Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
உலகத்திலேயே தமிழ் எழுத்துக்கள் மட்டுமல்ல எண்களையும் ரூபாய் தாள்களில் பயன் படுத்தப்படும் ஒரே நாடு மொரீசியஸ்
196177479_1057293584676642_2530401534602
 
 
189928980_1057293628009971_4127717297866
 
 
 
  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

12 ஆழ்வார்கள

 
Tamil-Daily-News-Paper_4177776575089.jpg
 
 
  1. பொய்கையாழ்வார்
  2. பூதத்தாழ்வார்
  3. பேயாழ்வார்
  4. திருமழிசையாழ்வார்
  5. நம்மாழ்வார்
  6. மதுரகவி ஆழ்வார்
  7. குலசேகர ஆழ்வார்
  8. பெரியாழ்வார்
  9. ஆண்டாள்
  10. தொண்டரடிப்பொடியாழ்வார்
  11. திருப்பாணாழ்வார்
  12. திருமங்கையாழ்வார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. மகாபாரதத்தின் படி துரியோதனன், பீமன் இவர்களுக்கு க
தாயுதம் பயிற்சி அளித்தவர்?
பலராமன்

2. ”அஞ்சுகம்” என்ற சொல் எதைக் குறிக்கும்?
கிளி

3. ”தாய்மொழி” என்பது?
தாய் குழந்தையிடம் பேசுவது

4. ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு 
முன்தோன்றி மூத்துப் பிறந்த மொழி”-எனும் தொடர் 
உணர்த்துவது?
தமிழின் பழமை

5. இரண்டாம் வேற்றுமை உருபு?


6. ”வனப்பு” எனும் சொல்லின் பொருள்?
அழகு

7. ”காலை மாலை”-இதில் பயின்று வருவது?
உம்மைத் தொகை

8. அடிதோறும் மாறிக் கிடக்கும் சொற்களை, பொருள் 
கொள்ளும் வகையில் அமைப்பது?
கொண்டுக் கூட்டுப் பொருள் கோள்

9. ”தளை” எத்தனை வகைப்படும்?
7

10. ”அஞ்சு”-இதில் உள்ள போலி?
முற்றுப் போலி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

தமிழ் ஆண்டுப்பெயர்கள்

நற்றோன்றல் 1 பிரபவ
உயர்தோன்றல் 2 விபவ
வெள்ளொளி 3 சுக்கில
பேருவகை 4 பிரமோதூத
மக்கட்செல்வம் 5 பிரசோற்பத்தி
அயல்முனி 6 ஆங்கிரச
திருமுகம் 7 ஸ்ரீமுக
தோற்றம் 8 பவ
இளமை 9 யுவ
மாழை 10 தாது

ஈச்சுரம் 11 ஈஸ்வர
கூலவளம் 12 வெகுதான்ய
முன்மை 13 பிரமோதி
நேர்நிரல் 14 விக்ரம
விளைபயன் 15 விஜூ
ஓவியக்கதிர் 16 சித்ரபானு
நற்கதிர் 17 சுபானு
தாங்கெழில் 18 தாரண
நிலவரையன் 19 பார்த்திப
விரிமாண்பு 20 விய

முற்றறிவு 21 சர்வசித்
முழுநிறைவு 22 சர்வதாரி
தீர்பகை 23 விரோதி
வளமாற்றம் 24 விக்ருதி
செய்நேர்த்தி 25 கர
நற்குழவி 26 நந்தன
உயர்வாகை 27 விசய
வாகை 28 சய
காதன்மை 29 மன்மத
வெம்முகம் 30 துன்முகி.wikipedia.org

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
192668460_4004160513005286_5152044455323
 
விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய நுட்பங்கள்
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் என இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கட்டை விரல்
➖➖➖➖➖
உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.
ஆள்காட்டி விரல்
➖➖➖➖➖➖
உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.
உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.
நடுவிரல்
➖➖➖➖➖
நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.
மோதிரவிரல்
➖➖➖➖
ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.
மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.
சிறுவிரல்
➖➖➖
சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.
மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.
உள்ளங்கை
➖➖➖➖
மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.
மேலும், இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Ontario அதன் பொருளாதாரத்தை மீண்டும் திறக்கும் திட்டத்தின் முதல் படிக்கு வெள்ளிக்கிழமை திரும்பியது.
மீண்டும் திறக்கும் திட்டத்தின் முதல் படிக்கு திரும்பிய Ontario! - தேசியம்
 
 
தெசியம்.கொம்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கடும் பனி இரவில் தன் வீட்டின் முன் ஏழை மனிதன் இருப்பதை அவதானித்தார் ஒரு செல்வந்தர்.

முதியவருக்கு அருகில் வந்து கேட்டார்
“வெளியே குளிர் உங்களுக்கு சூடான உடைகள் இல்லயா? உங்களுக்கு குளிர் இல்லையா?

முதியவர் பதிலளித்தார்,

” எனக்கு சூடான உடைகள் இல்லை , ஆனால் நான் இப்போது அதற்கு பழக்கப்பட்டுள்ளேன் “

கோடீஸ்வரன் பதிலளிக்கிறார்

“நான் வரும் மட்டும் காத்திருங்கள் நான்
உங்களுக்கு ஆடை தருகிறேன்”

அந்த ஏழை மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான், அவன் காத்துக்கொண்டிருந்தான். அந்த
மனிதன் தன் வேலையால் ஏழை மனிதனை மறந்து விட்டான்.

காலையில் அவர் அந்த ஏழை மனிதனை நினைவு கொண்டார். அவர் உடனடியாக வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அந்த முதியவர் குளிரால் இறந்துவிட்டார்.

அந்த மனிதன் கையில் எழுதப்பட்டுள்ளது ” எனக்கு சூடான உடைகள் இல்லாத போது, நான்
குளிருக்கு போராட முடிந்தது. ஆனால் நீங்கள் எனக்கு உதவ வாக்குறுதி அளிக்கும் போது, நான் உங்கள் வாக்குறுதிக்கு அடிமையாகி, நான்
குளிர்க்கு எதிராக போராடும் திறனை
இழந்துவிட்டேன்.”

