Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

11058719_1462055840751011_75736833166062

 

 

தமிழனுக்கு புகழாரம் சூட்டிய சிங்கப்பூரின் தந்தை இன்று மரணம் மனவேதனையோடு அவரின் உரையிலிருந்து இதை கண்ணீரோடு வெளியிடுவதோடு மறைந்த சிங்கப்பூரின் தந்தை முன்னால் பிரதமர் லீ குவான் யூவிற்கு பிரித்தானிய ஈழத்தமிழர் படை கண்ணீர் அஞ்சலியை செலுத்துகின்றது.

”பணிந்து போக தமிழன் என்ன நனைந்த கோழியா?” – சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ உணர்ச்சிப்பெருக்கம்!

சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடி ஒழிந்து விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத்தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் சிங்களவர்கள், தமிழர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள் எனக்குறிப்பிட்டுள்ள சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, தமிழர்களுக்குத்தனி நாடே தீர்வாகும்! எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“லீ குவான் யூவுடனான உரையாடல்கள்” என்ற தலைப்பில் லொஸ் ஏஞ்சல்ஸைச்சேர்ந்த பேராசிரியர் ரொம் பிளேட் நூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்த நூலிலேயே “சிங்கப்பூரின் நவீன சிற்பி” என்று அழைக்கப்படும் சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

சிங்களவர்கள் இலங்கையில் இருந்த காலம் முதல் தமிழர்களும் இருந்து வருகின்றனர். இருப்பினும் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் அங்கு இல்லை. இலங்கை ஒரே நாடாக இருக்கும் வரையில் மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. இலங்கையில் தமிழர்களுக்காகப்போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இலங்கையில் இன பிரச்சினைக்குத்தீர்வு காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த குறிப்பிட்டு வருகின்றார். இதனையே எல்லோரும் ஏற்கவும், நம்பவும் வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார்.

வீழ்ந்து விடா வீரம்! மண்டியிடா மானம்!

ஈழத்தமிழர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடவும் மாட்டார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்திருந்தாலும் சிறுபான்மையினராகிய தமிழர்களை வெல்லும் தகுதியும் துணிச்சலும் சிங்களவர்களுக்கு நிச்சயம் இல்லை. எல்லாவற்றையும் விட யாழ்ப்பாணத்தமிழர்களை சிங்களவர்களால் நிச்சயம் ஒரு போதும் வெல்லவே முடியாது. அதனால் தான் தமிழர்களை எல்லா வழிகளிலும் நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள்.

சிங்களவர்கள் முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் மிகப்பெரும் ஆயுதப்போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முனைகின்றார்கள். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அழித்து விட முடியும் என்ற சிங்களவர்களின் எண்ணம் நிச்சயம் நிறைவேறாது.

நடந்ததும், நடப்பதும் இன அழிப்பே!

இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான இன அழிப்புத்தான். இதனால் தமிழர்கள் மீண்டும் ஆயுதப்பேராட்டத்தை தொடங்குவார்களா? என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள். சிங்களவர்களை விட தமிழர்களுக்கே அதிகளவான மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடி ஒழிந்து விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத்தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் சிங்களவர்கள், தமிழர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள் எனக்குறிப்பிட்டுள்ள சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, தமிழர்களுக்குத்தனி நாடே தீர்வாகும்! எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“லீ குவான் யூவுடனான உரையாடல்கள்” என்ற தலைப்பில் லொஸ் ஏஞ்சல்ஸைச்சேர்ந்த பேராசிரியர் ரொம் பிளேட் நூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்த நூலிலேயே “சிங்கப்பூரின் நவீன சிற்பி” என்று அழைக்கப்படும் சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

சிங்களவர்கள் இலங்கையில் இருந்த காலம் முதல் தமிழர்களும் இருந்து வருகின்றனர். இருப்பினும் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் அங்கு இல்லை. இலங்கை ஒரே நாடாக இருக்கும் வரையில் மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. இலங்கையில் தமிழர்களுக்காகப்போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இலங்கையில் இன பிரச்சினைக்குத்தீர்வு காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த குறிப்பிட்டு வருகின்றார். இதனையே எல்லோரும் ஏற்கவும், நம்பவும் வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார்.

