Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
 
"பூமிப்பந்தின் வெப்பம் அதிகரித்துக் கொண்டேச் செல்கிறது. சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்கு ஏதாவது முயற்சி செய்யுங்கள், இல்லைஎன்றால் எதிர்காலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அநேகம். இப்போதாவது விழித்துகொள்ளுங்கள்" என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அரசும் மக்களும் கவலைப்படுவது போல் தெரியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக மரம் நடுதல் நடைபெற்றாலும் இன்னும் முழுவீச்சில் இல்லை. விழிப்புணர்வு ஊட்டுவதிலேயே காலம் சென்றுக் கொண்டிருக்கிறது... 
 
மரம் வெட்டுபவர்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்க படவேண்டும், . காடுகளில் மரங்கள் வெட்டுவது நடந்துகொண்டுதான் இருக்கிறது...வனப்பகுதிகள் காணாமல் போய்க் கொண்டே இருக்கின்றன. மரங்கள் குறைந்ததால் மழை குறைந்து தண்ணீர் கிடைக்காமல்  வன விலங்குகள் நாட்டுக்குள் வரத் தொடங்கிவிட்டன...!? வனவிலங்குகள் பயிர்களை சேதபடுத்துகின்றன என்று சொல்ல தெரிந்த நமக்கு, அந்த விலங்குகளின் நிலையில் இருந்து யோசிக்க தெரியவில்லை .
 
சாலைகள் போடுவதற்கென்று வெட்டப்பட்ட மரங்கள் பல லட்சங்களை தாண்டும். சாலைகள் போட மரத்தை வெட்டியவர்கள் மீண்டும் அங்கே மரத்தை நட்டு பராமரிக்கவேண்டிய பொறுப்பையும் எடுத்துகொண்டால் நன்றாக இருந்திருக்கும். இதை முறைபடுத்தி இருந்தால் இன்று பல லட்சம் மரங்கள் உண்டாயிருக்கும். முக்கிய நாட்களில் மரம் நடுவதை ஒரு விழாவாக கொண்டாடுவதுடன் தங்களது சேவை முடிந்துவிட்டது என இருந்துவிடாமல் தொடர்ந்து அதனை பராமரித்து வளர்க்கும் கடமையும் தங்களுக்கு உண்டு என்பதை மறக்கலாகாது. 
 
 
image+for+post.jpg
 
 
உலக வன நாள் இன்று:
 
மரம் வெட்டாதே என்று சட்டங்கள், கட்டுப்பாடுகள் போட்டாலும் வெட்டுபவர்கள் வெட்டி கொண்டே தான் இருக்கிறார்கள். அதனையும் ஒரு உயிராக பார்க்கும் மனித நேயம் மிக்க மனிதர்கள் குறைந்துவிட்டார்கள்.
 
உலக வெப்பமயமாதல் குறித்து உலகமே கவலை கொள்ள ஆரம்பித்துவிட்ட இன்றைய நாளில் ஓடி ஓடி மரங்களை வளர்கிறோம், வளர்க்க சொல்லி விழிப்புணர்வு கொடுத்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு மரம் நன்கு வளர குறைந்தது மூன்று ஆண்டுகளாவது ஆகும், இதை சிறிதும் சிந்திக்காமல் சில நிமிடங்களில் வெட்டி எறிந்து விடுகிறார்கள். 
 
மரம் வெட்டுவதை பெரிய பாவ செயலாக நம் முன்னோர்கள் சொல்வதுடன் மட்டும் இல்லாமல் நடைமுறையிலும் நடந்து கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதை பற்றி படித்த போது மிக பெரிய ஆச்சர்யமாக இருந்தது. அத்தகைய சில ஆச்சர்யங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.சங்க பாடல்கள் பல இருக்கின்றன அவற்றில் சில மட்டும் இங்கே...
 
 * நறுந்தண் தகரம் வகுளம் இவற்றைவெறும்புதல் போல் வேண்டாது " (திணைமாலை நூற்றைம்பது 24 )
 
இந்த பாடலில் "சுயநலத்திற்காக மரங்களை வெட்டுபவர்கள் எத்தகைய கொடுமை செய்யவும் தயங்க மாட்டார்கள். அத்தகையோரின் வீட்டில் பிறக்கும் பிள்ளைகளும் பிறர் படும் துன்பத்திற்கு வருந்தகூடியவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே அத்தகையோரின் வீட்டு பெண்ணை விரும்புவதும், மணம் முடிப்பதும் சரி இல்லை, இது குறித்து கொஞ்சம் யோசி " எனத் தோழன் ஒருவன் தலைவனுக்கு அறிவுரை கூறுகிறான்.
 
மரங்களை வெட்டுவதை பற்றி இப்படி சொல்வதை கூட விடுங்க,மரங்களின் நுனி பகுதியை கூட கிள்ளகூடாது. அப்படி கிள்ளுவது அறமற்ற செயல் என்று சொல்லி இருப்பதை என்னவென்று சொல்ல...
 
நெறிதிரிவார் இன்மையால் இல்லை முறிதிரித்து
கண்டல் அம் மண் தில்லை " (திணைமாலை நூற்றைம்பது 61)

எம்நாட்டில் அறநெறி தவறி நடப்பவர்கள் எவரும் இல்லையாதலால் கண்டல் சோலைகளில் உள்ள தாழை மரங்களின் நுனிப்பகுதிகள் முறிந்த காட்சியைக் கூட எங்கும் காண முடியாது " தன் நாட்டின் சிறப்பை பற்றி தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
 
தாவரங்கள், நீர்நிலைகளின் மதிப்பை உணர்ந்து அதற்கேற்றபடி வாழ்ந்து சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை உலகத்திற்கு உணர்த்தி உள்ளனர் பண்டைய தமிழர்கள் !! 
 
அவர்களின் வழி வந்தவர்கள் நாம் , இன்றைய பாஸ்ட் புட் உலகில் நாம் அவற்றையெல்லாம் மறந்து விட்டோம் , உங்கள் அனைவரையும் களத்தில் இறங்கி மரங்களை வளர்க்க சொல்லவில்லை , மரத்தின் அவசியத்தை உணருங்கள் காலம் தன் பணியை செய்யும் .
 
when_to_plant_trees.jpg
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் மாதம் 21ம் திகதி -> உலக வன நாள்

 
 
 
புவியின் "நுரையீரல்கள்" என அழைக்கப்படும் காடுகள், இன்று மனித செயற்பாட்டின் காரணமாக அழிவடைந்துவருகின்றன. இதன் காரணமாக புவியின் வெப்பநிலை அதிகரித்து பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றோம்.
 
deforestation+and+lungs.jpg
 
வனங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தவும் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் மார்ச் மாதம் 21ம் திகதி உலக வன நாளாக கொண்டாடப்படுகின்றது.