வாக்குறுதி அளிக்கும் முன் சற்று யோசியுங்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா என்று. அது இன்னொருவரின் மரணத்திற்கு கூட வழிவகுக்கலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நட்பு..
" நள்ளுதல்"
" கூடுதல் "
" பழகுதல்"
சொல்லும் போதே
எத்தனை இன்பம்
எத்தனை இனிமை
எத்தனை மணம்
நட்பு..
"அகம்" சார்ந்த
உணர்வு.
இரு உள்ளமதைக்
கட்டும்
ஆதனின்
பந்தம்
நட்பு..
அருமையானது
அற்புதமானது
அரணானது
ஆழமானது
நட்பு..
மனங்களுள்
மணம் வீசும்
மலர்.
நட்பு..
உனக்கென நான்
என
உடன் வரும்
துணை.
நட்பு..
வலிகள் கடக்க
வலிமை தரும்
வலிய சக்தி
நட்பு ..
துன்பம் தாங்கி,
துயர் விலக்கி,
வாழ்விலும்
தாழ்விலும்
பிரியாத
பாதுகாப்பு .
நட்பு..
அகவை, அறிவு,
ஆற்றல்,செல்வம்,
பதவி, பலம்,
எல்லாம் கடந்து
உறவாய் நிற்கும்
உயரிய நிலை
நட்பு..
ஆணோடு ஆணா,
பெண்ணோடு பெண்ணா,
இதையும் கடந்து
ஆணும், பெண்ணுமா
நேற்றும், இன்றும்,
ஏன் நாளையும்
கூட இது
விடையிலா
வினாவே
நட்பு..
ஔவையோடு அதியமான்
கொண்ட அன்பு
தமிழ் வாழ
நெல்லிக்கனி உவந்த
பாலினம் சாராத
காலத்தால் அழியாத
தூய நிலை.
நட்பு..
"ஈருடல் ஓருயிர்"
என்னும்
மனம் ஒன்றுபடுதல்
நட்பு..
நீ வேறு,
நான் வேறு என
பிரித்தறியப்படாது
"இருவரும் ஒன்றே"
என்னும்
உணர்வுகளின்
சங்கமத்தில் வாழும்
தனி உலகம்.
நட்பு..
அறிவும்,
அனுபவமும்
நிறைந்த
நல்லோர்பால்
நாளும் வளரும்
"வளர் பிறை" .
நட்பு..
அறிவற்ற ,
அனுபவமற்ற
கீழானவர் பால்
தோன்றின்
"தேய் பிறை" என
தேய்ந்து விடும்.
நட்பு ..
கூடிக் கலந்து,
சிரித்து
மகிழ்வதன்று.
வரம்பு கடந்தால்,
வரையறை மீறினால்,
நெறி கடந்து
தவறு இழைத்தால்,
முன் நின்று ,
இடித்துக் கூறி
நல்வழிப்படுத்துவது
நட்பு..
தீயவை விலக்கி
மனமதைச்
செம்மைபடுத்தி
நேர்வழி செலுத்தி
துன்பமதை உடனிருந்து,
தோள் கொடுத்துத்
தாங்கி,
பகிர்ந்து,
துயர் துடைத்து
"உனக்கென நான்"
என
உணர்த்துவது.
நட்பு..
தோழன்/ தோழி யின்
துயர் துடைப்பதில்
"வினாடி" யும்
விரயமாக்காது
விரைந்தோடித்
தாங்கும் காப்பு.
நட்பு..
கிட்டுவது
"பெறுதற்கரியதோர் பேறு"
நட்பு..
கிட்டியவர்கள்
"பெரும்பேறு பெற்றோர்"
நட்பு..
கடித்தாலும்,
ஒடித்தாலும்,
நசுக்கினாலும்,
பிழிந்தாலும்
கரும்பு போல்
இனிப்பானது
கண்டவுடன்
கண்மலர்தல்
நட்பன்று.
முகமலர்தல்
நட்பன்று.
நட்பு.
அன்பினால்
"அகம்" மலரும்
நிலை
இரு உயிரும்
ஒன்றை ஒன்று
உணரும் நிலை
ஒத்த மனம்
அதில்
ஊற்றெடுக்கும்
உன்னத
உணர்வுகள்
கோடி தேடிக்
குவிப்பதிலும்
உற்ற நண்பன்
ஒருவனைத்
தேடிக் கொள்வது
கோடி நலம்
நட்பிற்குத்
தொலைபேசி
உரையாடல்
கட்சேவை
குறுஞ்செய்தி
பரிமாற்றம்
நேரடி சந்திப்பு
மிதமிஞ்சிய
பழக்கம்,
நெருக்கம்
தேவையன்று
நட்பு..
தாயாக,
மகளாக,
தமக்கையாக,
தாரமாக,
தோழியாக
பல நிலைகளில்
பரிணமிக்கும்
உன்னத நிலை
நட்பு..
தந்தையாக,
மகனாக,
சகோதரனாக
கணவனாக,
தோழனாக
பல நிலைகளில்
துணை நிற்கும்
தூய நிலை
"இவர் எனக்கு இத்தன்மையவர்"..