வீழ்ந்து விடா வீரம்! மண்டியிடா மானம்!

ஈழத்தமிழர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடவும் மாட்டார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்திருந்தாலும் சிறுபான்மையினராகிய தமிழர்களை வெல்லும் தகுதியும் துணிச்சலும் சிங்களவர்களுக்கு நிச்சயம் இல்லை. எல்லாவற்றையும் விட யாழ்ப்பாணத்தமிழர்களை சிங்களவர்களால் நிச்சயம் ஒரு போதும் வெல்லவே முடியாது. அதனால் தான் தமிழர்களை எல்லா வழிகளிலும் நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள்.

சிங்களவர்கள் முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் மிகப்பெரும் ஆயுதப்போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முனைகின்றார்கள். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அழித்து விட முடியும் என்ற சிங்களவர்களின் எண்ணம் நிச்சயம் நிறைவேறாது.

நடந்ததும், நடப்பதும் இன அழிப்பே!

இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான இன அழிப்புத்தான். இதனால் தமிழர்கள் மீண்டும் ஆயுதப்பேராட்டத்தை தொடங்குவார்களா? என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள். சிங்களவர்களை விட தமிழர்களுக்கே அதிகளவான மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்றார்

11080528_10153806011374237_7163980643605

 

 

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் "லீ குவான் யூ" பற்றி.... தெரியாத பல விடயங்களை, உங்கள் பதிவு  மூலம் அறிந்து கொண்டேன்.

யாயினி, உங்கள் தேடல்கள் அருமையானவை.

Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

யூரி ககாரின்

Yuri Gagarin

Юрий Гагарин

 

Yuri_Gagarin_official_portrait.jpg

 

 

யூரி அலெக்சியேவிச் ககாரின் (ரஷ்ய மொழி: Юрий Алексеевич Гагарин> மார்ச் 9. 1934 - மார்ச் 27. 1968) விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். 
 
அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் ஏப்ரல் 12. 1961 அன்று சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக் - 1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.
 
யூரி ககாரின் மாஸ்கோ மாநகருக்கு மேற்கே க்ஸாட்ஸ்க் பகுதியில் உள்ள குளூஷினோ என்னும் இடத்தில் மார்ச் 9. 1934 இல் பிறந்தார். இப்பகுதி பின்னர் ககாரின் எனப் பெயரிடப்பட்டது. இவரது பெற்றோர் கூட்டு விவசாயப் பண்ணை ஒன்றில் கடமையாற்றியவர்கள். சரடோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று அங்கு மென் விமான ஓட்டுநராக பகுதிநேரங்களில் பயிற்சி பெற்றார். 1955 இல் ஒரென்பூர்க் விமா ஓட்டுநர் பாடசாலையில் (Orenburg Pilot's School) இல் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்று வெளியேறினார். அங்கு வலென்டினா கொர்யசோவா என்பவரை சந்தித்து 1957 இல் திருமணம் புரிந்தார். அவரது முதல் பணி நோர்வே எல்லையிலுள்ள மூர்மன்ஸ்க் பகுதியில் உள்ள இராணுவ விமானத்தளத்தில் ஆரம்பமானது.
 
1960 இல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளித் திட்டத்தில் இணந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார் யூரி. இவர்களுக்கு அங்கு உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சி கொடுக்கப்பட்டது. கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தெரிவானார்கள். இவர்களில் ககாரின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீடத்தால் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்காகத் தெரிவு செய்யப்பட்டார்.
 
ககாரின் ஏப்ரல் 12, 1961 இல் வஸ்தோக் 3KA-2 (வஸ்தோக் 1) விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டார். விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார். அவரது விண்கலம் 1:48 மணி நேரம் பறந்து, பூமியைக் குவிமையப்படுத்தி நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit], நெடுஆரம் [Apogee] 203 மைல், குறுஆரம் [Perigee] 112 மைல் உச்சியில் சுற்றி வந்தது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுஅறிவு

NEWS PAPER
 
N-NORTH
 
E-EAST
 
W-WEST
 
S-SOUTH
 
P-PAST   
    
A-AND
 
P-PRESENT
 
E-EVENT
 
R-REPORT

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சுவாமி விபுலாநந்தர் ...

