Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

go bag அதற்குள் பிஸ்கட் , தண்ணீர் போத்தல் முதலுதவி பொருட்கள் ................

 

11261913_1104246736257349_43821945607669

Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர்க் கந்தன் 20ம் திருவிழாவிலிருந்து சில படங்கள்.......

 

11999070_1172291169452905_9042889834262611988330_1172291166119572_4775279720971811921778_1172291179452904_4146815581286411988601_1172291132786242_9028480740925711958261_1172291112786244_4647545124103310633434_1172291162786239_58891917361628

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக எழுத்தறிவு நாள்

 

12006187_182835435381237_691010030936698

 

அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும் செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்..

உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத,, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.

யுனெஸ்கோவின் "அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)" அறிக்கையின்படி  தெற்கு மற்றும் மேற்கு ஆசியாப் பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந்தோரில்) (58.6%) படிப்பறிவில்லாமல் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள் ஆபிரிக்கா (59.7%), அரபு நாடுகள் (62.7%). தனிப்பட்ட நாடுகளை எடுத்துக் கொண்டால் மிகக் குறைந்த எழுத்தறிவில்லாதோர் புர்கினா பாசோ (12.8%), நைஜர் (14.4%), மாலி (19%). அறிக்கையின் படி எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.

 

 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

உலகளாவியரீதியிலான சில பிறந்தநாள் சம்பிரதாயங்கள்....

 
 
ஒவ்வொருவரின் வாழ்விலும் பிறந்தநாள் முக்கியமானதானதொன்றாகும்.  தமது கடந்த காலத்தினை மீட்டு எதிர்காலத்திற்கு காலடி எடுத்து வைப்பதற்கு பிறந்தநாள் என்பது விசேடத்துவமானதொன்று எனலாம்.
அந்தவகையில் உலகளாவியரீதியிலான சில பிறந்தநாள் சம்பிரதாயங்கள் வருமாறு;
 
நண்பர்களுக்கான என் பிறந்தநாள் பரிசாக இந்தப் பதிவு...
 
Ø  இங்கிலாந்து  நாட்டில் ஒருவர் 80, 90 அல்லது 100 வயதினைக் அடைகின்றபோது அவர் மகாராணியாரிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்து தந்தியினை பெற்றுக்கொள்வார்.
 
The+Queen+in+Green.jpg
 
 
Ø  கொரிய நாட்டில் இரண்டு பிறந்தநாட்கள் முக்கியமானதாகும். 100வது நாள் மற்றும் 60வது வருடப் பிறந்தநாள் ஆகியவையாகும்.
 
Ø  சீனாவில் பிறந்தநாள் அன்பளிப்பாக கடிகாரத்தினை வழங்குவதனை தவிர்த்துவிடுகின்றனர். சீன மண்டேரியன் மொழியில் "கடிகாரம்" என்ற பதமானது இறப்பு என்ற பதத்தினை ஒத்தவொன்றாக கருதுகின்றனர். மேலும் சீன நாட்டினர் பரிசுப்பொருட்களினைப் சுற்றுவதற்கு வெள்ளை, கறுப்பு, நீல  நிறங்களினை உபயோகிப்பதில்லை.
 
Ø  இஸ்லாமிய உலகில், பரிசுப்பொருட்களினைப் சுற்றுவதற்கு பச்சை நிறம் நல்லதென கருதுகின்றனர்.
 
Ø  வியட்னாம் நாட்டினர் தமது பிறந்தநாளினை தமது "டெட் புத்தாண்டு(Tet)"ஆரம்பத்திலேயே கொண்டாடுகின்றனர்.
 
Ø  உலகில் அதிகமானோர் ஏனைய மாதங்களினைவிடவும் ஆகஸ்ட் மாதத்திலேயே தமது பிறந்தநாளினைக் கொண்டாடுகின்றனராம். (உலக மக்களில் 9%) இந்த வரிசையில் அடுத்த இடத்தினைப் பெறுவது ஜூலை, செப்டெம்பர் மாதங்களாகும்.
 
Ø  உலகில் மிக செலவான பிறந்தநாள் கொண்டாட்டமாக 1996 ஜூலை 13ம் திகதி புருணை சுல்தானின் 50வது பிறந்தநாள் விளங்குகின்றது. இந்தக் கொண்டாட்டத்திற்கு 27.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு ஏற்பட்டதாம். இச்செலவில் 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பொப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சனின் 3 இசை நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்பட்டதாம்.
 