" நான் அவருக்கு இன்னம்"..
புனைந்துரைக்கும்
நட்பில்
இரு உள்ளங்கள் அல்ல
இரு உருவகங்கள்
நட்பு கொள்ளுகின்றன.
நல் நட்பு
சிறப்பிழக்கும்
தருணம்
"இது"
உள்ளூரக் கனிந்து,
உயிருறவாய்
நெருங்கி உள்ளோர்க்கு
"முகமனுரை"
தேவையன்று
முகமனுரை
பெருகப் பெருக
அந்தரங்க நட்பு
அகத்தை விட்டு
அகன்று விடும்.
பாசம், நேசம்,
வீடு, உறவு
நூறு சொந்தம்
வந்த பின்னும்
மனம் தேடுகின்ற
அமைதி
நட்பு!
இந்தப்
பண்பான,
அன்பான,
பழகிய,
அழகிய,
இனிய ,
பழைமையான
நட்பைத்
தோழமையோடு
உரிமையோடு
உணர்ந்து,போற்றி
வாழ்தல்
என்றும் வாழ்வில்
இனிமையே!
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல
வினைக்கரிய யாவுள காப்பு - 781
நவில் தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு - 783
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான்
நட்பாம் கிழமை தரும் - 785
முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகம் நக நட்பது நட்பு - 786
இனையர் இவர்எமக்கு இன்னம் யான் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு - 790
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மங்கையராய் பிறப்பதற்கே
நல்ல மாதவம் செய்திட
வேண்டுமம்மா..
பெண்ணே...பெண்ணே..
மண்ணின் பெருமையே..
பெண்ணே நீ..
அன்பில் அன்னை..
அழகில் தேவதை..
அறிவில் அமைச்சு..
பெண்மையின் மென்மை..
மென்மையில் மலர்..
மனிதம் காக்கும் புனிதம்..
பெண்ணே நீ..
இதயம் களவாடும்
இன்பக்காதலி..
இல்லம் காக்கும்
இனிய மனைவி..
தோள் தாங்கும்
தோழி..
உயிர் சுமக்கும்
தாய்மை...
உயிருக்கு உருவம்
தரும் பெண்மை..
ஆணின் ஆண்மைக்கு
வெற்றி ..
பெண்ணே...பெண்ணே..
மண்ணின் பெருமையே..
திருக்குறள் போற்றும்
பெண்ணே..
இனியவளே..
அன்பிற்குரியவளே..
தெய்வ மகளே...
கரையற்ற கல்வி..
கருணை உள்ளம்..
நிறைவான அறிவு..
பெற்றவளே...
அன்பான கண்கள்.
கனிவான பார்வை..
இனிக்கும் சொற்கள்.
கொண்டவளே..
எல்லாம் நிரம்பிய
தாயே...
சக்தியே...
பெண்ணே...பெண்ணே..
மண்ணின் பெருமையே..
பாரதி கண்ட
புதுமைப் பெண்ணே..
பெண்ணியத்திற்கு
குரலோசை எழுப்பி
புதியதோர் சமுதாயம்
படைத்திட
புயலென புறப்படு....
பெரியாரின் கனவு
நிறைவேற
பெண் அடிமைத்தனம்
ஒழித்து
பெண் இனம் மேம்பட
தீபங்கள் ஏற்றி..
சாதிக்கப் புறப்படு..
தரித்திரங்கள் துடைத்துச்
சரித்திரங்கள் படைக்கப்
புறப்படு பெண்ணே..
சிறகுகள் விரித்து
எட்டுத் திசையெங்கும்
புறப்படு...
பெண்ணே...பெண்ணே..
மண்ணின் பெருமையே..
உனக்கு நிகரேது பெண்ணே..
வானம் தொட்டு விடும் தூரம்..
வானம் உன் வசமாகும்
புறப்படு..
பெண்ணே...பெண்ணே..
மண்ணின் பெருமையே..
பெண்ணிற் பெருந்தக்க யாவுள ..
பெண்ணே பெருமை உடைத்து ..
பெண்ணிற் பெருந்தக்க தில் ..
பெண்ணினால் பெண்மை உடைத்து .. ..
பெண் நிறைந்த நீர்மை பெரிது ..
(சுபா சுப்ரமணியம்)
Edited by அன்புத்தம்பி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8h  · 
 
