Jump to content

ஐபோன் 6 & ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்.

 

xfw87l.jpg

 

 

 

நியூயார்க்:

 

பலரும் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ்(6+)ஐ கலிபோர்னியாவில் உள்ள குபர்டினோ நகரில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

ஐபோன் 6 மாடல்களை அறிமுகப்படுத்தி, அந்நிறுவனத்தின் CEO டிம் குக் பேசுகையில், இன்று ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு மாடல்களும் மெலிதாக இருக்கும். ஐபோன் 6 போனின் டிஸ்பிளே 4.7 இன்ச் என்ற அளவிலும், 6 பிளஸ் போன் டிஸ்பிளே 5.5 இன்ச் என்ற அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த போன்கள் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே உள்ளது.

 

இந்த போன்கள் மற்ற போன்களை விட 25 சதவீதம் வேகமாக இருக்கும். இந்த போன்கள் வளைவான முனை கொண்டதாக இருக்கும். ஐபோனுக்காக 1.3 லட்சம் அப்ளிகேசன்கள் உள்ளன. அதிகமாக விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள் ஐபோன்கள் தான். இன்றைய நாள் ஐபோன்கள் வரிசையில் மிகப்பெரிய சாதனை என கூறினார்.

 

 

2w65obd.jpg

 

f3rm1d.jpg

 

 

-தினமலர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Leaked-iphone-6.jpg

 

 

அமீரகத்தில் இதன் (16 ஜிபி) தோராய விலை 3100 திர்ஹாம் (இந்திய விலை ரூ.51ஆயிரம்)  எனவும் இம்மாதம் 20 ந் தேதி வாக்கில் இங்கே சந்தையில் விற்பனைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

iPhone-Size-Comparison-Chart1.png

 

 

வர.வர.... உலகம் சிறிதாகிக் கொண்டு வருகிறதென்று பார்த்தால்......

ஐ போன், பெரிதாகிக் கொண்டு போகுது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'சாம்சங்' கேலக்ஸி கியர் வாட்சுக்கு போட்டியாக, ஆப்பிள் வாட்ச் வேறை வெளியாகுதாம்! :o

 

 

362746-654e3d16-384e-11e4-8c2d-d7bb5a31a

 

362826-34d09aca-384f-11e4-8c2d-d7bb5a31a

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடியலயப்பா..

 

இப்பத்தான்  மாற்றியது

 

அடுத்த தரம்.....?? :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐஃபோன் 6, ஐஃபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள்

 

 ஐஃபோன் விரும்பிகளின் பல நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய ஐஃபோன் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

ஐஃபோன் 6 மற்றும் ஐஃபோன் 6 ப்ளஸ் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இவை, முந்தைய ஐஃபோன்கள் திரையைவிட பெரிய திரையைக் கொண்டுள்ளது. முந்தைய மாடல்களை விட மெலிதாக உள்ளது.

 

இந்தப் புதிய மாடல்கள், சாம்சங் நிறுவன மொபைல்களுக்கு போட்டியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதோடு, நீண்ட காலமாக தொழில்நுட்ப ஆர்வலர்கள் எதிர்பார்த்த, கையில் அணிந்துகொள்ள வாகான ஆப்பிள் வாட்ச், புதிய ஐஃபோன்களோடு அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.

 

காலிபோர்னியா, பிளிண்ட் சென்டரில், 30 வருடங்களுக்கு முன் மேகிண்டாஷ் கணினி அறிமுகம் செய்யப்பட்ட அதே இடத்தில், புதிய ஸ்மார்ட் போன்களும், வாட்சும் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

16 ஜிபி அளவுள்ள ஐஃபோன் 6, 199 டாலர்களுக்கும், அதிகபட்சமாக 128 ஜிபி அளவுள்ள ஐஃபோன் 399 டாலர்களுக்கும் விற்கப்படவுள்ளது. 16 ஜிபி ஐஃபோன் 6 ப்ளஸின் விலை 299 டாலர்களாகவும், அதிகபட்சமாக 128 ஜிபி ஐஃபோன் ப்ளஸ் விலை 499 டாலர்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த போன்கள் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட 6 நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு வருகிறது. செப்டம்பர் 12 முதல் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 

 

இந்தியாவில் எப்போது?