 
அந்தவகையில், உலக வன வளங்கள் தொடர்பிலான சுவையான தகவல்கள்…!

 
a உலகில் 4 பில்லியன் ஹெக்டேயர்கள் நிலப்பரப்பிற்கு காடுகள்காணப்படுகின்றனஅதாவதுபுவி மேற்பரப்பில்  31% வகிபாகத்திற்கு காடுகள் சூழ்ந்துள்ளன.

 
a உலகில் அதிக பரப்பளவில் வன வளத்தைக் கொண்ட கண்டம்தென் அமெரிக்க கண்டம் ஆகும்தனது நிலப் பரப்பில்அரைவாசிக்கும் அதிகமான பங்கிற்கு இங்கே காடுகள்காணப்படுகின்றன.

 
south+america+vegetation+map.jpg
 
a உலகில் குறைந்த பரப்பளவில் வன வளத்தைக் கொண்ட கண்டம்ஆசியாக் கண்டம் ஆகும்தனது நிலப் பரப்பில் 20% பங்கிற்குஇங்கே காடுகள் காணப்படுகின்றன.

 
a உலகில் அதிகளவில் வன வளங்களைக் கொண்ட நாடுகளாவனரஷ்யாபிரேசில்கனடாஐக்கிய அமெரிக்காசீனாஆகியனவாகும்உலகில் அரைவாசிக்கும் அதிகமான காடுகள்இந்த நாடுகளிலேயே காணப்படுகின்றன.

 
a உலக வனங்களில் 20% ஆனவை ரஷ்யாவிலேயேகாணப்படுகின்றன.

 
a புவி மேற்பரப்பில்  6% ஆன வகிபாகத்திற்கே ஈரவலயக் காடுகள்சூழ்ந்துள்ளனஆனால்உலகிலுள்ள தாவர மற்றும்விலங்கினங்களில் அரைவாசிக்கும் அதிகமானவை  ஈரவலயக்காடுகளிலேயே காணப்படுகின்றன.

 
7140170_orig.jpg
 
a அந்தாட்டிக்கா கண்டம் தவிர்ந்த ஏனைய அனைத்துகண்டங்களிலும்  ஈரவலயக் காடுகள் காணப்படுகின்றன.
 
a தென் அமெரிக்க ஈரவலயக் காடுகளில் 2,000 இற்கும் அதிகமானவண்ணத்துப்பூச்சி இனங்கள் காணப்படுகின்றனவாம்.

 
a மத்திய ஆபிரிக்க ஈரவலயக் காடுகளில் 8,000 இற்கும் அதிகமானதாவர இனங்கள் காணப்படுகின்றனவாம்.

 
forest.jpg
 
a உலகில் ஒவ்வொரு செக்கனுக்கும்கால்பந்தாட்ட மைதானத்தின்அளவான ஈரவலயக் காடுகள் அழிக்கப்படுகின்றன.

 
a உலகில் வருடாந்தம் 36 மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பிலானஇயற்கை காடுகள் அழிக்கப்படுகின்றனஇது இங்கிலாந்துநாட்டின் பரப்பளவினை விடவும் பெரிதாகும்.

 
a காகிதாதி உற்பத்திற்காக உலகில் 50% ஆன மரங்கள்அழிக்கப்படுகின்றன. (World Resource Institute)

 
a உலகில் 80% இற்கும் அதிகமான காட்டுத் தீ மனிதனாலேயேஉருவாக்கப்படுகின்றன.

 
rex_153587j-5071.jpg
 
a உலகத்திற்கு தேவையான 20% ஆன ஒட்சிசன் அமேசன்ஈரவலயக் காடுகளிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது.

 
a உலகில் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமதுவாழ்வாரத்திற்கு காடுகளிலேயே தங்கியுள்ளனர்.

 
a உலகில் 300 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காடுகளிலேவாழ்கின்றனர்.

 
a உலக சனத்தொகையில் மூன்றிலொரு பங்கினர் தமதுஎரிபொருள் தேவையினை விறகுகள் மூலமே பூர்த்திசெய்துகொள்கின்றனர்.

 
***
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக கவிதைகள் தினம்.21.03.2017

· 
No automatic alt text available.
Image may contain: one or more people and text
 
 

மார்ச் 21 – உலக கவிதை தினம்

1999ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற யுனெஸ்கோ அமையத்தின் 30வது அமர்வில் உலக கவிதை தினமானது பிரகடனப்படுத்தப்பட்டது.

இத்தினமானது, கவிதைகளினை வாசித்தல், எழுதுதல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றினை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அனைத்துலக கவிதை தினம்.அனைத்து கவிஞர்களுக்கும் மேலும் பல படைப்புக்களை வெளிக் கொண்டு வர உளம் நிறைந்த வாழ்துக்கள்..

 · 
No automatic alt text available.
Image may contain: flower

பூ"-

 · 
Image may contain: plant, flower, nature and outdoor
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இளையராஜா இசையமைக்காத பாடல்கள்....(எழுத்து: யோ.புரட்சி)

மலரே மெளனமா
மெளனமே வேதமா
மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா

இந்தப் பாடலுக்கென்றே தனி இரசிகர்கள் கூட்டம் உள்ளது. இடைக்கால பாடலின் தழுவலாக இப்பாடல் வருவதால் இது இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடலென நினைப்ளோரும் உளர். 1995இல் வெளிவந்த 'கர்ணா' திரைப்படப் பாடலிது. வித்யாசாகர் இசை வழங்கிய இப்பாடலை எஸ்.ஜானகி அவர்கள் எஸ்.பி.பி உடன் இணைந்து பாடியிருந்தார்.

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை
வென்று முடிப்பவன் அறிவாளி

நவீன கருவிகள் நடைகொள்ளும் இப்பாடலின் இசை ஏ.ஆர் ரகுமான். கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் இயக்கிய 'முத்து' திரைப்படத்தில் ரஜினிகாந்த் மீனா ஆகியோர் நடித்திருந்தனர். இப்பாடலுக்கு ஆடுவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. கவிப்பேரரசு எழுதிய இப்பாடலை எஸ்.பி.பிஉணர்ந்து பாடியிருந்தார்.

