Jump to content

கனடா தமிழ் பெண்ணிற்கு ஜோதிடரால் வந்த துயரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கனடா தமிழ் பெண்ணிற்கு ஜோதிடரால் வந்த துயரம்
Ca.Thamil Cathamil September 15, 2014 Canada
 
கனடா ரொரொன்ரோ நோத்ஜோக் பகுதியில் தனது கணவன் மற்றும் பிள்ளையின் ஜாதகங்களைக் கொண்டு சென்ற 38 வயதான தமிழ் குடும்பப் பெண் ஒருவரை கணவனுக்கு கண்டம் இருக்கின்றது எனத் தெரிவித்து பெண்ணைக் கண்டம் பண்ணியுள்ளான் ஜோதிடன்.
 
அப் பகுதி ஜோதிட நிலையத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. 30 வயதான ஜோதிடரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
 
இவனிடம் ஜோதிடம் பார்க்கச் சென்ற குடும்பப் பெண்ணை கணவா் 6 மாதத்துக்குள் மரணமடைந்து விடுவார் என பயமுறுத்தி அதற்கு பரிகாரமாக இன்னொருவருடன் உடலுறவு செய்தால் கணவா் தப்பிவிடுவார் எனத் தெரிவித்து குறித்த குடும்பப் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உறவு கொண்ட பின் பல தடவைகள் அப் பெண்ணை அழைத்து பரிகாரம் என்ற பெயரில் உடலுறவு கொள்ளவே சந்தேகப்பட்ட பெண் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.
 
இவரைக் கைது செய்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா். எதிர்வரும் 22ம் திகதி இவரை நீதிமன்றில் ஆயா்படுத்த நடவடிக்கை எடுத்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனா். குறித்த ஜோதிடா் மேலும் பல பெண்களை இவ்வாறு தெரிவித்து பாலியல் உறவு கொண்டதாகத் தெரியவருகின்றது.
 
Link to comment
Share on other sites

பெண் ரொம்ப லேட் பிக்கப்பா இருக்கிறாரே.. :o:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவுக்குப்பின்னர் எதுக்கு காவல்த்துறை....?? :(

Link to comment
Share on other sites

இது காவல்துறையிடம் சென்றது மிகவும் நல்ல விடயமே.   இப்படியெல்லாம் ஏமாறும் பெண்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது மிகவும் வெட்கமாக இருக்கிறது.   இப்படியான பரிகாரங்களை எல்லாம் நம்புவார்களா என்ன?  

 

இதற்குப் பின்னராவது இந்தியாவிலிருந்து படையெடுக்கும் ஜோசியர்களின் எண்ணிக்கை குறையட்டும்.   இந்தச் செய்தி மற்றையவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும் என்று நினைக்கிறேன்.   

Link to comment
Share on other sites

ஆஹா.... சூப்பர் ஐடியா..

 

'நிழலியானந்த சரஸ்வதி சாஸ்திர மகா நிலையம்' என்ற ஒரு சாத்திர மடம் ஒன்றை கட்டி விரைவில் பிசினஸ்சை ஆரம்பிக்க வேண்டியதுதான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.... சூப்பர் ஐடியா..

 

'நிழலியானந்த சரஸ்வதி சாஸ்திர மகா நிலையம்' என்ற ஒரு சாத்திர மடம் ஒன்றை கட்டி விரைவில் பிசினஸ்சை ஆரம்பிக்க வேண்டியதுதான்...

 

ஆகா, அஸ்க்கு பிஸ்க்கு....
 
நீண்ட விடுமுறையில் சென்று வந்தால், நல்ல செய்தி.
 
இமயம் சென்று சோதிட சாத்திரம் கசடறக் கற்று வந்துள்ள 'கண்டம் அறுப்பார்' சோதிடர் சிரோமணி 'நாதமுனி' என்று ஒக்கார வேண்டியது தான்.
 
அப்பெரசண்டிங்களா யாராச்சும் வர விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கப்பா.
 
10 வருடங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டில் இப்படி ஒரு ஒருத்தர் 'பாம்புச் சாமியார்' என்ற பெயரில் புகுந்து விளையாடி விட்டார்.
 
முட்டாள் தனமாக போலிஸ் அதிகாரி மனைவி மேல கையை வைக்க, கைது பண்ணி சாத்து படி போட்டார்கள். 
 
