Jump to content

தனிமையென்னும் தீவினிலே!


Recommended Posts

- ரிஷியா

Source : http://www.varalaaru.com

 

மீண்டும் வருவேன் என்கிற பாவனையில் பிரிந்து சென்றுவிட்டான். இன்றுவரை ஏனோ வரவில்லை. இன்று வருவானோ, என்று வருவானோ? காலமென்னும் மீளா நதியில் நாட்கள் மெல்ல மெல்ல நகர்கின்றன.

சுவரில் கோடுகள் இழுத்து நாட்களைக் குறிக்கின்றேன். என் வீட்டுச் சுவர் முழுவதும் கரிக்கோடுகளின் ஓவியக்காட்சி. சுவர் போதவில்லை. மண்பானை நிறைய மஞ்சாடிக் குன்றிகளைப் போட ஆரம்பித்துள்ளேன். பானைகள் பல நிரம்பிவிட்டன. அவன் வரவில்லை. உடல் இங்கே, உயிரோ அங்கே அவனோடு. கூடு மட்டும் வாழ்ந்து என்ன பயன்?

நீலத்தை இழந்த வானம், உலவ மறந்த தென்றல், வசந்தம் காணாத நந்தவனம். இவை ஒன்றெனும் சுகம் தருமா? அவன் பார்வையில் தொடங்கிய பொழுதுகள் எல்லாம் இப்பொழுது வெறுமையில் தொடங்கி முடிகின்றன. சூடுவேனில் காற்றும் காதோரம் அவன் பெயர் சொல்லி விலகிச் செல்கின்றது. அந்தக் காடுறை கொற்றவைக்கும் படையல் வைத்து வேண்டிக்கொண்டேன். பலனில்லை. அவளுக்கு அருள் புரிய மனமில்லை.

மரா மலர்கள் மலர்ந்து உதிர்ந்தன. பாதிரி பூக்களின் காலமும் நிறைவடைந்தது. பாலைப்பண் வாசித்த பாணன் வேற்றிடம் சென்றுவிட்டான். பாலையாழில் சுகராகம் மீட்ட முடியவில்லை. முற்றத்து மூலையில் மௌனராகம் இசைத்துக் கிடக்கின்றது. இருப்பையும் காய்த்து ஓய்ந்து விட்டது. வேனல் காலங்கள் வந்து போய்விட்டன. தனிமையென்னும் தீவினிலே நான் மட்டும் வாழ்கின்றேன். அவன் சென்ற வழியில் மனமும், விழியும் சென்று மீள்கின்றன, தினம் தினம். பிரிதல் கொடுமை என்றால், அதைவிடக் கொடுமை தனிமையில் காத்திருத்தல். பாலை நிலத்துத் தலைவி ஒருத்தியின் நிலை இது.

குணகடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி

மண்திணி ஞாலம் விளங்கக் கம்மியர்

சொம்புசொரி பானையின் மின்னிஎவ் வாயும்

தன் தொழில் வாய்த்த இன்குரல் எழிலி

தென்புல மருங்கின் சென்றற்றாங்கு

நெஞ்சம் அவர்வயின் சென்றன ஈண்டு ஒழிந்து

உண்டல் அளித்துஎன் உடம்பே விறல்போர்

வெஞ்சின வேந்தன் பகைஅலைக் கலங்கி

வாழ்வோர் போகிய பேரூர்ப்

பாழ்காத் திருந்த தனிமகன் போன்றே.

கீழைக் கடலிலே சென்று நீரை ஆவி ஆக்கி, நீராவி மேலே எழுந்ததனால் எங்கும் இருள் படர்ந்தது; செம்பிலே பானை செய்கிற கம்மியர் பானையைக் கடைந்தபொழுது தீப்பொறி எழுவதுபோல, மின்னல் அடித்து, இடி முழங்கியது. காற்றுச் செல்லும் திசையில் மேகம் செல்லுதல்போல என் நெஞ்சம் அவரை நாடி அவர் பின்னே ஓடிச்சென்றது. வெஞ்சின வேந்தனின் படையானது அது போரிட்ட ஊரைப் பாழ்படுத்தியது. அவ்வூரில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்தனர். தனியாளாய் ஒரு மகன் அவ்வூரைக் காவல் செய்தான். அத்தனிமகன் போல என் உடல் இவ்வூரில் தலைவன் மீண்டும் வருவான் என்ற நம்பிக்கையில் காத்துக்கிடக்கிறது.

பாலைநிலத்துத் தலைவியின் பிரிவு ஏக்கம் இப்பாடல் மூலம் செம்மையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. வாழும் தகுதியை இழந்த ஓர் ஊர் எப்படியிருக்கும்? பாழடைந்த மனைகள், வெறுமையான தெருக்கள், மனித சஞ்சாரமற்று, சப்தமற்ற அந்தகாரம் சூழ்ந்த ஊரில் தனியாளாக ஒருவன் மட்டும் வாழ்ந்தால் எப்படியிருக்கும்? அதே நிலைதான் தலைவியின் நிலையும். தனிமையில் வாழும் ஒருவரைத் தனிமகன் என்று அழைத்ததனால், இப்பாடலைப் பாடிய புலவர் பெருந்தகை 'தனிமகனார்' என்று சிறப்புப் பெயர் பெற்றார். யாருமற்றவன், உறவுகள் அற்றவன், அநாதை என்றெல்லாம் எதிர்மாறாக அழைக்காமல் தனிமகன் என்று பாடியது புலவர்தம் உயர்மனத்தையும், நேர்சிந்தையையும் வெளிப்படுத்துகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
    • அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் எப்போதும் த‌மிழ‌ன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் அதிக‌ புள்ளி பெற‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.................இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்த‌ குஜ‌ராத் அணி நேற்று 89 ர‌ன் ஓட‌ எல்லாரும் அவுட் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌மாய் இருக்க‌லாம் நுனா அண்ணாவும் மெள‌வுன‌மாய் இருந்து புள்ளிய‌ பெற‌க் கூடும்.......................... த‌லைவ‌ரும் நானும் ஆளை ஆள் க‌ட்டி பிடிச்சு கொண்டு கீழ‌ நிப்போம்......................த‌லைவ‌ரும் நானும் ஜ‌பிஎல்ல‌ 5ப‌வுன்ஸ் வென்று விட்டோம் ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்ன‌ த‌லைவ‌ரே.......................
    • இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
    • குமாரசாமி அண்ணை...  நீங்கள் கேட்பதும் நியாயமானதே. மொடல் அழகி என்றுவிட்டு.... அதற்கு பொருத்தமான படத்தை இணைக்காமல் விட்டது எனது தவறுதான். 😂  
    • ஈழப்பிரியன் இன்றைக்கு களத்தில் இறங்கப் போகிறான். ஓரம்போ ஓரம்போ ஈழப்பிரியனின் வண்டி வருது. நீங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலானவர்கள் இன்றும் நாளையும் போட்டியில் குதிப்பார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.