயிலாயதிர்க்கும் சென்றால்தானே முக்தி. அதெப்படி வாழும்போதே முக்தி? என்கிறீகளா!!
வைகுண்டம், கயிலாயம் என்று இருந்தால்தானே ஜி செத்தபிறகு அங்கே போவதற்கு!!
முதலில் முக்தி என்றால் என்னவென்று தெளிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
முக்தி என்பது ஒரு வடமொழிச் சொல்.
அதற்கு தமிழில் "விடுதலை" என்று பொருள்.
எதில் இருந்து விடுதலை?
நம் மனதில் இருந்துதான்!!!
இப்பிரபஞ்சத்தில் நாம் நம் மனதைத் தவிர வேறு எதற்குமே அடிமையாக இருக்கவில்லை.
நம்மை, நாம் நம் இன்வாழ்கையை சுகித்து வாழமுடியாத வண்ணம் செய்வது நம் மனம்தான்.
இறைவன் புரியும் அணைத்து செயல்களிலும் மூக்கை நுழைத்து இது சரி தவறு என்று அதிகப்பிரசங்கித்தனம் செய்வது நம் மனம் தான்.
மனதின் பிடியில் இருந்து விடுபடுவதே உண்மையில் விடுதலையாகும்,
மனோ நாசமே முக்தியாகும்,
அவ்வாறு உயிருடன் இருக்கும்போதே நாம் நம் மனதை ஜெயித்து, கற்பனைகளை கடந்து, சிந்தையை நினைப்பர வைத்தோமேயானால், அதேவே ஜீவன் முக்தி.
"முக்தி என்பது ஒருவன் வாழ்நாளில் அடையப்பட வேண்டுமே தவிர, செத்தபிறகு எங்கோ சென்று அடைவது அல்ல" என்று மகரிஷி வசிஷ்டர் தன் யோக வாசிஷ்டம் என்னும் நூலில் தீர்கமாக மொழிகிறார்.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அன்புத்தம்பி said:
ஜீவன் முக்தி!!
-------------------------
பலரையும் எதோ பிரம்மிப்பிலும், பயத்திலும், தேடலிலும் ஆழ்த்தும் ஒரு சொல்."ஜீவன் முக்தி".
ஜீவன் முக்தி என்றால் என்னவென்றே தெரியாமல் திரிபவர் பலர். ஜீவன் முக்தி என்றால், ஜீவித்துக் கொண்டிருக்கும்போதே அதாவது உயிருடன் இருக்கும்போதே முக்தி அடைவது என்பது தான் பொருள்.
என்னது உயிருடன் இருக்கும்போதே முக்தியா?
அது எப்படி?
முக்தி என்றால் செத்தபிறகு வைணவரானால் வைகுண்டதிற்கும், சைவர்கலானால் கயிலாயதிர்க்கும் சென்றால்தானே முக்தி. அதெப்படி வாழும்போதே முக்தி? என்கிறீகளா!!
வைகுண்டம், கயிலாயம் என்று இருந்தால்தானே ஜி செத்தபிறகு அங்கே போவதற்கு!!
முதலில் முக்தி என்றால் என்னவென்று தெளிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
முக்தி என்பது ஒரு வடமொழிச் சொல்.
அதற்கு தமிழில் "விடுதலை" என்று பொருள்.
எதில் இருந்து விடுதலை?
நம் மனதில் இருந்துதான்!!!
இப்பிரபஞ்சத்தில் நாம் நம் மனதைத் தவிர வேறு எதற்குமே அடிமையாக இருக்கவில்லை.
நம்மை, நாம் நம் இன்வாழ்கையை சுகித்து வாழமுடியாத வண்ணம் செய்வது நம் மனம்தான்.
இறைவன் புரியும் அணைத்து செயல்களிலும் மூக்கை நுழைத்து இது சரி தவறு என்று அதிகப்பிரசங்கித்தனம் செய்வது நம் மனம் தான்.
மனதின் பிடியில் இருந்து விடுபடுவதே உண்மையில் விடுதலையாகும்,
மனோ நாசமே முக்தியாகும்,
அவ்வாறு உயிருடன் இருக்கும்போதே நாம் நம் மனதை ஜெயித்து, கற்பனைகளை கடந்து, சிந்தையை நினைப்பர வைத்தோமேயானால், அதேவே ஜீவன் முக்தி.
"முக்தி என்பது ஒருவன் வாழ்நாளில் அடையப்பட வேண்டுமே தவிர, செத்தபிறகு எங்கோ சென்று அடைவது அல்ல" என்று மகரிஷி வசிஷ்டர் தன் யோக வாசிஷ்டம் என்னும் நூலில் தீர்கமாக மொழிகிறார்.

