Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

· 

இலங்கையில் இருந்து இயங்கும் சுயாதீன ஊடகவியலாளர் பிரகாஸ் ஞானப்பிரகாசம் - Pragas Gnanapragasam - கோவிற் தொற்றுக் காரணமாக மரணமடைந்துள்ளார்..
 
May be an image of 1 person, beard, sky and tree
 
 
 
4h  · 
#சகோதரர்கள் மூவர் இருந்தாலும் பெற்றோர் இல்லாத எதிர்காலத்தை நினைத்துப் பார்த்தால் அல்லது விரைவில் மரணித்துவிடுவேன் என்பதை நினைக்கும் போது கவலையுடன் இலேசாக கண்கள் நனைந்துவிடும்.
இறக்கும் வரை ஒருவரது பெறுமதி தெரிவதில்லை... இவனுடன் பழகியதில்லை... ஆனால், இவன் வழங்கிய நேர்காணல் மனதை கனக்கச் செய்து விட்டது..
முழுமையாக வாசிப்பதற்காக பதிவிடுகின்றேன் ( நேர் கண்டவர்- கேஜி.கேஜி)
1. உங்கள் அடையாளம் என்ன என கேட்டால் என்ன சொல்வீர்கள் ?.
பதில் :- எழுத்து என்று தான் சொல்வேன். அதற்கான அடித்தளத்தினை முகநூல் வலைத்தளமே ஏற்படுத்தித்தந்தது. ஏனென்றால், முகநூல் பயனராகிய பின்னரே எனக்குள் இருந்த எழுத்துத்திறமை வெளிப்பட்டது. அது, ஊடகவியலாளர் எனும் அந்தஸ்த்தையும் பெற்றுக் கொடுத்துள்ளது.
2. உங்கள் குடும்பம், பிறந்த, வளர்ந்த ஊர் பற்றி ஒரு அறிமுகம்.
பதில் :- அம்மா, அப்பாவுடன், அக்கா மற்றும் இரண்டு அண்ணன்கள் அடங்கலாக ஆறு பேரை கொண்டது எங்கள் குடும்பம். அதில், நான் கடைக்குட்டி. பிறந்தது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொடிகாமம், வெள்ளாம் போக்கட்டி எனும் பனை, தென்னை, மா மரங்கள் நிறைந்த அழகிய கிராமத்தில் தான். வளர்ந்ததும் இதே கிராமத்திலேயே. எனினும், சிறு வயதில் போர்ச் சூல்நிலைகளின் போது உறவினர்கள் உள்ள ஊர்களான பண்டத்தரிப்பு மற்றும் உரும்பிராயிலும் சில காலம் வாழ்ந்துள்ளேன்.
3. உங்களுக்கு இந்த ஊடக துறையில் சாதிக்க தூண்டிய காரணி எது ?.
பதில் :- பத்திரிகை, வானொலிகள் மீது மிகுந்த ஆர்வமும், செய்திகளை படிப்பதில் இருந்த ஈர்ப்பும் ஒரு காரணியாக இருக்கின்றது. அதேபோல், "ஊடகவியலாளன்" என்ற அடையாளத்தை நானாக சூட்டிக்கொண்டதால் அதனை முழுமையாக நிரூபிக்க வேண்டும் என்ற உந்துதலும் முக்கியமான காரணியாகும். அந்தவகையில் தற்போது தான் ஊடகத் துறையில் இலை மறை காயாக இருந்து சாதிக்க ஆரம்பித்துள்ளேன்.
4. உங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் இது போன்று சாதிக்க உங்கள் ஒரு குடும்பம் என்ற வகையில் என்ன மாதிரியான பங்களிப்பை செய்கிறது அல்லது செய்ய வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள் ?.
பதில் :- எனது தேவையறிந்து செயற்படுவதுடன், தேவையான பங்களிப்பை எனது குடும்பத்தினர் செய்துவருகின்றனர். அம்மா இல்லை என்றால் என்னால் எதுவும் சாதித்திருக்க முடியாது. மக்களுக்கான போராட்டங்களில் கலந்து கொள்ள அம்மா என்னை தயார்ப் படுத்துவார். அப்பாவே, அழைத்து செல்வார். அது பெற்றோரின் அளப்பரிய பங்களிப்பாகும். அண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் தொடர்பில் நீதி கோரிய போராட்டம் ஒன்றை ஒழுங்கமைத்து அதில் பங்குகொள்ள சென்ற என்னைப்பற்றிய தகவல் புலனாய்வாளர்களுக்கு சென்றிருந்தது. ஆனாலும், அச்சம் இருந்தும் எனது குடும்பத்தினர் என்னை தடுக்கவில்லை. எனவே, அத்தகைய பங்களிப்பை தொடர்ந்தும் செய்ய வேண்டும். செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
5. சமூக ஊடகங்கள் குறிப்பாக முகநூல், இணையத்தளம் என்பன உங்களுக்கு எவ்வளவு பெரிய உதவியாக உள்ளது ?.
பதில் :- மேற்குறிப்பிடப்பட்டவை நிறைவேறவும், இப்போது இந்த பேட்டியை வழங்கும் நிலையை அடையவும் முகநூல் வலைத்தளம் மட்டுமே எனக்கு முழுமையான பேருதவியாக அமைந்துள்ளது. முகநூல் இல்லை என்றால் நிச்சயம் எனக்குள் இருந்த திறமை வெளிப்படாமல் வீணாகிப் போயிருக்கும். பலரும் முகநூல் பாதிப்பை மட்டுமே தரும் என்று கருதுகின்றனர். ஆனால் எனக்கு ஒரு எதிர்காலத்தை தந்தது என்றால் அது முகநூல் தான். அத்துடன், என்னால் முடியாது என நினைத்தவற்றை முடியும் என்று தன்னம்பிக்கையை விதைக்கும் சிறந்த நண்பர்களையும் இந்த முகநூல் தந்துள்ளது.
6. உங்கள் கனவு என்ன ?.