The way home
ஒரு அழகான கிராமத்து படம். சில விசயங்களை நாம் வாழ்நாள்ல மிஸ் பண்ணிட கூடாதுனு நினைப்போம் இல்லை. அப்படியான தருணங்களில் ஒன்றாக இந்த திரைப்படத்தை பார்க்க செலவு செய்யும் நேரம் இருக்கும். நாம காணக்கூடிய அன்றாட வாழ்க்கை முறைகளில் தாத்தா, பாட்டி பேரனுக்கிடையிலான அனுபவங்கள் தொலைந்து போன வாழ்க்கை முறைகளில் பழக்கப்பட்டு கொண்டிருக்கிறோமில்லயா அப்படியான வாழ் முறையை காணக்கிடைக்காதா என்று ஏங்கிக் கிடப்பவருக்கான படம் இது.
காது மந்தமா கேட்காத, சரியா பேச்சுவராத கிரமாத்து பாட்டி அவரை கொஞ்சமும் பிடிக்காத நகரத்து பழக்கவழக்கங்களுக்குட்பட்ட பேரன். இவர்களுக்கு இடையிலான கதைதான் The way home. இந்த கதையில் திரையில் வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிக்கக்கூடிய மாதிரி சினிமா தனமே இல்லாத, இதோ நாம கண்முன் காணும் ஒன்றை போல அனுபவத்தை தரும் கிராமத்து பசளையோடிய காட்சிப்படுத்தல். மொழியே இல்லாமல் புரிந்து கொள்ளக்கூடிய திரைப்படம். கட்டாயம் பாருங்கனு சொல்லல பார்த்தா சந்தோஷமா இருப்பிங்கனு சொல்லுறன்.
May be an image of 2 people, people standing, outdoors and text

