Jump to content

கனடாவில் வல்வை சகாறாவின் இரு நூல்கள் வெளியீடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை  ஒரு பெண் கமல் , அதுதான் படத்துக்குப் படம் வேறுபட்டுத் தெரியுறா !, அவர் ஒரு ஆண் ரஜனி,  எப்பவும் ஒரேமாதிரி...! :)

Link to comment
Share on other sites

  • Replies 157
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்ச்சிக்கு முன்னாடி.. வல்வை அக்கா.. பியூட்டி பார்லர் போயிட்டு வந்திருக்கா...! அதுதான் உண்மைக் காரணம். பாவம்.. அத்தார் சிரிப்பை தொலைச்சிட்டு நிற்கிறதை பார்க்கத் தெரியல்ல..! :lol::D

அதுசரி எல்லா ஆண்களும் ஏன் மூஞ்சியை உம்.. என்று வைச்சிட்டு இருக்காங்க. :lol:

 

படத்துக்கு இப்பிடித் தான் அப்பாவி அம்மாஞ்சியள் மாதிரிப் போஸ் குடுப்பீனம் இந்த ஆண்கள்! நிக்கிற ஆக்களிட உண்மையான முகங்கள் வேற நெடுக்கர் :D

 

(மிக முக்கியமா சசி வர்ணம் அமைதியான அப்பாவி மாதிரி நிக்கிறதப் பாக்க எனக்குப் படீரெண்டு சிரிப்பு வந்திட்டுது! :D  :lol:  :D)

 

 

 

 

 

நியானி: ஒரு படம் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

அடப்பாவிகளா....

பியூட்டி பார்லருக்கு போய்ட்டு தான் வந்த என்று சகாறா அக்காவே ஒப்புக்கொண்டுட்டாவே.. இனி என்ன செய்ய? நெடுக்ஸ் அண்ணாவுக்கு நாளைக்கு வந்து ஒரு லைக் போட்டு விடுவம். :)

Link to comment
Share on other sites

படங்கள் மிகத் துல்லியமாக இருக்கின்றன. மீராபாரதி தெரிகிறார். ஆதிவாசியைக் காணவில்லை.

 

நான் இணைத்த அனைத்து படங்களையும் எடுத்தவர் யாழ்வாணன். ஒரு பார்வையாளராக வந்தவர் நான் கேட்டவுடன் மிகவும் சுறு சுறுப்பாக ஒரு புகைப்படல் கலைஞனைப் போல் ஓடி ஓடி படங்களை எடுத்தார். அவருக்கு என் நன்றி

 

 

ஆதிவாசி வந்திருந்தார். ஆனால் தன்னை படம் எடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார். என் உரையைக் கேட்டால் அதன் காரணம் புரியும். :lol::rolleyes:

நிழலியானந்தா.. பிரேமதாச மாதிரி.. துள்ளி.. துள்ளி.. விசுக்கி விசுக்கி பேசுறாரே.. என்னாச்சு. உணர்ச்சி வசப்பட்டிட்டார் போல. :lol::D

 

 

 

இதுதான் நான் ஏறிய முதல் மேடை. தொழில் சம்பந்தமான Presentations / seminars பல செய்து இருந்தாலும், இப்படி பொதுவான மக்கள் வந்திருக்கும் கூட்டத்தில் பேசியது இதுதான் முதல் தடவை. என் கால்களும் உடலும் உண்மையில் தள்ளாடி நடுங்கியது. எந்தளவுக்கு நடுக்கம் இருந்தது என்பதை வீடியோவை  இணைக்கும் போது பார்த்து நாள் முழுதும் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.

 

தன் தொகுப்பில் இணைக்காமல் விட்ட சகாறா எழுதிய 'தயங்கு, இயங்கு,முயங்கு, மயங்கு' கவிதையை வாசித்தேன்...  ஆளை மாட்டி விட்டாச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பளிச்சென்று தெரிஞ்சால் பாலிஸ் போட்டிருக்குன்னு அர்த்தம் அக்கா. இதெல்லாம் தெரியாட்டி.. என்ன பேஸ்புக் உலக ஆம்பிளை..! :lol::D

 

கிடைச்'ச காப்பில் எழுதிச் தொலைச்சிடுவாங்களே....