Ø  பிரித்தானிய மகாராணியாரின் பிறந்தநாளானது பொதுநலவாய அங்கத்துவ நாடுகளான இங்கிலாந்தில் ஜூன் முதலாவது சனிக்கிழமையும், நியூசிலாந்தில் ஜூன் முதலாவது திங்கட்கிழமையும், கனடாவில் மே மாத மத்தியிலும் கொண்டாடப்படுகின்றது. எலிசபெத் மகாராணி பிறந்தது 1926ம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதியாகும்.
 
Ø  ஒவ்வொரு நாளும் உலகில் சராசரியாக 19 மில்லியன் மக்கள் தமது பிறந்தநாளினைக் கொண்டாடுகின்றனராம்.
 
Ø  ஜப்பான் நாட்டில், வழமையாக 60, 70, 79, 88 மற்றும் 99 வது பிறந்த நாளுக்கே பரிசில்களினை வழங்குகின்றனர். அவ்வாறு வழங்கப்படுகின்ற பிறந்தநாள் பரிசுப்பொருட் தொகுதியில் 10இலும் குறைந்த ஒற்றை எண்களில் பரிசுப்பொருட்கள் இருக்குமாம். வழமையாகவே ஜப்பான் நாட்டினர் 4 மற்றும் 9ம் இலக்கங்களை தவிர்ப்பதுடன் வெள்ளை நிறத்தால் சுற்றப்பட்ட பரிசுப்பொருட்களை இறப்புடன் தொடர்புடையதாக கருதுகின்றனர்.
 
Ø  ஜேர்மன் நாட்டினர், தமது பிறந்தநாளினை கருத்தூன்றிய ஒன்றாக எடுத்துக்கொள்கின்றனர். இதனால் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் அரை நாள் விடுமுறையினைக்கூட எடுத்துக்கொள்கின்றனர்.  பூக்கள் மற்றும் வைன் ஆகியவை நண்பர்களிடையேயான பொதுவான பரிசுப்பொருட்களாக உள்ளது.
 
Ø  "ஹெப்பி பேர்த் டே" பாடல் முதன்முதலில் விண்வெளியில் 1969ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி அப்பலோ9 விண்வெளி வீரர்கள் பாடப்பட்டது.
                
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இழந்துபோன நம் எச்சம் "பிராம்பனான் கோயில்"!!

இந்தோனேசியாவின் ஜாவாப் பகுதியில் அமைந்துள்ள "பிராம்பனான் கோயில்" இந்தோனேசியாவின் மிகப்பெரிய இந்துக் கோயில் ஆகும். நம் தமிழிலக்கியங்களில் "சாவகம்" என்று அறியப்படும் ஜாவாவை, கி.பி 850களில் ஆண்ட சஞ்சய வம்சத்து சைவ மன்னர்களால் கட்டப்பட்ட சிவன் கோயில் இது! பின்னாளில் அச்சிவன் கோயிலின் இருபுறமும், திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் ஆலயங்கள் கட்டப்பட்டு இன்று "மும்மூர்த்திகள் கோயில்" என்றே பிராம்பனான் அறியப்படுகின்றது.

மும்மூர்த்திகளுக்கு மட்டுமன்றி, சுற்றிவர 250இற்கும் மேல் பரிவாரங்களுக்கு சிற்றாலயங்கள் கட்டப்பட்டு, இன்று, அவையெல்லாம் சிதைந்தொழிந்து போய் வெறும் அத்திவாரங்களாகக் கிடக்கின்றன. அண்மையில், யுனெஸ்கோவால் அது உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக (World Heritage Site)அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரமாண்டுகளுக்கு முன், இந்தோனேசியா கூட சைவம் செழித்து நின்ற பூமி என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்? வெறும் பெருமூச்சு மட்டுமே எஞ்சுகின்றது. 

 

 

11987162_1672687049618218_64063070078469

 

 

frown emotic

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

"Happy Birthday to You" பிறந்தநாள் பாடல் தோன்றிய வரலாறு....!!!

 
உலகம் முழுவதும் பலரால் பாடப்படும் பாடல் எது என்று தெரியுமா?... "Happy Birthday to You" என்ற பிறந்தநாள் பாடல்தான். இந்தப் பாடலினை 1893ம் ஆண்டு அமெரிக்க ஆசிரியைகள் இருவர் தங்களது மாணவிகளுக்காக இயற்றினார்கள்.

இந்தப் பாடலினை இயற்றியது சகோதரிகளான மில்ட்ரெட் ஜே.ஹில்[Mildred J. Hill] மற்றும் பட்ரி ஸ்மித் ஹில்[Patty Smith Hill]ஆகியோராவர். இவர்கள் அமெரிக்காவின் கென்டெக்கி மாநிலத்தில் லூயிஸ்விள்ளே நகரில் பிறந்தவர்களாவர்.