நீதி மன்றில் இவ்வளவு பெண்களை நாசப் படுத்திப் போட்டாயே என்று கேட்ட போது  'ஐயா, பெண்ணுங்களா, இதுக, பிடாரிங்க ஒருமுறை வந்தால், ஆசையில திருப்பி வாறது, இப்ப நம்ள இங்க நிப்பாட்டி பிட்டாளுங்க' என்று போட்டாரே ஒரு போடு.
 
:wub:  :D  :icon_mrgreen:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்களிலும் நிறையப் பிழைகள் இருப்பதனால் தான் இப்படியானவர்களின் சேட்டைகள் தொடர்கிறது.வீட்டில் ஒரு சின்னப் பிரச்சனை என்றதும் அதனை தீர்க்கத் தெரியாமல் தொடர வைக்கிறது.அது தொடர்ந்ததும் கோயில்,கோயிலா திரியனும் ஐயனுக்கு பணம்,பணமா அள்ளிக் கொட்டனும் அல்லது சாத்திரிக்கு கொட்டனும்.. சிலர் வளர் முக நாடுகளுக்கு வந்தும் முன்னேறாமல் இருப்பதற்கு இவர்கள் மனத்தில் இருக்கும் மனக் குறைகள் தான் காரணம் என்று சொல்லாம்..இப்போ எல்லாம் சில மோல்களுக்குள்  போனால் பின்னால் திரத்திக் கொண்டு வருகிறார்கள்....ஏன்  அவர்களுக்கு புரிகிறது  நம்மவர்களை இலகுவா ஏமாற்றலாம்.......

ஒரு பெண் வேறு ஒருவரதும் உதவியின்றி அந்த சாத்திரியிடம் எதற்காக போனார்....இப்படி எல்லாம் நடப்பதற்கு யாரு காரணியாக இருக்கிறோம் நாங்கள் தானே...வீட்டு பேஸ்மன்ற் சும்மா கிடக்கா ஆ... ஒரு கள்ளச் சாத்திரியைக் கூப்பிடால் போச்சு....கடையில ஒரு பகுதி சும்மா கிடக்குதா அதுக்கும் ஒரு சாத்திரியை கூப்பிட்டால் போச்சு..கூப்பிட்டு விடுகிறவர்களுக்கு காசு தொல்லை பாதியளவாவது குறைஞ்சுடும்...உலகத்தில் இல்லாத தோசம் எல்லாம் இருக்கு என்று சொல்லித் தான் சனத்தின்ட மண்டையைக் கழுவிறது. ஊரில் உள்ள விளப்பம் இல்லாததுகள் மாதிரி நடக்கிற சனத்தின்ட மண்டையைக் கழுவிட்டுத் தானே விடுகிறார்கள்...யார் என்றே தெரியாத ஒருவர்,எங்கயோ கிடந்து வந்த ஒருவர் சொல்வதற்கு எல்லாம் எப்படி அந்தப் பெண் சம்மதிப்பார்..முன் பின் தெரியாத ஆணுக்கு கிட்டப் போக எப்படி மனசு வரும்....

 

ஒரு வைத்தியத்தால் கடவுளுக்கு அடுத்த படியாக நம்பும் வைத்தியர்களால் காப்பாற்ற முடியாது போகும் உயிரை. எப்படி ஒரு சாத்திரியால் காப்பாற்ற முடியும்......நடை முறைக்கு சாத்தியமற்ற ஒரு செயல்பாட்டை தடுக்கும் சக்தி அவரிடம் இருந்திருக்குமாக இருந்தால் தான் தொழில் என்று தேடி நாடு,நாடாக அலையவேண்டியது இல்லயே..

 

சாத்திரிமார் உண்மையாக குடும்பங்களை ஒற்றுமையாக்கி வைக்கிறார்களா சீர் குலைக்கிறார்களா என்பதற்கு இந்த செயல்பாடு ஒரு எடுத்துக் காட்டு..

உண்மையாக சில பெண்களைப் பார்த்தால் அவர்களின் செயல்களைப் பார்த்தால் மிகவும் மனம் வருந்தக்கதாகவே இருக்கு...நான் எடுத்த உடன் எதுவும் எழுத,பேச முன் வருவதில்லை..ஆனால் இது உண்மை.கடைகளுக்கு போனால் கூட  தேவைப் பட்ட பொருளை எடுங்க,நடையைக் கட்டுங்கள்..அதை விடுத்து மணிக் கணக்காக பேசிக் கொண்டே நிற்க வெளிக்கிடாதீங்க...