 

பொதுவாக இப்படியான அலங்காரமாக முன் எப்போதும் எவரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை காரணம் கனடாவில் இத்தகைய தோற்றத்தை வெளிக்காட்டிக் கொண்டதில்லை. பூ, பொட்டு , புடவை என்று சராசரி தமிழ்ப்பெண்ணாக காட்சி கொடுத்தது இல்லை. இந்த நிகழ்வில் அப்படி வெளிப்பட்டிருப்பது பார்ப்பவர்குக்கு மனதிற்குத் திருப்தியாக இருக்கிறது அதுதான் கொஞ்சம் அவர்களின் மனதிற்கு இளமையாகத் தெரிகிறேன்........ நெடுக்கு சொன்னா நம்போணும்  ஆய்வுகள் எல்லாம் செய்யக்கூடாது :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"திரு" அண்ணா, நல்ல கம்பீரமா மிடுக்கா இருக்கிறார்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று செப்டம்பர் 20, மாலை எனது அன்பு தோழிகளில் ஒருத்தியான சகாராவின் தமிழகத்தில் வெளியிடப்பட்ட இரு நூல்கள் கனடிய மண்ணில் வெளியிடப்பட்டன. பல்வேறு பணிகள் பல்வேறு நிகழ்வுகள்.. அனைத்திலும் முகம் கொடுக்க வேண்டிய சூழலில் ஆரம்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை. நிகழ்வின் இறுதிப் பாகத்தில் சென்று ஒரு சில உரைகள் குறிப்பாக நூல்களை எழுதிய சகாராவின் ஏற்புரை நூல் வெளியீடு போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது.

சகாரா, நெருப்பு வரிகளின் சொந்தக்காரி..வேண்டுமான போது அழகியலை அழகு மிளிர தனக்கே உரித்தான பாணியில் இலக்கிய சுவை சொட்டவும் தர வல்லவள்...அந்த இலக்கிய உயிர்ப்புகளில் அவள் எழுதிய நூல் 'வேங்கையன் காதலி' என்ற காப்பிய நூல். மற்றையது கவிதைத் தொகுப்பு.

நான் உருகிக் கரைந்து போற்றும் எங்கள் களத்துக் கவி புதுவை இரத்தினதுரை ஐயனின் பாசறை பயிலாமலே அவரோடு கொண்ட உற்ற தோழமையால் ஏகலைவியானவள்... அவர் தொனியிலும் அவ்வப்போது அவர் வலிமையின் சாயலிலும் வலிமை திரட்டி உண்மை வரிகளில் கவி படிப்பவள்... மரபுக் கவிக்கும் புதுமைக் கவிகளுக்கும் இடையில் கலப்புக் கவியாய் அனைவரையும் ஈர்க்கும் கவிதைகள் படைக்கும் கவிதை சிற்பி... சொல்லாடல் அரசி...

கால ஓட்டத்தின் வேகத்தில் கை கோர்த்த தோழமைகள் திசைக்கொன்றாய்...எங்கோ எங்கோ.. தூரமாக தொலைந்து போனாலும் தொலையாது எமக்குள் மூளும் தீயும்.. இலக்கழியா சிந்தைகளின் சீர்மைகளும்..

எம்மை கை கோர்க்க வைக்க எமக்காக ஏதேனும் ஒரு புள்ளி என்றுமே தயாராகி நிற்கும்.. நாங்கள் எம்மை தொலைக்காத வரையில் என்பதை இன்று கண்டுகொண்டேன்...

இவள் கவி நாடகங்களில் அவளது நெறியாள்கையில் நாம் நடித்து அரங்கேறிய அந்த கலைப்பயண நாட்கள்..நினைவுகளாய்...

இன்னமும் தோள் கொடுத்த பயண வெளிகளில் திசைகள் கடந்து பறந்த கூடிப் பயணித்த பயணங்கள்... வெற்றிகள்..தோல்விகள்.... உறவுகள்..பிரிவுகள்.. நீண்ட நினைவுகளில் திண்மையின் வார்ப்பாக பெண்ணிவள் என் தோழியாய்...

தூர சென்றாலும் நினைவுகள் தூரமாவதில்லை.... எந்த திக்கில் உன் பார்வைகள் இருந்தாலும் எங்கள் இலக்குகள் என்றும் ஒரே திசையே...!!!

