Jump to content

நவராத்திரி கொண்டாட்டம் - IV & V


Recommended Posts

வந்திட்டிங்களா?

கிட்டதட்ட அனைவரும் வந்திட்டினம் போல! அடுத்து தூயவனையும், அரவிந்தனையும் தேட வேண்டி இருந்தது! பின்ன என்ன? நாங்கள் போய் அனைவரையும் விமான நிலையத்தில் இருந்து அழைத்து வருகின்றோம், நீங்கள் அவர்களுக்கு உண்பதற்கு உணவு வாங்கி வாருங்கள் என அனுப்பி வைத்தேன்.

(கள உறவுகள் என்னுடைய சமையலை சாப்பிட பயந்ததால் தான், வெளியே உணவு எடுக்க வேண்டி போய்விட்டது)

முதலில் ராம்ஸ் உணவகத்தில் தான் உணவு எடுப்பதாக இருந்த்து. ஆனால் யேசுதாசுக்கும், மகனுக்கும் சிட்னி சுற்றிகாட்ட போய்விட்டினம்போல! கடை திறக்கவில்லை!

அடுத்து போன இடம் ஜ-- உணவகம், இதில என்ன பம்பல் என்றால்! தூயவனுக்கு அந்த உணவகத்தின்ட அருமை பெருமைகளை நான் சொல்லி இருந்தேன்! நான் ஏன் சொல்லுவான் அவுஸ்த்ரேலிய தொலைக்காட்சியிலேயே காட்டினார்களே!

"குப்பை"

சரி என்று வேறு சில கடைகளுக்கு போனால், அங்கும் அசைவம் எடுப்பது கடினமாக இருந்தது. ஏன் எனில் சரஸ்வதி பூஜை ஆயிற்றே!

கந்தப்புவின்ற மனிசியும், களத்தில இருக்கிற சில சிட்னி வாழ் அன்பர்களுடைய மனைவிமாரும் சேர்ந்து கடலை, அவல் தான் சாப்பாடு.

இதில் சுண்டலை பாராட்ட வேண்டும். சிலரை மக்டோனல்ஸ்கு அழைத்து கொண்டு போனவர். ஆனால் திரும்பி வரும் போது பெடியின்ட க்ரடிட்காட் காலி!

அனைவரும் வந்திறங்கி சாப்பிட்டு முடியவே விடிகாலை 4 மணி. ஆக அனைவரும் படுத்து உறங்கி........ 3 மணியளவில் ஓபரா கவுஸ் செல்வதாக திட்டம்.

என் வீட்டில் சிலர், "உங்கள் அன்பன்" கான பிரபா அண்ணா வேட்டில் சிலர், சுண்டலின்ட வீட்டில வயதானவர்கள் (நம்பிக்கை அவ்வளவு தான்), அரவிந்தன் வீட்டில் சிலர், கந்தப்பு வீட்டில் தமிழ் அணி, புத்தனுக்கு ஏது வீடு (யூனியில எங்கட ஆக்கள இருக்க சொல்ல முடியுமா?)

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு அய்யனார் சாமி (அது தாங்க மொடரேட்டர்ஸ்) எல்லாம் மோகன் அண்ணாவின் "பதுங்கி பாயும் " திட்டம் தான்!

திரைக்கு பின்னால்

வந்தவையில சிலர் படுக்க போய்ட்டினம். அதில சி*5 முக்கியம். இவை படுக்கிறதே சிறந்த உதவி.

மற்றவர்கள் யார் யார் என்ன வேலை நாளை செய்ய விரும்புகின்றார்கள் என சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

1. க்ளிக் புகைப்படக்கருவி - குளம்ஸ்

2. வீடியோ கருவி - அஜீவன் அண்ணா

3. வெண்ணிலா - சின்ன பிள்ளைகளை தான் பார்க்கிறேன் என்றார் (லொலி பப்புடன் இவரால் தான் முடியும்)

4. சுண்டல் - வரவேற்பு மேசையில் நிற்பது

5. கந்தப்பு

6. பெண்கள் அணி - சகலகலாவல்லி மாலை

7. நித்தி - சட்டம் சம்பந்தமாக எந்த பிரச்சனையும் வராமல் பார்ப்பது.

