Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனி எனக்கும் இங்கு வேலை வாய்ப்பு இருக்கும் போல.😁

Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம்.... யாயினின்.... பக்கா பிளான்....

சும்மா காத்து வாங்கன, திரி..... சுவியர் ஜடியாவில பேமசா போட்டுது....😁

இனி... மட்டுக்களும்.... உதுக்க.... திரிவினம்... 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

இனி எனக்கும் இங்கு வேலை வாய்ப்பு இருக்கும் போல.😁

உங்களுக்கு வேலை சிறித்தம்பிக்கு கச்சான் உடைச்சு குடுக்கிறதும் மட்டுறுத்தினர்மார் இஞ்சால்பக்கம் வராமல் பாத்துக்கொள்ளுறதும்....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

கூப்பிடனிங்களோ…..

திரி கொழுந்து விட்டு எரிய ஒரு ரேட்,

நியானிக்கு கை உழையிற மாரி எண்டால் இன்னொரு ரேட்,

புல்லா தாரை வார்த்து, மண்ணை போட்டு ஊத்தி மூடுறெண்டா (காடத்தல் சர்வீஸ்) பிரிமியம் ரேட்,

வாட் இஸ் யுவர் பிரிவேர்ட் ஆப்சன் சேர்🤣?

Negros Ataud Ataud Meme Negros GIF - NegrosAtaud AtaudMemeNegros Dance -  Discover Share GIFs | Dance memes, Memes, Gif dance

 

எங்களுக்கு, இதே மாதிரி...  டான்ஸ் ஆடி, சடங்கு செய்ய முடியுமா சார்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு வேலை சிறித்தம்பிக்கு கச்சான் உடைச்சு குடுக்கிறதும் மட்டுறுத்தினர்மார் இஞ்சால்பக்கம் வராமல் பாத்துக்கொள்ளுறதும்....😎

Ghana Funeral GIFs - Get the best GIF on GIPHY

குமாரசாமி அண்ணை.... நீங்கள் தந்த, கச்சான் உடைக்கிற  பொறுப்பை, 
கவனமாக பார்த்துக் கொள்ளுறன். :grin:

இன்று, கனடா நேரம்... நள்ளிரவு 12 மணிக்கு, "பாடி" எடுக்கிறதென்ற படியால்,
வரவேண்டிய ஆக்களை... வந்து பார்த்து, இறுதி மரியாதை செலுத்த சொல்லுங்கோ.  

பிறகு தாங்கள், பார்க்காமல்... 
பெட்டியை, மூடிப் போட்டாங்கள் என்று, குறை வரப் படாது கண்டியளோ.  🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

Ghana Funeral GIFs - Get the best GIF on GIPHY

குமாரசாமி அண்ணை.... நீங்கள் தந்த, கச்சான் உடைக்கிற  பொறுப்பை, 
கவனமாக பார்த்துக் கொள்ளுறன். :grin:

இன்று, கனடா நேரம்... நள்ளிரவு 12 மணிக்கு, "பாடி" எடுக்கிறதென்ற படியால்,
வரவேண்டிய ஆக்களை... வந்து பார்த்து, இறுதி மரியாதை செலுத்த சொல்லுங்கோ.  

பிறகு தாங்கள், பார்க்காமல்... 
பெட்டியை, மூடிப் போட்டாங்கள் என்று, குறை வரப் படாது கண்டியளோ.  🤣


மன்னிக்கணும் தமிழ்  சிறி ஊர்ல டிக்கட் போடுறது கொஞ்சம் கஸ்ட் டம் ,நமக்கு வரமுடியாத ,உங்க வந்தும் உந்த ஆட்டத்தில பங்கு பற்ற  முடியாது ,உங்க வந்தவுடனம் 20 நாளைக்கு தனிமை படுத்தல் எண்டு கொண்டே உள்ள போட்டுவிடுவான்கள் ,அதாலை இஞ்ச ,ஊரிலை ???அதையும் வெட்டி இதையும் வெட்டி ??? அதுக்குள்ளை ஊற போட்டு ஒரு விருந்துக்கு ஏற்பாடு பண்றம் ,,என்ன ஒரு கொஞ்சம் காசு தேவைப்படும் அதை மடடம அனுப்புங்க..கனக்க வேண்டாம் ,,8a71a514077e86ed52622efa51a551bc.gif
1599 டொலர்...

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, அன்புத்தம்பி said:

மன்னிக்கணும் தமிழ்  சிறி ஊர்ல டிக்கட் போடுறது கொஞ்சம் கஸ்ட் டம் ,நமக்கு வரமுடியாத ,உங்க வந்தும் உந்த ஆட்டத்தில பங்கு பற்ற  முடியாது ,உங்க வந்தவுடனம் 20 நாளைக்கு தனிமை படுத்தல் எண்டு கொண்டே உள்ள போட்டுவிடுவான்கள் ,அதாலை இஞ்ச ,ஊரிலை ???அதையும் வெட்டி இதையும் வெட்டி ??? அதுக்குள்ளை ஊற போட்டு ஒரு விருந்துக்கு ஏற்பாடு பண்றம் ,,என்ன ஒரு கொஞ்சம் காசு தேவைப்படும் அதை மடடம அனுப்புங்க..கனக்க வேண்டாம் ,,8a71a514077e86ed52622efa51a551bc.gif
1599 டொலர்...

அன்புத்தம்பி... அதென்ன, "பாட்டா" செருப்பு விலை மாதிரி, 1599 எண்டு சொல்லுறியள். 
ரவுண்டாக... 2000 அனுப்பி விடுகின்றேன். 
உங்களது வங்கி, இலக்கத்தை தாங்கோ.....