எஸ்.பி.பி அவர்களின் முழுப்பெயர் ஸ்ரீபதி பண்டித பாலசுப்ரமணிய என்பதே. 1946ம் ஆண்டு இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் இவர் பிறந்தார். தமிழில் 'இயற்கை என்னும் இளையகன்னி' பாடலை பாடியிருந்தாலும், இப்பாடலின் படம் வெளிவர முன்னேயே 'அடிமைப் பெண்' திரைப்படம் வெளிவந்ததால் அப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் அவர் பாடிய 

ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
எனும் பாடலே முதற்பாடலாக கொள்ளப்படுகிறது. இப்படத்தின் நாயகன் எம்.ஜீ.ஆர். நாயகி ஜெயலலிதா.

மெதுவா மெதுவா ஒரு காதல்பாட்டு
மலரும் மலரும் புதுதாளம் போட்டு
புதுசா புதுசா அதைகாதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல்கீற்று

இந்தப்பாடலும் இடைக்காலப் பாடல்களில் தனியிடம் பிடித்த பாடல்தான். பாடல் என்னவோ இளையராஜா மெட்டுபோல தொட்டு நின்றாலும் 'அண்ணாநகர் முதல்தெரு' எனும் 1987இல் வெளிவந்த இசையமைப்பாளர் சந்திரபோஸ் இசையமைத்த பாடல் அது. வாலி பாடலை எழுதியிருந்தார். சித்ரா அவர்கள் எஸ்.பி.பி உடன் இணைந்து பாடலை சிறப்பாக்கினார். இன்றும் இப்பாடல் இசையமைப்பாளர் சந்திரபோஸ் அவர்களின் திறனுக்கு சான்றாக ஒலிக்கிறது.

எஸ்.பி.பி அவர்கள் தானே இசையமைத்த "சிகரம்" திரைப்படப் பாடல்கள் பேர்பெற்றவை.

இதோஇதோ என் பல்லவி
எப்போது கீதம் ஆகுமோ
இவள் எந்தன் சரணம் என்றால்
அப்போது வேதம் ஆகுமோ

சித்ரா மற்றும் எஸ்.பி.பி இணையும் இப்பாடல் 1991இல் வெளிவந்தது. அதே திரைப்படத்தில் அவரே இசையமைத்துப் பாடிய "வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ" பாடலும் பிரபலமிக்க ஒன்றென வாதாட்டமின்றி சொல்லலாம்.

இளைய தளபதி விஜய் நடித்த 'யூத்' திரைப்படத்திற்கு மணிசர்மா இசை வழங்கி இருந்தார். அப்படத்தில் வைரமுத்து எழுதிய இப்பாடலை எஸ்.பி.பி அவர்கள் பாடியிருக்கிறார்.

சந்தோசம் சந்தோசம்
வாழ்க்கையின் பாதிபலம்
சந்தோசம் இல்லையென்றால்
மனிதர்க்கு ஏதுபலம்

தேனிசைத் தென்றல் தேவா இசையில் எஸ்.பி.பி பாடிய பாடல்கள் அநேகம் பிரபலமானவை. பாட்ஷா படத்தில் அவர் பாடிய 'நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் நாளும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்' பாடல், 'அண்ணாமலை' திரைப்படத்தில் 'வந்தேன்டா பால்க்காரன்' பாடல் என்பனவும் அத்திரைப்படத்தில் அவர் பாடிய பிற பாடல்களும் காலத்தை வென்றவையே. 'அருணாச்சலம்' படப்பாடல்களும் தேவா இசையமைத்ததே.

தேவா இசையமைத்த 'நினைத்தேன் வந்தாய்' திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளுக்காக சித்ரா மற்றும் சுஜாதா ஆகியோருடன் இணைந்து எஸ்.பி.பி பாடிய 'உனை நினைத்து நான் எனை மறப்பது அதுதான் அன்பே காதல்' எனும் பாடலும் தமிழ் வாழும் இடமெல்லாம் ஒலித்த பாடல்.

இசையமைப்பாளர் செளந்தர்யன் இசையமைத்த 'சேரன் பாண்டியன்' படப்பாடல்கள் பலத்த வெற்றி பெற்றவை. இப்படத்தில் நடிகர் ஆனந்த பாபுவுக்காக எஸ்.பி.பி பாடிய ' வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே. என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே' பாடல் தமிழ் இரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. தமிழ் அல்லாத மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் பாடியிருக்கிறார்.

அஜீத்குமார் நடிப்பில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் வெளிவந்ததே 'அவள் வருவாளா' படம். பழநிபாரதி எழுதிய இவ்வரிகளை எஸ்.பி.பி அவர்கள் அஜீத்குமாருக்கு ஏற்ற குரலில் வடித்தார். அப்பாடல்...

'காதலென்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம்பூச்சி கூட்டமா'

'வானத்தைப் போல' திரைப்படத்திலும் எஸ்.பி.பி அவர்களின் பங்கு பெரிது. 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' பாடலின் வெற்றியில் இவருக்கும் பங்குண்டு. இப்படத்திற்கும் எஸ்.ஏ.ராஜ்குமார் அவர்களே இசையமைத்தவர்.

ரஜனிகாந்த் நடித்த 'சிவாஜி' திரைப்படத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் நா.முத்துக்குமார் எழுதிய 'பல்லேலக்கா' என தொடங்கும் 'காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா' பாடல் எஸ்.பி.பி இன் இன்னொரு வெற்றிச்சான்று. 

இசையமைப்பாளர் ஹம்சலேகா அவர்களை எத்தனை பேர்கள் அறிவரோ? 'கொடி பறக்குது' படத்தின் இசையமைப்பாளர் அவர். வைரமுத்து எழுதிய 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு கண்டதுண்டா? கண்டவர்கள் சொன்னதுண்டா?' பாடலை எஸ்.பி.பி அவர்கள் சித்ராவுடன் இணைந்து பாடியிருந்தார். ரஜனிகாந்த் நடித்த படமது. இன்றும் இப்பாடல் இடைக்கால நட்சத்திரங்களில் ஒன்றாய் மிளிர்கிறது.

பா.விஜய் எழுதிய 'வேதம்' படத்தின் 

'கொஞ்சிக்கொஞ்சி பேசிவரும் தமிழ்போல
அஞ்சிஅஞ்சி வீசிவரும் அலைபோல'

எனும் இப்பாடலும் எஸ்.பி.பி இன் வெற்றிப்பாடலே. வித்யாசாகர் அவர்கள் இப்படத்திற்கு இசை வழங்கி இருந்தார்.