பதில் :- சில காலங்களுக்கு முன்வரை எந்த கனவுகளும் இல்லாமல் தான் இருந்தேன். ஆயினும், மாற்றுத்திறனாளியாக இருப்பவர்கள் தம்மிடம் இருக்கும் திறமைகளை கொண்டு சாதித்துவிட்டு மரணித்து போவதை, முக்கியமாக என்னைப்போல் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்பட்ட அழுத்கமை இர்பான் ஹபிஸ் படுக்கையில் இருந்து மூன்று நூல்களை எழுதிவிட்டு எழுத்தாளராக மரணித்த போது தான். "நானும் மாற்றுத்திறனாளி" என்பதை உலகிற்கு வெளிக்காட்டி என்னிடம் இருக்கும் ஊடகத்திறமை மூலம் சாதித்து மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவருக்கும் முன்னுதாரணமாக, தன்னம்பிக்கையை கொடுப்பவனாக இருந்துவிட்டு மரணித்துவிட வேண்டும் என்பதே கனவாக மாறியது அல்லது மாற்றிக்கொண்டேன். அந்தக் கனவை ஒரு போராட்டத்தில் பங்கெடுத்து செயற்படுத்த ஆரம்பித்திருக்கிறேன்.
7. உங்கள் ஊடக செயல்பாடுகளை தடையின்றி செய்ய ஏதாவது தடைகள் உள்ளனவா ?.
பதில் :- தடை இருப்பதாக நான் உணரவில்லை. ஆயினும், ஊடகவியலாளர் என்ற உத்தியோகபூர்வ அந்தஸ்த்து எனக்கு கிடைக்கவில்லை. அதற்காக, நான் இதுவரை விண்ணப்பிக்கவும் இல்லை. அந்த அந்தஸ்த்தை பெற்றுக் கொண்டால் எனது ஊடகத்துறை பயணத்திற்கு வலு கிடைக்கும்.
8. எப்போதாவது உங்களது உடல் அங்கவீனம் குறித்து வருத்தப்பட்டிருக்கிறீர்களா ?.
பதில் :- ஆம்!. மனதுக்குள் வருத்தப்பட்டிருக்கிறேன் வெளியில் காட்டிக்கொள்வதில்லை. அத்தகைய கவலை எப்போதும் என் மனதோரத்தில் இருக்கும். சகோதரர்கள் மூவர் இருந்தாலும் பெற்றோர் இல்லாத எதிர்காலத்தை நினைத்துப் பார்த்தால் அல்லது விரைவில் மரணித்துவிடுவேன் என்பதை நினைக்கும் போது கவலையுடன் இலேசாக கண்கள் நனைந்துவிடும்.
9. இன்று சமூகத்தில் ஒரு மாற்றுத்திறனாளியாக பல சாதனைகளை முன்னெடுத்து வருகிறீர்கள்.. உங்களைப் போன்றவர்கள் மேலும் என்னென்ன துறைகளில் சாதிக்கலாம் முன்னேறலாம் ?.
பதில் :- என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் தமக்குள் இருக்கும் திறமைகளின் அடிப்படையில் எத்துறையிலும் சாதிக்க முடியும். எனவே, மாற்றுத் திறனாளிகளாக இருப்பவர்கள் தமக்குள் இருக்கும் திறமைகளை அடையாளம் கண்டு ஏதோவொரு வழியில் அவற்றில் சாதித்து முன்னேற வேண்டும். என்னைப் போல் தசைத்திறன் குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்ட தம் பிள்ளைகளை கேள்விப்படும் வைத்தியர்களிடம் எல்லாம் கொண்டுதிரிந்து அல்லல்ப்பட்டு பிள்ளைகளையும் கஸ்டப்படுத்தாமல் அவர்களது திறமையை வளர்க்க பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.
10. உங்களுக்கு வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் துறை எது ?.
பதில் :- இப்போது வருமானத்தை பெற்றுத்தருவது ஊடகத்துறை தான். இணைய ஊடகங்களில் செய்தி ஆசிரியராகவும், செய்தியாளராகவும் பணிபுரிகின்றேன். இந்நிலையை அடைவதற்கு முந்தைய காலத்தில் கதிரை பின்னுவது, நீத்துப்பெட்டி பின்னல் மற்றும் புகைப்பட வடிவமைப்பு செய்வது மூலமும் வருமானத்தை பெற்றுள்ளேன் என்பதையும் இவ்விடத்தில் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.
11. நீங்கள் முழு நேர ஊடகவியலாளர் மட்டுமா அல்லது ஏனைய படைப்புகளில் ஆர்வம் உண்டா ?.
பதில் :- முழுநேர ஊடகவியலாளர் என்று தான் சொல்ல வேண்டும். புகைப்பட வடிவமைப்பு துறையில் ஆர்வம் இருந்தாலும் எனது உடல் நிலைக்கு ஏற்ப முழு நேரத்தையும் ஊடகத் துறையில் செலவிடுவதே எனக்கு பொருத்தமாக அமைந்துள்ளது.
12. பொதுவாக சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?.
பதில் :- சமூகம் என்ற கட்டமைப்பின் கீழ் வாழுகின்ற மக்களிடையில் ஒற்றுமை, மனிதநேயம் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். ஆனால், அனைத்தும் நவீனமயமாக மாறிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் அவை அருகியிருப்பதையே காண்கின்றோம். சாமானிய மக்களின் பிரச்சினைகள், வறுமைகளை போக்குவதற்கு கரம்கொடுப்பது ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்கள் பல்வேறு துண்பகரமான பிரச்சினைகளுக்காக அரசிடம் கோரிக்கை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அவற்றில், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் காணி தொடர்பான பிரச்சினைகள், பெருந்தோட்ட மக்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் முக்கியமானவை. அதுபோன்ற, பிரச்சினைகளை தீர்க்க பாதிக்கப்பட்டோருக்காக குரல் கொடுக்கும் ஒற்றுமை மனப்பாங்கு அனைத்து மக்களிடமும் ஏற்பட வேண்டும்மென்று பணிவுடன் வலியுறுத்த விரும்புகின்றேன். மாற்றுத்திறனாளியாக இருந்தும் ஏன் இதற்கு முக்கியம் கொடுக்கிறீர்கள் என்று உங்களிடம் கேள்வி எழுமென்று நினைக்கின்றேன். எனது ஊடகத்துறை வளர்ச்சிக்கும் என்னை மாற்றுத்திறனாளியாக பொது வெளியில் அடையாளப்படுத்தவும் மக்களின் பிரச்சினை (முக்கியமாக பெருந்தோட்ட மக்களின் பிரச்சினை) எனக்கு தூண்டுகோலாக இருந்தது என்பதுதான் அதற்கான விடை.
 