சொல்லாடி தமிழ் களமாடும் இவள் கவிதை விளையாட்டில் கிறங்கிப் போகும் ரசிகை நான்..

எழுத்து இவள் வடமிழுக்கும் திசையில் வெள்ளிகள் உதிர்க்கும்.....வீரமும் பாய்ச்சும்...ஏதேதோ எழுதும் இலக்கியவாதியாய்.. இரு.. அதே போல் இலக்கு தொலைக்காமல் எழுதும் நெருப்பு சிந்தையையும் அணையாமல் காத்திடு...

எழுது... புதைந்து கிடக்கும் எம் வலிமைகள் மேலெழ எழுது...

பூவை பாடு.. அநீதி காண்கையில் பூகம்பமும் ஆகு! எல்லோர் சொல்லும் தமிழ் கேட்பதில்லை.. தமிழை உயிரில் சுமந்து அடிமையானவர்களுக்கு எங்கள் தமிழ் செல்ல குழந்தையாகும். உன் சொல் கேட்கும் தமிழை தாலாட்டு தேவை வந்தால்... அன்னைத் தமிழை கருவியாக்கு!

சிகரம் தொடும் உன் எழுத்துக்களுக்கு வாழ்த்துக்கள் தோழி..

 

வாழ்த்துக்களுடன்

செந்தமிழினி பிரபாகரன்

Link to comment
Share on other sites

அப்ப நான் சொன்னது தான் சரி. நெடுக்ஸ் அண்ணாவுக்கு போடவிருந்த பச்சை வாபஸ். :D

அதுசரி, யாழில் கறார் என்று பேசும் நிழலி அண்ணாவுக்கு நூல்வெளியீட்டில் பேசும் போது நடுக்கம் என்றால் நம்ப முடியவில்லை. :D:lol:

Link to comment
Share on other sites

நுணா அண்ணா, உண்மையாகவே கனடாவில் இடம்பெற்ற நூல்வெளியீட்டில் சகாறா அக்கா இளமையாகவும் அழகாகவும் உள்ளார். சென்னையில் இடம்பெற்ற நூல்வெளியீட்டு படங்களுடன் ஒப்பிட்டு பாருங்கள். :)

சாறியின் கலர், தலையில் பூ வைத்திருப்பது போன்றன காரணமாக இருக்கலாம். :)

 

அப்பிடி ஒண்டுமில்லை.. இந்தியா வெய்யிலிலை கொஞ்ச கொழுப்பு கரைஞ்சிடுச்சா... அதாலை இருக்கலாம்!!  :o  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் அழகாக, எடுக்கப்பட்டுள்ளது. நூல்வெளியீடு இனிதாக நடைபெற்றதையிட்டு மகிழ்ச்சி. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இணைத்த அனைத்து படங்களையும் எடுத்தவர் யாழ்வாணன். ஒரு பார்வையாளராக வந்தவர் நான் கேட்டவுடன் மிகவும் சுறு சுறுப்பாக ஒரு புகைப்படல் கலைஞனைப் போல் ஓடி ஓடி படங்களை எடுத்தார். அவருக்கு என் நன்றி

 

 

ஆதிவாசி வந்திருந்தார். ஆனால் தன்னை படம் எடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார். என் உரையைக் கேட்டால் அதன் காரணம் புரியும். :lol::rolleyes:

இதுதான் நான் ஏறிய முதல் மேடை. தொழில் சம்பந்தமான Presentations / seminars பல செய்து இருந்தாலும், இப்படி பொதுவான மக்கள் வந்திருக்கும் கூட்டத்தில் பேசியது இதுதான் முதல் தடவை. என் கால்களும் உடலும் உண்மையில் தள்ளாடி நடுங்கியது. எந்தளவுக்கு நடுக்கம் இருந்தது என்பதை வீடியோவை  இணைக்கும் போது பார்த்து நாள் முழுதும் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.

தன் தொகுப்பில் இணைக்காமல் விட்ட சகாறா எழுதிய 'தயங்கு, இயங்கு,முயங்கு, மயங்கு' கவிதையை வாசித்தேன்...  ஆளை மாட்டி விட்டாச்சு

 

அப்ப வல்வை அக்காவுக்கும் யாழில தான் வீரம் அதிகம் போல. யாழில் வல்வை அக்காவுக்கு ஒரு தனி அடையாளம் தந்ததே.. அந்த தயங்கு.. இயங்கு.. முயங்கு.. மயங்கு விதிகள் தானே.