முக்கிய பிற்குறிப்பு:  
உங்கள் வங்கியில், இருக்கிற காசும்... களவு போனால்,
கம்பெனி பொறுப்பு ஏற்காது.
 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

அன்புத்தம்பி... அதென்ன, "பாட்டா" செருப்பு விலை மாதிரி, 1599 எண்டு சொல்லுறியள். 
ரவுண்டாக... 2000 அனுப்பி விடுகின்றேன். 
உங்களது வங்கி, இலக்கத்தை தாங்கோ.....

முக்கிய பிற்குறிப்பு:  
உங்கள் வங்கியில், இருக்கிற காசும்... களவு போனால்,
கம்பெனி பொறுப்பு ஏற்காது.
 🤣

அது வந்து ,1 டொலர் என் கிட்ட  இருக்கு
அதுதான் ,வந்து ................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினியை காணவில்லை, வேற வீடு பாத்து போய்ட்டாவோ தெரியல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம்..👋✍️🙆 எனக்கு வேலை கூட அதனால் அவ்வப்போது வந்து பார்த்து விட்டு போவது வழக்கம்...உடனும்  எங்களுக்கு இல்லாத வேலையா உங்களுக்கு என்று கேட்க கூடாது..மற்றப்படி சொல்லும் படியாக‌ ஒண்ணும் இல்லை.👋

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, யாயினி said:

இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம்..👋✍️🙆 எனக்கு வேலை கூட அதனால் அவ்வப்போது வந்து பார்த்து விட்டு போவது வழக்கம்...உடனும்  எங்களுக்கு இல்லாத வேலையா உங்களுக்கு என்று கேட்க கூடாது..மற்றப்படி சொல்லும் படியாக‌ ஒண்ணும் இல்லை.👋

 

 

அதெல்லாம் சரி ஆனால் தற்போது தங்களது  திரியின் கலவரம் சே.....நிலவரம் பற்றி எதுவும் சொல்லாமல் போகிறீர்கள் நியாயமா.....!  😴

Kodumai Prabhu GIF - Kodumai Prabhu Headache - Discover & Share GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பக்கத்தை பராமரிப்பவர் யாயினியின் அன்புத்தம்பி😂🤣

அதனால் அன்புத்தம்பிதான் இப்போது திரிக்குள் கலவரம் செய்பவர்களை களையெடுக்க வழிபார்க்கவேண்டும்😄

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

அதெல்லாம் சரி ஆனால் தற்போது தங்களது  திரியின் கலவரம் சே.....நிலவரம் பற்றி எதுவும் சொல்லாமல் போகிறீர்கள் நியாயமா.....!  😴

Kodumai Prabhu GIF - Kodumai Prabhu Headache - Discover & Share GIFs

என்னத்த சொல்ல..மற்றப் பகுதிகள் மாதிரி தானே இதுவும்.சோ, ஒண்ணும் சொல்வதற்கு இல்லை.👋✍️🙆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

என்னத்த சொல்ல..மற்றப் பகுதிகள் மாதிரி தானே இதுவும்.சோ, ஒண்ணும் சொல்வதற்கு இல்லை.👋✍️🙆

என்ன கொடுமை.... யாயினி😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இராஜராஜேஸ்வரம் என்ற தஞ்சை பெரிய கோவில் - 1
 
🌷 இராஜராஜ சோழன் பற்றி அறியாதவர்கள் மிக குறைவு.
 
🌺 தனது ஆட்சியில் ஒரு போரில் கூட தோற்காத வீரப்புலி.
 
💐 பதவியேற்ற சில வருடங்களிலேயே தனது தூதனை அவமதித்து சிறையில் அடைத்ததால் சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மன் மற்றும் அவனுக்கு உதவியாக வந்த பாண்டிய மன்னன் அமர புயங்கன் இருவரையும் தோற்கடித்து மும்முடி சோழன் என்ற பட்டம் பெற்றவர்.
 
🌸 முழு இலங்கை தீவையும் கைப்பற்றியதோடல்லாமல், மாலத்தீவுகள் வரை புலிக்கொடி பறக்க வைத்தவர்.
 
👑 தில்லையில் அறையில் பலவந்தமாக பூட்டப்பட்டு கரையான்களின் புற்றாகவே மாறிப்போன சைவ திருமுறைகளை பெரும்பாடு கொண்டு வெளியிலெடுத்து " திருமுறை கண்ட சோழன் " என்ற பெயர் பெற்றவர்.
 
மேலும் கோவில்களில் ஓதுவார்களை பணியில் அமர்த்தி தமிழ் மறை நாடெங்கும் பரவ வழிவகுத்தவர்.
 
💎 " பின்வரும் காலத்தில் கவிநாடு ஏரியை யார் பராமரிக்கிறார்களோ அவர்களின் பாதத்தை என் தலையில் ஏந்துவேன் " என கல்வெட்டில் பதித்து மங்கா புகழ் அடைந்தவர்.
 
🛕 இப்படி பல சரித்திரப்புகழ் பெற்று இருந்தாலும் இராஜராஜன் பெயரை சொன்னவுடனே நினைவுக்கு வருவது தஞ்சை பெரிய கோவில் தான் என்றால் மிகையாகாது.
 
🍁 பிற்காலத்தில் மல்லப்ப நாயக்கரின் திருப்பணிக்கு பின்னர் பெருவுடையார் ( பெரிய + உடையார் ) என்றும்,
அதுவே சமஸ்கிருதத்தில் பிரகதீஸ்வரர் (பிரஹத் (மஹா (அ) பெரிய) + ஈஸ்வரர்) என்றும் இரண்டுமே பெரிய லிங்கம் என்பதை பொருளாக கொண்டு பிற்காலத்தில் வழங்கப்பட்டதே தவிர, உண்மையில் இராஜராஜேஸ்வரம் என்பதே அதன் பெயர்.
 