  • Like 3
  • Thanks 1
  • Sad 2
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
2019 ம் ஆண்டு வாரமலரில் வெளிவந்தது நான் படித்து ரசித்த கதை...உங்களுக்காக..
ஒவ்வொரு சிறுகதையும் எளிய மனுசங்களோட வாழ்க்கையில நடந்த , கேட்ட, படித்த கதைகள் தானேங்க..
ஏராளமா கதை இருக்கு சொல்ல பெரியவங்களு இருக்காங்க...ஆனா நமக்கு தான் கேட்க நேரமில்ல..
காரணம் : பொருளாதாரமின்மை , விஞ்ஞானம் வளர்ச்சி( மொபைல்)
( கதை பெரிசா இருக்கேனு விட்றாதீங்க...படிங்க...)
#கரு : ஒரு எழுத்தாளனுக்கு நேர்மை எவ்ளவு முக்கியமானதுனு சொல்ற கதைங்க....
வாரமல்லிகை' இணைப்பு புத்தகத்தை புரட்டினான், விக்னேஷ்குமார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், இருநுாறுக்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதிக் குவித்த எழுத்தாளன்.
வயது, 57, மாநிறம், உயரம், 170 செ.மீ., பருத்த வட்ட முகம், 'பியர்' தொப்பை.
ஆறாவது பக்கத்தில் வந்திருந்த விளம்பரத்தில், கண்களை ஊன்றினான். 'அமரர், எஸ்.வி.ஆர்., கிருஷ்ணய்யர் சிறுகதை போட்டி - 2019' அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் பரிசு, 20 ஆயிரம் ரூபாய்.
'வாரமல்லிகை' நடத்திய முதலாம் ஆண்டு சிறுகதை போட்டியில், விக்னேஷ்குமார் தான், முதல் பரிசு பெற்றான்.
அடுத்தடுத்த நான்கைந்து ஆண்டுகளில், சிறுகதை போட்டிகளுக்கு நடுவர்களில் ஒருவனாய் இருந்தான்.
பொதுவாக, 'வாரமல்லிகை' நடத்தும் சிறுகதை போட்டிகளுக்கு, பெண் எழுத்தாளர்கள் தான் அதிகம் எழுதுவர். போட்டிக்கு, 10 ஆயிரம் சிறுகதைகள் வரும். 10 நடுவர்களை வைத்து கதைகளை படித்து, முதலாம் கட்ட தேர்வு நடக்கும்.
பல கட்டங்களுக்கு பின், இறுதி தேர்வுக்காக, கதைச் சுருக்கத்துடன், 50 சிறுகதைகள், ஆசிரியரின் மேஜைக்கு போகும். முதல் மூன்று பரிசுகளுக்கு, மூன்று கதைகள்; ஆறுதல் பரிசுக்கு, ஏழு கதைகளை ஆசிரியர் தேர்ந்தெடுப்பார். பாரபட்சமில்லாத தேர்வு. சிறந்த சிறுகதை, குப்பன், சுப்பன் எழுதியிருந்தாலும், முதல் பரிசு அவர்களுக்கு தான்.
காபி எடுத்து வந்து வைத்தாள், விக்னேஷ்குமாரின் மனைவி, கார்த்திகா.
சிறுகதை போட்டி விளம்பரம் வந்த பக்கத்தை, அவளிடம் நீட்டினான்.
வாங்கி பார்த்து, ''வழக்கம்போல, 2019ன், சிறுகதை போட்டி அறிவிச்சிருக்காங்க... இதுக்கென்ன?''
தயங்கிய விக்னேஷ்குமார், ''எனக்கொரு ஆசை... நீ கோவிச்சுக்க கூடாது!''
''என்ன?''
''இந்த ஆண்டு, 'வாரமல்லிகை' சிறுகதை போட்டிக்கு, நானும் சிறுகதை எழுதி அனுப்ப முடிவெடுத்திருக்கேன்!''
''மூத்த எழுத்தாளர்கள் கலந்துக்க கூடாதுன்னு நிபந்தனை இருக்கே?''
''காலம் சென்ற எழுத்தாளர் ராஜேந்திரகுமாரிடம் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. எந்த பத்திரிகை, சிறுகதை போட்டி நடத்தி, யார் முதல் பரிசு பெற்றாலும், அவருக்கு, வாழ்த்து கடிதம் அனுப்புவாராம். முதல் பரிசு, 10 பேர் பெற்றால், அதில், ஒன்பது பேர் காணாமல் போய் விடுகின்றனர். அவர்களின் இரண்டாவது படைப்பு வெளியாவதே இல்லை என கண்டுபிடித்தார்.
''ஆகவே, ஒரு முடிவுக்கு வந்தார். பிரபல எழுத்தாளர்களே, பொய் புனை பெயரில் கதை எழுதி, முதல் பரிசு பெறுகின்றனர். பரிசு பெற்ற பின், உதவிய புனை பெயரை, குப்பை கூடைக்கு அனுப்பி விடுகின்றனர் என, மோப்பம் பிடித்தார்.''
''அதனால, என்ன சொல்ல வர்றீங்க?''
''உன் பெயரில் சிறுகதை எழுதி, 'வாரமல்லிகை' சிறுகதை போட்டிக்கு அனுப்பவா?''