 

நியூட்டனின் 3 விதிகள் பெளதீகவியலுக்கு எப்படி முக்கியமோ.. குடும்பவியலுக்கு அக்காவின்.. 4 விதிகள் முக்கியம்..!!! அதை மறைச்சது.. ரெம்பக் கொடுமை..!!!! அதை சபையில் வெளிக்கொணரனுன்னா.. கை.. கால் நடுங்கத்தான் செய்யும். அதை கடதாசியை விசுக்கி விசுக்கி.... மறைக்கிறது என்பது.. வாஸ்தவமான நடவடிக்கை தான். :):lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்கள உறவுகளை படங்களில் பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது.
வாழ்த்துக்கள்.

 

 

 

 

ekuruvi_valvai_sahara_20sep2014%20%2875%

 

நல்ல உள்ளத்திற்கு ஒரு சான்றிதழ் இந்தப்படம். :)  :icon_idea:

 

Link to comment
Share on other sites

கிரிக்கெட் மாட்ச் ஒன்று பார்க்க போனதில் நேரம் ஆறை தாண்டிவிட்டது மாட்ச் முடியவில்லை ஆனால் எமது டீம் நிட்சயம் தோல்வி என்ற நிலை இரண்டு பியர் வேறு அடிதாச்சு அடித்துபிடித்து வீடு வந்து புத்தக வெளியீட்டிற்கு போவம் என்றால் மனுசி வாற மூட்டில் இல்லை ,

 

நிகழ்வு நடக்கும் இடம் எனது வீட்டில் இருந்து ஐந்து நிமிட ஓட்டமும் இல்லை பாரதி கலாமன்றதிற்குள் புகுந்தாச்சு .சிறுவர்களின் மெல்லிசை போய்கொண்டிருக்கின்றது .அப்பாடா 

 

பூவும் பொட்டும் மல்லிகையும் கனகாம்பரமும் பட்டு சேலையும் மினுங்கல் சர்வாருமாக எங்கும் பெண்கள் மயம்.

யாயினியும் தமிழச்சியும்  அருகருகில் இருக்க கண்டு காரில் வைத்திருந்த மேசொவினதும் காவலூர் கண்மணி அக்காவினதும் புத்தங்கள் நினைவுவர திரும்ப காருக்குள் போய் எடுத்துக்கொண்டு வந்து 

 

என்னை தெரியுமா என்று யாயினியிடம் கேட்டேன் ,சிரித்துக்கொண்டே அர்ஜுன் அண்ணா என்றார்.புத்தகத்தை அவரிடம் கொடுத்துவிட்டு தமிழசிக்கும் யாழ்வாணனுக்கும் ஒரு வணக்கம் வைத்தேன் .யாயினி அவர் தந்தையாரை காட்டினார் . அவரது தந்தையாரும் எனது தந்தையாரும் நல்ல நண்பர்கள் .

 

அப்படியே நிழலி ,சகாரா ,அவர் கணவர் எல்லோருக்கும் ஒரு ஹலோ சொல்லிவிட்டு திரும்ப மீராபாரதி துணைவியார் சகிதம் வருவதை கண்டு அவர்களுடன் போய் அமர்ந்துவிட்டேன் .இருவரும் ஏற்கனவே பல வருட பழக்கம்.

சிறிது நேரத்தில் சசி வந்து அருகில் இருந்தார் .சசிக்கும் மீரா அவர் மனைவி பழக்கம்.சசிக்கு தெரியாதவர்கள் எவரும் இல்லைபோல கிடக்கு .