🌻 இராஜராஜசோழனின் பெருமுயற்சியால், தலைமை தச்சரான குஞ்சரமல்ல இராஜராஜ பெருந்தச்சரின் கைவண்ணத்தில் உருவானதே பெரிய கோவில்
✨ காஞ்சிபுரத்தில் இராஜசிம்ம பல்லவன் அமைத்த கைலாசநாதர் கோவிலை கண்டு வியந்த இராஜராஜன் "கச்சிப்பேட்டு பெரியதளி" என மனமாற புகழ்ந்தான். அதுவே தஞ்சை கோவிலை கட்டிட இராஜராஜனை தூண்டி இருக்க வேண்டும் என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.
 
🌷 பொதுவாகவே தமிழர்கள் கலைக்கும், பக்திக்கும் அன்று பெரும் முக்கியத்துவம் கொடுத்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை
🌺 கி.பி 642-ல் வாதாபியை வென்றபின் பல்லவர்களின் கொடி தமிழகத்தில் கொடிகட்டி பறந்தது
பல்லவர்களின் கலைத்திறனுக்கு மாமல்லன் (மல்லர்களுக்கெல்லாம் மல்லன் ) என்றழைக்கப்பட்ட முதலாம் நரசிம்மவர்மன் அமைத்த மாமல்லபுரமே சாட்சி
 
🌹 கி.பி. 879 -ல் ஆதித்த சோழன் காலத்தில் திருப்புறம்பயம் போரிற்கு பின்னர் சோழர்கள் தலைதூக்க துவங்கினர்.
 
திருப்புறம்பயம் போரில் வென்றவுடன் அங்கிருந்த கோவிலையும், திருச்சிக்கு அருகில் இருக்கும் திரு எறும்பீஸ்வரர் கோவிலையும் கற்றளியாக மாற்றினான் முதலாம் ஆதித்த சோழன்.
அவரது மகனான முதலாம் பராந்தகனே தில்லைக்கு பொன்வேய்ந்தது.
 
🌺 இராஜராஜனின் தந்தையான சுந்தர சோழர் காலத்தில் கட்டப்பட்டதே இன்று திருச்சி -
 
மதுரை நெடுஞ்சாலையில் இருக்கும் கொடும்பாளூரில் அமைந்த மூவர் கோவில் ஆகும்
மேலும் திருநல்லூரில் இருக்கும் கார்கோடகேஷ்வரர் மற்றும் மீஞ்சுரில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் இரண்டுமே இக்காலத்தில் கட்டப்பட்டவை தான்
🍀 அவ்வாறே இராஜராஜ சோழனின் வழியில் அவரது மகனான கங்கையும், கடாரமும் கொண்ட இராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழ புரத்தை நிர்மாணித்தார்.
 
( 1836 - ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் இக்கோவிலின் மகா மண்டபம், முகமண்டபம் என பலவற்றை இடித்து அந்த கற்களை கொண்டு கொள்ளிடம் ஆற்றில் கீழணை கட்டினர் )
அவ்வழியிலேயே இரண்டாம் இராஜராஜன் தாராசுரம் கோவிலை கட்டினார்
(பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரம் இவை மூன்றும் Great Living Chola Temples என UNESCO - வால் பாரம்பரிய இடங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது)
💐 இவையெல்லாம் உதாரணங்கள் தான் பக்தியில் சிறந்த மன்னர்களால் எண்ணற்ற கற்றளிகள் கட்டப்பட்டு பல நூற்றாண்டுகள் கழித்தும் நிற்கின்றன
 
 
🌹இவ்வளவு ஏன் தேவாரம் பாடிய அப்பரும், சம்பந்தரும் 7ம் நூற்றாண்டிலும், சுந்தரர் 9ம் நூற்றாண்டிலும் வாழ்ந்தவர்கள். அவ்வகையில் அவர்கள் பாடிச் சென்ற ஆலயங்கள் அனைத்துமே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமையானவை தான்
🛕பாடல்பெற்ற ஸ்தலங்கள், கற்றளிகள் என தமிழகத்தில் பல கோவில்கள் இருந்தாலும் தஞ்சை பெரிய கோவில் தனி இடத்தை பிடித்தது என்றால் மிகையாகாது
தஞ்சை பெரியகோவிலை பற்றி அறியாதவர்கள் மிக குறைவு அதன் ஆச்சர்யங்களை விவரிக்கும் ஒரு சிறு தொகுப்பே இது
இனிவரும் பதிவுகளில் தஞ்சை பெரிய கோவிலை பற்றி பின்வரும் சில விஷயங்களை பற்றி பார்க்கலாம்
13/11/21 - கட்டுமானம்
14/11/21 - கலைநுட்பம்
15/11/21 - நிர்வாகம் மற்றும் செல்வம்
16/11/21 - சிவபாத சேகரன்
உருவாக்கம் : 
உருவாக்கம் : Seetha Raman.
 
 

காண்டீபதாரி அர்ஜுனன்  முகப்பக்கத்திலிருந்து....