 

Vipulanandar.jpg

 

 

சுவாமி விபுலாநந்தர் (மார்ச் 27, 1892 - ஜூலை 19, 1947) கிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை சனிக்கிழமை...(28.03.15) இரவு, ஒரு மணித்தியாலம் மின்சாரம் சேமிக்கும் தினம்.
அதன் படி.... ஒவ்வொருவரும்  தம் வீட்டில்... மின்சாரம் இல்லாமல் வாழ வேண்டும் என்று...
ஒரு அமைப்பு சொல்லியுள்ளது. அதன் நன்மை, பாதகமான... இணைப்புக்களையும் தேடித் தாருங்களேன்... யாயினி. :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Canada set to go dark for Earth Hour

 

image.jpg

TORONTO - Canadians will be joining people around the world tonight in turning off their lights to mark Earth Hour.

Earth Hour was started in Australia in 2007 as a way to draw attention to environmental issues like climate change.

It has grown to a worldwide event involving 162 countries.

The event has been embraced by Canadian utilities, with many devoting space on their websites to the annual event.The main organizer, the World Wildlife Fund, is asking people to turn off their lights at 8:30 p.m. local time.

B.C. Hydro, for example, noted that for Earth Hour last year British Columbians reduced the provincial electricity load by one per cent -- the equivalent of turning off about 1.4 million lights.

Link to comment
Share on other sites

இன்றிரவு வட அமெரிக்காவில் 8:30 முதல் 9:30 வரை மின்விளக்குகளை அணைத்து பங்குபற்றுங்கள்.. அடுத்த வருடம் வீட்டுச்செலவு கூடினால் அதற்கு நாம் பொறுப்பல்ல. :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனவரி

26 - உலக சுங்க தினம்

30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

பிப்ரவரி

14 - உலக காதலர் தினம்

மார்ச்

08 - உலக பெண்கள் தினம்

15 - உலக நுகர்வோர் தினம்

20 - உலக ஊனமுற்றோர் தினம்

21 - உலக வன தினம்

22 - உலக நீர் தினம்

23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்

24 - உலக காசநோய் தினம்

28 - உலக கால்நடை மருத்துவ தினம்

ஏப்ரல் 

05 - உலக கடல் தினம்

07 - உலக சுகாதார தினம்

12 - உலக வான் பயண தினம்

18 - உலக பரம்பரை தினம்

22 - உலக பூமி தினம்

30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

மே

01 - உலக தொழிலாளர் தினம்

03 - உலக சக்தி தினம்

08 - உலக செஞ்சிலுவை தினம்

12 - உலக செவிலியர் தினம்

14 - உலக அன்னையர் தினம்

15 - உலக குடும்ப தினம்

16 - உலக தொலைக்காட்சி தினம்

24 - உலக காமன்வெல்த் தினம்

29 - உலக தம்பதியர் தினம்

31 - உலக புகையிலை மறுப்பு தினம்

ஜீன்

04 - உலக இளம் குழந்தைகள் தினம்

05 - உலக சுற்றுப்புற தினம்

18 - உலக தந்தையர் தினம்

23 - உலக இறை வணக்க தினம்

26 - உலக போதை ஒழிப்பு தினம்

27 - உலக நீரழிவாளர் தினம்

28 - உலக ஏழைகள் தினம்

ஜீலை

01 - உலக மருத்துவர்கள் தினம்

11 - உலக மக்கள் தொகை தினம்

ஆகஸ்ட்

01 - உலக தாய்ப்பால் தினம்

03 - உலக நண்பர்கள் தினம்

06 - உலக ஹிரோஷிமா தினம்

09 - உலக நாகசாகி தினம்

18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்

செப்டம்பர்

08 - உலக எழுத்தறிவு தினம்

16 - உலக ஓசோன் தினம்

18 - உலக அறிவாளர் தினம்

21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்

26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்

27 - உலக சுற்றுலா தினம்

அக்டோபர்

01 - உலக மூத்தோர் தினம்

02 - உலக சைவ உணவாளர் தினம்

04 - உலக விலங்குகள் தினம்

05 - உலக இயற்கைச் சூழல் தினம்

08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்

09 - உலக தபால் தினம்

16 - உலக உணவு தினம்

17 - உலக வறுமை ஒழிப்பு தினம்

24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்

30 - உலக சிந்தனை தினம்

நவம்பர்

18 - உலக மனநோயாளிகள் தினம்

19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்

26 - உலக சட்ட தினம்

டிசம்பர்

01 - உலக எய்ட்ஸ் தினம்

02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்

10 - உலக மனித உரிமைகள் தினம்

14 - உலக ஆற்றல் தினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில எழுத்துக்களின் அதிசயம்!