''என் பெயர், 'வாரமல்லிகை' ஆசிரியருக்கு தெரியுமே!''
''உனக்கு இரண்டு பெயர்கள் உள்ளன. ஒரு பெயர் தான், பத்திரிகை உலகிற்கு பிரபலம். நான் கையால் எழுதிய கதை பிரதியை, வெளியில் ஒரு கணினி நிறுவனத்திடம் கொடுத்து, தட்டச்சு செய்வோம். உன் தோழி, திருநெல்வேலி சந்திரா முகவரியிலிருந்து கதை அனுப்புவோம். அவரிடம் விஷயத்தை சொல்லி, அனுமதி பெற்று விடு!''
''இது, திருட்டுத்தனம் இல்லையா?''
''போட்டியில், தகுதியான கதையாக என் படைப்பு இருந்தால்தான் முதல் பரிசோ, இரண்டாம் பரிசோ பெறும். போட்டி என்றால் எல்லாருக்கும் பொதுதானே... கதைகள் எழுத ஆரம்பித்து, 32 ஆண்டுகள் ஆகின்றன. நான், சிறுகதைகளை பழைய வீரியத்துடன் எழுதுகிறேனா இல்லையா என்பதை, சுயபரிசோதனை செய்துகொள்ள இது நல்ல சந்தர்ப்பம்!''
''கதையின் எழுத்து நடையை பார்த்து, எழுதியது நீங்கள் தான் என கண்டுபிடித்து விடுவர்.''
''தனி நடையில் முயற்சிப்பேன்!''
''என் இரண்டாவது பெயரில் கதையை எழுதி அனுப்புவதை விட, உங்கள் கோவில்பட்டி வாசகி, மீனாட்சி பெயரில் அனுப்பலாம்... யாருக்கும் சந்தேகம் வராது!''
''இது நல்ல யோசனை, கார்த்திகா!''
''இன்னொரு முக்கியமான சந்தேகம் எனக்கு!''
''என்ன?''
''சிறுகதை போட்டிக்கு, நீங்க அனுப்புற கதை தேர்வாகாம போயிருச்சுன்னா, அது உங்க மனநிலையை வெகுவா பாதிக்கும். அப்புறம் ஒரு வார்த்தை கூட, உங்களால எழுத முடியாது. உங்க, 'கேரியர்ல டெட் எண்ட்' வந்துரும்!''
யோசித்தான், விக்னேஷ்குமார்.
''என் தகவல் குறிப்பு நோட்டில், 50க்கும் மேற்பட்ட சிறுகதை கரு, குறித்து வைத்துள்ளேன். அதில், பத்தை தேர்ந்தெடுத்து, உன்னிடம் வாய்வழி கதையாக கூறுகிறேன். பத்தில் எது சிறந்தது எனக் கூறு, அதை எழுதுகிறேன். எழுதியதை, 10 நாள் கிடப்பில் போட்டு மீண்டும் வாசித்து, திருத்தி, இரண்டாம் முறை எழுதுகிறேன்.
''திரும்ப, 10 நாள் கிடப்பில் போட்டு, பின், மீண்டும் வாசித்து, மூன்றாம் முறை திருத்துகிறேன். அதன்பின், சிறுகதையை தட்டச்சு செய்து, மீனாட்சிக்கு அனுப்புவோம். அந்த பிரதியை, அவர் முகவரியிலிருந்து 'வாரமல்லிகை'க்கு, மீனாட்சி அனுப்புவார்!''
''முதல் பரிசு கிடைச்சா, மீனாட்சிக்கு நாம எதுவும் குடுக்கணும்ல்ல?''
''என் அன்பிற்காக எதையும் செய்வார், மீனாட்சி. எதுவும் கேட்க மாட்டார். நாமாக ஏதாவது பரிசு பொருள் வாங்கி தரவேண்டியது தான்.''
''இப்போதே முதல் பரிசு பெற்று விட்டதை போல ரொம்ப ஆடுகிறோமோ?'' சிரித்தான், விக்னேஷ்குமார்.
''நம்மிடம் இருப்பது தலைக்கனம் அல்ல, தன்னம்பிக்கை!''
''எதற்கும் இன்னும் பலமுறை யோசித்து முடிவெடுங்கள்... நீங்கள் சிறுகதை போட்டியில் கலந்துகொள்வது, எனக்கு உடன்பாடான விஷயமில்லை. போட்டியில் ஜெயித்தாலும், குற்ற உணர்ச்சி ஆயுளுக்கும் தொடரும்,'' எனக் கூறி, சமையலறைக்குள் சென்றாள், கார்த்திகா.
ஒருமணி நேர யோசனைக்கு பின், தகவல் குறிப்பு நோட்டில், 50 சிறுகதை கருக்களை அலசி ஆராய்ந்து, 10 கதை கருக்களை தேர்ந்தெடுத்தான், விக்னேஷ்குமார்.
ஒவ்வொரு கதைக் கருவுக்கும், கதை தலைப்பு, கதாபாத்திரங்களின் பெயர், வயது, தொழில், தோற்றம், வசிப்பிடம் மற்றும் தெளிவான கதைச் சுருக்கத்தை எழுதினான். கட்டடம் கட்ட, 'ப்ளூபிரின்ட்' தயாரிக்கப்படுவது போல, சிறுகதை எழுத, உள்கட்டமைப்பு ஆயத்தம் செய்தான். ஒரு சிறந்த கதை சொல்லியான அவன், மனைவியிடம் ஒவ்வொரு கதையாய் விவரித்தான்.