Link to comment
Share on other sites

இந்தச் சம்பவத்தைக் கேட்டபோது, எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.  ஒரு பெண்ணால் எப்படி இப்படி நடந்துகொள்ள முடியும்?  பெண்கள் விருப்பப்பட்டுச் செய்வது என்பது வேறு.  ஆனால், இந்த நாட்டில் இருந்து கொண்டு ஒரு அந்நிய ஆணுடன் இப்படி நடந்து கொள்ள முடியுமா?  மிகவும் ஆச்சரியமாகவே உள்ளது.  

 

நீங்கள் குறிப்பிட்டது போல, இங்கு ஒரே கடைத்தொகுதியிலேயே பல ஜோதிடர்கள் முகாம் போட்டுள்ளார்கள்.   அவர்களோடு அவர்களது மனைவிமார் வேறு வந்திருப்பார்கள்.   கடைக்குள் போய் உடன் வருவதற்குள்ளேயே காரில் அட்டை வைத்திருக்கப்பட்டிருக்கும்.   :)

 

யாயினி, தமிழ்க் குடும்பங்களுக்குள் பிரச்சனைகளைப் பேசித் தீர்க்க முடியுமா என்ன?  என்னதான் நாம் முயற்சி செய்தாலும் சில விடயங்கள் நமது கைகளில் இல்லை.  குடும்பம் என்ற அமைப்புக்குள் பெரியவர்களின் கையே இன்றும் ஓங்கியிருக்கிறது.  நாம் என்னதான் அவர்களைவிட அதிகமாகப் படித்திருந்தாலும், அறிவாளிகளாக இருந்தாலும் ஒரு சிலரின் கைகள் மட்டுமே எப்போதும் ஓங்கியிருக்கும்.  நாம் என்ன சொன்னாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்குதான்.   இதற்குள் பாரபட்சம் வேறு.   :(  :(    அடுத்த தலைமுறையோடாவது இது அழிந்து போகவேண்டும்.   :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவமே! :(

Link to comment
Share on other sites

என்னைக் கேட்டால் அந்த சோதிடர் தான் பாவம் என்பேன்.  இன்றுள்ள நிலையில், அதுவும் ரொரன்டோவில் இருக்கும் ஒரு பெண்மணி இப்படியான பரிகாரங்களைக் கேட்டு ஏமாறக் கூடிய நிலையில் இல்லை. ஆயிரத்தெட்டு கோவில்கள் இருக்கும் இடத்தில் ஒரு சோதிடர் சொன்ன மிக வில்லங்கமான ஒரு பரிகாரத்தினை முழுமையாக நம்பி ஏமாறக் கூடிய நிலையில் எவரும் இல்லை. ஒரு சாத்திரியை நம்பாமல் பல சாத்திரிமார்களிடம் ஓடும் பழக்கம் தான் இப்போதுள்ளது. ஒரு சோதிடர் இப்படி பரிகாரம் செய்யச் சொன்னால், அதனை விரும்பாத ஒருவர் இன்னொரு சோதிடரிடம் போய் விசாரித்தே இருப்பார். சொன்ன பரிகாரத்தினை உவப்புடன் ஏற்பவர் மட்டுமே வேறு ஒருவரிடமும் செல்லாமல் அதனை அப்படியே ஏற்பர்.

 

இந்தச் செய்தி எழுதப்பட்ட விதத்தில் நிகழ்வுகள் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் இல்லை. ஏதோ செய்யப் போய், கணவரிடமோ அல்லது குடும்பத்தினருடனோ மாட்டுப்பட்டு பின் தன்னில் இரக்கம் வருவதற்காக கணவன் இறந்துவிடுவார் என்றுதான் செய்தனான் என்று விளக்கம் கொடுப்பது மாதிரி இருக்கு. அல்லது ஒரு சின்ன விடயத்தினை ஊடகம் தன் கற்பனையை கலந்து கொடுத்து இருக்கலாம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சி சொல்லி இருப்பது போல் நாங்க கிடந்து கத்தோ,கத்து என்று கத்த வேண்டியது தான் நடப்பது எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கிறது..நான் கூட எத்தனையோ தரம் சாத்திரர்களின் மனைவிமார் தந்த விசிட்டிங்கார்ட்டை அவர்கள் முன்னாடியே கிளித்து எறிந்தும் இருக்கிறன்..ஒருவர்,இருவர் அப்படி நடந்தால் போல் எல்லாரும் அப்படி செய்யிறார்கள்,செய்வார்கள் என்று இல்லை..ஓரளவுக்காவது அனியாயங்களை கட்டுப்படுத்தனும் என்றால் முகத்துக்கு முன்னாடியே பதில் அடி கொடுத்தால் அன்றி எந்த வழியும் கிடையாது..

