Jump to content

நவராத்திரி கொண்டாட்டம் - IV & V


Recommended Posts

வந்திட்டிங்களா?

கிட்டதட்ட அனைவரும் வந்திட்டினம் போல! அடுத்து தூயவனையும், அரவிந்தனையும் தேட வேண்டி இருந்தது! பின்ன என்ன? நாங்கள் போய் அனைவரையும் விமான நிலையத்தில் இருந்து அழைத்து வருகின்றோம், நீங்கள் அவர்களுக்கு உண்பதற்கு உணவு வாங்கி வாருங்கள் என அனுப்பி வைத்தேன்.

(கள உறவுகள் என்னுடைய சமையலை சாப்பிட பயந்ததால் தான், வெளியே உணவு எடுக்க வேண்டி போய்விட்டது)

முதலில் ராம்ஸ் உணவகத்தில் தான் உணவு எடுப்பதாக இருந்த்து. ஆனால் யேசுதாசுக்கும், மகனுக்கும் சிட்னி சுற்றிகாட்ட போய்விட்டினம்போல! கடை திறக்கவில்லை!

அடுத்து போன இடம் ஜ-- உணவகம், இதில என்ன பம்பல் என்றால்! தூயவனுக்கு அந்த உணவகத்தின்ட அருமை பெருமைகளை நான் சொல்லி இருந்தேன்! நான் ஏன் சொல்லுவான் அவுஸ்த்ரேலிய தொலைக்காட்சியிலேயே காட்டினார்களே!

"குப்பை"

சரி என்று வேறு சில கடைகளுக்கு போனால், அங்கும் அசைவம் எடுப்பது கடினமாக இருந்தது. ஏன் எனில் சரஸ்வதி பூஜை ஆயிற்றே!

கந்தப்புவின்ற மனிசியும், களத்தில இருக்கிற சில சிட்னி வாழ் அன்பர்களுடைய மனைவிமாரும் சேர்ந்து கடலை, அவல் தான் சாப்பாடு.

இதில் சுண்டலை பாராட்ட வேண்டும். சிலரை மக்டோனல்ஸ்கு அழைத்து கொண்டு போனவர். ஆனால் திரும்பி வரும் போது பெடியின்ட க்ரடிட்காட் காலி!

அனைவரும் வந்திறங்கி சாப்பிட்டு முடியவே விடிகாலை 4 மணி. ஆக அனைவரும் படுத்து உறங்கி........ 3 மணியளவில் ஓபரா கவுஸ் செல்வதாக திட்டம்.

என் வீட்டில் சிலர், "உங்கள் அன்பன்" கான பிரபா அண்ணா வேட்டில் சிலர், சுண்டலின்ட வீட்டில வயதானவர்கள் (நம்பிக்கை அவ்வளவு தான்), அரவிந்தன் வீட்டில் சிலர், கந்தப்பு வீட்டில் தமிழ் அணி, புத்தனுக்கு ஏது வீடு (யூனியில எங்கட ஆக்கள இருக்க சொல்ல முடியுமா?)

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு அய்யனார் சாமி (அது தாங்க மொடரேட்டர்ஸ்) எல்லாம் மோகன் அண்ணாவின் "பதுங்கி பாயும் " திட்டம் தான்!

திரைக்கு பின்னால்

வந்தவையில சிலர் படுக்க போய்ட்டினம். அதில சி*5 முக்கியம். இவை படுக்கிறதே சிறந்த உதவி.

மற்றவர்கள் யார் யார் என்ன வேலை நாளை செய்ய விரும்புகின்றார்கள் என சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

1. க்ளிக் புகைப்படக்கருவி - குளம்ஸ்

2. வீடியோ கருவி - அஜீவன் அண்ணா

3. வெண்ணிலா - சின்ன பிள்ளைகளை தான் பார்க்கிறேன் என்றார் (லொலி பப்புடன் இவரால் தான் முடியும்)

4. சுண்டல் - வரவேற்பு மேசையில் நிற்பது

5. கந்தப்பு

6. பெண்கள் அணி - சகலகலாவல்லி மாலை

7. நித்தி - சட்டம் சம்பந்தமாக எந்த பிரச்சனையும் வராமல் பார்ப்பது.