 

abcd.jpg

 

ஆங்கில எழுத்துக்களில் A, B, C & D எனும் நான்கு எழுத்துக்களும் ஒன்றில் தொடங்கி 99 வரையிலான எண்களுக்கான ஆங்கிலச் சொற்களில் (spellings) இடம் பெறவில்லை. முதல் முறையாக Hundred என்ற சொல்லில் D எனும் எழுத்து இடம் பெற்றிருக்கிறது.

ஆங்கில எழுத்துக்களில் A, B & C எழுத்துக்கள் ஒன்றில் தொடங்கி 999 வரையிலான எண்களுக்கான ஆங்கிலச் சொற்களில் எங்கும் இடம் பெறவில்லை. முதல் முறையாக Thousand என்ற சொல்லில் A எனும் எழுத்து இடம் பெற்றிருக்கிறது.

ஆங்கில எழுத்துக்களில் B & C எழுத்துக்கள் ஒன்றில் தொடங்கி 999,999,999 வரையிலான எண்களுக்கான ஆங்கிலச் சொற்களில் எங்கும் இடம் பெறவில்லை. முதல் முறையாக Billion என்ற சொல்லில் B எனும் எழுத்து இடம் பெற்றிருக்கிறது.

இன்னொரு சுவையான தகவல் C எனும் எழுத்து எந்த எண்ணிற்கான சொல்லிலும் இல்லை.

 

-கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கத்தோடு...பதின் ஏழாவது ஆண்டில் கால் பதிக்கும் யாழுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..இன்னும் பல்லாண்டு யாழ் எங்களோடு நிலைத்து இருக்க வேண்டுகின்றேன்.இது எனது அவா..

 

yarl17.jpg

congratulations-clipart-congratulations-

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் மிதந்து வந்த ரதம்: அச்சத்தில் உறைந்த மக்கள் [ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 04:45.31 PM GMT +05:30 ] ratham_001.jpgராமநாதபுர மாவட்டத்தில் ரதம் ஒன்று கடலில் மிதந்து வந்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள காரங்காடு கடற்கரை கிராமத்தில் உள்ள கடலில் மிதந்து வந்த சுமார் 3 அடி உயர ரதம் ஒன்று கரை ஒதுங்கியது.

பட்டுத் துணிகளால் சுற்றப்பட்ட ரதத்தில், மண்பானை ஒன்றும், ஜாக்கெட் ஒன்றும் இருந்தன. பார்ப்பதற்கு பில்லி சூனிய விவகாரம் போல இருந்ததால், அச்சமடைந்த அப்பகுதி மக்கள் கடற்கரையில் கூடிவிட்டனர்.

ரதத்தில் ‘நாகம்மா ரதம், புங்குடுதீவு’ என தமிழில் எழுதப்பட்டிருந்தது.

மேலும் அதில் ஒரு கைப்பேசி நம்பரும் எழுதப்பட்டிருந்தது. அந்த நம்பரை தொடர்புகொண்டபோது, மறுமுனையில் பேசிய நபர், இலங்கை புங்குடுதீவில் உள்ள நாகம்மா கோயிலில் இருந்து ரதம் விட்டோம், உங்கள் பகுதிக்கு வந்து விட்டது, அதை கடலிலேயே விட்டு விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

 

 


இது எனது  அம்மம்மாவின் ரதம்.

Edited by யாயினி
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் மிதந்து வந்த ரதம்: அச்சத்தில் உறைந்த மக்கள் [ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 04:45.31 PM GMT +05:30 ] ratham_001.jpgராமநாதபுர மாவட்டத்தில் ரதம் ஒன்று கடலில் மிதந்து வந்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள காரங்காடு கடற்கரை கிராமத்தில் உள்ள கடலில் மிதந்து வந்த சுமார் 3 அடி உயர ரதம் ஒன்று கரை ஒதுங்கியது.