8. ஆச்சி மார் - பூஜைக்கு வேண்டியதை செய்வது

9. அப்புமார் - பேசாமல் ஒரு இடத்தில் இருப்பது

10. கனா பிரபா அண்ணா - நிகழ்ச்சி தொகுப்பாளர்

11. ஆதி - பூஜை முடிந்ததும் சர்கஸ் செய்வார்

12. ரசிகை - எள்ளுச்சமல்

13. மோகன் அண்ணா - தலை வலி மாத்திரைகளை தொடர்ந்து போடுவார்

14. சின்ன குட்டி - தற்சமயம் விளக்குகள் அணைந்தால் ஒளி குடுப்பார்

15. சாத்திரி - பூஜை செய்வார்

16. விஸ்ணு & கரி அண்ணா - பாடல்கள் ஒலிபரப்பு (சவுஸ் சிஸ்டம்)

17. குறுக்காலம் போவான் - கள உறவுகள் எங்கும் குறுக்கா போகாமல் பார்ப்பார்

18. சோழியன் - ஓடி ஓடி வந்தவர்களை உபசரிப்பார்

19. அருவி - சாப்பாட்டுக்கு காவல் (நம்பிக்கையான ஆள்)

20. ஈழவன் - நிதர்சன் சாப்பாட்டு பக்கம் வராமல் அவருக்கு காவல்

மற்றும் படி வாகனம், செலவு எல்லாம் தூயவன் & தூய இளிச்சவாய் க்ரூப் & கம்பனி

அனைத்தும் ஆயத்தம்... இனி ஓபரா கவுஸ் தான்....

Link to comment
Share on other sites

விழா ஆரம்பம்

மாலை 3 மணி, கள உறவுகள் எல்லாரும் வந்திறங்கும் நேரம். ஆனால் சிட்னி வாழ் கள உறவுகள் முன்னரே வந்து வேலைகள், அலங்காரங்கள் செய்துகொண்டிருந்தனர்.

முதலில் கந்தப்புவீட்டில் இருந்தவர்கள்:

அமைதியே உருவாக

வெள்ளை வேட்டி , சட்டை

தமிழில் உரையாடல்

சிலர் நெற்றியில் விபூதி

*ஓபரா கவுஸை எப்படி தமிழில் அழைப்பது என விவாதம் நடந்தது.

அடுத்து சுண்டல் வீட்டில் இருந்தவர்கள்:

- சின்னப்பு , முகத்தார் குழு

மடிச்சு கட்டின வேட்டி

ஒட்டகத்தில் வந்திறங்கிய முகத்தார்

கையில் போத்தல்

பெண்கள் அழகாக சேலை உடுத்து

ஆங்கிலத்தை தமிழில் கதைத்த படி சி*5

அடுத்து கானா பிரபா அண்ணா வீட்டில் இருந்தவர்கள்:

- ப்ளொக் குழு

கொண்டாட்டத்தை எப்படி தத்தமது ப்ளொக்கில் எழுதலாம் என யோசித்த படி

லக்கி ஓபரா கவுஸ் படிகளை கண்டதும் ஆனந்த கண்ணீர்? பின்ன அவர்ட கமல் ஆடின இடமாச்சே!

அடுத்து எனது வீட்டில் இருந்து பெண்கள் அணி:

சேலை

தாவணி

பொட்டு

பூ

அமைதி (பதுங்கி தாக்குவதற்கு)

தமிழில் உரையாடல்

சிலரை கண்டால் போட்டு தள்ளுவதாக திட்டம்

ரசிகை மட்டும் பரபரப்பாக - எள்ளு எரிந்துவிட்டதோ??

அடுத்து அரவிந்தன் வீட்டில் இருந்து:

- பெரும் படை

பல புதியவர்கள் இருந்ததால், அவர்களை வரவேற்கும் பொறுப்பு நாரதர் அண்ணா, சியாம் அண்ணா, வசம்பர் (சில வம்பர்களை வரவேற்க), ஆதி (சில நல்லவர்களை வரவேற்க):

கையில் டட்டூ

தலை முடி கலர் கலரா

ஆங்கிலம் அப்போ அப்போ

சத்தமாக பாட்டு

ஆளுக்கொரு எம்.பி.3 ப்ளேயர்

இவர்களை கண்டதுமே இளைஞன் அண்ணா தயாராகிவிட்டார்.

பூஜை ஆரம்பம்

ஒரு மாதிரி எல்லாரும் வந்து, பூசை ஆரம்பமாகிவிட்டது. சாத்திரி பெரிய கெட்டப்பில....மாலை எல்லாம் போட்டு, பட்டு வேட்டி, சால்வை... என்ன அப்பப்போ முனியம்மா சொல்ல முகம் கலவரம் ஆனது வடியா தெரிந்தது.