8. ஆச்சி மார் - பூஜைக்கு வேண்டியதை செய்வது

9. அப்புமார் - பேசாமல் ஒரு இடத்தில் இருப்பது

10. கனா பிரபா அண்ணா - நிகழ்ச்சி தொகுப்பாளர்

11. ஆதி - பூஜை முடிந்ததும் சர்கஸ் செய்வார்

12. ரசிகை - எள்ளுச்சமல்

13. மோகன் அண்ணா - தலை வலி மாத்திரைகளை தொடர்ந்து போடுவார்

14. சின்ன குட்டி - தற்சமயம் விளக்குகள் அணைந்தால் ஒளி குடுப்பார்

15. சாத்திரி - பூஜை செய்வார்

16. விஸ்ணு & கரி அண்ணா - பாடல்கள் ஒலிபரப்பு (சவுஸ் சிஸ்டம்)

17. குறுக்காலம் போவான் - கள உறவுகள் எங்கும் குறுக்கா போகாமல் பார்ப்பார்

18. சோழியன் - ஓடி ஓடி வந்தவர்களை உபசரிப்பார்

19. அருவி - சாப்பாட்டுக்கு காவல் (நம்பிக்கையான ஆள்)

20. ஈழவன் - நிதர்சன் சாப்பாட்டு பக்கம் வராமல் அவருக்கு காவல்

மற்றும் படி வாகனம், செலவு எல்லாம் தூயவன் & தூய இளிச்சவாய் க்ரூப் & கம்பனி

அனைத்தும் ஆயத்தம்... இனி ஓபரா கவுஸ் தான்....

Link to comment
Share on other sites

விழா ஆரம்பம்

மாலை 3 மணி, கள உறவுகள் எல்லாரும் வந்திறங்கும் நேரம். ஆனால் சிட்னி வாழ் கள உறவுகள் முன்னரே வந்து வேலைகள், அலங்காரங்கள் செய்துகொண்டிருந்தனர்.

முதலில் கந்தப்புவீட்டில் இருந்தவர்கள்:

அமைதியே உருவாக

வெள்ளை வேட்டி , சட்டை

தமிழில் உரையாடல்

சிலர் நெற்றியில் விபூதி

*ஓபரா கவுஸை எப்படி தமிழில் அழைப்பது என விவாதம் நடந்தது.

அடுத்து சுண்டல் வீட்டில் இருந்தவர்கள்:

- சின்னப்பு , முகத்தார் குழு

மடிச்சு கட்டின வேட்டி

ஒட்டகத்தில் வந்திறங்கிய முகத்தார்

கையில் போத்தல்

பெண்கள் அழகாக சேலை உடுத்து

ஆங்கிலத்தை தமிழில் கதைத்த படி சி*5

அடுத்து கானா பிரபா அண்ணா வீட்டில் இருந்தவர்கள்:

- ப்ளொக் குழு

கொண்டாட்டத்தை எப்படி தத்தமது ப்ளொக்கில் எழுதலாம் என யோசித்த படி

லக்கி ஓபரா கவுஸ் படிகளை கண்டதும் ஆனந்த கண்ணீர்? பின்ன அவர்ட கமல் ஆடின இடமாச்சே!

அடுத்து எனது வீட்டில் இருந்து பெண்கள் அணி:

சேலை

தாவணி

பொட்டு

பூ

அமைதி (பதுங்கி தாக்குவதற்கு)

தமிழில் உரையாடல்

சிலரை கண்டால் போட்டு தள்ளுவதாக திட்டம்

ரசிகை மட்டும் பரபரப்பாக - எள்ளு எரிந்துவிட்டதோ??

அடுத்து அரவிந்தன் வீட்டில் இருந்து:

- பெரும் படை

பல புதியவர்கள் இருந்ததால், அவர்களை வரவேற்கும் பொறுப்பு நாரதர் அண்ணா, சியாம் அண்ணா, வசம்பர் (சில வம்பர்களை வரவேற்க), ஆதி (சில நல்லவர்களை வரவேற்க):

கையில் டட்டூ

தலை முடி கலர் கலரா

ஆங்கிலம் அப்போ அப்போ

சத்தமாக பாட்டு

ஆளுக்கொரு எம்.பி.3 ப்ளேயர்

இவர்களை கண்டதுமே இளைஞன் அண்ணா தயாராகிவிட்டார்.