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பொன்னியின் செல்வன் - 01 :
 
முதலாம் பராந்தக சோழர் ஆட்சியின் பிற்காலம். சோழர்கள் பாண்டிய நாட்டை வீரபாண்டியரிடம் இழந்தனர். அதே வேளையில், இளவரசர் இராஜாதித்தர் சோழ நாட்டின் வட எல்லைப்பகுதிகளைக் காத்து வந்தார். தக்கோலம் போரில் வீரப் போர் புரிந்த இராஜாதித்தர் யானை மீதிருந்த போதே தன் இன்னுயிரை நீத்தார். வடக்கு வீழ்ந்தது. சோழர்கள் வடக்கே பெரும்பகுதியை இழந்தனர். அடுத்து இளவரசர் ஆன கண்டராதித்தர் தன் தந்தை ஆட்சி முடிந்த பின், சோழ அரசர் ஆனார். அரிஞ்சயருக்கு இளவரசப் பட்டம் சூட்டி சில ஆண்டுகள் செவ்வனே ஆட்சி செய்தார். பின் ஆட்சிக்கு வந்த சுந்தர சோழர் பாண்டிய அரசர் வீரபாண்டியரை வெற்றி கொண்டு காடுபுகச் செய்தார். இதற்கு சற்று முன்பு சோழர் குடியில், கதிரவன் என பொன்னியின் செல்வன் பிறந்தார்!
 
(பொன்னி பாயும்)
 
May be an image of outdoors and temple
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மனைவி இறந்ததன் பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்..
"உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி".என்று.
அப்போது அந்த மகன் சொன்னான் ."என் அம்மா
என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தால்.ஆனால் இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவலாய் இல்லை"
இதைகேட்ட தகப்பன் கேட்டான்.
"அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னால்?"
அந்த குழந்தை சிறுசிரிப்புடன் தன் தகப்பனிடம் சொன்னான் .....
"நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சொல்வாள் ,எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன் என்று .ஆனால் கொஞ்சநேரம் ஆகும்போது என்னை தன்னுடைய மடியில் அமர்த்தி பாட்டுபாடி ,நிலாவைக்காட்டி கதைசொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய பாசம் இருக்கும்..
ஆனால்..
"இப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள் "உனக்கு சோறு தரமாட்டேன் என்று."..இன்றுடன் இரண்டு நாட்கள் ஆகிறது அம்மா சொன்னவார்தையை நிறைவேற்றிவிட்டால்.".!!!
அம்மாவுக்கு நிகர் இந்த உலகில் யாருமில்லை...இந்த உலகில் என் கண்களால் நான் கண்ட கடவுள் என் அம்மா மட்டுமே....
என் உயிர் என் அம்மாதான்.!!!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மரணம் ஒரு ஆனந்தம்
🌴நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறி
வெளியே நின்றபடி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும்.
🌴கொஞ்ச நேரத்தில் எப்படியாவது நாம் இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய்விடும்,
எல்லோரும் கதறியழுது காத்திருப்பார்கள்,
🌴நம்மை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நிற்கும்,
உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உடனே தகவல் சென்றுவிடும்,
🌴இவ்வளவு நாள் நேராக வீட்டுக்குள் சென்ற நம்மை இன்று வாசலிலேயே வைத்துவிடுவார்கள்,
🌴இத்தனைக்கும் அந்த வீட்டை நாம்தான் பார்த்து பார்த்து கட்டியிருப்போம்,
எல்லாம் நேரம்!
🌴ஆளுக்கொரு பக்கம் மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள், வருகின்ற நண்பர்களையும் உறவினர்களையும்கூட கட்டிக்கொண்டு அழுவார்கள், நமக்கு ஒன்றுமே புரியாது,
🌴அவர்கள் அழுவதை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும் நம்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே என்று!
🌴உங்களைவிட்டு எங்கும் போகமாட்டேன் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி கண்ணீரை துடைக்கவேண்டும் என்று துடியாய் துடிப்போம்.
🌴ஆனால் எதுவுமே முடியாது. அதுதான் மரணத்தின் மிகமோசமான துயரம்!
🌴ஆனால் நம்மால் தான் உணரமுடியாது, ஒருவழியாக உள்ளே தள்ளி அடைத்துவிட்டார்கள், இருட்டிக்கொண்டதால் வெளியே campfire ம் போட்டுவிட்டார்கள்.
🌴அழுதுகொண்டே ஓடிவருகிறார்கள், இவ்வளவு நேரத்திற்கு பிறகு தமிழில் நமக்கு பிடிக்காத அந்த வார்த்தையை ஒருவன் சொன்னான், 'பொணத்தை ' கொஞ்சம் தள்ளிவைங்க பந்தல்போடனும்,
🌴நம்ம அப்பா எவ்வளவு அழகா பெயர் வச்சிருந்தாலும் செத்தபின்னாடி பத்துகாசுக்கு தேறாது!
🌴கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, நம் பகையாளிகள் கூட நம்மை ரொம்ப நல்லவன் என்று certificate தருகிறார்கள்,
🌴ஒருபக்கம் தாரை தப்பட்டைஇன்னொரு பக்கம் மக்கள் வெள்ளத்தில் மாலை மரியாதைகள் இன்னொரு பக்கம் பட்டாசுசத்தம், எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்!?
🌴அத்தனைபேரு முன்னாடி அரைகுறை dress சோட நம்மை குளிக்கவச்சி மானத்தை வாங்கிட்டாங்களே!!
🌴என்ன பண்றது
பொணமா பொறந்தாலே இப்படிதான்!
ஒருவழியாக எரிப்பதற்கோ புதைப்பதற்கோ எடுத்துசெல்கிறார்கள்
🌴இவ்வளவு நாள் நாம் போட்ட ஆட்டத்தையெல்லாம் சேர்த்து நாலுபேர் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்! கடைசியில் நம்மை எரித்தேவிட்டார்கள்!
🌴இனி எங்காவது நாய் ஊளையிட்டால் கூட நாம்தான் வந்திருக்கிறோம் என்று புலுக ஆரம்பித்துவிடுவார்கள்!
🌴அடுத்த நாள் வீட்டுக்கு சென்று பார்த்தால்அழுகை குறைந்து விசும்பலாகிவிட்டிருக்கும் அதற்கு அடுத்த நாள் விசும்பலும் குறைந்திருக்கும்.
🌴இப்படி நாளாக நாளாக நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள்!
🌴ஒவ்வொரு இறப்பின் போதும் எத்தனையோ கனவுகளும் ஆசைகளும்
சேர்ந்தே புதைந்து போகின்றன!
🌴இப்படி ஒவ்வொரு நாளும் சராசரியா உலகம் முழுவதும்
70,000 பேர் உயிர்துறக்கிறார்கள்!
🌴நாளைய விடியல் நமக்கானது என்கின்ற எந்த உத்திரவாதமும் இல்லாதபோது .
நாம் ஏன் பொய்யோடும், பொறாமையோடும், பகையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழவேண்டும்?
பூமியில் வாழும் காலத்தில் சந்தோஷமாக
வாழுங்கள்.....
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
💝விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்படும் விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசால் வழங்கபடும் ஒரு விருது
 