 

நிகழ்ச்சி தொடங்கியது  .முரளி தான் தொகுப்பாளர் .முதலில் கதிர் செல்வகுமார் அறிமுக உரை ,பின்னர் காவலூர் கண்மணி அக்கா கவிதை வடிவில் சகாறா தனது நட்பு பற்றி பேசி ஒரு விருதும் வழங்கினார்  .அடுத்து ஈழவேந்தன் மிக சுருக்கமாக பேசியது மிக ஆச்சர்யம் .இவர் அறிவும் ஆற்றலும் உலகு அறிந்தது ஆனால் காசுக்கு பாட்டெழுதும் புலவர் நிலை இவரது 

 

அடுத்து எமது நிழலி வந்து மேடை பேச்சு அனுபவம் இல்லை என்று சொல்லிவிட்டு வெளுத்துவாங்கினார் .உடல்மொழியில் சற்று நடுக்கம் தெரிந்தாலும் பேச்சிலும் சொன்ன கருத்திலும் மிக தெளிவு இருந்தது .யாழ் உறவுகளுக்கு தெரியாத ஒரு விடயத்தையும் அதில் போட்டு உடைத்தார்  அப்போது   சகாறா வெட்கி தலை குனிந்தது கண் கொள்ளாகாட்சி .

 

பின்னர் ஆய்வுரை எனது மிக விருப்பத்திற்கு உரிய எழுத்தாளர் தமிழ்நதி (அரசியலில் நேர் எதிர் ) மிக நேர்மையான விமர்சனம் வைத்தார் .உண்மை சொல்லுகின்றேன் என்று சில சர்சைக்குரிய விடயங்களையும் சொன்னார் .

 

அடுத்து கலாராஜன் குண்டலகேசி மணிமேகலை எல்லாம் இழுத்து இது ஒரு ஆறாம் காப்பியம் என்றார்.(பொட்டு கதை வேறு ).

அடுத்து விஸ்ணு பாராட்டுரை  இவர் சகறாவை பாராட்டாமல் வல்வையின் சிறப்பு பற்றி மட்டும் பேசினார் .

 

அடுத்து புத்தக வெளியீடு ,படங்களும் எடுத்தோம் .முடிவில் சகாரா நன்றியுரையும் விளக்கவுரையும் தந்தார் .புதுவையை பற்றி பேசும் போது கண்ணில் கண்ணீர் வேறு வந்தது .

 

இனிதே நடந்ததது புத்தக வெளியீடு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு. இந்தியாவில் நடந்தைவிட, கனடாவில் சிறப்பாக நடந்திருக்கின்றது என நினைக்கிறேன், சகாறாவின் நண்பர்களும் உறவினர்களும் காரணமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

நேற்று செப்டம்பர் 20, மாலை எனது அன்பு தோழிகளில் ஒருத்தியான சகாராவின் தமிழகத்தில் வெளியிடப்பட்ட இரு நூல்கள் கனடிய மண்ணில் வெளியிடப்பட்டன. பல்வேறு பணிகள் பல்வேறு நிகழ்வுகள்.. அனைத்திலும் முகம் கொடுக்க வேண்டிய சூழலில் ஆரம்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை. நிகழ்வின் இறுதிப் பாகத்தில் சென்று ஒரு சில உரைகள் குறிப்பாக நூல்களை எழுதிய சகாராவின் ஏற்புரை நூல் வெளியீடு போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது.

சகாரா, நெருப்பு வரிகளின் சொந்தக்காரி..வேண்டுமான போது அழகியலை அழகு மிளிர தனக்கே உரித்தான பாணியில் இலக்கிய சுவை சொட்டவும் தர வல்லவள்...அந்த இலக்கிய உயிர்ப்புகளில் அவள் எழுதிய நூல் 'வேங்கையன் காதலி' என்ற காப்பிய நூல். மற்றையது கவிதைத் தொகுப்பு.

நான் உருகிக் கரைந்து போற்றும் எங்கள் களத்துக் கவி புதுவை இரத்தினதுரை ஐயனின் பாசறை பயிலாமலே அவரோடு கொண்ட உற்ற தோழமையால் ஏகலைவியானவள்... அவர் தொனியிலும் அவ்வப்போது அவர் வலிமையின் சாயலிலும் வலிமை திரட்டி உண்மை வரிகளில் கவி படிப்பவள்... மரபுக் கவிக்கும் புதுமைக் கவிகளுக்கும் இடையில் கலப்புக் கவியாய் அனைவரையும் ஈர்க்கும் கவிதைகள் படைக்கும் கவிதை சிற்பி... சொல்லாடல் அரசி...

கால ஓட்டத்தின் வேகத்தில் கை கோர்த்த தோழமைகள் திசைக்கொன்றாய்...எங்கோ எங்கோ.. தூரமாக தொலைந்து போனாலும் தொலையாது எமக்குள் மூளும் தீயும்.. இலக்கழியா சிந்தைகளின் சீர்மைகளும்..