பூஜை ஆரம்பம்

ஒரு மாதிரி எல்லாரும் வந்து, பூசை ஆரம்பமாகிவிட்டது. சாத்திரி பெரிய கெட்டப்பில....மாலை எல்லாம் போட்டு, பட்டு வேட்டி, சால்வை... என்ன அப்பப்போ முனியம்மா சொல்ல முகம் கலவரம் ஆனது வடியா தெரிந்தது.

ஆஸ்திகர்களும், நாஸ்தீகர்களும் இருந்ததால்..பூஜையை சின்னதா முடிச்சிட்டம் (உண்மை என்ன என்றால், பூசை செய்ய வந்த்த சாத்திரிக்கு சரியா தேவாரம் கூட தெரியலை)

பெண்களை சகலகலாவல்லி மாலை பாட கேட்டால், நிலா மட்டும் இறுதியில் பாட மாட்டேன் என்று சொல்லிட்டா. அவக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை தேவையாம்.

பெண்கள் பாடி கொண்டிருக்கும் போது, இடையில் அவசர அவசரமாக ஒரு பெண்..சேலையில் அழகாக...வந்து பாட தொடங்கினார்.

யார் அந்த பெண்?

எல்லாருக்கும் அந்த பெண் யார் என்பதே நினைவாக இருந்தது..இதனால் கடவுள்களிடம் இருந்து வாங்கிகட்டிகொள்ள போவது உறுதியோ இல்லையோ? கல்யாணம் ஆனவர்கள் வீட்டில் வாங்க போவது உறுதி!

இன்னொரு விடயம் கறுப்பி! ஆள் கறுப்பென்றாலும் கொள்ளை அழகு! இவரை கிண்டல் செய்யலாம் என வந்தவர்களுக்கு பயங்கர ஏமாற்றம்!

பூஜையின் பின்னர், உணவு, பாட்டுக்கு பாட்டு, நடனம், பட்டிமன்றம், கவிதைகள், நாடகம் என பல்சுவை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.

அத்துடன் பல வேறு நகைச்சுவையான விடயங்களும் நடந்தது...

இனி வர இருப்பவை விழாவில் அங்கங்கே நடந்த விடயங்கள், உரையாடல்கள், வெட்டு குத்துகள்..............

Link to comment
Share on other sites

அது தான் வேணாம்னு விட்டுட்டம்ல!

Link to comment
Share on other sites

என்னை பேர் அளவில போட்டு அதோட விட்டதுக்கு நண்றி. எனக்கு ஆக்களுக்கு முன்னாலை வர தாள்வுமனப்பாண்மையும் கூச்சமும் இருக்கு. அதால என்னை சேர்க்க வேண்டாம். சரீங்களா.? :wink: 8) 8) 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களும் என்னை மாதிரி கறுப்பா அகிலன் சார்

:roll: :roll: :roll: :roll: கறுப்பி எதுக்கு அப்பிடிக்கேட்டனீங்க? சும்மா தேவையில்லாத விசயத்தை எல்லாம் யோசிச்சு தாழ்வுமப்பான்மையை வழக்காமல் :evil: , ஆக்க பூர்வமா சிந்தித்து வாழ்கையில முன்னேறப்பாருங்கோ, சரியா உடன் பிறப்பு :idea: :idea:

Link to comment
Share on other sites

எனக்கு வேட்டி கட்டத்தெரியாது, ஜீன்ஸ் இற்கு மாத்திவிடுங்கோ ;-)

அவை அவைக்கு அவை அவைட பிரச்சனை. கானா பிரபா அண்ணாக்கு வேட்டி பிரச்சனை :lol:

Link to comment
Share on other sites

என்னை பேர் அளவில போட்டு அதோட விட்டதுக்கு நண்றி. எனக்கு ஆக்களுக்கு முன்னாலை வர தாள்வுமனப்பாண்மையும் கூச்சமும் இருக்கு. அதால என்னை சேர்க்க வேண்டாம். சரீங்களா.? :wink: 8) 8) 8)

பார்த்திங்களா...உங்களை பற்றி தெரிந்து தான் நான் அதிகமாக உங்களை வேலையில் இழுக்கவில்லை :lol:

Link to comment
Share on other sites

மிக்க நன்றி நிலாக்குட்டி & கந்தப்பு :lol:

Link to comment
Share on other sites

19. அருவி - சாப்பாட்டுக்கு காவல் (நம்பிக்கையான ஆள்)

