Jump to content

உண்டாகட்டும் ஒரு மாற்றம்


Recommended Posts

-- பாலகார்த்திகா

ஒரு நாள் காலைநேரம், ஒரு முதியவர் கடற்கரையில் மெல்ல நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கண்ட ஒரு காட்சி அவரது கவனத்தைக் கவர்ந்திழுத்தது. ஒரு இளைஞன் ஒருவன், அலைகளினூடேயும், கரையிலும் மாறி மாறி ஓடிக் குனிந்து ஏதோ செய்து கொண்டிருந்தான்.

முதியவருக்கு அவன் என்ன செய்கிறான் என்று அறியும் ஆர்வம் மேலிட்டது. அவன் அருகில் சென்றார். அவன் குனிந்து கரையோரம் ஒதுங்கிக்கிடக்கும் நட்சத்திர மீன்களை ஒன்றொன்றாகப் பொறுக்கி, மெல்ல கடலுக்குள் வீசிக்கொண்டிருந்தான். "தம்பி! நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார் முதியவர். "ஐயா! வெயில் ஏறிக்கொண்டிருக்கிறது, அலை உள்வாங்குகிறது. எனவே, கரையோரம் இரவில் ஒதுங்கியுள்ள இந்த நட்சத்திர மீன்களை நான் கடலுக்குள் எறிந்துகொண்டிருக்கிறேன். இல்லையென்றால் அவை செத்துவிடும்." என்றான் இளைஞன்.

"தம்பி! இந்தக் கடற்கரையோ பல மைல்கள் நீளமானது. கரை முழுவதும் ஏராளமான மீன்கள் ஒதுங்கியுள்ளன. உன் முயற்சியால் ஒரு மாற்றமும் விளையப்போவதில்லை." என்றார் முதியவர். இளைஞன் புன்னகைத்தான். குனிந்து மற்றொரு மீனை எடுத்துக் கடலில் வீசியவாறே "மாற்றம் இந்த மீனுக்கு விளைந்துள்ளது ஐயா!" என்றான்.

ஆம். நம்முடைய ஒவ்வொரு சிறிய நல்ல செய்கையும் மற்றவர்கள் மீது தாக்கத்தை உண்டாக்க வல்லது. பார்ப்பதற்கு மிகச்சிறியதாக ஒருவருக்குத் தோன்றக்கூடிய உதவி, மற்றொருவருக்கு மிகப்பெரியதாக இருக்கலாம். உதவியோ, நல்ல செயல்களோ மட்டுமல்ல, நாம் சரியான நேரத்தில் கூறும் ஆறுதல் வார்த்தைகள் கூட ஒருவரது வாழ்வை மாற்றியமைக்க இயலும்.

ஈசுவர சந்திர வித்யாசாகர் என்ற பெரிய கல்வியாளர் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தார். அங்கொரு சிறுவன் அவரிடம் ஒரு ரூபாய் பிச்சை போடுமாறு கேட்டான். அவர் அவனைப்பார்த்து "நான் உனக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் நீ என்ன செய்வாய்?" என்று கேட்டதற்கு அச்சிறுவன் ஐம்பது பைசாவை என் அம்மாவிடம் கொடுத்துவிட்டு ஐம்பது பைசாவிற்குப் பழம் வாங்கிவந்து விற்பேன்" என்று சொன்னான். ஈசுவர சந்திரர் அவனுக்கு ஒரு ரூபாய் கொடுத்தார்.

வருடங்கள் கழிந்தன. மீண்டும் அதே ஊருக்கு ஈசுவர சந்திரர் விஜயம் செய்தார். அப்பொழுது ஒரு பெரிய மனிதர் வந்து அவரைப் பணிந்து வணக்கம் செய்து "ஐயா! என்னைத் தெரிகிறதா?" என்று கேட்டார். "மன்னிக்கவும். எனக்கு உங்களை அடையாளம் தெரியவில்லையே! நீங்கள் யார்?" என்று வினவினார் ஈசுவர சந்திரர். "நீங்கள் சில வருடங்களுக்கு முன்பு இந்த ஊருக்கு வந்த பொழுது ஒரு சிறுவன் தங்களிடம் ஒரு ரூபாய் பிச்சை கேட்டான். தாங்களும் கொடுத்தீர்கள். அந்த ஒரு ரூபாயை முதலீடாகக் கொண்டு அவன் பழ வியாபாரம் தொடங்கி, சிறுகச் சிறுக வளர்ச்சியடைந்து இப்பொழுது ஒரு பெரிய பணக்காரனாகி விட்டான். அந்தச் சிறுவன் நான்தான். இப்பொழுது மீண்டும் நீங்கள் இந்த ஊருக்கு வருகிறீர்கள் என்று கேள்விப்பட்டு உங்களைக் கண்டு நன்றி தெரிவிக்க வந்தேன்" என்று சொன்னாராம் அந்தப் பெரிய மனிதர்.