தமிழ் குடும்பங்களில் நடக்கும் குளறுபடிகளும் தெரியும்.சில வயது போனவர்கள் இருக்கும் குடும்பங்கள் என்றால் என்ன விதமான றாமா எல்லாம் போடுவார்கள் மற்றவர்களை எப்படி எல்லாம் நோகடிப்பார்கள்,குளப்பி விட்டு கூத்துப் பார்ப்பார்கள் என்பதும் தெரியும்..உங்கள் வீட்டில், என் வீட்டில்,பழகிய இடங்களில்  என்று நிறையவே பிரச்சனைகள் இருக்கலாம். அதற்காக நாங்கள் போஸ்ட்டர் அடிச்சு சொல்லிக் கொண்டும் திரிய ஏலாது...காதில் வாங்கியும்,வாங்காமலும்,கண்டும்,காணமலும் தான் காலத்தை இழுத்துக் கொண்டு போக வேண்டியவர்களாக இருக்கிறம்..

ஏதாச்சும் ஊண்டிக் கதைச்சுட்டால் பெண் என்ற ஒன்றை தூக்கி போட்டு வாய் திறக்கப் பண்ணாது தங்கள் நாடகத்தை தொடரும் உலகம் இது....இந்த எழுத்துக்களை எழுதும் போதும் கூட சில விடையங்களால்  மனம் பாதிக்கபட்டு கொண்டு இருக்கலாம்..ஆனால் என்ன செய்ய முடியும்...

 

செய்திகளைப் பரப்புவதில் பெரும் பங்கு வகிப்பது ஊடகங்கள் அந்த வகையில் நேற்றைய தினம் சி.பி 24ல் கூட இந்த செய்தியை எழுத்தோட்டத்தில் போட்டுக் கொண்டு இருந்தார்கள்...யாராவது பார்த்தீர்களா....??

Link to comment
Share on other sites

astrologer-473x315.jpg

Bhaskar Muniyappa, 30, is accused of sexually assaulting his astrology client on Sept. 11, 2014. HANDOUT/Toronto Police Service

 

Police have arrested an astrologer accused of sexually assaulting a 38-year-old woman in North York this week.

The woman said it happened on Thursday, when she went to the Sri Vinayaka Astrologer on Keele Street, south of Lawrence Avenue West.

Officers arrested Bhaskar Muniyappa, 30, and charged him with sexual assault.

He’s due in court on Oct. 22.

Police believe there may be more victims and are asking anyone with information to call them.

 

http://www.citynews.ca/2014/09/13/astrologer-accused-of-sexually-assaulting-client/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

astrologer-473x315.jpg

 

முனியாப்பாவின் முகத்தை பார்க்க, அப்பாவியாய் இருக்கிறார் :lol: . 

அப்படிச் செய்யக் கூடியவர் மாதிரி தெரியவில்லை :D .
சாத்திரம் பார்த்த, சோதிடர் எக்கச்சக்கமாக மாட்டுப் பட்டுப் போனார். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே நிழலி அண்ணா சொல்வது சரிபோல்தான் இருக்குது. வழக்கு விசாரணைக்கு வரும்போது வண்டவாளங்கள் எல்லாம் வெளிவரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30 வயதிலேயே..... சோதிடக் கலையை கற்று.
இப்படி, ஆட்டையை.... போடத் தெரிந்த முனியப்பா ஒரு திறமைசாலிதான்.  :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகல் இரவு வீட்ல என்ன நடக்கிது எண்டு தெரியாம டபுள் அடிச்சால் ஆட்டையைப் போடுவாங்கள்தானே!

இன்னும் நெடுக்கர் இந்தப் பக்கம் வரேல்லைப் போல கிடக்கு. இல்லாட்டி சார் அடங்கீட்டாரோ தெரியேல்லை! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பெண்கள் கனடாவில் இப்படியும் டேட்டிங் போறாய்களா.!!!