அப்படி ஒரு ஜீவன்முக்தராக "ஜனக மகாராஜா" சீதாப்பிராட்டியாரின் தந்தை வாழ்ந்திருந்தார்......!  🙏

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.”மலைப் பிஞ்சி” என்பது?
குறுமணல்

2.குமரி மாவட்டத்தின் பழைய பெயர்?
நாஞ்சில் நாடு

3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்?
ஒடிஷா

4.”தமிழ் மொழி” என்பது?
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை

5.”இரவும் பகலும்” என்பது?
எண்ணும்மை

6.”கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை?
ஐந்தாம் வேற்றுமை

7. ”நல்ல மாணவன்” என்பது?
குறிப்புப் பெயரெச்சம்

8. “கடி விடுது”-இச்சொல்லில் “கடி” என்பதன் பொருள்?
விரைவு

9. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்ட ஆண்டு?
2008, மே 19

10. உயிர் அளபெடையின் மாத்திரை?
3 மாத்திரை

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சைவ சமய புராணங்களில் இரண்டு தவங்கள் முக்கியமானவை.
 
1. பகீரத தவம் - கங்கை நதியை பூமிக்கு கொண்டு வர சிவபெருமானை நோக்கி தவமிருப்பது.
2. அர்ஜூன தவம் - பாசுபதம் எனும் ஆயுதம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவமிருப்பது.
பகீரத தவம் - பகீரதனின் முன்னோரான சகரரின் மனைவியான சுமதிக்கு 60 ஆயிரம் மகன்கள், மற்றொரு மனைவியான கேசனிக்கு ஒரு மகன். அசுவமேத யாகத்தை மன்னர் சகரர் செய்கிறார். அதன்படி குதிரையை விடுவிக்கின்றனர். குதிரையானது கபிலர் எனும் முனிவரின் குகை வாயிலில் இருக்கிறது. குதிரையை காணாது தேடிவந்த 60 ஆயிரம் பேரும் கபில முனிவரிடம் சண்டைக்கு செல்கின்றனர். கபிலரால் சபிக்கப்பட்டு சாம்பலானார்கள்.
கேசியின் மகனுக்கு பிறக்கும் பகீரதன் அரசரானதும் தன்னுடைய முன்னோர்கள் 60 ஆயிரம் பேர் முக்தி அடையாமல் இருக்கிறார்கள் என அறிந்து வருந்துகிறான். அவர்களை முக்தி பெற வைக்க தேவலோகத்தில் இருக்கும் கங்கை நதியை பூமிக்கு வர வைக்க சிவபெருமானை நோக்கி தவமிருக்கிறான். பெருந்தவம் கங்கையை பூமிக்கு வர வைக்கிறது. 60 ஆயிரம் முன்னோர்களும் முக்தி அடைகிறார்கள்.
 
அர்ஜூன தவம் - பாண்டவர்கள் சூதாடி தோற்ற பிறகு வனவாசம் மேற்கொள்கின்றனர். அந்தக்காலத்தில் 'பாசுபதம்' எனும் ஆயுதத்தை பெற சிவபெருமானை நோக்கி தவமிருந்தார் அர்ஜூனன். மூகாசுரன் என்ற அசுரன் அர்ஜூனன் தவம் கலைக்க பன்றியாக உருவெடுத்து மோதி தொல்லை செய்தான். பன்றியை கொல்ல அர்ஜூனன் அம்பு எய்த.. மற்றொரு அம்பும் அந்த பன்றியை துளைக்கிறது. அந்த அம்புக்கு உரிமையாளர் வேடனாக வந்த சிவபெருமான்.
பன்றி யாருக்கு சொந்தம் என வேடனுக்கும், அர்ஜூனனுக்கும் ஒரு சண்டை நடந்து இறுதியில் சிவபெருமான் அர்ஜூனனுக்கு பாசுபத அஸ்திரத்தை தந்தார்.
சிவாலயங்களில் ஒரு தவக்காட்சி சிற்பமாக இருக்கிறது. ஒரு ஆண் ஒற்றைக்காலை மட்டும் தரையில் ஊன்றி கடுமையாக தவமிருக்கிறார். அந்த தவம் செய்யும் மனிதர் அர்ஜூனனா? பகீரதனா என நமக்கு குழப்பம் நேரிடும். அதை எளிதாக வேறுபடுத்தி காட்டிட சிற்பி ஒரு உத்தியை கடைபிடிக்கிறார். அது பன்றி.
தவம் செய்யும் சிற்பம் அர்ஜூனன் என்றால் அவர் பின்புறமாக பன்றி சிற்பமும் சேர்த்து வடிக்கப்படும். பகீரதன் என்றால் அவர் மட்டுமே தவமிருப்பார்.
May be an image of 1 person and text that says 'பேரூர் சிற்பம் அர்ஜுன தவம், போரூர் பகீரத தவம், மாமல்லபுரம்'
 