இப்படியாக எஸ்.பி.பி அவர்கள் இளையராஜா இசையமைக்காத அநேக பாடல்கள் பாடியுள்ளார். அதை எழுதிக்கொண்டே போகலாம். ஆயினும் இளையராஜா இசையமைத்த பாடல்கள் அவரை ஏற்றிவைத்த சிகரம் மிக அழகானது என்பதையும் மறுக்க முடியாது. 

யோ.புரட்சி

Image may contain: 1 person, eyeglasses and closeup
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அனைத்துலக தண்ணீர் தினம்..22.03.2017

ஊரில் இருக்கும் போது இந்த நாட்கள் எல்லாம் எல்லோருக்கும் நினைவில் வந்து போனதோ தெரியவில்லை..ஆனால் இன்றை இணைய உலகில் வருடத்தில் வரும் பெரும்பாலன நாட்கள் ஏதோ ஒரு விதத்தில் மக்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாட்களாவே வந்து போகின்றன..அந்த விதத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டால் அது இல்லாத போது தான் தண்ணீரின் அருமையை அறிந்து கொள்ளலாம்..

ஏன் ஐம்பூதங்களில் கூட நீர் தான் முதன்மையானதாக இருக்கிறது என்றால் எந்தளவுக்கு தண்ணீர் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்..மனிதன் நீர் இன்றி வாழ முடியாது..

 
 
 
No automatic alt text available.

Save Water...!
Edited by யாயினி
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்னும் அல்லா ர‍ஹ்ஹா ரஹ்மானும்,எல்லாப் பணமும் எனக்கே என்னும் இளையராஜாவும்: கவிஞர் தணிகை.

 
எல்லாப் புகழும் இறைவனுக்கே என்னும் அல்லா ர‍ஹ்ஹா ரஹ்மானும்,எல்லாப் பணமும் எனக்கே என்னும் இளையராஜாவும்: கவிஞர் தணிகை.

Image result for ar rahman and ilayaraja


உலகை தம் இசையால் வென்ற மேதையாய் ஏ.ஆர்.ரஹ்மான் இருக்க 2 ஆஸ்கார் விருதுகளுடன் கொடி கட்டிப்பறக்க அந்த 4 வயதில் தந்தையுடன் இசைக்கருவியை கையில் எடுத்த சிறுவன் நினைத்திருக்கவே மாட்டான்.9 வயதில் தமது தந்தையை பறிகொடுத்த அந்த சிறுவன் முயற்சியை மட்டும் கைவிடவே இல்லை.

அவனிடம் என்றுமே இருக்கும் ஒரு அடக்கம்: எல்லாப் புகழும் இறைவனுக்கே என்னும் இறை நெருக்கம்...அது ஏற்ற முடியா இன்னும் ஏற முடியா ஏணிகளையும் ஏற்றி வைத்தது இனி ஏற படிகளே பெரும்பாலும் இல்லை.அவ்வளவு உயரம்...

ஆனால் இளைய ராஜா என்னும் மாமனிதரும் ஒரு இசை மேதைதான். ஆனாலும் இவரிடம் எப்போதும் இருக்கும் தலைக்கனம். இவர் நிறைய ஆன்மீக பக்தி, கடவுள் சார்ந்த வழிபாட்டுப் பாடல்களைப் படைத்த போதும் இவர் எப்போதும் தம்மையே வியந்து பார்த்துக்கொள்ளும் குணத்தை இன்னும் விட்டார் இல்லை ஏற்கெனவே ஒருமுறை ஒரு பத்திரிகையாளரை நீ யார் என கொச்சையாய் துசாய், துரும்பாய் மதித்து அனைவரது அதிருப்தியை பெற்றுக் கொண்டார்.


Related image


இப்போது எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் விட்டு பேரைக் கெடுத்துக் கொண்டார். எல்லாவற்றுக்கும் வாரிசுகளும், பெரும்பண விளையாட்டுமே காரணம். இந்த சினிமாக்காரர் எல்லாமே யோக்யம் எல்லாம் இல்லை. இந்த எஸ்.பி.பாலசுப்ரமணியமும்தான். சரண் , கார்த்திக் இளையராஜா இவர்களுக்கு எதிர்கால பேஸ்மட்டத்தை அமைத்து தரும் இந்த போராட்டத்தில் தான் இப்படி நண்பர்கள் அசிங்கப் பட்டுப் போய் இருப்பது பேராசைக் களத்தில் பெரும் புகழுடும் பெரும்பணத்தை பெறவே பங்கு போட்டுக் கொள்ளவே இந்தப் வாய் மொழிப்போர் யாவுமே...

ஒரு தயாரிப்பாளர் முதல் போட்டு ஒரு படத்தை ஒரு இயக்குனரைத் தேர்த்நெடுத்து திரைக்கதை அமைத்து, பாடல் செய்யச் சொல்லி,இப்படி எல்லா நிலைகளிலும் ஒரு கூட்டு முயற்சியை செய்கிறார்கள், பாடல் எழுதுவோரும் இசை அமைப்பாருமாக...எல்லாம் பணத்துக்காக...

இதில் கற்பனை கலக்கிறது வார்த்தைகள் பிறக்கிறது இசை மலர்கிறது இதில் வரும் எல்லா இலாப நஷ்டம் பெரும்பாலும் எல்லாத் துறைகளையும் சார்ந்து பணி செய்தோரை பாதிக்கிறது. ஆனாலும் இலாபத்தை பெரும்பாலும் தயாரிப்பாளர் மட்டுமே எடுத்துக் கொள்கிறார் அது தோல்வி அடைந்து நஷ்டம் வந்தாலும் சம்பளம் வாங்கிய அனைவரும் தப்பித்துக் கொள்ள தயாரிப்பாளர் தற்கொலை செய்யும் நிலையெல்லாம் இந்த சினிமாவில் உண்டு.

பேருந்தில்  தமது பாடல் ஒலிபரப்பாவதை இளையராஜாவால் தடுக்க முடியாது,வானொலியில், தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பாவது,ஒளிபரப்பாவது யாவற்றையும் வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை

மேலும் சொல்லப் போனால் இவரது தனிப்பட்ட ஆல்பம் போன்ற இசைக் கோர்வை பற்றி இவர் காபி ரைட் கொண்டாடினால் அது நியாயம். அடுத்தவர் காசில் எல்லாம் செய்து விட்டு பிறர் சொத்துக்கு உரிமை கொண்டாடுவது சிந்திப்பார்க்கு விளங்கும் இளையராஜாவின் நிலைப்பாடு கேலிக் கூத்தானது என்று...