 

 

அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை சமயத்திலோ, நவம்பர் மாதத்திலோ ஐஃபோன் 6 இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 16 ஜிபி ஐஃபோன் 5 எஸ் மாடல், இந்தியாவில் ரூ.41,500-க்கு விற்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் பேசும்போது, "புதிய ஐஃபோன்கள், முந்தைய மாடல்களை விட மெலிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவரை தாங்கள் தயாரித்ததில் இதுதான் சிறந்த மாடல்" என்றார்.

ஐஃபோன் 6 திரையின் நீளம் 4.7 இன்ச், ஐஃபோன் 6 ப்ளஸ் திரையின் நீளம் 5.5 இன்ச். முந்தையை ஐஃபோன் மாடலான 5 எஸ், 7.6 மி.மீ தடிமன் கொண்டது. ஆறாம் தலைமுறை ஐஃபோன் மாடலான 6, 6.9 மி.மீட்டரும், 6 ப்ளஸ் 7.1 மீட்டர் தடிமனும் கொண்டது.

8 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட ஐஃபோன் 6, செல்பி எடுத்துக் கொள்பவர்களுக்கு வசதியாக, முகங்களை சரியாக கண்டுணரும் அம்சத்தைக் கொண்டுள்ளது.

 

 

ஆப்பிள் பே!

இந்த முறை, முக்கியமாக ஆப்பிள் பே (apple pay) என்ற புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் பே மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட், டெபிட் கார்டுகளை, தங்கள் ஐஃபோன்களில் பதிவு செய்து கொண்டால், அதை வைத்தே பண பரிமாற்றங்களை விரைவாகவும், பாதுகாப்போடும் செய்ய முடியும்.

இந்த வசதி தற்போது, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்டர் கார்ட் மற்றும் விசா ஆகிய தளங்களில் மட்டும் வேலை செய்யும். முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் செயல்படுத்தப்படும் இந்த அம்சம், விரைவில் உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்று குக் தெரிவித்தார்.

 

ஆப்பிள் வாட்ச்

 

 

ஆப்பிள் வாட்ச்சில், செயலிகள் பயன்படுத்தவும், பயனர்கள் சொல்வதை எழுத்தாக பதிவு செய்துகொள்ளவும், ஐபோனுடன் இணைந்து செயல்படவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஐபோனில் இருக்கும் இணைய வசதியை பயன்படுத்திக் கொள்ளும் ஆப்பிள் வாட்ச், பயனர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள், அவர்கள் செல்லவிருக்கும் இடத்திற்கு இன்னும் எத்தனை தூரம் போன்ற விவரங்களையும் தருகிறது.

 

 

அடுத்த வருட துவக்கத்தில் விற்பனைக்கு வரும் இதன் விலை 349 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஐஃபோன் 5, 5 சி, 5 எஸ், 6, 6 ப்ளஸ் ஆகிய மாடல்களோடு இணைந்து வேலை செய்யும். ஆப்பிள் வாட் எடிஷன் என்ற பிரத்தியேக மாடல், 18 காரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

தற்போது, ஸ்மார்ட்போன் சந்தையில், சாம்சங் நிறுவனமே 25.2 சதவீத விற்பனையோடு கோலோச்சுகிறது. அதற்கடுத்து ஆப்பிள் 11.9 சதவீத விற்பனையும், வாவே மொபைல்கள் 6.9 சதவீத விற்பனையும் செய்து வருகின்றன. 

 

 

http://tamil.thehindu.com/general/technology/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-6-%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-6-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6397383.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா அய்போனின்ட வடிவை அடிக்கேலாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பிள் விலையையும் அடிக்கேலாது.