பி.கு
ஆங்கிலத்திலும் மொழி பெயர்ப்பு வந்துள்ளதாக அறியதக் கூடியதாக இருக்கிறது..

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தைப் பார்க்கவே புரியுது நல்ல படமாகத்தான் இருக்கும்.......பகிர்வுக்கு நன்றி சகோதரி.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
CANADA
 

Record $128M in Lotto Max prizes up for grabs Tuesday

 

யாராவது ஸ்கார்பிறோ விட்டு தள்ளி இருப்பவர்கள் எடுத்து பாருங்கள்..லொற்றோ மேக்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஜீவன் முக்தி!!
-------------------------
பலரையும் எதோ பிரம்மிப்பிலும், பயத்திலும், தேடலிலும் ஆழ்த்தும் ஒரு சொல்."ஜீவன் முக்தி".
ஜீவன் முக்தி என்றால் என்னவென்றே தெரியாமல் திரிபவர் பலர். ஜீவன் முக்தி என்றால், ஜீவித்துக் கொண்டிருக்கும்போதே அதாவது உயிருடன் இருக்கும்போதே முக்தி அடைவது என்பது தான் பொருள்.
என்னது உயிருடன் இருக்கும்போதே முக்தியா?
அது எப்படி?
முக்தி என்றால் செத்தபிறகு வைணவரானால் வைகுண்டதிற்கும், சைவர்கலானால் கயிலாயதிர்க்கும் சென்றால்தானே முக்தி. அதெப்படி வாழும்போதே முக்தி? என்கிறீகளா!!
வைகுண்டம், கயிலாயம் என்று இருந்தால்தானே ஜி செத்தபிறகு அங்கே போவதற்கு!!
முதலில் முக்தி என்றால் என்னவென்று தெளிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
முக்தி என்பது ஒரு வடமொழிச் சொல்.
அதற்கு தமிழில் "விடுதலை" என்று பொருள்.
எதில் இருந்து விடுதலை?
நம் மனதில் இருந்துதான்!!!
இப்பிரபஞ்சத்தில் நாம் நம் மனதைத் தவிர வேறு எதற்குமே அடிமையாக இருக்கவில்லை.
நம்மை, நாம் நம் இன்வாழ்கையை சுகித்து வாழமுடியாத வண்ணம் செய்வது நம் மனம்தான்.
இறைவன் புரியும் அணைத்து செயல்களிலும் மூக்கை நுழைத்து இது சரி தவறு என்று அதிகப்பிரசங்கித்தனம் செய்வது நம் மனம் தான்.
மனதின் பிடியில் இருந்து விடுபடுவதே உண்மையில் விடுதலையாகும்,
மனோ நாசமே முக்தியாகும்,
அவ்வாறு உயிருடன் இருக்கும்போதே நாம் நம் மனதை ஜெயித்து, கற்பனைகளை கடந்து, சிந்தையை நினைப்பர வைத்தோமேயானால், அதேவே ஜீவன் முக்தி.
"முக்தி என்பது ஒருவன் வாழ்நாளில் அடையப்பட வேண்டுமே தவிர, செத்தபிறகு எங்கோ சென்று அடைவது அல்ல" என்று மகரிஷி வசிஷ்டர் தன் யோக வாசிஷ்டம் என்னும் நூலில் தீர்கமாக மொழிகிறார்.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அன்புத்தம்பி said:
ஜீவன் முக்தி!!
-------------------------
பலரையும் எதோ பிரம்மிப்பிலும், பயத்திலும், தேடலிலும் ஆழ்த்தும் ஒரு சொல்."ஜீவன் முக்தி".
ஜீவன் முக்தி என்றால் என்னவென்றே தெரியாமல் திரிபவர் பலர். ஜீவன் முக்தி என்றால், ஜீவித்துக் கொண்டிருக்கும்போதே அதாவது உயிருடன் இருக்கும்போதே முக்தி அடைவது என்பது தான் பொருள்.
என்னது உயிருடன் இருக்கும்போதே முக்தியா?
அது எப்படி?
முக்தி என்றால் செத்தபிறகு வைணவரானால் வைகுண்டதிற்கும், சைவர்கலானால் கயிலாயதிர்க்கும் சென்றால்தானே முக்தி. அதெப்படி வாழும்போதே முக்தி? என்கிறீகளா!!
வைகுண்டம், கயிலாயம் என்று இருந்தால்தானே ஜி செத்தபிறகு அங்கே போவதற்கு!!
முதலில் முக்தி என்றால் என்னவென்று தெளிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
முக்தி என்பது ஒரு வடமொழிச் சொல்.
அதற்கு தமிழில் "விடுதலை" என்று பொருள்.
எதில் இருந்து விடுதலை?
நம் மனதில் இருந்துதான்!!!
இப்பிரபஞ்சத்தில் நாம் நம் மனதைத் தவிர வேறு எதற்குமே அடிமையாக இருக்கவில்லை.
நம்மை, நாம் நம் இன்வாழ்கையை சுகித்து வாழமுடியாத வண்ணம் செய்வது நம் மனம்தான்.
இறைவன் புரியும் அணைத்து செயல்களிலும் மூக்கை நுழைத்து இது சரி தவறு என்று அதிகப்பிரசங்கித்தனம் செய்வது நம் மனம் தான்.
மனதின் பிடியில் இருந்து விடுபடுவதே உண்மையில் விடுதலையாகும்,
மனோ நாசமே முக்தியாகும்,
அவ்வாறு உயிருடன் இருக்கும்போதே நாம் நம் மனதை ஜெயித்து, கற்பனைகளை கடந்து, சிந்தையை நினைப்பர வைத்தோமேயானால், அதேவே ஜீவன் முக்தி.
"முக்தி என்பது ஒருவன் வாழ்நாளில் அடையப்பட வேண்டுமே தவிர, செத்தபிறகு எங்கோ சென்று அடைவது அல்ல" என்று மகரிஷி வசிஷ்டர் தன் யோக வாசிஷ்டம் என்னும் நூலில் தீர்கமாக மொழிகிறார்.

அப்படி ஒரு ஜீவன்முக்தராக "ஜனக மகாராஜா" சீதாப்பிராட்டியாரின் தந்தை வாழ்ந்திருந்தார்......!  🙏

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.”மலைப் பிஞ்சி” என்பது?
குறுமணல்

2.குமரி மாவட்டத்தின் பழைய பெயர்?
நாஞ்சில் நாடு

3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்?
ஒடிஷா

4.”தமிழ் மொழி” என்பது?
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை

5.”இரவும் பகலும்” என்பது?
எண்ணும்மை

6.”கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை?
ஐந்தாம் வேற்றுமை

7. ”நல்ல மாணவன்” என்பது?
குறிப்புப் பெயரெச்சம்

8. “கடி விடுது”-இச்சொல்லில் “கடி” என்பதன் பொருள்?
விரைவு

9. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்ட ஆண்டு?
2008, மே 19

10. உயிர் அளபெடையின் மாத்திரை?
3 மாத்திரை

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சைவ சமய புராணங்களில் இரண்டு தவங்கள் முக்கியமானவை.
 