"Happy Birthday to You" என்ற பிறந்தநாள் பாடலுக்கான இராகமானது மில்ட்ரெட் ஜே.ஹில்லினால் இயற்றப்பட்டதுடன், பல்லவியானது பட்ரி ஸ்மித் ஹில்லினால் எழுதப்பட்டதாகும்.

"Happy Birthday to You" என்ற பிறந்தநாள் பாடல் 1893ம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்டிருந்தாலும், இந்தப் பாடலுக்கு 1935ம் ஆண்டுதான் காப்புரிமை பெறப்பட்டு, 1963ம் ஆண்டு இந்த காப்புரிமை புதுப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

1988ம் ஆண்டு Birch Tree Group,Ltd என்கின்ற நிறுவனமானது இந்தப் பாடலின் உரிமையினை Warner Communications என்கின்ற நிறுவனத்துக்கு 25மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு[ஏனைய எல்லா சொத்துக்களும் உள்ளடங்களாக]விற்பனை செய்தது.
 

பிறந்தநாளைக் "கேக்" வெட்டிக் கொண்டாடும் முறை பல நூற்றாண்டுகளுக்கு முன் ஜேர்மனியிலேயே முதன்முதலில் அறிமுகமாகியது.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஹாப்பர் கறிவேப்பிலை பொதி செய்து விட்டார் (உபயம் Kerala Food) 

12004793_10153199965922992_5549383654656

 

காப்பு பார்த்தாயிற்று,கறிவேப்பில்லை கட்டியாயிற்று அடுத்து என்ன.....??? wait and see......:)

11705523_183186738679440_668841544595008
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//ஜேர்மன் நாட்டினர், தமது பிறந்தநாளினை கருத்தூன்றிய ஒன்றாக எடுத்துக்கொள்கின்றனர். இதனால் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் அரை நாள் விடுமுறையினைக்கூட எடுத்துக்கொள்கின்றனர்.  பூக்கள் மற்றும் வைன் ஆகியவை நண்பர்களிடையேயான பொதுவான பரிசுப்பொருட்களாக உள்ளது.
 -----
பிறந்தநாளைக் "கேக்" வெட்டிக் கொண்டாடும் முறை பல நூற்றாண்டுகளுக்கு முன் ஜேர்மனியிலேயே முதன்முதலில் அறிமுகமாகியது.//

சிலரின் பிறந்த நாட்கள், ஊரில் சாமத்திய சடங்கு மாதிரி.... முன்று, நான்கு நாட்கள் தொடர்ந்தும் நடை பெறுவதுண்டு. :grin:
அரிய தகவல்களுக்கு, நன்றி யாயினி.:)

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//ஜேர்மன் நாட்டினர், தமது பிறந்தநாளினை கருத்தூன்றிய ஒன்றாக எடுத்துக்கொள்கின்றனர். இதனால் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் அரை நாள் விடுமுறையினைக்கூட எடுத்துக்கொள்கின்றனர்.  பூக்கள் மற்றும் வைன் ஆகியவை நண்பர்களிடையேயான பொதுவான பரிசுப்பொருட்களாக உள்ளது.
 -----
பிறந்தநாளைக் "கேக்" வெட்டிக் கொண்டாடும் முறை பல நூற்றாண்டுகளுக்கு முன் ஜேர்மனியிலேயே முதன்முதலில் அறிமுகமாகியது.//

சிலரின் பிறந்த நாட்கள், ஊரில் சாமத்திய சடங்கு மாதிரி.... முன்று, நான்கு நாட்கள் தொடர்ந்தும் நடை பெறுவதுண்டு. :grin:
அரிய தகவல்களுக்கு, நன்றி யாயினி.:)

நன்றி ....

 

10650060_1485161111734667_25893470705032

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய கவிதையாய் , , , ,
பாரதத் தீயும்
குளிர் நிலவும் , , ,
வாழ்க பாரதி,