பட்டுத் துணிகளால் சுற்றப்பட்ட ரதத்தில், மண்பானை ஒன்றும், ஜாக்கெட் ஒன்றும் இருந்தன. பார்ப்பதற்கு பில்லி சூனிய விவகாரம் போல இருந்ததால், அச்சமடைந்த அப்பகுதி மக்கள் கடற்கரையில் கூடிவிட்டனர்.

ரதத்தில் ‘நாகம்மா ரதம், புங்குடுதீவு’ என தமிழில் எழுதப்பட்டிருந்தது.

மேலும் அதில் ஒரு கைப்பேசி நம்பரும் எழுதப்பட்டிருந்தது. அந்த நம்பரை தொடர்புகொண்டபோது, மறுமுனையில் பேசிய நபர், இலங்கை புங்குடுதீவில் உள்ள நாகம்மா கோயிலில் இருந்து ரதம் விட்டோம், உங்கள் பகுதிக்கு வந்து விட்டது, அதை கடலிலேயே விட்டு விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

இது எனது  அம்மம்மாவின் ரதம்.

 

அட... யாயினியின் அம்மம்மாவின் ரதம்,

இந்திய, இலங்கை கடற்படைகளின் கண்களில் படாமல், இராம நாதபுரம் வரை சென்று...

அந்த ஊர் மக்களையும் ஆச்சரியப் படுத்தி, பத்திரிகை செய்தி ஆகிவிட்டது.

நல்ல, ஆச்சரியமான செய்தி. :)

 

அந்த ஜக்கெற் ஏன்... அந்த ரதத்தில் வைக்கப்பட்டது யாயினி. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்...

 

இனிய காலை வணக்கம்....

 

 

10257912_622083914537428_235810399333970

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
இன்று முட்டாள்கள் தினம்....யாராச்சும் உங்களை முட்டாளாக்கினார்களா......
 
 
10171041_486264748144966_914645970_n.jpg

எப்படி வந்தது முட்டாள் தினம்?

ஏப்ரல் முதல் தேதி, உலகமெங்கும் முட்டாள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று யாரை ஏமாற்றி 'முட்டாள்' ஆக்கினாலும், அவர்கள் கோபித் துக்கொள்ள மாட்டார்கள். முட்டாள்களுக்காக ஒரு தினம் கொண்டாடவேண்டும் என்ற யோசனையை வெளியிட்டவர் பாஸ்வெல் என்பவர்தான்!

சூரிய வழிபாட்டுக்கும் இந்த விழாக் கொண்டாட் டத்திற்கும்கூடச் சம்பந்தம் இருப்பதாகப் பழைய நூல்களிலிருந்து தெரிய வருகிறது.

ஆதி குடிகளான ஸெல்ட் சாதியினர், லியூ என்ற சூரியக் கடவுளைக் குறித்து இந்த வசந்த விழாவைக் கொண்டாடினர். இதில் முக்கிய அம்சம், ஒருவர் மற்றொருவரை ஏமாற்றிக் கிண்டல் செய்வதாகும்.

இப்படி முட்டாளாக்கப்படுபவர்களை பிரான்ஸில் 'ஏப்ரல் ஃபிஷ்(மீன்)' என்றழைக்கிறார்கள். அக்காலத்தில் ஏப்ரலுக்கு ஏப்ரல் ஆங்கில வருடப்பிறப்பு கொண்டா டப்பட்டு வந்தது. அந்த வருடப் பிறப்பன்று பிறரை முட்டாள்களாக்கிக் குதூகலமாகக் கொண்டாடி வந்தனர். ஏப்ரல் முட்டாள் விளையாட்டுக்களெல்லாம் அன்று காலை வேளையில் மட்டும்தான் செய்யப்பட வேண்டும். மாலையில் கிண்டல் செய்தால், கிண்டல் செய்பவரேதான் முட்டாள்!

இதைக் குறிப்பிடும் ஒரு கவிதை...

'மார்ச் மறைந்தது; ஏப்ரல் வந்தது. நீதான் முட்டாள்; நானில்லை!' (March has gone and April comes; you are a fool and I’m none...

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட... யாயினியின் அம்மம்மாவின் ரதம்,

இந்திய, இலங்கை கடற்படைகளின் கண்களில் படாமல், இராம நாதபுரம் வரை சென்று...