Image result for ar rahman and ilayaraja


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86.

அசோகமித்திரன்படத்தின் காப்புரிமைTHE HINDU TAMIL

சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த அசோகமித்திரனுக்கு வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.

ஆந்திர மாநிலம் செகந்தராபாதில் 1931ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி பிறந்த அசோகமித்திரனின் இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத் நகரில் படித்து வளர்ந்த அசோகமித்திரன், தந்தையின் மறைவுக்குப் பிறகு 21-ஆவது வயதில் சென்னையில் குடியேறினார். 

எஸ்.எஸ். வாசனின் ஜெமினி ஸ்டுடியோவில் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்துவந்த இவர், அந்தப்பணியிலிருந்து விலகி முழுநேர எழுத்தாளரானார். கணையாழி இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். 

1954ஆம் ஆண்டு முதல் எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரன், சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரைகள் என பல்வேறு தளங்களில் படைப்புகளைத் தந்தவர். இவருடைய `அப்பாவின் சிநேகிதர்' சிறுகதைத் தொகுப்பிற்காக 1996ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. 

கரைந்த நிழல்கள், தண்ணீர், ஒற்றன், 18வது அட்சக்கோடு, ஆகாயத் தாமரை, இன்று, மானசரோவர் உள்ளிட்ட நாவல்கள், விடுதலை, இருவர் உள்ளிட்ட குறுநாவல்கள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவை இவரது படைப்புகளில் அடங்கும்.

நவீன தமிழ் இலக்கியத்தில் மிகவும் போற்றப்படும் எழுத்தாளரான அசோகமித்திரனின் படைப்புகள், சமகால நகர்ப்புற நடுத்தர மக்களின் சிக்கல்களை, கொண்டாட்டங்களை, துக்கங்களை மிகச் சிறப்பாக முன்வைத்தவை.

பெரும் துயரத்தை எளிய சொற்களில் வெளிப்படுத்திவந்த அசோகமித்திரன் சாதாரணமான கதாபாத்திரங்கள், சம்பவங்கள் மூலம் மிகச் சிறப்பான வாசிப்பு அனுபவத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தியவர்.

பழகுவதற்கு மிகவும் எளிமையானவரான அசோகமித்திரன், சிறந்த நகைச்சுவை உணர்வும் மிக்கவர்.

பிபிசி தமிழ் : 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Today, It is 29 Years since the great Legend left us... for years to come his Voice, songs and good thoughts will live among us forever.

 
Image may contain: 1 person, playing a musical instrument
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக காச நோய் நாள் (World Tuberculosis Day), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது

 

1882 - காசநோயை உருவாக்கும் நோய்க்கிருமியைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் அறிவித்தார்.

Image may contain: one or more people
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பு...

வாசிப்பு ஒரு புத்துணர்ச்சி..வாசிப்பு ஒரு கலை..வாசிப்பு மனிதனை பூரணமாக்கும்..எத்தனையோ மனஉளைச்சலுக்கு ஆட்பட்டு இருக்கும்போது வாசிப்பு நமக்கு ஒரு ஆறுதல்.. சிறுவயதில் அம்புலி மாமா, தென்னாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், முல்லாவின் கதைகள் என கதைப் புத்தகங்களை படித்து, பல சமயங்களில் கனவுகளிலே அந்தக் கதாபாத்திரங்களை கற்பனை செய்து என்னையறியாமல் சிரித்ததுண்டு..

அதுபோன்றுதான் ஒவ்வொரு வாசிப்பும் ஏதோ ஒரு செய்தியை நமக்கு நினைவுப்படுத்தும்..‘‘ஒரு புத்தகத்தை ஆழ்ந்து அனுப விக்க வேண்டுமென்றால், அதை உங்களுக்குள்ளே இரண்டறக் கலக்கச் செய்யவேண்டும்” அது ஒரு தனிப்பட்ட அனுபவம்... நிதானமாய் வாசியுங்கள்..அதற்கென சில மணி நேரம் ஒதுக்குங்கள்..ஒரு மொழிமீதான பாண்டித்தியம், எழுத்துதிறன் எல்லாமே வாசிப்பில் உள்ளடக்கம்... இசை கேட்டு துன்பங்கள் மறப்பதுபோல..வாசிப்புகள் உங்கள் கற்பனைகளை தூண்டும்..வாசிப்பை உங்கள் சுவாச மாக்குங்கள்..’நாம் கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு’ என்ற யதார்த்தத்தை புரிந்துகொள்ளல்வேண்டும்..

யாழினி அரசேந்திரன்
.............இந்தியா..............

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிசுகள் மூன்றுமுறை.....

2) இலக்கியச் சிந்தனை விருதுகள்- 1977..1984...

3)இந்திய இலக்கியத்தை ஒப்பீடு செய்யும் ஆய்வுக்கு கே.கே. பிர்லா நல்கை...

4)1973-74 இல் அயோவா பல்கலைக்கழகத்தின் படைப்பிலக்கிய நல்கை....

5)லில்லி நினைவுப் பரிசு, 1992.

6)1993 இல் இராமகிருஷ்ணா ஜெய்தயாள் அமைதி விருது டால்மியா அறக்கட்டளை.

7) அட்சரா விருது, 1996.

8) இவரது "அப்பாவின் சிநேகிதர் " எனும் சிறுகதை தொகுப்புக்கு 1996 இல் சாகித்திய அகாதெமி விருது .

9) 2007 ல் எம்.ஜி.ஆர் விருது.

10) 2012 ல் தேசிய இலக்கிய விருது என்.டி.ஆர். அறிவியல் அறக்கட்டளை.

11) 2013 ல் சென்னையில் க.நா.சு. விருது.

12) 2013 ல் இவர் கொல்கத்தாவில் உள்ள பாரதீய பாஷா அறக்கட்டளையின் விருது. 