 

அவனும் பதமா (பதம் - வார்த்தை என்றும் அர்த்தம் பெறும்) தடவிக் கொடுக்க.. இவா இதமா விட்டுக் கொடுத்து வாழ்ந்திருக்கா. இதில.. சாஸ்திரம்.. கணவன்.. மரணம்.. 6 மாதம் எல்லாம்.. உதவிக்காரணிகள்.

 

கடைசியில.. பத்தினி வேசத்துக்கு பொலிஸ்...! கனடா எங்கையோ போய்க்கிட்டு இருக்கு. :lol:

 

(திருப்தியா வாலி. நாங்க அவசரப்பட்டு வந்து கருத்துச் சொல்லி இருந்தா.. அவன் அப்படித்தான் என்றிட்டு போயிருப்பாங்க. ஆனானப்பட்ட நிழலியே வந்து சொன்னதுக்கு அப்புறம் எனி என்ன சொல்ல வேண்டி இருக்கு..!) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சாத்திரியால் தன் காண்டத்தை காண்ட மூலம் பார்க்க முடியவில்லை :D

 

ஏமாறும் கூட்டமிருக்கும் வரை இவர்கள் பாடு கொண்டாட்டம்தான். இவரின் கணவனில்தான் பிழை, குடும்பத்தையும் கவனித்திருக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் ஊரில கொஞ்சமேனும் பள்ளிக்கூடத்துக்குப் போ என அப்பன் ஆத்தை சொல்லுறது பாத்துச் சூதானமா நடக்கத் தெரியவேணும். எல்லாவிசையத்திலையும்.

 

இதில் பெண்ணில்தான் பிழை இருக்கின்றது. உள்ளூர் நபர்களுடன் தொடர்புகள் இருந்தால் கொஞ்சம் அரசல்புரசலாகத் தெரிந்தாலும் முதலுக்கு மோசம், இப்படியெண்டால் சமாளிக்கலாம் எனவும் யோசிக்கலாம்.

 

இதுதான் நேரங்கெட்ட நேரத்தில எல்லாம் உணவகங்களில் கழுவப்போகப்படாது ஒண்டுக்கு இரண்டாக மோட்கேஜில வாங்கின சாமான்களுக்கு பட்டையடி அடிக்கவேண்டும் சாமத்தியவீடு "அந்தமாதிரிச்" செய்யவேண்டும். அப்போ யாராவது லவட்டிக்கொண்டுபோவான்கள்தானே.

 

உங்களுக்கு இன்னும் இருக்கு ஆப்பு.

 

எங்கட ஊரில இருந்தும் ஒருவர் சாத்திரியிண்டை சொல்கேட்டு கனடாவுக்குப் போயிருக்கிறார் எதுக்கும் வந்தாப்பிறகுதான் தெரியும்.

Link to comment
Share on other sites

இங்கு தமிழ்பெண்கள் கன காசு செலவளித்து ஃபேஷியல் செய்வதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். காட்டுப்பண்டி கானக மயில் ஆகமுடியுமா ?
 
மோட்டுக் கூட்டங்கள். 
 
 
ஆண் பொன்ஸாக இருந்தால் இப்படித்தான் முடியும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சாத்திரியால் தன் கண்டத்தை காண்டம் மூலம் பார்க்க முடியவில்லை :D

 

ஏமாறும் கூட்டமிருக்கும் வரை இவர்கள் பாடு கொண்டாட்டம்தான். இவரின் கணவனில்தான் பிழை, குடும்பத்தையும் கவனித்திருக்க வேண்டும்

 

அதுதானே அவர் எல்லாத்தையும் கொண்டம் மூலம் கண்டுவிட்டாரே. எனி காண்டம் என்ன கண்டம் என்ன.. வேண்டிக் கிடக்கு. காண வேண்டியதை எல்லாம் கண்டுவிட்டார் சாத்திரி. எனி உள்ள போனாலும் கவலை இல்ல. :D:lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இதில் கேஸ் எதுவுமே கிடையாதே. பிணையில் வெளியில் வருவார் முனியப்பா.
 
போலீஸ் காரங்களுக்கு புரியவில்லை போல் தெரிகிறது. சாத்திரம், நம்பிக்கைகள் குறித்து நீதிமன்றம் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. அது தேவையில்லா விடயம். 
 
நீதிமன்றில், பலாத்காரம் எதுவும் இல்லை, பெண் சுஜமாக ஒரு இணக்கப் பாட்டுக்கு (Barter Negotiation) வந்தே தொடர்பினை வைத்து இருக்கிறார். அதுவும் முனியப்பாவின் இடத்துக்கே சுஜமாக வந்தே தொடர்பினை தொடர்ந்து இருக்கிறார் என்று வாதாடி வெளியே வருவார்.
 