💝நமது மகாபாரத #வில்வித்தை_வீரர்_அர்ஜுனன் பெயரில் வழங்கபடுகிறது.
 
💝அர்ஜுனா விருது தனிநபர் மற்றும் குழு விளையாட்டில் இடம் பெறும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது 1961-ல் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
 
🏆சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் விளையாட்டு வீரர்களின் நான்காண்டு கண்கவர் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளானது விருது வழங்கும் ஆண்டில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
🏅விளையாட்டு வீரர்களின் #தலைமைப்பண்பு,
#ஒழுக்கம் ஆகியவையும் கூர்ந்தாய்வு செய்யப்படும்.
🏅ஒரு பாராட்டுச் சுருள்,
🏅அலங்கார உடை,
💸பணமுடிப்பு (5 இலட்சங்கள்)
🏏ஷிகர் தவான் - கிரிக்கெட்
🎾அங்கிதா ரெய்னா லான்
- டென்னிஸ்
🏑சிம்ரஞ்சித் சிங்
🏑சுரேந்தர் குமார்
🏑விவேக் பிரசாத்
🏑 நீலகண்ட சர்மா
🏑சுமித்து
🏑ஹாக்கிவருண் குமார்
🏑குர்ஜன்த் சிங்
🏑சாம்செர் சிங்
🏑அர்மன்பிரீத் சிங்
🏑உருபீந்தர் பால் சிங்
🏑தில்பிரீத் சிங்
🏑இலலித் உபாத்யாய்
🏑பிரேந்திர இலாக்ரா
🏑வந்தனா கடாரியா
🏑மண்டீப் சிங்
🏑அமிட் ரோகிதாசு
🏑மோனிகா மாலிக்
🏑அர்திக் சிங்
🥊சிம்ரஞ்சித்து கவுர் பாத் -Boxing
🎯அபிசேக் வெர்மா - Shooting
🏇🏻சரத் குமார்
🏇🏻யோகேஷ் கதுனியா
🏇🏻நிசாத் குமார்
🏇🏻பிரவீன் குமார்
🤼🏻சந்தீப் நர்வால் - கபடி
🏇🏻அர்பிந்தர் சிங் - Athletics
🏸சுகாஸ் யதிராஜ் - Para-Badminton
🏋தீபக் புனியா - Wrestling
🎯சிங்ராஜ் அதான - Para-Shooting
🤸🏻 ஹிமனி உட்டம் பரப் -
🎾பவினா படேல் - Para-Table Tennis
சி🤸🏻. ஏ. பவானி தேவி - Fencing
🇮🇳இவ்விருதுகள் அனைத்தும் நவம்பர் 3 ல் குடியரசு தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் அவர்களால் அனைவருக்கும் வழங்கபட்டது...
🏹அர்ஜுனன் விருது கிடைக்க அற்புதங்கள் செய்ய வேண்டும்😍..
 