ஒரு ரூபாய் என்பது பெரிய தொகையல்ல. ஆனால் அது ஒரு சிறுவனின் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டாக்கிவிட்டது அல்லவா? நம்மாலும் பிறர் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதற்கான வல்லமை நம்மிடம் உண்டு. இத்தகைய சிறிய நன்மைகள் பிறருக்கு உதவுவதற்காக மட்டுமல்ல, நம் மனதில் நம்மைப்பற்றியே ஒரு நல்ல மதிப்பீடும் நேர்மறையான உணர்வும், ஒரு திருப்தியும் உண்டாக இவை வழி வகுக்கும்.

என்னுடைய நண்பர் ஒருவர், பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்வதைக் கடுமையாகக் கண்டனம் செய்வார். நான் எதிர்ப்படும் பிச்சைக்காரர்களுக்கு ஓரிரு ரூபாய் கொடுத்தால் கேலி செய்வார். "நீ பிச்சை எடுப்பதை ஊக்குவிக்கிறாய்" என்றும் சொல்வார். ஒரு முறை ஒரு வயதான மனிதர், மலிவுவிலை ஊதுபத்திகளை விற்றுக்கொண்டு வந்தார். என் நண்பரை அவர் அணுகி ஒரு பாக்கெட் வாங்கிக்கொள்ளுமாறு கெஞ்சியும் அவர் வாங்கவில்லை. நான் அந்த முதியவரிடம் இருந்து இரு பாக்கெட் ஊதுபத்தியை வாங்கிக்கொண்டேன். பின் என் நண்பரிடம் கேட்டேன் "நீங்கள் பிச்சை எடுப்பதை ஊக்குவிக்காதே என்கிறீர்கள். சரி. அப்படியானால், உழைத்தே பிழைக்கவேண்டும் என்ற உணர்வுடன் இந்தத் தள்ளாத வயதில் வந்து ஊதுபத்தி வியாபாரம் செய்பவரையாவது ஊக்குவிக்கவேண்டுமல்லவா? அதையும் செய்யவில்லை என்றால் எப்படி?" என்று.

ஆனால், நம்மில் பலர் என்ன செய்கிறோம்? நாம் "பிச்சை ஒரு சமூகக்கேடு" என்று கண்டிக்கிறோம். அது சமூகக்கேடு எனில் அதைக்களைவதற்கு நாம் என்ன முயற்சி செய்யலாம் என்று நாம் யோசிப்பதில்லை. 'அபியும் நானும்' திரைப்படத்தில் வருவது போல் ஒருவரை நாம் வீட்டில் சேர்ப்போமா? பிச்சை எடுக்கின்ற ஒருவரை நமது பணியாளராக நியமிப்போமா? அத்தனை பரந்த மனப்பான்மை நமக்கு உண்டா? இல்லை. நம்மால் முடிந்த அளவு, ஒரு வேளை உணவோ, ஒரு பழைய உடையோ, அல்லது ஒன்றிரண்டு ரூபாய் பணமோ தரக்கூட நமக்கு மனமிருப்பதில்லையே!

இது மட்டும்தான் நல்ல செயல் என்றில்லை. வழியில் கிடக்கும் வாழைப்பழத்தோலை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போடுவது கூட ஒரு சேவைதான். ஒரு கண்பார்வையற்றவர் சாலை கடக்க உதவுவதும், ஒரு முதியவர் அல்லது கர்ப்பிணிப்பெண்ணுக்கு நாம் அமர்ந்திருக்கும் இருக்கையை விட்டுக்கொடுப்பதும், நம்மிடமிருக்கும் பழைய புத்தகங்களை யாருக்கேனும் தானமளிப்பதும், பள்ளிக்கு நேரமாகிவிட்டது என்று பரிதவிக்கும் மாணவனை அல்லது நேர்முகத்தேர்விற்குப் போகவேண்டிய ஒருவரை நமது வாகனத்தில் ஏற்றிச் செல்வதும்... இப்படி எத்தனை எத்தனையோ நல்ல செயல்களை நாம் செய்யலாம்.

ஒரு நாளைக்கு ஒரு சிறு நல்ல செயலாவது செய்வது என்று உறுதி எடுத்துக்கொள்வோம். நமது வாழ்வை மட்டுமல்ல.. நமது அருகில் இருக்கும் எத்தனையோ பேரின் வாழ்வில் ஒளியேற்றலாம். ஒரு மாற்றத்தை உலகில் உண்டாக்கலாம்.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.