எம்மை கை கோர்க்க வைக்க எமக்காக ஏதேனும் ஒரு புள்ளி என்றுமே தயாராகி நிற்கும்.. நாங்கள் எம்மை தொலைக்காத வரையில் என்பதை இன்று கண்டுகொண்டேன்...

இவள் கவி நாடகங்களில் அவளது நெறியாள்கையில் நாம் நடித்து அரங்கேறிய அந்த கலைப்பயண நாட்கள்..நினைவுகளாய்...

இன்னமும் தோள் கொடுத்த பயண வெளிகளில் திசைகள் கடந்து பறந்த கூடிப் பயணித்த பயணங்கள்... வெற்றிகள்..தோல்விகள்.... உறவுகள்..பிரிவுகள்.. நீண்ட நினைவுகளில் திண்மையின் வார்ப்பாக பெண்ணிவள் என் தோழியாய்...

தூர சென்றாலும் நினைவுகள் தூரமாவதில்லை.... எந்த திக்கில் உன் பார்வைகள் இருந்தாலும் எங்கள் இலக்குகள் என்றும் ஒரே திசையே...!!!

சொல்லாடி தமிழ் களமாடும் இவள் கவிதை விளையாட்டில் கிறங்கிப் போகும் ரசிகை நான்..

எழுத்து இவள் வடமிழுக்கும் திசையில் வெள்ளிகள் உதிர்க்கும்.....வீரமும் பாய்ச்சும்...ஏதேதோ எழுதும் இலக்கியவாதியாய்.. இரு.. அதே போல் இலக்கு தொலைக்காமல் எழுதும் நெருப்பு சிந்தையையும் அணையாமல் காத்திடு...

எழுது... புதைந்து கிடக்கும் எம் வலிமைகள் மேலெழ எழுது...

பூவை பாடு.. அநீதி காண்கையில் பூகம்பமும் ஆகு! எல்லோர் சொல்லும் தமிழ் கேட்பதில்லை.. தமிழை உயிரில் சுமந்து அடிமையானவர்களுக்கு எங்கள் தமிழ் செல்ல குழந்தையாகும். உன் சொல் கேட்கும் தமிழை தாலாட்டு தேவை வந்தால்... அன்னைத் தமிழை கருவியாக்கு!

சிகரம் தொடும் உன் எழுத்துக்களுக்கு வாழ்த்துக்கள் தோழி..

 

வாழ்த்துக்களுடன்

செந்தமிழினி பிரபாகரன்

 

செந்தமிழினி (சிவவதனி) அக்காவுடன் நீங்கள் சேர்ந்து நின்று எடுத்த படம்.

 

10671461_10154525550815012_7371035746813

 

படம்: முகநூல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் இனிய நண்பி சகாராவின் 'வேங்கையன் பூங்கொடி' காவியத் தொகுதி, 'காவியத் தூது' கவிதைத் தொகுதி, வெளியீட்டு விழாவின் இவ்இனிய மாலைப்பொழுதில் நட்புரைக்காக, இந் நல்ல நேரத்தை ஒதுக்கி என்னை அழைத்த விழா நாயகிக்கு நன்றி கூறும் இவ்வேளையில் அவையில் அமர்ந்திருக்கும் அறிவுசால் கவிஞர்கள், கலைஞர்கள், அறிஞர்கள், வித்துவத் திறமை கொண்ட அத்தனை அன்புறவுகளுக்கும், என் அன்பு வணக்கம்.

 

வல்லை வெளி தாண்டி,  வானுயர்ந்த மலைதாண்டி,
எல்லையில்லா வயல் தாண்டி,  எத்தனையோ நிலம் தாண்டி,
பனைமரக் காடு தாண்டி,  பரந்த சாகரம் தாண்டி,
பனிவயலில் விழுந்த,  பகல் நிலவு இந்த கவிமலர்

 

தன் சோலைவனத்தின் பெயர் பாதி
ஒரு பாலைவனத்தின் பெயர் மீதி கொண்ட
வார்த்தையெனும் வாளேந்திய
வஞ்சினம் வல்வை சகாரா

 

இளமையிலேயே இறக்கை விரித்த
சின்னப் பறவை இவள்
ஆனாலும்
நீலப் பறவையல்ல
நெருப்புக் குயில் இவள்