1. பகீரத தவம் - கங்கை நதியை பூமிக்கு கொண்டு வர சிவபெருமானை நோக்கி தவமிருப்பது.
2. அர்ஜூன தவம் - பாசுபதம் எனும் ஆயுதம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவமிருப்பது.
பகீரத தவம் - பகீரதனின் முன்னோரான சகரரின் மனைவியான சுமதிக்கு 60 ஆயிரம் மகன்கள், மற்றொரு மனைவியான கேசனிக்கு ஒரு மகன். அசுவமேத யாகத்தை மன்னர் சகரர் செய்கிறார். அதன்படி குதிரையை விடுவிக்கின்றனர். குதிரையானது கபிலர் எனும் முனிவரின் குகை வாயிலில் இருக்கிறது. குதிரையை காணாது தேடிவந்த 60 ஆயிரம் பேரும் கபில முனிவரிடம் சண்டைக்கு செல்கின்றனர். கபிலரால் சபிக்கப்பட்டு சாம்பலானார்கள்.
கேசியின் மகனுக்கு பிறக்கும் பகீரதன் அரசரானதும் தன்னுடைய முன்னோர்கள் 60 ஆயிரம் பேர் முக்தி அடையாமல் இருக்கிறார்கள் என அறிந்து வருந்துகிறான். அவர்களை முக்தி பெற வைக்க தேவலோகத்தில் இருக்கும் கங்கை நதியை பூமிக்கு வர வைக்க சிவபெருமானை நோக்கி தவமிருக்கிறான். பெருந்தவம் கங்கையை பூமிக்கு வர வைக்கிறது. 60 ஆயிரம் முன்னோர்களும் முக்தி அடைகிறார்கள்.
 
அர்ஜூன தவம் - பாண்டவர்கள் சூதாடி தோற்ற பிறகு வனவாசம் மேற்கொள்கின்றனர். அந்தக்காலத்தில் 'பாசுபதம்' எனும் ஆயுதத்தை பெற சிவபெருமானை நோக்கி தவமிருந்தார் அர்ஜூனன். மூகாசுரன் என்ற அசுரன் அர்ஜூனன் தவம் கலைக்க பன்றியாக உருவெடுத்து மோதி தொல்லை செய்தான். பன்றியை கொல்ல அர்ஜூனன் அம்பு எய்த.. மற்றொரு அம்பும் அந்த பன்றியை துளைக்கிறது. அந்த அம்புக்கு உரிமையாளர் வேடனாக வந்த சிவபெருமான்.
பன்றி யாருக்கு சொந்தம் என வேடனுக்கும், அர்ஜூனனுக்கும் ஒரு சண்டை நடந்து இறுதியில் சிவபெருமான் அர்ஜூனனுக்கு பாசுபத அஸ்திரத்தை தந்தார்.
சிவாலயங்களில் ஒரு தவக்காட்சி சிற்பமாக இருக்கிறது. ஒரு ஆண் ஒற்றைக்காலை மட்டும் தரையில் ஊன்றி கடுமையாக தவமிருக்கிறார். அந்த தவம் செய்யும் மனிதர் அர்ஜூனனா? பகீரதனா என நமக்கு குழப்பம் நேரிடும். அதை எளிதாக வேறுபடுத்தி காட்டிட சிற்பி ஒரு உத்தியை கடைபிடிக்கிறார். அது பன்றி.
தவம் செய்யும் சிற்பம் அர்ஜூனன் என்றால் அவர் பின்புறமாக பன்றி சிற்பமும் சேர்த்து வடிக்கப்படும். பகீரதன் என்றால் அவர் மட்டுமே தவமிருப்பார்.
May be an image of 1 person and text that says 'பேரூர் சிற்பம் அர்ஜுன தவம், போரூர் பகீரத தவம், மாமல்லபுரம்'
 