20. ஈழவன் - நிதர்சன் சாப்பாட்டு பக்கம் வராமல் அவருக்கு காவல்

இதனைவிட நிதர்சனையே பக்கத்தில் விட்டிருக்கலாம். இரண்டு பேரோடயும் நான் பட்டபாடு இருக்கே அதனை யாரிட்ட சொல்லி அழுவது :lol:

Link to comment
Share on other sites

ஓ இது வேற நடந்து இருக்கா? வரட்டும் இருவரும்..பார்த்துகொள்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதனைவிட நிதர்சனையே பக்கத்தில் விட்டிருக்கலாம். இரண்டு பேரோடயும் நான் பட்டபாடு இருக்கே அதனை யாரிட்ட சொல்லி அழுவது :lol:

அதான சொல்லி சொல்லி அழுதீங்களோ, "ஐயோ நம்பிக்கையான பெடியன் என்று என்ன இதில விட்டிட்டு போனதுகள், இப்ப ஒன்டையும் நான் விட்டு வைக்கல்ல" என்று :wink: பிறகு நானும் ஈழவனும் தானே நாங்க தான் எடுத்தது என்று சொன்னம்..

:twisted: அட இத பப்பிளிக்கில சொல்லீட்டன் :lol:

Link to comment
Share on other sites

ஆகா ....ம்ம்ம் ஈழவன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்

Link to comment
Share on other sites

மிக்க நன்றி அரவிந்தன் :lol:

Link to comment
Share on other sites

நல்ல காலம் அவல் சட்டியோட போட்டுது.

இதே அடுப்பில கிடக்கிற பொங்கல்ப்பானையா இருந்திருந்தா???????

:shock: :shock: :shock:

Link to comment
Share on other sites

ஆதி பயத்திலயே சுத்துறிங்க ;)

Link to comment
Share on other sites

இதனைவிட நிதர்சனையே பக்கத்தில் விட்டிருக்கலாம். இரண்டு பேரோடயும் நான் பட்டபாடு இருக்கே அதனை யாரிட்ட சொல்லி அழுவது :lol:

உனக்கு தெரிந்த விடயங்களை நீயே வைத்திரு வெளியில சொன்னால் நீ படிக்கும் போது செய்த அட்டகாசங்கலையெல்லாம் அவுட்டு விட்டுருவன் சரியோ :lol::lol:

Link to comment
Share on other sites

உனக்கு தெரிந்த விடயங்களை நீயே வைத்திரு வெளியில சொன்னால் நீ படிக்கும் போது செய்த அட்டகாசங்கலையெல்லாம் அவுட்டு விட்டுருவன் சரியோ :lol::lol:

ஆதியில்ல அருவி... :wink: :P

Link to comment
Share on other sites

ஆகா துயா யாரை நம்பி சாப்பட்டு காவலுக்கு அருவியையா நிதர்சன் மட்டுமல்ல நாம் எல்லோரும் பாவம் அருவியின் சாப்பாட்டு ஆசையை எனக்கு நல்லாகத்தெரியும் இடியப்பமும் சம்பலுமெண்டால் அருவிக்குப்போதும் பாடசாலைக்கு ஒரே இடியப்பம்தான் ஆனால் குறை சொல்லக்கூடாது அருவியின் அம்மா நல்லா சமைப்பா ஏன்னெண்டு எங்களுக்கு தெரியுமெண்டா கேக்கிறீங்க பாடசாலை இடைவேலைக்கு முன்னமே அதை முடிக்கிரது நாங்கதானே :lol: :lol: :lol::):lol:

Link to comment
Share on other sites

ஆகா துயா யாரை நம்பி சாப்பட்டு காவலுக்கு அருவியையா நிதர்சன் மட்டுமல்ல நாம் எல்லோரும் பாவம் அருவியின் சாப்பாட்டு ஆசையை எனக்கு நல்லாகத்தெரியும் இடியப்பமும் சம்பலுமெண்டால் அருவிக்குப்போதும் பாடசாலைக்கு ஒரே இடியப்பம்தான் ஆனால் குறை சொல்லக்கூடாது அருவியின் அம்மா நல்லா சமைப்பா ஏன்னெண்டு எங்களுக்கு தெரியுமெண்டா கேக்கிறீங்க பாடசாலை இடைவேலைக்கு முன்னமே அதை முடிக்கிரது நாங்கதானே :lol: :lol: :lol::):lol:

இடைவேளைக்கு முன் சாப்பாட்ட முடித்தால்தானே இடைவேளைக்கு வெளியபோய் விளையாடலாம் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.