 

ஸ்ரிவ் ஜாப்புக்கு பிறகு.. ஆப்பிளின் இனோவேரிவ் தயாரிப்பு என்பது போய்.. கொப்பி அண்ட் பேஸ்ட் என்று வந்து நிற்குது. இது ஆப்பிளுக்கு பெரும் பின்னடைவு எனலாம்.

 

இனோவேசன் இல்லை என்றால் ஆப்பிள் தொடர்ந்து ஐபோன் மற்றும் ராப்லட்டுக்கள் சார்ந்து வாடிக்கையாளர்களை இழக்கும். காரணம் ஆப்பிளை விட திறமான போன்கள்.. மலிவாகவும்.. இலகுவிலும் கிடைத்து விடுகின்றன. இந்த நிலையை முறியடிக்க இன்றைய ஆப்பிள் நிர்வாகத்திடம்.. ஒரு உருப்படியான திட்டமும் இல்லை..!!! :o:icon_idea:

 

சாம்சங்கை சரிக்கட்டுவதில் ஆப்பிள் இப்போது கவனம் எடுத்திருப்பது.. சாம்சங்கிற்கு நல்ல சமிக்ஞைகளை வாடிக்கையாளர்கள் மத்தியில் வழங்கும். அத்தோடு சாம்சங் உட்பட மற்றைய போன்கள் ஆப்பிளின் விலையை காட்டியே முன்னுக்கு வந்துவிடுவார்கள்..!!! :rolleyes::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவைதவிர மற்றவிதத்தில் குப்பை வேலைக்கு கிளம்பேக்கிலையே சார்ஜ் இருக்கா என அடிக்கடி பார்க்கனும் மதியத்துக்கு பிறகு அடிக்கட்டைக்கு பற்றி போயிடும் வேலை முடிந்து காரில் வருபவர்களை கவனித்தால் கார்சார்ச்சரையும் ஜபோனையும் கொழுவுவதில் மும்முரமாய் அந்த வாகன நெரிசலுக்குள் இருந்து கொள்ளுபடுவார்கள் .  

 

 பற்றி பிரச்சினையால் அதிக லாபமீட்டுவது நெட்வோர்க் கொம்பனிகள் தான் மாலைநேர பீக் ரைம் அதிக பழு இல்லாமால் இருக்கும் என நினைக்கிறன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவைதவிர மற்றவிதத்தில் குப்பை வேலைக்கு கிளம்பேக்கிலையே சார்ஜ் இருக்கா என அடிக்கடி பார்க்கனும் மதியத்துக்கு பிறகு அடிக்கட்டைக்கு பற்றி போயிடும் வேலை முடிந்து காரில் வருபவர்களை கவனித்தால் கார்சார்ச்சரையும் ஜபோனையும் கொழுவுவதில் மும்முரமாய் அந்த வாகன நெரிசலுக்குள் இருந்து கொள்ளுபடுவார்கள் .  

 

 பற்றி பிரச்சினையால் அதிக லாபமீட்டுவது நெட்வோர்க் கொம்பனிகள் தான் மாலைநேர பீக் ரைம் அதிக பழு இல்லாமால் இருக்கும் என நினைக்கிறன். :rolleyes:

 

 

அது மட்டுமா  ஐயா

 

வீதியில் பயமில்லாமல் கதைக்கமுடியாது..

வேலையில் அங்க இஞ்ச மறந்து வைக்கமுடியாது

கண்ட இடத்தில  சார்ச் செய்யமுடியாது

கார் முன் சீற்றில வைச்சுவிட்டு அதை பார்த்தபடி  இருக்கணும்... :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி கூடிப் போயிற்றுது! :D "மூலை வட்டமாக இருக்கும்" என்கிற உப்புச் சப்பில்லாத தகவல்களையெல்லாம் சொல்லி புதிய பொருளை விற்க வேண்டிய நிலை! நெடுக்குச் சொன்னது போல எதை மாற்றினால் என்ன? என்னைப் போல கஞ்சர்கள் குடுக்கிற காசுக்கு என்ன மேலதிகமாகக் கிடைக்கும் எண்டு தான் தேடுவம், அதனால் சாம்சங்கும், கூகிள் நெக்சசும் எப்பவும் விற்பனையை அப்பிளிடம் இழக்க மாட்டா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Apple அப்பிள் தான் :D கிட்டவும் நெருங்கேலாது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Apple அப்பிள் தான் :D கிட்டவும் நெருங்கேலாது :lol:

 

உண்மை தான்! என்னைப் போன்ற ஏழைகளுக்கு கிட்டவும் நெருங்க இயலாது! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச பிச்சைக்காரனும் Apple வைத்திருக்கிறான்....

Link to comment
Share on other sites

உண்மை தான்! என்னைப் போன்ற ஏழைகளுக்கு கிட்டவும் நெருங்க இயலாது! :D

 

ஜஸ்ரினின் கஞ்சத்தனம் (சோம்பேறித்தனம்) இதிலிருந்தே தெரிகிறது.  ஐபோனுக்கே இப்படியா?  இரண்டு, மூன்று வேலை செய்தாவது ஐபோன் வாங்க மாட்டோம்   :icon_idea:  :icon_idea:  :icon_idea:  2-3 மாதம் Pizza Delivery செய்தால் போச்சு  :icon_idea:  :icon_idea:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதை சொல்லுறன்...இண்டு வரைக்கும் ஐ போனை தொட்டு பாத்தது கூட இல்லை.....தேவையுமில்லை...தேவைக்கு...பாதுகாப்புக்கு ஒரு போன் கையிலை இருக்கு.. :)  :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதை சொல்லுறன்...இண்டு வரைக்கும் ஐ போனை தொட்டு பாத்தது கூட இல்லை.....தேவையுமில்லை...தேவைக்கு...பாதுகாப்புக்கு ஒரு போன் கையிலை இருக்கு.. :)  :D  :icon_idea:

 

தேவைக்கு.... என்றது, புரியுது.

அது என்ன... பாதுகாப்புக்கு, என்றது புரியவில்லை. :D

Link to comment
Share on other sites

தேவைக்கு.... என்றது, புரியுது.

அது என்ன... பாதுகாப்புக்கு, என்றது புரியவில்லை. :D

 

யாரும் சண்டைக்கு வந்தால் அதாலேயே எறிஞ்சு விழுத்தலாம்.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் சண்டைக்கு வந்தால் அதாலேயே எறிஞ்சு விழுத்தலாம்.  :D

 

400px-Mobile_phone_evolution.jpg

 

குமாரசாமி அண்ணை, இப்பிடியான.... தொலைபேசியா வைச்சிருக்கிறார்? :D

அவர் ஜேர்மனியிலை வசிக்கிறன் என்று, இனி சொல்லப்படாது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

400px-Mobile_phone_evolution.jpg

 

குமாரசாமி அண்ணை, இப்பிடியான.... தொலைபேசியா வைச்சிருக்கிறார்? :D

அவர் ஜேர்மனியிலை வசிக்கிறன் என்று, இனி சொல்லப்படாது. :lol:

 