சிறுகதைகள் 
------------------------
1) நாடகத்தின் முடிவு
2 )வாழ்விலே ஒருமுறை
3) விமோசனம் விடுதலை
4) காலமும் ஐந்து குழந்தைகளும் 
5) முறைப்பெண்
6) சினேகிதர்
7) பிப்லப் சௌதுரியின் கடன்
8) நாவல்கள் 
9) பதினெட்டாவது அட்சக்கோடு
10)தணணீர்
11) இன்று
12)ஆகாசத்தாமரை
13)ஒற்றன்
14) மானசரோவர்
15) கரைந்த நிழல்கள்
16) குறுநாவல்கள் 
17) இருவர்
18) விடுதலை
19) தீபம்
20) விழா மாலைப் போதில்

பிற
-------
அசோகமித்திரன் கதைகள் தொகுப்பு 1&2

கட்டுரைகள்.
-----------------------
அசோகமித்திரன் கட்டுரைகள் தொகுப்பு 1&2

ஆங்கிலம் 
-------------------

1) ஃபோர்டீன் இயர்ஸ் வித் பாஸ்
2) தி கோஸ்ட் ஆஃப் மீனம்பாக்கம்
3) ஸ்டில் ப்ளீடிங் ஃபிரம் தி வூண்ட்

இத்துணைக்கும் சொந்தக்காரர்.

-இரா.சுகுணாதேவி-

Image may contain: 1 person, eyeglasses, sunglasses and closeup
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎22‎/‎03‎/‎2017 at 9:29 PM, யாயினி said:
 

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்னும் அல்லா ர‍ஹ்ஹா ரஹ்மானும்,எல்லாப் பணமும் எனக்கே என்னும் இளையராஜாவும்: கவிஞர் தணிகை.

 
எல்லாப் புகழும் இறைவனுக்கே என்னும் அல்லா ர‍ஹ்ஹா ரஹ்மானும்,எல்லாப் பணமும் எனக்கே என்னும் இளையராஜாவும்: கவிஞர் தணிகை.

Image result for ar rahman and ilayaraja


உலகை தம் இசையால் வென்ற மேதையாய் ஏ.ஆர்.ரஹ்மான் இருக்க 2 ஆஸ்கார் விருதுகளுடன் கொடி கட்டிப்பறக்க அந்த 4 வயதில் தந்தையுடன் இசைக்கருவியை கையில் எடுத்த சிறுவன் நினைத்திருக்கவே மாட்டான்.9 வயதில் தமது தந்தையை பறிகொடுத்த அந்த சிறுவன் முயற்சியை மட்டும் கைவிடவே இல்லை.

அவனிடம் என்றுமே இருக்கும் ஒரு அடக்கம்: எல்லாப் புகழும் இறைவனுக்கே என்னும் இறை நெருக்கம்...அது ஏற்ற முடியா இன்னும் ஏற முடியா ஏணிகளையும் ஏற்றி வைத்தது இனி ஏற படிகளே பெரும்பாலும் இல்லை.அவ்வளவு உயரம்...

ஆனால் இளைய ராஜா என்னும் மாமனிதரும் ஒரு இசை மேதைதான். ஆனாலும் இவரிடம் எப்போதும் இருக்கும் தலைக்கனம். இவர் நிறைய ஆன்மீக பக்தி, கடவுள் சார்ந்த வழிபாட்டுப் பாடல்களைப் படைத்த போதும் இவர் எப்போதும் தம்மையே வியந்து பார்த்துக்கொள்ளும் குணத்தை இன்னும் விட்டார் இல்லை ஏற்கெனவே ஒருமுறை ஒரு பத்திரிகையாளரை நீ யார் என கொச்சையாய் துசாய், துரும்பாய் மதித்து அனைவரது அதிருப்தியை பெற்றுக் கொண்டார்.


Related image


இப்போது எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் விட்டு பேரைக் கெடுத்துக் கொண்டார். எல்லாவற்றுக்கும் வாரிசுகளும், பெரும்பண விளையாட்டுமே காரணம். இந்த சினிமாக்காரர் எல்லாமே யோக்யம் எல்லாம் இல்லை. இந்த எஸ்.பி.பாலசுப்ரமணியமும்தான். சரண் , கார்த்திக் இளையராஜா இவர்களுக்கு எதிர்கால பேஸ்மட்டத்தை அமைத்து தரும் இந்த போராட்டத்தில் தான் இப்படி நண்பர்கள் அசிங்கப் பட்டுப் போய் இருப்பது பேராசைக் களத்தில் பெரும் புகழுடும் பெரும்பணத்தை பெறவே பங்கு போட்டுக் கொள்ளவே இந்தப் வாய் மொழிப்போர் யாவுமே...

ஒரு தயாரிப்பாளர் முதல் போட்டு ஒரு படத்தை ஒரு இயக்குனரைத் தேர்த்நெடுத்து திரைக்கதை அமைத்து, பாடல் செய்யச் சொல்லி,இப்படி எல்லா நிலைகளிலும் ஒரு கூட்டு முயற்சியை செய்கிறார்கள், பாடல் எழுதுவோரும் இசை அமைப்பாருமாக...எல்லாம் பணத்துக்காக...

இதில் கற்பனை கலக்கிறது வார்த்தைகள் பிறக்கிறது இசை மலர்கிறது இதில் வரும் எல்லா இலாப நஷ்டம் பெரும்பாலும் எல்லாத் துறைகளையும் சார்ந்து பணி செய்தோரை பாதிக்கிறது. ஆனாலும் இலாபத்தை பெரும்பாலும் தயாரிப்பாளர் மட்டுமே எடுத்துக் கொள்கிறார் அது தோல்வி அடைந்து நஷ்டம் வந்தாலும் சம்பளம் வாங்கிய அனைவரும் தப்பித்துக் கொள்ள தயாரிப்பாளர் தற்கொலை செய்யும் நிலையெல்லாம் இந்த சினிமாவில் உண்டு.

பேருந்தில்  தமது பாடல் ஒலிபரப்பாவதை இளையராஜாவால் தடுக்க முடியாது,வானொலியில், தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பாவது,ஒளிபரப்பாவது யாவற்றையும் வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை

மேலும் சொல்லப் போனால் இவரது தனிப்பட்ட ஆல்பம் போன்ற இசைக் கோர்வை பற்றி இவர் காபி ரைட் கொண்டாடினால் அது நியாயம். அடுத்தவர் காசில் எல்லாம் செய்து விட்டு பிறர் சொத்துக்கு உரிமை கொண்டாடுவது சிந்திப்பார்க்கு விளங்கும் இளையராஜாவின் நிலைப்பாடு கேலிக் கூத்தானது என்று...