இராஜராஜேஸ்வரம் என்ற தஞ்சை பெரிய கோவில் - 2
🌹 முதல் பதிவில் பெரிய கோவிலின் கட்டுமானம் எப்படி பட்டது என காண்போம்
👑 2000 ஆண்டுகளுக்கு முன் சோழப்பேரரசனான கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணையே பலமுறை காவிரியின் வெள்ளத்திற்கு போக்கு காட்டி நிற்கையில் 1000 வருடங்களுக்கு முன் இராஜராஜ சோழன் அமைத்த தஞ்சை பெரிய கோவில் கம்பீரமாய் நிற்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை
👑 முழுக்க முழுக்க இராஜ ராஜ சோழனின் கற்பனையாலும், அவரின் குருவும், சித்தர்களில் ஒருவரான கருவூராரின் அறிவுரையாலும் உருவானதே பெருவுடையார் கோவில்
🐯 இத்தனை காலம் கோவில் கம்பீரமாக நிற்பதற்கு முதன்மை காரணம் அஸ்திவாரம்
சரி கோவிலின் அஸ்திவாரம் எப்படிப்பட்டது...?
🌺 2010-ம் ஆண்டு கோவிலின் ஆயிரம் ஆண்டு விழாவிற்காக கோவில் வளாகத்திலேயே ஆழ்கிணறு தோண்டினர்.
கோவில் அமைந்திருக்கும் பகுதி சுக்கான் பாறை பகுதியாகும். ஆனால் ஆச்சரியமாக அங்கு தோண்ட தோண்ட கிடைத்தது பருமணல் தான், 350 அடிகளுக்கு மேல் தான் களிமண் வந்தது ( பரு + மணல் இது மலைப்பகுதியில் கிடைக்கும், ஆற்று மணலை விட அளவில் பெரிய துகள்களை கொண்டது )
உடனடியாக அப்பணி நிறுத்தப்பட்டது, இன்றும் கோவிலை சுற்றி போர் போட சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்
🌸 அதாவது கோவிலை அமைக்கும் முன் பெரிய குழி தோண்டி அதில் பருமணலை கொட்டி நிரப்பி இருக்கிறார்கள்.
🌷சாதாரணமாக மணலில் கட்டப்பட்டால் வேறு அதுவே பாத்திரத்தில் மணலை இடும்போது அதன் குணம் மாறும்
நில அதிர்வுகளை அது மேலே அனுப்பாது, மேலும் அது எவ்வளவு பெரிய கட்டுமானம் என்றாலும் இறுக்கி பிடிக்கும்
சரியாக சொன்னால் அரிசி மற்றும் பென்சிலை வைத்து சிறுவயதில் நாம் செய்த உராய்வு சம்மந்தப்பட்ட சோதனை தான்
பென்சில் மற்றும் அரிசி சோதனை
🌻 இத்தகைய கட்டுமானத்தை தாங்க குறைந்தது ஒரு கோடி கன அடி பரு மணல்கள் கோவிலின் கீழ் கொட்டப்பட்டிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றன
🌺 சரி அடுத்து சுற்றுவட்டாரத்தில் மலைகளே இல்லாத தஞ்சையில் எப்படி இத்தனை பாறைகள்
🌸 1,50,000 டன்‌ எடை கொண்ட கருங்கற்கள்‌ அதாவது தற்போதைய கணக்குப்படி 50 ஆயிரம்‌ லாரிகளில்‌ கொண்டு வந்து இருக்கவேண்டிய பெரும் கற்பாறைகளை எப்படியோ கொண்டுவந்து பிரம்மாண்டமாக செதுக்கி இருக்கிறார்கள்
🌹 கோவிலில் பயன்படுத்திய அனைத்து கற்களுமே அளவில் பிரம்மாண்டமான பெரிய கற்களே குறிப்பாக சொன்னால் கோயிலின் வாயில்களான கேரளாந்தகன் வாயில் மற்றும் இராஜராஜன் வாயிலில் 4 அடி நீளம் , 3 அடி அகலம் கொண்ட 40 அடி உயர ஒரே கல்லில்‌ ஆன தூண்கள்‌ பயன்படுத்தப்பட்டுள்ளன
(கேரளா + அந்தகன் அதாவது சேரர்களுக்கு எமனை போன்றவன் இது இராஜராஜசோழனின் மற்றொரு பெயர்)
🍀 மலைகள் அற்ற காவிரி டெல்டாவான தஞ்சையில் எப்படி இத்தனை கிரானைட் கற்கள் என ஆய்வாளர்கள் யோசிக்கையில் அவர்கள் கூறிய இடம் தஞ்சையிலிருந்து பல மைல் தொலைவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றான்டார் கோவில் தான். கிட்டதட்ட தஞ்சையில் உள்ள கல்லையும் சோதித்ததில் இரண்டும் ஒரே மாதிரி இருப்பதை கண்டறிந்தனர்
மேலும் தஞ்சைக்கு அருகில் அம்மாப்பேட்டை சாலையில் உள்ள உடையார் கோவில் கல்வெட்டில் " நொடியூர் பட்டணத்து கிள்ளியூர் மலையிலிருந்து சிலை கொண்டு வந்து " என்ற வரிகள் இதை உறுதிப்படுத்தின.
சரி இத்தனை கற்கள் செதுக்கப்பட்டால், எவ்வளவு கழிவு வந்து இருக்கும் அவை எங்கு சென்றன..?
🌻 மேலும் முக்கியமான விஷயம் என்றால் தஞ்சை பெரியகோவிலில் சிமெண்ட மற்றும் சுண்ணாம்பு போன்ற இருகற்களை இணைக்கும் கலவை எதுவும் உபயோகப்படுத்தப்படவில்லை
🌸 அனைத்துமே குழி (ம) குமிழ் அமைப்பு அதாவது Interlocking Stones system, கிட்டத்தட்ட Puzzle போன்றது.
ஒரு கல்லை சமன்படுத்தி அதோடு இணையும் சரியான வடிவத்தில் உள்ள கல்லை குழி-குமிழ் முறையில் இணைப்பது, இது தான் கோபுரத்தில் துவங்கி சுற்றுசுவர் வரை கடைபிடிக்கப்பட்ட நுணுக்கம் ஆகும்.