விக்னேஷ்குமார் கூறிய, ஒரு சிறுகதை, கார்த்திகாவை வெகுவாக கவர்ந்தது.
''கதை புதுசா, உருக்கமா, சமுதாயத்துக்கு பயனுள்ளதா இருக்கு. இதையே எழுதுங்க!''
தேநீர் உறிஞ்சியபடி, அச்சிறுகதையை எழுதி முடித்து, உரக்க வாசித்தான், விக்னேஷ்குமார்.
''சொன்னதை விட, எழுதினது, 50 சதவீதம் கூடுதல் சிறப்பா வந்திருக்கு,'' என்றாள், கார்த்திகா.
மீனாட்சிக்கு போன் செய்து விக்னேஷ்குமார் விசாரிக்க,
''பிரமாதம்... நான், உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்ல ஆசைப்பட்டேன்... நீங்க முந்திக்கிட்டு போன் பண்ணிட்டீங்க!'' என்றாள்.
''சொல்லுங்க!''
''முப்பது ஆண்டுகளாக, உங்க கதைகளை படிச்சு படிச்சு, நானே பாதி எழுத்தாளர் ஆயிட்டேன். பலமுறை, 'வாரமல்லிகை' சிறுகதை போட்டிக்கு, சிறுகதைகள் அனுப்ப நினைச்சும், ஏனோ முடியாம போயிருச்சு... இந்த ஆண்டு நிச்சயம் சிறுகதை போட்டியில கலந்துக்க போறேன்... குரு ஸ்தானத்துல நின்னு, சிஷ்யை என்னை ஆசிர்வதிங்க!''
''ஆசிர்வதிக்கிறதுக்கு முன், ஒரு கேள்வி... மாற்று புனை பெயர்ல இந்த சிறுகதை போட்டியில் பங்கேற்று, நான் முதல் பரிசு வாங்கினா என்ன நினைப்பீர்கள், மீனாட்சி!''
''அப்படி ஒருபோதும் செய்ய மாட்டீர்கள்... எழுத்தும் நேர்மையா இருக்கணும், எழுதுற எழுத்தாளனும் நேர்மையா இருக்கணும்ன்னு நினைக்கிறவரு நீங்க... எதை எழுதினாலும் அதில் சத்தியமும், உண்மையும் கொப்பளிக்கும். கேவலம், 20 ஆயிரம் ரூபாய்க்காக சோரம் போகிற எழுத்தாளர், நீங்க இல்லைன்னு எனக்கு தெரியும். இளைய தலைமுறை எழுத்தாளர்களின் வெற்றியை, உங்க வெற்றியா பாவிக்கிறவர் நீங்க!''
உச்சந்தலையில் தொடர்ந்து குட்டுகள். கன்னத்தில் பளார் பளார் அறை... விக்னேஷ்குமாரின் காதை திருகினாள், எழுத்து தேவதை.
'உன் வாசக - வாசகியரின் நம்பிக்கையை வீணாக்கி விடாதே...'
''என் மீது நீங்க கொண்டிருக்கும் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் மிக்க நன்றி. 'வாரமல்லிகை' சிறுகதை போட்டி 2019ல், நீங்கள் முதல் பரிசு பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்!''
கைபேசியை அணைத்து, கார்த்திகாவிடம் திரும்பினான்,
விக்னேஷ்குமார். ''பொய் புனை பெயரில் கதை எழுதி, 'வாரமல்லிகை' சிறுகதை போட்டியில் நான் கலந்துகொள்ள போவதில்லை. இப்போது எழுதிய சிறுகதையை சாதாரண பிரசுரத்துக்காக, 'வாரமல்லிகை'க்கு அனுப்புவோம். வாசகர் பாராட்டே, எனக்கான முதல் பரிசு!''
பரிசு போட்டி முடிவுகள் வெளியாகின. முதல் மூன்று பரிசுகள் புதுமுகங்களுக்கு, ஆறுதல் பரிசு வாங்கியிருந்தார், மீனாட்சி.
முதல் பரிசு கதை, வெளியான இதழிலேயே, விக்னேஷ்குமாரின், சிறுகதையும் வெளியாகியிருந்தது.
விக்னேஷ்குமாருக்கு, கடிதம் எழுதியிருந்தார், ஆசிரியர்.
எழுத்தாள நண்பருக்கு... கடந்த, 10 ஆண்டுகளில், நான் படித்த சிறுகதைகளில் சிறந்தது, இக்கதை தான். சிறுகதை போட்டிக்கு என, குறிப்பிட்டு அனுப்பி இருந்தீர்கள் என்றால், மூத்த எழுத்தாளர்கள் போட்டியில் கலந்துகொள்ளக் கூடாது என்ற நிபந்தனையை தளர்த்தி, உங்களுக்கே முதல் பரிசு கொடுத்திருப்பேன்.
எனக்கு, அப்படி ஒரு தர்மசங்கட நிலையை ஏற்படுத்தாமல், புதுமுகங்களுக்கு வழி விட்டுள்ளீர்கள். உங்கள் எழுத்தையும், புதுமுகங்களுக்கு வழிவிடும் நேர்மையையும் சிலாகித்து, இன்னொரு முதல் பரிசு தொகையை, உங்களுக்கு சிறப்பு சன்மானமாக அனுப்பியுள்ளேன்.
வாழ்த்துகள்
 