ஆஸ்திகர்களும், நாஸ்தீகர்களும் இருந்ததால்..பூஜையை சின்னதா முடிச்சிட்டம் (உண்மை என்ன என்றால், பூசை செய்ய வந்த்த சாத்திரிக்கு சரியா தேவாரம் கூட தெரியலை)

பெண்களை சகலகலாவல்லி மாலை பாட கேட்டால், நிலா மட்டும் இறுதியில் பாட மாட்டேன் என்று சொல்லிட்டா. அவக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை தேவையாம்.

பெண்கள் பாடி கொண்டிருக்கும் போது, இடையில் அவசர அவசரமாக ஒரு பெண்..சேலையில் அழகாக...வந்து பாட தொடங்கினார்.

யார் அந்த பெண்?

எல்லாருக்கும் அந்த பெண் யார் என்பதே நினைவாக இருந்தது..இதனால் கடவுள்களிடம் இருந்து வாங்கிகட்டிகொள்ள போவது உறுதியோ இல்லையோ? கல்யாணம் ஆனவர்கள் வீட்டில் வாங்க போவது உறுதி!

இன்னொரு விடயம் கறுப்பி! ஆள் கறுப்பென்றாலும் கொள்ளை அழகு! இவரை கிண்டல் செய்யலாம் என வந்தவர்களுக்கு பயங்கர ஏமாற்றம்!

பூஜையின் பின்னர், உணவு, பாட்டுக்கு பாட்டு, நடனம், பட்டிமன்றம், கவிதைகள், நாடகம் என பல்சுவை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.

அத்துடன் பல வேறு நகைச்சுவையான விடயங்களும் நடந்தது...

இனி வர இருப்பவை விழாவில் அங்கங்கே நடந்த விடயங்கள், உரையாடல்கள், வெட்டு குத்துகள்..............

Link to comment
Share on other sites

அது தான் வேணாம்னு விட்டுட்டம்ல!

Link to comment
Share on other sites

என்னை பேர் அளவில போட்டு அதோட விட்டதுக்கு நண்றி. எனக்கு ஆக்களுக்கு முன்னாலை வர தாள்வுமனப்பாண்மையும் கூச்சமும் இருக்கு. அதால என்னை சேர்க்க வேண்டாம். சரீங்களா.? :wink: 8) 8) 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களும் என்னை மாதிரி கறுப்பா அகிலன் சார்

:roll: :roll: :roll: :roll: கறுப்பி எதுக்கு அப்பிடிக்கேட்டனீங்க? சும்மா தேவையில்லாத விசயத்தை எல்லாம் யோசிச்சு தாழ்வுமப்பான்மையை வழக்காமல் :evil: , ஆக்க பூர்வமா சிந்தித்து வாழ்கையில முன்னேறப்பாருங்கோ, சரியா உடன் பிறப்பு :idea: :idea:

Link to comment
Share on other sites

எனக்கு வேட்டி கட்டத்தெரியாது, ஜீன்ஸ் இற்கு மாத்திவிடுங்கோ ;-)

அவை அவைக்கு அவை அவைட பிரச்சனை. கானா பிரபா அண்ணாக்கு வேட்டி பிரச்சனை :lol:

Link to comment
Share on other sites

என்னை பேர் அளவில போட்டு அதோட விட்டதுக்கு நண்றி. எனக்கு ஆக்களுக்கு முன்னாலை வர தாள்வுமனப்பாண்மையும் கூச்சமும் இருக்கு. அதால என்னை சேர்க்க வேண்டாம். சரீங்களா.? :wink: 8) 8) 8)

பார்த்திங்களா...உங்களை பற்றி தெரிந்து தான் நான் அதிகமாக உங்களை வேலையில் இழுக்கவில்லை :lol:

Link to comment
Share on other sites

மிக்க நன்றி நிலாக்குட்டி & கந்தப்பு :lol:

Link to comment
Share on other sites

19. அருவி - சாப்பாட்டுக்கு காவல் (நம்பிக்கையான ஆள்)