இங்கே நெடுக்கர் சொன்ன வாதம், வீட்டில் மாட்டுப் பட்டவுடன், பத்தினி வேடம் போடுகிறார் என்பது  சரியானது.  :wub:
Link to comment
Share on other sites

நிழலி குறிப்பிட்டது போல, உண்மையில் நடந்தது என்னவென்று தெரியவில்லை.   காவல்துறையிடம் முறையிட்டதால் கைது செய்யப்பட்டதாகவும் ஒக்டோபர் 22இல் கோர்ட்டிக்குச் செல்லவுள்ளதாகவும் மட்டுமே ஆங்கில ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.  தமிழ் ஊடகங்கள் செய்தியைத் திரித்து எழுதியிருக்கின்றன.  நிழலி சுட்டிக்காட்டிய பின்புதான், ஒரு பெண் இத்தனை பெரிய தவறைச் செய்துவிட்டு அவரே காவல்துறையிடம் சென்றிருப்பாரா என்பது கேள்விக்குறியே.  எது எப்படியோ, கனடாவில், பரிகாரம் என்று சாத்திரிகளின் பின் செல்லும் பெண்களுக்கு இது நல்லதொரு பாடம்.  

 

இந்தச் சாத்திரிக்கு அவரின் சாத்திரமே அவருக்குத் தெரியவில்லை.   :lol:  :lol:  :lol:   

 

 

Link to comment
Share on other sites

 

இதில் கேஸ் எதுவுமே கிடையாதே. பிணையில் வெளியில் வருவார் முனியப்பா.
 
போலீஸ் காரங்களுக்கு புரியவில்லை போல் தெரிகிறது. சாத்திரம், நம்பிக்கைகள் குறித்து நீதிமன்றம் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. அது தேவையில்லா விடயம். 
 
நீதிமன்றில், பலாத்காரம் எதுவும் இல்லை, பெண் சுஜமாக ஒரு இணக்கப் பாட்டுக்கு (Barter Negotiation) வந்தே தொடர்பினை வைத்து இருக்கிறார். அதுவும் முனியப்பாவின் இடத்துக்கே சுஜமாக வந்தே தொடர்பினை தொடர்ந்து இருக்கிறார் என்று வாதாடி வெளியே வருவார்.
 
இங்கே நெடுக்கர் சொன்ன வாதம், வீட்டில் மாட்டுப் பட்டவுடன், பத்தினி வேடம் போடுகிறார் என்பது  சரியானது.  :wub:

 

 

அவர் இந்தியாவிலிருந்து விசாவில் வந்து சாத்திரம் பார்ப்பவர்.  இவரை யார் பிணையில் எடுப்பார்கள்?  அப்படியே எடுப்பதாக இருந்தாலும் அவர்களால் அத்தனை பணம் செலுத்தி எடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

 

இங்கு காதலனாக இருந்தாலும் பெண்ணின் விருப்பமின்றித் தொட்டாலே அது குற்றம்.  ஆகவே, இந்த வாதம் இங்கு எடுபடாது.  இவரால் வேறு பெண்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களையும் முன்வந்து காவல்துறையிடம் முறையிடுமாறும் காவல்துறை கேட்டுள்ளது.  ஆகவே, இது அவரைச் சிக்க வைப்பதற்காக நடத்தப்பட்ட நாடகமாகக்கூட இருக்கலாம்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சப்பா.. சப்பைக் கட்டு.. தாங்க.. முடியல்ல.

 

சும்மா சிவனேன்னு.. இந்தியாவில கிடந்தவனை.. கூப்பிட்டு வைச்சு.. தேடிப் போய்.. பரிசும் கொடுத்து.. உடம்பையும் கொடுத்திட்டு.... இப்ப கேசும் கொடுக்கிறதும்.. ஒரு பெண் தான்.

 

விபச்சாரிகளும்.. கேசு கொடுக்கலாம். வாடிக்கையாளர் தன்னை சரியா கையாளவில்லை.. காசு கொடுக்கல்ல என்று. மேற்படி.. சம்பவமும் அப்படி ஒன்று தான். இதுங்களுக்கு விபச்சாரிங்க எவ்வளவோ திறம். வெளிப்படையா நடத்துக்குதுங்க..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.