Jump to content

ஐநா மனித உரிமை புதிய ஆணையாளரை சந்திக்கும் ஜீ.எல்.பீரிஸ்


Recommended Posts

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சயித் அல் ஹுசேன் - இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகிய இருவருக்கும் இடையிலான சந்திப்பொன்று  இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு எவ்விதத்திலும் இடமளிக்கப் போவதில்லையென இச்சந்திப்பின் போது அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐ.நா. ஆணையாளருக்கு உறுதியாகக் கூறவுள்ளார் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

காணமல்போனவர்கள் பற்றிய விசாரணைகளை நடத்த மக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழுவுக்கு அப்பால் விசாரணை நடத்த வெளியார் எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை எனவும் அமைச்சர் பீரிஸ், சயித் ஹுசேனிடம் திட்டவட்டமாகத் தெரிவிக்கவுள்ளார் எனவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜோர்தானிய இளவரசர் சயித் அல் ஹுசேன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளராக நியமிக்கப்பட்டதன் பின் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அவரைச் சந்திப்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/34024/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.