அந்த ஊர் மக்களையும் ஆச்சரியப் படுத்தி, பத்திரிகை செய்தி ஆகிவிட்டது.

நல்ல, ஆச்சரியமான செய்தி. :)

 

அந்த ஜக்கெற் ஏன்... அந்த ரதத்தில் வைக்கப்பட்டது யாயினி. :rolleyes:

 
இது தான் அந்த தேர்..
 

 

11128168_10204033845581719_9114071416792

 

 

இந்த ரதம் பிரச்சனைக்கு உரியவர்களது கண்ணில் படாமல் இராமேஸ்வரம் வரை சென்றது,எல்லோருக்கும் ஆச்சரியமான செய்தியாகத் தான் இருக்கிறது..மற்றபடி அந்த ரதத்தில் ஜாக்கெட் எல்லாம் வைக்கப்பட இல்லை...சீலை,சட்டை தான் வைத்து விட்டதாக சொல்கிறார்கள்..இந்திய மக்கள் சாறிசட்டையை ஜாக்கெட் என்று அழைப்பது வழமையாம்..அவ்வாறே ஆச்சியின் சாறி சட்டையையும்  ஜாக்கெட் என்று எழுதி இருக்கிறார்கள்...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 
இது தான் அந்த தேர்..
 

 

11128168_10204033845581719_9114071416792

 

 

இந்த ரதம் பிரச்சனைக்கு உரியவர்களது கண்ணில் படாமல் இராமேஸ்வரம் வரை சென்றது,எல்லோருக்கும் ஆச்சரியமான செய்தியாகத் தான் இருக்கிறது..மற்றபடி அந்த ரதத்தில் ஜாக்கெட் எல்லாம் வைக்கப்பட இல்லை...சீலை,சட்டை தான் வைத்து விட்டதாக சொல்கிறார்கள்..இந்திய மக்கள் சாறிசட்டையை ஜாக்கெட் என்று அழைப்பது வழமையாம்..அவ்வாறே ஆச்சியின் சாறி சட்டையையும்  ஜாக்கெட் என்று எழுதி இருக்கிறார்கள்...

 

 

புதுமையாக இருக்கின்றது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Good morning  .... 

Have a nice day

 

1965500_919149218125853_3254208788039033

கனவுகளையும் கற்பனைகளையும்

நான் வெறுக்கிறேன் ,

அவை எத்தனை அழகாயினும்

நிழல்களின் ஒப்பந்தங்களை விட

நிஜங்களின் போராட்டமே.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
    • தனிப்பட்ட செல்வாக்கு? அதே போல் கன்யாகுமரியில் பொன் ராதா வுக்கும் வாய்பிருப்பதாக தெரிகிறது.    
    • எங்களுடைய கட்சியின் பலம் பலவீனங்களை நாங்கள் சொல்லிக் கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S.Shritharan) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது தமிழரசுக் கட்சிக்குள்ளே பல இடைவெளிகள் அதிகரித்திருக்கின்றன என்பது உண்மைதான். திகதியை மறுத்த சுமந்திரன் அடுத்தடுத்த கலந்துரையாடல்கள் ஜனவரி மாதம் 10ஆம் திகதி நாங்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் ஒன்றினை கொழும்பில் உள்ள சம்பந்தன்(R.Sampanthan) ஐயாவின் வீட்டிலே நடத்தியிருந்தோம்.                                சில முரண்பாடான நிலைகள் தொடர்பில் இதன்போது கலுந்துரையாடப்பட்டது. இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட நான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M.A.Sumanthiran) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் உள்ளிட்டோர் மறுதினம்(11 ஜனவரி) என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான இடத்தில் கலந்துரையாடியிருந்தோம். அதன் பின்னர் மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் நான் ஒரு திகதி கூறியிருந்தேன். சுமந்திரன் அதனை மறுத்து மற்றுமொரு திகதி குறிப்பிட்டார். எனினும் மத்திய செயற்குழு கூட்டம் நிறுத்தப்பட்டது. மாவை சேனாதிராஜா தான் நிறுத்தவில்லை என்று தெரிவித்ததுடன், மருத்துவர் சத்தியலிங்கம் பேசும் நிலையிலேயே இல்லை. இதற்கிடையில் பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.    https://tamilwin.com/article/ilangai-tamil-arasuk-katchi-current-issues-1713545072
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.