 
வாசித்ததிலிருந்து............
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
* வெகு காலங்களுக்கு முன் அதாவது சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கு (EOCENE AGE) முன், இந்தப் பகுதியில் வெப்பத்தால் எரிமலைகள் வெடித்துச் சிதறின. இதனால் மலைகளில் பெரும் நில வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. எரிமலைச் சாம்பல், நிலச்சரிவில் வந்த மண், பாறைகள் இவைகளெல்லாம் பெரு வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இன்று கல் மரங்கள் நின்று கொண்டிருக்கும் பகுதியில் படிந்தன. நின்று கொண்டிருந்த பெரிய மரங்கள் தம் நிலை மாறாமலேயே அப்படியே புதையுண்டன. சில மரங்கள் பெருவெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டுக் கிடைநிலைக் கல்மரங்களாயின.
* மரங்கள் அழுகும் நிலை, உளுத்துப் போகும் நிலைக்கு வரும் முன்னரே, எரிமலை சாம்பல், மண் இவையெல்லாம் நீரில் கலந்து மரத்தில் இறங்கி செல்லுலோசை உருகச் செய்து திடமான படிமங்களாக இறுகின. இந்த 'கல்லாய் மாறுதல்' (PETRIFICATION) நிகழ்வில் மரங்கள், கல்மரங்களாக மாறி இன்றைக்கும் நமக்கு ஏதாவது இடங்களில் அகப்படுகின்றன.
* கிடை நிலைக் கல்மரங்கள்: சாத்தனூர், திருவக்கரை, இராஜஸ்தானில் உள்ள பொக்ரேன் பகுதி போன்ற இடங்களில் காணப்படும் கல்மரங்கள் அனைத்துமே ‘கிடை நிலையிலேயே (Horizontal type) கண்டறியப்பட்டுள்ளன. அரிசோனா கல்மரங்களும் கிடை நிலை வகையாகும்.
* அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாநிலத்தில் எல்லோ ஸ்டோன் நேஷனல் பார்க் (YELLOW STONE NATIONAL PARK) கில் உள்ள கல் மரங்கள் நிற்கும் கல் மரங்கள்( Vertical Type) ஆகும்.இவைகள் நிற்கும் மரங்களாகவும் கல்லாக மாறிய நிகழ்வின் எச்சங்களாகவும் உள்ளன.
* உதகை, பொட்டானிக்கல் கார்டனில் உள்ள கல்மரத்தைப் பாருங்கள். கீழே விளக்கம் தந்துள்ளனர்.இது இந்திய புவியியல் ஆராய்ச்சியமைப்பு ( G S I)நிறுவியுள்ள கல் மரச் சின்னமாகும்.திருவக்கரைப் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புவிசார் தொல்லியல் சின்னமாகும். இவையே புதுவை அருங்காட்சியகத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
Agnisiragu Mudiarasu
194685764_1448789182139521_5189877947480
 
 
194192939_1448789248806181_9120689274634
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஜூன் 16 – உலக கடல் ஆமை தினம்
100 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக, கடல் ஆமைகள் உலக சமுத்திர பகுதிகளில் வாழ்ந்துவருகின்றன. இவை கடல் சூழலின் சமநிலையினைப் பேணுவதில் இவை பிரதான வகிபாகம் வகிக்கின்றன.
மனித செயற்பாடுகளின் காரணமாக அதாவது முட்டை, இறைச்சி, தோல், மற்றும் பிற தேவைப்பாடுகளுக்காக மனிதனால் கடல் ஆமைகள் அளவுக்கதிகமாக வேட்டையாடப்படுகின்றன. அத்துடன் அவற்றின் வாழிடங்கள் சிதைக்கப்படுவதும், எதிர்பாராதவிதமாக மீன்பிடி வலைகளினால் அவை பிடிக்கப்படுவதும், மேலும் காலநிலை மாற்றங்கள் க…
See More
See Translation
No photo description available.
 
 

Loganathan Kanapathipillai

 
  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.