 
வாசித்ததிலிருந்து............
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
* வெகு காலங்களுக்கு முன் அதாவது சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கு (EOCENE AGE) முன், இந்தப் பகுதியில் வெப்பத்தால் எரிமலைகள் வெடித்துச் சிதறின. இதனால் மலைகளில் பெரும் நில வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. எரிமலைச் சாம்பல், நிலச்சரிவில் வந்த மண், பாறைகள் இவைகளெல்லாம் பெரு வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இன்று கல் மரங்கள் நின்று கொண்டிருக்கும் பகுதியில் படிந்தன. நின்று கொண்டிருந்த பெரிய மரங்கள் தம் நிலை மாறாமலேயே அப்படியே புதையுண்டன. சில மரங்கள் பெருவெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டுக் கிடைநிலைக் கல்மரங்களாயின.
* மரங்கள் அழுகும் நிலை, உளுத்துப் போகும் நிலைக்கு வரும் முன்னரே, எரிமலை சாம்பல், மண் இவையெல்லாம் நீரில் கலந்து மரத்தில் இறங்கி செல்லுலோசை உருகச் செய்து திடமான படிமங்களாக இறுகின. இந்த 'கல்லாய் மாறுதல்' (PETRIFICATION) நிகழ்வில் மரங்கள், கல்மரங்களாக மாறி இன்றைக்கும் நமக்கு ஏதாவது இடங்களில் அகப்படுகின்றன.
* கிடை நிலைக் கல்மரங்கள்: சாத்தனூர், திருவக்கரை, இராஜஸ்தானில் உள்ள பொக்ரேன் பகுதி போன்ற இடங்களில் காணப்படும் கல்மரங்கள் அனைத்துமே ‘கிடை நிலையிலேயே (Horizontal type) கண்டறியப்பட்டுள்ளன. அரிசோனா கல்மரங்களும் கிடை நிலை வகையாகும்.
* அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாநிலத்தில் எல்லோ ஸ்டோன் நேஷனல் பார்க் (YELLOW STONE NATIONAL PARK) கில் உள்ள கல் மரங்கள் நிற்கும் கல் மரங்கள்( Vertical Type) ஆகும்.இவைகள் நிற்கும் மரங்களாகவும் கல்லாக மாறிய நிகழ்வின் எச்சங்களாகவும் உள்ளன.
* உதகை, பொட்டானிக்கல் கார்டனில் உள்ள கல்மரத்தைப் பாருங்கள். கீழே விளக்கம் தந்துள்ளனர்.இது இந்திய புவியியல் ஆராய்ச்சியமைப்பு ( G S I)நிறுவியுள்ள கல் மரச் சின்னமாகும்.திருவக்கரைப் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புவிசார் தொல்லியல் சின்னமாகும். இவையே புதுவை அருங்காட்சியகத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
Agnisiragu Mudiarasu
194685764_1448789182139521_5189877947480
 
 
194192939_1448789248806181_9120689274634
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஜூன் 16 – உலக கடல் ஆமை தினம்
100 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக, கடல் ஆமைகள் உலக சமுத்திர பகுதிகளில் வாழ்ந்துவருகின்றன. இவை கடல் சூழலின் சமநிலையினைப் பேணுவதில் இவை பிரதான வகிபாகம் வகிக்கின்றன.
மனித செயற்பாடுகளின் காரணமாக அதாவது முட்டை, இறைச்சி, தோல், மற்றும் பிற தேவைப்பாடுகளுக்காக மனிதனால் கடல் ஆமைகள் அளவுக்கதிகமாக வேட்டையாடப்படுகின்றன. அத்துடன் அவற்றின் வாழிடங்கள் சிதைக்கப்படுவதும், எதிர்பாராதவிதமாக மீன்பிடி வலைகளினால் அவை பிடிக்கப்படுவதும், மேலும் காலநிலை மாற்றங்கள் க…
See More
See Translation
No photo description available.
 
 

Loganathan Kanapathipillai

 
  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.