Jump to content

ஐபோன் 6 & ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்.

 

xfw87l.jpg

 

 

 

நியூயார்க்:

 

பலரும் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ்(6+)ஐ கலிபோர்னியாவில் உள்ள குபர்டினோ நகரில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

ஐபோன் 6 மாடல்களை அறிமுகப்படுத்தி, அந்நிறுவனத்தின் CEO டிம் குக் பேசுகையில், இன்று ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு மாடல்களும் மெலிதாக இருக்கும். ஐபோன் 6 போனின் டிஸ்பிளே 4.7 இன்ச் என்ற அளவிலும், 6 பிளஸ் போன் டிஸ்பிளே 5.5 இன்ச் என்ற அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த போன்கள் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே உள்ளது.

 

இந்த போன்கள் மற்ற போன்களை விட 25 சதவீதம் வேகமாக இருக்கும். இந்த போன்கள் வளைவான முனை கொண்டதாக இருக்கும். ஐபோனுக்காக 1.3 லட்சம் அப்ளிகேசன்கள் உள்ளன. அதிகமாக விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள் ஐபோன்கள் தான். இன்றைய நாள் ஐபோன்கள் வரிசையில் மிகப்பெரிய சாதனை என கூறினார்.

 

 

2w65obd.jpg

 

f3rm1d.jpg

 

 

-தினமலர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Leaked-iphone-6.jpg

 

 

அமீரகத்தில் இதன் (16 ஜிபி) தோராய விலை 3100 திர்ஹாம் (இந்திய விலை ரூ.51ஆயிரம்)  எனவும் இம்மாதம் 20 ந் தேதி வாக்கில் இங்கே சந்தையில் விற்பனைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

iPhone-Size-Comparison-Chart1.png

 

 

வர.வர.... உலகம் சிறிதாகிக் கொண்டு வருகிறதென்று பார்த்தால்......

ஐ போன், பெரிதாகிக் கொண்டு போகுது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'சாம்சங்' கேலக்ஸி கியர் வாட்சுக்கு போட்டியாக, ஆப்பிள் வாட்ச் வேறை வெளியாகுதாம்! :o

 

 

362746-654e3d16-384e-11e4-8c2d-d7bb5a31a

 

362826-34d09aca-384f-11e4-8c2d-d7bb5a31a

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடியலயப்பா..

 

இப்பத்தான்  மாற்றியது

 

அடுத்த தரம்.....?? :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐஃபோன் 6, ஐஃபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள்

 

 ஐஃபோன் விரும்பிகளின் பல நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய ஐஃபோன் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

ஐஃபோன் 6 மற்றும் ஐஃபோன் 6 ப்ளஸ் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இவை, முந்தைய ஐஃபோன்கள் திரையைவிட பெரிய திரையைக் கொண்டுள்ளது. முந்தைய மாடல்களை விட மெலிதாக உள்ளது.

 

இந்தப் புதிய மாடல்கள், சாம்சங் நிறுவன மொபைல்களுக்கு போட்டியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதோடு, நீண்ட காலமாக தொழில்நுட்ப ஆர்வலர்கள் எதிர்பார்த்த, கையில் அணிந்துகொள்ள வாகான ஆப்பிள் வாட்ச், புதிய ஐஃபோன்களோடு அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.

 

காலிபோர்னியா, பிளிண்ட் சென்டரில், 30 வருடங்களுக்கு முன் மேகிண்டாஷ் கணினி அறிமுகம் செய்யப்பட்ட அதே இடத்தில், புதிய ஸ்மார்ட் போன்களும், வாட்சும் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

16 ஜிபி அளவுள்ள ஐஃபோன் 6, 199 டாலர்களுக்கும், அதிகபட்சமாக 128 ஜிபி அளவுள்ள ஐஃபோன் 399 டாலர்களுக்கும் விற்கப்படவுள்ளது. 16 ஜிபி ஐஃபோன் 6 ப்ளஸின் விலை 299 டாலர்களாகவும், அதிகபட்சமாக 128 ஜிபி ஐஃபோன் ப்ளஸ் விலை 499 டாலர்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த போன்கள் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட 6 நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு வருகிறது. செப்டம்பர் 12 முதல் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 

 

இந்தியாவில் எப்போது?