🍀 கோவிலின் விமானம் இதுபோன்று கற்களை இம்மி பிசகாமல் அடிக்கி கட்டப்பட்டதே பிறகு இந்த வடிவம் சிதறாமல் இருக்க மேலே ஒரு பெரிய எடையை வைத்தார்கள்
கிட்டதட்ட 10 டன் எடையுள்ள 8 நந்திகள் மற்றும் 80 டன் எடையுள்ள கலசத்தை தாங்கும் உச்சிக்கல்
( இந்தக்கல் ஒரே கல் என சொல்லப்பட்டாலும் உண்மையில் 8 கற்களை கொண்டு ஆரஞ்சு பழம் போல இணைக்கப்பட்டு உருவாக்கியதே
Ref : குடவாயில் பாலசுப்பிரமணியன்)
🌹 கோவிலுக்கு சற்றுதூரத்தில் உள்ள சாரப்பள்ளம் எனும் ஊரிலிருந்து சாரம் அமைத்து இக்கல் ஏற்றப்பட்டதாகவும் கூறுவர்
ஆனால் கோவில் சுருள்தள வடிவில் சாரம் அமைத்து கட்டப்பட்டதே. சாரம் கட்ட மணல் தோண்டப்பட்ட இடமாதலால் சாரப்பள்ளம் என மருவி இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து, மேலும் அவ்வூர் 7 கி.மீ தள்ளி இருக்கும் ஊராகும்.
தற்போது பெரிய கோயிலுக்குத் தென்புறம் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுவரை நீண்ட மேடாகக் காட்சியளிப்பது அப்படிச் சுருள் சாய்வுதளம் அமைக்கப்பட்டதற்கான மண் தான் என்பது குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கருத்து.
💐 சரி மற்றகோவில்களை போல விமானம் சிறிதாக இல்லாமல் 216 அடி பிரம்மாண்ட விமானம் ஏன் அமைக்கப்படவேண்டும்..?
( அக்காலத்தில் வாயில் கோபுரங்கள் பெரிதாக கட்டும் வழக்கமும் இல்லை, பெரிய கோவிலின் வாயில் கோபுரங்கள் தான் மற்றவற்றிற்கு அடிப்படை )
🕉️ கைலாய யாத்திரை பற்றி நம்மில் பலரும் அறிவோம் ஈசனின் இருப்பிடமான மலையை லிங்கமாகவே பாவித்து அதை வணங்குவதில் முடிகிறது கைலாய யாத்திரை
இன்றும் பல ஸ்தலங்கள் தென்கயிலாயம் என்று போற்றப்பட்டாலும் கைலாயத்தை பிரதிபலிக்கும் எதுவும் இல்லை என இராஜராஜன் நினைத்தார் போலும்
கல்வெட்டின்படி இவ்விமானத்தின் பெயர் " தட்சிணமேரு " அதாவது தென்திசையில் உள்ள மேரு
💐 ஈசன் வாசம் செய்யும் மேரு மலையின் ரூபமாக அமைந்ததே இந்த பிரம்மாண்ட விமானம் இதையே ஈசனின் வடிவமாகவும் வடிவமைத்தார் இராஜராஜ சோழன்
🌷 கைலாய மலை சூர்ய உதயத்தின் போது பனியில் ஒளி எதிரொளிப்பால் தங்கமலை போன்று பிரகாசிக்கும் ஆனால் தட்சிணமேரு என்றுமே பிரகாசிக்கவேண்டும் என விமானம் முழுதும் தங்க தகடுகளை பதித்தார்
இராஜராஜசோழன் கயிலாயத்தையே பெரும்முயற்சியால் தஞ்சையில் அமைத்தார் என்றால் அது மிகையாகாது
🔱 கோவிலின் சுற்றுப்பாதையை பொறுத்தவரை அதை அமைத்தவர் இராஜராஜனின் சேனாதிபதியான கிருஷ்ணன் ராமன் ஆவார்
🏆 திருச்சுற்று மாளிகை என அழைக்கப்படும் சுற்றுப்பாதையில் மொத்தம்‌ 36 பரிவார ஆலயங்கள்‌ இருக்கின்றன. இவைகளில் அஷ்டதிக் பாலகர்களின் ஆலயங்கள் மட்டும் தற்போது சிதைந்த நிலையிலாவது உள்ளன. இவை தவிர எட்டு பிரகார தெய்வங்களின் ஆலயங்களும் உள்ளன ஆனால் அனைத்துமே படையெடுப்புகளால் சிதைந்துவிட்டன
மேலும் " திருச்சுற்று மாளிகையில் ஆலயத்து பரமேஸ்வரி " என்ற வரி அம்மன் கோவில் வெளியே திருச்சுற்று மாளிகையில் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன
ஆலயங்களில் சிலைகளின் கீழ் இருந்த நவமணிகளை கொள்ளையடிக்க இந்த ஆலயங்களில் இருந்த சிலைகள் உடைத்து எடுக்கப்பட்டன.
🌺 ஆய்வாளர்களின் கருத்துப்படி திருச்சுற்று மாளிகை இரண்டு அடுக்கு கொண்ட மாடியாக இருந்து பின்னாளில் அழிக்கப்பட்டு இருக்க வேண்டும் ஏனென்றால் அதன் மேல் தளத்தில் அதற்கான கூறுகள் இன்றும் உள்ளது
🎉 கி.பி 750-ல் இரண்டாம்‌ நந்திவர்ம பல்லவன்‌ சோழநாட்டில்‌ நந்திபுரத்து ஆயிரத்தளி எனும் ஆயிரம்‌ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து பெருங்கோவில் ஒன்று எழுப்பினார் ஆனால் மாலிக்காபூர் படையெடுப்பில் அவை அழிய அதில் 108 லிங்கங்களை மீட்டு பிரகாரத்தில் 1801 ஆம் இரண்டாம் சரபோஜி மன்னர் பிரதிஷ்டை செய்தார்
☔ ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே இரண்டு வடிகால்கள் அமைத்து கட்டப்பட்ட கோவில் பெரிய கோவில்
அபிசேகம் செய்யப்பட்ட நீரும், தூசியாக வரும் நீரும் தெற்கு பக்கம் வழியாக நந்தவனத்திற்கும், மழையினால் வரும் அதிகபடியான நீர் வடக்கு பக்கம் மூலமாக சிவகங்கை குளத்திற்கும் செல்கின்றன