!
நெகிழ்ந்து போனான், விக்னேஷ்குமார்.
மீனாட்சியின் ஆறுதல் பரிசு கதை, நான்காவது வாரம் வெளியாகியிருந்தது.
எழுத்தாளருக்கான வாழ்க்கை குறிப்பில், 'என் முதல் கதை, விக்னேஷ்குமாருக்கு சமர்ப்பணம்' என, மீனாட்சி குறிப்பிட்டிருந்தார்.
எழுத்து தேவதை கண் சிமிட்டி சிரித்தாள், 'உண்மைக்கு இரட்டை ஊதியம் உண்டு!'
கதைய பத்தி நீங்க என்ன நெனக்குறீங்க...?
கமெண்ட் பண்ணுங்க...)
May be a cartoon of one or more people and text that says 'போட்டி (நான் ரசித்த கதை) சிறுகதை மதுமிதா ராகவ்'
 
 
 
நான் இன்று வாசித்ததிலிருந்து......................
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான சிறுகதை சகோதரி........பகிர்ந்து கொண்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இன்று மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது  கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் வைத்திய கலாநிதி சத்தியமுர்த்தியவர்கள்.
May be an image of 1 person
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நினைப்பதெல்லாம் நடந்துவிடும்
எனும் ஒரே நம்பிக்கையில்தான் இப்பூமி சுற்றிக்கொண்டிருக்கிறது!
May be an image of rose
 
 
இன்று கற்றுக் கொண்டது....
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றோடு கனடாவுக்கு புலம் பெயர்ந்து 27 ஆண்டுகள்...தாயகத்தில் இருந்ததை விட கனடாவோடு நீண்ட பயணம்..இந்த மண்ணில் கால் பதிக்கும் போது அடிப்படை ஆங்கில அறிவோடு மட்டுமே கால் பதித்தேன்..ஆரம்ப காலத்தில் படிப்பு.எழுத்து.வானோலி நிகச்சிக்களில் பங்கெடுப்பு என்று எனது நாட்கள் சென்றது..அதன் பின் அவற்றிலிருந்து சற்று விடு பட்டு முள்ளி வாய்க்காலின் பின் யாழோடு ஐக்கியமாக அதுவும் ஒரு நீண்ட பயணம்..சொன்னால் நம்புவீர்களா...இன்று ஒரு சிறந்த பணியிலிருக்கிறேன் புகுதி நேரமாக இருந்து முழு நேர பணிக்கு நகர இருக்கிறேன்..அனைத்துக்கும் கனேடிய மண்ணிற்கே நன்றி.😆

May be an image of 1 person
 
 
 
 
  • Like 4
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, யாயினி said:

இன்று ஒரு சிறந்த பணியிலிருக்கிறேன் புகுதி நேரமாக இருந்து முழு நேர பணிக்கு நகர இருக்கிறேன்

வாழ்த்துக்கள் தங்கச்சி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை நம்பாமல் இங்கு நாங்கள் ஜீவித்ததில்லை........இன்னும் ஒரு நெடிய பயணத்திற்கு இது ஒரு ஆரம்பமே......தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்........!   💐

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் யாயினி . உங்கள் விடாமுயற்சிக்கு பாராட்டுக்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2021 at 21:54, யாயினி said:

இன்றோடு கனடாவுக்கு புலம் பெயர்ந்து 27 ஆண்டுகள்...தாயகத்தில் இருந்ததை விட கனடாவோடு நீண்ட பயணம்..இந்த மண்ணில் கால் பதிக்கும் போது அடிப்படை ஆங்கில அறிவோடு மட்டுமே கால் பதித்தேன்..ஆரம்ப காலத்தில் படிப்பு.எழுத்து.வானோலி நிகச்சிக்களில் பங்கெடுப்பு என்று எனது நாட்கள் சென்றது..அதன் பின் அவற்றிலிருந்து சற்று விடு பட்டு முள்ளி வாய்க்காலின் பின் யாழோடு ஐக்கியமாக அதுவும் ஒரு நீண்ட பயணம்..சொன்னால் நம்புவீர்களா...இன்று ஒரு சிறந்த பணியிலிருக்கிறேன் புகுதி நேரமாக இருந்து முழு நேர பணிக்கு நகர இருக்கிறேன்..அனைத்துக்கும் கனேடிய மண்ணிற்கே நன்றி.😆

May be an image of 1 person
 
 
 
 