Image result for ar rahman and ilayaraja


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

உது ஒரு அபர்த்தமான கருத்துtw_angry:...ரகுமான் தன்ட கொம்பனி மூலம் அமசடக்கமாய் செய்வது எல்லாம் மற்றவர் கண்களுக்கு தெரியாது...தவிர,எஸ்பி மகனுக்காக,பணத்திற்காக என்ன எல்லாம் செய்கிறார் என்பதும் ஒருத்தருக்கும் தெரியாது[யாழில் இசை நிகழ்ச்சி செய்யும் போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சேர்த்து குடுப்பேன் என வருமானத்திற்காக பொய் சொல்லி ஏமாத்தின ஆள் தானே இவர்]...இசைஞானி இனி மேலும் பொறுக்க முடியாது என கிளம்பியவுடன் எல்லோருக்கும் கோபம் வருது...தன்னை நல்லவனாக காட்ட எஸ்பி மேடையில் நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டிய நிலை.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பஸ்ரார் ரஜனிகாந்தின் இலங்கைப் பயணம் இரத்து:- றஜனி பேசுகிறார்:-

March 25, 2017
 

R1.jpg

R2.jpgR3.jpgrajini-kabali.jpg1

 
Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

*படித்தது,நெகிழ செய்தது*

*ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத்* 
*தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும்,*
*வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்*.

*ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது*
*இடைவெளியுடன் !*

*மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் -*

*“ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள்*
*காணும் – உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம்*
*ஒன்றைப்பற்றி* *எழுதுங்கள்.”*

*மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு*
*தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்*

*வாரக்கடைசி – டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும்*
*ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற மாணவர்கள்*

*அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான*
*வார்த்தைகளை* *வரிசையாகத் தொகுத்து எழுதி கீழே தன் கையெழுத்தையும் போட்டு,*
*மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து*
*அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார்*

*மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று*
*அமர்ந்து படிக்கிறார்கள்.*

*10* *நிமிடங்கள்வகுப்பறயே*
*சந்தோஷக்கடலில்* *மிதக்கிறது*

*“நான் இவ்வளவு சிறப்பானவனா..?*
*என்னைப் பற்றி* *மற்றவர்கள் இவ்வளவு* *நல்லஅபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?”* –

*அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் !*

*அந்த பட்டியலில் *குறிப்பிடப்பட்டுள்ள*
*குணாதிசயங்களை* *மேலும் மேலும்*
*வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்*

*தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும்,சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது.*

*பல வருடங்கள் கழிகின்றன.*

*அந்த வகுப்பில் படித்தமாணவன் ஒருவன்* 
*வளர்ந்த பிறக ராணுவத்தில்*
*சேர்கிறான். பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து,* 
*மரணம் அடைகிறான்.*

*அவன் உடல் ராணுவ மரியாதையுடன்*
*சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது.*

*இறுதிச் சடங்கில்*,
*கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார்*

*மிடுக்கான ராணுவ உடையில் -*
*நாட்டின் தேசியக்கொடு போர்த்தப்பட்டு,*
*சவப்பெட்டியிலும்* *கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த* 
*மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்*.

*ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை*
*செலுத்துகின்றனர். டீச்சர் *கடைசியாகச் செல்கிறார்.*
*பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார்.*

*உடலைத் தாங்கி வந்த, ராணுவ சக வீரர்கள்*
*அருகிலேயே நின்றிருந்தனர்.*

ஒரு வீரர் கேட்கிறார் -”நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு 
டீச்சரா ?” என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்.

பின்னர் அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர் -
எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப்பற்றி
எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்”

சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத்
தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர்.

அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர்.

*அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம்* *கூறுகிறார்*

*“டீச்சர் நான் உங்களுக்கு* *ஒன்றைக் காட்ட வேண்டும்*
*இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது*
*பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”.*

*அவர் காட்டியது, பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக* -
*பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள்.*

*ஆமாம் – பல வருடங்களுக்கு*
*முன்னர் அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல*
குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !*

*கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் -*

*ரொம்ப நன்றி டீச்சர்* *உங்கள் கடிதத்தை அவன்*
*உயிரையும்விட மேலாக விரும்பினான்.*

*இத்தனை வருடங்களும்*
*அதை அவ்வளவு* *பத்திரமாக பாதுகாத்து வந்தான்.*

*அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த* *தன்னம்பிக்கையும்*, 
*பிடிப்பும் ஏற்பட இந்த* *காகிதம் தான்* *உதவியது.*

*டீச்சரும் மற்றமாணவர்களும் சரவணனை நினைத்து*
*கதறி அழுகின்றனர்..,*
*ஆம்,என் இனிய நண்பர்களே.,*

*இந்த வாழ்க்கைப் பாதை கரடு முரடானது*

எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -எப்போது, 
எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.*

*இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.*

*நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.*

*ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக்* *கொண்டிருந்தால்,*
*நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,*
*அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.*

*ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை -அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத்தவறி விடுகிறோம்.கூடாது என்றல்ல.* *அதன் அவசியம் நமக்குத்*
*தெரிவதில்லை.*

*சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக மனைவியிடம் அதைக்கூறும்* *கணவர்கள், அந்த சமையல்நன்றாக இருக்கும்போது* *–பாராட்டுவது இல்லை !*

பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை !*

*இந்த உலகில் அனைத்து உயிர்களுமே, பாராட்டுதலை எதிர்பார்க்கிறது.*

*கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !*

*நீங்களோ, நானோ -*
*யாருமே அதற்கு* *விதிவிலக்கல்ல*.

*வெளிப்படையான பாராட்டுதல்* -
*அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்.*

*நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும்*.

*தோழமை உணர்வு அதிகப்பட உதவும்.*

*மனிதர்களை மேலும் நல்லவர்களாக*
*உருவாக்க இது உதவும்

Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தைகள்!

*A - Appreciation*
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

*B - Behaviour*
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

*C - Compromise*
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.

*D - Depression*
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

*E - Ego*
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

*F - Forgive*
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

*G - Genuineness*
எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.

*H - Honesty*
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

*I - Inferiority Complex*
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

*J - Jealousy*
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.

*K - Kindness*
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

*L - Loose Talk*
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.

*M - Misunderstanding*
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

*N - Neutral*
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.

*O - Over Expectation*
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.

*P - Patience*
சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

*Q - Quietness*
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.

*R - Roughness*
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

*S - Stubbornness*
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

*T - Twisting*
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

*U - Underestimate*
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

*V - Voluntary*
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.

*W - Wound*
எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

*X - Xerox*
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

*Y - Yield*
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

*Z - Zero*
இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்.

Wishes to Everyone of you1f44d.png?1f44d.png?1f44d.png?


படித்ததிலிருந்து....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
No automatic alt text available.
 