👑 " சோழநாடு சோறுடைத்து " என்பதற்கு முக்கிய காரணம் சோழர்களின் நீர் மேலாண்மையே. சோழர்கள் காலத்தில் வெட்டப்பட்ட வாய்க்கால்கள், ஏரிகள் எண்ணிலடங்காதவை
📖 இந்தியாவின் நீர் பாசன தந்தை என அழைக்கப்படுபவரான சர் ஆர்தர் காட்டன் கரிகாலன் அமைத்த கல்லணையை கண்டு பிரமித்து ஆங்கிலத்தில் " Grand anicut " என பெயரிட்டார்.
கோதாவரி நதியில் தவ்லேஸ்வரம் அணை , தமிழகத்தில் மேலணை மற்றும் கீழணையை கரிகாலனின் நுட்பத்தை பின்பற்றியே அமைத்தார்.
இதனால் செலவுகள் பல குறைந்து மேலணை என்றழைக்கப்படும் முக்கொம்பை 2 லட்ச ரூபாயில் கட்டி முடிக்க முடிந்தது
🏆 ஆந்திராவில் மட்டும் 3000 சிலைகள் உள்ள இந்திய நீர் பாசன தந்தையான இவருக்கே கரிகால சோழன் தான் குரு
🔍 கோவில் விமானத்தின் நிழல் கீழே விழாது என சிலர் சொன்னாலும் காலையிலும், மாலையிலும் நிழல் விழும் இது வதந்தி என கூறுவோறும் உண்டு
உண்மையில் நண்பகல் அதாவது 12 மணிக்கு விமானத்தின் நிழல் கீழே விழாது இதிலென்ன ஆச்சர்யம்
ஒரு கட்டிடம் 0.0 டிகிரி நேராக அதாவது துளி கோணம் கூட சாயாமல் செங்குத்தாக இருந்தால் மட்டுமே அதன் நிழல் உச்சிவேளையில் கீழ் விழாது
🎁 ஒரு கட்டுமானம் 0.0° நேராக கட்டுவது உண்மையில் பெரும் சாதனை தான் அதுவும் 1000 வருடங்கள் கழித்தும் தனது காலத்தில் 1679-ல் துவங்கி இன்றுவரை பத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கங்களை சந்தித்தும் துளிகூட மாறாமல் இருக்கும் தஞ்சை பெரிய கோவில் சாதனையின் உச்சம்
🌏 தற்போது சுரங்கத்தில் மெட்ரோ போவது ஆச்சர்யமாக இருக்கலாம், ஆனால் அன்று இராஜராஜன் குதிரையில் சுரங்கத்தின் வழியை பீரகதீஸ்வரரை தரிசனம் செய்தார்
இன்றும் நூற்றுக்கணக்கான சிக்கல்களை கொண்ட சுரங்கபாதைகள் தஞ்சை பெரியகோவிலில் காணப்படுகின்றன ஆனால் அவை ஆபத்து மிகுந்தவை என்பதால் மூடப்பட்டுள்ளன
💐 பொதுவாகவே அக்காலங்களில் சுரங்கபாதைகள் முக்கிய பங்கு வகித்தன பயணம் எளிது என்பது முதன்மை காரணமாக இருந்தாலும் சுரங்களினால் ஆபத்து காலங்களில் எளிதாக வெளியேற முடியும்
🌸 மிகவும் சிக்கலான அமைப்பாக இருப்பதால் பாதை தெரியாதவர்கள் உள்ளே நுழைந்தால் விஷவாயு, விஷஜந்துக்கள் முதல் பல இடர்களில் சிக்கி மரணமடைவார்கள்
🌷 ஆபத்து காலங்களில் முதலில் பெண்கள் வெளியேற வேண்டும் என்பதால் பெரும்பாலும் இவை அந்தப்புறத்திலிருந்தே துவங்கும்
🍀 அவ்வாறே கோட்டை எதிரிகளிடம் சிக்கிவிட்டால் கஜானாவில் உள்ள செல்வங்களை வெளியிலிருந்தே மீட்கலாம் என்பதால் அந்நாட்டின் செல்வங்களும் பெரும்பாலும் இந்த சுரங்கபாதைக்கு அடியிலேயே இருக்கும். சுரங்க பாதைகளின் ரகசியம் அரசன் முதலிய முக்கியமானவர்களுக்கு மட்டுமே தெரியுமென்பதால் இப்படி வைப்பது பாதுகாப்பானது
🌹 முக்கிய பாதைகள் ஆறுகள் குளங்களுக்கு அடியிலும் அமைக்கப்பட்டு இருக்கும். எதிரிகள் சுரங்க பாதைகளின் ரகசியம் அறிந்தால் ஒரு பாறையை குறிப்பிட்ட இடத்தில் உருட்டி விடுவதாலேயே அந்த சுரங்கபாதைகளில் நீர் புகுந்து உபயோகமற்றதாகிவிடும்
🏆 பொதுவாகவே நமது கோவில்கள் கம்பீரமாக கோட்டை போல் இருப்பதால் ஆங்கிலேயர்கள் முதல்கொண்டு பலர் சிப்பாய்களின் கூடாரமாகவும் பாதுகாப்பு அரண்களாகவும் போர்களில் பயன்படுத்தினர் அப்படி விற்களில் துவங்கி பீரங்கி வரை எதிர்த்தும் இன்னும் அழகு குறையாமல் நிற்கின்றது இராஜராஜேஸ்வரம்
🌺 அடுத்த பதிவில் கோவில் கட்ட பயன்படுத்திய அளவுகள் என்ன மேலும் கோவிலில் அமைந்த ஓவியங்கள், கரண சிற்பங்கள் மற்றும் சிலைகளை பற்றி பார்ப்போம்
உருவாக்கம் : Seetha Raman
 
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் 21 தொடக்கம் 27 வரை மாவீரர் வாரம் ✍️

 

Edited by யாயினி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருக்க முடியாம இந்த சுத்து மாத்து கனடா வந்து எல்லாரையும் குழப்பிட்டு போறது தான் மிச்சம்..சோ இனி எல்லாரும் பேசாதீஙகோ எழுதி தாங்கோ என்றல்லா கேட்க போயினம்.🤔👋✍️

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.