வாழ்த்துக்கள் சகோதரி யாயினி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நூற்றாண்டு நினைவு தினம்
May be an image of 1 person and text that says '"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் -இங்கு வாழும் மனிதருக் கெல்லாம்; பயிற்றிப் பலகல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்" -மகாகவி சப்ரமணிய பாரதியார் 11.12.1882-11.09.1921'
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எதுக்குடி அறுந்த செருப்போடவே இருக்கே?
அந்த மரத்தடியில செருப்புத் தைக்கிறவர்கிட்ட போய் தச்சுக்க வேண்டியது தானே.!
பெரியவர் பெண்னுங்கனா காசு கேக்க மாட்டார்டி.
சரியான ஜொள்ளு பார்ட்டி!
சுமாரா இருக்குற எனக்கே நேத்து ஓசியில தச்சுக் குடுத்தார்னா...!
நீ பாக்கறதுக்கு அப்படியே தமன்னா மாதிரி பளபளனு இருக்க..!
அவளும் வேறு வழியின்றி, அந்த பெரியவரிடம் போக, செருப்பை வாங்கிய பெரியவர் மளமளவென வேலையை ஆரம்பித்தார்..!
.
தைத்த செருப்பைக் காலில் அணிந்ததும், ‘‘கூலி எவ்வளவு?’’ என்றாள்.‘‘
என்னம்மா இது உன்கிட்ட போயி காசு வாங்குவனா கண்ணு!
நீ கிளம்பு’’ என்றார் பெரியவர்.
.
‘‘பாத்தியாடி? நான் சொல்லலை... அந்த பெருசு ஒரு ஜொள்ளு பார்ட்டினு!’’ என்று கிசுகிசுத்தாள் தோழி.‘‘
கொஞ்சம் சும்மா இருக்கியா...’’ என அவளை அதட்டிவிட்டு, ஒரு இருபது ரூபா நோட்டை எடுத்துப் பெரியவர் முன் வைத்தாள்.
‘‘எடுத்துக்கங்க. இனி யாருக்கும் ஓசில செருப்பு தச்சிக் குடுக்கக் கூடாது.சரியா..! கூலியைக் கறாரா கேட்டு வாங்கிடணும். அப்பத்தானே உங்க பெண்ண.. காலேஜ்ல படிக்க வைக்க முடியும்?
நம்ம பொண்ணு கூட காலேஜ்ல படிக்கிற பிள்ளைங்கதானே னு.. ஒரு பிரியத்தில யாருக்கும் ஓசில தச்சுக் குடுக்காத (அப்பா)!’’ என்றாள் கண்ணீருடன்.😔😥
.
இந்த உலகில் நாம் செய்யும் உதவி,
சிலருக்கு ஏளனமாக தெரியலாம்
 
181610645_4074651059266851_1791591163443
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கறுப்பு நிறம் சகுணத்தடையாக உணர்கிறோம் ஆனால் ஒவ்வொரு கறுப்பு நிற கரும்பலகைதான் மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றுகிறது..
  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார விதி முறைகளை, ஒழுங்கு விதி முறைகளை கடைப் பிடித்து உங்கள் வாக்குகளை விருப்ப பட்டவர்களுக்கு, கட்சிகளுக்கு வழங்குங்கள் 😄👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2021 at 18:30, யாயினி said:
கறுப்பு நிறம் சகுணத்தடையாக உணர்கிறோம் ஆனால் ஒவ்வொரு கறுப்பு நிற கரும்பலகைதான் மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றுகிறது..