11986494_171488506518322_852151695281607

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீரியல் எனும் சீரழிவு !
1).அடுத்தவர்கள் குடும்பத்தை எப்படி கெடுப்பது?
2).அடுத்தவர்கள் சொத்தை எப்படி அபகரிப்பது?
3).மாமியாரை எப்படி வீட்டை விட்டு வெளியேற்றுவது?
4).மருமகளை எப்படி மகனிடம் இருந்து பிரிப்பது?
5).பெற்றோருக்கு தெரியாமல் எப்படியெல்லாம் தவறுசெய்வது?
6).எந்த தவறை எப்படி மறைப்பது?
7).அக்கம்பக்கத்தினர் உடன் எப்புடியல்லாம் சண்டையிடுவது?
8).மற்றவர்களை பற்றி எப்படியெல்லாம் புறம் பேசுவது?
9).கணவருக்கு எப்புடி அடங்காமல் நடப்பது?
10).மனைவியை எப்படி அடிமை படுத்துவது?
11). எப்படி பழிக்குபழி வாங்கலாம்?
12).ஆபாசமாக பேசுவது எப்படி?
மற்றும் கொலை, கொள்ளை, ஏமாற்றம், அபகரிப்பு, ஆள் கடத்தல்,வன்முறை, வஞ்சகம்,கள்ள காதல் ,விபச்சாரம்,அநியாயம்,அக்கிரமம்,பொய்,திருட்டு இப்படி எல்லாவற்றையும்அழகாக, தெளிவாக சொல்லியும் கற்றும் தருவதுதான் இந்த நாடகம் எனும் "சீரியல்"
காலையில் இருந்து இரவு 11 மணிவரை இந்த சீரியலுக்கு அடிமையாக பலர் இருக்கிறார்கள் குறிப்பாக "பெண்கள்"
குடும்பத்தில் வரும் பிரச்சனைகளுக்கு 70 % காரணம் இந்த சீரியல்கள்தான்!
பொழுதுபோக்கு என்ற பெயரில் "எதை"வேண்டுமானாலும் பார்ப்பதற்கு நாம் தயாராகிவிட்டோம் என்பதுதான் உண்மை!
நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும்தான் ஒரு சிறந்த சமூகத்திற்கான அடையாளம்.
தீமைகளையும்,பாவங்களையும் ரசிப்புக்குரியவையாக நாம் பார்ப்பது அழிவுக்கே வழி வகுக்கும்.
சீரியல் என்பது தீமைகளின் "சிற்றேடு"
எனவே சீரியல் பார்ப்பதை விட்டும் நம்மையும் நமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்வோம் !!!
சிறந்த சமூகத்தை உருவாக்கிடுவோம்!!!

12006177_911312765607245_246647170131454

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13).அடுப்பிலை வைச்ச சட்டி பத்தி எரிஞ்சாலும் சீரியலை பாத்த விழி பதறாமல் இருப்பது.

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சாகித்திய அக்கடமி பரிசு பெற்ற கவிப்பேர ரசு நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம் 23 மொழிகளில் பதிப்பிக்கப்படுகிறது.
 

11227900_1175229999160552_84080065437862

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5ம் தர புலமைப்பரீட்சை மாணவர்களுக்கு சிவனொலிபாத மலையானால் வந்த சிக்கல்.

மாணவர்கள் பரீட்சைகளுக்கு தயாராகும் போது, அங்கீகரிக்கப்பட்ட நூல்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலேயே தயாராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிறிபாலி பீடாதிபதி பேராசிரியர் டியுடர்; வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் எழுந்த சிக்கல் தொடர்பில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த மாதம் இடம்பெற்ற இந்த பரீட்சையில், சிவனொளிபாத மலை எந்த மாகாணத்துக்குரியது என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அளவையியல் திணைக்களத்தின் படி இது சப்ரமகமுவ மாகாணத்துக்கு உரியது.

எனினும் வரைபடங்களின் படி இது மத்திய மாகாணத்துக்கு உரியதாக கருதப்படுகிறது.

எவ்வாறாயினும், இது குறித்து எமது செய்திப்பிரிவுக்கு விளக்கமளித்த பரீட்சைகள் ஆணையாளர், இரண்டு விடைகளுக்கும் மாணவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உண்மையில் சிவனொளிபாதமலை சப்ரகமுவ மாகாணத்துக்கே உரியது.
எனினும் சில ஆசிரியர்கள் கூகுள் மெப் ஐ பார்த்து, அது மத்திய மாகாணத்துக்கு உரியது என்று மாணவர்களுக்கு புகட்டியுள்ளனர்.

இந்த நிலையில் ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், மாணவர்களின் நலனுக்காக இந்த வினாவுக்கு இரண்டு பதில்களுக்குமே புள்ளி வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நாள் (15-09-1987).

 

11990611_1071768212836132_32171555335351

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12011278_10153334105053801_8974413034410

யாழ் நல்லூரில் முன்னொரு காலத்தில் வைக்கப்பட்டு சிங்கள இராணுவத்தால் அழிக்கப்பட்ட தியாகி திலீபனின் நிழலுருவம்!

12039595_10153329813158801_1392244573335

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிவு தெரியாத நம் வாழ்க்கையில்,நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நம் வாழ்வை மாற்றிக் கொண்டே இருக்கும்...

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.