 

 

அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை சமயத்திலோ, நவம்பர் மாதத்திலோ ஐஃபோன் 6 இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 16 ஜிபி ஐஃபோன் 5 எஸ் மாடல், இந்தியாவில் ரூ.41,500-க்கு விற்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் பேசும்போது, "புதிய ஐஃபோன்கள், முந்தைய மாடல்களை விட மெலிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவரை தாங்கள் தயாரித்ததில் இதுதான் சிறந்த மாடல்" என்றார்.

ஐஃபோன் 6 திரையின் நீளம் 4.7 இன்ச், ஐஃபோன் 6 ப்ளஸ் திரையின் நீளம் 5.5 இன்ச். முந்தையை ஐஃபோன் மாடலான 5 எஸ், 7.6 மி.மீ தடிமன் கொண்டது. ஆறாம் தலைமுறை ஐஃபோன் மாடலான 6, 6.9 மி.மீட்டரும், 6 ப்ளஸ் 7.1 மீட்டர் தடிமனும் கொண்டது.

8 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட ஐஃபோன் 6, செல்பி எடுத்துக் கொள்பவர்களுக்கு வசதியாக, முகங்களை சரியாக கண்டுணரும் அம்சத்தைக் கொண்டுள்ளது.

 

 

ஆப்பிள் பே!

இந்த முறை, முக்கியமாக ஆப்பிள் பே (apple pay) என்ற புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் பே மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட், டெபிட் கார்டுகளை, தங்கள் ஐஃபோன்களில் பதிவு செய்து கொண்டால், அதை வைத்தே பண பரிமாற்றங்களை விரைவாகவும், பாதுகாப்போடும் செய்ய முடியும்.

இந்த வசதி தற்போது, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்டர் கார்ட் மற்றும் விசா ஆகிய தளங்களில் மட்டும் வேலை செய்யும். முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் செயல்படுத்தப்படும் இந்த அம்சம், விரைவில் உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்று குக் தெரிவித்தார்.

 

ஆப்பிள் வாட்ச்

 

 

ஆப்பிள் வாட்ச்சில், செயலிகள் பயன்படுத்தவும், பயனர்கள் சொல்வதை எழுத்தாக பதிவு செய்துகொள்ளவும், ஐபோனுடன் இணைந்து செயல்படவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஐபோனில் இருக்கும் இணைய வசதியை பயன்படுத்திக் கொள்ளும் ஆப்பிள் வாட்ச், பயனர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள், அவர்கள் செல்லவிருக்கும் இடத்திற்கு இன்னும் எத்தனை தூரம் போன்ற விவரங்களையும் தருகிறது.

 

 

அடுத்த வருட துவக்கத்தில் விற்பனைக்கு வரும் இதன் விலை 349 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஐஃபோன் 5, 5 சி, 5 எஸ், 6, 6 ப்ளஸ் ஆகிய மாடல்களோடு இணைந்து வேலை செய்யும். ஆப்பிள் வாட் எடிஷன் என்ற பிரத்தியேக மாடல், 18 காரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

தற்போது, ஸ்மார்ட்போன் சந்தையில், சாம்சங் நிறுவனமே 25.2 சதவீத விற்பனையோடு கோலோச்சுகிறது. அதற்கடுத்து ஆப்பிள் 11.9 சதவீத விற்பனையும், வாவே மொபைல்கள் 6.9 சதவீத விற்பனையும் செய்து வருகின்றன. 

 

 

http://tamil.thehindu.com/general/technology/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-6-%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-6-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6397383.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா அய்போனின்ட வடிவை அடிக்கேலாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பிள் விலையையும் அடிக்கேலாது.