 

இன்று உலக நாடக தினம் நாடகர்கள் அனைவர்க்கும் வாழ்த்துகள்.படத்தில் உலகமகாகவி சேக்ஸ்பியர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனங்கள்....ஆர்வமாய்ப் புதிய விஷயங்களைச் சொல்ல வருபவர்கள்கூட, விமர்சனங்கள் வந்ததும் துவண்டு விடுவார்கள்.அதனால்தான் அறிஞர் ஒருவர் சொன்னார், “புதுமையாய் சிந்திக்க அறிவு மட்டும்போதாது, துணிவும் அவசியம்” என்று. ..அனைவருக்கும் இனிய நாளாகட்டும்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person, beard
 

#புரட்சியின்_மூலதனம்

'இவனது எழுத்துக்களைப் படிக்கும்போது இவன் எழுதிக்கொண்டே இருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது.
இவனது அடிக்குறிப்புகளைப் பார்க்கும்போது இவன் படித்துக்கொண்டே இருக்ககூடாதா என்று தோன்றுகிறது' -இது கார்ல் மாக்ஸைப்பற்றி ஏங்கெல்ஸ் சொன்னது.அந்த அளவுக்குத் தான் வாழ்நாளில் பெரும் பகுதியை வாசிப்பதிலும்,எழுதுவதிலுமே கழித்தவர் கார்ல் மார்க்ஸ்.

மார்க்ஸ் கம்யூனிஸச் சித்தாந்தத்தை உருவாக்கியவர் அல்ல. அவருக்கு பல நூற்றாண்டுகக்கு முன்பே கம்யூனிஸம் இருந்தது.இன்னும் சொல்லபோனால் அவர் கனவு கண்ட'வர்கமில்லா,வேறுபாடுகள் இல்லா சமூகம்'போலத்தான் ஆரம்ப கால உலகம் இருந்தது.போகப்போக வர்க்கபேதங்களால் மனிதச் சமூகம் சிதைந்தபோதுதான்,கம்யூனிஸத் தத்துவத்தின் தேவை உருவாகியது.வரலாற்றில் சிதறிக்கிடந்த கம்யூனிஸ உதாரணங்களை தொகுத்து,நவீன கம்யூனிஸ'வடிவை உருவாக்கினார் மார்க்ஸ்.அவர் ஆயுதம் கொண்டு போராடவில்லை. தெருவில் இறங்கி போராட்ட கோஷம் போடவில்லை.சொல்ல போனால்,தன் வாழ்நாளின் பெரும் பகுதியை லண்டனில் உள்ள தன வீட்டு வாசல்படியைத் தாண்டாமலேயே கழித்தவர் அவர்.ஆனால்,அவரது சிந்தனைகள் கோடிக்கணக்கானவர்களின் மனங்களில் புரட்சியை விதைத்தது.சட்ட மாணவரான மார்க்ஸை கம்யூனிஸ்ட்டாக்கிய பெருமை ஏங்கெல்ஸையே சேரும்.

வறுமைக்கு தன் நான்கு குழந்தைகளை பறிகொடுத்த நிலையிலும் கூட ,தொழிலாளர் நலன்களுக்குத் தொடர்ந்து எழுதினார் மார்க்ஸ்.தொழிலாளர்களின் உழைப்பு எப்படி முதலாளிகளின் லாபமாக மாற்றபடுகிறது,எப்படிஎல்லாம் தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதைபற்றி மார்க்ஸ் எழுதிய 'மூலதனம்'தான் இன்றளவும் பொருளாதார அரசியலின் பைபிள்.புகழ்பெற்ற 'கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை'யில் மார்க்ஸின் கடைசி வரிகள் இப்படி இருந்தன-

'சிந்தனையாளர்கள் பெரும்பாலும் உலகத்தை விளக்குகிறவர்களாக இருக்கறார்கள்.ஆனால்,நமது வேலை உலகத்தை மாற்றியமைப்பதுதான்'.

மார்க்ஸ் மாற்றிக்காட்டினார்!

படித்ததிலிருந்து...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்தொன்பதாவது ஆண்டில் கால் பதிக்கும் யாழுக்கு என் இனிய நல் வாழ்த்துக்கள்..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Toronto காவல்துறையினரின் எச்சரிக்கை

ஜோதிடம் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை உள்ளவர்கள் கொஞ்சம் அவதானமாக படியுங்கள்

 · 
 
Image may contain: 1 person, beard and closeup
Thesiyam
 

இன்று (வியாழக்கிழமை) Toronto காவல்துறையினர் மோசடி குறித்த விசாரணையின் எதிரொலியாக மேற்கொள்ளப்பட்ட கைது குறித்து பொது மக்களுக்கான அறிவித்துள்ளனர்.

சூனியம், மிரட்டி பணம் பறித்தல், மற்றும் மோசடி குறித்த குற்றசாட்டில் இந்தியாவில் இருந்து வந்து கனடாவில் தங்கியுள்ள 37 வயதான முரளி முதயலு (Murali Muthyalu) என்பவரை நேற்று (March 29) கைது செய்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இவர் February மற்றும் March மாதங்களில் தன்னை ஒரு ஜோதிடர் என விளம்பரப்படுத்தியுள்ளார்.

இவர் தன்னிடம் ஜோதிட சேவைக்காக சென்ற 44 வயதான ஒருவரிடம் அவரது ஒரு உடம்பு குடும்ப உறுப்பினர் ஒரு தீய ஆவியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தீய ஆவியை அகற்றுவதற்கு $101,000 அறவிட்டுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது.

இவர் மாஸ்டர் ராகவ் (Master Raghav) என்ற மாற்று பெயரை பயன்படுத்தி வந்ததாகவும் கூறியுள்ள காவல்துறையினர் இவர் குறித்த தகவல் அறிந்தவர்கள் தம்மை தொடர்புகொள்ளுமாறு கோரியுள்ளார்.

The Toronto Police Service would like to inform the public of an arrest in an ongoing Fraud investigation.

It is alleged that:

- during February and March 2017, a man advertised his services as an astrologer and psychic

- a 44-year-old man attended his business for psychic services and was told a sick family member had been the victim of an evil spirit

- the man was charged $101,000 to remove this evil spirit

On Wednesday, March 29, 2017, Murali Muthyalu, 37, a visitor from India, was arrested. He is charged with:

1) Practise Witchcraft
2) Fraud Over $5,000
3) Extortion

The man allegedly used an alias of Master Raghav. Anyone having dealings with this man is requested to contact police.

Call Toronto Police @ 416-808-5500,

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.