 

கனடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானலையில்
முகமது தெரிந்திடா
உறவது தொடர்ந்தது
முடிவிலாத் தொடுவானமாய்

விரிந்திடும் நட்பிது

 

அத்துடன்
'யாழ்' இணைய மேடை
எம் எழுத்துக்களுக்கு அங்கீகாரம் அளித்தது
உறவுகளைப் பலப்படுத்தியது
ஊக்குவித்து உயிர்கொடுத்தது

 

எம் வீட்டுத் தொலைபேசிக்கு
வாயிருந்தால்
அது பேசும் எம் நேசம் பற்றி
மண்ணையும் மனிதத்தையும்
நேசிக்கும் எம் சுபாவம் பற்றி

 

நாம் தாராளமாகப் பேசியதில்
ஏராளம் எம் தாய்மண் பற்றி

அது தவிர

 

எம் வளமான வாழ்க்கை பற்றி
மனதில் வலி சுமந்த நேரம் பற்றி
எம் பெற்றவர் பரிவு பற்றி
உடன் பிறந்தவர் நேசம் பற்றி

 

நட்பு வட்டத்தின் திறமை பற்றி
கவிஞர்கள் மன ஆழம் பற்றி
கதைகளின் கருப்பொருள் பற்றி
பெண்களின் ஆளுமை பற்றி

 

இவை மட்டுமல்ல
இடம் பெயர்ந்த குயில்கள் நாம்
மீண்டும் வேடந்தாங்கலிலே
விதவிதமாய் கூவும் காலம் பற்றி

 

கந்தகத்து முட்களிலே
மீண்டும் எப்போ
குங்குமப் பூ பூக்கும் என்று

காத்திருக்கும் சூரியக் கனவு பற்றி

இவள் கனவுகளின் காலடித்தடங்கள்
காயம் பட்டுவிட்ட பொழுதுகளில்
இயலாமைக்குள் சிக்கி பல சமயம்
எழுத மறுத்திருக்கிறது

இவள் எழுத்தாணி

 

இவள் பேனா துப்பாக்கி
இவள் எழுத்து வெடிகுண்டு
இவள் உள்ளுக்குள் போராளி

உலகிற்கு கவிதாயினி

 

ஒப்பனைப் புன்னகை இவளிடம்
ஒரு பொழுதும் கண்டதில்லை
கற்பனையில் சந்தோசம்
கண்டு என்றும் மகிழ்ந்ததில்லை

 

நெத்தியடியாய் தொடரும்
நிழலையும் உடைத்திடுவாள்
மௌனம் கலைத்துவிடில்
மனதுக்குள் வானம்பாடி

 

உணர்வுகளை உலுக்கும் கவிவரிகள்

வாழ்வை ஊடுருவிப் பார்க்கும் தனிப்பார்வை
அழகியல் கலந்த ஆழமான சொல்லாடல்
மண்சார்ந்த மட்டற்ற ஏக்கம்

 

ஈழமண்ணின் வலி சுமந்து
வாழும் மண்ணில் கவிவடித்து
காவியத்தூது சொன்ன கவிதாயினியே
நீ விழிகளில் தீ மூட்டி
வெற்றிக் கொடிகட்டு

 

என் இனிய தோழி
எம் மறைகள் வேறாக துறைகள் வேறாக
எம் அகவை வேறாக இருந்தாலும்
நட்பென்ற வட்டத்துக்குள் உனக்கும் எனக்கும்
ஏற்றத்தாழ்வுகள் என்றுமே உணர்ந்ததில்லை

 

நீ தமிழோடு விளையாடும் கலைமகள்
அச்சமின்றி உச்சங்களைத் தொட
நிச்சயம் உன் தேடல் தொடரும்
எம் நட்புக் காலம்
நாம் வாழும் காலம் தாண்டி
பலகாலம் வாழும்

 

விரித்துவிட்ட சிறகுகளை
விண்ணளவு பறக்க விடு
விண்ணளவு பறந்த பின்னும்
விடியலுக்காய் கவி எழுது

 

மண்ணினது கனவோடு
மனம் முழுதும் நீராடு
எண்ணமதில் எழும் புரட்சிக்
கனலோடு போராடு

 

தண்ணிலவில் தமிழீழக்
கடலோரம் நடைபோடு
உன்னளவில் உனக்குள்ளே
ஓர் உலகை உருப்போடு


சிரமங்கள் பல வென்று
சிகரங்கள் பல கண்டு
இமயமாய் நிலைத்திட
என்றும் என் இனிய வாழ்த்துக்கள்

 

நன்றி

நட்புடன்

காவலூர் கண்மணி

 

Link to comment
Share on other sites

நிகழ்வு சிறப்புற நடந்ததில் மகிழ்ச்சி..