 

ஸ்ரிவ் ஜாப்புக்கு பிறகு.. ஆப்பிளின் இனோவேரிவ் தயாரிப்பு என்பது போய்.. கொப்பி அண்ட் பேஸ்ட் என்று வந்து நிற்குது. இது ஆப்பிளுக்கு பெரும் பின்னடைவு எனலாம்.

 

இனோவேசன் இல்லை என்றால் ஆப்பிள் தொடர்ந்து ஐபோன் மற்றும் ராப்லட்டுக்கள் சார்ந்து வாடிக்கையாளர்களை இழக்கும். காரணம் ஆப்பிளை விட திறமான போன்கள்.. மலிவாகவும்.. இலகுவிலும் கிடைத்து விடுகின்றன. இந்த நிலையை முறியடிக்க இன்றைய ஆப்பிள் நிர்வாகத்திடம்.. ஒரு உருப்படியான திட்டமும் இல்லை..!!! :o:icon_idea:

 

சாம்சங்கை சரிக்கட்டுவதில் ஆப்பிள் இப்போது கவனம் எடுத்திருப்பது.. சாம்சங்கிற்கு நல்ல சமிக்ஞைகளை வாடிக்கையாளர்கள் மத்தியில் வழங்கும். அத்தோடு சாம்சங் உட்பட மற்றைய போன்கள் ஆப்பிளின் விலையை காட்டியே முன்னுக்கு வந்துவிடுவார்கள்..!!! :rolleyes::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவைதவிர மற்றவிதத்தில் குப்பை வேலைக்கு கிளம்பேக்கிலையே சார்ஜ் இருக்கா என அடிக்கடி பார்க்கனும் மதியத்துக்கு பிறகு அடிக்கட்டைக்கு பற்றி போயிடும் வேலை முடிந்து காரில் வருபவர்களை கவனித்தால் கார்சார்ச்சரையும் ஜபோனையும் கொழுவுவதில் மும்முரமாய் அந்த வாகன நெரிசலுக்குள் இருந்து கொள்ளுபடுவார்கள் .  

 

 பற்றி பிரச்சினையால் அதிக லாபமீட்டுவது நெட்வோர்க் கொம்பனிகள் தான் மாலைநேர பீக் ரைம் அதிக பழு இல்லாமால் இருக்கும் என நினைக்கிறன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவைதவிர மற்றவிதத்தில் குப்பை வேலைக்கு கிளம்பேக்கிலையே சார்ஜ் இருக்கா என அடிக்கடி பார்க்கனும் மதியத்துக்கு பிறகு அடிக்கட்டைக்கு பற்றி போயிடும் வேலை முடிந்து காரில் வருபவர்களை கவனித்தால் கார்சார்ச்சரையும் ஜபோனையும் கொழுவுவதில் மும்முரமாய் அந்த வாகன நெரிசலுக்குள் இருந்து கொள்ளுபடுவார்கள் .  

 

 பற்றி பிரச்சினையால் அதிக லாபமீட்டுவது நெட்வோர்க் கொம்பனிகள் தான் மாலைநேர பீக் ரைம் அதிக பழு இல்லாமால் இருக்கும் என நினைக்கிறன். :rolleyes:

 

 

அது மட்டுமா  ஐயா

 

வீதியில் பயமில்லாமல் கதைக்கமுடியாது..

வேலையில் அங்க இஞ்ச மறந்து வைக்கமுடியாது

கண்ட இடத்தில  சார்ச் செய்யமுடியாது

கார் முன் சீற்றில வைச்சுவிட்டு அதை பார்த்தபடி  இருக்கணும்... :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி கூடிப் போயிற்றுது! :D "மூலை வட்டமாக இருக்கும்" என்கிற உப்புச் சப்பில்லாத தகவல்களையெல்லாம் சொல்லி புதிய பொருளை விற்க வேண்டிய நிலை! நெடுக்குச் சொன்னது போல எதை மாற்றினால் என்ன? என்னைப் போல கஞ்சர்கள் குடுக்கிற காசுக்கு என்ன மேலதிகமாகக் கிடைக்கும் எண்டு தான் தேடுவம், அதனால் சாம்சங்கும், கூகிள் நெக்சசும் எப்பவும் விற்பனையை அப்பிளிடம் இழக்க மாட்டா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Apple அப்பிள் தான் :D கிட்டவும் நெருங்கேலாது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Apple அப்பிள் தான் :D கிட்டவும் நெருங்கேலாது :lol:

 

உண்மை தான்! என்னைப் போன்ற ஏழைகளுக்கு கிட்டவும் நெருங்க இயலாது! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச பிச்சைக்காரனும் Apple வைத்திருக்கிறான்....

Link to comment
Share on other sites

உண்மை தான்! என்னைப் போன்ற ஏழைகளுக்கு கிட்டவும் நெருங்க இயலாது! :D

 

ஜஸ்ரினின் கஞ்சத்தனம் (சோம்பேறித்தனம்) இதிலிருந்தே தெரிகிறது.  ஐபோனுக்கே இப்படியா?  இரண்டு, மூன்று வேலை செய்தாவது ஐபோன் வாங்க மாட்டோம்   :icon_idea:  :icon_idea:  :icon_idea:  2-3 மாதம் Pizza Delivery செய்தால் போச்சு  :icon_idea:  :icon_idea:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதை சொல்லுறன்...இண்டு வரைக்கும் ஐ போனை தொட்டு பாத்தது கூட இல்லை.....தேவையுமில்லை...தேவைக்கு...பாதுகாப்புக்கு ஒரு போன் கையிலை இருக்கு.. :)  :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதை சொல்லுறன்...இண்டு வரைக்கும் ஐ போனை தொட்டு பாத்தது கூட இல்லை.....தேவையுமில்லை...தேவைக்கு...பாதுகாப்புக்கு ஒரு போன் கையிலை இருக்கு.. :)  :D  :icon_idea:

 

தேவைக்கு.... என்றது, புரியுது.

அது என்ன... பாதுகாப்புக்கு, என்றது புரியவில்லை. :D

Link to comment
Share on other sites

தேவைக்கு.... என்றது, புரியுது.

அது என்ன... பாதுகாப்புக்கு, என்றது புரியவில்லை. :D

 

யாரும் சண்டைக்கு வந்தால் அதாலேயே எறிஞ்சு விழுத்தலாம்.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் சண்டைக்கு வந்தால் அதாலேயே எறிஞ்சு விழுத்தலாம்.  :D

 

400px-Mobile_phone_evolution.jpg

 

குமாரசாமி அண்ணை, இப்பிடியான.... தொலைபேசியா வைச்சிருக்கிறார்? :D

அவர் ஜேர்மனியிலை வசிக்கிறன் என்று, இனி சொல்லப்படாது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

400px-Mobile_phone_evolution.jpg

 

குமாரசாமி அண்ணை, இப்பிடியான.... தொலைபேசியா வைச்சிருக்கிறார்? :D

அவர் ஜேர்மனியிலை வசிக்கிறன் என்று, இனி சொல்லப்படாது. :lol:

 