20. ஈழவன் - நிதர்சன் சாப்பாட்டு பக்கம் வராமல் அவருக்கு காவல்

இதனைவிட நிதர்சனையே பக்கத்தில் விட்டிருக்கலாம். இரண்டு பேரோடயும் நான் பட்டபாடு இருக்கே அதனை யாரிட்ட சொல்லி அழுவது :lol:

Link to comment
Share on other sites

ஓ இது வேற நடந்து இருக்கா? வரட்டும் இருவரும்..பார்த்துகொள்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதனைவிட நிதர்சனையே பக்கத்தில் விட்டிருக்கலாம். இரண்டு பேரோடயும் நான் பட்டபாடு இருக்கே அதனை யாரிட்ட சொல்லி அழுவது :lol:

அதான சொல்லி சொல்லி அழுதீங்களோ, "ஐயோ நம்பிக்கையான பெடியன் என்று என்ன இதில விட்டிட்டு போனதுகள், இப்ப ஒன்டையும் நான் விட்டு வைக்கல்ல" என்று :wink: பிறகு நானும் ஈழவனும் தானே நாங்க தான் எடுத்தது என்று சொன்னம்..

:twisted: அட இத பப்பிளிக்கில சொல்லீட்டன் :lol:

Link to comment
Share on other sites

ஆகா ....ம்ம்ம் ஈழவன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்

Link to comment
Share on other sites

மிக்க நன்றி அரவிந்தன் :lol:

Link to comment
Share on other sites

நல்ல காலம் அவல் சட்டியோட போட்டுது.

இதே அடுப்பில கிடக்கிற பொங்கல்ப்பானையா இருந்திருந்தா???????

:shock: :shock: :shock:

Link to comment
Share on other sites

ஆதி பயத்திலயே சுத்துறிங்க ;)

Link to comment
Share on other sites

இதனைவிட நிதர்சனையே பக்கத்தில் விட்டிருக்கலாம். இரண்டு பேரோடயும் நான் பட்டபாடு இருக்கே அதனை யாரிட்ட சொல்லி அழுவது :lol:

உனக்கு தெரிந்த விடயங்களை நீயே வைத்திரு வெளியில சொன்னால் நீ படிக்கும் போது செய்த அட்டகாசங்கலையெல்லாம் அவுட்டு விட்டுருவன் சரியோ :lol::lol:

Link to comment
Share on other sites

உனக்கு தெரிந்த விடயங்களை நீயே வைத்திரு வெளியில சொன்னால் நீ படிக்கும் போது செய்த அட்டகாசங்கலையெல்லாம் அவுட்டு விட்டுருவன் சரியோ :lol::lol:

ஆதியில்ல அருவி... :wink: :P

Link to comment
Share on other sites

ஆகா துயா யாரை நம்பி சாப்பட்டு காவலுக்கு அருவியையா நிதர்சன் மட்டுமல்ல நாம் எல்லோரும் பாவம் அருவியின் சாப்பாட்டு ஆசையை எனக்கு நல்லாகத்தெரியும் இடியப்பமும் சம்பலுமெண்டால் அருவிக்குப்போதும் பாடசாலைக்கு ஒரே இடியப்பம்தான் ஆனால் குறை சொல்லக்கூடாது அருவியின் அம்மா நல்லா சமைப்பா ஏன்னெண்டு எங்களுக்கு தெரியுமெண்டா கேக்கிறீங்க பாடசாலை இடைவேலைக்கு முன்னமே அதை முடிக்கிரது நாங்கதானே :lol: :lol: :lol::):lol:

Link to comment
Share on other sites

ஆகா துயா யாரை நம்பி சாப்பட்டு காவலுக்கு அருவியையா நிதர்சன் மட்டுமல்ல நாம் எல்லோரும் பாவம் அருவியின் சாப்பாட்டு ஆசையை எனக்கு நல்லாகத்தெரியும் இடியப்பமும் சம்பலுமெண்டால் அருவிக்குப்போதும் பாடசாலைக்கு ஒரே இடியப்பம்தான் ஆனால் குறை சொல்லக்கூடாது அருவியின் அம்மா நல்லா சமைப்பா ஏன்னெண்டு எங்களுக்கு தெரியுமெண்டா கேக்கிறீங்க பாடசாலை இடைவேலைக்கு முன்னமே அதை முடிக்கிரது நாங்கதானே :lol: :lol: :lol::):lol:

இடைவேளைக்கு முன் சாப்பாட்ட முடித்தால்தானே இடைவேளைக்கு வெளியபோய் விளையாடலாம் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்மை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.