 

கலந்து கொள்ள முடியாமையை இட்டு வருத்தம்.

 

கிழமை நாட்களின் மாலை நேரங்களுமம் வார இறுதி நாட்களுமே (பாடசாலை விடுமுறை நாட்கள் தவிர) நான் மாணவர்களீற்கான வகுப்புகளை நடத்த முடியும் என்பதால்  இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடிவதில்லை. 

 

 வல்வை அக்காவும் கள உறவுகளும் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்வு சிறப்புற நடந்ததில் மகிழ்ச்சி..

 

கலந்து கொள்ள முடியாமையை இட்டு வருத்தம்.

 

கிழமை நாட்களின் மாலை நேரங்களுமம் வார இறுதி நாட்களுமே (பாடசாலை விடுமுறை நாட்கள் தவிர) நான் மாணவர்களீற்கான வகுப்புகளை நடத்த முடியும் என்பதால்  இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடிவதில்லை. 

 

 வல்வை அக்காவும் கள உறவுகளும் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.

 

மணி உங்களுடைய பணிகள் பற்றி நான் அறிவேன் சங்கடமோ கவலையோ வேண்டாம் . :) உங்களைச்சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்க்கும்போது எனது நூல்களைத்தருகிறேன்.

அனைவரது உரைகளையும் நாளை இங்கு இணைக்கிறேன். எதிர்பார்ப்புடன் இருக்கும் நண்பர்கள் மன்னிப்பார்களாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி... உந்த புத்தகத்தின் பின் பக்கத்தில நாங்கள் எழுதின வாழ்த்துக்கள் வந்திருக்கோ அதையும் ஒருக்கா ஸ்கான் பண்ணி போட்டா நாங்கள் கொடுப்புக்குள்ள சிரிப்பமல்லோ ......:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தக வெளியிடு சிறப்பாக நடை பெற்றதையிட்டு மகிழ்ச்சி.யாயினி,தமிழச்சி போன்றோர் நிகழ்ச்சிக்கு போனது மகிழ்ச்சி.முக்கியமாக யாயினி போனது மகிழ்ச்சி.இனி மேலும் யாயினி இப்படியான பல நிகழ்ச்சிகளுக்கு போக வேண்டும். தமிழச்சியை படத்தில் பார்த்தது மகிழ்ச்சி. எல்லோரும் சொன்ன மாதிரி சகாறா அக்கா மிகவும் அழகாக இருக்கிறார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாழ் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

சகாரா ஒளிப்பதிவுகளை இணையுங்கோ அல்லது உங்கள் ரசிகைகள் மன்றத்தின் சார்பில் உண்ணும் நோன்பு அனுஸ்டிக்கப்படும்.
 
இணையம் என்பது உலகை உள்ளங்கையில் வைத்திருக்கிறது என்கிறார்கள். சகாரா உங்கள் நூல்வெளியீடு மூலம் கள உறவுகளை தரிசிக்க வைத்துள்ளது. 
இனிதாக நடந்துமுடிந்த விழாவினைப் பற்றிய அர்யுன் எழுதிய குறிப்பு போதாது. அழகன் நிழலி , சசி போன்றோரும் எழுதுங்கள்.
 
 
அழகன் நிழலியின் உரைய யாராவது இணையுங்கப்பா ! :lol:
Link to comment
Share on other sites

 

 
 
 
அழகன் நிழலியின் உரைய யாராவது இணையுங்கப்பா ! :lol:

 

 

நான் முதல் மேடை பயத்தில் நடுக்கத்துடன் தள்ளாடுவதை பார்க்க அவ்வளவு ஆசை...  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


 

எழுத்தாளர் தமிழ்நதியின் வேண்டுகோள் கருதி இவ்விடத்தில் அவருடைய உரையை இணைக்கவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.