இந்தப் படத்தில் முன்னுக்கு இருக்கிறது மாதிரி (நீலம் சிறியது)  ஒரு நோக்கியா போன் வைத்திருந்தன். ஒருக்கால் சார்ஜ்ஜில் போட்டால் மூண்டு நாள் நிக்கும். கடைசிச் சொட்டு சார்ஜ் இருக்கும் வரை நம்பிக் கதைக்கலாம் ஒரு வருடத்துக்குள் ஏதொ எமது விசேசமான நாள் வரேக்க பிள்ளைகள் சேர்ந்து ஒரு சம்சுங்  கலக்ஸி ட்ரென்ட்,  தொடுதிரை போன் வாங்கித் தந்தார்கள். அது ஒவ்வொரு நாளும் சார்ஜில போடவேணும். சார்ஜ் 20% வந்தால் அடுத்த இரண்டு நிமிசத்தில அமாவாசைதான். இப்ப பழசைத் தேடிப் பார்க்கிறன் இன்னும் கிடைக்கேல்ல...!  :unsure::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தில் முன்னுக்கு இருக்கிறது மாதிரி (நீலம் சிறியது)  ஒரு நோக்கியா போன் வைத்திருந்தன். ஒருக்கால் சார்ஜ்ஜில் போட்டால் மூண்டு நாள் நிக்கும். கடைசிச் சொட்டு சார்ஜ் இருக்கும் வரை நம்பிக் கதைக்கலாம் ஒரு வருடத்துக்குள் ஏதொ எமது விசேசமான நாள் வரேக்க பிள்ளைகள் சேர்ந்து ஒரு சம்சுங்  கலக்ஸி ட்ரென்ட்,  தொடுதிரை போன் வாங்கித் தந்தார்கள். அது ஒவ்வொரு நாளும் சார்ஜில போடவேணும். சார்ஜ் 20% வந்தால் அடுத்த இரண்டு நிமிசத்தில அமாவாசைதான். இப்ப பழசைத் தேடிப் பார்க்கிறன் இன்னும் கிடைக்கேல்ல...!  :unsure::)

 

நான்..... கடந்த, ஆறு மாதமாகத்தான்,  தவிர்க்க முடியாத காரணத்தால் கைத்தொலைபேசியே.... வைத்திருக்கின்றேன்.

பேர் தான்.... கைத்தொலை பேசியே தவிர, அது எனது Rucksack ற்குள் தான் இருக்கும்.

மத்தியான இடைவேளைக்கு தான், ஆராவது அடித்துப் பார்த்திருக்கிறார்களா என்று பார்ப்பேன்.

கிழமைக்கு, இரண்டு அழைப்புக்கு மேல்.... இதுவரை வந்ததில்லை :D.

ஏனென்றால்... அந்த நம்பர், என்ரை மனிசிக்கு மட்டும் தான் தெரியும். :lol:

 

இது தான், எனது கைத்தொலைபேசி (Nokia C2-05). எப்பிடி... நல்லாயிருக்கா?5a0129d7e0c782d7.jpeg:rolleyes:

Link to comment
Share on other sites

இந்தப் படத்தில் முன்னுக்கு இருக்கிறது மாதிரி (நீலம் சிறியது)  ஒரு நோக்கியா போன் வைத்திருந்தன். ஒருக்கால் சார்ஜ்ஜில் போட்டால் மூண்டு நாள் நிக்கும். கடைசிச் சொட்டு சார்ஜ் இருக்கும் வரை நம்பிக் கதைக்கலாம் ஒரு வருடத்துக்குள் ஏதொ எமது விசேசமான நாள் வரேக்க பிள்ளைகள் சேர்ந்து ஒரு சம்சுங்  கலக்ஸி ட்ரென்ட்,  தொடுதிரை போன் வாங்கித் தந்தார்கள். அது ஒவ்வொரு நாளும் சார்ஜில போடவேணும். சார்ஜ் 20% வந்தால் அடுத்த இரண்டு நிமிசத்தில அமாவாசைதான். இப்ப பழசைத் தேடிப் பார்க்கிறன் இன்னும் கிடைக்கேல்ல...!  :unsure::)

 

மற்றது, இந்த பழைய நீல போன் எத்தனை முறை கீழே விழுந்தாழும் உடையாமல் அசராமல் நிற்கும். தூக்கி எறிஞ்சு விளையாடக் கூட முடியும்.

இப்ப வரும் போன்கள் கீழே விழுந்தால் அவ்வளவு தான்.

 

நான் ஒரு முறை என் Blackberry யை மூத்தா பெய்யும் போது கொமர்ட்டுக்குள் விழுத்தி விட்டேன். பிறகு வெளியே எடுத்து ஒரு பைக்குள் அரிசியை நிரப்பி அதனுள் போனைப் போட்டு காய வைத்து 24 மணி நேரத்தின் பின் வேலை செஞ்சது. :) 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.