இந்தப் படத்தில் முன்னுக்கு இருக்கிறது மாதிரி (நீலம் சிறியது)  ஒரு நோக்கியா போன் வைத்திருந்தன். ஒருக்கால் சார்ஜ்ஜில் போட்டால் மூண்டு நாள் நிக்கும். கடைசிச் சொட்டு சார்ஜ் இருக்கும் வரை நம்பிக் கதைக்கலாம் ஒரு வருடத்துக்குள் ஏதொ எமது விசேசமான நாள் வரேக்க பிள்ளைகள் சேர்ந்து ஒரு சம்சுங்  கலக்ஸி ட்ரென்ட்,  தொடுதிரை போன் வாங்கித் தந்தார்கள். அது ஒவ்வொரு நாளும் சார்ஜில போடவேணும். சார்ஜ் 20% வந்தால் அடுத்த இரண்டு நிமிசத்தில அமாவாசைதான். இப்ப பழசைத் தேடிப் பார்க்கிறன் இன்னும் கிடைக்கேல்ல...!  :unsure::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தில் முன்னுக்கு இருக்கிறது மாதிரி (நீலம் சிறியது)  ஒரு நோக்கியா போன் வைத்திருந்தன். ஒருக்கால் சார்ஜ்ஜில் போட்டால் மூண்டு நாள் நிக்கும். கடைசிச் சொட்டு சார்ஜ் இருக்கும் வரை நம்பிக் கதைக்கலாம் ஒரு வருடத்துக்குள் ஏதொ எமது விசேசமான நாள் வரேக்க பிள்ளைகள் சேர்ந்து ஒரு சம்சுங்  கலக்ஸி ட்ரென்ட்,  தொடுதிரை போன் வாங்கித் தந்தார்கள். அது ஒவ்வொரு நாளும் சார்ஜில போடவேணும். சார்ஜ் 20% வந்தால் அடுத்த இரண்டு நிமிசத்தில அமாவாசைதான். இப்ப பழசைத் தேடிப் பார்க்கிறன் இன்னும் கிடைக்கேல்ல...!  :unsure::)

 

நான்..... கடந்த, ஆறு மாதமாகத்தான்,  தவிர்க்க முடியாத காரணத்தால் கைத்தொலைபேசியே.... வைத்திருக்கின்றேன்.

பேர் தான்.... கைத்தொலை பேசியே தவிர, அது எனது Rucksack ற்குள் தான் இருக்கும்.

மத்தியான இடைவேளைக்கு தான், ஆராவது அடித்துப் பார்த்திருக்கிறார்களா என்று பார்ப்பேன்.

கிழமைக்கு, இரண்டு அழைப்புக்கு மேல்.... இதுவரை வந்ததில்லை :D.

ஏனென்றால்... அந்த நம்பர், என்ரை மனிசிக்கு மட்டும் தான் தெரியும். :lol:

 

இது தான், எனது கைத்தொலைபேசி (Nokia C2-05). எப்பிடி... நல்லாயிருக்கா?5a0129d7e0c782d7.jpeg:rolleyes:

Link to comment
Share on other sites

இந்தப் படத்தில் முன்னுக்கு இருக்கிறது மாதிரி (நீலம் சிறியது)  ஒரு நோக்கியா போன் வைத்திருந்தன். ஒருக்கால் சார்ஜ்ஜில் போட்டால் மூண்டு நாள் நிக்கும். கடைசிச் சொட்டு சார்ஜ் இருக்கும் வரை நம்பிக் கதைக்கலாம் ஒரு வருடத்துக்குள் ஏதொ எமது விசேசமான நாள் வரேக்க பிள்ளைகள் சேர்ந்து ஒரு சம்சுங்  கலக்ஸி ட்ரென்ட்,  தொடுதிரை போன் வாங்கித் தந்தார்கள். அது ஒவ்வொரு நாளும் சார்ஜில போடவேணும். சார்ஜ் 20% வந்தால் அடுத்த இரண்டு நிமிசத்தில அமாவாசைதான். இப்ப பழசைத் தேடிப் பார்க்கிறன் இன்னும் கிடைக்கேல்ல...!  :unsure::)

 

மற்றது, இந்த பழைய நீல போன் எத்தனை முறை கீழே விழுந்தாழும் உடையாமல் அசராமல் நிற்கும். தூக்கி எறிஞ்சு விளையாடக் கூட முடியும்.

இப்ப வரும் போன்கள் கீழே விழுந்தால் அவ்வளவு தான்.

 

நான் ஒரு முறை என் Blackberry யை மூத்தா பெய்யும் போது கொமர்ட்டுக்குள் விழுத்தி விட்டேன். பிறகு வெளியே எடுத்து ஒரு பைக்குள் அரிசியை நிரப்பி அதனுள் போனைப் போட்டு காய வைத்து 24 மணி நேரத்தின் பின் வேலை செஞ்சது. :) 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.