தவறு......கருப்புக்குள்ளால் வெளிவந்து ஒளிரும் வெள்ளை எழுத்துக்களால்தான் பல மாணவர்களின் வாழ்வில் ஒளியும் சில மாணவர்களின் முதுகில் வலியும் ஏற்படுகிறது.......!  😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
🐐 🐐 🐐 🐐 🐐 🐐
கடவுள் ஒரு நாள் *கழுதையை* படைத்து அதனிடம் சொன்னார்...!
நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும்
நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ
50 வருடங்களுக்கு வாழ்வாய்...!
*இதற்கு கழுதை சொன்னது*
நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்...!
கடவுள்
கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்...!
🐕 🐕 🐕 🐕 🐕 🐕
அடுத்து ஒரு *நாயை* படைத்து அதனிடம் சொன்னார்...!
நீ மனிதனின் வீட்டை காக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான்.
நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்...!
*இதற்கு நாய் கூறியது 😗
கடவுளே ! 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு
15 வருஷம் போதும்...!
கடவுள்
நாயின் ஆசையை நிறைவேற்றினார்...!
🐒 🐒 🐒 🐒 🐒 🐒
அடுத்து கடவுள் *குரங்கை* படைத்து அதனிடம் சொன்னார்...!
நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும்.
நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய்.
நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்...!
*இதற்கு குரங்கு கூறியது 😗
20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்...!
கடவுளும்
குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்...!
👴🏼 👴🏼 👴🏼 👴🏼 👴🏼 👴🏼
கடைசியாக *மனிதனை* படைத்து அவனிடம் சொன்னார்...!
*நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன்*
*நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ*
*20 வருடங்களுக்கு வாழ்வாய்...!*
*இதற்கு மனிதன் கூறினான் 😗
20 வருஷம் ரொம்ப குறைவு...!
*கழுதை* வேண்டாம் என்ற
30 வருடங்களையும்
*நாய்* வேண்டாம் என்ற
15 வருடங்களையும்
*குரங்கு* வேண்டாம் என்ற
10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு...!
கடவுள்
மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்...!
அன்று முதல்
மனிதன் முதல்
*20 வருடங்களை*
ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக...!
கல்யாணம் செய்து கொண்டு அடுத்த
*30 வருடங்களை*
*கழுதை* போல் எல்லா சுமைகளை தாங்கி கொண்டு அல்லும் பகலும் உழைக்கிறான்...!
குழந்தைகள்
வளர்ந்தபிறகு அடுத்த
*15 வருடங்களுக்கு*
அவன் வீட்டின் *நாயாக* இருந்து அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான்.
மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்...!
வயதாகி, Retire ஆன
பிறகு *குரங்கு* போல்
*10 வருடங்களுக்கு*
மகன் வீட்டிலிருந்து
மகள் வீட்டிற்கும்,
மகள் வீட்டிலிருந்து
மகன் வீட்டிற்கும் தாவி
பேரகுழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணிக்கின்றான்...!
*மனித வாழ்க்கையின் உண்மை...!
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!!
1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.
♥1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…
♥காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.
♥வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.
♥ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…
♥ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…
♥பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…
♥விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…
♥மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…
♥உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்…
♥மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்…
♥வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்…
♥அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…
♥ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…
♥அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…
♥ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்…
♥ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது…
♥ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…
♥உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…
♥தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…
♥ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது… அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்…
♥பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்…
♥10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்…
♥யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்…
♥நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…
♥பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்…
♥10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…
♥போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்…
♥வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…
♥வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்…
♥ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்…
♥10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…
♥10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது…
♥பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…
♥கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது…
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது…
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது…
♥பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்…
♥தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…
♥12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…
♥இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…
♥உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்…
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
*முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி. இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?’*
வகுப்பறையில் மாணவர்களிடம் ஆசிரியர் கேட்டார்.
”முல்லை என்பது ஒரு கொடி வகை தாவரம். அது பற்றிப் படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன்.
”ஒரு தாவரம் பற்றிப் படர இடமின்றி தவித்தால் கூட அதனைக் கண்டு மனம் துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது” என்றான் இன்னொரு மாணவன்.
”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய்க் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா? முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” சொல்லி விட்டு நக்கலாய் சிரித்தான் வேறொரு மாணவன்.
”தான் பயணித்த தேரை ஒரு முல்லைக் கொடிக்காக விட்டுவிட்டு தான் நடந்து செல்ல துணிந்த அரசன் தான் எவ்வளவு பெரிய வள்ளல்!”…
-ஒரு மாணவி.
”முதலில் தேர் செய்ததே மரத்தில் தான், மரத்தை வெட்டிய் தேர் செய்து விட்டு கொடியைக் காப்பது அறிவுடைமையா? தேர் செய்ய மரம் வெட்டுவதை நிறுத்த வேண்டும் என சொல்லியிருக்க வேண்டும் அந்த அரசன்”- இன்னொரு மாணவியின் பதிலிது.
செயல் ஒன்று தான்… எத்தனை எத்தனை பார்வை. எத்தனை எத்தனை கண்ணோட்டம்.
ஒரு விஷயத்தில் எல்லோருக்கும் ஒரே கண்ணோட்டம் இருக்க எப்போதும் சாத்தியமில்லை. அவரவர் பார்வை… அவரவர் கண்ணோட்டம்.
இப்படித் தான் நமது செயல்களைப் பற்றி நாம் நன்மையே செய்தாலும் ஆயிரம் விமர்சனங்கள் வரலாம்.அதனாலெல்லாம் மனம் சோர்ந்து விடாமல், மற்றவர்க்கு தீங்கு இல்லையெனில் நமக்கு சரியென்று தோன்றுவதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம்!
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தொழில்துறையிலும் மக்கள் வாழ்க்கையிலும் மாற்றங்கள் எவ்வளவு விரைவாக உள்நுழைந்து புரட்டிப் போடும் என்பதற்கு இந்தப் படத்தை எடுத்துக்காட்டாகக் காட்டுவார்கள். உலகப் புகழ்பெற்ற படம் இது.
இவ்விரண்டு படங்களும் நியூயார்க் நகரின் நெரிலான ஒரு தெருவில் இருவேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்டவை.
முதல் படம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதில் (1920) எடுக்கப்பட்டது. அப்போது அத்தெரு முழுவதும் குதிரை வண்டிகளால் நிரம்பியிருக்கின்றது. குதிரை வண்டிச்சாரையும் போக்குவரத்து நெரிசலுமான தோற்றம் அது.
அடுத்து எரிபொறி கண்டுபிடிக்கப்படுகிறது. எரிநெய்யும் கிடைக்கிறது. அதனைக்கொண்டு வண்டிகளை இயக்கும் முன்னேற்றம் அரங்கேறுகிறது.
உடனடியாகக் குதிரை வண்டிகள் வழக்கொழிகின்றன. புதிய புதிய எரிபொறி வண்டிகள் மக்கள் போக்குவரத்தினைக் கைப்பற்றுகின்றன.
எண்ணி வெறும் பத்தே ஆண்டுகள்தாம். அதே நியூயார்க் நகரின் அதே தெருவில் எரிபொறி வண்டிகளின் அணிவரிசை தோன்றுகிறது. குதிரைகளும் குதிரை வண்டிகளும் காணாமல் போயின. அவ்வண்டியோட்டிகளில் மாற்றத்திற்குத் தகவமைந்தவர்கள் பிழைத்தார்கள். முடியாதவர்கள் வாழ்விழந்தார்கள்.
இது வரலாறு. இனி வரும் காலத்தில் சாலைகளில் இதனைப்போன்ற பெருமாற்றம் நிகழுமென்றே கணிக்கிறார்கள். புகை கக்கும் எரிபொறி வண்டிகள் சிறிது சிறிதாய் மறைந்துபோய் மின்னாற்றலில் இயங்கும் வண்டிகள் அவ்விடத்தைப் பிடிக்கும் என்கிறார்கள். அது மெய்யாவதற்குரிய எல்லா அறிகுறிகளும் தென்படுகின்றன.
 
மகுடேஸ்வரன் கோவிந்தராஜன்.
May be an image of one or more people and outdoors
 
 
 
 
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.